Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 03

Featured Replies

கல்லு றொட்டி .

தேவையான பொருட்கள் :

கோதுமை மா 1 கிலோ .

தேங்காய் 1 .

பச்சை மிளகாய் 7 அல்லது 8 .

சின்னவெங்கயம் 250 கிறாம் .

உப்பு தேவையான அளவு

செய்முறை :

கோதுமை மாவை பைக்கற்ருடன் நீராவியில் அரை மணித்தியாலம் அவிக்கவும் . அவித்த கோதுமை மாவை அரிதட்டில் சூட்டுடன் போட்டு அரிக்கவும் . அரித்த மாவை ஒரு சட்டியில் போட்டு வைக்கவும் . தேங்காயை உடைத்து துருவி வக்கவும் . சின்னவெங்காயத்தை சுத்தப்படுத்தி வைக்கவும் . பச்சை மிளகாயையும் , சின்னவெங்காயத்தையும் குறுணியாக வெட்டி சட்டியில் உள்ள கோதுமை மாவுக்குள் போடவும் . துருவிய தேங்காய்பூவையும் கோதுமை மாவுடன் சேர்த்து உப்பும் கலந்து தண்ணியும் கலந்து றொட்டிக்குப் பிசைவது போல் பிசையவும் . நன்றாகப் பிசைந்த மாவை அரை மணித்தியாலம் ஊறவைக்கவும் . இப்பொழுது கலந்த கலவை , எல்லாவற்றுடனும் சேர்ந்து பெரிய உருண்டையாக இருக்கும் . உருண்டைய சிறிய உருண்டைகளாகப் பிரிக்கவும் .( 1 கிலோ மாவில் 7ல் இருந்து 8 சிறிய உருண்டைகள் செய்யலாம் . ) உருட்டிய உருண்டைகளை ஒரு கோப்பையில் வைத்து வட்டமாகத் தட்டி எடுக்கவும் . தோசைக்கல்லை அல்லது Non stick pane ஐ அடுப்பில் வைத்து கல்லு சூடாகியவுடன் , ஒவ்வரு தட்டிய றொட்டியையும் இருபக்கமும் மாறிமாறி பிரட்டி பொன்நிறமாகும் வர வேகவிடுங்கள் . கல்லுறொட்டி தயார் . விறகு அடுப்பில் வைத்து செய்யும் பொழுது இதன் சுவை இன்னும் அதிகமாகும் . இந்தக் கல்லு றொட்டி பருத்தித்துறைப் பகுதியில் பிரபல்யமானது .

*** தண்ணி = சுடுதண்ணி ( தவறு திருத்தப்பட்டுள்து )

Edited by கோமகன்

உப்பு போடுறது இல்லையோ? எங்க இடத்தில் இதை தான் ரொட்டி எண்டு சொல்லுவார்கள் பெரிய ஆக்களுக்கு வெங்காயம் மிளகாய் சேர்ப்பார்கள் சின்ன ஆக்களுக்கு தேங்காய் பூ மட்டும்

  • தொடங்கியவர்

உப்பு போடுறது இல்லையோ? எங்க இடத்தில் இதை தான் ரொட்டி எண்டு சொல்லுவார்கள் பெரிய ஆக்களுக்கு வெங்காயம் மிளகாய் சேர்ப்பார்கள் சின்ன ஆக்களுக்கு தேங்காய் பூ மட்டும்

மிக்க நன்றிகள் அபராஜிதன் . உண்மையில் உப்பு விடையத்தை மறந்துவிட்டேன் . தவறு திருத்தப்பட்டுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

உப்பு போடுறது இல்லையோ? எங்க இடத்தில் இதை தான் ரொட்டி எண்டு சொல்லுவார்கள் பெரிய ஆக்களுக்கு வெங்காயம் மிளகாய் சேர்ப்பார்கள் சின்ன ஆக்களுக்கு தேங்காய் பூ மட்டும்

துருவிய தேங்காய்பூவையும் கோதுமை மாவுடன் சேர்த்து உப்பும் கலந்து தண்ணியும் கலந்து ........... :D :D

கோ கரட் சட்னி...............வித்தியாசமாய் இருக்கு இன்று செய்து பார்த்து சொல்கிறேன் பதிவுக்கு நன்றி

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்லு றொட்டி .

தேவையான பொருட்கள் :

கோதுமை மா 1 கிலோ .

தேங்காய் 1 .

பச்சை மிளகாய் 7 அல்லது 8 .

சின்னவெங்கயம் 250 கிறாம் .

உப்பு தேவையான அளவு

செய்முறை :

கோதுமை மாவை பைக்கற்ருடன் நீராவியில் அரை மணித்தியாலம் அவிக்கவும் . அவித்த கோதுமை மாவை அரிதட்டில் சூட்டுடன் போட்டு அரிக்கவும் . அரித்த மாவை ஒரு சட்டியில் போட்டு வைக்கவும் . தேங்காயை உடைத்து துருவி வக்கவும் . சின்னவெங்காயத்தை சுத்தப்படுத்தி வைக்கவும் . பச்சை மிளகாயையும் , சின்னவெங்காயத்தையும் குறுணியாக வெட்டி சட்டியில் உள்ள கோதுமை மாவுக்குள் போடவும் . துருவிய தேங்காய்பூவையும் கோதுமை மாவுடன் சேர்த்து உப்பும் கலந்து தண்ணியும் கலந்து றொட்டிக்குப் பிசைவது போல் பிசையவும் . நன்றாகப் பிசைந்த மாவை அரை மணித்தியாலம் ஊறவைக்கவும் . இப்பொழுது கலந்த கலவை , எல்லாவற்றுடனும் சேர்ந்து பெரிய உருண்டையாக இருக்கும் . உருண்டைய சிறிய உருண்டைகளாகப் பிரிக்கவும் .( 1 கிலோ மாவில் 7ல் இருந்து 8 சிறிய உருண்டைகள் செய்யலாம் . ) உருட்டிய உருண்டைகளை ஒரு கோப்பையில் வைத்து வட்டமாகத் தட்டி எடுக்கவும் . தோசைக்கல்லை அல்லது Non stick pane ஐ அடுப்பில் வைத்து கல்லு சூடாகியவுடன் , ஒவ்வரு தட்டிய றொட்டியையும் இருபக்கமும் மாறிமாறி பிரட்டி பொன்நிறமாகும் வர வேகவிடுங்கள் . கல்லுறொட்டி தயார் . விறகு அடுப்பில் வைத்து செய்யும் பொழுது இதன் சுவை இன்னும் அதிகமாகும் . இந்தக் கல்லு றொட்டி பருத்தித்துறைப் பகுதியில் பிரபல்யமானது .

உதுதான் எங்கடை ஊரிலை கூப்பன்மா றொட்டி....பெரியாக்களுக்கு வெங்காயம் பச்சைமிளகாய்யோடை.......குஞ்சுகுருமன்களுக்கு கொஞ்சசீனியும் போட்டு அந்தமாதிரி தோசைக்கல்லுலை போட்டு எடுக்கிறது...தகவலுக்கு நன்றி செப் :D

நன்றி செப்! இதை மாவை அவிக்காமலும் செய்வார்கள் என்று நினைக்கிறேன்!

குஞ்சுகுருமன்களுக்கு வாழைப்பழத்தையும் போட்டு செய்வார்கள்.

உதுதான் எங்கடை ஊரிலை கூப்பன்மா றொட்டி....பெரியாக்களுக்கு வெங்காயம் பச்சைமிளகாய்யோடை.......குஞ்சுகுருமன்களுக்கு கொஞ்சசீனியும் போட்டு அந்தமாதிரி தோசைக்கல்லுலை போட்டு எடுக்கிறது...தகவலுக்கு நன்றி செப் :D

தேங்காய் பூ போட்ட ரொட்டியின் சுவையே தனி :)

கல்லு றொட்டி .

கோதுமை மாவை பைக்கற்ருடன் நீராவியில் அரை மணித்தியாலம் அவிக்கவும் . அவித்த கோதுமை மாவை அரிதட்டில் சூட்டுடன் போட்டு அரிக்கவும் . அ

ஆனால் எங்கள் ஊரில்/வீட்டில் அவித்த மாவில் ரோட்டி சுட்டதாக நினைவில்/ கேள்விப்பட்டது இல்லை.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

அட...இவ்வவளவு நாளும் கூப்பிடு தூரத்திலை அந்தமாதிரி ஒரு chéf இருந்தது தெரியாமல் போச்சே...இனிமேல் சட்டியை அடுப்பிலை வச்சிட்டு ஏதாவது டவுட்டு எண்டால் போன் அடிப்பன் கோமகன் அண்ணை..பொடியனுக்கு தெளிவா சொல்லி தரவேணும் சொல்லிப் போட்டன்...இணையவன் அண்ணா நீங்களும் இதைக் கவனத்தில எடுத்துக் கொள்ளுங்கோ... :)

  • கருத்துக்கள உறவுகள்

அட...இவ்வவளவு நாளும் கூப்பிடு தூரத்திலை அந்தமாதிரி ஒரு chéf இருந்தது தெரியாமல் போச்சே...இனிமேல் சட்டியை அடுப்பிலை வச்சிட்டு ஏதாவது டவுட்டு எண்டால் போன் அடிப்பன் கோமகன் அண்ணை..பொடியனுக்கு தெளிவா சொல்லி தரவேணும் சொல்லிப் போட்டன்...இணையவன் அண்ணா நீங்களும் இதைக் கவனத்தில எடுத்துக் கொள்ளுங்கோ... :)

ராசா பகிடிக்கு ஒரு அளவு இல்லையே

மாவு ரொட்டிக்கே உதவி அதுவும் செப் இன் உதவி கேட்குதே............... :lol::D :D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அவிச்ச மாவை பச்ச தண்ணீர் விட்டு ரொட்டிக்கு குழைச்சால் களி[ழி :unsure: ] மாதிரி வரதோ?

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அவிச்ச மாவை பச்ச தண்ணீர் விட்டு ரொட்டிக்கு குழைச்சால் களி[ழி :unsure: ] மாதிரி வரதோ?

கோமகன் செஃப் முறைப்படி கல்லு ரொட்டி சுட்டுப் பார்த்தால் தெரியும் வருவது களியா அல்ல்து ரொட்டியா என்று! ரொட்டிதான் வரும் என்று நான் நினைக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் செஃப் முறைப்படி கல்லு ரொட்டி சுட்டுப் பார்த்தால் தெரியும் வருவது களியா அல்ல்து ரொட்டியா என்று! ரொட்டிதான் வரும் என்று நான் நினைக்கின்றேன்!

சாதரணமாக அவிச்ச மாவை கொதி நீரில் தான் புட்டுக்கு குழைப்பார்களே ஏன் பச்சைத் தண்ணீரில் குழைப்பதில்லை?

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

சாதரணமாக அவிச்ச மாவை கொதி நீரில் தான் புட்டுக்கு குழைப்பார்களே ஏன் பச்சைத் தண்ணீரில் குழைப்பதில்லை?

கொஞ்சம் கடினமான கேள்வி!!

தண்ணீரின் அளவுதான் புட்டோ, களியோ என்று தீர்மானிக்கின்றது.

அவித்த மாவோ, பச்சை மாவோ இரண்டிலும் starch (மாச்சத்து??) இருக்கும். கொதி நீரைக் கலக்கும்போது starch மூலக்கூறுகள் பெரிதாகி உடையும். உடைந்த starch மூலக்கூறுகள் மீளவும் சேர்ந்துகொள்ளும்போது, மாவும் சிறு சிறு அளவில் சேருவதுதான் புட்டு என்று சொல்லுவது!

அதிகம் கொதி தண்ணீர் விட்டாலும் புட்டு களியாகும்தானே. எனவே புட்டு மா கிண்டுவதற்கு குறைந்த தண்ணீர் பாவிக்கப்படுகின்றது. அத்துடன் கொதிநீர் starch மூலக்கூறுகள் உடையும் வேகத்தை அதிகரிப்பதால், குறைந்த அளவு கொதிநீருடன் புட்டு மாவைக் கிண்டலாம். அதாவது தண்ணீரின் அளவுதான் புட்டோ, களியோ என்று தீர்மானிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ராசா பகிடிக்கு ஒரு அளவு இல்லையே

மாவு ரொட்டிக்கே உதவி அதுவும் செப் இன் உதவி கேட்குதே............... :lol::D :D

கோமகன் அண்ணை எனக்கு மட்டுமில்லை என்னைமாதிரி ஒரு இளைஞர் படையணிக்கே பல விடயங்களில் ஆலோசனை சொல்லும் தத்துவாசிரியராய் இருக்கிறார்..எங்களுக்கு ஒரு டவுட்டு இல்லைப் பிரச்சினை எண்டா பகல் இரவு நடுச்சாமம் எண்டு பார்க்காமல் அண்ணனுக்குதான் போன் பண்ணி நாங்கள் ஆலோசனை பெற்றுக் கொள்ளுவம்...அது கல்லு ரொட்டி சுடுறது என்பதில் இருந்து காதலிக்கு எப்படி ரோசாப் பூ குடுப்பது என்பது வரை பல பரிமாணங்களில் பலவிதப்படும்...அவரிட்டை ஆலோசனை பெற்று பயனடைந்த பெடியள் யாழிலும் இருக்கிறாங்கள்...உங்களுக்கு ஏன் பொறாமை... :D நானும் உங்களை மாதிரி போனடிச்சு வீட்டிலை என்ன சாப்பாடப்பா எண்டு கேக்கிறனான்...கனவிலை... :D

  • தொடங்கியவர்

துருவிய தேங்காய்பூவையும் கோதுமை மாவுடன் சேர்த்து உப்பும் கலந்து தண்ணியும் கலந்து ........... :D :D

கோ கரட் சட்னி...............வித்தியாசமாய் இருக்கு இன்று செய்து பார்த்து சொல்கிறேன் பதிவுக்கு நன்றி

செய்துபாருங்கோ பேந்து சொல்லுங்கோ செஃப் ஆறதுக்கு தகுதிதராதரம் இருக்கோ எண்டு . மிக்கநன்றிகள் நிலாமதி அக்கா .

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அண்ணை எனக்கு மட்டுமில்லை என்னைமாதிரி ஒரு இளைஞர் படையணிக்கே பல விடயங்களில் ஆலோசனை சொல்லும் தத்துவாசிரியராய் இருக்கிறார்..எங்களுக்கு ஒரு டவுட்டு இல்லைப் பிரச்சினை எண்டா பகல் இரவு நடுச்சாமம் எண்டு பார்க்காமல் அண்ணனுக்குதான் போன் பண்ணி நாங்கள் ஆலோசனை பெற்றுக் கொள்ளுவம்...அது கல்லு ரொட்டி சுடுறது என்பதில் இருந்து காதலிக்கு எப்படி ரோசாப் பூ குடுப்பது என்பது வரை பல பரிமாணங்களில் பலவிதப்படும்...அவரிட்டை ஆலோசனை பெற்று பயனடைந்த பெடியள் யாழிலும் இருக்கிறாங்கள்...உங்களுக்கு ஏன் பொறாமை... :D நானும் உங்களை மாதிரி போனடிச்சு வீட்டிலை என்ன சாப்பாடப்பா எண்டு கேக்கிறனான்...கனவிலை... :D

இந்தளவும் போதும்

பாவம் கோமகன்

அவருக்கு மணிமகிடம் சூடுவதாய் நினைத்து...............??? :lol::D :D

  • தொடங்கியவர்

உதுதான் எங்கடை ஊரிலை கூப்பன்மா றொட்டி....பெரியாக்களுக்கு வெங்காயம் பச்சைமிளகாய்யோடை.......குஞ்சுகுருமன்களுக்கு கொஞ்சசீனியும் போட்டு அந்தமாதிரி தோசைக்கல்லுலை போட்டு எடுக்கிறது...தகவலுக்கு நன்றி செப் :D

சரியண்ணை கொஞ்சம் வித்தியாசமாய் சொல்லுவம் எண்டால் விடுறியள் இல்லை . அதோடை கதையோடை கதையா , அப்ப இந்தக் கூப்பன்கடை மா , பாண் எல்லாம் எங்கடை சனத்திற்கு மரியாதைக்குறைவான சாப்பாடுகள் . பேந்து அதுகும் இல்லாமல் ஓடுப்பட்டது வேறைகதை .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தளவும் போதும்

பாவம் கோமகன்

அவருக்கு மணிமகிடம் சூடுவதாய் நினைத்து...............??? :lol::D :D

நீங்கள் விரும்பும் மணி மகுடம் எல்லாம் அவர் விரும்ப மாட்டார் அண்ணை...மனமகுடம் மட்டும் போதும் அவருக்கு... :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் விரும்பும் மணி மகுடம் எல்லாம் அவர் விரும்ப மாட்டார் அண்ணை...

மனமகுடம் மட்டும் போதும் அவருக்கு... :lol::icon_idea:

இதோ

நானும் தங்களை அகர முதலவில் எழுத தூண்டி அதை வரவழைத்துள்ளேனே...

ஒரு நன்றி சொல்லக்கூடாதா?

  • தொடங்கியவர்

நன்றி செப்! இதை மாவை அவிக்காமலும் செய்வார்கள் என்று நினைக்கிறேன்!

குஞ்சுகுருமன்களுக்கு வாழைப்பழத்தையும் போட்டு செய்வார்கள்.

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

இதோ

நானும் தங்களை அகர முதலவில் எழுத தூண்டி அதை வரவழைத்துள்ளேனே...

ஒரு நன்றி சொல்லக்கூடாதா?

எனக்கு லைக் முடிஞ்சுது அண்ணை... :( ஆனாலும் நன்றிகள்.. :)

  • தொடங்கியவர்

தேங்காய் பூ போட்ட ரொட்டியின் சுவையே தனி :)

ஆனால் எங்கள் ஊரில்/வீட்டில் அவித்த மாவில் ரோட்டி சுட்டதாக நினைவில்/ கேள்விப்பட்டது இல்லை.

மிக்க நன்றிகள் குளைக்காட்டான் உங்கள் கருத்துக்களுக்கு .

அட...இவ்வவளவு நாளும் கூப்பிடு தூரத்திலை அந்தமாதிரி ஒரு chéf இருந்தது தெரியாமல் போச்சே...இனிமேல் சட்டியை அடுப்பிலை வச்சிட்டு ஏதாவது டவுட்டு எண்டால் போன் அடிப்பன் கோமகன் அண்ணை..பொடியனுக்கு தெளிவா சொல்லி தரவேணும் சொல்லிப் போட்டன்...இணையவன் அண்ணா நீங்களும் இதைக் கவனத்தில எடுத்துக் கொள்ளுங்கோ... :)

கதை ருசியில சட்டியைக் கரியாக்காமல் இருந்தால் சரி சுபேஸ் .

  • தொடங்கியவர்

கோமகன் அவிச்ச மாவை பச்ச தண்ணீர் விட்டு ரொட்டிக்கு குழைச்சால் களி[ழி :unsure: ] மாதிரி வரதோ?

இதுக்குத் தான் நீங்கள் வேணும் எண்டு சொல்லுறது . சுடுதண்ணிதான் விடவேணும் . ஆனால் , தண்ணிவிசையம் கைப்பக்குவம் தான் . இதில் அளவுகணக்கு அவரவர் அனுபவம் . தவறைத திருத்தி விடுகின்றேன் . மக்க நன்றிகள் ரதி .

  • தொடங்கியவர்

விசுகர் சுபேஸ் கருத்தாடல்களுக்கு கபே குடிக்கும்பொழுது பதில் தரப்படும் .

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் சுபேஸ் கருத்தாடல்களுக்கு கபே குடிக்கும்பொழுது பதில் தரப்படும் .

வெக்கை குறைந்த பின்னரோ.....??? :D :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.