Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டக்கச்சியும் நானும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில மாதங்களுக்கு முன் மன்மதகுஞ்சுவிடம், வன்னிப்பக்கம் போனால் நம்ம வட்டக்கச்சி மகாவித்தியாலய படம் ஒன்று எடுத்து அனுப்பு என்று சொன்னேன். தல சொன்ன வாக்கை காப்பாற்றிவிட்டது.

VMV_thumb%25255B4%25255D.jpg?imgmax=800

வன்னியில் இடம்பெயர்ந்து இருந்தபோது எனக்கு பதினைந்து பதினாறு வயசு. பசுமரத்தாணி. வட்டக்கச்சி மகாவித்தியாலயம் ஒரு கலவன் பாடசாலை. சென்ஜோன்சில் எப்போதாவது வரும் டீச்சர்மாரை லொள்ளுவிட்டுக்கொண்டிருந்தவனுக்கு திடீரென்று ஒரு கிராமப்புற கலவன் பாடசாலை என்றவுடன் சும்மா ஜிவ்வென்று .. அதுவும் அப்போதெல்லாம் கொஞ்சம் புத்தி வேறு ஓரளவுக்கு வேலைசெய்ததால் வகுப்பிலும் முதலிடம். பொண்ணுங்க எல்லாம் கியூவில் வந்து டவுட் கேட்க நான் நிறுவினது எல்லாமே “வெளிப்படை உண்மை” தான்! O/L பரீட்சை அங்கே தான் எடுத்தேன்.காலை பரீட்சைக்கு முட்டை பொரியலும் புட்டும் கிடைக்கும். இரவு பத்துமணிக்கு, பின்னேரம் கறந்த பசுப்பாலில் டீ. அம்மாவை விட வட்டக்கச்சி மாமி தான் பார்த்து பார்த்து கவனித்தார். எனக்கும் இன்னொரு அண்ணாவுக்கும் என்று கன்றுக்குட்டிகள் மழைக்கு ஒதுங்கும் கொட்டிலை சரிக்கட்டி தந்திருந்தார்கள். கிரவல் மண்ணில் நாங்களே மெழுகி கறுப்பு பெயிண்ட் அடித்து, அரிக்கன் லாம்பில்(மேசை விளக்கு அணைந்துவிடும்), அப்படி ஒரு சிட்டுவேஷனில் படிப்பது போன்ற ஒரு சந்தோஷம் உலகத்தில் வேறு என்ன இருக்கு?

5_thumb%25255B3%25255D.jpg?imgmax=800

ரிசல்ட் வந்தது. 7டியும் 1சியும். ஆங்கில இலக்கியம் ‘சி’ என்று என்னைவிட, என் குடும்பத்தை விட வட்டக்கச்சி அதிகம் கவலைப்பட்டது. இப்போதும் கூட இந்த பாடசாலை 1996ம் ஆண்டு சஞ்சிகையில் என் பெயர் விவரம் இருப்பதாக சொல்லிக்கொள்வார்கள். பத்து வருடங்கள் படித்தும் சென்ஜோன்ஸ் கொடுக்க தவறிய அங்கீகாரத்தை இடம்பெயர்ந்து இரண்டு வருடங்களே படித்த எனக்கு இந்த பாடசாலை கொடுத்தது. அகதியாய் வந்தவனுக்கு, இடம் கொடுத்து, சாப்பாடு கொடுத்து படிக்க கொட்டில் கொடுத்து பார்த்து பார்த்து செய்து, நான் படித்து நல்ல ரிசல்ட் எடுப்பதை எப்போதுமே பெருமையாய் பார்த்து, இன்றைக்கும் என் பெயரை சொல்லி சொல்லியே தம் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதாக சொல்லுவார்கள்.எப்படிப்பட்ட ஊர் அது.

4_thumb%25255B11%25255D.jpg?imgmax=800

சென்றவருடம் அவர்கள் வீட்டுக்கு போயிருந்தேன். அப்போது தான் மானிக்முகாமிலிருந்து வீடு திரும்பியிருந்தார்கள். நான் வந்துவிட்டேன் என்று, நின்ற ஒரே சேவலையும் சட்டிக்குள் வைத்து, கோப்பையில் எப்போது கொஞ்சம் இறைச்சிக்கறி குறையுதோ, சடாரென்று பாய்ந்து வந்து ஒரு கரண்டி போட்டு .. என்ன மாதிரி சனங்கள்? கால் தூசிக்கு பெறுவோமா?

அந்த குடுப்பத்திலேயே ஒரு பையன் பதினாலு வயசு, ஆள் எங்கே என்று தெரியாது. இன்னொரு பையனும் கடைசி நாள் அன்று தான் …. காயங்கள் இல்லாத நபர்களே கிடையாது. கால் இல்லாமல் போனாலும், கை போனாலும், இன்றைக்கும் பத்து இருபது ஏக்கரில் நெல் விதைக்கும் நம்பிக்கை இன்னும் போகவில்லை.

என்ன செய்யப்போகிறேன்?

http://www.padalay.com/

வட்டக்கச்சி பற்றி இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே அதன் நீர் வளம் குளிர்மை வயல்... பலாபழம் ......

பெரும்பாலானோருக்கு வன்னியின் கிராமங்கள் பற்றி தெரியா

jk ,

உங்களிடம் இன்னும் கொஞ்சம் கூட எதிர்பார்த்தேன்.

கட்சன் ரோட் சந்தியும்,

கோவிந்தன் கடை குளியல்,

இரணைமடு அணையில் சைக்கிள் ஓட்டம்,

மாயவனூர் திருவிழா,

புலனாய்வு முகாம் கள்ள மாங்காய்,

உருத்திரன் முகாம் கூழ், மாவடி மதகடி,

மாமரத்து பெரிய ஊஞ்சல்,

பொதுகிணறு வரிசை,

பண்ணையில் களவாக திருடிய வாழைக்குலை

பழைய சைக்கிளில் ஒருதலைக்காதல்,

சுகுணா கடையும் கிளிமூக்கு மாங்காயும்

.. ஹ்ம்ம் ..மறுபடியும் அந்த நாட்களை நினைத்து ஒரு கதை எழுத மாட்டீர்களோ.

காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

jk ,

உங்களிடம் இன்னும் கொஞ்சம் கூட எதிர்பார்த்தேன்.

கட்சன் ரோட் சந்தியும்,

கோவிந்தன் கடை குளியல்,

இரணைமடு அணையில் சைக்கிள் ஓட்டம்,

மாயவனூர் திருவிழா,

புலனாய்வு முகாம் கள்ள மாங்காய்,

உருத்திரன் முகாம் கூழ், மாவடி மதகடி,

மாமரத்து பெரிய ஊஞ்சல்,

பொதுகிணறு வரிசை,

பண்ணையில் களவாக திருடிய வாழைக்குலை

பழைய சைக்கிளில் ஒருதலைக்காதல்,

சுகுணா கடையும் கிளிமூக்கு மாங்காயும்

.. ஹ்ம்ம் ..மறுபடியும் அந்த நாட்களை நினைத்து ஒரு கதை எழுத மாட்டீர்களோ.

காத்திருக்கிறேன்.

அப்படியே நம்ம ஐயாயிரத்தார்(5000) :icon_idea: :icon_idea: :icon_idea:

மற்றவர்கள் சொன்னது போல இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்கலாம். உங்கள் எழுதும் பாணி இன்னும் அந்த ஊருக்கு அழகு சேர்த்து இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி இரு பந்தியிலுள்ள கதைகளை சொல்ல வார்த்தைகள் போதாது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு நினைவு மீட்டலுக்கு நன்றிகள், படலை!!!

எனது மண்

முற்றத்து பலாக்கனிகள்

முகம்மலர்ந்து வரவேற்க

செம்பாட்டான் மாங்கனிகள்

அசைந் தசைந்து தலையாட்ட

தோடை எலுமிச்சை

கிணற்றடியில் சுற்றிநிற்க

தொங்கும் துலாவிற்கு

முள்முருங்கை தோள்கொடுக்க

வாழைகள் கூடி நின்று

வம்சத்தை நினைவு சொல்ல

வாசலில் தென்னைமரம்

வாவென்று எனை அழைக்க

மந்திகள் கூட்டமாக

மாமரத்தில் விளையாட

கொம்புத் தேனீக்கள்

கூட்டமாய் அதைக் கலைக்க

கொய்யாவும் மாதுளையும்

குலுங்கிக் கூத்தாட

உழுந்தும் பயறும்

வயலெங்கும் படர்ந்து நிற்க

நெல்மூடை வாசலிலே

விருந்தினரை வரவேற்க

மாலைக் கதிரொளிகள்

மரத்தோப்பினில் ஊடுருவ

கொத்திப் புரட்டிய

கோடரி மண்வெட்டி

கொல்லைப் புறத்தங்கே.

தோள்சாய்த்து ஓய்வெடுக்க

நானும் அமைதியாய்

என் குடிலில் தலை சாய்க்க

சாமத்தில் கோழிகள்

சத்தமிட்டு எனை எழுப்ப

நான் எழுந்து போகையிலே

மரநாய்கள் ஓட்டமிட

போனதிசை நோக்க

கறையான் புற்று உயர்ந்து நிற்க

பக்கத்தில் சாரதா கோவில்

பக்தி அருள் சுரக்கும் அங்கே.

இத்தனையும் தந்த மண்

இருண்டபடி கிடக்குதங்கே

என்மனமோ ஏங்குகிறது

எனது மண்ணை எண்ணி எண்ணி.

- கிளிஅக்கா -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே

இது வட்டக்கச்சி பற்றிய தனிப்பதிவு இல்லை. வாரம் தூரம் வியாழமாற்றம் என்னும் கதம்ப பதிவு நான் எழுதுவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும். அதில் தான் இதை எழுதினேன் ... யாழ் கள நண்பர்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து அதை மட்டும் தனித்து பிரித்து இங்கே தந்தேன் .. வட்டக்கச்சி பற்றி விரிவாக கொல்லைபுறத்து காதலிகள் ஒரு நாள் வரும்!

வியாழ மாற்றத்தை யாழ் இணையத்தில் கொடுங்கள் என்று நிழலியும் வேறு சில நண்பர்களும் கேட்டிருந்தார்கள். அதை எந்த பிரிவில் இணைப்பது என்று தெரியவில்லை. வியாழமாற்றம் கொஞ்சம் Readers Digest,விகடன் சாயலில் எல்லாவற்றையும் சுவாரசியமாக தரும் முயற்சி ... சரியான கருத்துக்களம் எது என்று உங்கள் எண்ணத்தை சொன்னால் அங்கே போட்டுவிடலாம் ...

இந்த வார வியாழமாற்றம்

http://www.padalay.com/2012/05/10-05-2012.html

அன்புடன்,

ஜேகே

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், படலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.