Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்சீனக்கடல் எண்ணெய் ஆய்வை நிறுத்தியது இந்தியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

oil-dril-170512-150.jpg

தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய எண்ணை வளம் குறித்த ஆய்வை கைவிடுவதாக இந்தியா திடீரென்று அறிவித்துள்ளது. வியட்நாமுடன் கடந்த 2006-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய எண்ணை வளம் குறித்த ஆய்வை இந்தியா மேற்கொண்டு வந்தது.

இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.சீனாவின் எதிர்ப்புக்கு பணியாமல் இந்தியா தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆய்வை கைவிடுவதாக இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் திடீரென்று அறிவித்துள்ளது.

வர்த்தகம் மற்றும் பொருளாதார நிலை கருதி இந்த ஆய்வை கைவிடுவதாக இதற்கு விளக்கம் கூறியுள்ளது. இந்த ஆய்விற்காக இந்திய அரசு ரூ.244 கோடி முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வை கைவிடப்பட்டது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறது என்று டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இந்த தென் சீன கடல்பகுதி முழுவதும் தங்களுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடியது. ஆனால் அதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தங்களுக்கும் அந்த பகுதியில் பங்கு உண்டு என்று சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் வியட்நாம் கடல் பகுதிகளில் எண்ணை வளம் குறித்து ஆய்வை இந்தியா மேற்கொள்ளக் கூடாது என்று கடந்த மார்ச்சி்ல், இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தென் சீனக் கடல் பகுதியானது உலக நாடுகள் அனைத்துக்கும் சொந்தமானது எனவும், வர்த்தக வழித்தடமான அப்பகுதியில் எந்த நாட்டின் தலையீடும் இருக்கக் கூடாது எனவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் காற்றுதான் வருதாம்.. :D

பயந்தாங் கொள்ளிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சீனாக்காரன் சொன்ன உடனேயே கிளம்பிவிட்டினம், மரியாதையோ ? அல்லது ராஜதந்திரமோ ?? :D :icon_mrgreen:

என்ன சீனாக்காரன் சொன்ன உடனேயே கிளம்பிவிட்டினம், மரியாதையோ ? அல்லது ராஜதந்திரமோ ?? :D :icon_mrgreen:

செய்திகளை திரிப்பதில் வல்லவர்கள் . இடை நிறுத்தி உள்ளதற்கு காரணம் அங்கு பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் சீனாவுக்கும் இடையில் போர் உருவாகும் சூழலே

துரிதமாக வளர்ந்து வரும் சீன இராணுவத்துடன் தன்னால் மோத முடியாது என இந்தியாவுக்குத் தெரியும்.

நாளை சிறிலங்காவும் ,சீனாவுடன் கூட்டுச் சேர்ந்து இந்து சமுதிரத்திலும், மன்னார்ப் படுக்கையிலும் கடற்படைத் தளம் அமைத்து இந்தியாவையும் குறிப்பாகத் தமிழ் நாட்டையும் அச்சுறுத்தும்.

அப்போது தமிழக மீனவர் கடலுக்குச் செல்ல முடியாத நிலை வரும். இந்திய கடற்படை கை கட்டி வாய் பொத்தி பார்த்துக் கொண்டிருக்கும் நிலை வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை திரிப்பதில் வல்லவர்கள் . இடை நிறுத்தி உள்ளதற்கு காரணம் அங்கு பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் சீனாவுக்கும் இடையில் போர் உருவாகும் சூழலே

சீனாவுடன் மோதும் அளவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டிடம் போதுமான வளம் உள்ளதா ? :D :icon_mrgreen:

துரிதமாக வளர்ந்து வரும் சீன இராணுவத்துடன் தன்னால் மோத முடியாது என இந்தியாவுக்குத் தெரியும்.

நாளை சிறிலங்காவும் ,சீனாவுடன் கூட்டுச் சேர்ந்து இந்து சமுதிரத்திலும், மன்னார்ப் படுக்கையிலும் கடற்படைத் தளம் அமைத்து இந்தியாவையும் குறிப்பாகத் தமிழ் நாட்டையும் அச்சுறுத்தும்.

அப்போது தமிழக மீனவர் கடலுக்குச் செல்ல முடியாத நிலை வரும். இந்திய கடற்படை கை கட்டி வாய் பொத்தி பார்த்துக் கொண்டிருக்கும் நிலை வரும்.

வந்தால் என்ன ? தமிழ் மீனவர்கள்தானே பாதிக்கப்படப்போகின்றார்கள் என்று எண்ணி பேசாமல் இருந்து விடும் இந்தியா

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை திரிப்பதில் வல்லவர்கள் . இடை நிறுத்தி உள்ளதற்கு காரணம் அங்கு பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் சீனாவுக்கும் இடையில் போர் உருவாகும் சூழலே

இந்தியா கண்டு பிடித்த ஏவுகணைகளையும், அதனைத் திருப்பித் தாக்கும்... ஏவுகணையையும் பரிசோதித்துப் பார்க்க வந்த நல்ல சந்தர்ப்பத்தை.. கைநழுவ விடலாமா? போதாக் குறைக்கு... பிலிப்பைன்சும் இந்தியாவுக்கு உதவி செய்யுமே....

பிறகு... என்ன, இழவுக்கு....

தமிழனை அழிக்கவா? ஆயுதக் கொள்வனவிலும், இராணுவத்துக்கு முதலீடு செய்வதிலும்... இந்தியா நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கண்டு பிடித்த ஏவுகணைகளையும், அதனைத் திருப்பித் தாக்கும்... ஏவுகணையையும் பரிசோதித்துப் பார்க்க வந்த நல்ல சந்தர்ப்பத்தை.. கைநழுவ விடலாமா? போதாக் குறைக்கு... பிலிப்பைன்சும் இந்தியாவுக்கு உதவி செய்யுமே....

பிறகு... என்ன, இழவுக்கு....

தமிழனை அழிக்கவா? ஆயுதக் கொள்வனவிலும், இராணுவத்துக்கு முதலீடு செய்வதிலும்... இந்தியா நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கின்றது.

எல்லாம் ஒரு ராஜதந்திரம்தான் :icon_mrgreen: :D

பாகிஸ்தானை மிரட்ட எல்லோ ஏவுகணையை கண்டு பிடித்தது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

துரிதமாக வளர்ந்து வரும் சீன இராணுவத்துடன் தன்னால் மோத முடியாது என இந்தியாவுக்குத் தெரியும்.

நாளை சிறிலங்காவும் ,சீனாவுடன் கூட்டுச் சேர்ந்து இந்து சமுதிரத்திலும், மன்னார்ப் படுக்கையிலும் கடற்படைத் தளம் அமைத்து இந்தியாவையும் குறிப்பாகத் தமிழ் நாட்டையும் அச்சுறுத்தும்.

அப்போது தமிழக மீனவர் கடலுக்குச் செல்ல முடியாத நிலை வரும். இந்திய கடற்படை கை கட்டி வாய் பொத்தி பார்த்துக் கொண்டிருக்கும் நிலை வரும்.

சீனாவும் சிங்களவனும் மன்னார் வளைகுடாவில் எண்ணைக்கிணறு தோண்டினால் இந்தியா நெருப்பு அடி கொடுக்கும்..! துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடப் போகிறார்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவும் சிங்களவனும் மன்னார் வளைகுடாவில் எண்ணைக்கிணறு தோண்டினால் இந்தியா நெருப்பு அடி கொடுக்கும்..! துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடப் போகிறார்கள்..!

யார் ? தென்னிந்தியாவில் இருக்கும் வட இந்தியர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவும் சிங்களவனும் மன்னார் வளைகுடாவில் எண்ணைக்கிணறு தோண்டினால் இந்தியா நெருப்பு அடி கொடுக்கும்..! துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடப் போகிறார்கள்..!

நாங்கள் இந்தியர்கள் என்று சொல்வது சகோதர தமிழர்களை தவித்தே ...... இல்லையா இசைக்கலைஞன் :)

  • கருத்துக்கள உறவுகள்

யார் ? தென்னிந்தியாவில் இருக்கும் வட இந்தியர்களா?

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இந்தியர்கள் என்று சொல்வது சகோதர தமிழர்களை தவித்தே ...... இல்லையா இசைக்கலைஞன் :)

அப்படியல்ல தமிழரசு.. நான் எனது கொள்கையை மாற்றிக்கொண்டு விட்டேன்.. நன்றிகள் தமிழ்ப்பைத்தியம்.. :unsure:

ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் வாழவெண்டும் என்பது இந்தியாவின் விருப்பமாகும்.. அதேபோல இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் வாழவேண்டும் என்பது என் விருப்பமாகும்.. :blink:

அதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மூன்றும் ஒன்றிணைக்கப்பட்டு பழைய முறையில் "இந்தியா" உருவாக்கப்பட வேண்டும்..! இந்தியாவில் பிரிவினைகள் வேண்டாம்..!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியல்ல தமிழரசு.. நான் எனது கொள்கையை மாற்றிக்கொண்டு விட்டேன்.. நன்றிகள் தமிழ்ப்பைத்தியம்.. :unsure:

ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் வாழவெண்டும் என்பது இந்தியாவின் விருப்பமாகும்.. அதேபோல இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் வாழவேண்டும் என்பது என் விருப்பமாகும்.. :blink:

அதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மூன்றும் ஒன்றிணைக்கப்பட்டு பழைய முறையில் "இந்தியா" உருவாக்கப்பட வேண்டும்..! இந்தியாவில் பிரிவினைகள் வேண்டாம்..!! :rolleyes:

அப்பவாவது... கச்சதீவு, இந்தியாவுக்கு சொந்தமாகுமா? :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவாவது... கச்சதீவு, இந்தியாவுக்கு சொந்தமாகுமா? :)

கச்சதீவை சிங்களவனின் காலடியில் பணிந்து இந்தியா தாரைவார்த்துக் கொடுத்ததால் அது சிங்களவனுக்கே சொந்தம்..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியல்ல தமிழரசு.. நான் எனது கொள்கையை மாற்றிக்கொண்டு விட்டேன்.. நன்றிகள் தமிழ்ப்பைத்தியம்.. :unsure:

ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் வாழவெண்டும் என்பது இந்தியாவின் விருப்பமாகும்.. அதேபோல இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் வாழவேண்டும் என்பது என் விருப்பமாகும்.. :blink:

அதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மூன்றும் ஒன்றிணைக்கப்பட்டு பழைய முறையில் "இந்தியா" உருவாக்கப்பட வேண்டும்..! இந்தியாவில் பிரிவினைகள் வேண்டாம்..!! :rolleyes:

ஒ .... அது நல்ல ஐடியா அப்ப அகண்ட இந்தியா ஒன்று அமையப்போகின்றது :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒ .... அது நல்ல ஐடியா அப்ப அகண்ட இந்தியா ஒன்று அமையப்போகின்றது :D

அது அகண்ட இந்தியாவா ..??!! இல்லையே.. :rolleyes: அதுதான் உண்மையான "இந்தியா". வெள்ளைக்காரன் வைத்த பெயர்..

இப்போது இருப்பதுதான் பிரிந்த இந்தியா.. அது எங்களுக்கு வேண்டாம்.. இந்தியாவில் பிளவு என்கிற சொல்லையே என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை..! :(

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே

பகிடிக்கென்றாலும் இந்தியா பற்றி நக்கல்கள் வேண்டாமே.

பல கோடி தமிழக உறவுகளை நாம் இழக்கவேண்டாமே.

நன்றி. :(

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே

பகிடிக்கென்றாலும் இந்தியா பற்றி நக்கல்கள் வேண்டாமே.

பல கோடி தமிழக உறவுகளை நாம் இழக்கவேண்டாமே.

நன்றி. :(

உண்மையான தமிழின உணர்வாளர்களுக்கு இது புரியும் விசுகு அண்ணா..! எழுதியிருப்பதில் தர்க்கரீதியாக எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை..! கவலை வேண்டாம்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியல்ல தமிழரசு.. நான் எனது கொள்கையை மாற்றிக்கொண்டு விட்டேன்.. நன்றிகள் தமிழ்ப்பைத்தியம்.. :unsure:

ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் வாழவெண்டும் என்பது இந்தியாவின் விருப்பமாகும்.. அதேபோல இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் வாழவேண்டும் என்பது என் விருப்பமாகும்.. :blink:

அதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மூன்றும் ஒன்றிணைக்கப்பட்டு பழைய முறையில் "இந்தியா" உருவாக்கப்பட வேண்டும்..! இந்தியாவில் பிரிவினைகள் வேண்டாம்..!! :rolleyes:

அப்பொழுது நான் "ந்தியனா"?

7149205-3d-illustration-of-an-angry-emoticon.jpgstock-footage-looping-emoticon-animation-raving-mad.jpg

  • கருத்துக்கள உறவுகள்

smileys-beating-and-fighting-486091.gif

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே

பகிடிக்கென்றாலும் இந்தியா பற்றி நக்கல்கள் வேண்டாமே.

பல கோடி தமிழக உறவுகளை நாம் இழக்கவேண்டாமே.

நன்றி. :(

விசுகு, இசைக்கலைஞனின் கருத்தே... எனதும்.

அதுகும்... எம்மை விட... தமிழகத்தை, நேசிப்பவன் யாரும் கிடையாது.

இந்தியா என்று..... யாரும், வக்காலாத்து வாங்கும் போது... எதிராக குரல் கொடுக்க நான் பின் நிற்க மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளிக்கு கண்டு பிடித்ததெல்லாம்.. தெருவில் தான் வெடிக்கும்.. இது ஒரு செய்தியா..? இது முன்ன்ரே எதிர்பார்த்தது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.