Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத்தமிழர் பேரவை கூட்டறிக்கை

Featured Replies

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , உலகத் தமிழர் பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள்

ஆகியோர் , இவ்விடயம் தொடர்பில் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் கடந்த 13, 14 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்க்கோ நகரில் ஒன்றுகூடி, பல விடயங்களை விரிவாக ஆராய்ந்ததோடு சில உடன்பாடுகளையும் எட்டியுள்ளனர் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முழுவிபரம் :

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நடைபெற்று முடிந்து இன்றுடன் ஆண்டுகள் மூன்றாகின்றன. இத்தினத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போதும் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டக்காலத்திலும் கொன்றொழிக்கப்பட்ட நமது மக்களை நாம் ஆழ்ந்த கவலையுடனும் வணக்கத்துடனும் பொறுப்புடனும் நினைவு கூருகின்றோம்.

அனைத்துலகச் சட்டங்கள் நியமங்களையெல்லாம் குழி தோண்டிப் புதைத்தவாறு பயங்கவாதத்துக்கெதிரான போர் என்ற போர்வையில் அநாகரீக முறையில் பல்லாயிரக்கணக்கான பொது மக்களை சிறிலங்கா அரசு கொடிய முறையில் கொன்றொழித்தது.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலான அனைத்துலக சமூகம் இப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்பது ஒரு வரலாற்றுப்பதிவாகியிருக்கிறது.

நமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். இக் குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்;கப்பட வேண்டும். ஈழத் தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த இப் பெரும் கொடுமை உலகில் எந்த மக்களுக்கும் எதிர்காலத்தில் நிகழாது காக்கப்படவும் வேண்டும்.

இதனால் நீதி கோரும் நமது போராட்டம் ஈழத் தமிழ் மக்களுக்கானது மட்டுமல்ல. உலகின்

எந்தவொரு அரசும் மக்கள் மீது இவ்வகை மிருகத் தனமான வன்முறையினைப் பயன்படுத்துவதற்கு எல்லைகள் விதிக்கப் பட்டாக வேண்டும் என்பதற்கான போராட்டமாகவும் இது அமைகிறது.

சிறிலங்கா அரசு புரிந்த இனப்படுகொலை தொடர்பான ஏராளமான ஆதாரங்கள் எமது கைகளிலும் அனைத்துலக சமூகத்தின் கைகளிலும் இருக்கின்றன. சிறிலங்கா அரசு தன் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஒரு பொழுதும் உள்நாட்டில் உரியமுறையில் செய்யப்போவதில்லை,

செய்யவும் முடியாது என்பதும் அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள முடியாத விடயம் அல்ல. அதே சமயத்தில், வெளியுலகம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் எமது இனத்தையும் தேசத்தையும் அழிக்கும் நடவடிக்கைளை அரசு வேகப்படுத்தி வருகிறது. இதனால் காலம் கடத்தாது, அனைத்துலக சுயாதீன விசாரணைக்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைவில் முன்னெடுக்க வேண்டும்.

இத்தனை இன்னல்களின் மத்தியிலும் சிக்கியிருக்கும் நமது மக்கள்; அங்கே கௌரவத்துடன் வாழத் துடிக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையை ஏற்படுத்துவதும் மிகவும் அவசியமாகிறது.

ஈழத் தாயகமும் – புலமும் – தமிழகமும் புரிந்துணர்வுடன் கூடிய செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய இந்த நேரத்தில் உலகத் தமிழ் மக்களினதும் உலகில் நீதிக்காய்க் குரல் தரக்கூடிய மக்கள் சமூகத்தின் ஆதரவுடனும் அவற்றினை நாம் முன்னெடுக்கும்; போது, அனைத்துலக சமூகம் நமது நீதிக்கான குரலை செவிமடுக்கும் சூழலை உருவாக்க முடியும்.

தற்போதய சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகார மமதையும் ஆணவப்போக்கும் அனைத்துலக சமூகத்தின் வெறுப்பினைச் சம்பாதித்து வருகின்றன. இது நமக்கு வாய்ப்பான சூழல் உருவாகும் நிலைமைகளைத் தோற்றுவித்தும் வருகிறது. அதே சமயத்தில் முள்ளிவாய்க்காலின் பின் சர்வதேச மன நிலையிலும் பார்வையிலும் அணுகு முறையிலும் மாற்றங்கள் தோன்றுகின்றன. இவைகளை எமது கவனத்திற்கொண்டு, நாம் விவேகத்துடனும் அரசியல் ஞானத்துடனும் எமக்கு ஆதாயமாக்கிச் செயற்பட வேண்டும். நமக்கிடையிலேயான புரிந்துணர்வையும் கூட்டுச் செயற்பாடுகளையும் வலுப்படுத்தவும் வேண்டும்.

இந்நோக்குடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் இம் மாதம் 13, 14 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்க்கோ நகரில் ஒன்றுகூடி, ஒருங்கிணைந்த செயற்பாடுகள் தொடர்பான பல விடயங்களை விரிவாக ஆராய்ந்ததோடு சில உடன்பாடுகளையும் எட்டியுள்ளனர் என்பதனை நமது மக்களுக்கு அறியத் தருகிறோம்.

முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் நாம் முன்னெடுக்கும் நமது மூன்றாம் கட்ட விடுதலைப்பயணத்தில் இம் முயற்சி ஒரு முக்கியமான ஒரு மைல்கல்லாகும். உலகத் தமிழர் பேரவை மேற்கொண்டு பல்வேறு புலம்பெயர் தமிழமைப்புக்களுடனும் இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகளுடனும் இவ்வகை பொதுவான புரிந்துணர்வு நோக்கி செயற்படவுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழ் மக்களிடையே, அதுவும் குறிப்பாகத் தமிழக உறவுகளிடையேயும் மற்றும் சர்வதேச மக்கள் சமூகத்திடையேயும் தமது வலுவைத் திரட்டி வருகிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் இன்றைய தினத்திலே நமது மக்களின் விடுதலை நோக்கிய பயணம் ஓய்வின்றித் தொடரும் என்ற தெளிவான செய்தியினை நாம் கூட்டிணைந்து வெளிப்படுத்த விரும்புகிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள் ஆகியோரது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

http://naathamnews.com/?p=5785

ஆங்கில மூலம்:

http://world.einnews...berance-message

  • கருத்துக்கள உறவுகள்

May_Remembrance_2012-150.jpg

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , உலகத் தமிழர் பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள் ஆகியோர் , இவ்விடயம் தொடர்பில் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.

May_Remembrance_2012-667-001.jpg

ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் கடந்த 13, 14 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்க்கோ நகரில் ஒன்றுகூடி, பல விடயங்களை விரிவாக ஆராய்ந்ததோடு சில உடன்பாடுகளையும் எட்டியுள்ளனர் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முழுவிபரம் :

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நடைபெற்று முடிந்து இன்றுடன் ஆண்டுகள் மூன்றாகின்றன. இத்தினத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போதும் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டக்காலத்திலும் கொன்றொழிக்கப்பட்ட நமது மக்களை நாம் ஆழ்ந்த கவலையுடனும் வணக்கத்துடனும் பொறுப்புடனும் நினைவு கூருகின்றோம்.

அனைத்துலகச் சட்டங்கள் நியமங்களையெல்லாம் குழி தோண்டிப் புதைத்தவாறு பயங்கவாதத்துக்கெதிரான போர் என்ற போர்வையில் அநாகரீக முறையில் பல்லாயிரக்கணக்கான பொது மக்களை சிறிலங்கா அரசு கொடிய முறையில் கொன்றொழித்தது.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளடங்கலான அனைத்துலக சமூகம் இப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்பது ஒரு வரலாற்றுப்பதிவாகியிருக்கிறது.

நமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். இக் குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்;கப்பட வேண்டும். ஈழத் தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த இப் பெரும் கொடுமை உலகில் எந்த மக்களுக்கும் எதிர்காலத்தில் நிகழாது காக்கப்படவும் வேண்டும்.

இதனால் நீதி கோரும் நமது போராட்டம் ஈழத் தமிழ் மக்களுக்கானது மட்டுமல்ல. உலகின்

எந்தவொரு அரசும் மக்கள் மீது இவ்வகை மிருகத் தனமான வன்முறையினைப் பயன்படுத்துவதற்கு எல்லைகள் விதிக்கப் பட்டாக வேண்டும் என்பதற்கான போராட்டமாகவும் இது அமைகிறது.

சிறிலங்கா அரசு புரிந்த இனப்படுகொலை தொடர்பான ஏராளமான ஆதாரங்கள் எமது கைகளிலும் அனைத்துலக சமூகத்தின் கைகளிலும் இருக்கின்றன. சிறிலங்கா அரசு தன் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஒரு பொழுதும் உள்நாட்டில் உரியமுறையில் செய்யப்போவதில்லை,

செய்யவும் முடியாது என்பதும் அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள முடியாத விடயம் அல்ல. அதே சமயத்தில், வெளியுலகம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் எமது இனத்தையும் தேசத்தையும் அழிக்கும் நடவடிக்கைளை அரசு வேகப்படுத்தி வருகிறது. இதனால் காலம் கடத்தாது, அனைத்துலக சுயாதீன விசாரணைக்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைவில் முன்னெடுக்க வேண்டும்.

இத்தனை இன்னல்களின் மத்தியிலும் சிக்கியிருக்கும் நமது மக்கள்; அங்கே கௌரவத்துடன் வாழத் துடிக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையை ஏற்படுத்துவதும் மிகவும் அவசியமாகிறது.

ஈழத் தாயகமும் தமிழகமும் புரிந்துணர்வுடன் கூடிய செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய இந்த நேரத்தில் உலகத் தமிழ் மக்களினதும் உலகில் நீதிக்காய்க் குரல் தரக்கூடிய மக்கள் சமூகத்தின் ஆதரவுடனும் அவற்றினை நாம் முன்னெடுக்கும்; போது, அனைத்துலக சமூகம் நமது நீதிக்கான குரலை செவிமடுக்கும் சூழலை உருவாக்க முடியும்.

தற்போதய சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகார மமதையும் ஆணவப்போக்கும் அனைத்துலக சமூகத்தின் வெறுப்பினைச் சம்பாதித்து வருகின்றன. இது நமக்கு வாய்ப்பான சூழல் உருவாகும் நிலைமைகளைத் தோற்றுவித்தும் வருகிறது. அதே சமயத்தில் முள்ளிவாய்க்காலின் பின் சர்வதேச மன நிலையிலும் பார்வையிலும் அணுகு முறையிலும் மாற்றங்கள் தோன்றுகின்றன. இவைகளை எமது கவனத்திற்கொண்டு, நாம் விவேகத்துடனும் அரசியல் ஞானத்துடனும் எமக்கு ஆதாயமாக்கிச் செயற்பட வேண்டும். நமக்கிடையிலேயான புரிந்துணர்வையும் கூட்டுச் செயற்பாடுகளையும் வலுப்படுத்தவும் வேண்டும்.

இந்நோக்குடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் இம் மாதம் 13, 14 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்க்கோ நகரில் ஒன்றுகூடி, ஒருங்கிணைந்த செயற்பாடுகள் தொடர்பான பல விடயங்களை விரிவாக ஆராய்ந்ததோடு சில உடன்பாடுகளையும் எட்டியுள்ளனர் என்பதனை நமது மக்களுக்கு அறியத் தருகிறோம்.

முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் நாம் முன்னெடுக்கும் நமது மூன்றாம் கட்ட விடுதலைப்பயணத்தில் இம் முயற்சி ஒரு முக்கியமான ஒரு மைல்கல்லாகும். உலகத் தமிழர் பேரவை மேற்கொண்டு பல்வேறு புலம்பெயர் தமிழமைப்புக்களுடனும் இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகளுடனும் இவ்வகை பொதுவான புரிந்துணர்வு நோக்கி செயற்படவுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழ் மக்களிடையே, அதுவும் குறிப்பாகத் தமிழக உறவுகளிடையேயும் மற்றும் சர்வதேச மக்கள் சமூகத்திடையேயும் தமது வலுவைத் திரட்டி வருகிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் இன்றைய தினத்திலே நமது மக்களின் விடுதலை நோக்கிய பயணம் ஓய்வின்றித் தொடரும் என்ற தெளிவான செய்தியினை நாம் கூட்டிணைந்து வெளிப்படுத்த விரும்புகிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள் ஆகியோரது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தொடக்கம்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.வெளியில்நிற்பவர் எல்லோரும் ஒன்றிணைந்து ஓரே இலக்கை நோக்கிச் செயற்பட வேண்டும். இலக்கை அடைந்தபின் எத்தனை அமைப்புக்கள் கட்சிகள் உருவாகினாலும் உருவாகட்டும்.இப்போது எல்லோரும் ஒன்றாவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் வரவேற்க வேண்டிய விடயம். முள்ளிவாய்க்கால் துன்ப நிகழ்வின் 3ம் ஆண்டு நிகழ்வில் தமிழ் மக்களுக்கு இச் செய்தி நிச்சயம் ஆறுதல் கொடுக்கும். நீதி கேட்பது ஒருபுறம் மறுபக்கம் உலகத் தமிழர் அடுத்து ஒன்றாக நின்று அடுத்து செய்ய வேண்டியதையும், இவர்கள் ஒன்றிணைந்து ஒரு குரலாக செயற்படவும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கத்தக்க முடிவு ..... மகிழ்சியாக உள்ளது இதையே தமிழ்மக்கள் விருப்புகின்றனர் இந்த செயலின் ஊடாக ஸ்ரீலங்கா சர்வதேச அரங்கில் தமிழ்மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாகக்கி புலம்பெயர் போராட்டங்களை நலினப்படுத்த எடுத்த ராஜதந்திரத்துக்கு கிடைத்த பெரும் தோல்வியாகவே இதனை கருத முடியும் .

மக்களின் 'ஒற்றுமை' என்ற வேண்டுகோளை செவிமடுக்கும் இரண்டு தலைமைகளுக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எம் இன அவலம் போக்க.. இவ்வாறான ஒற்றுமைப்படும் நடவடிக்கைகளே முதன்மையாகத் தேவைப்படுகிறது. ஆளாளுக்கு பிரிந்து நின்று குரல் கொடுப்பதிலும்.. ஒரே குடையின் கீழ் நின்று குரல் கொடுப்பது.. உலக அரங்கில் எம் குரலை வலுப்படுத்தி நிற்கும்..! எதிரிக்கும் எம் பலத்தை பறைசாற்றி நிற்கும்..! மக்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறக்கும்..! :icon_idea:

தற்போதைய நிலையில் தமிழ; மக்களுடன் கருத்துக்களைப் பரிமாற்றம் செய்வதற்கு புலத்திலுள்ள தமிழ் அமைப்புக்களை அணுக சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் முயலும் நாள் விரைவில் வரலாம். அத்தருணத்தில் பலம் மிக்க சக்தியாக ஒருமித்த குரலில் எமது நியாயத்தை முன்வைக்க இது ஒரு முதற்படி. உண்மையான தமிழ் மக்களின் அரசில் உரிமைகள் குறித்த விடயத்தில் அக்கறையுள்ள ஏனைய அமைப்புக்களும் இணைந்து கொள்வது மேலும் வலுச் சேர்க்கும்.

இப்போ டொரோண்டோவில் இரு வானொலிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய நினைவேந்தலுக்கு வர சொல்லி அழைப்பு விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் .இலவச பஸ் என்று வேறு கூவி அழைக்கின்றார்கள் .

இன்று ஸ்காபரோவில் -கனேடிய தமிழர் தேசிய அவை ,

மற்றது டொராண்டோவில் -நாடு கடந்த தமிழிழ அரசு.

வானொலியில் வந்து பங்கு பற்றும் தேசிய தூண்கள் ஆளை ஆள் மாறி ஒரு தகப்பனுக்கு பிறக்காதவன்,தமிழனுக்கு பிறக்காதவன் என்ற ரீதியில் வீர வசனங்கள் போகுது .உருத்திரகுமாரனையும் அந்த மாதிரி போட்டு வாங்குகின்றார்கள் ,

இதில் வேடிக்கை என்னவென்றால் உருத்திரகுமாரனை போட்டு வாங்கும் தேசிய அவையின் நிகழ்விற்குத்தான் இமானுவேல் அடிகளார் வருகின்றார் என்று வேறு கூறுகின்றார்கள்,மேலே உள்ள படத்தையும் இவர்கள் இங்கு கத்துவதையும் பார்க்க தலையை சுத்துது .

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ டொரோண்டோவில் இரு  வானொலிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய நினைவேந்தலுக்கு வர சொல்லி அழைப்பு விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் .இலவச பஸ் என்று வேறு கூவி அழைக்கின்றார்கள் .

இன்று ஸ்காபரோவில் -கனேடிய தமிழர் தேசிய அவை ,

மற்றது  டொராண்டோவில் -நாடு கடந்த தமிழிழ அரசு.

வானொலியில்  வந்து பங்கு பற்றும் தேசிய தூண்கள் ஆளை ஆள் மாறி ஒரு தகப்பனுக்கு  பிறக்காதவன்,தமிழனுக்கு பிறக்காதவன் என்ற ரீதியில் வீர வசனங்கள் போகுது .உருத்திரகுமாரனையும் அந்த மாதிரி போட்டு வாங்குகின்றார்கள் ,

இதில் வேடிக்கை என்னவென்றால் உருத்திரகுமாரனை போட்டு வாங்கும்  தேசிய அவையின் நிகழ்விற்குத்தான் இமானுவேல் அடிகளார் வருகின்றார் என்று வேறு கூறுகின்றார்கள்,மேலே உள்ள படத்தையும் இவர்கள் இங்கு கத்துவதையும் பார்க்க தலையை சுத்துது .

ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜமப்பா......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.