Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொன்சேகா விடுதலை! சர்வதேசத்தின் மீதான அச்சமே காரணம். -புதிய சிஹல உறுமய -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sarath_Manamndra_210512_sei.jpg

"மஹிந்த ராஜபக்ஷவின் தலையை சர்வதேசம் எனும் மாபெரும் கத்தி பதம் பார்த்துவிடுமோ என்ற அச்சத்தாலேயே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலைசெய்ய அரசு முன்வந்துள்ளது." என புதிய சிஹல உறுமய கட்சியின் செயலாளர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார்.

"சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டால் அந்தப் பெருமை பொது எதிர்க்கட்சிகளையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார். சரத் பொன்சேகாவை என்ன நிபந்தனை அடிப்படையில் அரசு விடுதலை செய்கின்றதெனத் தெரியவில்லை. அவர் மறுபடியும் அரசியல் களத்தில் குதிக்க முடியாத அளவிலே அவர் அரசால் விடுதலை செய்யப்படுவார் எனத் தெரியவருகின்றது" எனப் புதிய சிஹல உறுமய கட்சியின் செயலாளர் சரத் மனமேந்திர தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

"சர்வதேச அழுத்தம் எனும் ஒரு மாபெரும் கத்தி மஹிந்த அரசின் தலையைப் பதம் பார்த்துவிடுமோ என்ற அச்சத்திலே அரசு சரத் பொன்சேகாவை விடுதலைசெய்ய மும்முரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது."

"கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து பேசும்போது டிரான் அலஸ்தான் எமது இந்த நடவடிக்கைகளைத் தடுத்தார். ஆனால், இப்போது சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு முன்னின்று பாடுபடுவதற்கு செயற்படுகின்றார்."

"டிரான் அலஸ் அன்று புலிகளுக்குப் பணம் கொடுத்து ஜனாதிபதித் தேர்தலைத் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐந்தரை இலட்சம் வாக்குகளால் வெற்றி பெற்றிருப்பார். அந்த வெற்றியை டிரான் அலஸே தடுத்தார். அவர் இப்போது சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்குக் குரல் கொடுக்கின்றார்."

சரத் பொன்சேகாவின் விடுதலை இவர் குரல் கொடுப்பதால் கிடைக்கின்றதல்ல. அது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பொது எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையாலேயே இவரின் விடுதலை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிய சிஹல உறுமய கட்சியின் செயலாளர் சரத் மனமேந்திர தெரிவித்தார்.

http://www.seithy.co...&language=tamil

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தன்னுடைய இரண்டு வருட கால சிறைவாசத்தின் பின்னர் சுதந்திர புருஷராக இன்று திங்கட்கிழமை மாலை 4.50 க்கு கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொன்சேகாவை வரவேற்பதற்காக அவரது மனைவி அனோமா பொன்சோ, ஜனநாயக தேசிய முன்னணியின் அமைப்பாளர் ரிரான் அலஸ், ஐ.தே.க. முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உட்பட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் சிறைச்சாலையின் முன்பாக இன்று காலை முதலே திரண்டிருந்தனர். பொன்சோ ஜெயவேவா என்ற பாரிய கோஷங்களுடன் அவர் வரவேற்கப்பட்டார்.

இதற்கு முன்னர் இன்று காலை பொன்சேகா தான் சிகிச்சைபெற்றுவந்த தனியார் வைத்தியசாலையான நவலோகாவிலிருந்து இன்று நண்பகல் 1.00 மணியளவில் வெளியேறினார். வைத்தியசாலை முன்பாக பெருந்தொகையானோர் கூடியிருந்து பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். பொன்சேகாவின் உடல் நிலை தேறியுள்ளதால் அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற முடியுமென அவருக்கு சிகிச்சையளித்த வைத்திய அதிகாரி வஜிர தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பொன்சேகா வைத்தியிசாலையிலிருந்து வெளியேறி கொழும்பு உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். பொன்சேகாவின் சட்டத்தரணிகளினால் தாக்கல் செய்யப்ட்ட இரண்டு மேன்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியிருந்தது. நீதிமன்றப் பகுதியும் பொன்சோகாவின் ஆதரவாளர்களால் நிரம்பிப்காணப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததையடுத்து இன்று மாலை 3.00 மணியளவில் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டு 4.50 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். இதேவேளையில் பொன்சோகாவின் விடுதலையை முன்னிட்டு வெலிக்கடைச் சிறைப் பகுதியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விடுதலைக்குப் பின்னர் அவர் அரசியலில் ஈடுபடுவதுபற்றி அவரது கட்சியுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பார் என்றும் அவர் வெளியில் வருவதே இப்போதைக்கு மிக முக்கியம் என்றும் அவரது கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் ஏற்பாட்டில் பொன்சேகாவின் பாரியார் அனமா பொன்சேகாவும் அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது பொன்சேகாவின் விடுதலைக்காக ஜனாதிபதியடம் இருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இதனையடுத்து சரத் பொன்சேகாவினை விடுதலை செய்வது தொடர்பான பத்திரத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டு நீதியமைச்சுக்கு அனுப்பி வைத்தார். சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவதை அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளதோடு தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

ஜெனிவா தீர்மானத்திற்குப் பின்னர் சர்வதேச நாடுகளிடமிருந்து வெளிப்பட்ட இலங்கை மீதான அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, பொன்சேகாவை விடுதலை செய்யத் தீர்மானித்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவின் முன்னணித் தொலைக்காட்சிகள் அனைத்தும் இன்று காலை நவலோக வைத்தியசாலையிருந்து நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலைக்குககொண்டு செல்லப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை வரையிலான காட்சிகளை நேரடியாகவே அஞ்சல் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

COURT_NEW01.jpg

Fon_welli-03-580x404.jpg

Fon_welli-02-580x382.jpgFon_welli-04-580x354.jpg

Fon_welli-01-360x527.jpg

http://www.pooraayam...1-10-37-04.html

Edited by ஊர்பூராயம்

சர்வ வலிமையையும் கொண்ட மகிந்த கூட்டம் மீது சர்வத்ச அழுத்தத்தினை தமிழர் தரப்பும் தொடர்ந்தும் சளைக்காமல் பிரயோகிப்பதால் எமது மக்களுக்காக ஒரு நியாயமாக அரசியல் தீர்வை பெறலாம் என்ற நம்பிக்கைக்கு இந்த செய்தி வலிமை சேர்த்துள்ளது.

யாருக்கும் அடிபணியப் போவதில்லை! மகிந்த அரசை வீழ்த்துவதே ஒரே இலக்கு: சரத்

தான் யாருக்கும் அடி பணியப்போவதில்லை எனவும், தனது ஒரே இலக்கு அரசாங்கத்தை வீழ்த்துவது எனவும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று சூளுரைத்துள்ளார்.

நவலோகா வைத்தியசாலையிலிருந்து வெளியேறி புதுக்கடை நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு வந்திருந்தபோது கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தான் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கீழ் ஒருங்கிணையப் போவதில்லை எனவும் சரத் பொன்சேக்கா இதன்போது தெரிவித்தார்.

தன்னை சிறைவைத்து அடிபணிய வைக்க அரசாங்கம் கடந்த காலங்களில் முயற்சித்ததாகவும், எனினும், அது முடியாமல் போனதாகவும், இந்த நிலையிலேயே தான் விடுதலையானதாகவும் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

http://www.pooraayam...1-09-38-07.html

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ...... காலம் எழுதப்போகும் கதை இனம் இனத்தைச் சேரும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

காலம் காலமாக சிறையில் வாடும் தமிழர்கள் இன்னும் எவ்வளவு காலம் சிறையில் வாழ்வது என்பதும் சரணடைந்த போராளிகள் எங்கு உள்ளனர் அல்லது உயிருடன் உள்ளனரா போன்ற கேள்விகளுக்கு அமெரிக்கா மூலம் மகிந்தவுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தான் சாத்தியமாகும் நிலை உள்ளது.

சரத்தின் விடுதலை என்பது இன்னுமொரு இனவாதி வெளியில் விடப்பட்டுள்ளார் என்ற வகையில் தான் பார்க்க வேண்டும்.இவர் மகிந்தவுடன் ஒன்று சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஏனெனில் இவர் சிங்களவராச்சே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைப் பொறுத்தவரை இவரும் மகிந்த.. கோத்தா கூட்டணி தான். இவர் ஒரு போர்க்குற்றவாளி. தமிழ் மக்கள் மீதான.. போர்க்குற்றம்.. மனித உரிமை மீறல்கள் தொடர்பில்.. மகிந்தா.. கோத்தாவோடு.. இவரும்.. உள்ள இருக்க வேண்டியவர் தான்..! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவரும் சிங்கள பயங்கரவாதி என்பதை நாம் மறக்கவில்லை .......

ஆனால் இவர் எடுக்கும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் அனுகூலங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் எமது பிரச்சனைகளுக்கு தீர்வை எட்டமுடியுதா என்று பார்க்கலாம் .

சம்பந்தர் கூட்டுவைக்க இன்னொருவரும் வந்துவிட்டார் .

நாம் இந்த விடயத்தில் வாய் மூடிக்கொண்டு எந்த கருத்தும் இங்கே எழுதாமல் இருப்பது நல்லது . இங்கு எழுதப்படும் பல கருத்துகள் எதிரிகளுக்கு அவதான உணர்வை கொடுக்க எழுதப்படுகிறதோ என எனக்கு சந்தேகம்

தமிழ் பைத்தியத்தின் கருத்தை வழிமொழிகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.