Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது சரியா ?????

Featured Replies

ஒரு பத்திரிகைக் குறிப்பு பின்வருமாறு சொல்கின்றது,

" மனிதனின் இனப் பெருக்கத்தை குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகள் எப்படி கட்டுப் படுத்துகிறதோ அதேபோல் புறாக்களின் இனப் பெருக்கத்தையும் கட்டுப் படுத்த ஒஸ்திரிய நகரான ஃடிணத் இல் அந்த நகர சுகாதார அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறர்கள். இதற்கு ஏதுவாக 2001 ஆம் ஆண்டிலிருந்து இந் நகர மத்தியில் புறாக்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு குளிசைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

புறாக்களுக்கு பாதிப்பில்லாமல் ஆக்கமான முறையில் புறாக்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்த இக் குளிசைகள் பாவிக்கப்படுவதாகவும் இதனால் நாய் போன்ற ஏனைய மிருகங்கட்கு பாதிப்பு எதுவுமில்லை எனவும் ஃடிணத் நகர சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.

இக் குளிசைகள் மிகவும் சிறப்பாக பயன் தருவதாகவும் 2001 ஆண்டிலிருந்து புறாக்களின் எண்ணிக்கை 20,000 லிருந்து 9 , 000 ஆகக் குறைவடைந்துள்ளதாகவும் இந்நகர சுகாதார துறையினர் கூறுகின்றனர்.

இதே நேரம் இந் நகர மக்களின் பறவைகட்கு தானியம் ஏதும் வழங்க வேண்டாமெனவும் இவ் அதிகாரிகள் புதிய நடவடிக்கை ஒன்றையும் தொடங்கியுள்ளனர். தமது உணவுகளைத் தேடித் திரிவதால் புறாக்களுக்கு இனப் பெருக்கத்திற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுமென்றே அதிகாரிகள் நம்புகின்றனர்" .

http://www.virakesar...asp?key_c=39265

சுதந்திரமாகப் பறந்து திரிந்த புறாக்களுக்கும் இந்தக் கேடுகெட்ட மனிதனால் சனி பிடித்தால் எங்கு போய் முட்ட ? உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

கீழே காணப்படும் படமானது, பொதுமக்கள் நடமாடும் 'மன்னார்' வீதியொன்றில் எடுக்கப் பட்டது!

என்னைப் பொறுத்த வரையில், மனிதாபிமான முறையில், இவற்றைக் கட்டுப்படுத்துவதில் எந்த ஆட்சேபகணைகளும் இல்லை! ஆனால் இவர்கள், ஒரு கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்குள், வந்தவுடன் மாத்திரைகளை நிறுத்திவிடுவார்கள், என நம்புகின்றேன்!

b1(382).jpg

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

கோம்ஸ்..

இங்கே மான்கள், கரடிகள், காட்டெருமைகளின் இனப்பெருக்க இலக்கங்களுக்கேற்ப வேட்டையாடுவதற்கு அனுமதி தருகிறார்கள்.. அதுபோலத்தானே இதுவும்?? :rolleyes:

  • தொடங்கியவர்

கீழே காணப்படும் படமானது, பொதுமக்கள் நடமாடும் 'மன்னார்' வீதியொன்றில் எடுக்கப் பட்டது!

என்னைப் பொறுத்த வரையில், மனிதாபிமான முறையில், இவற்றைக் கட்டுப்படுத்துவதில் எந்த ஆட்சேபகணைகளும் இல்லை! ஆனால் இவர்கள், ஒரு கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்குள், வந்தவுடன் மாத்திரைகளை நிறுத்திவிடுவார்கள், என நம்புகின்றேன்!

b1(382).jpg

நம்புவோமாக உங்கள் கருத்திற்கு நன்றிகள் புங்கையூரான் .

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் பரிசை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது காகங்கள் அதிகரித்துள்ளன.

அதற்கு காரணம் புறாக்களை அழிப்பதற்காக காகங்களை கொண்டு வந்து இங்கு அரசே விடுவதாக செய்தி.

புறாக்களின் முட்டைகளை காகங்கள் உடைத்து சாப்பிட்டு விடுவதால் அவை பெருகும் அளவு குறையும் என பிரெஞ்சு அரசு நினைக்கிறதாம்.

அது சரி காகம் அதிகரித்துவிட்டால்..??? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு இன அழிப்புத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு இன அழிப்புத்தான்.

கடந்த G8 மாநாட்டில் அவர்களுடைய ஆய்வாளர்கள் உலகில் மக்கள் தொகை கூடிவருவதாகவும் அது பல இயற்கை வளங்களுக்கு குந்தகம் கொடுத்து அவர்களது நாடுகளுக்கும் இயற்கை உபாதையை கொடுக்க கூடிய அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார்கள்.

எங்கையோ ஒரு கொடிய நோயை பரப்பும் எண்ணம் வர்களுக்கு இனி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன பறக்கப் பஞ்சியில.. ரெயினில போய் சாப்பிட்டுக் கொண்டு.. மிஞ்ச நேரம் எல்லாம் கசமுசா பண்ணிக்கிட்டு இருந்தா.. என்ன செய்யுறது..! இப்படித்தான் கட்டுப்படுத்தனும்..!

புறா குடித்தொகை கட்டுப்பாட்டு எல்லைக்குள் வந்ததும்.. இந்த நடைமுறையை தவிர்த்து விடுவார்கள். நாளொன்றுக்கு.. செய்யப்படும் மனிதக் கருத்தடைகளோடு ஒப்பிடும் போது.. இது மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக குட்டி இலக்கம்..! :lol::icon_idea:

இந்தத் தலைப்பும் இவை பற்றித் தான் இருக்குது...

[size=4]ஸ்ஸ்ஸ்.. முடியல்ல.. இவங்களுக்கும் அறிவு கூடிட்டே வருது..! நாங்க தான்... விளங்காம இருக்கம்.[/size]

http://www.yarl.com/...howtopic=104451

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

பிரான்சில் பரிசை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது காகங்கள் அதிகரித்துள்ளன.

அதற்கு காரணம் புறாக்களை அழிப்பதற்காக காகங்களை கொண்டு வந்து இங்கு அரசே விடுவதாக செய்தி.

புறாக்களின் முட்டைகளை காகங்கள் உடைத்து சாப்பிட்டு விடுவதால் அவை பெருகும் அளவு குறையும் என பிரெஞ்சு அரசு நினைக்கிறதாம்.

அது சரி காகம் அதிகரித்துவிட்டால்..??? :lol:

எனது புள்ளியை தொட்டிருக்கின்றீர்கள் விசுகர் . ஒரு உயிரை கட்டுப்படுத்த இன்னுமொரு உயிரை தயார்படுத்தல் அல்லது அதன் இனப்பெருக்க நிலையை செயற்கயாக இல்லாமல் பண்ணுதலினால் இந்த இனங்கள் அழிவதை யாரும் கணக்கில் எடுக்கின்றார்களா ?? புறாக்களில் பல இனங்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட புறா இனம் வேகமாக அழிந்து கொண்டுவருகின்றது . அதை எனது குருவிகள் பதிவில் போடுவேன் . இயற்கை சமநிலையை குலைப்பதால் தானே ஓகஸ்ட் மாதத்திலும் இந்தவருடம் ஐரோப்பா 20 c ஐ தாண்டவில்லை .

  • தொடங்கியவர்

கோம்ஸ்..

இங்கே மான்கள், கரடிகள், காட்டெருமைகளின் இனப்பெருக்க இலக்கங்களுக்கேற்ப வேட்டையாடுவதற்கு அனுமதி தருகிறார்கள்.. அதுபோலத்தானே இதுவும்?? :rolleyes:

இதையே மனுசருக்கும் செய்யவெளிக்கிட்டால்?????????

  • கருத்துக்கள உறவுகள்

இதையே மனுசருக்கும் செய்யவெளிக்கிட்டால்?????????

முன்பு... அவுஸ்ரேலியாவில், கங்காரு வேட்டை செய்வது பயங்கர குற்றம்.

இன்று அது, பல்கிப் பெருகியுள்ளதால்... ஐரோப்பா சூப்பர் மாக்கற்ரில் கங்காரு, உடும்பு இறைச்சிகள் வாங்கலாம்.

மனித இனத்தில்... குடும்பக்கட்டுப்பாடு என்னும் விகிதத்தில் மனிதனை... அழிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ... கட்டாயமோ.. இல்லை. எல்லாம்... வியாபாரம்.

என்று, இந்த மனிதன் உலகுக்கு தேவை இல்லையோ... அங்கு அணுகுண்டும், நச்சுக்குண்டும் வீச, மற்ற மனிதன் தயாராகவே உள்ளான்.

முள்ளிவாய்க்காலில் இழந்த மக்களுக்கு ஈடாக சிங்களவர் அந்த, இடத்தை பிடித்திருப்பதை அனுபவபூர்வமாக காண்கின்றோம்.

வல்லவன் வகுத்ததே... வாய்க்கால்.

நாம்.. என்ன செய்யமுடியும்.

  • தொடங்கியவர்

முன்பு... அவுஸ்ரேலியாவில், கங்காரு வேட்டை செய்வது பயங்கர குற்றம்.

இன்று அது, பல்கிப் பெருகியுள்ளதால்... ஐரோப்பா சூப்பர் மாக்கற்ரில் கங்காரு, உடும்பு இறைச்சிகள் வாங்கலாம்.

மனித இனத்தில்... குடும்பக்கட்டுப்பாடு என்னும் விகிதத்தில் மனிதனை... அழிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ... கட்டாயமோ.. இல்லை. எல்லாம்... வியாபாரம்.

என்று, இந்த மனிதன் உலகுக்கு தேவை இல்லையோ... அங்கு அணுகுண்டும், நச்சுக்குண்டும் வீச, மற்ற மனிதன் தயாராகவே உள்ளான்.

முள்ளிவாய்க்காலில் இழந்த மக்களுக்கு ஈடாக சிங்களவர் அந்த, இடத்தை பிடித்திருப்பதை அனுபவபூர்வமாக காண்கின்றோம்.

வல்லவன் வகுத்ததே... வாய்க்கால்.

நாம்.. என்ன செய்யமுடியும்.

மிக்க நன்றிகள் சிறியர் உங்கள் அனுபவக் கருத்துக்களுக்கு.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கடந்த G8 மாநாட்டில் அவர்களுடைய ஆய்வாளர்கள் உலகில் மக்கள் தொகை கூடிவருவதாகவும் அது பல இயற்கை வளங்களுக்கு குந்தகம் கொடுத்து அவர்களது நாடுகளுக்கும் இயற்கை உபாதையை கொடுக்க கூடிய அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார்கள்.

எங்கையோ ஒரு கொடிய நோயை பரப்பும் எண்ணம் வர்களுக்கு இனி வரும்.

[size=4]அதைத்தானே பல புதிய கிரிமிகளை உருவாக்கி மிருகங்கள் மூலம் அவ்வப்பொழுது இனம்புரியாத நோய்களை மனிதரில் உருவக்கின்றார்கள் உதாரணம் அண்மையில் உருவான H 5 A N A வைரஸ் தொற்று .[/size]

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.