Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிப்பிலிப் பேய்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாகத்தான் இருந்தது.. நல்ல காலம் பேயிற்கு வெடிவைக்க வெளிக்கிட்டு வேறு எதுக்கும் வெடி வைக்காமல் விட்டுவிட்டீர்கள்.. :icon_mrgreen:

பிப்பிலி இடத்தின் பேரா? ஏதோ மரம் என்று நினைத்தேன்..

கிருபன் புத்தன் சொன்னது போல் பிப்பிலி என்பது சுடலையின் பெயர். அதனை கதையில் தெளிவாக குறிப்பிடவில்லை. நீங்கள் நினைத்த மரம் இப்பில் இப்பில் என நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாதிரி ஒரு பேய்க்கதை :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிப்பிலியின் பெருமையை கதை மூலம் அறியதந்த சாத்திரிக்கு ஒரு சபாஸ் :D

யாராப்பா அந்த மானிப்பாய் டாக்குதர் குணம்

மானிப்பாயில் உள்ள சுடலையின் பெயர் பிப்பிலி

புத்தன் இவர்கள் கொழும்பு வாசிகள் 83 கலவரத்துடன் மானிப்பாய் எழுமுள்ளி வாசகசாலைக்கு அருகில் ஒரு வீட்டில் குடியேறியிருந்தார்கள். அப்பொழுதிலிரந்து குணம் எங்கள் நள்பனாகி விட்டிருந்தான். தற்சமயம் பிறிஸ்பேனில் எலும்பு சம்பந்தமான வைத்தியராக இருக்கிறான். மற்றும்படி பிப்பிலி சுடலைக்குள் இன்னும் பல அருமை பெருமைகள் இருக்கு :lol:

சாத்திரியார் பேய் கலைத்த கதை நன்றாக உள்ளது.

நேற்று இரவு நீங்கள் இணைத்தவுடனேயே படித்தேன்.

இன்று மீண்டும் படித்தேன். கொஞ்சம் திருத்தம்செய்து மெருகூட்டியது போல இருக்கின்றது.

உங்கள் எழுத்துக்களை மீண்டும் யாழில் வாசிப்பதில் ம்கிழ்ச்சி

தொடருங்கள்

வாத்தியார் சில எழுத்து பிழைகள் திருத்தியிருந்தேன். நன்றிகள்

கனநாளைக்கு பிறகு சாத்திரியண்ணையின் கதை, நல்லா இருக்கு.. :)

இப்படி நிறைய கதையள் எங்கடை ஊரிலையும் நடந்திருக்கு எழுதவேணும் என்று ஆசை தான் கதாபாத்திரங்களின் உண்மை பெயர்களில் எழுதினால் தான் நல்லா இருக்கும். எழுதினால் அடையாளம் கண்டி பிடிச்சிடுவங்கள். பார்ப்பம்.. :rolleyes:

நன்றியண்ணா, திருவெம்பா க்குசெய்த கூத்துகள்தான் ஞாபகம் வருகுது, ஊர் நினைவுகள் தான் வந்து போச்சுது. :rolleyes:

கவிதையில் கலக்கியிருக்கிறீங்கள் கதையிலும் கலக்குங்கள் காத்திருக்கிறேன். :)

[size=5]மானிப்பாய் சனம் அன்று தொட்டு இன்று வரை அட்டகாசம் தான்!![/size]

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி நீங்கள் ஒரு பேய்க்காய்தான் . நன்றாக எல்லோரும் இரசிக்கும்படி எழுதுகிறீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட நாதன் ..அலைமகள்.சஜுவன் மற்றும் கந்தப்பு ஆகியோரிற்கும் நன்றிகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

பிறேம் மூளாய் பகுதியில் இந்திய இராணுவத்தோடு ஏற்பட்ட மோதலில் இறந்து போனான். அவன் தன்னுடைய திக்குவாய் பிரச்சனையால் எப்பொழுதும் என்னுடனேயே ஒட்டிக்கொண்டு திரிவான். லியோவிற்கு பிறேமை தெரிந்திருக்கலாம்.

காந்தன், சசி ஆகியோருக்கு என்ன நடந்தது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காந்தன், சசி ஆகியோருக்கு என்ன நடந்தது?

சசியும் காந்தனும் புலிகள் அமைப்பினால் கொல்லப் பட்டார்கள் அதன் விபரம் எழுதினால் கதையின் போக்கு திரும்பி விடும் என்பதால் தவிர்க்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சசியும் காந்தனும் புலிகள் அமைப்பினால் கொல்லப் பட்டார்கள் அதன் விபரம் எழுதினால் கதையின் போக்கு திரும்பி விடும் என்பதால் தவிர்க்கிறேன்.

டிஸ்கி: போட்டு எழுதக்கூடாதா????? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்திரி!

அந்த காலத்தில வாசித்த கோர இரவுகள் என்ற டாக்டர் கோவூர் என்கிறவருடைய கதைகள் தான் ஞாபத்திர்ற்கு வந்தது...நன்றாயிருக்குது..

இதே polaththaan புங்கையூரன் எழுதிய "தேசிகாயும்........." என்ற கதையும் இருந்தது.. நன்றாக இருந்தது.

(ஐயோ நான் கிழவனாய் வந்திட்டன் போல கிடக்கு என்கேயன் கிடைத்த பழம் புத்தகங்களை ஞாபகப்படுத்துவதால்---- :icon_idea: )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்திரி!

அந்த காலத்தில வாசித்த கோர இரவுகள் என்ற டாக்டர் கோவூர் என்கிறவருடைய கதைகள் தான் ஞாபத்திர்ற்கு வந்தது...நன்றாயிருக்குது..

இதே polaththaan புங்கையூரன் எழுதிய "தேசிகாயும்........." என்ற கதையும் இருந்தது.. நன்றாக இருந்தது.

(ஐயோ நான் கிழவனாய் வந்திட்டன் போல கிடக்கு என்கேயன் கிடைத்த பழம் புத்தகங்களை ஞாபகப்படுத்துவதால்---- :icon_idea: )

பேய் பிசாசு என்பவற்றிலிருந்து என்னை பயம் தெளிய வைத்தவர்களில் முக்கியமானவர் கோவூர் அவர்கள்.. அவரின் எழுத்துக்களை நிறையவே படித்திருக்கிறேன். அவர் மூட நம்பிக்கைகளிற்கு எதிராக மட்டுமல்லாமல் போலி சாமியார்கள் முக்கியமாக சாய்பாபாவுடன் நேரடியாக சாவால் விட்டவரும்கூட. ஆனாலும் அவரை எம்மவர்கள் கண்டு கொள்ளவேயில்லை சாயி பாபாவுக்கு பின்னாலை போன ஆக்கள்தான் கூடுதல்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

]

பேய் பிசாசு என்பவற்றிலிருந்து என்னை பயம் தெளிய வைத்தவர்களில் முக்கியமானவர் கோவூர் அவர்கள்.. அவரின் எழுத்துக்களை நிறையவே படித்திருக்கிறேன். அவர் மூட நம்பிக்கைகளிற்கு எதிராக மட்டுமல்லாமல் போலி சாமியார்கள் முக்கியமாக சாய்பாபாவுடன் நேரடியாக சாவால் விட்டவரும்கூட. ஆனாலும் அவரை எம்மவர்கள் கண்டு கொள்ளவேயில்லை சாயி பாபாவுக்கு பின்னாலை போன ஆக்கள்தான் கூடுதல்.

நான் சில நேரம் நினைப்பது நாங்கள் (சாய் துரோகிகள்)முட்டாள் என்று .இன்று சாய் பாபாவுக்கு ஒரு பெரிய கூட்டமே உண்டு ..சிட்னியில் அவர்கள் ஒரு தனி பிரிவாகவே உருவாகும் சந்தர்ப்பம் உண்டு.சிலர் கோவிலுக்கு போவதில்லை சாய் பாபாவை வழிபட்டால் போதும் எண்டு சொல்கிறார்கள்... அண்மையில் நட‌ந்த வெசாக் பண்டிகைக்கு கிறிபத்தும் சம்பலும் பிரசாதமாக வழங்கப்பட்டது...புத்தரின்ட ஒரு அவதாரமாம் ....

மூடநம்பிக்கை என்று சொன்னா சொல்லுயினம் படிச்சவன் எல்லாம் வழிபாடுகிறார்கள் .......நீ முட்டாள்..

Edited by putthan

பேய் பிசாசு என்பவற்றிலிருந்து என்னை பயம் தெளிய வைத்தவர்களில் முக்கியமானவர் கோவூர் அவர்கள்.. அவரின் எழுத்துக்களை நிறையவே படித்திருக்கிறேன். அவர் மூட நம்பிக்கைகளிற்கு எதிராக மட்டுமல்லாமல் போலி சாமியார்கள் முக்கியமாக சாய்பாபாவுடன் நேரடியாக சாவால் விட்டவரும்கூட. ஆனாலும் அவரை எம்மவர்கள் கண்டு கொள்ளவேயில்லை சாயி பாபாவுக்கு பின்னாலை போன ஆக்கள்தான் கூடுதல்.

டாக்டர் கோவூர் அஜீவனின் மாமா .

அவர் ஆரியகுளசந்தியில் இருக்கும் சன சமூக நிலையத்தில் விபூதி,பூ தனது செட் கைகளுக்குளால் எடுத்ததை நேரில் பார்த்தேன் .சாயி பாபாவால் மட்டும் தான் முடியும் என்று நம்புபவர்களுக்கு காட்ட அதை செய்தார்

  • கருத்துக்கள உறவுகள்

செருப்பால அடிக்கணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.