Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சிக்காக பிறந்தவர்கள் அல்ல நாங்கள்:- கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க., அரசின் அடக்குமுறையை கண்டித்து தி.மு.க., சார்பில் வரும் 4-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடக்க உள்ளது. அந்தவகையில் காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டத்துக்கான விளக்க கூட்டம் தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று நடந்தது.

காஞ்சீபுரம் மாவட்ட எல்கையான ஆலந்தூர் கத்திப்பாரா சந்திப்பில் இருந்து தாம்பரம் வரை வழிநெடுகிலும் கொடி, தோரணங்கள், வரவேற்பு பதாகைகள் மற்றும் வண்ண விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது.

கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் வெள்ளி வீரவாள் பரிசளிக்கப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-

தி.மு.க.வின் வரலாறு போராட்ட வரலாறு. ஆட்சிக்காக பிறந்தவர்கள் அல்ல நாங்கள். ஆட்சிக்காக பாடுபவர்கள் அல்ல நாங்கள். ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு பணியாற்றுவோம். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவோம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வாக்கிற்கு இணங்க, தொடர்ந்து இளம் வயது முதல் இன்று வரை, பெரியார் காலமாக இருந்தாலும், அண்ணா காலமாக இருந்தாலும், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.

தொடர்ந்து நாங்கள் நடத்துகின்ற இந்த இயக்கம் மக்கள் பிரச்சினைக்காக, அதுவும் திராவிட மக்களுக்காக, அடிமைப்படுக்கிடக்கின்ற ஒரு சமுதாயத்தை எழுச்சி பெற செய்வதற்காக தொடங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

திராவிட இயக்கம் தற்போது தி.மு.க.வாக இருந்தாலும், திராவிடர் கழகம், நீதிகட்சி என்று பல்வேறு நிலைகளில் திராவிடர்களை எழுச்சிபெறச் செய்தது. அண்ணா ஆட்சியில் இருந்த காலத்திலும், அவரது மறைவுக்கு பிறகும், அந்த ஆட்சியை தொடர்ந்து நானே 5 முறை முதல்-அமைச்சராக இருந்து நடத்தி பல தியாகங்களை, போராட்டங்களில் ஈடுபட்டு, நெருக்கடி கால கொடுமைகளை அனுபவித்தோம்.

இன்று எனக்கு முன்னால் நாங்கள் எதற்கும் தயார். நெருப்பில் இறங்கவா, பட்டினிகிடக்கவா என்று கூறும் வீர வாலிபர்களை, திராவிட செல்வங்களை தி.மு.க. இயக்கம் பெற்றிருக்கிறது. இந்த போராட்டம் ஏன்?. எப்படி நடத்துவது? என்பதாக இந்த கூட்டம் நடக்கிறது.

முதலிலேயே, மிகுந்த கவனத்துடன் இந்த போராட்டத்தை அறப்போராட்டம் என்றேன். அறப்போராட்டம் என்றால், அகிம்சா போராட்டம் ஆகும். நம்மை நாமே தியாகத்திற்கு உட்படுத்துகிற போராட்டம் ஆகும். வன்முறை போராட்டம் என்பது பிறரை தாக்கும் போராட்டம் ஆகும்.

இந்த போராட்டத்தில் அறவழியைத்தான், அமைதி வழியைத்தான், அண்ணா வழியைத்தான் கடைபிடிப்போம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் தாரக மந்திரத்தை கடைபிடிப்போம். நான்கு நான்கு பேராக அணிவகுத்து களத்திலே நின்று, பொதுமக்களுக்கு இன்னல் வராமல், போலீசுக்கும் சிக்கல் வராமல் எல்லோருக்கும் அமைதியான வழியில் போராட்டம் நடத்த வேண்டும்.

உங்களை நான் கேட்டுக்கொள்வது எல்லாம், உறுதியாக களம்கண்டு நமது போராட்டத்தை அறவழியில் நடத்த வேண்டும். ஏனென்றால், இப்போதே ஒரு தவறு நடக்கலாம். தானே ஒரு கல்லை தூக்கி போட்டுவிட்டு வன்முறை வழக்கு போடலாமா? என்று இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். சொல்வேறு, செயல்வேறாக இருக்க கூடாது. சொன்ன சொல்லை நாம் காப்பாற்ற வேண்டும்.

6 மாதம் ஜெயிலில் இருப்பேன் என்று கூறிவிட்டு, ஜெயிலுக்கு போனால் மறுநாளே ஜாமீன் கேட்ட கூடாது. போராட்டத்தில் கைதாகி ஜெயிலுக்கு போனால் யாரும் ஜாமீன் கேட்க கூடாது. நாம் தியாக திருவிளக்காய், எதையும் தாங்கும் இதயமாய், அண்ணாவின் தம்பியாய், பெரியாரின் சீடராய் அனைவரும் இருக்க வேண்டும்.

எந்த வழக்கு போட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல், சிறுத்தை கூட்டமாக, சிங்க கூட்டமாக இருக்க வேண்டும். நாம் நடத்தும் போராட்டத்தை யாராவது அடக்க நினைத்தால், அவர்கள்தான் அடங்கிப் போக வேண்டும்.

நாம் போராட்டத்தை அறவழியில் நடத்துவோம். அமைதி வழியில் நடத்துவோம். எந்த வகையிலும், அந்த போராட்டத்தில் வன்முறை தலைகாட்டக்கூடாது. இன்றைக்கு தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பற்றி இங்கே கூறினார்கள். ஆட்சி எப்படி நடக்கிறது என்று உங்களுக்கே தெரியும். எனவே, இந்த ஆட்சிக்கு விடை கொடுக்க, புத்தி சொல்ல, அறிவுறுத்த, இந்த போராட்டம் அறவழியில் நடத்துவது அவசியம். அதற்கு தயாராக இருங்கள்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், வசந்தி ஸ்டான்லி, ஆலந்தூர் நகராட்சி மன்ற தலைவர் ஆர்.எஸ்.பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி மாலை மலர்

  • கருத்துக்கள உறவுகள்

---

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் வெள்ளி வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

------

கருணாநிதிக்கு வெள்ளி வீரவாள் பரிசளித்ததை விட,

கடிதம் எழுத பேனையும், கடுதாசியும், கொஞ்ச முத்திரையும் பரிசளித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளோட பெரிய வம்பாபோச்சு இது தொலைஞ்சும் போகுதில்லை நாங்களும்தான் எவ்வளவு நாளுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும்.

இப்போதெல்லாம் கருணாநிதி தனது குறளி ஒவியக்கதைகளை விற்க மிகவும் கஸ்டப்படுகிறார். யாரும் வாங்குவார் இல்லை. போக போக இன்னும் இறுகிகொண்டுதான் போகபோகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ நீங்க சூழ்ச்சிகாக பிறந்தவரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தி.மு.க.வின் வரலாறு போராட்ட வரலாறு. ஆட்சிக்காக பிறந்தவர்கள் அல்ல நாங்கள். ஆட்சிக்காக பாடுபவர்கள் அல்ல நாங்கள். ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு பணியாற்றுவோம். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவோம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வாக்கிற்கு இணங்க, தொடர்ந்து இளம் வயது முதல் இன்று வரை, பெரியார் காலமாக இருந்தாலும், அண்ணா காலமாக இருந்தாலும், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.

தெய்வமே! உனை பெற இவ்வையகம் என்ன தவம் செய்ததோ?யாமறியோம்...எல்லாம் அவன் செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே ஒரு காமெடி பீசுக்கு இவ்வளவு தூரம் கருத்தெழுதுவது ரொம்ப தப்பு.. தோழர் வாத்தியார் ..... இதெல்லாம் நகைசுவை பகுதியில் இணைக்கபட வேண்டிய தலைப்பு.. தவறி இங்கிட்டு இணைத்திருக்கிறீர்கள் போகட்டும் இனிமேல் அந்த பகுதியில் இணையுங்கள்...

ஆட்சிக்காக பிறந்தவர்கள் அல்ல நாங்கள். ஆட்சிக்காக பாடுபவர்கள் அல்ல நாங்கள். ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு பணியாற்றுவோம். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவோம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வாக்கிற்கு இணங்க, தொடர்ந்து இளம் வயது முதல் இன்று வரை, பெரியார் காலமாக இருந்தாலும், அண்ணா காலமாக இருந்தாலும், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.

கொள்ளையடிக்கப் பிறந்தவர்கள் நாம்! ஊழல் செய்யப் பிறந்தவர்கள் நாம்!!! என்கிறார் கொலைஞர்.

கொள்ளையடிக்கப் பிறந்தவர்கள் நாம்! ஊழல் செய்யப் பிறந்தவர்கள் நாம்!!! என்கிறார் கொலைஞர்.[size=4] [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.