Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெட்ரோல் கொடுங்க, உங்களுக்குத் கரண்ட் தர்றோம்- பிரதமருக்கு மோடி வழங்கும் ஆடி 'ஆஃபர்'!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02-narandra-modi1-300.jpg

[size=4]அகமதாபாத்: மிகவும் அசாதாரணமான வாய்ப்பு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு வழங்கியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. குஜராத் மாநிலத்திற்கு மலிவு விலையில் பெட்ரோல் வழங்கினால், தேசிய மின் கட்டமைப்புக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.[/size]

[size=3][size=4]ஜூலை 30ம் தேதியும், 31ம் தேதியும் அடுத்தடுத்து 3 முறை வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு மின் கட்டமைப்புகள் செயலிழந்து கிட்டத்தட்ட 19 மாநிலங்கள் இருளில் மூழ்கிப் போயின. இதையடுத்து தேசிய மின் கட்டமைப்புக்கு நிபந்தனையுடன் தேவையான மின்சாரத்தைத் தருவதாக மோடி அறிவித்துள்ளார்.[/size][/size]

[size=3][size=4]இதுகுறித்து குஜராத் மின்சாரத்துறை அமைச்சர் செளரப் படேல் கூறுகையில், மத்திய அரசுக்கு எங்களுக்கு ஆதரவாக நடந்தால், நாங்கள் அவர்களுக்கு உடனடியாக 2000 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கிரிடுக்குத் தரத் தயாராகவுள்ளோம். இப்போதைக்கு மின்சாரப் பிரச்சினையைத் தீர்க்க இதுதான் ஒரே துரித வழியாகும் என்றார் அவர்.[/size][/size]

[size=3][size=4]இப்படி மின்சாரத்தைத் தருவதற்கு மத்திய அரசிடம் குஜராத் அரசு எதிர்பார்ப்பது மலிவு விலையில் பெட்ரோல் மட்டுமே. ஏற்கனவே மின் கட்டமைப்பு சீர்குலைவுக்கு மத்திய அரசை கடுமையாக கண்டித்திருந்தார் மோடி. இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டிருந்த செய்தியில், இதுவும் கூட கூட்டணி தர்மமா பிரதமரே என்றும் அவர் கிண்டலாக கேட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.[/size][/size]

[size=3][size=4]குஜராத் மாநிலத்தில் உபரி அளவில் மின் உற்பத்தி உள்ளது. அங்கு தேவையான மின்சாரத்தின் அளவு 12,000 மெகாவாட்தான். ஆனால் 15,906 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே மின்தடையே இல்லாத ஒரே மாநிலமாகவும் குஜராத் திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.[/size][/size]

[size=3][size=4]

http://tamil.oneindi...oha-158902.html[/size][/size]

[size=4]சில மாநிலங்கள் இருட்டில் தவிக்க, ஒரு மாநிலம் மின்தர பேரம்பேசுகின்றது.[/size]

[size=4]ஒரு மாநிலம் வரட்சியில் தவிக்க அருகில் உள்ள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கும்.[/size]

[size=4]இதெல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்கும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சில மாநிலங்கள் இருட்டில் தவிக்க, ஒரு மாநிலம் மின்தர பேரம்பேசுகின்றது.[/size]

[size=4]ஒரு மாநிலம் வரட்சியில் தவிக்க அருகில் உள்ள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கும்.[/size]

[size=4]இதெல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்கும். [/size]

அவியலில் கூட்டு, அவரைக்காயில் சுரைக்காய், காட்டணியில் கூட்டணி, ஓட்டையில் கோட்டை, வேற்றுமையில் ஒற்றுமைன்னு எழுத ஒருத்தர் வருவார். :icon_idea:

குஜராத்திலிருந்து மத்திய அரசுக்கு மின்சாரம் கொடுப்பதை விட்டுவிட்டு் நல்ல பிரதமராக ஒன்று பார்த்துப்போட்டு கொடுத்துடுங்கப்பா. அது போதும்! :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பேரம்பேசல்களே போதும் இந்தியா துண்டுதுண்டாக உடைவதற்கு i like it

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெட்ரோல் கொடுங்க, உங்களுக்குத் கரண்ட் தர்றோம்- பிரதமருக்கு மோடி வழங்கும் ஆடி 'ஆஃபர்'!!

இப்படி ஒருத்தன் மாநிலத்திற்கு மாநிலம் வரவேண்டும்.

அவியலில் கூட்டு, அவரைக்காயில் சுரைக்காய், காட்டணியில் கூட்டணி, ஓட்டையில் கோட்டை, வேற்றுமையில் ஒற்றுமைன்னு எழுத ஒருத்தர் வருவார். :icon_idea:

[size=4]இதோ வந்திட்டேன் . எனக்கு உள்ள ஒரே ஆதங்கம் இது போல தமிழ் நாட்டுக்காரன் சொல்லும் நிலை எப்ப வரும் என்றுதான் . குமாரசாமிக்கு கோவிந்தா[/size]

[size=4]மற்றபடி அடுத்தவன் உழைத்து சம்பாதித்தை பற்றி கேலி பேச வரலை . [/size][size=1]

[size=4]நம் தலைவர்கள் சரியில்லை . அதுக்கும் இந்திய ஒருமை பாடுக்கும் என்ன சம்பந்தம் .???[/size][/size][size=1]

[size=4]ஒரு மாநிலம் கரண்ட் இல்லாம தவிக்குது இன்னொரு மாநிலம் பேரம் பேசுது .[/size][/size][size=1]

[size=4]அவர்களாவது பேரம் பேசுகிறார்கள் . [/size][/size][size=1]

[size=4]நமக்கு அந்த தகுதி கூட இல்லாமா போயிடுச்சேன்னு ஆத்திரம் அழுகை தான் வருது . [/size][/size][size=1]

[size=4]ஆனா கேப் கிடச்சா இந்தியம் பலிக்கும் பலர் நம்முள் இருப்பதால் அந்த அழுகை சிரிப்பா மாறி விடுகிறது.[/size][/size][size=1]

[size=4]உழைக்கிறத விட்டுட்டு சும்மா போறவனை வம்பிக்கிழுக்கும் எதோ ஒரு விலங்கு கதை ஞாபகம் வருதுங்கன்னோ [/size][/size]

[size=4]கொஞ்சம் ஜாக்கிரத அடுத்து அவர்தான் பிரதமர் என நினைக்கிறேன் . மேலும் பிற மாநிலங்களை விட தமிழ் நாட்டோடு நெருங்கிய தொடர்புள்ளவர் . தமிழ் நாட்டிற்கு இருநூறு மெகாவாட் மாதம் தோறும் விற்பவர் . கோபம் வந்து கரண்ட புடுங்கிட போறான் பார்த்து . அப்புறம் கஷ்டம் எங்களுக்கு ( தமிழ் நாடு )தான் . ஈழத்திற்கோ அல்லது கடல் கடந்த ஈழத்திற்கோ அல்ல [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இதோ வந்திட்டேன் . [/size]

நான் சொன்னேன்ல...? lool.gif:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.