Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: 31 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவகாசி ஆலையின் குத்தகைக்காரர் கைது, உரிமையாளரான அதிமுக கவுன்சிலர் தலைமறைவு

Updated: வியாழக்கிழமை, செப்டம்பர் 6, 2012, 10:49 [iST]

Posted by: Siva

சிவகாசி: சிவகாசி அருகே தீ விபத்து ஏற்பட்ட ஓம் சக்தி பட்டாசு ஆலையின் குத்தகைக்காரர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலை உரிமையாளர் அதிமுக கவுன்சிலர் முருகேசன் மற்றும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் சுமார் 10 ஏக்கரில் அமைந்துள்ளது ஓம் சக்தி பட்டாசு ஆலை. சிவகாசியில் உள்ள பெரிய பட்டாசு ஆலைகளில் ஓம் சக்தி பட்டாசு ஆலையும் ஒன்று. அங்கு சுமார் 300 பேர் பணியாற்றினர். நேற்று மதியம் 12.30 மணிக்கு அங்குபயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் உடல் கருகி பலியாகினர்.

ஓம் சக்தி பட்டாசு ஆலையின் உரிமையாளர் சிவகாசியைச் சேர்ந்த விருதுநகர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் முருகேசன், ஆலையை குத்தகைக்கு எடுத்த பால்பாண்டி மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.

அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாகத் தேடி குத்தகைதாரர் பால்பாண்டி, போர்மேன் உதயகுமார், பட்டாசு கான்டிராக்டர்கள் பாண்டிதுரை, மகேந்திரன், ஸ்ரீகாந்த், அண்ணாதுரை ஆகியோரை கைது செய்தனர். அதில் மகேந்திரனும், பாண்டிதுரையும் பால்பாண்டியின் தம்பிகள் .

தலைமறைவாக உள்ள முருகேசன் மற்றும் 6 பேரை தனிப்படை வலை வீசித் தேடி வருகின்றது.

இதற்கிடையே பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க ரசாயனங்களைக் கலந்தபோது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரசாயனப் பொருட்கள் மற்றும் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த 48 அறைகளில் 40 அறைகள் தீயில் எரிந்து நாசமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 5 அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த மோசமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

http://tamil.oneindia.in/news/2012/09/06/tamilnadu-sivakasi-fire-factory-owner-5-others-arrested-160909.html

  • கருத்துக்கள உறவுகள்

சிவகாசி ஆலையின் குத்தகைக்காரர் கைது, உரிமையாளரான அதிமுக கவுன்சிலர் தலைமறைவு

Updated: வியாழக்கிழமை, செப்டம்பர் 6, 2012, 10:49 [iST]

Posted by: Siva

சிவகாசி: சிவகாசி அருகே தீ விபத்து ஏற்பட்ட ஓம் சக்தி பட்டாசு ஆலையின் குத்தகைக்காரர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலை உரிமையாளர் அதிமுக கவுன்சிலர் முருகேசன் மற்றும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் சுமார் 10 ஏக்கரில் அமைந்துள்ளது ஓம் சக்தி பட்டாசு ஆலை. சிவகாசியில் உள்ள பெரிய பட்டாசு ஆலைகளில் ஓம் சக்தி பட்டாசு ஆலையும் ஒன்று. அங்கு சுமார் 300 பேர் பணியாற்றினர். நேற்று மதியம் 12.30 மணிக்கு அங்குபயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் உடல் கருகி பலியாகினர்.

ஓம் சக்தி பட்டாசு ஆலையின் உரிமையாளர் சிவகாசியைச் சேர்ந்த விருதுநகர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் முருகேசன், ஆலையை குத்தகைக்கு எடுத்த பால்பாண்டி மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.

அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாகத் தேடி குத்தகைதாரர் பால்பாண்டி, போர்மேன் உதயகுமார், பட்டாசு கான்டிராக்டர்கள் பாண்டிதுரை, மகேந்திரன், ஸ்ரீகாந்த், அண்ணாதுரை ஆகியோரை கைது செய்தனர். அதில் மகேந்திரனும், பாண்டிதுரையும் பால்பாண்டியின் தம்பிகள் .

தலைமறைவாக உள்ள முருகேசன் மற்றும் 6 பேரை தனிப்படை வலை வீசித் தேடி வருகின்றது.

இதற்கிடையே பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க ரசாயனங்களைக் கலந்தபோது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரசாயனப் பொருட்கள் மற்றும் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த 48 அறைகளில் 40 அறைகள் தீயில் எரிந்து நாசமாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 5 அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த மோசமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

http://tamil.oneindia.in/news/2012/09/06/tamilnadu-sivakasi-fire-factory-owner-5-others-arrested-160909.html

இறந்த மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் .

இது காலம் காலமாக தொடரும் ஒரு துயரம் .விபத்து நடந்தபடியால் செய்தியாகி வெளியில் தெரிகின்றது .விபத்து நடக்காமலே தினம் தினம் குழந்தைகளை வேலை வாங்கி கொல்கின்றார்கள்.

இறந்த மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் .இது காலம் காலமாக தொடரும் ஒரு துயரம் .விபத்து நடந்தபடியால் செய்தியாகி வெளியில் தெரிகின்றது .விபத்து நடக்காமலே தினம் தினம் குழந்தைகளை வேலை வாங்கி கொல்கின்றார்கள்.

ஆட்சிக்கு வரும் தி.மு.க, அ.தி.மு.க மக்களுக்கு பெற்றுக்கொடுத்தவை தான் இவை. மக்கள் உணர்ந்து சீமான், வைகோ, நெடுமாறனுக்கு வாக்களித்து சிறுவர்கள் பள்ளி செல்லத்தக்க நிலையை கொண்டு வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ..[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 38 பேர் பலி: நெஞ்சை உருக்கும் கோர சம்பவம் (படங்கள்)

sivakasi-011.jpg

sivakasi-012.jpg

sivakasi-013.jpg

sivakasi-014.jpg

sivakasi-015.jpg

sivakasi-016.jpg

sivakasi-017.jpg

sivakasi-018.jpg

sivakasi-019.jpg

sivakasi-020.jpg

sivakasi-021.jpg

sivakasi-022.jpg

sivakasi-023.jpg[/size]

[size=4][size=5]sivakasi-001.jpg

sivakasi-002.jpg

sivakasi-003.jpg

sivakasi-004.jpg

sivakasi-005.jpg

sivakasi-006.jpg

sivakasi-007.jpg[/size]

படங்கள்: சி.என்.ராமகிருஷ்ணன்.[/size]

[size=4]நக்கீரன்.[/size]

sivakasi-008.jpg

sivakasi-009.jpg

sivakasi-010.jpg

படங்கள்: சி.என்.ராமகிருஷ்ணன்.

[size=4]நக்கீரன்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோர விபத்திற்கும் உயிர்ப்பலிக்கும் இந்திய அரச ஊழியர்கள் மத்தியில் கையோங்கியிருக்கும்

ஊழலும் லஞ்சமுமே காரணம் .தொழிற்சாலைக்குச் சொந்தக்காரரான அரசியல் பிரமுகர் தனது

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கின்றார்.

இந்தியாவில் ஊழலும் லஞ்சமும் ஒழிக்கப்படும் வரை இப்படியான விபத்துக்களில் ஏழை மக்களின்

உயிர்கள் பலியாவது தவிர்க்க முடியாதது.

சாதாரண தொழிலாளர்களுக்கு ஒழுங்கான பாதுகாப்பு இல்லை அதற்குள்

அணுவாயுத வல்லரசாக வர நினைப்பது இன்னும் மேலும் அழிவுகளைக் கொண்டு வரும்

உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 38 பேர் பலி: நெஞ்சை உருக்கும் கோர சம்பவம் (படங்கள்)

sivakasi-011.jpg

sivakasi-012.jpg

sivakasi-013.jpg

sivakasi-014.jpg

sivakasi-015.jpg

sivakasi-016.jpg

sivakasi-017.jpg

sivakasi-018.jpg

sivakasi-019.jpg

sivakasi-020.jpg

sivakasi-021.jpg

sivakasi-022.jpg

sivakasi-023.jpg[/size]

[size=4][size=5]sivakasi-003.jpg

sivakasi-004.jpg

sivakasi-005.jpg

sivakasi-006.jpg

sivakasi-007.jpg[/size][/size]

அவலங்களையும் அனர்த்தங்களையும் பார்த்து அழுவதற்கென்றே பிறந்துவிட்டோம்.......படங்களை பார்க்க முள்ளிவாய்க்காலும் நினைவில் வந்து போகின்றது. :(

  • கருத்துக்கள உறவுகள்

அவலங்களையும் அனர்த்தங்களையும் பார்த்து அழுவதற்கென்றே பிறந்துவிட்டோம்.......படங்களை பார்க்க முள்ளிவாய்க்காலும் நினைவில் வந்து போகின்றது. :(

எனக்கும்.... படத்தைப் பார்த்தவுடன், அந்த ஞாபகம் தான்... உடனே வந்தது குமாரசாமியண்ணை.

கல்பாக்கத்தில் உள்ள அணு உலை கசிந்தாலும்... முழுத் தமிழனையும் அழித்துவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.