Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் மாப்பிள்ளைகள் அன்றும் இன்றும்...........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நேரத்திற்கும் கருதத்துக்கும் ஆலோசனைக்கும்

நீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் எழுதியுள்ளீர்கள் நெடுக்கு

நான் பார்த்த 3 பெண்களும் மிகவும் வயது குறைந்தவர்கள். அத்துடன் படித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு இவர்களை நேரில் சந்திக்கும்வரை..........

1- இவர்களுக்கு இத்தனை வயது என்று தெரரியாது

2- இவர்களுக்கு விசா இல்லை என்று தெரியாது

3- படிப்பும் அப்படி இப்படித்தான் என்பதும்தெரியாது

இதைத்தான் நான் இங்கு எச்சரிக்கை செய்தேன்.

அப்புறம் பெட்டைகளிலும் பிழை இருக்குத்தானே என்றும் எனக்குத்தெரியும்.

ஆனால் இந்த ஏமாற்றம் குடும்பத்துக்கு ஆகாது. ஒரு நாள் வெடித்துக்கிளம்பும்.

வாழ்க்கை என்பதை பொய்களில் ஆரம்பிக்க முடியாது.

இவ்வளவு பொய்கள் என்றால் அது திட்டமிட்ட ஏமாற்றம் தான். அதில் காதல்.. அன்பு இருக்க வழியில்லை..! ஆனால்.. நிஜமான அன்பு அல்லது காதல் இருந்தால்.. காதல் மிகுதியில் சொல்லப்படும்.. ஒரு சில.. பொய்கள் அல்லது மறைக்கப்படும்.. விடயங்கள்.. உண்மைகள் எப்படியோ தெரிய வரும்..! ஆனால்.. இவ்வளவும் மறைக்கப்பட்டது.. காதல் அல்ல.. என்று தான் சொல்லுது..! இப்படியானவர்கள் விடயத்தில் கவனம் அவசியம்.

இப்ப பெண்களும் வேலையை படிப்பை வயதை கூட்டிக் குறைச்சு சொல்லியும் காதலிக்கினம். அப்புறம்... நல்லா பழகியதும் உண்மையைச் சொல்லுறாங்க. அப்படி இருக்கேக்க.. அது பெரிசா தெரியாது. சிலருக்கு அதுவே பிரச்சனை ஆவதும் உண்டு..! அது அவரவர் கொண்டுள்ள அன்பை.. காதலை.. நம்பிக்கையைப் பொறுத்தது.

ஆனால் கிட்டத்தட்ட எல்லாமே பொய்யாக அமைவது.. நிச்சயம் திட்டமிட்ட ஏமாற்றல் தான்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 62
  • Views 6.5k
  • Created
  • Last Reply

அந்த இளைஞர் அப் பெண்ணது சொத்துக்காக கட்டினாரோ தெரியாது :unsure:

குட்டி எங்கட தமிழ்ப் பெண்கள் எனக்குத் தெரிந்து ஒரு,இரு வயசு வித்தியாசத்தில் தங்களை விட வயதில் குறைந்தவரைக் கட்டி சந்தோசமாக இருப்பதை நான் கண்டு இருக்கிறேன் ஆனால் 10,15 வயசு வித்தியாசத்தில் கட்டினதைக் காணவில்லை :) அவ்வளவு வயசு வித்தியாசத்தில் கட்டி எப்படி சந்தோசமாக இருக்கலாம் எனவும் தெரியவில்லை :unsure:

உதாரணத்திற்கு 25 வயதுள்ளே ஆண் தன்னை விட 10 வயது கூடிய பெண்ணை விரும்பும் போது, அது உணமையான அன்பாக இருந்தால் சேர்ந்து வாழ்வதில் என்னைப் பொறுத்த வரையில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை..

சிலர் வயது கூடிய பெண்களை (வெற்றினத்தில்) விரும்புவதற்குக் காரணங்களை சொல்கிறார்கள்..

1 சின்னபுள்ளத் தனமாக எல்லாத்துக்கும் சண்டை போடாமல் அவர்களை விட ஓரளவு புரிந்துணர்வு அதிகம்

2 ஆடம்பரச் செலவுகள் அதிகம் இல்லாது வாழ்கையில் சிக்கனம் என்றால் என்ன என்பதையும், தேவைப்படும் போது அதனை கடைப் பிடிக்கவும் இயலுமானவர்களாக இருக்கிறார்கள்.

3 இதைவிட சேர்ந்து வாழும் காலத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போகிறார்கள்.

4 எல்லா நேரங்ககளும் முடிவுகளையும், ஆண்கள் எடுப்பதை விட பெண்களும் சேர்ந்து எடுப்பதை பல ஆண்கள் விரும்புவார்கள்..

5 தன்மைபிக்கை அதிகமுள்ளவர்கள் ஆண்களால் அதிகம் கவரப்படுவதும் ஒரு காரணம் என்கிறார்கள்..

மேலும்..

http://anamikas.hubp...fer-Older-Woman

இதெல்லாம் எங்கட சமூகத்தில ஏற்றுக் கொள்ளப்படாததொன்று.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாம் கவனித்த அளவில்.. சிறிய வயது வித்தியாசத்தில் கட்டினவை.. பலர்.. வயதான காலத்தில் முதுமையில்.. ஒருவரை ஒருவர் கவனிக்க முடியாமல்.. பிரிந்து.. தனித்து வாழ்வதையும் காண்கிறோம். அதிக முதியோர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள வயதானவர்களின் குற்றச்சாட்டே இதுவாகத்தான் உள்ளது. அதேநேரம்.. ஒரே வயதில் திருமணம் செய்தவை அநேகரில் ஈகோ பிரச்சனையும் அதிகம்..! இதனால் விவாகரத்தும் அதிகம்..!

ஆனால் கூடிய வயது வித்தியாசம் உள்ள இடத்தில் ஆண்.. பெண்ணின் மீது கூடிய அக்கறையும் கருசணையும் செய்வதைக் காண முடிகிறது..!

இன்றைய காலக்கட்டத்தில் இதனால் தான் என்னவோ.. நடுத்தர வயதுப் பெண்கள் கூட இளம் ஆண்களை திருமணம் செய்கின்றனர். அதேபோல்.. ஆண்களும்.

முன்னோரும் கூட.. இந்த விடயத்தில் கவனமாகவே இருந்திருக்கினம்..!

இதில் சந்தோசம் என்பது ஆளாளுக்கு வேறுபடும். அக்கா என்னத்தை சந்தோசம் என்று கருதிறாவோ.. யார் அறிவார்..! ஒரே சோறை அவிச்சுப் போடச் சாப்பிட்டு.. சதா.. வேலைக்கு போய் உழைச்சுகிட்டு.. கார் ஓடுற ரைவரா வேற இருந்து.. பிள்ளை குட்டி ஒரு டசினுக்கு பெத்துக்க உதவிக்கிட்டு.. வாழ்வது தான் சந்தோசமுன்னா.. அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது..!

அந்த வகையில்.. இந்த விடயத்தில் இதுதான் திறம் என்று எவரும் வரையறுக்க முடியாது. அவரவர் விரும்பிற படிக்கு அமைய வாழ்வதே சிறப்பு..! அதனைத் தான் இங்கு முன்னிறுத்த முடியுமே தவிர.. ஒன்றிரண்டு வயது வித்தியாசத்தில் திருமணம் செய்வது சிறப்பு மற்றது அப்படி இல்லை என்பது தவறு..! அது செய்பவர்களையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் பொறுத்தது ஆகும்..! :icon_idea::)

இப்பத்திய கால கட்டத்தில் பெண்கள் அவர்களை விட‌ வயது கூடின ஆண்களை விட‌ இளமையாத் தான் இருக்கினம்...எங்கட‌ ஆட்கள் தோற்றத்தைப் பார்த்து,பழகிப் பார்த்து வயது தெரியாமல் விரும்பிக் கட்டுகிறார்கள் தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் குட்டி சொன்ன மாதிரி அவர்களை எங்கள் சமூகம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்குது என்பதில் தான் இருக்குது.

ஒரு பெண் தன்னை விட‌ 3,4 வயது குறைந்த ஆணைத் திருமணம் செய்ய விரும்பினால் அந்த பெண்ணுக்கு தான் திருமணம் செய்ய விரும்புகின்ற ஆணில் வயதில் சகோதர‌ங்கள் இருக்கலாம் அதே நேர‌த்தில் ஆணுக்கு அப் பெண்ணினது வயதில் அக்கா இருக்கலாம் அல்லவா!

ஒரு வயது கூடினாலும் அக்கா என்றோ அண்ணா என்றோ கூப்பிட‌ச் சொல்லிக் கொடுக்கும் சமூகம் அல்லவா எம் சமூகம்.

நல்லது,கெட்டது எது என்டாலும் நாங்கள் தானே வாழப் போறோம் சமூகத்தை நாங்கள் ஏன் பார்க்கப் போறோம் என்டால் இந்த சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு தம்பதியரால் எப்படி சந்தோச‌மாய் வாழ முடியும்?

நான் சொல்ல வாறது தனிப்பட‌ விருப்பமிருந்தாலும் சமூகத்தால் ஒதுக்கப்பட்டால் சந்தோச‌மாய் வாழ முடியாது என்பதாகும்.

கல்யாணத்தைப் பற்றிய எனது சந்தோச‌த்தைக் கேட்டீங்கள் என்னைப் பொறுத்த வரை இரு மனங்களது சங்கமம் தான் திருமணம் அதற்கு அழகோ,படிப்போ,வச‌தியோ தேவையில்லை மனசு பிடித்திருந்தால் காணும் ஆனால் எங்கள் சமூகம் என்ன செய்யும்,என்ன சொல்லும் என்ட‌ அக்கறையும் உண்டு...மற்றப் படி இந்தப் பதிவில் திருமணத்தை பற்றி நீங்கள் சொன்னது கொஞ்ச‌ம்உண்மை தான் :lol:

குட்டி சொன்ன அத்தனையும் உண்மை தான் ஆனால் சமூகம் ஏற்காது என நீங்களே சொல்லி விட்டீர்கள்...நன்றி குட்டி

இத் திரியை தொட‌ங்கிய விசுகு அண்ணாவிற்கு மிக்க நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுறது எண்டா ஐந்து வயசுகுள்ள இடைவெளியில கட்டுங்க அப்பத்தான் புரிந்துணர்வு நல்லாயிருக்கும்

இப்பத்திய கால கட்டத்தில் பெண்கள் அவர்களை விட‌ வயது கூடின ஆண்களை விட‌ இளமையாத் தான் இருக்கினம்...எங்கட‌ ஆட்கள் தோற்றத்தைப் பார்த்து,பழகிப் பார்த்து வயது தெரியாமல் விரும்பிக் கட்டுகிறார்கள் தான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் குட்டி சொன்ன மாதிரி அவர்களை எங்கள் சமூகம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்குது என்பதில் தான் இருக்குது.

ஒரு பெண் தன்னை விட‌ 3,4 வயது குறைந்த ஆணைத் திருமணம் செய்ய விரும்பினால் அந்த பெண்ணுக்கு தான் திருமணம் செய்ய விரும்புகின்ற ஆணில் வயதில் சகோதர‌ங்கள் இருக்கலாம் அதே நேர‌த்தில் ஆணுக்கு அப் பெண்ணினது வயதில் அக்கா இருக்கலாம் அல்லவா!

ஒரு வயது கூடினாலும் அக்கா என்றோ அண்ணா என்றோ கூப்பிட‌ச் சொல்லிக் கொடுக்கும் சமூகம் அல்லவா எம் சமூகம்.

நல்லது,கெட்டது எது என்டாலும் நாங்கள் தானே வாழப் போறோம் சமூகத்தை நாங்கள் ஏன் பார்க்கப் போறோம் என்டால் இந்த சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு தம்பதியரால் எப்படி சந்தோச‌மாய் வாழ முடியும்?

நான் சொல்ல வாறது தனிப்பட‌ விருப்பமிருந்தாலும் சமூகத்தால் ஒதுக்கப்பட்டால் சந்தோச‌மாய் வாழ முடியாது என்பதாகும்.

கல்யாணத்தைப் பற்றிய எனது சந்தோச‌த்தைக் கேட்டீங்கள் என்னைப் பொறுத்த வரை இரு மனங்களது சங்கமம் தான் திருமணம் அதற்கு அழகோ,படிப்போ,வச‌தியோ தேவையில்லை மனசு பிடித்திருந்தால் காணும் ஆனால் எங்கள் சமூகம் என்ன செய்யும்,என்ன சொல்லும் என்ட‌ அக்கறையும் உண்டு...மற்றப் படி இந்தப் பதிவில் திருமணத்தை பற்றி நீங்கள் சொன்னது கொஞ்ச‌ம்உண்மை தான் :lol:

குட்டி சொன்ன அத்தனையும் உண்மை தான் ஆனால் சமூகம் ஏற்காது என நீங்களே சொல்லி விட்டீர்கள்...நன்றி குட்டி

இத் திரியை தொட‌ங்கிய விசுகு அண்ணாவிற்கு மிக்க நன்றிகள்

ஏன் ரதி வீட்டில ஒரு வயது கூடின ஆண்களையும் அண்ணா என்று தானே அழைக்க சொல்லிக் கொடுக்கிறார்கள்? அப்படிப் பார்த்தல் எங்கட சமூகத்தில ஒருத்தருக்குமே திருமணம் நடக்க வாய்ப்பில்லையே?

(இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தான் அடுத்த பிரதமராக வருவார் என்று நினைத்து சின்னனில இருந்தே All Indians are your brothers & sisters என்று சொல்லிக் கொடுத்தாராம், அதனால் தான் அவருக்கு இந்தியாவில் பெண் கிடைக்காமல் இத்தாலியில் எடுத்தாராம் என்று சில தமிழ்நாட்டு நண்பர்கள் சொல்லிச் சிரிப்பார்கள்...)

என்னைப் பொறுத்த வரைக்கும், இரு மனங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் தன்மை இருந்தால், அவை சேர்வதில் எந்தப் பிழையும் இல்லை! குடும்பத்தினருக்கு சொல்லிப் புரியவைப்பது அவர்களது கடமை, ஆனால் புரிந்தாலும் ஏற்க மறுத்தால் அது அவர்களினது முடிவு.. வாழ்க்கை இருவரின் கையில் உள்ளது, வாழ விரும்பினால் வாழ முடியும்.

எங்கட சமூகம்... :huh::rolleyes: ஒருவன் நல்லா இருந்தாலும் நாலு புறணி சொல்லும், நாசமாப் போனாலும் நாலு புறணி சொல்லும்.. சனத்தின்ர வாயை அடிப்பதை விட இருக்கும் இடத்தை மாத்தி புதிய வாழ்க்கையைத் தொடங்குவது புத்திசாலித் தனம், அல்லது இருந்த இடத்தில் இருந்தே வாழ்ந்து காட்டுவது தைரியசாலித்தனம்.. முடிவு அவரவர் கையில் உள்ளது! :icon_idea:

வயது வித்தியாசம் பெரிய பிரச்சனை. ஆரம்பத்தில் ஒத்துப் போனாலும் பின்பு பிரச்சனையில்தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யாழ் களத்திலே அறிமுக மாகி பின் காதலித்து திருமணம் செய்து பலர் சந்தோஷமாக வாழ்ந்திட்டும் இருக்கினம் அதே போல சாட்டிங் இல் மீட் பண்ணி ethina பேர் கல்யாணம் கட்டி சந்தோஷமா இருக்கினம் சோ நாங்க நடக்கிற கெட்டாத மட்டும் பாக்காம நல்லதையும் பாக்கணும் ..... அம்மா அப்பா பேசி திமணம் செய்து வைச்சிருந்த கூட இவளவு சந்தோஷமா இருப்பங்களோ தெரியா அப்பிடி வாழ்ந்திட்டு இருக்காங்க பல பேர். :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யாழ் களத்திலே அறிமுக மாகி பின் காதலித்து திருமணம் செய்து பலர் சந்தோஷமாக வாழ்ந்திட்டும் இருக்கினம் அதே போல சாட்டிங் இல் மீட் பண்ணி ethina பேர் கல்யாணம் கட்டி சந்தோஷமா இருக்கினம் சோ நாங்க நடக்கிற கெட்டாத மட்டும் பாக்காம நல்லதையும் பாக்கணும் ..... அம்மா அப்பா பேசி திமணம் செய்து வைச்சிருந்த கூட இவளவு சந்தோஷமா இருப்பங்களோ தெரியா அப்பிடி வாழ்ந்திட்டு இருக்காங்க பல பேர். :D

இதென்ன ஆரையோ கன்வின்ஸ் பண்ணுறமாதிரி இருக்கு??!! :rolleyes::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏயா ஏன்?? நல்லா தானே போய்கிட்டிருக்கு....:D

என்னா.....ஒரு வில்லத்தனம்.... :D

இந்த யாழ் களத்திலே அறிமுக மாகி பின் காதலித்து திருமணம் செய்து பலர் சந்தோஷமாக வாழ்ந்திட்டும் இருக்கினம் அதே போல சாட்டிங் இல் மீட் பண்ணி ethina பேர் கல்யாணம் கட்டி சந்தோஷமா இருக்கினம் சோ நாங்க நடக்கிற கெட்டாத மட்டும் பாக்காம நல்லதையும் பாக்கணும் ..... அம்மா அப்பா பேசி திமணம் செய்து வைச்சிருந்த கூட இவளவு சந்தோஷமா இருப்பங்களோ தெரியா அப்பிடி வாழ்ந்திட்டு இருக்காங்க பல பேர்.

அது சரி சுண்டுக்கு யாழ்ல யாரில காதல்!!

[size=5]கவனம் தம்பி பெட்டைப் பெயரில பெடியளும் உலாவுறாங்க[/size]!

  • கருத்துக்கள உறவுகள்
:D

போகிற போக்கைப் பார்த்தால் யாழில் ஒன்று தொடங்கவேண்டும் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய சனம் திருந்த பல வருடங்கள் செல்லும், நல்லதொரு திரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.