Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

50,000 பேர்களுடன் தமிழகமெங்கும் தொடர்வண்டிகளை முடக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி (படங்கள்)

Featured Replies

தமிழ் நாட்டில் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து பல் வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. பல கட்சிகள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் செய்கின்றனர். வைகோ அவர்களின் தலைமையில் ராஜபக்சேவிற்கு கறுப்புக் கோடி காட்ட பல ஆயிரம் பேர்கள் மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இன்னும் பல தமிழ் உணர்வாளர்கள் தனித் தனியே மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தங்கள் போராட்டத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர். ராஜபக்சேவிற்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தால் தமிழக தொடர் வண்டிகள் போக்குவரத்து தமிழகமெங்கும் முடங்கியது. சுமார் 50,000 பேர்கள் பங்குபெற்ற இப்போராட்டத்தை கட்டுப் படுத்த காவல் துறை திணறியது. பல மணிநேரம் தொடர்வண்டி போக்குவரத்து நின்றது.

கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் பிரமாண்ட பேரணியாக சென்ற கூட்டம் தொடர்வண்டியை மறித்து நின்றது . அதை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் சிதம்பரம், விழுப்புரம் , காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, வந்தவாசி, வேலூர், கிருஷ்ணகிரி ,தருமபுரி, சேலம், கரூர் , ஈரோடு, கோவை, திருச்சி, கன்னியகுமாரி ஆகிய நகரங்களில் தொடர்வண்டியை மறித்து போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இத்தனை ஊர்களில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவில் தொடர்வண்டி மறியல் போராட்டம் அண்மைய காலத்தில் நடை பெற்றதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. சுமார் 25,000 பேர்கள் இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Thaaitamilnews-1.jpgThaaitamilnews-2.jpgThaaitamilnews-3.jpgThaaitamilnews-4.jpgThaaitamilnews-5.jpgThaaitamilnews-6.jpgThaaitamilnews-7.jpgThaaitamilnews-8.jpgThaaitamilnews-9.jpg

http://thaaitamil.com/?p=32760

நன்றிகள் .நன்றிகள் ,நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உறவுகளே

போர்க்குற்ற விசாரணை தொடர உங்கள் பங்களிப்பு அவசியம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தமிழக உறவுகளுக்கு..!!

[size=5]எமது தலைவிதியில் மாற்றம் வர டெல்லியில் மாற்றம் வேண்டும், அதை உங்களால் தான் செய்ய முடியும். நன்றிகள்![/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உற‌வுகளுக்கு நன்றி............

நமக்காக தமிழ்நாட்டு உறவுகள் கண்டிருக்கும் விழிப்புகள், அகில இந்தியாவுக்கு ஒரு புதிய ஆட்சியை கொண்டுவரத்தக்க மாற்றம். இந்த வெற்றியின் ஆரம்பம் கருணாநிதியின் தமிழ் நாடுமீதான இரும்பு பிடியின் உடைவே. சோனியா முள்ளிவாய்க்கால் மீது வீச இரசாயன கொண்டுகளை இலங்கைக்கு கொடுத்துவிட்டு இரகசியமாக இருக்க முடியவில்லை. ஏன் எனில் அவை எரித்த உடம்புகளின் பிரதி பலிப்புகள் முத்துக்குமார் செங்கொடி, விஜயராஜ்..... உடம்புகளிலும் சுட்டிருந்தது.

நமக்காக உடல் பொருள் ஆவி வரைக்கும் கொடுத்திருக்கும் உறவுகளுக்கு நன்றி.

இனி தமிழன் என்றால் அதன் பொருள் அகிலத்தமிழனாக இருக்கட்டும்.

Edited by மல்லையூரான்

சரியாக தெரியமா இது ஈழ தமிழருக்கான போராட்டம் என்று?

ஏனென்றால் இந்தியா முழுக்க சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு மூலதனத்தை எதிர்பதற்காக "பாரத் பந்த்" என்று ஒன்று நடக்கிறது..ஆழும் அரசை எதிர்த்து..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருபவர்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தமிழக உறவுகளுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

Inviting Rajapakse has become an expensive procedure to India.

[size=5]ஜூனியர் விகடனின் முகநூல்: http://www.facebook.com/JuniorVikatan[/size]

[size=1]

[size=5]பல படங்கள்: [/size][/size][size=1]

[size=5]- வீதியில் உறங்கும் தொண்டர்கள் [/size][/size][size=1]

[size=5]- கைதாகி செல்லும் தொண்டர்கள் [/size][/size]

[size=3]

[size=4]இலங்கை அதிபர் ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப்பிரதேச எல்லையில் தமது கட்சியினருடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அக்கட்சித் தொண்டர்கள் 750 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம், ராய்சென் மாவட்டம் சாஞ்சியில் புத்த மற்றும் இந்திய அறிவுசார் கல்வி பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது.சுமார் ரூ.200 கோடி செலவில் அமைய உள்ள இந்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் ராஜபக்ச கலந்துகொள்கிறார்.[/size][/size][size=3]

[size=4]இந்நிலையில், ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழா நடக்கும் சாஞ்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார்.இதற்காக,அவர் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் கடந்த 17-ம் தேதி சென்னையில் இருந்து 21 பஸ்களில் சாஞ்சி புறப்பட்டுச் சென்றார்.

நேற்று முன்தினம வைகோவும், அவருடன் சென்ற 750 தொண்டர்களும் மத்திய பிரதேச எல்லையான பட்சிரோலி நகரை சென்றடைந்தனர்.

ஆனால் பாதுகாப்பு கருதி அங்கு ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2000 க்கும் அதிகமான போலீசார் அவர்களை மேலும் முன்னேறவிடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தினார்கள்.கடந்த 3 தினங்களாக நடுரோட்டில் அமர்ந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, இரவில் மெழுகுவர்த்தி ஏற்றி, தனது போராட்டத்தை தொடர்ந்தார்.[/size][/size]

[size=3]

[size=4]

Vaiko-geno1.jpg[/size]

[/size][size=3]

[size=4]வைகோவின் இந்த போராட்டம் அப்பகுதி மக்களை கவர்ந்த நிலையில்,அவர்கள் அப்பகுதியில் திரண்டனர்.குறிப்பாக இளைஞர்கள் ஏராளமான அளவில் திரண்டனர்.இதனையடுத்து இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றிய செய்திகளையும், சிடியையும் இந்தியில் மொழி பெயர்த்து வழங்கப்பட்டது. இதனை பார்த்த உள்ளூர் இளைஞர்கள் வைகோவுடன் தாங்களும் போராட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்தனர். இதையடுத்து வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அவர்களது மத்தியில் பேசிய வைகோ,இலங்கையில் ராஜபக்ச அரசால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்த விவரங்களையும்,ஈழத்தமிழர்கள் தொடர்ந்து அங்கு துயரத்திற்குள்ளாக்கப்படுவது குறித்தும் பேசினார்.அவரது ஆங்கில பேச்சு இந்தியில் மொழிபெயர்த்து கூறப்பட்டது.[/size][/size]

[size=3]

[size=4]

vaiko-geno2.jpg[/size]

[/size][size=3]

[size=4]இதனிடையே வைகோவை நேற்று தொடர்புகொண்டு பேசிய மத்தியப்பிரதேச முதல்வர் சவுகான்,போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.[/size][/size][size=3]

[size=4]இதனால் நிலைமை எல்லை மீறி சென்றால் வைகோ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் சவுகான் தெரிவித்திருந்தார்.[/size][/size][size=3]

[size=4]கைது[/size][/size][size=3]

[size=4]அதன்படியே தடுத்துவைக்கப்பட்ட பட்சிரோலி நகரில் மறியலில் ஈடுபட்ட வைகோ இன்று முற்பகல் கைது செய்யப்பட்டார்.அவருடன் சென்ற மதிமுக தொண்டர்கள் 750 பேரும் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்கள் வேன்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.[/size][/size]

[size=3]

[size=4]

vaoko-arrest2.jpg[/size]

[/size][size=3]

[size=4]மன்னிக்கமாட்டோம்[/size][/size][size=3]

[size=4]அப்போது வைகோ மற்றும் அவரது தொண்டர்கள் உரத்த குரலில், ” மன்னிக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! மத்திய அரசை மன்னிக்கமாட்டோம்! மத்திய பிரதேச பா.ஜனதா அரசையும் மன்னிக்க மாட்டோம்...” என்று முழக்கமிட்டனர்.[/size][/size]

[size=3]

[size=4]

MDMK-protest.jpg[/size]

[/size][size=3]

[size=4]கைது செய்யப்பட்டவுடன் பேசிய வைகோ, தமிழர்கள் விஷயத்தில் பா.ஜனதாவும், காங்கிரசும் மக்களின் மன ஓட்டைத்தைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு வருகின்றன என்று குற்றம்சாட்டினார்.[/size][/size][size=3]

[size=4]பிரதமர் வீடு முற்றுகை

முன்னதாக இன்று காலை 11 மணியளவில் தொண்டர்களிடையே பேசிய வைகோ,”மீண்டும் ராஜபக்சவை இந்தியாவுக்கு வர அனுமதித்தால் பிரதமர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்.ராஜபக்ச லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்திருக்கிறார்.

இதுகுறித்து,அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் கூட்டம் போட்டு தெரிவிப்போம். ராஜபக்ச இலங்கை தமிழர்கள் மீது நடத்திய மனித உரிமை அத்துமீறல் பற்றிய சிடிக்களை நாடு முழுவதும் விநியோகம் செய்வோம்.இங்கு தடை விதித்தாலும் அதையும் மீறி நாங்கள் செல்வோம் என்றார். [/size]

[/size][size=3]

[size=4]ராஜபக்ச ம.பி. வருகை

இதனிடையே சாஞ்சியில் இன்று நடைபெற உள்ள விழாவில் கலந்துகொள்வதற்காக ராஜபக்ச மத்தியப்பிரதேசம் வந்துள்ளார். இந்நிலையில் திட்டமிட்டப்படி காட்ட மதிமுக தொண்டர்கள்,கறுப்புக்கொடி காட்ட முயற்சிக்கலாம் என்பதால் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதற்கிடையே வைகோவுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள விமானம் மூலம் போபால் சென்ற மதிமுகவினர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டனர்.வேறு மாநிலங்கள் வழியாக போபாலுக்கு ரயிலில் வரும் மதிமுகவினரையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

போபாலில் ரயில்வே திருமண மண்டபத்தை மதிமுகவினர் முன் பதிவு செய்திருந்தனர். ஆனால்,அதை அரசு திடீரென ரத்து செய்து விட்டது.இதையடுத்து தனியார் திருமண மண்டபத்தை மதிமுகவினர் வாடகைக்கு எடுத்துள்ளனர்.ஆனால், அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.[/size][/size]

[size=3]

http://news.vikatan.com/?nid=10503#cmt241[/size]

முதன் முறையாக ஒரு மதிப்பிற்குரிய முடிவு . வைகோ சொன்னது போல அனைத்து மாநிலங்களுக்கும் சென்று இதே போல ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த துண்டு பிரசுரங்களும் சிடி ஆகியவைகள் மக்களுக்கு கொடுத்தால் அடுத்தமுறை அந்த அராஜக பக்ஷே வரும்போது குறைந்த பட்சம் இருபதாயிரம் இந்திய மக்கள் எதிர்த்து போராடுவார்கள் . ஏதோ தமிழனுக்கு தமிழன் போராடும் நிலை மாறி தன் வம்சாவளிக்கு இந்தியன் போராடும் நிலை வரும் . போராட்டத்தை களம் மாற்றும் சூழல் தற்போது கட்டாயம் ஆகி விட்டது

வடக்கில் எதுவும் தெரியாமல் போனது, ஆரம்பம் தொடக்கம், தமிழ் நாட்டு, வடநாட்டு ஆங்கில பத்திரிகைகள் உண்மை நிலையை இருட்டடிப்பு செய்ததினால். இந்து இதில் மாபெரும் சேவை ஆற்றியிருக்கிறது. :blink:

[size=5]ராஜபக்சாவின் வருகையை எதித்த அனைத்து உறவுகளுக்கும் தலைசாய்த்து, மனமார்ந்த நன்றிகள். [/size]

37779_364087383671396_2096469133_n.jpg

நன்றிகள் தமிழக உறவுகளுக்கு....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.