Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொண்டாட்டியை விட சிங்கமே மேல்: வேலிக்குள் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் மனைவியுடன் சண்டை போட்டு மனமுடைந்த ஒருவர் தற்கொலை செய்வதற்காக சிங்கத்தின் வேலிக்குள் பாய்ந்தார். சிங்கங்கள் அவரை கடித்துக் குதறியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கஞ்சம் மாவட்டம், சத்ரபூரைச் சேர்ந்தவர், சூரிய நாராயண்தாஸ். (வயது 45). கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் நந்தன்கானன் உயிரியல் பூங்காவிற்குச் சென்றார். சிங்கங்கள் இருந்த பகுதிக்குள் சென்ற அவர் தனது உடைகளை களைந்துவிட்டு, உள்ளாடையுடன் திடீரென்று திடீரென குதித்துவிட்டார். அப்போது அந்த இடத்தில் இருந்த 2 சிங்கங்கள் அவரை கழுத்தில் கவ்வியபடி 50 அடி தூரம் இழுத்துச்சென்றது. அவருடைய உடலின் பல்வேறு இடங்களில் சிங்கங்கள் கடித்து குதறின.

சுற்றுலா பயணிகள் கூச்சல்

இந்த கொடூர காட்சியை பார்த்த சுற்றுலா பயணிகள் அந்த பகுதிக்குத் திரண்டு வந்து கூச்சல் போட்டனர். இதனால் மிரண்டு போன சிங்கங்கள் மக்களின் கூச்சலால் மிரண்டு போய், உறைவிடத்தின் மறைவான பகுதிக்குச் சென்று மறைந்து கொண்டன. அதற்குள் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று, படுகாயத்துடன் கிடந்த தாஸை மீட்டு புவனேஸ்வரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருடைய உடல் நிலை மோசம் அடைந்ததால், தீவிர சிகிச்சைக்காக அவர், எஸ்.சி.பி. மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். உயிருக்குப் போராடி வரும் தாஸுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலைக்கு காரணம்

முன்னதாக ஆஸ்பத்திரியில் நினைவு திரும்பியவுடன் தாஸிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாகவும், துர்க்கையின் வாகனமான சிங்கங்களுக்கு உணவாகி சாக விரும்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

மனைவி கூட மல்லுக்கட்டுவதை விட சிங்கங்களுக்கு இரையாவதே மேல் என்று நினைத்து மனோதைரியத்துடன் பாய்ந்தவர் கடைசியில் படுகாயங்களுடன் தப்பிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆக சிங்கங்கள் பாடு கொண்டாட்டமாகத்தான் இருக்கபோகுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாய் என்ன புழைப்பப்பா இது :D

தற்கொலைக்கு காரணம்

முன்னதாக ஆஸ்பத்திரியில் நினைவு திரும்பியவுடன் தாஸிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாகவும், துர்க்கையின் வாகனமான சிங்கங்களுக்கு உணவாகி சாக விரும்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

:D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை செய்வதற்கு கூட அவருக்கு துர்க்கையின்[பெண்ணின்] வாகனம் தான் தேவைப்பட்டு இருக்குது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி கூட மல்லுக்கட்டுவதை விட சிங்கங்களுக்கு இரையாவதே மேல் என்று நினைத்து மனோதைரியத்துடன் பாய்ந்தவர் கடைசியில் படுகாயங்களுடன் தப்பிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன ஒரு தைரியம் !

சிங்கங்களிடையே சிங்கிலா போனதே தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி பொண்டாட்டிக்கு பக்கத்தில போனாலும் போவர் பட் சிங்கத்த படத்தில கூட பாக்க மாட்டார் ...... பிரிச்சு மேஞ்சிருக்கும்ல :D

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை செய்வதற்கு கூட அவருக்கு துர்க்கையின்[பெண்ணின்] வாகனம் தான் தேவைப்பட்டு இருக்குது :lol:

[size=4]தற்கொலை முயற்சியே ஒரு பெண்ணால்தானே :D[/size]

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்.. கல்யாணம் கட்டினால் இப்பிடி ஆனாலும் ஆகும்.. :D பார்த்து யோசிச்சு முடிவெடுங்கோ.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்.. கல்யாணம் கட்டினால் இப்பிடி ஆனாலும் ஆகும்.. :D பார்த்து யோசிச்சு முடிவெடுங்கோ.. :lol:

:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் சொல்கிறார்கள் என உடனே நம்பிவிடக்கூடாது. இந்தக்காலத்தில் தற்கொலை செய்பவர் என்றால் அதுகும் விலங்ககம் சென்று உப்பிடியானவர் இருந்தென்ன ....இவருக்கு பிரச்சனை வேறு தம்பியவை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டோன்ட் வொர்ரி இசை அண்ணா எங்கள கட்டிக்கிட்டா கட்டிக்கிற பொண்ணு தான் போய் விழனும் :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கோழையைக் கட்டினதிற்கு அந்தப் பெண் தான் தற்கொலை செய்யோனும்

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் சத்தியம்மா நான் நினைச்சதை அப்பிடியே எழுதியிருக்கிறீர்கள். ஞானக்கண்ணில் தெரிந்ததா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கோழையைக் கட்டினதிற்கு அந்தப் பெண் தான் தற்கொலை செய்யோனும்

நான் இப்ப என்ன பண்ணிட்டன் எண்டு என்ன கோழை எண்டு திட்டிங் அக்கா? :(

சுண்டல் சத்தியம்மா நான் நினைச்சதை அப்பிடியே எழுதியிருக்கிறீர்கள். ஞானக்கண்ணில் தெரிந்ததா

எல்லாம் ஒரு guessing தானே சுமோ அக்கா யாழ் களத்தில இப்பிடி தான் நம்மள பற்றி நினைப்பாங்க எண்டு தெரியும் :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு guessing தானே சுமோ அக்கா யாழ் களத்தில இப்பிடி தான் நம்மள பற்றி நினைப்பாங்க எண்டு தெரியும் :D

ஏன் ஒண்டும் மாட்ட மாட்டெண்டுது எண்டு இப்ப விளங்குதா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட் இதில எனக்கொரு டவுட் இருக்கு மனைவி தான் தள்ளி விட்டு இருப்பாவோஎண்டு? புருஷன் தப்பின உடன வெருட்டி இருப்பா நீ போலீஸ் வந்தா இப்பிடி சொல்லு இல்லைனா உனக்கு ஏத்திட்டு இருக்கிற சேலைன கழட்டி விட்டிடுவன் எண்டு :D

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் இருக்கும்.. :D :D :D

-நீக்கப்பட்டுள்ளது. திரிக்கு சம்பந்தமில்லாத உடையாடல்களைத் தவிர்க்கவும் - நியானி. :)

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஒண்டும் மாட்ட மாட்டெண்டுது எண்டு இப்ப விளங்குதா? :D

நாங்க வலை போட்டு எதாச்சும் மாட்டாம இருந்திருக்கா? அதெல்லாம் ஒரு காலம் இசை அண்ணா அதெல்லாம் MSN பிரபலமா இருந்த நேரம் தான் அந்த விளையாட்டெல்லாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

டோன்ட் வொர்ரி இசை அண்ணா எங்கள கட்டிக்கிட்டா கட்டிக்கிற பொண்ணு தான் போய் விழனும் :D

உண்மைய இப்பிடி பப்பிளிக்கா சொல்லக்கூடாது ஜி :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட டிக்கால் ஜி நான் நினைச்சன் சிங்கத்துக்குள்ள போய் விழுந்த ஆள் நீங்கள் எண்டு சரி you r safe. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் இருவரும் சிங்க ராசிக்காரர் போலும் அதனால்தான் தப்பினார்கள் என்று கூறலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஏனாம் சிங்கத்திட்டப் போனவர் ! இன்னும் கொஞ்ச நேரம் அங்கேயே நின்று பிரச்சினைப் பட்டிருந்தால் தானாகவே முடிஞ்சிருப்பார் , அதுக்குள்ளே அவசரம் !!

  • கருத்துக்கள உறவுகள்

பட் இதில எனக்கொரு டவுட் இருக்கு மனைவி தான் தள்ளி விட்டு இருப்பாவோஎண்டு? புருஷன் தப்பின உடன வெருட்டி இருப்பா நீ போலீஸ் வந்தா இப்பிடி சொல்லு இல்லைனா உனக்கு ஏத்திட்டு இருக்கிற சேலைன கழட்டி விட்டிடுவன் எண்டு :D

கற்பனை அபாரம்

  • கருத்துக்கள உறவுகள்

தம்பியவை இது டூமச். பெண்கள் துணிவானவர்கள். திடமனம் கொண்டவர்கள். அதனாலேயே இப்பெல்லாம் பெண்கள் அதிகம் தற்கொலை செய்வதில்லை. ஆண்கள் எல்லாத்துக்குமே பெண்ணை நம்பி இருப்பதால் பெண் இல்லாவிட்டால் தனித்திருக்க முடியாது சிங்கத்தை தேடிப் போகவேண்டி இருக்கு. சிங்கம் எதையாவது பிடிச்சா உடன சாப்பிட்டிடும். இவற்ரை இறைச்சி ருசி இல்லையோ என்னவோ. :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.