Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நடந்த பெரும்பாலான விடயங்களை அறிந்து வைத்திருப்பவர் உதயன் பத்திரிகையின் வித்தி அண்ணா ஆனால் எதையும் எழுதுகின்றார் இல்லை ஆருக்கு நடந்த பல விசையங்கள் தெரியும் குறிப்பாக பேச்சுவார்த்தையில் நடந்தவை ஆகவே வித்தி அண்ணா பயபிடாமல் இவற்றை எழுத முன்வர வேண்டும்

  • Replies 163
  • Views 14.3k
  • Created
  • Last Reply

உண்மையில் நடந்த பெரும்பாலான விடயங்களை அறிந்து வைத்திருப்பவர் உதயன் பத்திரிகையின் வித்தி அண்ணா ஆனால் எதையும் எழுதுகின்றார் இல்லை ஆருக்கு நடந்த பல விசையங்கள் தெரியும் குறிப்பாக பேச்சுவார்த்தையில் நடந்தவை ஆகவே வித்தி அண்ணா பயபிடாமல் இவற்றை எழுத முன்வர வேண்டும்

அவர் எழுதுவதும் உண்மைதான் என்று யார் வந்து சாட்சி சொல்லுவார்கள்?

சரணடைந்த போராளிகளை சிறிலங்கா அரசு கொன்றது - எரிக் சொல்கைம் கூறுகிறார்

தெரிந்தே மக்களை சிறிலங்கா அரசு இலக்கு வைத்து கொலை செய்தது - எரிக் சொல்கைம் தெரிவிப்பு

இப்படிக் கூட இந்தச் செய்திக்கு தலைப்பு வைக்கலாம். இந்த செய்தியில் எமக்கு சாதகமான விடயங்களை எடுத்து, அவற்றை பரப்புரைகளுக்கு பயன்படுத்தலாம்.

ஆனால் நமக்குத்தான் இதெல்லாம் வராதே. நாலு பேரை திட்ட வேண்டும். உலகில் உள்ள அனைவரையும் எதிரியாக்க வேண்டும். பின்பு ஆயுதங்களை மௌனித்து விட்டு அரசியல் போரை செய்வதறாக பீற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பால் ராஜ் அண்ணா ஏன்டா நிறைய பிடிக்கும் அதுவும் அவர் uniform போட்டிட்டு இடுப்பில பிஸ்டலோட வார அழகே தனி அவரால் வழங்கப்பட்ட திட்டம் என்ன என்பதை நானும் அறிய ஆவலா இருக்கான் நிர்மலன் அண்ணா

உண்மையில் நடந்த பெரும்பாலான விடயங்களை அறிந்து வைத்திருப்பவர் உதயன் பத்திரிகையின் வித்தி அண்ணா ஆனால் எதையும் எழுதுகின்றார் இல்லை ஆருக்கு நடந்த பல விசையங்கள் தெரியும் குறிப்பாக பேச்சுவார்த்தையில் நடந்தவை ஆகவே வித்தி அண்ணா பயபிடாமல் இவற்றை எழுத முன்வர வேண்டும்

உண்மைதான் சுண்டல் ,வித்தி கனடா வந்தபோது பலவிடயங்கள் மனம் விட்டு கதைத்தார்.கட்டாயம் தனக்கு தெரிந்த எல்லாவிடயங்களைய ஒரு நாள் எழுதுவேன் என்றார் .இப்போ அவர் அரசியலில் ஈடுபடும் நோக்கம் உள்ளது போலுள்ளது எனவே எழுத தயங்குவார் என்றே நினைக்கின்றேன் .

என்னுடன் பல விடயங்கள் கதைத்தார் நான் அதைக் கூட இங்கு எழுதுவது நாகரீகமல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எழுதுவதும் உண்மைதான் என்று யார் வந்து சாட்சி சொல்லுவார்கள்?

:D

தலைவர் அவர்கள் எது செய்தாலும் அது மக்களின் நலனுக்காகவே இருக்கும் இன்று வேண்டுமானால் யாரும் எதையும் சொல்லாம் அவரின் தீர்க்க தரிசனமான முடிவு பிழைக்காது

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்தாவது உண்மைகளை வெளிக்கொணர்ந்த எரிக் சொல்ஹெய்முக்கு நன்றிகள்.

உண்மைகளை யார் கூறினாலும் இங்கே தமிழ்த் தேசியவாதிகளுக்கு பிடிக்காது. எதனையும் தீவிரமாக ஆராயாது உடனடியாக துரோகிப் பட்டம் கொடுப்பதற்கு எம்மைத் தவிர வேறு யாருக்கும் இந்த அளவு துணிச்சல் வராது. அந்த வகையில் எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் இனி எம்மவர்களால் துரோகியாகவே கணிக்கப்படுவார்.

உண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது பிடிவாதத்தால் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை அடகு வைத்து விட்டார் என்பதே பொருத்தம்.

பிரபாகரனிடம் போரியல் திறமை இருந்ததே தவிர இராஜதந்திர ரீதியான நகர்வில் அவர் மிக மிக பலவீனமாகவே காணப்படார். அந்தத் திறமை அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களிடமே இருந்தது. இவர்தான் விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக சிறப்பாக வழி நடத்தினார் என்றால் அது மிகையாகாது.

தன்னைத் துதி பாடக்கூடியவர்களான சு.ப.தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ போன்றவர்களின் கூற்றுக்களை நம்பி பிரபாகரன் செயற்பட்டாரே தவிர தனக்கு அறிவுரை கூறியவர்களை அவர் இறுதி வரை நம்பவில்லை.

உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு சம்பவத்தினைக் குறிப்பிடலாம். அதாவது, ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக எம்.கே.நாராயணன் தனிப்பட்ட ரீதியாக அன்டன் பாலசிங்கம் அவர்களுடன் தொடர்ச்சியாக பல பேச்சுவார்த்தைகளை நடத்தி- பின்னர் எம்.கே.நாராயணன், நீங்கள் ராஜீவ் கொலைச் சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்து அறிக்கை விடுங்கள்;. இதன் பின்னர் இந்தியாவின் கொள்கை வகுப்பு மாறும் அல்லது விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் கோபம் தணியும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே இந்திய ஆங்கில தொலைக்காட்சிக்கு அன்டன் பாலசிங்கம் அவர்கள் பேட்டி வழங்கியிருந்தார். மிகத் தெளிவாக ராஜீவ் கொலைச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கின்றோம் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இதன் பின்னர் நடந்த பல விடயங்கள் பலருக்கு தெரிந்திருக்குமோ எனக்கு தெரியாது. உடனடியாக வன்னியில் இருந்து அப்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன், அது பாலசிங்கம் அண்ணரின் தனிப்பட்ட கருத்து ஒட்டுமொத்தமான எமது கருத்து அல்ல என்று அங்கிருந்து அறிக்கை விட்டார்.

விடுதலைப் புலிகள் உருவாகிய காலம் தொட்டு தன்னை அதனுடன் இணைத்து வந்த பாலசிங்கத்தினை நொடிப்பொழுதில் அவரை தனிப்பட்டவர் எனக் குறிப்பிடக்கூடிய துணிச்சல் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யாருக்கும் வராது.

சு.ப.தமிழ்ச்செல்வன் தன்னை கலந்து ஆலோசிக்காது உடனடியாக அதற்கு மறுப்பு அறிக்கை விட்டமை தொடர்பில் பாலசிங்கம் அவர்கள் மனதளவில் நொருங்கிக் காணப்பட்டார். இதன் பின்னர் விடுதலைப் புலிகளின் மத்திய குழு கூடி பாலசிங்கம் அவர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றி- அதனை அவருக்கு தெரியப்படுத்திய போது எந்தளவு நொருங்கிப் போனார் என்பதனை அவரின் மனைவியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

இன்று வரை அடேல் பாலசிங்கம் அவர்கள் யாவற்றிலும் இருந்து ஒதுங்கி இருப்பதற்கு காரணமே பாலசிங்கம் அவர்களுடன் விடுதலைப் புலிகள் இறுதியில் நடந்து கொண்ட முறையே காரணம்.

புற்று நோயின் தாக்கம் காரணமாக உயிர் இழக்கும் தறுவாயில் தன்னைச் சந்திக்க- யாழில் இருந்து வெளிவரும் நாளேட்டின் ஆசிரியருடன் உரையாடும் போது, நான்கு தடவை தம்பியை (பிரபாகரனை) உயிரோடு காப்பாற்றி விட்டேன். ஐந்தாவது தடவை காப்பாற்றுவதற்கு நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறி தனது கவலையினை வெளிப்படுத்தினார். கடைசியில் நடைபெற்றது யாவரும் அறிந்த விடயம்.

எமக்கு அனைத்துலக சமூகத்தினால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவற்றினை நாம் சரியாகப் பற்றிக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

சரியோ, தவறோ ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபை 87 ஆம் ஆண்டு கிடைத்தபோது விடுதலைப் புலிகள் குறைந்தபட்ச தீர்வாகக் கருதி- அதனை நடைமுறைப்படுத்த பல முட்டுக்கட்டைகளை வெளிப்படுத்தி- இறுதியில் இந்தியப் படையினரோடு மோதினர். இன்று உள்ளுராட்சி சபைக்காக நாம் தவம் கிடக்கின்றோம்.

பிரேமதாசவுடனான பேச்சுக்களின் போது பல விட்டுக்கொடுப்புக்களுக்கு பிரேமதாசா தயாராக இருந்த போது எங்கே அவர் தமிழர்களின் பிரச்சினையை இலகுவாக தீர்த்துவிடுவாரோ என்று அஞ்சிய விடுதலைப் புலிகள் அவருக்கும் சங்கு ஊதிவிட்டனர். இதனை பின்னர் பாலசிங்கம் அவர்களே, பிரேமதாசாவினை கொலை செய்த பாவம் எம்மை சும்மா விடாது என்று தனது நெருங்கிய நண்பர்களுக்கு கூறி கவலைப்பட்டாராம்.

அடுத்து, சந்திரிகாவின் காலத்தில் அவசரப்பட்டு பேச்சுக்களை முறித்து விடுதலைப் புலிகள் வெளியேறியதுதான் மிகக் கொடுமையான காலகட்டம். இந்தப் போர் நிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வராது தடுக்க பிரபாகரனுடன் பல தடவை அன்டன் பாலசிங்கம் அவர்கள் வாதிட்டும் பிரபாகரன் போரைத் தொடங்க விரும்பினார். இறுதியில் யாழ்ப்பாணத்தை இழந்தோம்.

சந்திரிகா-ரணில்-மகிந்த காலகட்டத்தில் பொறுமையாக விடுதலைப் புலிகள் இருந்தார்கள் என இங்கே கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றீர்கள். உண்மைதான் அதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். இந்தளவு நீண்ட பொறுமைக்கு விடுதலைப் புலிகள் வரக் காரணமே அவர்களுக்கு இருந்த நெருக்கடிகளே.

செப்ரெம்பர் 11-க்குப் பின்னர் போராட்டக் குழுக்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் பார்வை, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பெருமளவிலான போராளிகள் வெளியேறியமை எனப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

சமாதான காலத்தில் மென்தீவிர யுத்தத்தினை தொடங்கியவர்கள் புலிகள். அதாவது, கொழும்பிலும் பிற இடங்களிலும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள், காட்டிக்கொடுத்தவர்கள் எனப் பலரை தேடித் தேடி கொலை செய்தது மட்டுமல்லாது உச்சகட்டக் கொலையா சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான கதிர்காமரை கொலை செய்ததோடு விடுதலைப் புலிகள் மென்தீவிர யுத்தத்தினை வன்தீவிர யுத்தத்துக்கு கொண்டு சென்றனர்.

இதன் பின்னர் காட்சிகள் எமக்கு பாதகமாகவே மாறியது. கதிர்காமர் கொலை செய்யப்பட்டவுடன் அன்டன் பாலசிங்கத்துக்கு தொலைபேசியில் அழைத்த ஒரு அனைத்துலக நாடு ஒன்றின் வெளியுறவுத்துறை அமைச்சர், இவ்வாறு குறிப்பிட்டாராம். மிஸ்டர் பாலசிங்கம் பாரிய தவறு ஒன்றினை நீங்கள் இழைத்திருக்கின்றீர்கள். இதன் பின்னர் உங்களுக்கு நடைபெறப் போவது யாவும் பாதகமான விளைவுகளாகத்தான் இருக்கும் என்றாராம்.

இறுதிப் போராட்டக் காலத்தில் விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதற்கு எரிக் எடுத்த முயற்சிக்கு விடுதலைப் புலிகள் ஒத்துழைத்து இருந்தால் விடுதலைப் புலிகளின் தலைமையாவது காப்பாற்றப்பட்டு இருக்கும். விடுதலைப் போராட்டத்தின் தலைமையை இழந்த இயக்கமாக மலேசியாவில் முன்னர் போராடிய இயக்கமும் விடுதலைப் புலிகளும் தான் என்பது எனது அறிவுக்குத் தெரிந்தது. இந்தியாவின் மணிப்பூர் விடுதலைக்காக போராடிய தலைமை கூட இன்று லண்டனில் இயங்கி வருகின்றது. அதன் தலைமையுடன் மன்மோகன் சிங்க் பேச்சுக்களைக் கூட நடத்தி இருக்கின்றார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் தனது சொந்தப் புத்தியில் இயங்கி இருந்தால் பல விடயங்களை அவர் சாதித்தும் இருந்திருப்பார். இயக்கத்துக்குள் இருந்த உள் இருந்தே கொல்லும் வியாதி காரணமாக பலரின் தூண்டுதலின் காரணமாக சிறப்பாக ஆயுதங்களை தருவித்துக் கொண்டிருந்த குமரன் பத்மநாதனை நீக்கியதில் இருந்து பல வெற்றிகளை சிறப்பாகத் தேடித் தந்த பிரிகேடியர் பால்ராஜ் கூறிய ஆலோசனையை சு.ப.தமிழ்ச்செல்வனுக்காக ஏற்காது விட்டதில் இருந்து பல வரலாற்றுத் தவறுகளை பிரபாகரன் தன்மீது சுமத்தியபடி நந்திக்கடலை நோக்கி நடந்துவிட்டார் என்பதே சரி ஆகும்.

இவ்வாறு யாவற்றையும் எழுதுவதால் நான் சிறிலங்கா அரசினை நல்லவர்கள் என்று கூற வரவில்லை. அவர்கள் எமக்கு எதுவும் தரமாட்டார்கள் என்பது உண்மைதான். அதனை மறுப்பதற்கு இல்லை. எமக்குத் தேவையான உரிமைகளை பெறுவதற்கு இராஜதந்திரத்துடன் கூடி போரியல் திறமையினை நாம் பயன்படுத்தத் தவறிவிட்டோம் என்பதனையே மீண்டும் மீண்டும் தெரிவிக்க விரும்புகின்றேன். இனியாவது நாம் ஆக்கபூர்வாகச் செயற்பட வேண்டும். இல்லை எனில் இருக்கின்ற மண்ணை இழக்கின்ற நிலைக்கே நாம் செல்வோம்.

இங்கே மீளவும் மீளவும் நான் வலியுறுத்துகின்ற விடயம் இதுதான். வரலாற்றுத் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனைக் கற்றுக் கொள்ளத் தவறினால் எதிர்காலச் சந்ததியினருக்கும் நாம் பிழையான முன்னுதாரணத்தினையே விட்டுச் செல்கின்றோம்.

இதில் குறிப்பிடப்பட்டவைக்கும் நிஜத்துக்கும் இடையில் பல வேறுபாடுண்டு. ஒட்டுக்குழுக்களின் மாற்றுக்கருத்தியல் எல்லாம் சரி என்றிருந்தால்.. இன்று ஒட்டுக்குழுக்கள் பிரபாகரனின் எண்ணத்தில் உதித்த.. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னும்.. சிங்கள தேசியக் கட்சிகளின் பின்னும் பதுங்க வேண்டிய தேவையே வந்திராது..!

இன்றைய மீளாய்வுகள்.. பிரபாகரனையும் புலிகளையும் குற்றவாளிக்கூட்டில் ஏற்றும் குறுகிய ஒட்டுக்குழுவாதங்களாக இருக்கின்றனவே தவிர.. தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் நோக்கி இல்லை. புலிகளுக்கு பாடம் எடுப்பதை நிறுத்தி.. உங்களின் எதிர்கால பாடம் என்ன என்பதை மக்களிடம் சொல்லுங்கள்.

புலிகள் செய்தது.. எடுத்தது எல்லாம் வரலாற்றுத்தவறாகவே இருக்கட்டும். நீங்கள் அவற்றை செய்யாமல்.. மக்களுக்கு அவர்கள் விரும்பும் தீர்வைப் பெற்றுக் கொடுத்துவிட்டு வந்து சொல்லுங்கள்.. பிரபாகரனால் தான் எல்லாம் என்று கேட்கிறோம்..!

சும்மா சும்மா உங்கள் அளவிற்கு தெரிந்தவற்றில் இருந்து வியாக்கியானம் செய்வது எல்லாம் ஆரோக்கியமான விவாதங்களோ.. விமோசனம் தரும் எழுத்துக்களோ இல்லை.

இதய சுத்தியோடு.. புலிகளின் நகர்வுகளில் இருந்த இராஜதந்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களால் மக்களுக்காகவும் எதுவும் செய்ய முடியாது..! இதுவும் உண்மை..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது காஸ்ட்ரோ அண்ணாவை பற்றி நிர்மலன் அண்ணா சொன்ன விடயங்களும் பலருக்கு தெரியும் நான் நினைக்கிறன் அவர் செய்ய நினைச்சது புலத்தில் உள்ள கிளைகளுக்கு இளம் இரத்தம் பாச்ச வேண்டும் என்பது அப்போ அமைப்பு இன்னும் வேகமாக செயற்ப்படும் என்பது ஆனால் பல தடைவைகள் நான் நினைப்பதுண்டு அவர் புதியவர்களையும் அனுபவம் உள்ளவர்களையும் கலந்து விட்டிருக்கலாம் இல்லை பழையவர்களுக்கு அமைப்பு ரீதியான வேறு பதவிகளோ அல்லது செயற்பாடுகளோ கொடுத்திருக்கலாம் அல்லது அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி அவர்களுடைய செயட்ப்படுகளுக்கு நன்றி சொல்லி இந்த மாற்றங்களுக்கு ஒத்துழைக்கு மாறும் அவர்களை கேட்டிருக்கலாம்

மற்றது அவர் செய்த இன்னும் ஒரு தவறு புலம்பெயர்தவர்களில் ஒரு பகுதியினரை மட்டும் நம்பியது நம்பி அவர்கள் சொல்வதை கேட்டது

ஒருவரை குற்றம் சாடும் போது அவர் செய்த நன்மைகளையும் சொல்ல வேண்டும் வேண்டும் வெளிநாடுகளில் பலவற்றில் புலம் பெயர்ந்து இல்லது இங்கயே பிறந்து வளர்ந்தவர்களை கொண்டு tyo என்ற அமைப்பை பலப்படுத்தியது

  • கருத்துக்கள உறவுகள்

பட் anyway நடந்து முடிந்தவற்றை பேசி என்ன ஆக போகுது? வீண் கவலைகளும் மனஸ்தாபங்களும் தான் ஏற்படும். வரலாறுகளை பாடமாக்கி தமிழர்களுக்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி எண்கள் மண்ணில் நாங்கள் அனைவரும் நிம்மதியாக வாழ அனைவரும் இணைந்து செயற்படுவோம்

[size=4]எமக்கு அனைத்துலக சமூகத்தினால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவற்றினை நாம் சரியாகப் பற்றிக்கொள்ளவில்லை என்பதே உண்மை. -- நிர்மலன்[/size]

[size=4]..எனவே இனி எந்தவித தயக்கமுமின்றி நீங்கள் ஆர்ரோகியமான விவாதங்களை நடத்தலாம் என்பது எனது நம்பிக்கை...- சுபேஸ்[/size]

நிர்மலன் [size=4]தாங்கள் கூறிய விடயங்கள் மிக முக்கியமானவை. பாலாஅண்ணர் தொடர்பான விடயங்கள் சில எனக்கு ஏற்கனவே தெரிந்தது. இராணுவ புவியியல் மாணவன் என்றவகையில் தளபதி பல்ராஜ்மீது அளவு கடந்த மதிப்பு உள்ளவன். அவர் தொடர்பான முரண்பாடு பற்றி அறிவ விருப்பம். ஏனேனில் அது சில இராணுவ தந்திரோபாய முடிச்சுகளை அவிழ்க்க உதவும்.[/size]

கஸ்ரோவுடன் நான் வெளிநாட்டு கிழைகள் நிர்வாகம் மற்றும் இராணுவ வெளியுறவு அணுகுமுறை தொடர்பாக வெளிப்படையாகவே முரண்பட்டதுபற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.. அவரை வன்னியில் நடந்த கருணாகரனின் புத்தக வெளியீட்டுவிழாவில் பகீரங்கமாகவே விமர்சித்தேன்.

சுருக்கமாகச் சொன்னால் கஸ்ரோ இயக்கத்தை சர்வதேசத்தில் தனிமைப் படுத்துகிறார் என்றகிதுதான் என் குற்றச்சாட்டாக இருந்தது.

சொலெமின் இலக்கு தலைவர்.

இறுதியுத்ததின் இறுதிக் கட்டத்தில் என்னுடன் வன்னியில் இருந்து தொடர்புகொண்ட ஒருவர் மனமுடைந்து ”நீங்கள் சொல்லுவதுதான் சரி ஆனால் நீங்கள் கஸ்ரோபோல --------- பிறக்கவில்லையே” என நொந்துகொண்டார். இறுதி யுத்தத்தின் இறுதி கட்டத்தில் நான் வன்னிக்கு வரவா என கேட்டு எழுதினேன். பாதுகாப்பில்லை வர முயலவேண்டாம் என்றார்கள். எல்லாம் கலம் கடந்துவிட்டது.

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு வழிவகுத்த பெரும்பாலான தவறுகளுக்கு கஸ்ரோவின் அணுகுமுறைதான் அடிப்படைக் காரணம் என்பதில் வரும்கால வரலாற்று ஆசிரியர்கள் சந்தேகம் கொள்ள மாட்டார்கள்.

மிக மிக சிக்கலான அரசியல், இராணுவ சூழ்நிலைகள் இருந்த இறுதிபோரை, 2006 பின் அங்கே இல்லாதவர் ஒருவர். வெறும் குற்றம் சாட்டுதல் மட்டுமே இங்கே காணப்ப்டுகிறது. கஸ்ரோவிட்ட பிழையாக ஒருவிடயமத்தை தன்னும் பிழை என நீருபிக்க முயற்சி எடுக்காத எழுத்து, ஆரோக்கியமே இல்லாத கஸ்ரோமீதான தனி மனித தாக்குதல் மட்டுமே.

[size=4]தவறுகள் பற்றிய சுய விமர்சணம் இல்லாமல் உண்மையின் ஒளியில் நம் தோல்விக்கு வழிவகுத்த காரனங்களை தேடி அடைய முடியாது. தோல்வியின் காரனங்களைக் கண்டடையாமல் நாம் வெற்றியின் பாதையைக் கண்டடைய முடியாது. [/size]

[size=4]நிர்மலன், ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது பாலாஅண்னரின் கருத்தைக் கேட்டிருந்தால் வரலாறே மாறியிருக்கும். ஜெனிவாவில் பேச்சுவார்த்தையை தமிழ்செல்வன் குழுவினர் முறித்த அன்று மாலை எரிக்கை ஓஸ்லோவில் சந்தித்தேன். மிகவும் உடைந்துபோயிருந்தார். பாலசிங்கம் அண்னர் ஓரம் கட்டப்பட்டதுதொடர்பாக வெறுத்துப்போய் இருந்தார். அவரைத் தவிர வேறுயாரையும் சர்வதேச சமூகம் நம்பவில்லை. இனி எங்களால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. முடிவின் ஆரம்பம் என்று அந்த நாளை அவர் குறிப்பிட்டார். மிகுந்த மன உளைச்சலுடன் BBC நிருபருடன் நான் பேசினேன். ([/size]http://news.bbc.co.u...sia/5076930.stm[size=4]) [/size]

[size=4]தாரக்கியின் கொலைக்குப் பின்னர் நான் கொழும்பு சென்றால் கொல்லபடும் நிலை இருந்தது. அதுவரை தென்னிலங்கையில் என்னை பாதுகாத்த முஸ்லிம் அரசியல் சக்திகளும் இனி வரவேண்டாம் என சொல்லிவிட்ட நிலையில் வன்னிக்கான என்னுடைய பயணத்தை மேற்கொண்டேன். வன்னியில் நிறைய விமர்சித்தேன். விவாதித்தேன். 1996 - 2006 காலக்கட்டத்தில் ஒழுங்காக வருடத்தில் பாதிநாள் வன்னியில் ஈழத்தின் ஏனைய பகுதிகலில் இலங்கையில் பயனம் செய்தேன். அந்தப் பயணம்தான் என் இறுதிப் பயணமாக இருந்தது.[/size]

கொலைக்கு பயந்து அங்கும் இங்கு ஓடி ஓடி தப்பி தப்பி வாழ்ந்தவர்கள் தங்களை துணிவில், இலங்கை முழுவதிலிமிருந்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டு கழுத்தில் சயனட் குப்பி கட்டி துணிசாலாக வாந்தவர்களின் துணிக்கு சமமானதாக காட்டுவது எள்ளவும் பொருத்தமில்லாதது.

முள்ளிவாய்க்கால் தோல்வி தமிழினத்தின் தோல்வியல்ல போராளிகளின் தோல்வியுமல்ல. சில தவறான தேசிய சர்வதேசிய அரசியல் இராணுவ தந்திரோபாயங்களின் தோல்வி என்றே நான் நம்புகிறேன். நமது தோல்விக்கு வழிவகுத்த தவறான பாதைகளை நிராகரித்தால் மட்டுமே வெற்றிக்கான சரியான பாதையை எம்மால் தேடிக் கண்டுகொள்ள முடியும்.

இது தொடர்பில்லாது.

ஜெயசுக்குறிவில் கிடைத்த தோல்வியை ஆராய்ந்து அதன் பிழைகளை திருத்தி மேலே போனது யுத்தத்தை தொடர இருந்த அரசுக்கு தேவையாக இருக்கலாம். முள்ளிவாய்களின் இராணுவத் தோல்விக்கான ஆராய்வாக தங்கள் அரசியல் எதிரிகளை தாக்குவது இனிமேலைய வடிவம் முற்றிலும் மாறிவிட்ட போராடத்தினுடன் கிட்டவும் வராத கருத்துக்கள். இன்றைய போராடத்தின் தன்மைகளை விளங்கி கொள்ள கிஞ்சித்தும் முயற்சி எடுக்கபடவில்லை எனப்தை கருத்துக்கள் தெளிவாக் காடுகின்றன.

இப்படி ஒன்றை கூறுவதாயின் அவர்களுக்கு அன்றைய போராட்டத்தின் பாதையையை மட்டுமல்ல இந்றைய பாதையையும் பற்றி தெளிவான விளக்கம் இல்லை என்பது தான் கருத்து. இன்றைய பாதை பற்றி தன்னும் தெளிவான விளக்கம் இருக்குமாயின் எவரும் 5 பிரதிநிதிகள் மட்டும் எடுத்தது, அதேநேரம் மு.கா வுக்கு மட்டும்மல்ல, பதியுதின், அதவுல்லா போன்ற ஒருவரை ஒருவரை கழுத்தறுத்து கொண்டு, பதவிகளுக்க எல்லோரும் எள்ளி நகைக்கதக்க வழியில் போட்டி போட்டுகொண்டு அதேநேரம் எதிலும் தன்மேலாணை உடனே ஏற்க மறுத்த முஸ்லீம் அரசியல் வாதிகள் எல்லோருக்குமே பாடம் படிப்பிததற்கா, மகிந்த நியமித்த தரமே இல்லாத அரசியல் கோமாளியான நஜீப் மஜீத்திடம், 11 அங்கந்தவர்களை பெற்ற கூட்டமைப்பு தனது போராடங்களை விடுத்து சரண் அடைய வேண்டும் என்பதை எழுத மாட்டார்கள். இவரகளின் அதீத சுய முன்னேற்ற முயற்சிகள், தாம் எழுத முன்வரும் கருத்துகளின் அரசியல் பின்னணிகளை விவரித்து, தாம் முடிவுக்கு வரும் தத்துவ பாதைகளை கூட எடுத்து கூற நேரம் எடுக்காமல் தமது ஒரு பக்க பிழை சாட்டல் கருத்தை கூறி முடித்துவிடுகிறார்கள். மேலோட்டமாக தமது அரசியல் முரண்பாடுகளை நியாபடுத்தும் நுனிப்புல் கடிக்கும் இயல்பை ஆழநீளமான அரசியல் ஆய்வாக தொடர் பிரச்சாரம் மூலம் நிலை நிறுத்த பார்க்கிறார்கள்.

கருத்தெழுத்தக்க ஒரு அரசியல் சம்பவம் எங்குமே விபரிக்கப்பட்டில்லை. சரியான சம்பவங்களை எடுத்துவைத்து அலசாத ஆய்வு விவாதங்களை வேண்டுமென்றெ திசை திருப்ப வைக்கப்படுவன மட்டுமே.

நாம் சீனாவில் இருந்தோ ரஸியாவில் இருந்தோ போராளிகளை இறக்குமதி செய்ய முடிஒயாது. பகைமைப் பட்ட யாவரும் விடுதலைக்காக கூடாமல் இந்தத்தேர் நகராது. கஸ்ரோ அணியினர் கடந்த கால தவறுகளை உணர்ந்து மேற்குலகோடும் இந்தியாவோடும் தமிழ்நாட்டோடும் முரண்பட்டு நம்மைத் தனிமைப் படுத்தும் பிழையான அணுகுமுறையை கைவிடவேண்டும். அதன்மூலம்தான் அவர்களும் நமக்குத் தலைமை தாங்கும் அணியாக முடியும்.

நம்மால் வரலாற்ருத் தவறுகளைத் திருத்திக் கொண்டு மீழ முடியும். ஈழம் நமதும் நம் பிள்ளைகளதும் சகோதர முஸ்லிம்களதும் பிள்ளைகளதும் பாரம்பரியச் சொத்து அவர்களுக்கு சுதந்திரத்தையும் விடுதலையையும் (Freedom and Independent) நம்மால் விட்டுச் செல்ல முடியும்.

ராமகிருஸ்ணருக்கு இருதயர் என்று ஒரு உறவு இருந்தார். பரமகம்சரை மக்கள் நம்பியதால் அவரிடம் அதிகமான மக்கள் வந்து போனார்கள். ராமகிருஸ்னருக்கு உணவு ராசமணி அம்மையால் ஊர்ஜிதம் செய்யபட்டிருந்தது. பரமகம்சர் பக்கதர்களை வைத்து பலனடைய எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.

இருதயர் கீரைக்கடைக்கு எதிர்க் கடைபோட்டல் வரத்தக்க பலங்களை ஊகித்து கொண்டார். பரமகம்சரிடம் சேர்திருந்த காலத்தில் அவரால் ஞானத்தை விளங்கவோ, அதற்கான சாதனைகளை பரம கம்சருடன் இணந்து ஆரம்பிக்கவோ முடியவில்லை. எனவே பலனில்லாத பரமகம்சருடனான உறவை முறித்தார். தானும் பரமகம்சர் மாதிரி ஞானத்தை தேடிவிட்டதாக நடித்து தனது ஞானத்தின் ஆழத்தை நிரூபிக்க அம்மையாரின் உறவு சிறுமியை பாவித்து பூசைகள் நடத்தினார். பயந்து போய்விட்ட அம்மையாரின் குடும்பம் இருதயர் தமது கோவில் பக்கம் வரக்கூடாது எனத்துரத்திவிட்டனர். சிலகாரணங்களுக்க பரகம்சரும் கோவிலை விட்டு வெளியேற அம்மையார் குடும்பம் அவரை மட்டும் திரும்பவும் அங்கே வரவைத்தார்கள்.்திட்டத்தை சரியாக போடத்தெரிந்த, துரத்தப்பட்ட இருதயர் தனது பகையாளியான பரமகம்சருடன் உறவுகளை தொடக்கி கோவிலை விட்டு அவரை வெளியேற்றி அம்மையர் குடும்பத்தை பழிவாங்க முயன்றார். முயற்சி முன்னேறாததால் பரமகம்சரிடம் நேராக வந்து அவர் கோவிலை விட்டு வெளியேறாதது அவமானம் என்று போதிக்க முயன்றார். இருதயரின் போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்ட பரமகம்சர் இருதயர் தன்னைக்கான காளி கோவில் வரக்கூடாது, (ஏனெனில் அதுதான் இருதயருக்கு அம்மையார் குடும்பம் குடுத்த உததரவு) என கூறியும் விட்டார். திரும்பி போன இருதயர் அம்மையார் குடும்பததை விட்டுவிட்டு பரமகம்சர் மீது தாகுதல்களை ஆரம்பித்து பரம்கம்சரின் ஞானம் நடிப்பு என்றும் தனது ஞானமே உண்மையானதும் என்று பிரசாரம் செய்யலானார். பரம்கம்சரின் கதையில் வரும் ஒரேயொரு கீரைக்கடை நாயகன் இருதயர் மட்டுமே

நியானி: தனிநபர்கள் மீதான நாகரிகமற்ற சொல்லாடல்கள்/குற்றச்சாட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளது. கருத்துக்களுக்கு ஆக்கபூர்வமான பதில் கருத்துக்கள் வைத்து திரியைத் தொடருங்கள்

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்தாவது உண்மைகளை வெளிக்கொணர்ந்த எரிக் சொல்ஹெய்முக்கு நன்றிகள்.

உண்மைகளை யார் கூறினாலும் இங்கே தமிழ்த் தேசியவாதிகளுக்கு பிடிக்காது. எதனையும் தீவிரமாக ஆராயாது உடனடியாக துரோகிப் பட்டம் கொடுப்பதற்கு எம்மைத் தவிர வேறு யாருக்கும் இந்த அளவு துணிச்சல் வராது. அந்த வகையில் எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் இனி எம்மவர்களால் துரோகியாகவே கணிக்கப்படுவார்.

உண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது பிடிவாதத்தால் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை அடகு வைத்து விட்டார் என்பதே பொருத்தம்.

பிரபாகரனிடம் போரியல் திறமை இருந்ததே தவிர இராஜதந்திர ரீதியான நகர்வில் அவர் மிக மிக பலவீனமாகவே காணப்படார். அந்தத் திறமை அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களிடமே இருந்தது. இவர்தான் விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக சிறப்பாக வழி நடத்தினார் என்றால் அது மிகையாகாது.

தன்னைத் துதி பாடக்கூடியவர்களான சு.ப.தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ போன்றவர்களின் கூற்றுக்களை நம்பி பிரபாகரன் செயற்பட்டாரே தவிர தனக்கு அறிவுரை கூறியவர்களை அவர் இறுதி வரை நம்பவில்லை.

உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு சம்பவத்தினைக் குறிப்பிடலாம். அதாவது, ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக எம்.கே.நாராயணன் தனிப்பட்ட ரீதியாக அன்டன் பாலசிங்கம் அவர்களுடன் தொடர்ச்சியாக பல பேச்சுவார்த்தைகளை நடத்தி- பின்னர் எம்.கே.நாராயணன், நீங்கள் ராஜீவ் கொலைச் சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்து அறிக்கை விடுங்கள்;. இதன் பின்னர் இந்தியாவின் கொள்கை வகுப்பு மாறும் அல்லது விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் கோபம் தணியும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே இந்திய ஆங்கில தொலைக்காட்சிக்கு அன்டன் பாலசிங்கம் அவர்கள் பேட்டி வழங்கியிருந்தார். மிகத் தெளிவாக ராஜீவ் கொலைச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கின்றோம் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இதன் பின்னர் நடந்த பல விடயங்கள் பலருக்கு தெரிந்திருக்குமோ எனக்கு தெரியாது. உடனடியாக வன்னியில் இருந்து அப்போதைய அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன், அது பாலசிங்கம் அண்ணரின் தனிப்பட்ட கருத்து ஒட்டுமொத்தமான எமது கருத்து அல்ல என்று அங்கிருந்து அறிக்கை விட்டார்.

விடுதலைப் புலிகள் உருவாகிய காலம் தொட்டு தன்னை அதனுடன் இணைத்து வந்த பாலசிங்கத்தினை நொடிப்பொழுதில் அவரை தனிப்பட்டவர் எனக் குறிப்பிடக்கூடிய துணிச்சல் விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யாருக்கும் வராது.

சு.ப.தமிழ்ச்செல்வன் தன்னை கலந்து ஆலோசிக்காது உடனடியாக அதற்கு மறுப்பு அறிக்கை விட்டமை தொடர்பில் பாலசிங்கம் அவர்கள் மனதளவில் நொருங்கிக் காணப்பட்டார். இதன் பின்னர் விடுதலைப் புலிகளின் மத்திய குழு கூடி பாலசிங்கம் அவர்களுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றி- அதனை அவருக்கு தெரியப்படுத்திய போது எந்தளவு நொருங்கிப் போனார் என்பதனை அவரின் மனைவியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

இன்று வரை அடேல் பாலசிங்கம் அவர்கள் யாவற்றிலும் இருந்து ஒதுங்கி இருப்பதற்கு காரணமே பாலசிங்கம் அவர்களுடன் விடுதலைப் புலிகள் இறுதியில் நடந்து கொண்ட முறையே காரணம்.

புற்று நோயின் தாக்கம் காரணமாக உயிர் இழக்கும் தறுவாயில் தன்னைச் சந்திக்க- யாழில் இருந்து வெளிவரும் நாளேட்டின் ஆசிரியருடன் உரையாடும் போது, நான்கு தடவை தம்பியை (பிரபாகரனை) உயிரோடு காப்பாற்றி விட்டேன். ஐந்தாவது தடவை காப்பாற்றுவதற்கு நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறி தனது கவலையினை வெளிப்படுத்தினார். கடைசியில் நடைபெற்றது யாவரும் அறிந்த விடயம்.

எமக்கு அனைத்துலக சமூகத்தினால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவற்றினை நாம் சரியாகப் பற்றிக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

சரியோ, தவறோ ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபை 87 ஆம் ஆண்டு கிடைத்தபோது விடுதலைப் புலிகள் குறைந்தபட்ச தீர்வாகக் கருதி- அதனை நடைமுறைப்படுத்த பல முட்டுக்கட்டைகளை வெளிப்படுத்தி- இறுதியில் இந்தியப் படையினரோடு மோதினர். இன்று உள்ளுராட்சி சபைக்காக நாம் தவம் கிடக்கின்றோம்.

பிரேமதாசவுடனான பேச்சுக்களின் போது பல விட்டுக்கொடுப்புக்களுக்கு பிரேமதாசா தயாராக இருந்த போது எங்கே அவர் தமிழர்களின் பிரச்சினையை இலகுவாக தீர்த்துவிடுவாரோ என்று அஞ்சிய விடுதலைப் புலிகள் அவருக்கும் சங்கு ஊதிவிட்டனர். இதனை பின்னர் பாலசிங்கம் அவர்களே, பிரேமதாசாவினை கொலை செய்த பாவம் எம்மை சும்மா விடாது என்று தனது நெருங்கிய நண்பர்களுக்கு கூறி கவலைப்பட்டாராம்.

அடுத்து, சந்திரிகாவின் காலத்தில் அவசரப்பட்டு பேச்சுக்களை முறித்து விடுதலைப் புலிகள் வெளியேறியதுதான் மிகக் கொடுமையான காலகட்டம். இந்தப் போர் நிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வராது தடுக்க பிரபாகரனுடன் பல தடவை அன்டன் பாலசிங்கம் அவர்கள் வாதிட்டும் பிரபாகரன் போரைத் தொடங்க விரும்பினார். இறுதியில் யாழ்ப்பாணத்தை இழந்தோம்.

சந்திரிகா-ரணில்-மகிந்த காலகட்டத்தில் பொறுமையாக விடுதலைப் புலிகள் இருந்தார்கள் என இங்கே கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றீர்கள். உண்மைதான் அதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். இந்தளவு நீண்ட பொறுமைக்கு விடுதலைப் புலிகள் வரக் காரணமே அவர்களுக்கு இருந்த நெருக்கடிகளே.

செப்ரெம்பர் 11-க்குப் பின்னர் போராட்டக் குழுக்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் பார்வை, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பெருமளவிலான போராளிகள் வெளியேறியமை எனப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

சமாதான காலத்தில் மென்தீவிர யுத்தத்தினை தொடங்கியவர்கள் புலிகள். அதாவது, கொழும்பிலும் பிற இடங்களிலும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள், காட்டிக்கொடுத்தவர்கள் எனப் பலரை தேடித் தேடி கொலை செய்தது மட்டுமல்லாது உச்சகட்டக் கொலையா சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான கதிர்காமரை கொலை செய்ததோடு விடுதலைப் புலிகள் மென்தீவிர யுத்தத்தினை வன்தீவிர யுத்தத்துக்கு கொண்டு சென்றனர்.

இதன் பின்னர் காட்சிகள் எமக்கு பாதகமாகவே மாறியது. கதிர்காமர் கொலை செய்யப்பட்டவுடன் அன்டன் பாலசிங்கத்துக்கு தொலைபேசியில் அழைத்த ஒரு அனைத்துலக நாடு ஒன்றின் வெளியுறவுத்துறை அமைச்சர், இவ்வாறு குறிப்பிட்டாராம். மிஸ்டர் பாலசிங்கம் பாரிய தவறு ஒன்றினை நீங்கள் இழைத்திருக்கின்றீர்கள். இதன் பின்னர் உங்களுக்கு நடைபெறப் போவது யாவும் பாதகமான விளைவுகளாகத்தான் இருக்கும் என்றாராம்.

இறுதிப் போராட்டக் காலத்தில் விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதற்கு எரிக் எடுத்த முயற்சிக்கு விடுதலைப் புலிகள் ஒத்துழைத்து இருந்தால் விடுதலைப் புலிகளின் தலைமையாவது காப்பாற்றப்பட்டு இருக்கும். விடுதலைப் போராட்டத்தின் தலைமையை இழந்த இயக்கமாக மலேசியாவில் முன்னர் போராடிய இயக்கமும் விடுதலைப் புலிகளும் தான் என்பது எனது அறிவுக்குத் தெரிந்தது. இந்தியாவின் மணிப்பூர் விடுதலைக்காக போராடிய தலைமை கூட இன்று லண்டனில் இயங்கி வருகின்றது. அதன் தலைமையுடன் மன்மோகன் சிங்க் பேச்சுக்களைக் கூட நடத்தி இருக்கின்றார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் தனது சொந்தப் புத்தியில் இயங்கி இருந்தால் பல விடயங்களை அவர் சாதித்தும் இருந்திருப்பார். இயக்கத்துக்குள் இருந்த உள் இருந்தே கொல்லும் வியாதி காரணமாக பலரின் தூண்டுதலின் காரணமாக சிறப்பாக ஆயுதங்களை தருவித்துக் கொண்டிருந்த குமரன் பத்மநாதனை நீக்கியதில் இருந்து பல வெற்றிகளை சிறப்பாகத் தேடித் தந்த பிரிகேடியர் பால்ராஜ் கூறிய ஆலோசனையை சு.ப.தமிழ்ச்செல்வனுக்காக ஏற்காது விட்டதில் இருந்து பல வரலாற்றுத் தவறுகளை பிரபாகரன் தன்மீது சுமத்தியபடி நந்திக்கடலை நோக்கி நடந்துவிட்டார் என்பதே சரி ஆகும்.

இவ்வாறு யாவற்றையும் எழுதுவதால் நான் சிறிலங்கா அரசினை நல்லவர்கள் என்று கூற வரவில்லை. அவர்கள் எமக்கு எதுவும் தரமாட்டார்கள் என்பது உண்மைதான். அதனை மறுப்பதற்கு இல்லை. எமக்குத் தேவையான உரிமைகளை பெறுவதற்கு இராஜதந்திரத்துடன் கூடி போரியல் திறமையினை நாம் பயன்படுத்தத் தவறிவிட்டோம் என்பதனையே மீண்டும் மீண்டும் தெரிவிக்க விரும்புகின்றேன். இனியாவது நாம் ஆக்கபூர்வாகச் செயற்பட வேண்டும். இல்லை எனில் இருக்கின்ற மண்ணை இழக்கின்ற நிலைக்கே நாம் செல்வோம்.

இங்கே மீளவும் மீளவும் நான் வலியுறுத்துகின்ற விடயம் இதுதான். வரலாற்றுத் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனைக் கற்றுக் கொள்ளத் தவறினால் எதிர்காலச் சந்ததியினருக்கும் நாம் பிழையான முன்னுதாரணத்தினையே விட்டுச் செல்கின்றோம்.

நிர்மலன்,

இப்போது எழுதும் விடயங்களை ஏன் அப்போது எழுதவில்லை ? எழுதியிருந்தால் சிலவேளை உங்களின் கேள்விகளிற்கு விடை கிடைத்திருக்கும் உங்களின் கருத்துக்களிற்கு இப்போது விடை அளிக்க யாரும் அற்ற நிலையில் எப்படி அதனை ஏற்றுக்கொள்வது ?? இதெல்லாத்துக்கும் மேலாக தலைவரை பற்றி எழுத நீங்கள் என்னத்தை பெரிதாக சாதித்துள்ளீர்கள் ???

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவரத்தினம்

நன்றி சுண்டல்

கதைக்கணும்

நாம் பேசணும்

அறியணும்

அடுத்த கட்டத்துக்கு போகணும் என்றால்

அது ஒரு ஆரோக்கியமானதாக

செய்தவர்களை துரோகிகளாகவோ

வேண்டுமென்று எம்மை அழித்தவர்களாகவோ படிப்பில்லாததால் அழிந்தவர்கள் என்றோ இல்லாது சுய விமர்சனமாக இருக்கணும்.

அதற்கு முதலில் அவர்களது அர்ப்பணிப்புக்களை ஏற்றுக்கொள்ளணும். தமிழீழம் என்ற இடத்தை அடைய விரும்பியே அவர்கள் எல்லாவற்றையும் செய்தனர்.

எமக்குத்தெரிந்தது மட்டுமல்ல

அவர்களுக்குத்தெரிந்தது

அவர்களது பலம் பலவீனம் பொறுப்பு அடுத்த கட்ட திட்டங்கள் என்பனவும் எமக்குத்தெரிந்திருக்கணும்.

இது தான் ஒருஆரோக்கியமான விவாதமாக இருக்கும்.

அதை விடுத்து கேள்விப்பட்டதை ஒவ்வொருவரும் எழுதுவது வரலாற்றையும் எமக்காக உயிர் தந்தோரையும் திரிவுபடுத்தி கேவலப்படுத்தி அடுத்த சந்ததி எதையும் நம்பாது நடுத்தெருவில் நிற்கவே வழி சமைக்கும்.

மற்றது காஸ்ட்ரோ அண்ணாவை பற்றி நிர்மலன் அண்ணா சொன்ன விடயங்களும் பலருக்கு தெரியும் நான் நினைக்கிறன் அவர் செய்ய நினைச்சது புலத்தில் உள்ள கிளைகளுக்கு இளம் இரத்தம் பாச்ச வேண்டும் என்பது அப்போ அமைப்பு இன்னும் வேகமாக செயற்ப்படும் என்பது ஆனால் பல தடைவைகள் நான் நினைப்பதுண்டு அவர் புதியவர்களையும் அனுபவம் உள்ளவர்களையும் கலந்து விட்டிருக்கலாம் இல்லை பழையவர்களுக்கு அமைப்பு ரீதியான வேறு பதவிகளோ அல்லது செயற்பாடுகளோ கொடுத்திருக்கலாம் அல்லது அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி அவர்களுடைய செயட்ப்படுகளுக்கு நன்றி சொல்லி இந்த மாற்றங்களுக்கு ஒத்துழைக்கு மாறும் அவர்களை கேட்டிருக்கலாம்

மற்றது அவர் செய்த இன்னும் ஒரு தவறு புலம்பெயர்தவர்களில் ஒரு பகுதியினரை மட்டும் நம்பியது நம்பி அவர்கள் சொல்வதை கேட்டது

ஒருவரை குற்றம் சாடும் போது அவர் செய்த நன்மைகளையும் சொல்ல வேண்டும் வேண்டும் வெளிநாடுகளில் பலவற்றில் புலம் பெயர்ந்து இல்லது இங்கயே பிறந்து வளர்ந்தவர்களை கொண்டு tyo என்ற அமைப்பை பலப்படுத்தியது

பொயட், நீங்கள் செல்லும் ஆராய்வு பாதையை தெரியவில்லை. பழிசாட்டலை தெரிகிறார். கட்டாயம் காஸ்றொவின் மட்டுமல்ல தலைவரின் பதையிலும் சரியும் பிழையும் இருக்கும். ஆனால் அவர் குவித்த வெற்றிகளை ஆராய யாரும் இல்லை. உதாரணம் பொயட் சொல்லும் ஜெயசுக்குருவில் இயக்கம் செய்த சரியானவை யாவை என்று யாராவது சொல்லாத வரைக்கும் அவற்றை தெரிந்துகொள்ளாமல் அவற்றை யாராவது பின் பற்ற முடியுமா?

ஆனால் நமது பாதை இப்போது மிகவும் வேறுபட்டது. அதாவது போராட்டம் தொடரவேண்டுமாயின் காஸ்ரோவின் பாதையை ஆராயலாம். இனி போராட்டம் இல்லை என்பது இப்போதைய பாதை. பொயட் TGTE யையும் பிழை சாட்டி, காஸ்ரோவையும் தாக்கி எழுதுவது எல்லோரையும் காஸ்ரோவின் பாதையை மட்டும் தான் தெரிகிறார்கள் என்பது போல் காட்டும் முயற்சி. இதில் சர்வதேசத்திடம் நாம் ராசபக்கா அவர்களின் எதிரியும் கூட என்பதைதான் எடுத்து கூறி வருகிறோம். இதில் புலிகள் சர்வதேசத்தின் சொல்களை கேளாத அவர்களின் முதல் எதிரிகள் என்று நிருபிப்பது, மகிந்தா அல்ல தமிழரே அவர்களின் எதிரிகள் என சொல்வது போலத்தான் இருக்கும். பொயட் தமிழர் திருந்த வேண்டுமாயின், புத்தத்கதை தமிழில் எழுதி பிழையை விட்ட அவர்களுக்கு விபரங்களை விளங்க வைத்திருக்கலாம். இதில் தேவை இல்லாத விபரங்கள் வெளியே போகாது. சம்பந்தர் விடும் பிழைகளை சுரேஸ் வெளியில் சொல்ல முயன்றால் நாம் அதை அவர்கள் கூட்டமைப்பு இரகசிய கூட்டங்களில் விவாதிக்க வேண்டும் என்றல்லாவா கருத்து எழுதுகிறோம்.

யார் எப்படி அழித்தாலும் பொயட் தனது பாதையை மாற்ற மாட்டர். எதிர் பதையில் செல்வது மட்டும் அவர் பாதை.

தலைவர் அவர்கள் எது செய்தாலும் அது மக்களின் நலனுக்காகவே இருக்கும் இன்று வேண்டுமானால் யாரும் எதையும் சொல்லாம் அவரின் தீர்க்க தரிசனமான முடிவு பிழைக்காது

எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு.

தலைவரே ஆயுதங்கள் மௌனித்துவிட்டன என்ற பின் ஆயுதபோராட்டதை ஆராய்வதால் மட்டும்தான் முன்னால் போகலாம் என்பதில்லை.

[size=5]சொல்ஹேம் கூற்றுக்கு ருத்ரகுமாரன் மறுப்பு[/size]

இலங்கை இனப் பிரச்சினையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, எரிக் சொல்ஹேம் தமிழோசையிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

2009ம் ஆண்டு பிப்ரவரி மாத்த்தில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமெரிக்க நார்வே அதிகாரிளுடன் நடந்த ஒரு கூட்ட்த்தில் விடுதலைப்புலிகள் சார்பாக தான் கலந்துகொண்ட்தாகவும், இந்த பிப்ரவரி கோலாலம்பூர் கூட்டத்தில், புலிகள் சரணடைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது, ஆனால் எழுத்து மூலமாக எந்தத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை, எனவே அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது என்றார் ருத்ரகுமாரன்.

அக் கூட்டத்தில் ஒரு விரிவான போர் நிறுத்தம் குறித்து விடுதலைப் புலிகள் முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் சார்க் மாநாட்டை ஒட்டி 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு வார கால அளவுக்கு ஒருதலைப் பட்ச போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்தும் அதை நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தமாக மாற்ற வேண்டும் என்று கூறிய யோசனைகளை சர்வதேச சமூகம் கருத்தில் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் ரத்தக் களறியைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று கூறுவது ஏற்கத் தக்கது அல்ல என்றும் அவர் கூறினார். இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் புலிகள் சரணடைந்திருந்தால் கூட அதை தவிர்த்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார். இலங்கை அரச படைகள் வன்னியில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசியது, மருத்துவ மனைகளில் குண்டு வீசியது போன்ற நடவடிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன என்றார் அவர்.

http://www.bbc.co.uk...randenies.shtml

Edited by eelamlover

[size=5]சொல்ஹேம் கூற்றுக்கு ருத்ரகுமாரன் மறுப்பு[/size]

http://www.bbc.co.uk...randenies.shtml

முள்ளிவாய்க்கால் நேரம் B.B.C. யிடம் காசு கொடுத்து தனிப்பட்ட விளம்பரமாக போடு என்று உருத்திரகுமாரன் கேட்டிருந்தாலும் போட்டிருக்கது. காலம் மாறிவிட்டது.

மெல்ல மெல்ல பல விசையங்கள் வெளிவர இருக்கு.

புத்தகங்கள் விற்க இருப்போர். காற்றுள்ள போது கெதியில் தூற்றிகொண்டுவிட வேண்டும்.

நாள் சென்றால் நாறல் மீன் மாதிரி யாரும் வாங்க வரமாட்டர்கள்.

இன்று உலக போராட்ட சரித்திரத்தில் அளப்பரிய சாதனைகளை படைத்துவிட்டு,இதுதான் போராட்டம்,இதுதான் அரசியல்,இதுதான் கட்டுமானம் என்பதை உலகத்திற்கே நிறுவிக்காட்டிய ஓர் இனத்தின் விடுதலை அமைப்பாகிய தமிழீழ விடுதலைப்புலிகளை ......கேள்விகேட்கும் தேசியவாதிகளிடம் சுருக்கமான ஒரு சில கேள்விகள் ..........

கேள்வி 1 .....தமிழர்களுக்கு .போராட வேண்டிய தேவை ,கட்டாயம் இலங்கைத்தீவில் இருந்ததா??? அல்லது தமிழீழ விடுதலைப்புலிகள் தான் தங்கள சுய நலன்களிற்காக போராட முனைந்தார்களா ?????

கேள்வி 2 .... .சரி இந்தப்போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த காலத்தில் வெற்றிகளை குவித்துக்கொண்டிருந்த காலத்தில்

தமிழனை சுயமரியாதையுடனும்,அவனுக்குரிய அடையாளத்துடனும் வாழ வைத்த அந்தக்காலத்தில் நீங்கள் மட்டும் மௌனம் காத்ததேன் ...ஒரு வார்த்தை.அல்லது ஒரு எழுத்து கூறி ,அல்லது எழுதி

அந்த தவறுகளை சுட்டிக்காடியிருக்கலாம் அல்லவா ??.......இப்போ பந்தி பந்தியாய் எழுதுகிறீர்கள் ..??....சாதாரணமாய் இந்த

யாழ்களத்தின் திண்ணை விதியில்கூட இல்லாத ஒருவரை பற்றி பேசக்கூடாது என்று நாகரீகமான முறையில் விதி இருக்கும்போது ??

கேள்வி 3 .......தமிழீழ விடுதலைப்புலிகள் விட்டதாக பந்தி பந்தியாக நீங்கள் எழுதும் அரசியல் தவறு என்ன ???

கேள்வி 4 ......அவர்கள் விட்டதாக நீங்கள் புசத்தும் அந்த தவற்றை எப்படியான வழியில் நிவர்த்தி செய்து

தமிழர்களுக்கு அவர்கள் உரிமையுடனும்,சுயமரியாதையுடனும் வாழ வைப்பதற்கு உங்களிடம் உள்ள திட்டம் என்ன

கேள்வி 5 .....எங்களிற்காய் ,எனக்காய் ,தன்மைண்ணுக்காய் இன்பம்,சுகம் .சுற்றாடல்.சொந்தம் ,அனைத்தையும் இழந்து தன்னை அர்ப்பணித்த ஓர் போராளியை ,தளபதியை ,தலைவனை குற்றச்சாட்டுடன் பிழையான தோற்றத்தில் பரப்புரை செய்யும் நீங்கள் ......இதுவரை காலமும் இந்த இனத்திற்கு ,அதன் விடிவிற்கு என்னத்தை

செய்தீர்கள் .அல்லது செய்யப்போகிறீர்கள் .

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி என்னதான் அரிச்சந்திரன் மாதிரி உண்மை சொல்லி எதுவுமே நடக்கப்போறதில்லை......ஒரு படக்கதையை பத்துபதினைஞ்சு பேர் தங்கள் தங்கடை பாணியிலை ரீமிக்ஸ் பண்ணுற மாதிரி........எங்கடை ஆக்களின்ரை வேலையளும் அந்தமாதிரி நடக்குதெண்டு நல்லவடிவாய்தெரியுது. ஆனால் எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரேயொரு உண்மை எனக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனம் இல்லை தமிழ்சூரியன்

எமது நேரம் தான் கரையும்.

ருத்ரகுமார் அண்ணாக்கு நன்றிகள்.

தற்பொழுது இதைச்சொல்வதே பெரிய விடயம்.

இங்கே எழுதிய நிர்மலன் பல புனைகதைகளை எழுதி உள்ளார்.சம்பந்தப் பட்டவர்கள் உயிர்த்தெழுந்து வர மாட்டார்கள் என்னும் துணிவில்.ஆனால் பல உண்மைகள் எப்படியாவது வெளிவரும்.

முதலில் சொல்கையும் கஸ்ரோ பிரபாகரன் பாலசிங்கம் என்னும் தனி நபர்களுக்கு அப்பால் சர்வதேச நிலைமைகளை புவி சார் நலன் அரசியலின் அடிப்படையில் நாம் பார்த்தால் சில தெளிவுகள் பிறக்கும்.

முதலாவது , சிறிலங்கா சுதந்திரம் அடைந்த பொழுதில் இருந்தே தமிழர்களுக்குப் பிரச்சினைகள் இருந்த்தன , எந்த சர்வதேச நாடும் அப்போது சமாதானம் பேச வரவில்லை, ஏன் ?

தமிழர்கள் சாத்வீகமாகப் போராடினார்கள், எந்த சரவ்தேச நாடும் அவர்களுக்குச் சமாதானம் பேச வரவில்லை, ஏன்?

பின்னர் புலிகள் முதலாய இயக்கங்களுக்கு இந்திரா அம்மையார் ஆயுதம் வழங்கி போராடச் சொன்னார் ஏன்?

ஆனால் புலிகள் வெளியார் உதவி எதுவும் இன்றி தமது சுய பலத்தில் இராணுவச் சம நிலையை எட்டிய போது பலர் சமாதானம் பேச வந்தனர், ஏன்?

புலிகள் இந்த இராணுவச் சம நிலையை எட்டாது விட்டிருந்த்தால் சிறிலங்கா அரசு , இந்தப் பிரச்சினைக்குள் வெளியாரைத் தலைவிட விட்டிருக்குமோ? இந்த இராணுவச் சமனிலையை உருவாக்கியவர்கள் யார்? பாலசிங்கமா? கேபியா?

இவர்கள் யாரும் இல்லை, பிரபாகரன் தலமையிலான புலிகள்.அதில் தமிழ்ச்செல்வன் முதல் தீபன் வரை கஸ்ரோ அடங்கலான போராளிகள் தான். போராட்டம் எங்கே எப்படிச் செல்ல வேண்டும் என்பதை , போராடியவர்கள் தான் தீர்மானிக்க முடியும்.

மாலதி அகா எழுதிய புத்தகத்தில் எழுதிய விடயம் முக்கியமானது. சமாதான காலத்தில் வன்னிக்குச் சென்ற முதல் ராசதந்திரி சீனத் தூதுவர்.அவர் புலிகளுக்கு வன்னியில் பல முதலீட்டுத் திட்டங்களுக்கான ஆலோசனைகள் உதவிகளுடன் வந்திருந்தார் எனக் கூறி உள்ளார். ஆனால் புலிகள் இந்த உதவிகளைப் பெற்றால் இந்தியாவையும் , மேற்குலகையும் பகைக்க வேண்டி வரும் எனக் கருதி அந்த உதவிகளைப் பெற வில்லையென. புலிகளின் வீழ்ச்சிக்கான உண்மையான காரணம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது.

புவிசார் நலங்களின் அடிப்படையில் செயற்பட முயற்சித்த மேற்குலகை பிழையான மூலோபாயத்தின் வழி , தமது சொந்த வெறுப்புக்களுக்காக இந்திய ஆழும் கும்பல் பிழையாக வழி நாடாத்தியது .இன்று சிறிலாங்கா , இந்தியாவின் கட்டுப் பாட்டுக்குள் இல்லை.

சீனாவும் பாகிஸ்தானும் சிறிலங்காவில் காலூன்றி விட்டன. இந்தியாவால் வழி நடாத்தப்பட்ட மேற்குலகின் , புலிகளை அழிப்பதற்கான செயற்பாடு, அவர்களையே இலங்கையில் இருந்தும் வெளியேற்றி விட்டது.

இதனாலையே இவர்கள் இப்போது சர்வதேச விசாரணை பற்றிப் பேசுகிறார்கள். ரணிலைக் கொண்டு வர முயற்ச்சித்தார்கள்.சரத் பொன்சாகவைப் பயன் படுத்திப் பார்த்தார்கள், எதுவும் சரி வரவில்லை.

மேற்குலகமும் இந்தியாவும் இதனை இலங்கையில் மட்டும் செய்யவில்லை, நேபாளத்திலும் செய்திருக்கிறார்கள்.அங்கே மவோ இயக்கத் தலைவரை விலைக்கு வாங்கினார்கள்.ஈழத்தில் இதனை இவர்களால் செய்ய முடியாமல் போனது.அதற்கு எமக்கு தம்மையே அழித்துக் கொள்ளவும் தயங்காத தலமை இருந்த்தௌ.புலிகளைச் சரணடையச் சொல்லிய இவர்களின் நாடகம் , இராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட தமிழரின் விடுதலைப் போரை அரசியல் ரீதியாக அழிக்கும் தந்திரத்தின் ஒரு பகுதி.அதனை இவர்களால் நிறைவேற்ற முடியாமல் போனதன் வெளிப்பாடே இந்தப் புலம்பல்கள்.

நியானி: தனிநபர்கள் மீதான நாகரிகமற்ற சொல்லாடல்கள்/குற்றச்சாட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளது. கருத்துக்களுக்கு ஆக்கபூர்வமான பதில் கருத்துக்கள் வைத்து திரியைத் தொடருங்கள்

Edited by நியானி

பொயட் அவரின் கருத்துக்களால் அதிர்ச்சி போதாதென்று தான் வன்னியில் வைத்த விமர்சனங்களை குறிப்பிட்டால் நாம் அதிர்ச்சி அடைந்துவிடுவோம் என்றும் திரு பொயட் குறிப்பிட்டுள்ளார் .........பரவாயில்லை இவர் இப்படிக்கூறும்போது நான் இப்படி கேட்பது தவறில்லை என்று நிர்வாகத்திற்கு சுட்டி காட்டிக்கொண்டு அவரிடம் சில கேள்விகள்

எந்தமாதிரியான விமர்சனக்களை வைத்தீர்கள் ,யாருக்கு எதிராக வைத்தீர்கள் .அல்லது எந்த கருத்துக்கு எதிராக வைத்தீர்கள் .........உங்களுக்கு தரப்பட்ட பதில் என்ன ..........கூறமுடியுமா ஐயா .......நிரூபிக்க ஆதாரம் எதுவும் தேவையில்லை அதெல்லாம் அழிந்துவிட்டது .......வாயால் சொன்னால்கூட நாம் நம்புவோம்.....

//எனனைக் கைது செய்ய கஸ்ரோ காவல்துறையை முடுக்கி நான் காவல்துறையோடு மோதிய காலத்தில் கஸ்ரோவை சந்தித்து சமரசமாகும்படி என்னிடம் கேட்க்கப் பட்டது. நான் நந்தவனம் சென்றேன் ஐந்து நிமிடம் பொறுங்கள் என்றார்கள். நான் யாரையும் காத்திருந்து பார்ப்பதில்லையென்றுவிட்டு வெளியேறிவிட்டேன்.//

http://www.yarl.com/forum3/index.php?showtopic=94336&st=40

நியனி என்னும் புதியவருக்கு இங்கு செயபாலன் முன்னர் யாழ்.கொம்மில் எழுதியது தெரியவில்லை.இங்கே பல தனி நபர்கள் மீது, அதுவும் தமது உயிரைக் கொடுத்துப் போராடியவர்கள் பற்றி எழுதப்பட்டது. அதற்குப் பதிலாக இங்கே கருத்து எழுதிய செயபாலன் முன்னர் எழுதிய கருத்தையே நான் சுட்டிக் காட்ட்னினேன்.

மேலும் செயபாலனே அன்று தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு பதிரிகைக்கு தான் நோர்வேயின் சமாதான செயற்பாட்டிற்கான அமைச்சகத்துடன் வேலை செய்வதாகப் பேட்டி வழங்கி இருந்தார்.அந்த இணைப்பையும் தேடிக் கொண்டு இருக்கிறேன்.

பொயட் நான் எழுதபவை மீது தனது கேள்விகளை எப்போதும் கேட்கமுடியும். கேட்கும் போது மட்டுகள் வெட்டாதபடி கேள்வியை கேட்கட்டும். நான் எழுதுபவை 99 % எனக்கு முன்னால் எழுதியிருப்பவையை வைத்தே. எப்போதுமே நான் எழுதியவை மீது யாராவது கேள்விகள் வைத்தால் பதில் கொடுக்க வேண்டும் என்பது என் கடமை உணர்வு.

இங்கே என்னால் எழுதப்பட்டவை எல்லாம் பிரதானமாக பொயட் எழுதியவைக்கே. எனவே பொயட் என்னிடம் கேட்க முயன்ற கேள்விகளுக்கு அவர் மேலே எழுதியவையிடமே பதிலும் இருக்கு. ஆனால் மட்டுகள் பொயட்டின் கேள்வியை நீக்கினால் அதன் பின் களவிதிகளின் படி நான் எனது பதிலை போடுவது சரியாகமாட்டாது. போட்டாலும் அவர்கள் விட்டும் வைக்க போவதுமில்லை. மட்டுகள் பொயட்டின் கேள்விகளை நீக்கியது அவர்களின் முடிவு.

இதன் மேல் மட்டுகள் நீக்கிய கேள்வியை பற்றி நான் எழுத விரும்பவில்லை.

ஆனால் பொதுவில் சில.

என்னையும்தான் சுடபோறாங்கள் என்று நினத்துதான் நான் 84ல்லிருந்து போகவில்லை. இதில் என்ன தியாகம்?

இவ்வளவு பொறுமை இல்லாதவர்கள் எப்படி கொலை நடக்கூடிய இடங்களினூடாக சென்று வந்தார்கள் என்பது நம்ப முடியவில்லை. அந்த இடங்களில் cool மிகவும் அவசியமான இயல்பு இல்லையா?

உறவுகளே , நடந்தது ஒரு தந்திர யுத்தம் , இது வெளிநாடுகளுக்காக நடத்தப்பட்ட மிகவும் தந்திரமான யுத்தம் . நிலங்களை மீட்ட பின்பு தமிழீழத்துக்கான அங்கீகாரம் வேண்டி இந்த மேற்கு நாடுகளில் காலில் தான் போய் விழவேண்டிய யதார்த்தம் இருந்தபோது . இரண்டு தெரிவுகள் இருந்தன :

1 . நிலத்தை மீட்ட பின்பு அங்கீகாரத்துக்கு போவது .

2 . அங்கீகாரம் கிடைத்த பின்பு நிலத்தை மீட்பது .

இதில் முதலாவது நடக்கப் போவதில்லை என்பது பேச்சுவார்த்தை களத்தில் நன்கு புரிந்தது. பல வேற்று நாட்டு விடுதலை போராட்டங்கள் இந்த வழியில் சென்று இன்றுவரை அங்கீகாரம் பெறமுடியாமல் இருக்கிறார்கள்.

எனவே இரண்டாவது தெரிவு செய்யப்பட்டது . எனவே குழப்பம் வேண்டாம் , தமிழீழத்தை ஐ. நா அங்கீகரிப்பதற்கான செயற்பாடுகளை விரைவு படுத்துங்கள் , அந்த அங்கீகாரம் கிடைக்கும் போது நிலமும் மிகக் குறைந்த இழப்புகளுடன் மீட்கப்படும் . அதுவரை வெளிநாட்டவர்கள் எழுதுவதையும் சொல்லுவதையும் பார்த்தும் கேட்டும் குழம்ப வேண்டாம் . மீண்டும் சொல்ல்கிறேன் , நடந்தது மிகவும் தந்திரமான யுத்தம் , குழப்பம் வேண்டாம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.