Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்னும் ஈரமாய் இதயத்தில்....!

Featured Replies

இன்னும் ஈரமாய் இதயத்தில்....!

untitled4gx.jpg

பூவரசம் இலையில் பீப்பி ஊதி..

லக்ஸ்பிறே பேணியில் மேளம் கொட்டி..

வாழைநாரில் தாலி கட்டி..

மண்சோறில் விருந்துவைத்து...

ஆடிக்களித்த நாட்கள் அச்சச்சோ அழகே அழகு...!

தேனீர் குவளையில் ஒலிபெருக்கி செய்து...

பப்பாசி குழலில் ஒலிவாங்கி கட்டி...

ஊர்முழுக்க கேட்குமென்று நினைத்து...

உரத்து உரத்து பாடினது நினைச்சாலே..

இனிக்குது நெஞ்சை விட்டு போக மறுக்குது...!

மாங்காய் சம்பல் போட்டதும்..

நெல்லிக்காய் பொறுக்கி தின்றதும்..

பொன்வண்டு பிடித்து

தீ பெட்டியில் அடைத்து...

குஞ்சு பொரித்திட்டுதா என்றே...

நிமிடத்துக்கு ஒருதரம் பார்த்து பார்த்து...

இருந்த காலம் கொல்லுதே மனசை கொல்லுதே..!

தீ பெட்டியில் தொலைபேசி பேசி மகிழ்ந்து...

தென்னம் மட்டையில் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்து...

புளியம்விதையில் தாயம் விளையாடியதெல்லாம்...

மனசை விட்டு போக மறுக்குதே..

மறுபடியும் அந்நாளுக்காய் மனசு ஏங்குதே...!

எறிந்த கல்லு திரும்பி வருவதில்லை..

சென்றவயது சென்றதுதான்-இருந்தும்

அந்த மழலைகால நினைவில்...

மனது மயங்கிபோவதை யார் தடுப்பார்...?!

:P :P :P நல்லாக நினைவு படுத்தி இருக்கிறியள் அக்கா. உங்கள் கவிதை மூலம் மழலைக்கால நினைவுகளை மீட்டி பார்க்க வைத்தமைக்கு நன்றிகள் பல :P

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாத் தான் இருக்குது அக்கா!!

ஆனால் குழந்தைத் திருமணம் என்று சொல்லி உள்ள தூக்கி யாரைப் போடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்!! :wink: :P

  • தொடங்கியவர்

:P :P :P நல்லாக நினைவு படுத்தி இருக்கிறியள் அக்கா. உங்கள் கவிதை மூலம் மழலைக்கால நினைவுகளை மீட்டி பார்க்க வைத்தமைக்கு நன்றிகள் பல :P

நன்றி வெண்ணிலா அப்ப நீங்களும் நம்மை போல ஊரை இரண்டு பண்ணி இருக்கிறியள் ஹீ ஹீ... :P :wink: :lol:

  • தொடங்கியவர்

கவிதை நல்லாத் தான் இருக்குது அக்கா!!

ஆனால் குழந்தைத் திருமணம் என்று சொல்லி உள்ள தூக்கி யாரைப் போடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்!! :wink: :P

ஆஹா :shock:

எந்த நேரமும் எண்ட தம்பிக்கு ஜெயிலை பற்றி கதைக்காட்டி நித்திரை வராது. ஏன் என்றால் அவர் சின்னில கள்ளன் பொலிஸ் தான் விளையாடுறவர்... ஹீ ஹீ.. :P மிச்சம் நான் சொல்லத்தேவை இல்லை என்று நினைக்குறன். :wink:

உங்கள் கருத்துக்கு நன்றி :P

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். அதிலே பொலிஸாக நான் தான் வாறனான். கள்ளன் ஆர் என்று உங்களுக்கு இப்ப விளங்கும் தானே!! :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிகளா உவடத்து சின்னனுகளுக்கெல்லாம் பொன்வண்டை சிறைவைக்கிறதே வேலை..?? எங்கையோ போட்டியள் ரசிகை..

எறிந்த கல்லு திரும்பி வருவதில்லை..

அது சரி எங்கை எறிஞ்சியள் கல்லை.. வானத்தை நோக்கி எறிஞ்சிருந்தா.. திரும்பி வந்திருக்கும்.. எனக்காக ஒருக்கா அண்ணாந்து கல்லை எறிஞ்சுபோட்டு ஆவெண்டு அதையே பாத்திட்டிருங்கோ.. திரும்பி வாறது மட்டுமில்லை.. இதமாய் ஒன்று தரும்.. என்ர சார்பா வாங்கி வைச்சிருங்கோ ... சரியோ.. :lol:

  • தொடங்கியவர்

ஆமாம். அதிலே பொலிஸாக நான் தான் வாறனான். கள்ளன் ஆர் என்று உங்களுக்கு இப்ப விளங்கும் தானே!! :wink: :P

யார் கள்ளன் யார் பொலிஸ் எண்டு சொல்லத்தேவை இல்லை பார்க்கிறவைக்கு விழங்கும். ஒரு பொய்யை திருப்ப திருப்ப சொன்னால் அது மெய்யாகாது :wink:

  • தொடங்கியவர்

அடப்பாவிகளா உவடத்து சின்னனுகளுக்கெல்லாம் பொன்வண்டை சிறைவைக்கிறதே வேலை..?? எங்கையோ போட்டியள் ரசிகை.

ம்ம்ம் சின்னப்பிள்ளைல அதுதானே வேலை. ஏன் நீங்கள் பிடிக்க இல்லையோ :wink:

அது சரி எங்கை எறிஞ்சியள் கல்லை.. வானத்தை நோக்கி எறிஞ்சிருந்தா.. திரும்பி வந்திருக்கும்.. எனக்காக ஒருக்கா அண்ணாந்து கல்லை எறிஞ்சுபோட்டு ஆவெண்டு அதையே பாத்திட்டிருங்கோ.. திரும்பி வாறது மட்டுமில்லை.. இதமாய் ஒன்று தரும்.. என்ர சார்பா வாங்கி வைச்சிருங்கோ ... சரியோ.. :lol:

:shock: ஏனுங்கோ உங்களுக்கு இப்படி ஒரு ஆசை நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்க இல்லையா? :cry:

சிறப்பான கவிதை தொடருங்கள், தொலைந்து போன அந்த நாட்களைக் கலைந்து போகாமல் கவிதையாய் படைத்துள்ளீர்கள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளமைக்கால நினைவுகளை இனிய கவிதையாக வடித்துத்தந்த இரசிகக்கு எனது பாராட்டுக்கள்.

கவிதையைப் படித்துவிட்டு இங்கே செல்லமாக சொல்லுச்சண்டை செய்யும் வயதான மழலைகளையும் மறப்பதற்கில்லை.

ஆஹா ..அருமையான கவிதை.. திரும்பவும் மழலைப் பருவத்திற்கு போன மாதிரி ஒரு உணர்வு தங்களின் கவிதை படிக்கும் போது.... வாழ்த்துக்கள்

நீண்டநாட்களின் பிறகு - கவிதைபகுதியில்

ரசிகையின் ஆட்சியா?

நல்லாயிருக்கு கவிதை!

கெளரி -பாலன் சொன்னது போல

திரும்பவும் மழலைப் பருவத்திற்கு போன மாதிரி ஒரு உணர்வு - தொடருங்கள்! 8)

ஆகா ரசிகை பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகின்றது. ஆமா அந்த பொன்வண்டு பிடிப்பது ஆண்களின் வேலை எல்லோ?

குருப்பட்டியில் தேர் செய்து வீட்டில் உள்ள பூக்களை எல்லாம் மாலையாக கட்டி இழுத்து கொண்டு திரிந்ததும் ஞாபகம் வருகுது.

வாழ்த்துக்கள் ரசிகை.

  • கருத்துக்கள உறவுகள்

மாங்காய் சம்பல் போட்டதும்..

நெல்லிக்காய் பொறுக்கி தின்றதும்..

பொன்வண்டு பிடித்து

தீ பெட்டியில் அடைத்து...

குஞ்சு பொரித்திட்டுதா என்றே...

நிமிடத்துக்கு ஒருதரம் பார்த்து பார்த்து...

இருந்த காலம் கொல்லுதே மனசை கொல்லுதே..!

இரசிகை உங்களுக்கு ஏற்றபெயர்தான்.

சிறுவயதில் மனதில் ஆழப்பதிந்தவையை

திரும்ப மீட்டு இரசிப்பதில் தனிசுகமே.

கம்பளிப்புூச்சியை (வெல்வெற் புூச்சி) எப்படி மறந்தீர்கள்?

மொத்தத்தில் இரசிகை எம்மையும் கடந்த காலங்களில்

இழுத்துச் சென்று நிற்பாட்டி இருக்கிறீர்கள்.

நன்றாய் இரசித்தோம்.

அது சரி எங்கை எறிஞ்சியள் கல்லை.. வானத்தை நோக்கி எறிஞ்சிருந்தா.. திரும்பி வந்திருக்கும்.. எனக்காக ஒருக்கா அண்ணாந்து கல்லை எறிஞ்சுபோட்டு ஆவெண்டு அதையே பாத்திட்டிருங்கோ.. திரும்பி வாறது மட்டுமில்லை.. இதமாய் ஒன்று தரும்.. என்ர சார்பா வாங்கி வைச்சிருங்கோ ... சரியோ.. :lol:

அக்கா என்னக்கா வந்ததும் ரசிகை அக்காவுக்கு இப்படி ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறீங்க. பாவம் அவா

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்......

  • தொடங்கியவர்

ஆகா ரசிகை பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகின்றது. ஆமா அந்த பொன்வண்டு பிடிப்பது ஆண்களின் வேலை எல்லோ?  

குருப்பட்டியில் தேர் செய்து வீட்டில் உள்ள பூக்களை எல்லாம் மாலையாக கட்டி இழுத்து கொண்டு திரிந்ததும் ஞாபகம் வருகுது.  

வாழ்த்துக்கள் ரசிகை.

ம்ம் என்ன செய்ய பக்கத்துல எல்லாம் பசங்கள் அவங்களோடை சேர்ந்து நானும் பொன்வண்டு பிடிச்சதுதான் அப்புறம் கிரிக்கட் எல்லாம் விளையாடினம். ஓம் குருபெட்டில தேர் அது எல்லாம் செய்ததுதான்.பழைய ஞாபகங்களை பற்றி எழுதிக்கொண்டே போகலாம். :P

  • தொடங்கியவர்

அப்புறம் வாழ்த்து சொன்ன புத்தர், வர்ணன், புயல், செல்வமுத்து, வல்லவை கௌரிபாலன் அனைவருக்கும் நன்றிகள்.

நன்றாக உள்ளது உங்கள் கவிதை வாழ்த்துக்கள் இரசிகை

ஆ ரசியக்கா எல்லாத்தையும் ஞாபகப் படுத்தீட்டிங்களே.எனக்கும் உதெல்லாம் எழுதோணும் போல இருக்கு.

எறிந்த கல்லு திரும்பி வருவதில்லை..  

சென்றவயது சென்றதுதான்-இருந்தும்  

அந்த மழலைகால நினைவில்...  

மனது மயங்கிபோவதை யார் தடுப்பார்...?!

ம்ம் ... சூப்பர்... எல்லாருக்கும் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியிருக்குறீர்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா என்னக்கா வந்ததும் ரசிகை அக்காவுக்கு இப்படி ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறீங்க. பாவம் அவா

எல்லாம் ஒரு அன்பு தான்.. :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

பழைய யாபகங்களினை மீண்டுத்தந்த ரசிகையின் கவிதைக்கு வாழ்த்துக்கள்

»¡À¸õ ÅÕ§¾...! »¡À¸õ ÅÕ§¾....!

´ý¨ÈÔõ ÁÈì¸ ÓÊÂÅ¢ø¨Ä§Â..!

¿ýȡ¢ÕìÌ ¸Å¢¨¾.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.