Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எந்தன்குரல் கேட்கிறதா?

Featured Replies

எந்தன்குரல் கேட்கிறதா?

அவனியிலே வித்தகனாய்

அறிவுடனே நான்வாழ

அனுதினமும் கனவுகண்ட

அன்பான அம்மாக்கு

என்னருகே இருக்கையிலே

உன்னருமை தெரியவில்லை

அருமையினை உணர்கையிலே

அருகினிலே நீயில்லை

மெழுகுவாத்தியாய் உருகி

வெளிச்சத்தைத் தந்தவளே

வெளிச்சத்தின் அருமையினை

இருட்டில்தான் உணர்கின்றேன்

உன்பேனா பிரசவித்த

உரைகளைநான் மேடையேற்றி

பேச்சாளன் ஆகியதை

பெருமையுடன் நினைக்கின்றேன்

பரீட்சைக்கு முதல்நாளும்

படுக்கையிலே விழுந்திடுவேன்

என்னருகே வந்திருந்து

எனக்காக நீபடித்தாய்

என்பாடம் தனைப்படித்து

எனைஉயர்த்த முயன்றவளே

உன்பாசம்தனை எந்த

உலகத்தில் காண்பேனோ

சிந்தையிலே எந்நாளும்

எந்தனையே தாங்கியதால்

உந்தனுக்கு எப்போதும்

நிம்மதியே இருந்ததில்லை

உனக்காக எதையும்நீ

என்னிடத்தில் கேட்டதில்லை

எனக்காக எதையும்நீ

செய்யாமல் விட்டதில்லை

சேவைசெய்தோம் என்கின்ற

செருக்கொடு இருப்போரே

சேயெனக்குத் தாய்செய்த

செயலுக்கு இணைவருமோ

கடைமையினைச் செய்துவிட்ட

களிப்போடு சென்றுவிட்டாய்

கைம்மாறு செய்யாமல்

கலங்குகின்றேன் தனியாக

வியர்வையினை நீராக்கி

விளைவித்த பயிரெங்கள்

விளைச்சலினைக் காணாமல்

விட்டுவிட்டுப் போனாயே

கடனாளி இல்லாமல்

கடைசிவரை வாழுமெந்தன்

கனவினைநீ கலைத்துவிட்டு

கண்மூடிப் போனாயே

உன்னிடத்தில் பட்டகடன்

அடைப்பதற்கு வழியின்றி

அரைவழியில் விட்டுவிட்டு

அவ்வுலகம் போனாடீய

அடுத்துஒரு பிறப்பிருந்தால்

அம்மாஉன் பிள்ளையாகப்

பிறக்கின்ற வரமெனக்குப்

பிச்சையாகவும் வேண்டாம்

மாறாக நீயெனக்கு

மகனாக வரவேண்டும்

நான்செய்த தவறெல்லாம்

நீசெய்ய அழவேண்டும்

எமனுன்னைப் பிரித்தெடுத்து

எங்கேதான் வைத்தாலும்

என்மீது ஒருகண்ணை

எப்போதும் வைத்திருப்பாய்

உதிரத்தை எரித்துநீயும்

உழைத்திட்ட உழைப்பெந்தன்

உள்ளத்தில் இருக்கும்வரை

உன்நினைவோ டிருந்திடுவேன்

விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

மணிவாசகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணிவாசகப் பொருமானே!

அருமை அருமை தங்கள் கவிதை மிகமிக அருமை

வாழ்த்துக்கள்!

மணிவாசகன்

அம்மவை நினைத்து உருகி வடித்த கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

அம்மாவை நினைந்து எழுந்த கவிதை அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் மணிவாசகன். எதுகை மோனை எல்லாம் நல்லா இருக்கு. நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா!...

அன்புக்குச் சொர்க்கம்.

அம்மா!....

பண்பெல்லாம் அவள் பக்கம்.

அம்மா!.....

அகிலத்தை அடக்கும் தாய்மை.

அம்மா!....

வார்த்தைக்குள் அடங்காப் பாசத்தீ

எண்ணக் கோலங்கள்

கொழுந்து விட்டால் - உள்ளத்துள்.....

அண்டத்தைக் கடந்து

அம்மா கடவுளாவாள்.

அன்னையைப்பற்றி எழுதுவதற்கு

வாழ்நாள் பத்தாது....

வாழ்த்துக்களோடு வல்வை சகாறா.

அடுத்துஒரு பிறப்பிருந்தால்

அம்மாஉன் பிள்ளையாகப்

பிறக்கின்ற வரமெனக்குப்

பிச்சையாகவும் வேண்டாம்

மாறாக நீயெனக்கு

மகனாக வரவேண்டும்

நான்செய்த தவறெல்லாம்

நீசெய்ய அழவேண்டும்

அழகான வரிகள். வாழ்த்துக்கள்.

«Õ¨ÁÂ¡É ¸Å¢¨¾.......

¦ÁØÌÅ÷ò¾¢Â¢ø ´Õ Ìü¨È ¾ÅÈ Å¢ðΠŢðË÷¸û..

அம்மாவுக்கு சாவு இல்லை இன்றும் தங்கள் நெஞ்சத்திலும் ....நினைவுகளிலும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றா...? வாழ்த்துக்கள் மணிவாசகன்

மணிவாசகனின் கவிதைகள் திருவாசகம் போலிருக்கிறது. அதிலும் அம்மாவைப் பற்றிய கவிதை சுூப்பர்.

தொடர்ந்து எழுதுங்கள்

காவியா

  • தொடங்கியவர்

அன்பான சகோதரர்களே,

என்னுடைய மேற்படி கவிதைக்கும் அதுபோல மற்றைய படைப்புகளுக்கும் கருத்துச் சொல்லும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி உடையவனாயிருக்கிறேன்.

வாழ்த்துக்கள் என்று சொல்லி குறுகலாய் முடிக்காமல் குறைகளைச் சுட்டினால் என் எழுத்துக்களை மெருகூட்ட உதவியாய் இருக்கும் .

எனக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைக்கும் போது (அடேயப்பா!) உங்கள் எல்லாருக்கும் கொத்து றொட்டி (கஞ்சத்தனத்தின் உச்சம்) வாங்கித் தாறன்.

மணிவாசகன்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை சுப்பர் இது எத்தனையாவது திருமுறை............

எனக்கொரு மரக்கறி கொத்து.............

உனக்காக எதையும் நீ

என்னிடத்தில் கேட்டதில்லை

எனக்காக எதையும் நீ

செய்யாமல் விட்டதில்லை

அழகாக அம்மாவை பற்றி ஒரு கவி எழுதியிருக்கிறீர்கள் மணிவாசகன்.... வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்...! :P

¿¡Ûõ Áîºõ º¡ôÀ¢Îž¢ø¨¨Ä........

±ÉìÌõ ´Õ ÁÃì¸È¢ì¦¸¡òÐ.... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்டேன், உங்கள் கவி கேட்டேன்

கவலையின்றி எம்மை வழி நடாத்திய

மட்டு மட்டில்லா எம் தெய்வம்

ம்மா, அம்மாவின் கவி கேட்டேன்.

  • தொடங்கியவர்

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி

அன்புடன்

மணிவாசகன்

வாழ்த்துக்கள் தொடருங்கள்

மணிவாசகன்,

கவிதையிலே இருக்கின்ற எழுத்துப் பிழைகளைத் திருத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அருமையான கவிதை மணிவாசகன்.

கடைமையினைச் செய்துவிட்ட

களிப்போடு சென்றுவிட்டாய்

கைம்மாறு செய்யாமல்

கலங்குகின்றேன் தனியாக

அம்மா கைம்மாறு எதிர்பார்ப்பாரா?

நான்செய்த தவறெல்லாம்

நீசெய்ய அழவேண்டும்

இந்த வரிக்கு என்ன அர்த்தம் மணிவாசகன்? கவிதை கவிதையாக் கொட்டுறீங்கள் :-) நல்லாயிருக்கு கவிகளனைத்தும்.

  • தொடங்கியவர்

நன்றி சினேகிதி.

இப்பிறப்பில் நான் தவறு செய்து உங்களை அழவைத்துவிட்டேன்.

அடுத்த பிறப்பில் நீங்கள் என் மகனாகப் பிறக்க வேண்டும். அப்பொழுது இப்பிறப்புக் கடனை அடைக்க வேண்டும் என்ற பொருளில் எடுத்துக் கொள்வீர்கள் தானே.

மீண்டும் நன்றிகள்

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

வாழ்த்துச் சொன்ன விமர்சித்த வாசித்த அனைத்து சகோதரருக்கும் நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

மணிவாசகன்

கவிதை நல்ல கவிதை ....

அவரவர் செய்யும் நலன் அவரவர் வாங்கி வந்த வரம்

ப்ரியத்துடன் -எல்லாள மஹாராஜா-

  • 1 month later...

கடனாளி இல்லாமல்

கடைசிவரை வாழுமெந்தன்

கனவினைநீ கலைத்துவிட்டு

கண்மூடிப் போனாயே

மணி அண்ணா,

இந்தக் கவிதையை வாசித்ததும் எனக்கு என் அம்மாவின் ஞாபகம் வந்து அழுதே விட்டேன். யாழ் களத்தில் உங்கள் கவிதைகளையும் நான் விரும்பி வாசிப்பேன்.

மணிவாசகன் அண்ணா,

உணர்ச்சிகளைக் கொட்டி எழுதியிருக்கிறீங்க பாராட்டுக்கள் :lol:

  • தொடங்கியவர்

வணக்கம் அபி,

உங்கள் கருத்துக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.