Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைகளாலும் புணரப்படுபவள்........... !!

Featured Replies

[size=5]விழியோரங்களில் மலரும்

துளிப்பூக்களின் வாசங்களை

நுகர்ந்துமகிழ்ந்த யந்தொன்றின்,

தேடிக்களைத்த கேவலச்சிறகுகளை,

மொய்த்துரீங்காரமிட்ட நோக்கல்களை,

கணநேர ஈனப்பிதற்றல்களை,

பொய்நாக்குகளின் வீணிகளை,

விலக்கி சீராக்கமுடிகிறது

படுக்கையொன்றை இலகுவாக அவளால்.

இது

திணிக்கப்பட்டதா என்றாலும்

தவிர்க்கமுடியாதா என்றாலும்

தெரியாதென்பதே பதிலாகுகிறது.

வகையறியும் பார்வைகளை

தகையுரியும் நாவுரைகளை

முகைகருக்கும் வசவுகளை

பகைபெருக்குமோர் பல்லவிகளை

நகைத்தேவிலக்கி யுள்யெரிதலவள் வழக்காயிற்று.

தினவெடுத்த மிருகங்களின்

நாவுகளில் படிந்திருக்கும்

அழுக்குவேர்களின் அடிநுனியறிந்தவள்,

தினப்பொழுதுகளின் பின்னான ஒதுங்குதலில்

இழிந்த கௌரவவிம்பம் உடைத்தவள்

இவள்

உதடுகளில் வலைபின்னிய சிலந்தியின்

உயிரிருப்பினால் உயிரோடிருக்கிறது

உயிரோடிருகிறது சில மனிதர்களின் சந்ததி

நாளையிவளின்,

வரலாறொன்றின் கடைசி எழுத்துக்களின்

வடிவமும் சிதைக்கப்பட்டிருக்கலாம்,

எழுதுபவரின் ஆத்மதிருப்தியின் பொருட்டு[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தினவெடுத்த மிருகங்களின்[/size]

[size=5]நாவுகளில் படிந்திருக்கும்[/size]

[size=5]அழுக்குவேர்களின் அடிநுனியறிந்தவள்,[/size]

[size=5]தினப்பொழுதுகளின் பின்னான ஒதுங்குதலில்[/size]

[size=5]இழிந்த கௌரவவிம்பம் உடைத்தவள்[/size]

[size=5]இவள்[/size]

[size=5]உதடுகளில் வலைபின்னிய சிலந்தியின்[/size]

[size=5]உயிரிருப்பினால் உயிரோடிருக்கிறது[/size]

[size=5]உயிரோடிருகிறது சில மனிதர்களின் சந்ததி[/size]

[size=5]வெறும் வார்த்தைகளல்ல, இவை![/size]

[size=5]வாழ்வியலைக் கீறிக் கிழிக்கும், கூரம்புகள்![/size]

[size=5]நாளையிவளின்,

வரலாறொன்றின் கடைசி எழுத்துக்களின்

வடிவமும் சிதைக்கப்பட்டிருக்கலாம்,

எழுதுபவரின் ஆத்மதிருப்தியின் பொருட்டு[/size]

மரபும் நவீன வடிவமும் இணைந்த மிகச் சிறந்த படைப்பு

"இவள்

உதடுகளில் வலைபின்னிய சிலந்தியின்

உயிரிருப்பினால் உயிரோடிருக்கிறது

உயிரோடிருகிறது சில மனிதர்களின் சந்ததி"

என்ற பந்தியில் "உயிரோடிருக்கிறது" என்கின்ற சொல் ஏன் இரண்டு தடவைகள் வருகின்றன என்பது எனக்குப் புரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்ல என்றே தெரியவில்லை,வெட்கித்துப் போகிறேன்.

[size=5]இது

திணிக்கப்பட்டதா என்றாலும்

தவிர்க்கமுடியாதா என்றாலும்

தெரியாதென்பதே பதிலாகுகிறது.[/size]

[size=5].........[/size]

  • தொடங்கியவர்

[size=4]

மரபும் நவீன வடிவமும் இணைந்த மிகச் சிறந்த படைப்பு

"இவள்

உதடுகளில் வலைபின்னிய சிலந்தியின்

உயிரிருப்பினால் உயிரோடிருக்கிறது

உயிரோடிருகிறது சில மனிதர்களின் சந்ததி"

என்ற பந்தியில் "உயிரோடிருக்கிறது" என்கின்ற சொல் ஏன் இரண்டு தடவைகள் வருகின்றன என்பது எனக்குப் புரியவில்லை.

[/size]

[size=4]மிகவும் நன்றி திரு சபேசன் அண்ணா, நானும் இப்பதான் கவனித்தேன் [/size]

[size=1][size=4] ம்ம்ம்ம் இரண்டுதடவைகள். எழுதிய வேகத்தில் கவனிக்கவில்லை.மன்னியுங்கள் இனிமேல் இப்படியான தவறுகள் இடம்பெறாமல் கவனத்துடன் எழுதுவேன்.[/size][/size]

[size=1][size=4]நன்றி அண்ணா.தொடர்ந்தும் விமர்சியுங்கள்.[/size][/size]

[size=5]வெறும் வார்த்தைகளல்ல, இவை![/size]

[size=5]வாழ்வியலைக் கீறிக் கிழிக்கும், கூரம்புகள்![/size]

[size=4]நன்றி திரு .புன்கையூரான்.

உங்களின் கருத்திடலும் ஊக்குவித்தலும் என்னை இன்னும் எழுத தூண்டுகிறது [/size]

[size=5]நாளையிவளின்,

வரலாறொன்றின் கடைசி எழுத்துக்களின்

வடிவமும் சிதைக்கப்பட்டிருக்கலாம்,

எழுதுபவரின் ஆத்மதிருப்தியின் பொருட்டு[/size]

[size=4]நன்றி கோமகன். [/size][size=1]

[size=4]வரலாறுகளை சிதைப்பது இன்று வழமையாகிதான் விட்டதே [/size][/size]

என்ன சொல்ல என்றே தெரியவில்லை,வெட்கித்துப் போகிறேன்.

[size=5]இது

திணிக்கப்பட்டதா என்றாலும்

தவிர்க்கமுடியாதா என்றாலும்

தெரியாதென்பதே பதிலாகுகிறது.[/size]

[size=5].........[/size]

[size=4]நன்றி ஜீவா ,[/size][size=1]

[size=4]நாங்களும் இந்த சமூதாயத்தின் விலங்குகளின் சங்கிலியாக தானே இருக்கிறோம் [/size][/size]

நல்லதொரு கவிதை... கனதியான சொற்களின் மூலம் படைத்துள்ளீர்கள்.

தினவெடுத்த மிருகங்களின்

நாவுகளில் படிந்திருக்கும்

அழுக்குவேர்களின் அடிநுனியறிந்தவள்,

தினப்பொழுதுகளின் பின்னான ஒதுங்குதலில்

இழிந்த கௌரவவிம்பம் உடைத்தவள்

கெளரவ விம்பங்கள் எல்லாம் அந்தி சாய்ந்த ஒரு காலத்தில் உடைபட்டு அதன் பின்னாலான முகம் இழிவாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அந்த முகம் உண்மையானதாக இருக்கும்.

இவள்

உதடுகளில் வலைபின்னிய சிலந்தியின்

உயிரிருப்பினால் உயிரோடிருக்கிறது

சில மனிதர்களின் சந்ததி

மிகவும் அருமையான வரிகள்...இந்த சில வரிகளுக்குள் பல நாவல்களும் கட்டுரைகளும் பொதிந்து இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தைகள் வரவில்லை :(

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை, நன்றி பகிர்வுக்கு

  • தொடங்கியவர்

நல்லதொரு கவிதை... கனதியான சொற்களின் மூலம் படைத்துள்ளீர்கள்.

கெளரவ விம்பங்கள் எல்லாம் அந்தி சாய்ந்த ஒரு காலத்தில் உடைபட்டு அதன் பின்னாலான முகம் இழிவாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அந்த முகம் உண்மையானதாக இருக்கும்.

மிகவும் அருமையான வரிகள்...இந்த சில வரிகளுக்குள் பல நாவல்களும் கட்டுரைகளும் பொதிந்து இருக்கின்றன.

[size=4]நன்றி நிழலி,[/size][size=1]

[size=4]மிக அதிகமான சொல்களால் பாராட்டி இருக்கிறிங்க. இதற்கு நான் தகுதி உடையவனா என்ற சந்தேகம் வருகிறது .நன்றி சகோ [/size][/size]

வார்த்தைகள் வரவில்லை :(

[size=4]மிகப்பெரிய பாராட்டு இதைவிட வேறென்ன இருக்கமுடியும் அக்கா.[/size][size=1]

[size=4]நன்றி அக்கா. அக்காவின் ஊரை சேர்ந்தவன் என்பதில் இரட்டை சந்தோசம் எனக்கு [/size][/size]

நல்லதொரு கவிதை, நன்றி பகிர்வுக்கு

[size=4]நன்றி ஐயா,[/size][size=1]

[size=4]உங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என் இருப்பை இன்னும் உறுதிப்படுத்தும்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

மரபுவழிக் கவிதையாய் மலர்ந்த கவிதை அழகு.

[size=5]உதடுகளில் வலைபின்னிய சிலந்தியின்[/size]

[size=5]உயிரிருப்பினால் உயிரோடிருக்கிறது[/size]

[size=5]உயிரோடிருகிறது சில மனிதர்களின் சந்ததி[/size]

அழகான உவமை.

தொடர்ந்து எழுதுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.