Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலை நிமிரும் நாள் வரட்டும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gloriosa_superba.jpg

[size=5]மரணம் கூடு கட்டிய மரங்கள்,,[/size]

[size=5]முறிந்து விழுகின்றன![/size]

[size=5]பூரண சந்திரனின் வெளிச்சம்,[/size]

[size=5]புதைகுழிகளின் ஓரங்களில்,[/size]

[size=5]பட்டுத் தெறிக்கின்றது![/size]

[size=5]மழை வெள்ளம் தேங்கிய,[/size]

[size=5]குழிகளின்,மத்தியில்,,[/size]

[size=5]கார்த்திகைப் பூக்களின்,,[/size]

[size=5]கைவிரல்கள் அசைகின்றன![/size]

[size=5]அமைதியடையாத ஆத்மாக்கள்,,[/size]

[size=5]உலகத்தை நோக்கிக்,[/size]

[size=5]கரங்களை விரித்து,[/size]

[size=5]நியாயம் கேட்கின்றன![/size]

[size=5]உண்மைகள் நிதர்சனமாகி,[/size]

[size=5]உலகை உலுக்குகின்றன![/size]

[size=5]கண்கள் கட்டப்பட்ட,[/size]

[size=5]நீதித் தேவதைக்கும் கூடக் ,[/size]

[size=5]கல்லறை கட்டப்பட்டது![/size]

[size=5]பாலைவனக் காற்றாகிச்,[/size]

[size=5]சுட்டெரிக்கிறது உண்மை![/size]

[size=5]ராமா, ராமா என்று,[/size]

[size=5]உரக்கக் கத்திய அணிலுக்கு,[/size]

[size=5]ராம பாணமே குருதி,[/size]

[size=5]குடித்து நிற்கின்ற உண்மை,[/size]

[size=5]கனலாய் எரிக்கிறது![/size]

[size=5]நரிகள் சேர்ந்து விளையாடிய,[/size]

[size=5]நவீன சதுரங்கத்தில்,[/size]

[size=5]நர பலிகளாகிப் போய்விட்டன ,,[/size]

[size=5]நமது தாயக்கட்டைகள்![/size]

[size=5]எறிகணைகள் வீசிய,[/size]

[size=5]கோரத் தீ நாக்குகளில்,[/size]

[size=5]எரிந்து போயின எம் சொந்தங்கள்![/size]

[size=5]விதவைகள் விடும் பெருமூச்சில்,[/size]

[size=5]வெந்து போகின்றன நெஞ்சங்கள்![/size]

[size=5]குதறி எறிந்த ஓநாய்கள்,[/size]

[size=5]கெக்கலித்துச் சிரிக்கின்றன![/size]

[size=5]போனது போகட்டும்,[/size]

[size=5]புதியதொரு விதி செய்வோம்![/size]

[size=5]போர்க்குற்றவாளிகளைப்,[/size]

[size=5]புயலெனத் துரத்திடுவோம்![/size]

[size=5]நானென்றும், நீ என்றும்,[/size]

[size=5]நமக்கிடைடையே பேதமின்றி,[/size]

[size=5]நாமென்று சேர்ந்திடுவோம்![/size]

[size=5]நாளையப் பொழுது,[/size]

[size=5]நமக்காக விடியட்டும்! [/size]

[size=5]தமிழென்று மரித்தவரின்,[/size]

[size=5]தாகங்கள் தீரட்டும்![/size]

[size=5]தரணியில் மீண்டும்,[/size]

[size=5]தலைநிமிரும் நாள் வரட்டும்![/size]

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சியமாக வரும் நம்பிக்கயோடு இருப்போம் மீண்டும் ஒரு அழகான கவிதை நன்றிகள் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

.

இப்படி மனதுள் புலம்பி எழுதி தீர்ப்பதோடு மட்டும் நிற்கிறோம். வேறொன்றும் இல்லை புங்கையூறான்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]நாளையப் பொழுது,[/size]

[size=5]நமக்காக விடியட்டும்! [/size]

[size=5]தமிழென்று மரித்தவரின்,[/size]

[size=5]தாகங்கள் தீரட்டும்![/size]

[size=5]தரணியில் மீண்டும்,[/size]

[size=5]தலைநிமிரும் நாள் வரட்டும்![/size]

கவிதை நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

இப்படி மனதுள் புலம்பி எழுதி தீர்ப்பதோடு மட்டும் நிற்கிறோம். வேறொன்றும் இல்லை புங்கையூறான்.

என்னால் முடிந்தளவுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன்! பலர் செய்து கொண்டிருக்கிறோம்!

ஊர் கூடினால், தேரிழுக்கலாம், சுமே!

நார் மட்டுமே, மாலையாக முடியாது தானே!

உங்கள் கருத்துக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையுடன் காத்திருப்போம் நல்லதொருகவிதை நன்றிகள் புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கையூரன், இன்றிலாவிடிலும் என்றோ ஒருநாள் விடிவு வரும்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=5]உண்மைகள் நிதர்சனமாகி,[/size][/size]

[size=4][size=5]உலகை உலுக்குகின்றன![/size][/size]

[size=4][size=5]கண்கள் கட்டப்பட்ட,[/size][/size]

[size=4][size=5]நீதித் தேவதைக்கும் கூடக் ,[/size][/size]

[size=4][size=5]கல்லறை கட்டப்பட்டது![/size][/size]

[size=4][size=5]பாலைவனக் காற்றாகிச்,[/size][/size]

[size=4][size=5]சுட்டெரிக்கிறது உண்மை![/size][/size]

ஆனாலும் விடிவு தான் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மனசு கனக்கும் வரிகள் ...

விடுதலை வீச்சை விரைவாக்கும் வரிகள் ....

கடமையினை செய்ய தவறாதே என்று உணர்த்தும் வரிகள் ....

நன்றி புங்கையூரன்.

  • கருத்துக்கள உறவுகள்

முறிந்து விழுந்த மரங்களின் வேர்களில் இருந்து ஓர் நாள்

தளிர்கள் துளிர்க்கும்

அதற்கு இப்பொழுதே அடிமரத்துக்கு நீரூற்றி வளர்க்கவேண்டியது செல்வத்தால் நிறைவடைந்திருக்கும் புலம்பெயர்ந்த நம் கடமை..

நெஞ்சை பிளக்கவைக்கும் வேதனைகள் கவியாய்..

[size=5]நானென்றும், நீ என்றும்,[/size]

[size=5]நமக்கிடைடையே பேதமின்றி,[/size]

[size=5]நாமென்று சேர்ந்திடுவோம்![/size]

[size=5]நாளையப் பொழுது,[/size]

[size=5]நமக்காக விடியட்டும்! [/size]

[size=5]தமிழென்று மரித்தவரின்,[/size]

[size=5]தாகங்கள் தீரட்டும்![/size]

[size=5]தரணியில் மீண்டும்,[/size]

[size=5]தலைநிமிரும் நாள் வரட்டும்![/size]

நன்றி அண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நடந்தவற்றை கணக்கெடுத்திருக்கின்றது..

போனது போகட்டும்,

புதியதொரு விதி செய்வோம்!

புதிய விதிகள் நடந்தவற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்துதான் செய்யப்படவேண்டும். இல்லாவிட்டால் வெறும் நச்சுச் சுழலுக்குள் தொடர்ந்தும் உழலவேண்டி வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சியமாக வரும் நம்பிக்கயோடு இருப்போம் மீண்டும் ஒரு அழகான கவிதை நன்றிகள் அண்ணா

கருத்துக்கு நன்றிகள், சுண்டல்!

அந்த நாள் விரைவில் வரவேண்டும் என்பது, எல்லோரது விருப்பமும்!

[size=5]நாளையப் பொழுது,[/size]

[size=5]நமக்காக விடியட்டும்! [/size]

[size=5]தமிழென்று மரித்தவரின்,[/size]

[size=5]தாகங்கள் தீரட்டும்![/size]

[size=5]தரணியில் மீண்டும்,[/size]

[size=5]தலைநிமிரும் நாள் வரட்டும்![/size]

கவிதை நன்றிகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள், விசுகர்!

அந்த நாள் விரைவில் வர வேண்டும்!

அதை நாங்கள், எமது கண்களால் காணவேண்டும்!

நம்பிக்கையுடன் காத்திருப்போம் நல்லதொருகவிதை நன்றிகள் புங்கையூரன்

நன்றிகள், காவலூர் கண்மணி!

நன்றி புங்கையூரன், இன்றிலாவிடிலும் என்றோ ஒருநாள் விடிவு வரும்

நன்றிகள், உடையார்!

வாழ்க்கையே ஒரு சுழற்சி தானே உடையார்!

இரவுகள் அகல்கையில், விடிவு வந்தேயாகவேண்டும்!

[size=4][size=5]உண்மைகள் நிதர்சனமாகி,[/size][/size]

ஆனாலும் விடிவு தான் இல்லை.

கருத்துக்கு நன்றிகள், கறுப்பி!

வேதனையின்றிப் பிரசவங்கள், நிகழ்வதில்லை!

விடியும் என்ற நம்பிக்கையில் தானே வாழ்வு நகர்ந்து செல்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

போனது போகட்டும் புது விதி செய்வோம் என்ற நம்பிக்கை மட்டும் சுமந்தால் போதாது புங்கையூரான் மேலே கிருபன் கூறிய கருத்தையும் கவனத்தில் எடுத்தால் மட்டுமே எங்கள் பயணத்தில் தூரம் குறையும் இல்லையென்றால் எட்டாத்தூரத்தில் எல்லாமே அந்நியப்பட்டுவிடும்.

Edited by வல்வை சகாறா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.