Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பு ஜூலை !

 


தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ........
வாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா ........
 

விடியலுகில்லை தூரம் இருந்தும் என்னும் ஏன் ஏக்கம் ! 

  • Replies 2.1k
  • Views 180.1k
  • Created
  • Last Reply

தண்ணீர்விட்டோ வளர்த்தோம் இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருக திருவுளமோ.....

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சுவியர்? பழைய ஞாபங்கள் வந்துட்டுதோ :)

  • கருத்துக்கள உறவுகள்

சுவி, சிவாஜியின் தீவிர ரசிகர் போலக் கிடக்கு.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த சொந்தங்களுக்கு நன்றிகள்!

பாடல் : ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ....

பாடியவர் : T M சௌந்தரராஜன் 
 

 

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ICSeUl6j66E

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்கள் அருமை.

எங்க புங்கையைக் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
வருகை தந்த சொந்தங்களுக்கு நன்றிகள்!
 
படம் : ஆசைமுகம் 
பாடல் : எத்தனை பெரிய மனிதனுக்கு ....
பாடியவர் : T M சௌந்தரராஜன் 

 

 

கோழியை பாரு காலையில் விழிக்கும்

குருவியை பாரு சோம்பலை பழிக்கும்

காக்கையை பாரு கூடி பிழைக்கும்

நம்மையும் பாரு நாடே சிரிக்கும்

 
  • கருத்துக்கள உறவுகள்

படம் : கல்யாணப் பரிசு .

பாடல்; பட்டுக்கோட்டையார் .

பாடியவர்கள் ராஜா , சுசிலா .

அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும் அன்பு மணக்கும் தேன் சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால் அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது? பல உயிர்கள் மகிழவதும் ஏது? - நெஞ்சில்
இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வை தனித்துப் பெற முடியாது
-

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல் சுவி அண்ணா.. ஏ.எம்.ராஜா அவர்களின் இசை.. எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே தமிலரசுக்குத்தான் இந்தப் பாராட்டுக்கள் உரித்தாகும். எனக்கு இவை இணைக்கத் தெரியாமல் இருந்தது. அவர்தான் தனிமடலில் தொடர்பு  கொண்டு சொல்லிக் கொடுத்தார் .

 

தமிழில் தட்டச்சு செய்ய யாழ் கற்றுத் தந்தது.

 

நன்றி சொன்னால் போதாது !

http://www.youtube.com/watch?v=6TYndPjBkxo

 


http://www.youtube.com/watch?v=Y3Zw5CRjYtk

 

மையேந்தும் விழியாட :45 இல் இருந்து 1:05 வரைக்கும் உள்ள பாகத்தை சாவித்திரி ஒரு தடவையில் நடித்த பின்னர் இடையில் சில காட்சிகள் செருக்கப்பட்டது போல் இருக்கு.  அவர் ஒரு வெட்டிப் பார்வை எடுக்கும் போது காட்சி மாறி புல்லாங்குழல் வருகிறது பின்னர் சாவித்திரி தொடர்கிறார். முன்னர் ஆரம்பித்த வெட்டிப்பார்வை 1:00ல்  ஒரு கண்ணடியாக மாறி நெஞ்சத்தை ஒரு வெட்டாக .... அப்படா அப்படா ...  தண்ணீர் போத்தலை தேடிப்பிடித்து கொஞ்சம் தண்னீர் குடித்துவிட்டு வருகிறேன்.... மிச்சம் எழுத.... :D  .

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான பாடல் நடிப்பு  யாரைப்  பாராட்டுவது !! :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னமா ஆராய்ச்சி பண்றாங்கப்பா.. அதுவும் பாட்டிமாரில்.. :D

நடிப்பு பாட்டிமாரில் மட்டும்தானே. இடுப்பு மட்டும்தானே இளசுகளில். :D

 

கிழவிக்குத்தானே "நடிகையர் திலகம்" பெயர். :(  நான் என்ன பண்ண

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நடிப்பு பாட்டிமாரில் மட்டும்தானே. இடுப்பு மட்டும்தானே இளசுகளில். :D

 

கிழவிக்குத்தானே "நடிகையர் திலகம்" பெயர். :(  நான் என்ன பண்ண

அதிசயமான மனிதன் , இந்த மல்லை! :D

 

சாவித்திரியின் கண் வெட்டுக்கா, இந்த வேர்வை வேர்க்குது! :o

 

நீங்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஒருமுறை " Bondi" கடற்கரைக்கு வரவேணும்!

 

உங்கள் உடம்பிலிருந்து, வேர்வை மட்டுமல்ல, கங்கை நதியே உற்பத்தியாகும் !  :icon_idea:  

 

Bondi-gallery-8.jpg

எண்கணிதத்ததை நாங்கள் ஐந்தாம் வகுப்பில் கையாளப் பழகிவிட்டோம் என்று ஆறம் வகுப்பில் அட்சர, கேத்திர கணிதம் ஆரம்பிக்கப்பட்டது. அதை கையாள்கிறோம் என்பது கவனிக்கப்பட்ட பின் ஒன்பதாம் வகுப்பில் பிரயோக கணிதம், தூயகணிதம் ஆரம்பிக்கப்பட்டது அது கிரக்கிப்பின் வளர்ச்சி முறை. கலையை ரசிப்பதிலும் முதிர்ச்சி தேவையானது.

 

இயற்கையே அழகாகத்தான் ஆக்கபட்டிருக்கு.  அதை விளங்கிய மனிதன் 80,000 ஆண்டுகளாக ஓவியம் வரைகிறான். 5000 ஆண்டுகளாக காதலை வர்ணித்துப் பாடுகிறான். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசன் அற்புத நாடகமாக சகுந்தலம் எழுதினான்.

 

100 வருடங்களாக பல சிக்கலான கலைப் பாகங்களால் இணைப்பட்டு சினிமாக்கலை ஆரம்பிக்கபட்டிருக்கு. இன்றைய சிநிமாப்படம் ஒன்றில் எத்தனை வகை கலைகள் உள்வங்கப்பட்டு படங்கள் தயாரிக்கப்படுகின்றன எனபதை சொல்வதே கடினம். அதில் காணப்படும் சிக்கலான பல்துறை கலைகளை ஒரேமிக்க அனுப்பவிக்க பழக்கம் தேவை என்கிறார்கள். இளமையின் வனப்பு கவர்வது இளமை நாட்களில் மட்டுமே பிரதானமாக காணப்படுகிறது. ஒட்டக்கூத்தன், ஔவை, கம்பன், புகழேந்தி எல்லோருமே முதிர்ச்சி அடைந்த பின்னர்தான் ஆழமான கலைகளை படைத்தார்கள். ஹொலிவூட்டில் கூட கலைப்படங்கள்தான் அதிக பாங்காக பரிசில்களை தட்டிகொண்டு போவது. கவர்ச்சி காட்டும் வசூல் படங்கள் அல்ல.

 

நான் குறிப்பிட இடத்தில் குரல், வசனம், இசையமைப்பு என்று எல்லாமே ஒரு திருப்பம் காட்டுகிறது. அந்த இடத்தில் "மையேந்தும்" ஆரம்பிக்காமல்  வசனம் "அ மையேந்தும்" என்று ஆரம்பிக்கிறது. இசைஅமைப்பு அதை பின்பற்றுகிறது. சுசிலா அருமையாக அந்த இடத்தை எடுத்திருக்கிறார்.  அதற்கு நடிக்க வந்த சாவித்திரி அந்த இடத்தை அருமையாக கையாண்டிருக்கிறார். 

 

அதை விளங்கிய சுவி தனது கருத்தில், ஒன்று மட்டுமல்ல எல்லாமே நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

 

உண்மையில் "இன்றைய பாடலுக்கக்காக" நான் தேடிய பாடல் "வா என்றது உருவம்" என்ற பாடலே. அது நான் சிறுவனாக இருந்த காலம் தொடக்கம் ரசிப்பது. "மையேந்தும்" யாழில் நான் எற்கவே வேறு இடங்களில் பதிந்தும் இருக்கிறேன். ஆனால் youtubeல் தேடும் போது இந்த மூன்று காதல் பாடல்களும்  ஒரே பக்கத்தில் வரும். அவை கிட்டத்தட்ட ஒரே கோணத்தில் ஆக்கப்பட்டிருப்பவை என்றதால் ஒரே நாளில் பதிந்தேன்.

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

 
ஜானகி அவர்களின் அருமையான குரலில் ஒரு இனிய பாடல்
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல் நுணா.. இணைப்பிற்கு நன்றி..

பாடலாசிரியர்கள் கண்ணதாசனும் வாலியும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஆண் பென் உறவை கொச்சைப் படுத்தாமல் அழகாக கவி நயத்துடன் வெளிப் படுத்துவதில் வல்லவர்கள். அந்த வரிசையில் இந்த பாடல் ஒரு பெண்ணின் முதல் இரவுக்கு பின் அவள் அந்த இரவின் உறவை ரசித்து பாடுவதாக அமைந்தது. குரலும் இசையும் கவிதையுடன் இணைந்து ஒலிக்கின்றது - http://asokarajanandaraj.blogspot.com/2011/03/blog-post_26.html

 

 

இறைவன் முருகன் திருவீட்டில் 
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி 
உயிரெனும் காதல் நெய்யூற்றி 
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி

 

http://youtu.be/4HVJhS-KTzM

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.