Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழிக் கடலடி ஆட்டம் கண்டதால்
ஆழப் பெருங்கடல் மேலெழுந்தது
அதிர்வின்றி அமைதியாக

ஆழ்கடல் அசைந்து வந்து
ஓசையற்று ஒட்டுமொத்தமாய்
ஒன்றுமிலாது கொண்டு போனது 

அன்னை மடியென ஆடிக் கழித்தவர்
அலைகடலோடு கூடிக் கழித்தவர்
ஆவலோடு உனைப் பார்த்திருந்தவர்
அத்தனை போரையும் அரை நொடியுள்
அள்ளிக் கொண்டு சென்று விட்டாய்
 

அந்த நொடிவரை ஆயிரமாய் 
அகம் முழுதும் ஆசைகளோடு
அடுத்தநாளின் கனவுகளோடு
ஆடிப் பாடிக் களித்திருந்தார்
அனைவர் மீதும் கோபமென்ன 
அடித்துக்கொண்டு சென்றுவிட்டாய் 

பத்து மாதம் சுமந்த பிள்ளையை
பள்ளிக்கனுப்பிய பாலகனை
கட்டிய கணவனை காதலனை
அத்தனை உறவையும் அக்கணமே
அகதியாக்கிச் சென்றுவிட்டாய் 

எத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வீடுகள்
காந்தமாய்த் திரிந்த வீதிகள்
எழில் பொங்கும் எங்களின் ஊர்கள்
நீண்டு வளர்ந்த நெடு மரங்கள்
அத்தனையும் அழித்துவிட்டாய்

தமிழன் மட்டும் தரணியில்
தவிப்பதற்கே பிறந்தவனா
திண்தோள் கொண்டு திரட்டியதை
தேவையற்றுக் கொடுப்பவனா
தீரும் பகை மறந்து தினவறுந்து
தேரில் உலாச் செல்பவனா 

மீண்டும்  வதைப்பவரை
மன்னித்தே ஏற்பவனா
பாரெங்கும் பரந்திருந்து
பகை மறந்து வாழ்பவனா
இனம் துறந்து ஏதிலியாய்
எட்டப்பனாய்  வாழ்பவனா

எத்தனை திங்களாய்
எல்லாம் கொடுத்திட்ட
ஏழைகள் தானடி நாங்கள்
ஏனடி நீயும் எங்களை மட்டும்
எப்போதும் அழிக்கின்றாய்
எல்லைகள் தாண்டி வந்து
எல்லாமே செய்கின்றாய்

எமக்கது சாபமடி எப்போதும்
தமிழனாய்ப் பிறந்திட்ட
எம்மினத்தின்  சாபமடி
முயல்கின்றோம் முதிர்கின்றோம்
மூலமெல்லாம் தொடுகின்றோம்
மீண்டு வரத்தான் எம்மால்
இன்னும் முடியவில்லை 















 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

சாம்பல் பூ வெளியே பூத்திருக்கச்,

சந்தடியில்லாமல் மறைந்திருக்கின்றன,

சமுத்திரத் தாய் கீறி விட்ட காயங்கள்!

 

நினைவு மீட்டலுக்கு நன்றிகள், சுமே!

 

Quote:"அதிர்வின்றி அமைதியாக
ஆள்கடல் அசைந்து வந்து
ஓசையற்று ஒட்டுமொத்தமாய்"

 

ஐப்பானிற்க்கு வந்த சுனாமி வீடியோக்கள் பார்க்கவில்லையா? என்ன ஒரு இரைச்சல் சத்தம், பேரலைகள் அமைதியாகவா வரும்? இந்த கவி வசனங்களை மாற்றியிருக்கலாம்.

 

அருமையான கவிதை, நன்றி பகிர்வுக்கு
 

எத்தனை திங்களாய்
எல்லாம் கொடுத்திட்ட
ஏழைகள் தானடி நாங்கள்
ஏனடி நீயும் எங்களை மட்டும்
எப்போதும் அழிக்கின்றாய்
எல்லைகள் தாண்டி வந்து
எல்லாமே செய்கின்றாய்

 

நெருக்கமாக எழுகிறது கேள்வி. நெஞ்சை தொடுகிறது. சுமேரியர் வாழ்த்துக்கள் ஐயா.

 

எத்தனை திங்களாய்

எல்லாம் கொடுத்திட்ட

ஏழைகள் தானடி நாங்கள்

ஏனடி நீயும் எங்களை மட்டும்

எப்போதும் அழிக்கின்றாய்

எல்லைகள் தாண்டி வந்து

எல்லாமே செய்கின்றாய்

 

நெருக்கமாக எழுகிறது கேள்வி. நெஞ்சை தொடுகிறது. சுமேரியர் வாழ்த்துக்கள் ஐயா.

 

 தப்பு நேற்கொழுதாசன் "அம்மா"

 தப்பு நேற்கொழுதாசன் "அம்மா"

 

எதற்காக தப்பு என்று உரைக்கிறீர்கள் வந்தியத்தேவன். கடலை அன்னையாக மட்டுமா பார்க்கவேண்டும். ஒரு சகோதரியாக பார்க்க முடியாதா? இறைவனையே சகோதரனாக பாவித்து திட்டியவர்கள் எண்கள் முன்னவர்கள். கடலை நெருங்கிய உறவாக ஏனடி என்று அழைத்த விதம் நெருக்கமாக இருந்தது.அதுதான் அழகாகவும் இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த உறவுகளுக்கு நன்றி. நான் அமைதியாக என்று எழுதியது எம்மூரில் வந்த சுனாமி பற்றி. காணொளி நீங்கள் பார்க்கவில்லையா வந்தி? கரையில் வந்த பின்தான் எல்லோருக்கும் தெரிந்தது.

 

நேர்கொழு தாசன், வந்தி அம்மா என்று சொன்னது என்னை.

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

எமக்கது சாபமடி எப்போதும்
தமிழனாய்ப் பிறந்திட்ட
எம்மினத்தின்  சாபமடி

 

மனிதப்பிறப்பில் யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை . பாகுபாடு பார்பது மனிதனே ஒழிய பிறப்பு இல்லை . நல்ல கவி தைத்த சுமேக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றி கோமகன். சுனாமியின் எட்டாம் ஆண்டு நிறைவு நேற்று அதற்காக எழுதியது.

கவிதை உணர்வுப் பூரணமாய் இருக்கிறது சுமேரியர். பாராட்டுகள்.

ஆள்கடல்-> ஆழ்கடல்
எகாந்தமாய்த் -> ஏகந்தமாய்த்

இது சொற்பிழையா இல்லை வேறு ஏதேனும் அர்த்தம் உள்ளதா? கவிதையில் வரும் ஒவ்வொரு சொல்லும் வேறு ஏதேனும் பொருள் தரலாம். ஆகையால் கேட்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டும் எழுத்துப் பிழைகள் தான் ஆதித்தியன். திருத்தியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்கடலுள் அமிழ்ந்துபோயின

உறவுகள்..

அமிழாமல்

காலமடியில் கனக்கின்றன

நினைவுகள்..

 

நன்றி சுமேரியர் அக்கா கவிதைக்கு...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை என்னமோ நல்லாத்தான்  இருக்கு பாக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

சாபங்களால் சபிக்கப்பட்ட இனமாகியதாலோ என்னவோ கடலும் எங்களைத்தான் காவுகொண்டது சுமேரியர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய சுபேஸ், சாத்திரி, சாந்தி மூவருக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.