Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் காதல் கடிதம் - திவ்யா (மறுபக்கம்)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்ப கதை போடுவிங்கள் பகலவன் அண்ணை ??

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அக்கா வேணாம் நான் அழுதிடுவேன்  :lol:

 

சரி சரி அடுத்தமுறை தோடம்பழ இனிப்பு வாங்கித்தரலாம் அழுகையை நிப்பாட்டுங்கோ. :lol:

எப்ப கதை போடுவிங்கள் பகலவன் அண்ணை ??

 

தம்பி டேய் பகலவன் பிள்ளையின்ரை காதல் மறுபக்கத்தை எழுதச் சொல்லி வாசகர்கள் கூப்பிடறது கேட்கேல்லயா ? :icon_idea:

  • தொடங்கியவர்

மிக நன்றாக இருக்கிறது பகலவன் உங்கள் கதை... தொடர்ந்து வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்...

வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் உங்கள் தொடரை தொடருங்கள்.   ..... ஒவ்வொரு நிகழ்வுமே அழகாக இருக்கிறது....

 

நன்றி கல்கி. உங்கள் கருத்துக்கு. நேரம் கிடைக்காமையால் தொடர்ச்சியாக எழுத முடியவில்லை.

 

எப்ப கதை போடுவிங்கள் பகலவன் அண்ணை ??

 

இண்டைக்கு  :lol:

 

சரி சரி அடுத்தமுறை தோடம்பழ இனிப்பு வாங்கித்தரலாம் அழுகையை நிப்பாட்டுங்கோ. :lol:

 

தம்பி டேய் பகலவன் பிள்ளையின்ரை காதல் மறுபக்கத்தை எழுதச் சொல்லி வாசகர்கள் கூப்பிடறது கேட்கேல்லயா ? :icon_idea:

 

அக்கா நீங்கள் சொல்லி நான் செய்யாமல் இருப்பேனா. இண்டைக்கு எல்லா வேலையும் விட்டிட்டு உங்களுக்காக கதை எழுதி போடுறேன் . :icon_idea:

  • தொடங்கியவர்

குட்டி பிள்ளையாரை கண்ணை மூடி கும்பிட்டு, கண்ணை திறந்தால் முன்னுக்கு கையிலே ஒரு ரோசா பூவுடன் கங்காரு மாதிரி ஒரு உருவம்.

 

கண்ணை கசக்கி போட்டு திரும்பி பார்த்தால், குரங்குட்டானுக்கு கோமாளி வேஷம் போட்ட மாதிரி, சிவப்பு கலர் புள்ளி புள்ளி  சேட்டும், பச்சை கலர் ஜீன்சும், கழுத்திலே நல்லூர் திருவிழாவிலே வாங்கின் கில்டு செயின் கழுத்திலே, கோயில் உண்டியலை களவெடுக்க வந்தவன் மாதிரி ஒரு பார்வை. இப்பத்தை பவர் ஸ்டார் மாதிரி சிரிச்சு கொண்டு பகலவன், ஐ லவ் யூ திவ்யா எண்டான்.

 

எனக்கு உடம்பெல்லாம் படபடத்தது, எல்லா சனமும் எங்களையே பார்த்தது, எனக்கு சட்டைக்குள்ளேயே வேர்த்தது. என்ன செய்யுறது என்று தெரியாமல் ஒரு அடி பின்னுக்கு வைக்க, நந்தியை சுத்தி அடிச்சிருந்த கம்பியிலே தடக்குபட்டு விழப்போன என்னை, விஜயகாந்த் மாதிரி வந்து ஏந்தி பிடிச்சான். என்னை தூக்கி விடுவம் என்று இல்லை, கூரையை பார்த்து போஸ் குடுத்து கொண்டிருந்தான். நான் நினைக்கிறேன் எங்காவது சுவிஸ்லாந்திலே டூயட் பாடி கொண்டிருந்திருப்பான் எண்டு நினைக்கிறேன்.

 

என்னை விடுடா என்று பிலத்து கத்தினேன்.

என்ர கையை பிடிச்சு, பிளாட் மாங்காய் கொப்பை உலுக்கிற மாதிரி உலுப்பி கொண்டிருந்தான்.

 

என்னை இப்போ விட போறியா இல்லையா என்று கத்தினேன்.

 

என்னடி ஆச்சு உனக்கு. காலையிலே திருவெம்பா பாட போகணும் என்று எழுப்பி விட வந்ததால் இப்படி பேய் கத்து கத்துறாய், என்று அம்மா சொன்ன போது தான் தெரிஞ்சிது, நான் கண்டது கனவு எண்டு.எப்போ கண்ணயர்ந்தேன் என்று எனக்கே ஞாபகம் இல்லை.

 

சப்பா... இப்படி ஒரு கெட்ட  கனவை நான் வாழ்க்கையிலேயே கண்டது இல்லை.

 

 

நான், வெண்ணிலா, பகலவன் தங்கச்சி தர்சி, இன்னுமொரு அம்மா சேர்ந்து தான் தான் திருவெம்பா, திருப்பள்ளி எழுச்சி பாடுவோம், எங்களுக்கு காவலுக்கும், பாடி முடியும்போது சங்கூதி, மணி அடிக்கவும் என்று, மண்ணெண்ணெய் ட்ரமுக்கு வேட்டி சுத்தின மாதிரி பகலவன் கூட்டம்.

 

அவங்கட தொல்லை சொல்லி மாளாதது. கடைசி வரி மட்டும் தான் அவங்களுக்கு தெரியும், நாங்கள் பாடி முடிக்க முதலே அவங்கள் கடைசி வரியை யானை மாதிரி பிளிருவாங்கள். சும்மா இரவிலே ரோட்டாலே போனாலே ஊரிபட்ட நாய்கள் குலைக்கும். இவங்கட பிளிறளாலே எல்லா நாய்களும் மௌனவிரதம்.

 

இதுக்குள்ளே பகலவன் சேமக்கலம் எண்ட பெயரில் அடிக்கிற பறையை கேட்கமுடியாது. அவனுக்கு சேமக்கலம் அடிக்கும்போது ஏதோ ட்ரம்ஸ் சின்னமணி என்ர நினைப்பு. எனக்கு ஒண்டு மட்டும் வடிவா தெரிஞ்சுது, அவனுக்கு படிப்பு வராட்டி கைவசம் ஒரு தொழில் இருக்கு என்று மட்டும்.

ஆக குறைஞ்சது பள்ளிகூடத்தில்  மணி அடிக்கிற வேலையாவது கிடைக்கும் அவனுக்கு.

 

அதுக்குள்ளே பகலவன் தங்கச்சி ஒரு கதை சொன்னாள், அவங்கட வீட்டு அல்சேசன் குறஸ் நாய் இவண்ட பாட்டை தாங்க முடியாமல் சங்கிலியை அறுத்து கொண்டு ஓடிபோட்டுது எண்டு. அவங்கட அம்மாவுக்கு தெரிஞ்சு இப்போ ஒரு இரண்டாயிரம் குடுத்து நாய் கூடு வாங்கி வைச்சிருகிறாவாம். அதை விட நாய் விக்கிற ஆக்களிடம் காது  கேட்காத நாய் இருக்கோ எண்டு வேற விசாரிக்கிறாவாம். அவன்ட பாட்டை கேட்டு சகிச்சு கொண்டு இருக்கிற தங்களுக்கு சாமாதானத்துக்கான நோபல் பரிசு  தர வேணும் எண்டு வேற கேட்கிறாள். அப்படி எண்டால் பாருங்கோவன் அவனது பாட்டு திறமையை.

 

நாங்கள் அந்த மார்கழி குளிருக்குள்ளே பாடுகிறோம் என்று சில வீட்டுகாரர் காலையிலே எழும்பி எங்களுக்கு ரீ போட்டு தருவார்கள். சில நாட்களில் அவர்களுக்கு என்ன தடங்கலோ, அவர்கள் எழும்பி தருவதில்லை. அந்த நாட்களில் இவங்கட கூத்து தாங்க முடியாது. அந்த வீடுகளை சுத்தி சுத்தி மணி அடிச்சு சங்க்கூதிக்கொண்டிருப்பான்கள். நரி கூத்து குரவர்கள் மாதிரி. அவங்களும் இவங்கட அரியண்டம் தாங்காமல் அடுத்தநாள் எப்படியும் எழும்பி ரீ போட்டு தருவினம்.

 

பாடுற பிள்ளைகளுக்கு தான் முதல்ல ரீ எண்டு எங்களுக்கு தரும்போது, இவங்கட முகத்தை பார்க்கோணும், ஐயோ மீன் சாப்பிடேக்க நாய் பார்த்த மாதிரி இருக்கும். நான் வீட்டிலேயே நாய்க்கு முதல்ல குடித்திட்டு தான் சாப்பிடுவேன். அதிண்ட பார்வையை பார்க்க பாவமாக இருக்கும். அண்டைக்கும் நான் ரீ வாங்கும்போது அவன்ட பார்வையை பார்த்திட்டு எண்ட ரீயை குடுத்தேன். அவ்வளவு சுட்டும் மாடு களனித்தண்ணியை குடிக்கிறமாதிரி ஒரு இழுவையிலே குடிச்சிட்டு, நாக்கு சுட கோயிலுக்கு வரும் மட்டும் வாயை திறக்கவே இல்லை. அண்டைக்கு தான் நாங்கள் நிம்மதியாக பாடினோம்.

 

அந்த நிம்மதி நெடு நாட்கள் நீடிக்கவில்லை. திருவெம்பா முடிஞ்சு பள்ளிக்கூடம் திறக்கும்போது அவன் அப்படி ஒரு திட்டம் வைச்சிருப்பான் என்று அப்ப எனக்கு தெரியாது.

 

தொடரும் 

 

  • கருத்துக்கள உறவுகள்
இதுக்குள்ளே பகலவன் சேமக்கலம் எண்ட பெயரில் அடிக்கிற பறையை கேட்கமுடியாது. அவனுக்கு சேமக்கலம் அடிக்கும்போது ஏதோ ட்ரம்ஸ் சின்னமணி என்ர நினைப்பு. எனக்கு ஒண்டு மட்டும் வடிவா தெரிஞ்சுது, அவனுக்கு படிப்பு வராட்டி கைவசம் ஒரு தொழில் இருக்கு என்று மட்டும்.

ஆக குறைஞ்சது பள்ளிகூடத்தில்  மணி அடிக்கிற வேலையாவது கிடைக்கும் அவனுக்கு.

 

அதுக்குள்ளே பகலவன் தங்கச்சி ஒரு கதை சொன்னாள், அவங்கட வீட்டு அல்சேசன் குறஸ் நாய் இவண்ட பாட்டை தாங்க முடியாமல் சங்கிலியை அறுத்து கொண்டு ஓடிபோட்டுது எண்டு. அவங்கட அம்மாவுக்கு தெரிஞ்சு இப்போ ஒரு இரண்டாயிரம் குடுத்து நாய் கூடு வாங்கி வைச்சிருகிறாவாம். அதை விட நாய் விக்கிற ஆக்களிடம் காது  கேட்காத நாய் இருக்கோ எண்டு வேற விசாரிக்கிறாவாம். அவன்ட பாட்டை கேட்டு சகிச்சு கொண்டு இருக்கிற தங்களுக்கு சாமாதானத்துக்கான நோபல் பரிசு  தர வேணும் எண்டு வேற கேட்கிறாள். அப்படி எண்டால் பாருங்கோவன் அவனது பாட்டு திறமையை.

 

பாடுற பிள்ளைகளுக்கு தான் முதல்ல ரீ எண்டு எங்களுக்கு தரும்போது, இவங்கட முகத்தை பார்க்கோணும், ஐயோ மீன் சாப்பிடேக்க நாய் பார்த்த மாதிரி இருக்கும். நான் வீட்டிலேயே நாய்க்கு முதல்ல குடித்திட்டு தான் சாப்பிடுவேன். அதிண்ட பார்வையை பார்க்க பாவமாக இருக்கும். அண்டைக்கும் நான் ரீ வாங்கும்போது அவன்ட பார்வையை பார்த்திட்டு எண்ட ரீயை குடுத்தேன். அவ்வளவு சுட்டும் மாடு களனித்தண்ணியை குடிக்கிறமாதிரி ஒரு இழுவையிலே குடிச்சிட்டு, நாக்கு சுட கோயிலுக்கு வரும் மட்டும் வாயை திறக்கவே இல்லை. அண்டைக்கு தான் நாங்கள் நிம்மதியாக பாடினோம்.

 

ஐயோ பகலவன் எப்பிடித்தான் இவ்வளவு நகைச்சுவையாக எழுத முடிகிறது. மிக அருமை. :lol: :lol: :lol: :lol:

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக போகின்றது, தொடருங்கள்... 

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப கடிக்கிற மாதிரி இருக்கு ........... :lol:

அவங்கட தொல்லை சொல்லி மாளாதது. கடைசி வரி மட்டும் தான் அவங்களுக்கு தெரியும், நாங்கள் பாடி முடிக்க முதலே அவங்கள் கடைசி வரியை யானை மாதிரி பிளிருவாங்கள். சும்மா இரவிலே ரோட்டாலே போனாலே ஊரிபட்ட நாய்கள் குலைக்கும். இவங்கட பிளிறளாலே எல்லா நாய்களும் மௌனவிரதம்.

-------

------

அதுக்குள்ளே பகலவன் தங்கச்சி ஒரு கதை சொன்னாள், அவங்கட வீட்டு அல்சேசன் குறஸ் நாய் இவண்ட பாட்டை தாங்க முடியாமல் சங்கிலியை அறுத்து கொண்டு ஓடிபோட்டுது எண்டு. அவங்கட அம்மாவுக்கு தெரிஞ்சு இப்போ ஒரு இரண்டாயிரம் குடுத்து நாய் கூடு வாங்கி வைச்சிருகிறாவாம். அதை விட நாய் விக்கிற ஆக்களிடம் காது  கேட்காத நாய் இருக்கோ எண்டு வேற விசாரிக்கிறாவாம். அவன்ட பாட்டை கேட்டு சகிச்சு கொண்டு இருக்கிற தங்களுக்கு சாமாதானத்துக்கான நோபல் பரிசு  தர வேணும் எண்டு வேற கேட்கிறாள். அப்படி எண்டால் பாருங்கோவன் அவனது பாட்டு திறமையை.

:lol: :lol:

தொடருங்கோ அண்ணா... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பகலவனுக்கு, என்னவெல்லாம்  தெரியும் எண்டு, எனக்கு சொல்லத்தெரியவில்லை!

 

ஆனால், மனோதத்துவம் தெரியும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும்!

 

திவ்யாவின் கனவில், பகலவன் (குரங்காகவென்றாலும்) நுழைந்த போதே, பகலவனுக்குத் தான் வெற்றி என்று அர்த்தம்! :D 

 

சரி,மிச்சத்தையும் பாப்பம்! 

  • தொடங்கியவர்
ஐயோ பகலவன் எப்பிடித்தான் இவ்வளவு நகைச்சுவையாக எழுத முடிகிறது. மிக அருமை. :lol: :lol: :lol: :lol:

 

ஏதோ அக்கா எங்களால முடிஞ்சது. மற்றவங்களை கவலைகளை மறந்து சிரிக்க வைப்பதிலும் ஒரு சந்தோசம் இருக்கு அக்கா.

 

ம்ம்ம்

தொடருங்கள்

 

நன்றி விசுகு அண்ணா வருகைக்கு.

நன்றாக போகின்றது, தொடருங்கள்... 

 

நன்றி உடையார், உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்துக்கு.

 

ரொம்ப கடிக்கிற மாதிரி இருக்கு ........... :lol:

 

அப்படியா அக்கா .!???

:lol: :lol:

தொடருங்கோ அண்ணா... :icon_idea:

 

நன்றி துளசி. நிச்சயமாக தொடருவேன்.

 

பகலவனுக்கு, என்னவெல்லாம்  தெரியும் எண்டு, எனக்கு சொல்லத்தெரியவில்லை!

 

ஆனால், மனோதத்துவம் தெரியும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும்!

 

திவ்யாவின் கனவில், பகலவன் (குரங்காகவென்றாலும்) நுழைந்த போதே, பகலவனுக்குத் தான் வெற்றி என்று அர்த்தம்! :D

 

சரி,மிச்சத்தையும் பாப்பம்! 

 

போக போகத்தான் தெரியும் வெற்றி யாருக்கு என்று. நீங்கள் எண்டாலும் பகவலனை விட்டுகொடுக்கிறேல என்று தான் இருக்கிறீங்கள்  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா நீங்கள் சொல்லி நான் செய்யாமல் இருப்பேனா. இண்டைக்கு எல்லா வேலையும் விட்டிட்டு உங்களுக்காக கதை எழுதி போடுறேன் . :icon_idea:

அதுதானே சொன்னதை செய்யாட்டி பிறகு தபால்காரர் வரும் வழியில் பகலவனின் கண்கள் தவமிருக்க வேண்டியெல்லோ வந்திருக்கும். :lol:

அடுத்த தொடரை எழுதடாண்டு சொன்னாத்தான் தம்பி எழுதுவியளோ ? :lol:  றெம்பத்தான் இழுத்தடிக்கிறியள். :wub:

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி பகலவன் உடனடியாக காதல் கடிதத்தை எழுதி முடிக்கவும். அடுத்த 2வாரத்தில் கடையெழுதப்படாவிட்டால் கூகிழ் ஆண்டவர் சாட்சியாக 10 பிரம்படிகள்.....! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்


என்னடா இந்தத் திரி முன்னுக்கு நிக்குதே பகலவன் எழுதியதைத் தவறவிட்டு
விட்டேனா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. எங்களுக்காகவேனும் எழுதி
முடியுங்கோ பகலவன் :D

  • 1 month later...

திவ்யா ,வசந்தி, சுகந்தி, மேகலா எண்டு வறுத்தெடுக்கிறாங்கள்.  அமண்டா , லீசா, கிளாரா , அப்படி உள்ளூர்ச்  சரக்குகளை வைச்சு எப்ப கதை எழுதப் போகிறியள் ?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.