Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் கடன் அட்டையே வாழ்க்கையை கவலையாக்குகிறது – கருத்துக் கணிப்பில் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஒரு கருத்தெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அதில் கடன் அட்டை பயன்படுத்துபவர்களில் இருபதில் ஒருவர் தன்னால் கடனை அடைக்க இயலாது என்று புலம்புகிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்துக் கணிப்பை ஹாரிஸ்ஃடெசிமா நிறுவனத்தினர் நடத்தியிருகிறார்கள்.

 

கடன் அட்டை பயன்படுத்துபவர்களில் பலர் தங்கள் முழு கடனை அடைப்பதில்லை. கடன் பாக்கி வைத்திருக்கிறார்கள். அதற்காக அவரகள் கட்டும் வட்டித் தொகையைப் பற்றி அவர்கள் அதிகம் கவலைப்படவில்லை. கடன் அட்டை கடன் பாக்கிக்கு வட்டி இருபது சதவீதம் போல் இருக்கிறது.

 

‘ஒருவன் கடணாளியாவதற்கும், பண-சொத்து முடக்கம் அடைவதற்கும் கடன் அட்டைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால்தான் அது குறித்து கருத்துக் கணீப்பு நடத்தினோம் ‘ என்கிறார் டாவ்க் ஹோய்ஸ். இவர் இந்த நிறுவன அதிகாரிகளில் ஒருவர்.

 

2012ல் சரசாரியாக ஒரு வீட்டினர் வைத்திருக்கும் கடன் அளவு உயர்ந்திருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 4.6 சதவீதம் உயர்ந்திருக்கிறதாம்.
credit-card1.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கை எங்கடை சனம் ஒருசிலபேருக்கும்  கடன் ஒண்டடிமண்டடியாய் வந்து இறுகிட்டுதாம்.......கார்ட்டை வைச்சு விசுக்கி விளையாடிப்போட்டு இப்ப கிடந்து முழுசீனமாம்......... :o

பதிவுக்கு நன்றி தமிழரசு .

  2002 ஆம் ஆண்டு எனது  MASTERCARD ஐ  துண்டு துண்டுகளாய்  வெட்டி  எறிந்தது நினைவுக்கு வருது ...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதிவுக்கு நன்றி தமிழரசு .

  2002 ஆம் ஆண்டு எனது  MASTERCARD ஐ  துண்டு துண்டுகளாய்  வெட்டி  எறிந்தது நினைவுக்கு வருது ...........

 

ஒரு பத்துவருசத்துக்குமுதல் என்னட்டையும் ஒரு மாஸ்ரர் கார்ட் கிடந்தது......ஏதோ ஒருக்கால் அவசரத்துக்கு உருவுவம் எண்டுட்டு கார்ட்டை மிசினினுக்கை தள்ளினன்....போனது அப்பிடியே போனதுதான்....திரும்பிவரவேயில்லை....நானும் பேசாமல் அப்பிடியே விட்டுட்டன் :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி தமிழரசு .

2002 ஆம் ஆண்டு எனது MASTERCARD ஐ துண்டு துண்டுகளாய் வெட்டி எறிந்தது நினைவுக்கு வருது ...........

ஏன் பாஸ் ஏன்? அந்த நேரம் இந்த சுண்டல் உங்க யாபகத்துக்கு வராமல் போயிட்டானா? பிடிக்கல்லன்னா என்கிட்டே தந்திருக்கலாமே.....:(

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் பாஸ் ஏன்? அந்த நேரம் இந்த சுண்டல் உங்க யாபகத்துக்கு வராமல் போயிட்டானா? பிடிக்கல்லன்னா என்கிட்டே தந்திருக்கலாமே..... :(

 

 

ஏன் சுண்டல் காட்டை?

இலக்கத்தையும் இரகசிய  இலக்கத்தையும் தனி மடலூடாக தந்தாலே போதும்

மிச்சத்தை  நாங்கள் பார்த்துக்கொள்ளலாம் தானே.. :icon_idea:

சும்மாவே கடனட்டையால் பொங்குவான் தமிழன்.

இவ்வளவும் கிடைத்தால் தமிழன் சும்மா இருப்பானா? :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

படையலே வைச்சிட மாட்டம் :D

ஓடி ஓடி உழைக்க வேண்டும்
கடன் மட்டை நிறுவனங்களை வளர்க்க வேண்டும்

 

:(  :(   :(  :(   :(

ஏன் பாஸ் ஏன்? அந்த நேரம் இந்த சுண்டல் உங்க யாபகத்துக்கு வராமல் போயிட்டானா? பிடிக்கல்லன்னா என்கிட்டே தந்திருக்கலாமே..... :(

 

 ஆமாம் ஆமாம் வங்கியினால் தடை செய்யப்பட்ட அட்டையை வெட்டி எறியாமல் உங்களுக்கு எப்படித்தருவது பாஸ் .. :D  :lol:

ஏன் சுண்டல் காட்டை?

இலக்கத்தையும் இரகசிய  இலக்கத்தையும் தனி மடலூடாக தந்தாலே போதும்

மிச்சத்தை  நாங்கள் பார்த்துக்கொள்ளலாம் தானே.. :icon_idea:

சும்மாவே கடனட்டையால் பொங்குவான் தமிழன்.

இவ்வளவும் கிடைத்தால் தமிழன் சும்மா இருப்பானா? :lol:  :D

 

 விசுகு அண்ணா இப்பவும் ஞாபகம் இருக்கு வேணுமென்றால் அனுப்பிவிடுகிறேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

கவனமாகக் கையாண்டால் நன்மைகளையும் பெறலாம். ஆனால் மிகக் கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கடன் அட்டை இல்லை என்றால் வருசா வருசம் ஊருக்குப் போய் பந்தா காட்டிறவை பாடு கண்றாவியாகிடும்..! :lol:

 

வாழ்க.. கடன் அட்டை.. அது ஒரு வகை இரத்தம் உறிஞ்சும் அட்டை..!  :D

 பொருட்கள் வாங்குவதில்லை.  வட்டியில்லாமல்முதலீட்டுற்கு பாவித்திருக்கிறேன்.  பொருளாதார நெருக்கடி (2008) ஏற்படும் முன் வட்டியில்லாமல் பாவிக்கக் கூடிய வசதி இருந்தது. கடனட்டை நிறுவனங்கள் தரும் சலுகைகளை சரியாகப் பாவித்தவர்கள் பணம் ஈட்டியுள்ளார்கள். கடனட்டையைப் பாவித்து பொருட்கள் வாங்கி  வாழ்ந்தவர்களுக்கு கஷ்டம்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் குறைந்த வட்டியில் கடன் அட்டையில் பணம் எடுத்து மற்றவர்களுக்கு அதிக வட்டிக்கு கொடுத்து உழைத்து சந்தோசமாக வாழ்ந்து வந்தார் அவரிடம் வட்டிக்கு வேண்டியவர்கள் வட்டி கொடுக்காமல் கை விரிக்க அவர் இப்போது கடன் அட்டைக்காரருக்கு பயந்து தலைமறைவாக லண்டனுக்கு வெளியில் வாழ்ந்து வருகின்றார். 



எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த கடன் அட்டை எனது தந்தையாருக்கு 1998 இல் மாரடைப்பு ஏற்பட்டவேளை அவரை அப்போது காப்பாற்ற உதவியது இப்போது அதே கடன் அட்டை கடன் சுமைக்குள் தள்ளி உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஏன் சொல்கிறன் என்றால்..சில தருணங்களில் உறவினர்கள் பணம் என்று கேட்கும்போது  யாருமே கிறடிட் கார்ட்டை பயன் பயன்படுத்தி எடுத்து கொடுத்துடாதீங்கள்..அப்படிச் செய்யும் சந்தர்ப்பங்களில் சில இடங்களில் திரும்ப பெற்றுக்கொள்வது மிகவும் கஸ்ரம்..கேட்டுப் போனால் பணத்தையும் கொடுத்து வீண் பிரச்சனைகளையும் விலைக்கு வாங்க வேண்டியும் வரும்...நானும் தான் இந்த அட்டைகளால் நொந்து போய் நிக்கிறன்...இப்போ எவ்வளவுக்கு செலவுகளை சுருக்கமுடியுமோ அவ்வளவுக்கு, சுருக்கிக் கொண்டு கடன் அட்டைகளை நிரப்பும் வேலை தான் நடக்கு... :(

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேண்டாம்!! வேண்டாம்! எண்டாலும் விடுறாங்களே!!.... ஒவ்வொருக்காலும் தொலைபேசியில் இவங்களின்ற தொல்லை தாங்க ஏலாது . ஒரு வருஷத்துக்கு குறைஞ்ச 1.99% வட்டி வீதம் தான். எண்டு சொல்லிச்சொல்லி கழுத்தை அறுக்கிறாங்கள். இப்ப எங்கட மொழியிலேயே ஆக்களையும் வைச்சிருக்கினம். பெரிய தொல்லை. 'வேண்டாம்...வேண்டாம். விருப்பமில்லை எண்டு சொல்லிப்போட்டு விட்டுடுவன். கல்லூரியில் படிக்கும் போது மாணவர்களுக்கான ஒரு கடனட்டை கிடைத்தது.  பயன்படுத்தவே இல்லை. பிறகு வீடு வாங்கும் போது என் 'கிரெடிட்" எப்படி 'பார்க்கிறது? கடனட்டை பயன்படுத்தாமல் எண்டு கேட்டாங்கள். அதுக்கு பிறகுதான் ஆரம்பிச்சன்.............. 'இப்ப தலையைப்பிச்சிக்கொண்டு இருக்கிறன். ...ஏண்டா என்ற கடனட்டையை என்ற பாதிக்கு கொடுத்தன் எண்டு :) ...அள்ளி அள்ளி அதில தான் வீசி எறியறார்!!!.

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கடன் அட்டையால் மனம் உடைஞ்சு போன ஆக்களில் நானும் ஒருவன் ,

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆபத்தில் உதவியவர்களில் கடன்மட்டை முதன்மையானது. நான் எப்பவுமே என்னை கடன் அட்டை ஆளாமல் நான் அதனை ஆளப் பாவிப்பன். அதனால் கடன் தொல்லையும் இல்லை. வட்டித் தொல்லையும் வராது. விரைவில் 00 கடன் நிலுவைக்கு கொண்டு வந்திடுவேன். இன்னொன்றும் செய்வேன்.. பணம் உள்ள போது கொஞ்சமா செல்வழிச்சு.. கூடவா கட்டிவிடுவேன். பின்னர் அவசரத்துக்கு அதைப் பாவிப்பேன். கடன் அட்டை பாவிச்சதாயும் இருக்கும். கடனும் வராது. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடனடித்தேவைகளுக்கு யாரிடமும் கேட்டுக்கொண்டு இருப்பதை விட கடன் அட்டை மிகவும் பிரயோசமானது அதனை கவனமாக பாவித்தால் நல்லது, அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதுபோல் கடன் அட்டையும் நிரந்தர கடன்காரனாக்கிவிடும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.