Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓர் அனுபவம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

 

 

ஆனால் எனக்கு ஒருவிடயம் புரியவில்லை.

இருந்த இடத்தில் இருப்பவன் கோழையா?

வேறு இடம் நகர்ந்து எதையாவது தேடி ஓடுபவன் கோழையா?

 

வெளியில் இருந்து சென்றுவிட்டு அங்கு எல்லாவற்றையும் நேரடியாக பார்த்து உணர்ந்து புரிந்து நடப்பவர்கள் கோழைகள் என்பது சரியா???? :(

 

விசுகண்ணா அந்த நேரம் சமாதானத்தின் ஆரம்ப காலம்,நாங்கள் நின்ற புகையிரத நிலையம் ஓரளவுக்கு தமிழ் பிரதேசம்.புகையிரதத்தை சாரதி நடுக்காட்டில் நிப்பாட்டவில்லை ஸ்ரேசனில் தான் நிப்பாட்டினவர்...இது போன்ற காரணங்களால் நான் அம்மாவையும்,தம்பியையும் பார்த்து பொறுமையாக இருங்கோ பயப்பட[இறங்க] வேண்டாம் என்று சொன்னேன் அத்தோடு அம்மாவுக்கு காலும் ஏலாது இறங்கி,ஏறுவது எல்லாம் கஸ்டம் அதை எல்லாம் யோசித்துத் தான் சொன்னேன்...தம்பியை போய் மற்ற பெட்டியில் ஆட்கள் இருக்கினமோ என்று பார்த்திட்டு வா என்று சொன்னேன் அவர் பார்க்கவில்லை...இதாலே யாருக்கு கஸ்டம் :(

 

எதையும் யோசிக்காமல் அவச‌ர‌ப்பட்டுதல்,நிதானம்,தைரியமின்மை போன்ற பழக்கங்கள் அம்மாவிட‌மும்,தம்பியிட‌மும் இருந்தது...கொஞ்ச‌ நேர‌ம் பொறுமையாக டிரெயினில் இருந்திருந்தால் கஸ்ட‌ப்பட்டு இருக்க மாட்டோம்...நான் லண்ட‌ன் வர‌ அம்மா உட‌ம்பு ஏலாமல் ஆஸ்பத்திரிக்குத் தான் போனவ.

 

நான் சொல்ல வந்தது இது தான் தனியே வந்து அடிப்பட்டதால் வாழ்க்கை எனக்கு கற்று தந்தது அதிகம்...அவர்களுக்கு அது கிடைக்காத படியால் எதற்கெடுத்தாலும் பயமாக இருந்திருக்கும்...சிங்களவன் அந்த நேர‌ம் வெட்டி நாங்கள் அங்கு சாகத் தான் வேண்டும் என்டால் சாகத் தான் வேண்டும் பிறகு எதற்கு பயப்படுவான் என்பது தான் என் கருத்து.

 

நான் பெண் தான் அண்ணா அதற்காக தீக்குளித்துத் தான் நிருபீக்க வேண்டும் என்று இல்லைத் தானே அண்ணா

 

 

அக்கை லொஜிக் இடிக்குதே :icon_mrgreen: ???  எனக்கெண்டால் ஆர்வக்கோளாறிலை எக்குதப்பாய் கையை வைச்சுப்போட்டியள் போலை கிடக்கு  . உங்களிட்டை ஒரு கேள்வி கேக்கவேணும்  :unsure:  . நீங்கள்தானே எண்டு கேக்கிறன் . இந்த ஊரிலை நிண்டு கடைசிவரைக்கும் போராடின அவ்வளவு பெண்போராளியளும் பயந்து கொண்டும் , ஆழுமை இல்லாமலோ இருந்தவை :o :o  ???? அவயின்ரை சரித்திரங்களை உலகமே திரும்பி பாத்திது . நீங்கள் என்னெண்டால் புலத்துக்கு வந்ததாலைதான் தையிரியம் வந்ததாய் சொல்லிறியள் . எல்லாரும் கேட்டு கொண்டு இருக்கினம்  :wub:  . இதையே நான் சொன்னால்  ????

எப்பிடிதான் இப்படியெல்லாம் உங்களால்  யோசிக்க முடிகிறதோ தெரியவில்லை. :D

 

போராளிகளும் சாதாரண பெண்களும் ஒன்றில்லை தானே... :rolleyes:

ரதி அக்கா தான் ஊரில் இருந்திருந்தால் என்ற கருத்தின் மூலம் ஒரு சாதாரண பெண்ணாக தான் நினைத்து கூறியிருக்கிறார். தான் ஊரில் போராளிப்பெண்ணாக இருந்திருந்தால் என்று சொல்லவில்லை. :icon_idea:

வாசித்து கொஞ்சம் குழம்பி போனேன் ,என்ன சொல்ல வருகின்றீர்கள் என விளங்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

துணிவை விட பொதுப் போக்குவரத்தில் ரதிக்கு நம்பிக்கை இருக்கின்றது என்பதுதான் இந்தக் கதையில் நான் புரிந்துகொண்டது..

 

மேற்கு நாடுகளில் பொதுப் போக்குவரத்தில் பொறுப்பாக இருப்பதுபோன்று இலங்கையிலும் பொறுப்பாக நடப்பார்கள் என்று எதிர்பார்த்ததால்தான் ரதி இறங்கச் சம்மதிக்கவில்லை என்று தெரிகின்றது. ரயில் ட்ரைவரும் பொறுப்பாகவே இருந்துள்ளார். ஆனாலும் சரியான தகவலைச் பரிமாறாமல் அவர் எஞ்சினைக் கழற்றிக் கொண்டு போனதும், ஸ்ரேசனில் இருந்தவர்கள் ஒரு அறிவித்தல் விடுக்காமல் இருந்ததும் மற்றையவர்கள் பதட்டமடையக் காரணமாக இருந்திருக்கின்றது..

அனுபவம் நல்லா இருக்கு. :)

ஏன் அதிகமா எழுதிறதில்லை. எழுதலாமே ரதி.:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்து வந்தனால் தைரியத்தையும்,பொறுமையும்,அனுபவத்தையும் மனோ திட‌த்தையும் கொஞ்ச‌மாவது நான் கற்றுக் கொண்டேன்...ஊரிலே இருந்திருந்தால் நானும் இப்படி எல்லாத்திற்கும் பயந்து கொண்டு இருந்திருப்பேனோ தெரியாது  :unsure:

 

அக்கை லொஜிக் இடிக்குதே :icon_mrgreen: ???  எனக்கெண்டால் ஆர்வக்கோளாறிலை எக்குதப்பாய் கையை வைச்சுப்போட்டியள் போலை கிடக்கு  . உங்களிட்டை ஒரு கேள்வி கேக்கவேணும்  :unsure:  . நீங்கள்தானே எண்டு கேக்கிறன் . இந்த ஊரிலை நிண்டு கடைசிவரைக்கும் போராடின அவ்வளவு பெண்போராளியளும் பயந்து கொண்டும் , ஆழுமை இல்லாமலோ இருந்தவை :o :o  ???? அவயின்ரை சரித்திரங்களை உலகமே திரும்பி பாத்திது . நீங்கள் என்னெண்டால் புலத்துக்கு வந்ததாலைதான் தையிரியம் வந்ததாய் சொல்லிறியள் . எல்லாரும் கேட்டு கொண்டு இருக்கினம்  :wub:  . இதையே நான் சொன்னால்  ????

 

நீங்களே இப்படிக் கேட்கலாமா கோமகன்?...நான் எனக்கு நடந்ததைத் தான் எழுதியுள்ளேன்...சாதரணமான ஒரு குடும்பத்தில் பிறந்து கட்டுப்பாடுகளுடன் வளர்ந்த பெண் நான்...புலத்திற்கு வந்த பிறகு தான் தனித்து,சுயமாய்,தன்னம்பிக்கையுடன் முடிவெடுக்கிற நிலைக்கு வந்திருக்கிறேன்...அங்கு என்ட வாழ்க்கை அமைந்திருக்குமானால் எப்படி இருந்திருப்பேன் ஏன் என என்னால் எழுத முடியாது.
 
ஊரில் எங்கட போராளிகள் தைரியமாக,துணிச்சலுடன் போராடினவர்கள் தான் அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.
 
1)நான் போராளி இல்லை ஆகவே அவர்களுடைய குணங்கள் எனக்கு இருக்கவில்லை.2)போராளிப் பெண்களாயிருந்தாலும் முடிவுகளை எடுப்பது தலைவரும்,தளபதிகளும் தான்.3}சில குடும்பங்களில் தங்கள் பிள்ளைகளை பெண் பிள்ளைகளாக இருந்தாலும் மற்றவர்களோடு சோசலாக பழக விடுவார்கள்.எங்கள் குடும்பத்தில் அப்படி இல்லை அத்தோடு நாங்கள் வளர்ந்த இட‌மும் வேறு என்பதால் எந்த நேர‌மும் வீட்ட தான் நாங்கள் இருப்பது...இப்படி வளர்க்கப்பட்ட நான் திரும்பி ஊருக்குப் போகும் போது எப்படி நட‌ந்தேன் என்பதைத் தான் எழுதினேன்.
 
இது பற்றிய விளக்கத்தை துளசியும் மேலே எழுதியுள்ளார் என்டாலும் என்ட‌ கருத்தையும் நான் தந்துள்ளேன்...நன்றி

வாசித்து கொஞ்சம் குழம்பி போனேன் ,என்ன சொல்ல வருகின்றீர்கள் என விளங்கவில்லை .

 

விளங்காமல் இருப்பது தான் நல்லம் அண்ணா :) ...நான் ஒன்றும் சொல்ல வர‌வில்லை :lol: ...நான் ஊரில் போய் நிற்கும் போது நட‌ந்த சம்பவம் ஞாபகம் வந்தது அதை எழுதினேன் :D

துணிவை விட பொதுப் போக்குவரத்தில் ரதிக்கு நம்பிக்கை இருக்கின்றது என்பதுதான் இந்தக் கதையில் நான் புரிந்துகொண்டது..

 

மேற்கு நாடுகளில் பொதுப் போக்குவரத்தில் பொறுப்பாக இருப்பதுபோன்று இலங்கையிலும் பொறுப்பாக நடப்பார்கள் என்று எதிர்பார்த்ததால்தான் ரதி இறங்கச் சம்மதிக்கவில்லை என்று தெரிகின்றது. ரயில் ட்ரைவரும் பொறுப்பாகவே இருந்துள்ளார். ஆனாலும் சரியான தகவலைச் பரிமாறாமல் அவர் எஞ்சினைக் கழற்றிக் கொண்டு போனதும், ஸ்ரேசனில் இருந்தவர்கள் ஒரு அறிவித்தல் விடுக்காமல் இருந்ததும் மற்றையவர்கள் பதட்டமடையக் காரணமாக இருந்திருக்கின்றது..

 

 

எனக்கு லண்ட‌ன் போக்குவர‌த்திலே நம்பிக்கை இல்லை பிறகு எப்படி எங்கட‌ ஊர்ப் போக்குவர‌த்தில் நம்பிக்கை வரும் ^_^
 
நாங்கள் யாழ் போவதற்காக தனியார் பேருந்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்...முறிகண்டியில் பேருந்து நின்ட‌தும் எல்லோரும் சாமி கும்பிட்டு,சாப்பிட்டு பேருந்து புறப்பட்டது...டிரைவர் இஞ்சினை ஸ்ராட் பண்ணிப் போட்டு ஆட்களுக்காக வெயிட் பண்ணிக் கொண்டு இருந்தான்...பேருந்து வெளிக்கிட்டு கொஞ்ச‌ நேர‌ம் போயிருக்கும் படாரென ஒரு சத்தம் கேட்டு பெரிதாய் புகை வர‌த் தொட‌ங்கிட்டுது...டிரைவர் பஸ்சை நிப்பாட்டிப் போட்டு ஆட்கள் போகின்ற கததை திறக்க பார்க்கிறான் திறபட‌லை உட‌னே அவன் தன்ட‌ கதவால் இறங்கி கத்திக் கொண்டு ஓடிட்டான்...அதற்கு பிறகு சொன்னால் நம்ப மாட்டீங்கள் முதலில் இறங்கி வெளியால ஓடினது எல்லாம் வயசு போன ஆட்கள் தான்...எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.வயசு போக,போக எனக்கும் இப்படித் தான் உயிர் மேலே ஆசை கூடுமோ என்று பயமாயிருந்தது :(
 
அநேகமாக அந்த பேருந்தில் பிர‌யாணம் செய்தவர்கள் புலத்தில் இருந்து போனோரும் அவர்களை கூட்டிப் போக வந்தோரும் தான்...இது போகேக்குள்ள நட‌ந்தது அது வரேக்குள்ள நட‌ந்தது :lol:
 
உங்கள் அனுபத்தை இயல்பாக எழுதியுள்ளீர்கள். 
 
பெருந்தெருக்களில் மட்டும் பயணிப்பவர்களால் காட்டுப்பூக்களை என்றும் ரசிக்க முடியாது. பெருந்தெருக்களும், ஒழுங்கமைக்கப்பட்ட சுற்றாடல்களும் உலகில் எப்பிராந்தியத்திலும் ஏறத்தாள ஒரேவகை தான் இருக்கும் (எதிர்பாhக்கப்படவேண்டிய சில விடயங்களைத் தவிர்த்து). இடக்கிடையேனும் போடப்பட்ட பாதைகளை விட்டு இறங்கி நடப்பது புதிய பார்வைகளையும் புத்துணர்வையும் தரும். எனினும், பாதையினை விட்டு இறங்குவது சார்ந்து ஒரு விலை பலசமயங்களில் riskகாக உணரப்படும். பெரும்பாலும் மிடில்கிளாஸ் மேற்படி றிஸ்க்கிற்குப் பயந்து கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகளாக போடப்பட்ட பாதைகளில் மட்டும் மரத்துப்போய் ஓடிக்கொண்டிருக்கும். உங்கள் சில பதிவுகளை வாசித்தவரை, பாதையினை விட்டு இறங்கிப் பார்த்துவிட்டு வருவது உங்களிற்கு இயல்பாக வருகிறது. அது பள்ளிக்கூடம் போய்ப் பெறக்கூடிய திறன் அல்ல, அது தானாகக் கிடைக்கப்பெறவேண்டும். எனது பார்வையில் அக்குணவியல்பு கிடைத்தவர்கள் அதிஸ்ட்டசாலிகள் தான்.
  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்தது இது தான் தனியே வந்து அடிப்பட்டதால் வாழ்க்கை எனக்கு கற்று தந்தது அதிகம்...

 

நன்றி  ரதி  விளக்கத்துக்கு.

ஆனால் பெண்களிடத்தில் புலம் பெயர்ந்ததால் பெரும் மாற்றங்கள் வந்துள்ளதாக எனக்குத்தெரியவில்லை.  அதற்கு யாழ்;களமே சாட்சி.

அப்படி வந்தது என்றால் வரவேற்கத்தக்கது.

 

 

நான் பெண் தான் அண்ணா அதற்காக தீக்குளித்துத் தான் நிருபீக்க வேண்டும் என்று இல்லைத் தானே அண்ணா

 

நன்றி  சகோதரி.


:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
புலத்தில் தனித்திருந்தால் தான் எனக்கு தன்னம்பிக்கையும்,தைரியமும் வந்தது என்பதை இங்கிருக்கும் இன்னொரு தம்பி ஏற்றுக் கொள்கிறான் இல்லை...நான் ஊரில் இருந்திருந்தால் இதை விட‌ தைரியமும்,தன்னம்பிக்கையும் உள்ள பெண்ணாக இருந்திருப்பேன் என சொல்கிறான்...புலத்திற்கு வந்ததால் எனது சுயத்தையும்,அடையாளத்தையும் தொலைத்து விட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்க்கிறேனாம்...பக்குவப்பட்ட வயதில் புலம் பெயர்ந்து வந்ததனால் கிடைத்த அனுபவங்களை வைத்துக் கொண்டு இந்த அனுபவம் தான் என்னை புட‌ம் போட்டது என சொல்கிறேனாம்...இதே வயதில் ஊரில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக வாழ்ந்திருப்பேனாம்.
 
அதை விட‌ நான் எழுதிய சம்பவத்தில் நட‌ந்த மாதிரி புகையிர‌தம் இடையில் நின்டால் நீ போய் மற்றப் பெட்டியில் ஆட்கள் இருக்கினமோ என்று பார்த்திருக்கலாமே ஏன் பார்க்கவில்லை உனக்கும் தைரியம் இல்லை என சொல்கிறான்...அதை விட‌ ஸ்ரேச‌ன் மாஸ்ட‌ரிட‌ம் போய் ஏன் ரெயின் நின்ட‌து? ரெயின் வெளிக்கிடும் போதே டீச‌ல் இருக்குது என பார்த்திட்டு வெளிக்கிட்டு இருக்க கூடாதோ? போன்ற கேள்விகளை நீயும் கேட்டு இருக்கலாமே என்று சொல்கிறான்.
 
 
யாழ் களத்தில் எழுதுகின்ற ஆட்கள் தான் கேட்ட கேள்வி மாதிரி[இர‌ண்டாம் பந்தியில்] யோசிக்க மாட்டார்களோ என்று கேட்கிறான்... பெரும்பாலான ஆட்கள் ஒப்புக்கு சப்பாக கதைக்கு கருத்து எழுதுகிறார்களாம். உண்மை
எழுதுகிறார்கள் இல்லையாம் என்று ஏதேதோ சொன்னான்
 
இது என்ட‌ கருத்து.எல்லோரும் எழுதுகிறார்கள் என்று நானும் ஏதோ எழுதப் போய் நான் படுகின்ற பாடு பெரும்பாடு :(

பெரும்பாலான ஆட்கள் ஒப்புக்கு சப்பாக கதைக்கு கருத்து எழுதுகிறார்களாம். உண்மை

எழுதுகிறார்கள் இல்லையாம் என்று ஏதேதோ சொன்னான்
 
அதே.............  கடைசியில சொந்த தம்பி சொல்லிதையாவது கேட்டிருக்கலாம் :lol::D .

அதை விட‌ ஸ்ரேச‌ன் மாஸ்ட‌ரிட‌ம் போய் ஏன் ரெயின் நின்ட‌து? ரெயின் வெளிக்கிடும் போதே டீச‌ல் இருக்குது என பார்த்திட்டு வெளிக்கிட்டு இருக்க கூடாதோ? போன்ற கேள்விகளை நீயும் கேட்டு இருக்கலாமே என்று சொல்கிறான்.
 
யாழ் களத்தில் எழுதுகின்ற ஆட்கள் தான் கேட்ட கேள்வி மாதிரி[இர‌ண்டாம் பந்தியில்] யோசிக்க மாட்டார்களோ என்று கேட்கிறான்... பெரும்பாலான ஆட்கள் ஒப்புக்கு சப்பாக கதைக்கு கருத்து எழுதுகிறார்களாம். உண்மை
எழுதுகிறார்கள் இல்லையாம் என்று ஏதேதோ சொன்னான்.

உங்கள் தம்பியிடம் சொல்லுங்கள். ஒரு பெண்ணுக்கு ,மனதில் துணிச்சல் இருக்க வேண்டும். ஆனால் அதுவே நாட்டு நிலைமை விளங்காமல் வெளிநாட்டில் கேள்வி கேட்பது போல் அங்கும் கேள்விகளை அடுக்கிக்கொண்டு செல்லும் அளவுக்கு அசட்டுத் துணிச்சலாக இருக்கக்கூடாது.

ஸ்டேஷன் மாஸ்டரிடம் போய் நீங்கள் இப்படி கேட்கப்போய் அவருக்கு அது பிடிக்காவிட்டால் இடை நடுவில் உங்களை விட்டிட்டு செல்லவோ அல்லது வேறு பிரச்சினை தரவோ சந்தர்ப்பம் உள்ளது. இரவு நேரத்தில் அங்கு உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வேறு மக்கள் வந்து பாதுகாப்பு தரமாட்டார்கள்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நல்ல அனுபவ கதையை சொன்ன ரதி அக்காவுக்கு மிக்க நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.