Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போப் பறக்க விட்ட புறாவை பட்டென்று பிடித்துக் கடித்துக் குதறிய சீ கல்... வாடிகனில் 'ஷாக்'!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாடிகன்சிட்டி: வாடிகன் சிட்டியில், போப்பாண்டவர் பறக்க விட்ட புறாவை, சீகல் எனப்படும் கடற்பறவை படு வேகமாக பாய்ந்து வந்து கடித்துக் குதறி ரத்தக் களறியாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் இதை அதிர்ச்சியுடன் பார்த்து விக்கித்து நின்றனர்.

சமாதானத்தின் அடையாளமாக பார்க்கப்படுவது புறா. ஆனால் இந்த சமாதானப் புறாவை கடித்துக் குதறி அனைவரையும் பதற வைத்து விட்டது சீகல் பறவை ஒன்று.

போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் நேற்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை உரையை நிகழ்த்தினார். அதற்கு முன்பாக அவர் புறா ஒன்றை பறக்க விட்டார். அப்போது வாடிகன் சிட்டி வளாகத்தில் வசித்து வரும் சீகல் பறவை ஒன்று படு வேகமாக புறாவை நோக்கி ஓடி வந்து அதைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்து போப்பாண்டவர் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கடும் வேதனையில் துடித்தபடி புறா சீகல்லிடமிருந்து தப்பித்து ஓடிப் பறந்ததைப்பார்த்து கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர். புறாவை சரமாரியாக கடித்துக் குதறிய பின்னர் அந்த சீகல் பறவை அங்கிருந்து பறந்தோடி விட்டது.

இத்தனைக்கும் ரோம் நகரிலிருந்து வந்த 2000 இளைஞர்கள் நடத்திய அமைதிப் பேரணி போப்பாண்டவர் உரை நிகழ்த்திய செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் நேற்று முடிவடைந்தது. இதன் அறிகுறியாகவே புறாவைப் பறக்க விட்டார் போப்பாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thatstamil

சீகல் பறவை வடிவில் வந்தது பேயாக இருக்குமோ ..... :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதோ அசம்பாவிதம் நடக்க போவதன் அறிகுறி இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த போவதாக கூட இருக்கலாம் ஏன்னா எம்புட்டு அடிச்சாலும் தாங்கிக்க கூடியவங்க அவங்க தான்

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் சீகல் பறவையையே பறக்க விடுகிறது தான் நல்லது! அதுவும் வெள்ளை தானே, சுண்டல்!

 

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு  இதைத்தான் வத்திக்கானும் செய்தது

இன்று அந்த சீகல்பறவை இவர்களுக்கு நிலமையை  நேரடியாக கூறிச்சென்றுள்ளது

 

இறந்த புறாவுக்கும் அஞ்சலிகள்.

எமக்காக  தன்னை பணயம் வைத்த சீகல் பறவைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

புறாவைப் பறக்கவிடுவதால் உலக சமாதானம் வந்துவிடாது என்பதை சீ கல் உணர்த்திவிட்டது..! :D

இனிமேல் சீகல் பறவையையே பறக்க விடுகிறது தான் நல்லது! அதுவும் வெள்ளை தானே, சுண்டல்!

 

அடப் படு பாவிகளே! கொஞ்சம் அசந்து தூங்கினால் நீலப்பறவையையும் கூட்டுக்குள் அடைத்து கொண்டுபோய் வத்திக்கானில் அல்ல ஆப்கானிஸ்தானிலும் பறக்க விடமாட்டீர்கள் என்பதற்கு உத்தரவாதம் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

அடப் படு பாவிகளே! கொஞ்சம் அசந்து தூங்கினால் நீலப்பறவையையும் கூட்டுக்குள் அடைத்து கொண்டுபோய் வத்திக்கானில் அல்ல ஆப்கானிஸ்தானிலும் பறக்க விடமாட்டீர்கள் என்பதற்கு உத்தரவாதம் உண்டா?

 

அது  தமிழ்சிறியின் கையில்தான் உள்ளது. :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான சமாதானத்துக்கு ( புறா ) ஆபத்து (சீகல்) எங்கிருந்தும் வரும்.

 

 

சமாதானம் அமைதி  தழைத்தோ ங்குவது   கஷ்டம் ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதோ அசம்பாவிதம் நடக்க போவதன் அறிகுறி இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த போவதாக கூட இருக்கலாம் ஏன்னா எம்புட்டு அடிச்சாலும் தாங்கிக்க கூடியவங்க அவங்க தான்

ஏன் உங்களுக்கு எங்க ஊர் மேல இவ்வளவு கொலைவெறி????

அது  தமிழ்சிறியின் கையில்தான் உள்ளது. :lol:  :D  :D

 

 

hahahaha............ உண்மை தான் விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வாடிகன்சிட்டி: வாடிகன் சிட்டியில், போப்பாண்டவர் பறக்க விட்ட புறாவை, சீகல் எனப்படும் கடற்பறவை படு வேகமாக பாய்ந்து வந்து கடித்துக் குதறி ரத்தக் களறியாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

வடகொரியாவில இருந்து வந்த சீகல் போல..அதுதான் இவ்வளவு கொலைவெறியோட இருந்திருக்கு... :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உங்களுக்கு எங்க ஊர் மேல இவ்வளவு கொலைவெறி????

பாகிஸ்தான் எம்புட்டு அடிச்சாலும் தாங்குரிங்க மிஞ்சி மிஞ்சி போனா போ நாங்க உன் கூட கிரிக்கெட் விளாட மாட்டம் எண்டு சொல்லுரிங்க :(

இதைதான் சொவது கிளியை பிடித்து பருந்திடம் கொடுப்பது என்று.

 

மிருகவதை நிறுவனங்கள் இந்த சமய வாதிகள் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். :(

 

இனி தாங்கள் ஒருவரை ஒருவர் சமாதானம் என்று ஏமாற்ற ஒரு புறாவை வதைக்காமல் இருக்க பழகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைதான் சொவது கிளியை பிடித்து பருந்திடம் கொடுப்பது என்று.

 

மிருகவதை நிறுவனங்கள் இந்த சமய வாதிகள் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். :(

அதுதானை......பேசாமல் போப்பை பிடிச்சுக்கொண்டு வந்து இதுக்கு தண்டனையாக கோமகன் அண்ணை இணைக்கும் விலங்குகளின் படங்களை இணங்காணசொல்லுவமா மல்லை அண்ணை..? :D

அதுதானை......பேசாமல் போப்பை பிடிச்சுக்கொண்டு வந்து இதுக்கு தண்டனையாக கோமகன் அண்ணை இணைக்கும் விலங்குகளின் படங்களை இணங்காணசொல்லுவமா மல்லை அண்ணை..? :D

கவனம் நீங்கள் பிள்ளையார் பிடிக்க சில வேளை குரங்காய் மாறிவிடும்.

 

சீகளும் புறாவை பிடிக்குது. வேறையளும் புறாவை பிடிக்க................

 

கோமகன் என்னென்னத்தின்ரையோ படத்தையெல்லாம் இதென்ன வில்லண்டம் பிடிச்சதுகள் என்று அந்த திரியில் போட்டு தொலைக்க போகிறார்.... :D

 

விவாதம் இல்லாமல் பச்சை  எனக்கு வரும். ஆனால் மரியாதை இல்லை. :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பரசருக்கு மூஞ்சையில் அடிச்சமாரி செஞ்ச சீகலுக்கு வாழ்த்துக்கள். அடுத்த முறை புறாவை இல்ல ஒரு பூச்சியக் கூட பறக்க விடக்கூடாது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.