Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் உதைத்தீ( ர )ர்களே ??

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் உதைத்தீ ( ர )ர்களே ??

 

tears.jpg?w=480&h=316

 

இருட்டில் இருந்த உங்களுக்கு

வெளிச்சம் காட்டியவர்கள் நாங்கள்

உங்கள் பசியெடுத்தபொழுது

குறிப்பறிந்து ஊட்டியவர்கள் நாங்கள்.....

உங்கள் வலி கண்டு எங்கள் வலியாய்

துடித்தவர்கள் நாங்கள்.......

 

உங்கள் வெம்பலுக்கும் தேம்பலுக்கும்

குளிர்நிலாவாய் இருந்தோம் நாங்கள்.....

எங்களுக்கு என்று ஒரு சந்தோசம்

நீங்கள் கண்டதுண்டா ??

 

உங்கள் வாழ்கையில்

மெழுகுதிரியாய் எரியும் எங்களை

ஒருகணம் உங்கள் ,

பார்வை திரும்பியதுண்டா ??

 

உங்கள் ஏற்றம் இறக்கம்

எதிலும் ஒன்றாய் கலந்த

எங்களை

ஏன் எட்டி உதைத்தீ(ர)ர்களே ??

 

மைத்திரேயி

19/01/2013

Edited by மைத்திரேயி

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு கவிதையுடன் வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். உலகம் இதுதான் மைத்திரேயி.

உங்கள் பசியெடுத்தபொழுது


குறிப்பறிந்து ஊட்டியவர்கள் நாங்கள்.....


உங்கள் வலி கண்டு எங்கள் வலியாய்

துடித்தவர்கள் நாங்கள்.......

 

தாய்மை உணர்வுக்கு இதைவிட வேறு வரிகள் இல்லை . இன்னும் சிறிது யோசித்து நீங்கள் காண்கின்ற சம்பவங்களை மனதில் உருப்போட்டு எழுதினால் வளமான எதிர்காலம் உண்டு . தொடருங்கள் உங்கள் ஆக்கங்களை . உங்கள் கவிதைக்கு எனது பாராட்டுக்கள் மைத்திரேயி :) :) :) .

 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோரின் பாச பிணைப்பின் வலி யைக் காட்டுகிறது. புதியவர் உங்களுக்கு நல்ல திறமை உண்டு ..

 

மேலும் பகிருங்கள். காத்திருந்து வாசிக்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் ஒரு கவிதையுடன் வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். உலகம் இதுதான் மைத்திரேயி.

 

இதுதான் உலகம் என்று ஒதுங்கி இருக்கவும் ஏலாமல் இருக்கு . உங்களுக்கு நன்றி சொல்லிறன் மொசப்பத்தேமியா சுமேரியர் .

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் தான் பெண்களை எட்டி உதைக்கின்றார்கள், அது எந்த உறவாக இருந்தாலும், எனவே பெண்களா பார்த்து திருந்தினா ஒழிய இந்த பிரச்சனை தீராது.

 

நன்றி பகிர்வுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் துயரத்தை அழகாக எடுத்து வந்துள்ளீர்கள்..! :D நன்றி..!! :D

ஆண்களின் துயரத்தை அழகாக எடுத்து வந்துள்ளீர்கள்..! :D நன்றி..!! :D

 

விழுந்து விழுந்து :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெற்றோரின் பாச பிணைப்பின் வலி யைக் காட்டுகிறது. புதியவர் உங்களுக்கு நல்ல திறமை உண்டு ..

 

மேலும் பகிருங்கள். காத்திருந்து வாசிக்கிறோம்.

 

ஓ உங்கடை பார்வை இப்பிடியும் இருக்கோ நிலாமதி அக்கா ?? உங்கடை நேரத்துக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

நம்மைத் தீய்த்தோம் என்று தாய்மை எக்காலத்திலும் பேசியது கிடையாது மைத்ரேயி அப்படி பேசினால் அதன் மேன்மை காய்ந்துவிடும். :rolleyes:  இது கருத்துத்தான்

 

உங்களுடைய எழுத்துகள் உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்துகின்றன. பாராட்டுகள்

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களின் துயரத்தை அழகாக எடுத்து வந்துள்ளீர்கள்..! :D நன்றி..!! :D

 

வடிவாய் வாசிச்சனிங்கள் தானே இசைக்கலைஞன் அண்ணை ??  நீங்கள் வேலாயுதம் மகாவித்தியாலயத்திலையோ படிச்சனிங்கள் ??

கருத்துக்களை சொன்ன உடையார் , தப்பிலி , வல்வைசகாறா எல்லாருக்கும் என்ரை நன்றியை சொல்லிறன் .

  • கருத்துக்கள உறவுகள்

எட்டி உதைத்தால் முட்டி மோதிவிட்டு முன்னேறிச் செல்லாமல் மூலையில் உட்காந்து மூக்கைச் சிந்தக்கூடாது. தாய்மையாக இருந்தாலென்ன? ஆண்மையாக இருந்தாலென்ன? அவரவர் பாதையில் உறுதியுடன் நடக்கலாம். மைத்திரேயிக்கு நல்ல கவியாற்றல் உள்ளது. பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட்டி உதைத்தால் முட்டி மோதிவிட்டு முன்னேறிச் செல்லாமல் மூலையில் உட்காந்து மூக்கைச் சிந்தக்கூடாது. தாய்மையாக இருந்தாலென்ன? ஆண்மையாக இருந்தாலென்ன? அவரவர் பாதையில் உறுதியுடன் நடக்கலாம். மைத்திரேயிக்கு நல்ல கவியாற்றல் உள்ளது. பாராட்டுக்கள்.

 

அது..

 

இதுவே எனது கருத்தும்..              

 

நன்றி அக்கா.. சகலகலாவல்லவி (சரியோ தெரியலை :rolleyes: ) நீங்கள் இன்னும் அதிக ஆக்கங்களை தாருங்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட்டி உதைத்தால் முட்டி மோதிவிட்டு முன்னேறிச் செல்லாமல் மூலையில் உட்காந்து மூக்கைச் சிந்தக்கூடாது. தாய்மையாக இருந்தாலென்ன? ஆண்மையாக இருந்தாலென்ன? அவரவர் பாதையில் உறுதியுடன் நடக்கலாம். மைத்திரேயிக்கு நல்ல கவியாற்றல் உள்ளது. பாராட்டுக்கள்.

 

உங்கடை கவிதையளும் வாசிக்கிறனான்.  நல்லாயிருக்கும் . வேலி  போட்ட சனங்களிட்டை இருந்து அவ்வளவு ஈசியா வெளியலை வந்து முன்னேறாலாது . அப்பிடி வெளியிலை வாற பொம்பிளையளுக்கு வேலி  போட்ட சனம் சொல்லிற பட்டம் வேறை அக்கா . உங்கடை கருத்துக்கு நன்றி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது..

 

இதுவே எனது கருத்தும்..              

 

நன்றி அக்கா.. சகலகலாவல்லவி (சரியோ தெரியலை :rolleyes: ) நீங்கள் இன்னும் அதிக ஆக்கங்களை தாருங்கள். :)

 

நன்றி உங்கடை கருத்துக்கு.  நீங்கள்தான் என்னைப்பத்தி சொல்லவேணும் தம்பி ஜீவா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.