Jump to content

ஈகப்பேரொளி முருகதாசன் 4ம் ஆண்டு நினைவு நிகழ்வும்! 21 ஈகியர் நினைவுக்கல் நடுகையும்!


Recommended Posts

தன்னுடைய உறவுகள் ஈழத்தில் கொத்துக் கொத்தாக துடித்து மடிவதை அறிந்து தன உள்ளத்திலே தீயை மூட்டி உலகத்துக்கும் உலகத் தமிழினத்துக்கும் ஈர ஒளியான எங்கள் காவல் தெய்வத்தின் 4ம் ஆண்டு நிகழ்வு எழுச்சி நாள் அனைவரும் ஒற்றுமையோடு அலையாக அணி திரண்டு உலகத்தின் கண்களை திறவுங்கள் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.


தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்

 

 

ஈகப்பேரொளி முருகதாசன் 4ம் ஆண்டு நினைவு நிகழ்வும்! 21 ஈகியர் நினைவுக்கல் நடுகையும்!


ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக தன் உடலில் தீயிட்டு இலங்கைத் தீவில் இனப்படுகொலை செய்யப்படும் தமிழர்களின் உயிரைக் காக்கக்கோரி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 'ஈகப்பேரொளி" முருகதாசனின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் லண்டனில் நினைவுவணக்க நிகழ்வும், நினைவுக்கல் நடுகையும் நடைபெறவுள்ளது.

 

தமிழர்களின் உரிமைக்காய் தன் உடலில் தீயிட்டு 1995 ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்த 'அப்துல் ரவூப்" தொடக்கம் 2012 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தம்மை தியிற்கு இரையாக்கி வீரச்சாவைத் தழுவிய 21 ஈகியர்கள் நினைவாகவும் 'நினைவுக்கல் நடுகை" இடம்பெறவுள்ளது.


இவர்களில் அதிகமானோர் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் சிங்கள பேரினவாத அரசாலும், அரச படைகளாலும் தமிழினம் பல்லாயிரக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது அதனைத் தடுக்கக் கோரி தமிழகத்திலும், மலேசியாவிலும், ஜெனீவாவிலும் தம் உடலில் தீயிட்டு உயிர்த்தியாகம் செய்து தம் உறவைக்காக்கக் கோரிய வீர மறவர்கள்.

 

'ஈகப்பேரொளி" முருகதாசனின் 4ம் ஆண்டில் (12.02.2013) அவரது வித்துடல் விதைக்கப்பட்ட அதே இடத்தில் இந்த '21 ஈகியர்கள்" நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல் நடுகை செய்யப்படவுள்ளது.

 

அப்துல் ரவூம், முத்துக்குமார், முருகதாசன், செங்கொடி உட்பட்ட 21 ஈகியர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டும், தேசிய அடையாளங்களை மிகவும் தற்றூபமாக உட்புகுத்தியும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 'நினைவுக்கல்" பிரித்தானிய மண்ணில் நிறுவப்படுவதானது தமிழர் வரலாற்றில் முக்கிய பதிவாகவும் அமையவுள்ளது.

 

539754_477946535618565_442847370_n.jpg

 

'ஈகப்பேரொளி" முருகதாசனின் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் 12.02.2013 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:00 மணியில் இருந்து 2:30 மணிவரை 'ஈகப்பேரொளி" முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்ட இடமான Hendon Crematorium, Holders Hill Road, NW7 1NB எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

 

இந் நிகழ்விற்கு அனைத்து மக்களையும் வந்து கலந்துகொண்டு ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் தங்கள் உயிரை ஆயுதமாக்கி உடலில் தீயிட்டு சர்வதேசங்களையும், உறங்கிக் கொண்டிருந்த தமிழர்களையும் விழிப்படையச் செய்த 21 ஈகியர்களுக்கும் மலர்தூவி மனம் நெகிழ்ந்து வீர வணக்கம் செலுத்த அனைவரையும் உரிமையுடம் அழைக்கிறோம்



http://www.vmurugathas.org/



Link to comment
Share on other sites

அகிம்சை போராளிகளுக்கு வீர வணக்கம் !

 

Link to comment
Share on other sites

முருகதாசன் குடும்பத்தினரால் செய்யப்பட்ட இந்த நடுகல் நடுகையை "தேசவிரோதிகளால் முருகதாசின் கல்லறை இடிப்பு" என்று ஒருங்கிணைப்புக் குழு ஆதரவுத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

http://www.sankathi24.com/news/26888/64//d,fullart.aspx

முருகதாசன் குடும்பத்தினரும் மற்றும் நடுகல் நடுகையில் பங்குபற்றியவர்களும் "கேபி குழுவாகவும்", தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகதாசன் குடும்பத்தினரால் செய்யப்பட்ட இந்த நடுகல் நடுகையை "தேசவிரோதிகளால் முருகதாசின் கல்லறை இடிப்பு" என்று ஒருங்கிணைப்புக் குழு ஆதரவுத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

http://www.sankathi24.com/news/26888/64//d,fullart.aspx

முருகதாசன் குடும்பத்தினரும் மற்றும் நடுகல் நடுகையில் பங்குபற்றியவர்களும் "கேபி குழுவாகவும்", தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

அவங்க தான் குழம்பிப்போய் இருக்காங்கன்னா.. நீங்க அதை எல்லா இடமும் காவிக்கிட்டு.. திரியுறதின்ர நோக்கம் என்னவோ..???! :(:unsure::rolleyes:

 

மக்களுக்காக தம்மையே அர்ப்பணித்தவர்களை அவர்களின் நினைவு நாட்களிலாவது மக்கள் சற்று நேரம்.. நிம்மதியா நினைக்க.. பிரார்த்திக்க விடுங்கள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

யார் குழம்பிப் போயிருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்? மிகத் திட்டமிட்டு முருகதாசன் குடும்பத்தினரையும், நடுகல் நடுகைக்கு ஆதரவாக நின்றவர்களையும் இழிவுபடுத்தும் ஒரு செய்தியை ஒருங்கிணைப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு தளம் வெளியிடுகிறது. இந்தச் சதி செயலை "ஒரு குழப்பம்" என்று மென்மைப்படுத்த வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏன் வந்தது?

மக்களுக்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு செய்யப்படுகின்ற ஒரு நடுகல் நிகழ்வை இங்கே கொச்சைப்படுத்தியது யார்? மக்களை நிம்மதியாக இருக்க விடச் சொல்லி அவர்களை அல்லவா கேட்டிருக்க வேண்டும்?

இவர்கள் செய்கின்ற இப்படியான நாசகார சதிச் செயல்களை அம்பலப்படுத்த நான் தொடர்ந்தும் செய்திகளை காவி வருவேன். அது என்னுடைய ஒரு பணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் செய்கின்ற இப்படியான நாசகார சதிச் செயல்களை அம்பலப்படுத்த நான் தொடர்ந்தும் செய்திகளை காவி வருவேன். அது என்னுடைய ஒரு பணி.

 

இதை மிக நீண்ட காலமாகச் செய்கிறீங்க. இப்படியான நாசகாரத்தில் எத்தனை சதவீதத்தை அம்பலப்படுத்தி அழிச்சீர்கள்..! நீங்களும் இப்படிச் சொல்லிக்கிட்டே இருக்கீங்க. அவங்களும் செய்துகிட்டே இருக்காங்க. இது என்னவோ இரண்டு பேரும் பேசிப் பறைச்சு மக்கள் தலையில மிளகாய் அரைக்கிறதாத் தான் தெரியுது. கற்பனை பண்ணிக்கலாம். சும்மா சும்மா நீங்களே.. பெரிய அளவில அதைச் செய்யக் கூடாது.. அதையே பெரிசாக் காட்டிட்டு இருக்கக் கூடாது. அதுதான் நாசகாரிகளை ஊக்குவிக்கும் செயல்..!

 

இதன் மூலம் தற்கொடையாளர்கள் தான் மதிப்பிழக்கச் செய்யப்படுகின்றனர். எவனோ நாலு பேரை சண்டை போட வைச்சு.. நாற்பது பேர் போடுறதாக் காட்டி பிரச்சனைகளில் சிக்க வைத்து மக்களை திசை திருப்பும் எதிரிகளின் வேலைக்கு இலவசமாக பரப்புரை செய்வது போல இருக்குது இது. :icon_idea:

Link to comment
Share on other sites

முருகதாசன் குடும்பத்தினரால் செய்யப்பட்ட இந்த நடுகல் நடுகையை "தேசவிரோதிகளால் முருகதாசின் கல்லறை இடிப்பு" என்று ஒருங்கிணைப்புக் குழு ஆதரவுத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

http://www.sankathi24.com/news/26888/64//d,fullart.aspx

முருகதாசன் குடும்பத்தினரும் மற்றும் நடுகல் நடுகையில் பங்குபற்றியவர்களும் "கேபி குழுவாகவும்", தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

இந்த செய்திதான் உண்மை இல்லை மற்றையது தான் உண்மையானது என அறுதியான ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை.

 

அத்துடன் அந்த தியாகியின் குடும்பத்தை செய்திகளில் இணைப்பதும் நாகரீகமாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

அகூதா! நீங்கள் இணைத்த பிரசுரத்தில் நிகழ்வை முருகதாசன் குடும்பத்தினரே செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பத்தினரால் கல்லறையின் வடிவமைப்பு மேற்படுத்தப்பட்டு நடுகல் அமைக்கப்பட்டதை "கல்லறை இடிப்பு, தேசவிரோதிகள் மிலேச்சத்தனம்" என்று இவர்களால் எப்படி செய்தி போட முடிகிறது? இதை நாம் இன்னும் எத்தனை காலம் அனுமதிக்கப் போகிறோம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

murugathasan.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் இந்த காவித்திரியும் செயலை வன்மையாக கண்டிக்கின்றேன்.

 

மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன்

உங்களுக்குள் நடக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளை (வியாபார ஊடக) தீர்க்க

மக்களுக்காக மரணித்தவர்களுக்கான அஞ்சலி  நிகழ்வுகளை பயன்படுத்தாதீர்கள்

Link to comment
Share on other sites

வீர வணக்கம் !

Link to comment
Share on other sites

அகூதா நீங்கள் சென்றவருடம் கல்லறை திறந்தபோது   நீங்கள் இணைத்த இணைப்பு கீழ் உள்ளது,

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111904

 

அதை மீண்டும் உடைத்து இப்போ  திரும்ப கட்டுகிறார்களா? அப்படியாயின்  இது ஒவ்வொரு வருடமும் நடைபெறபோகிறதா?  தயவு செய்து மாவீரர்களை நிம்மதியாக உறங்க விடுங்கள்.

Link to comment
Share on other sites

அகூதா நீங்கள் சென்றவருடம் கல்லறை திறந்தபோது   நீங்கள் இணைத்த இணைப்பு கீழ் உள்ளது,

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111904

 

அதை மீண்டும் உடைத்து இப்போ  திரும்ப கட்டுகிறார்களா? அப்படியாயின்  இது ஒவ்வொரு வருடமும் நடைபெறபோகிறதா?  தயவு செய்து மாவீரர்களை நிம்மதியாக உறங்க விடுங்கள்.

 

 

சுந்தரம்,

இந்த திரியின் மூல செய்தியில் இவ்வாறு உள்ளது ( குறிப்பு நான் இணைத்தவன் மட்டுமே, அதன் செய்கைகளுக்கு காரணம் ஆனவன் அல்ல), அதாவது 21 ஈகியர்கள் நினைவாக நினைவுகல் அமைக்கப்பட உள்ளது.

 

'ஈகப்பேரொளி" முருகதாசனின் 4ம் ஆண்டில் (12.02.2013) அவரது வித்துடல் விதைக்கப்பட்ட அதே இடத்தில் இந்த '21 ஈகியர்கள்" நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல் நடுகை செய்யப்படவுள்ளது.

 

இது நீங்கள் குறிப்பிட்ட இணைப்பில் இருந்து

 

மாவீரர் வாரத்தில் 5 ஆம் நாளான இன்று (25/11/2012) மதியம் 12 மணியளவில் பிரித்தானியா தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினரின் மாவீரர் பணிமனைமுன்னிலையில் ஈகைச்சுடரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறை திறந்துவைக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

விசுகு!

உங்களுக்கு ஏன் இத்தனை பதட்டம்? இங்கே இணைக்கப்ட்டு செய்தி சம்பந்தமாகவே என்னுடைய கருத்தும் அது பற்றிய இணைப்பும் அமைந்தது. இதிலே என்னை எதற்கு கண்டிக்கிறீர்கள்?

உங்களிடம் உண்மையில் "அறம்" என்கின்ற ஒன்று இருந்தால் முருகதாஸ் குடும்பத்தினரையும் மற்றும் நடுகல் நட்டவர்களையும் "தேசவிரோதிகள்" என்றும் "மிலேச்சவாதிகள்" என்றும் செய்தி வெளியிட்டவர்களை கண்டித்திருக்க வேண்டும்.

உங்களால் முடிந்தால் இப்படியான செயல்களை நிறுத்தும்படி அவர்களை கோருங்கள். நீங்கள் பேசுங்கள். நான் என்பாட்டில் போகிறேன்.

Link to comment
Share on other sites

கடந்த வருடம். தங்கள் அரசியல் இலாபத்திற்காக அவசரமாக அனைத்துலக செயலகத்தால். முருகதாசனின் குடும்பத்தினரின் அனுமதியின்றி நிறுவப்பட நினைவுகல்லை முருகதாசனின். குடும்பத்தினரே அகற்றி விட்டு இந்தியாவில் இருந்து அவர்களால் செய்து எடுத்து வரபட்ட நினவுகல்லை நிறுவியுள்ளனர் பழைய நினைவுகல்லை தங்கள் வீட்டு வளவில் கொண்டுபோய் வைத்துள்ளார்கள் இதுதான். நடந்தது. தங்கள் கல்லை பிடுங்கிய கோபத்தில் அனைத்துலக செயலகம் முருகதாசன் குடும்பத்தை துரோகி ஆகியுளர்கள்.

Link to comment
Share on other sites

கடந்த வருடம். தங்கள் அரசியல் இலாபத்திற்காக அவசரமாக அனைத்துலக செயலகத்தால். முருகதாசனின் குடும்பத்தினரின் அனுமதியின்றி நிறுவப்பட நினைவுகல்லை முருகதாசனின். குடும்பத்தினரே அகற்றி விட்டு இந்தியாவில் இருந்து அவர்களால் செய்து எடுத்து வரபட்ட நினவுகல்லை நிறுவியுள்ளனர் பழைய நினைவுகல்லை தங்கள் வீட்டு வளவில் கொண்டுபோய் வைத்துள்ளார்கள் இதுதான். நடந்தது. தங்கள் கல்லை பிடுங்கிய கோபத்தில் அனைத்துலக செயலகம் முருகதாசன் குடும்பத்தை துரோகி ஆகியுளர்கள்.

 

நன்றி தகவல்களுக்கு சாத்திரி,

 

இந்தியாவில் இருந்து புலிகளின் இலச்சினைகளுடன் ஒருகல்லறை தருவிக்கப்பட்டுள்ளது,  அதாவது தாயகமக்களுக்காக புலம்பெயர் தேசத்தில் தன்னையே ஆகுதியாக்கிய அந்த அகிம்சை போராளிக்கு  புலிச்சாயம் பூசப்பட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

உலகத் தமிழினமே உங்களுக்கு ஒன்றைத் கூறுகின்றேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகின் மனசாட்சியை விழித்தெழ வைக்க உலக சமூகத்தின் மனதையும், அறிவையும் வென்றெடுக்க பாடுபடவேண்டும். எமது சுயத்தை நிலைநிறுத்தி எமது உரிமையை நாமே வென்றெடுப்பதற்கான வாய்ப்பும் இதுவே.

 

எனது தாயக உறவுகளே சிங்கள அரசின் போலி முகத்தைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.
 

அதன் உண்மை முகம் கோரமானது என்பதை பல தடவை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். உடலால் தொலைவிலிருந்தாலும் உணர்வால் உங்களுடனேயே நானும் இருக்கிறேன்.எம்மைக் களைப்படையச் செய்து சோர்வுற வைத்து எமது உரிமைகளை எம்மிடம் இருந்து பறித்துவிடலாம் என சிங்கள அரசு நினைக்கிறது. சிங்கள அரசின் இந்த எண்ணத்தை சிதறடித்து உறுதியுடன் இருந்து எமது உரிமைகளை நாமே மீட்போம்.

 

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் யேசுபிரான். நாமும் எமது உரிமைகளைக் கேட்போம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருப்போம். சுதந்திரத்தின் கதவு ஒருநாள் எமக்காக் திறக்கப்படும். எம் மக்களின் நல்வாழ்விற்கான கதவு ஒருநாள் திறக்கப்பட்டே தீரும். நாங்கள் கேட்போம். எமது உரிமைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம். உலகத்திடம், உலக மனச்சான்றின் முன் தொடர்ந்து கேட்போம்.

 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

 

உண்மைக்காய் உயிர்தரும் தமிழன்
 

முருகதாசன்

 

மேலே உள்ள கூற்று/வேண்டுதல் எமக்கு எல்லோருக்கும் பொருந்தும் !

Link to comment
Share on other sites

ஒரு பக்கம் புலிக்கொடியை எறிந்து விட்டார்களாம். இன்னொரு பக்கம் புலிச்சாயம் பூசி விட்டார்களாம். ஏதாவது புரிகிறதா??!!

Link to comment
Share on other sites

அகூதா! நீங்கள் இணைத்த பிரசுரத்தில் நிகழ்வை முருகதாசன் குடும்பத்தினரே செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பத்தினரால் கல்லறையின் வடிவமைப்பு மேற்படுத்தப்பட்டு நடுகல் அமைக்கப்பட்டதை "கல்லறை இடிப்பு, தேசவிரோதிகள் மிலேச்சத்தனம்" என்று இவர்களால் எப்படி செய்தி போட முடிகிறது? இதை நாம் இன்னும் எத்தனை காலம் அனுமதிக்கப் போகிறோம்?

 

இது நடந்தது பிரித்தானியாவில். எனவே இது ஒரு காவல்துறை விசராணை நடக்கும் நிலையில் இருக்கும் என எண்ணுகின்றேன். அது பற்றிய முடிவுகள் தெரிந்தபின்னர் உண்மைகள் முழுமையாக வெளியே வரலாம்.

Link to comment
Share on other sites

மேலே உள்ள கூற்று/வேண்டுதல் எமக்கு எல்லோருக்கும் பொருந்தும் !

 

 

நன்றி அகூதா உங்கள் தகவல்களுக்கு.

Link to comment
Share on other sites

 

 

murugathaasan11.jpg?resize=310%2C266தொடர்ந்தும் புலம்பெயர் மக்களை குழப்பத்திலும் இடைவிடாத பிரச்சனைகளுக்கு மத்தியில் வைத்திருந்தால் இன அழிப்பு போர்க்குற்றம் போன்றவற்றில் இருந்து தப்பிக்க அவகாசமும்,

சிங்கள பயங்கரவாதி மகிந்த உலக நாடுகளுக்கு வலம் வரும்போது எதிர்ப்புகளும் இல்லாமல் செய்வதற்கு சிங்கள பயங்கரவாத அரசும் அதன் அடியாட்களும் தினந்தோரும் புதிய திட்டங்களுடன் வலம் வருகின்றார்கள்.

அதன் ஒரு பகுதிதான் ஈகப்பேரொளி முருகதாசனுக்கு இட்டிருக்கும் பெயர் சிறிலங்கன் தமிழ்!!

சில நாட்கள் முன்னர் ஈகப்பேரொளி முருகதாசனுடைய கல்லரை தகர்க்கப்பட்டு புதிதாக ஒரு கல்லரையை கட்டியிருக்கின்றார்கள். விதைக்கப்பட்ட இடத்தில் கல்லரை கட்டப்பட்டு மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில் அதை இடித்து புதிதாக கல்லரை ஒன்றை கட்டியிருக்கின்றார்கள்.

இக்கல்லரை ஈகப்பேரொளி முருகதாசனுடைய பெற்றோர்கள் எழுப்பியதாக அறிவித்துள்ளார்கள். அதை நிரூபிக்கும் வகையில் ஈகப்பேரொளி முருகதாசனுடைய தந்தையின் காணொளியும், தாயின் தொலைக்காட்சி பேட்டியும் இருக்கின்றது.

ஆனால் இச்செயல் பலத்த சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பி விட்டிருக்கின்றது.

நண்பர்கள் மற்றும் சிலரின் உதவியுடன் கல்லரையை கட்டுவதாக ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களின் தந்தை கூறும் காணொளி

முதலாவது ஈகப்பேரொளி முருகதாசனுடைய தந்தை இக்கல்லரையை தான் சிலருடைய உதவியுடன் உருவாக்கியதாக தனது கடிதத்தில் கூறுகின்றார்.

ஆனால் ஈகப்பேரொளி முருகதாசனுடைய தாயார் அவர்களுடன் தொலைக்காட்சியில் தோன்றிய ஒருவர் தாமே இதை இந்தியாவில் இருந்து தருவித்ததாகவும் அதற்கு பெருந்தொகை பலரிடம் கடனாக பெற்று இக்கல்லரையை உருவாக்கியதாகவும் அக்கடன்களை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு மக்கள் உதவ வேண்டும் என்றும் கோருகின்றார் இதை அருகில் அமர்ந்திருந்த ஈகப்பேரொளி முருகதாசனுடைய தாயார் மறுக்கவில்லை.

12 ஆயிரம் பவுஸ்களுக்கு மேல் கடன் வாங்கி கல்லரையை தாம் கட்டியதாக இவர் கூறுவது உண்மையா? அல்லது ஈகப்பேரோளி முருகதாசனின் தந்தை கல்லரையை தாம் கட்டியதாக கூறுவது உண்மையா?

ஈகப்பேரோளி முருகதாசனின் தந்தை தனது கடிதத்தில் முதலில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கட்டிய கல்லரைக்கு முன்பே தாம் புதிய கல்லரைக்கு கட்ட பணம் கொடுத்ததாக எழுதியிருக்கின்றார்.

ஆனால் ஈகப்பேரோளி முருகதாசனின் தாயாருடன் தேன்றுபவர் குறுகிய காலத்தில் கல்லரை கட்டப்பட்டதால் பணம் முளுவதும் செலுத்த முடியில்லை என்றும் மேலும் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகின்றார் அதை காணொளியில் பாருங்கள், ஈகப்பேரோளி தந்தையின் கடிதத்தை செய்திக்கு கீழே பார்க்கலாம் ஆக பெரும் பித்தலாட்டம் ஒன்று நடைபெற்று உள்ளதை இதன் மூலம் உறுதிப்படுத்தலாம்.

தொலைக்காட்சியில் தோன்றும் இவர் போலியான தலைமைச் செயலகத்துடன் இயங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல சங்கதி இணையத்தில் இவர் முதலில் தமிழ் இளையோர் அமைப்பில் இருக்கும் பொழுது பெரும் தொகை பணத்தை கையாடல் செய்ததாக குற்றம் சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக இதில் யார் கூறுவது உண்மை ஈகப்பேரொளி முருகதாசனுடைய தந்தை தாமே உருவாக்கியதாக கூறுவது உண்மையா? அல்லது தொலைக்காட்சியில் தேன்றியவர் கூறியது உண்மையா? தந்தையின் கூற்றுப் படி  உதவி பெற்றுக் கட்டப்பட்டதா அல்லது கடன் பெற்று கட்டப்பட்டதா?

ஏற்கனவே கட்டப்பட்ட கல்லரையை கீழே உள்ள படத்தில் பாருங்கள் ஏதாவது குறை உள்ளதா? இக்கல்லரை பல ஆயிரம் பவுண்ஸ் செலவழித்து மக்களுடைய பணத்தில் கட்டிய கல்லரை இதை இடிக்க வேண்டிய தேவை என்ன? இதை இடித்து கடனுக்கு பணம் வாங்கி புதிதாக கல்லரை கட்ட வேண்டிய தேவை என்ன?

murugathaasan2.jpg?resize=261%2C350

முதலாவதாக மக்கள் பணத்தில் கட்டப்பட்ட கல்லரையும், பின்புறம் பறக்கும் தேசியக் கொடியும்

அத்தோடு முடியவில்லை பிரச்சனை கல்லரை இடிக்கப்பட்டு ஏற்கனவே இருந்த கல்லரை மீது பறந்த தேசியக் கொடியும் பூக்களும் புதிதாக கட்டப்பட்ட கல்லரைக்கு பின்பாக வீசி எறியப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல ஈகப்பேரொளி முருகதாசன் ஏன் எதற்காக தன்னுயிரை தீக்கு இரையாக்கி தமிழீழ மக்களுக்காக கொடுத்தானோ அதை மறந்து ஈகப்பேரொளி முருகதாசனுடைய கல்லரை மீதே  சிறிலங்கன் தமிழர்களுக்காக  என எழுதியிருக்கின்றார்கள் இந்த பாவிகள்.

ஈகப்பேரொளி முருகதாசன் எந்த கொள்கையில் வீரமணத்தை அனைத்துக்கொண்டாரோ அது இப்போது பலனற்று அவரது கல்லரையிலேயே அவரது குடும்பத்தினரை சாட்சியாக்கி அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது.

murugathasan-kallarai-and-Disregard-flag

புதிதாக கட்டப்பட்ட கல்லரையும் அவமதித்து தூக்கி எறியப்பட்ட தேசியக் கொடியும்

முன்னால் முதல்வர் கருணாநிதியும், இன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் இலங்கைத் தமிழர் என முழங்கியபோது தேர்தலின் போது ஈழத்தமிழர் இப்போது மட்டும் இலங்கைத் தமிழரா என உலகெங்கும் இருந்து கண்டனங்கள் பாய்ந்தன ஆனால் இன்று தமிழீழத்திற்காக உயிர் விட்டவன் கல்லரை மீதே அச்சொல்லை அழுத்தமாக பதிந்திருக்கின்றார்கள் இந்த மூடர்கள்.

இதில் முட்டாள்கள் செய்த மற்றுமொரு வேடிக்கை, சிறிலங்கன் தமிழ் என எழுதிவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னத்தை அக்கல்லரையில் பதித்திருக்கின்றார்கள்!. சிறிலங்கன் தமிழருக்கு ஏதடா சின்னம்????????????

ஈகப்பேரொளி முருகதாசனுடைய தந்தை அவர்கள் இக்கல்லரையை தாமே உருவாக்கியதாக கூறியிருக்கின்றார். ஆனால் அவர் எப்படி தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் மாபெரும் இயக்கத்தின் சின்னத்தை அக்கல்லரையில் பதிக்க முடியும்?

அதற்கு மாறாக தமிழீழ விடுதலைப்புலிகள் என எழுத்துக்கள் அற்ற தமிழீழத் தேசியக் கொடி அல்லவா அங்கே பதிந்திருக்க வேண்டும். தந்தையே உங்கள் மகனின் விதைகுழியில் ஏன் இப்படி ஓர் கீழ்த்தரமான சிந்தனைகொண்ட செயலும் எழுத்தும் இடம்பெற வைத்துள்ளீர்கள்?

உங்கள் மகன் தமிழீழ தமிழர்களுக்காக அல்லவா உயிர் நீத்தார் ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களின் இறுதி சாசனத்தின் வரிகளை படியுங்கள்

நேற்றைய வரலாற்றின் ஏமாற்றத்தின் சோக வெளிப்பாடாக இந்தச் முருகதாசன் தீக்குளிக்கின்றான். ஆனால் இன்றைய வரலாறு கடந்தகாலமாகும். எதிர்காலத்தில் கோபம்கொள்ளும். தமிழரை அழித்தொழிக்க ஊக்குவித்து உதவி புரிவோர் மீது எமது வருங்காலச் சந்ததி கோபம் கொள்ளும்

உலகத் தமிழினமே உங்களுக்கு ஒன்றைத் கூறுகின்றேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகின் மனசாட்சியை விழித்தெழ வைக்க உலக சமூகத்தின் மனதையும், அறிவையும் வென்றெடுக்க பாடுபடவேண்டும். எமது சுயத்தை நிலைநிறுத்தி எமது உரிமையை நாமே வென்றெடுப்பதற்கான வாய்ப்பும் இதுவே.

எனது தாயக உறவுகளே சிங்கள அரசின் போலி முகத்தைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.

அதன் உண்மை முகம் கோரமானது என்பதை பல தடவை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். உடலால் தொலைவிலிருந்தாலும் உணர்வால் உங்களுடனேயே நானும் இருக்கிறேன்.எம்மைக் களைப்படையச் செய்து சோர்வுற வைத்து எமது உரிமைகளை எம்மிடம் இருந்து பறித்துவிடலாம் என சிங்கள அரசு நினைக்கிறது. சிங்கள அரசின் இந்த எண்ணத்தை சிதறடித்து உறுதியுடன் இருந்து எமது உரிமைகளை நாமே மீட்போம்.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் யேசுபிரான். நாமும் எமது உரிமைகளைக் கேட்போம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருப்போம். சுதந்திரத்தின் கதவு ஒருநாள் எமக்காக் திறக்கப்படும். எம் மக்களின் நல்வாழ்விற்கான கதவு ஒருநாள் திறக்கப்பட்டே தீரும். நாங்கள் கேட்போம். எமது உரிமைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம். உலகத்திடம், உலக மனச்சான்றின் முன் தொடர்ந்து கேட்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

உண்மைக்காய் உயிர்தரும் தமிழன்
முருகதாசன்

murugathasan-as-srilankan2.jpg?resize=30இப்படி தன்னுயிரால் சிங்கள பயங்கரவாத அரசின் முகமூடியை கிழித்து எறிந்தவன் உடல் மீதா பதித்திருக்கின்றீர்கள் சிறிலங்கன் தமிழ், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று முழங்கியவன் மீதா பதித்திருக்கின்றார்கள் சிறிலங்கன் தமிழ் என்று என்று இதை விட ஈகப்பேரொளி எப்படி அவமதிக்க முடியும்?

இச்செயலுக்கு பின்னால் மாவீரர் தினம் என்றவுடன் மட்டும் திடீர் என குதித்து நாம் மட்டுமே மாவீரர் தினம் நடத்த உரிமை உள்ளவர்கள் என கூச்சல் போடும் போலியான தலைமைச் செயலகம் எனும் பெயரில் உள்ள சதிகாரர்கள் இருப்பதையும் மறந்துவிட வேண்டாம். 2009க்கு பிறகு இதுநாள்வரை சிங்கள பயங்கரவாத அரசுக்கு எதிராக ஒரு சிறு துரும்பை கூட அசைத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிங்கள பயங்கரவாத அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களை தவறாமல் தொலைக்காட்சிகளிலும் இணையங்களிலும் கொச்சைப்படுத்தாமல் விட்டதில்லை இது இதுதான் போலியான தலைமைச் செயலகம்.

உலகத் தமிழ் உறவுகளே தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்ததுதான் தலைமைச் செயலகம் என்பது. இன்று இந்த பெயரில் சிங்கள பயங்கரவாதிகள் ஊடறுத்துள்ளார்கள் என்பதை பகிரங்கமாக அறிவிக்கின்றோம்.

பொருத்தமானவர்கள் தோன்றி தலைமைச் செயலகத்தை உரிமை கோரும் வரை அப்படிப்பட்ட பெயரில் வரும் செய்திகள் அறிக்கைகள் எவற்றையும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்
www.rste.org
info@rste.org

ஈகப்பேரொளி முருகதாசனின் தந்தையின் கடிதம்murugathaasan-father-letter.jpg?resize=8

Link to comment
Share on other sites

இதுக்கு மேலும்  ஒருவனின் தியாகத்தை சொச்சைப் படுத்த முனைபவர்கள்   அறிக்கைகளையும்  ஆராச்சிகளையும் தொடரட்டும். தங்கள்  பிள்ளையை  பறி கொடுத்தவர்களிற்குத்தான் அதன் வலி தெரியும்.  அவர்கள்  எதை யும் செய்யலாம் அதற்கான உரிமை அவர்களிற்கே உள்ளது   மகனின் தியாகம்  எமக்கானது  ஆனால் தாய் தந்தை  துரோகி  என்று  எழுத எவரிற்கும் உரிமை கிடையாது  ஆனால் முருகதாசன் நினைவுக் கல் அமைப்பதற்கு பின்னால் நடந்த  விடயங்களை மட்டும்  ஒரு கட்டுரையாக எழுதி போட்டு விடுகிறேன்.  அதே நேரம் முருக தாசனின்  மரணத்திற்கு  பின்னாலான பிரச்சனைகளும்  பிரித்தானிய காவல்த்துறையினரின்  விசாரணைகள் பற்றிய விபரங்களும் அடங்கும்.  ஆனாலும் இப்போதைக்கு வராது நிம்மதியாய்  பொறுத்திருங்கள்.

Link to comment
Share on other sites

இதுக்கு மேலும்  ஒருவனின் தியாகத்தை சொச்சைப் படுத்த முனைபவர்கள்   அறிக்கைகளையும்  ஆராச்சிகளையும் தொடரட்டும். தங்கள்  பிள்ளையை  பறி கொடுத்தவர்களிற்குத்தான் அதன் வலி தெரியும்.  அவர்கள்  எதை யும் செய்யலாம் அதற்கான உரிமை அவர்களிற்கே உள்ளது   மகனின் தியாகம்  எமக்கானது  ஆனால் தாய் தந்தை  துரோகி  என்று  எழுத எவரிற்கும் உரிமை கிடையாது  ஆனால் முருகதாசன் நினைவுக் கல் அமைப்பதற்கு பின்னால் நடந்த  விடயங்களை மட்டும்  ஒரு கட்டுரையாக எழுதி போட்டு விடுகிறேன்.  அதே நேரம் முருக தாசனின்  மரணத்திற்கு  பின்னாலான பிரச்சனைகளும்  பிரித்தானிய காவல்த்துறையினரின்  விசாரணைகள் பற்றிய விபரங்களும் அடங்கும்.  ஆனாலும் இப்போதைக்கு வராது நிம்மதியாய்  பொறுத்திருங்கள்.

நீங்கள் எழுதுவது என்றால் சில தகவல்களை நேரடியாக அறிந்து எழுதினால் மட்டுமே அவை உண்மையாக அமையலாம். உண்மை இருந்தாலே எழுதுவதில் ஒரு சமூக நோக்கம் இருக்கும்.

 

 இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு பிற நாட்டில் நடப்பவற்றை எழுதுவது என்றால் மூன்றாம் தரப்பு ஊடான தகவல்களை வைத்தே எழுத முடியும். எனவே அவ்வாறு எழுதுவதால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகவே அமையும்.

Link to comment
Share on other sites

ஆமாம்! யாரும் இனி வெளிநாட்டில் இருந்து கொண்டு இலங்கையில் நடப்பது பற்றியும் எழுதாதீர்கள்! இனிமேல் அந்த அந்த நாட்டில் உள்ளவர்கள்தான் அந்த அந்த நாட்டைப் பற்றி எழுத வேண்டும். மீறினால் எச்சரிக்கைப் புள்ளி வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சித்தார்த்துவுக்கும்  அரை அமைச்சுப்பதவி ரெடியோ....
    • இரண்டாம் வாக்கை எனக்குத்தான் போடுவினமோ என்று..கன்பார்ம் பண்ணப்போயிருப்பார்..
    • கரும்புலி  மேஜர் மறைச்செல்வன்  செல்வராஜா ரஜினிகாந்தன்  தமிழீழம் (வவுனியா மாவட்டம்)  தாய் மடியில் :03-05-1981 தாயக மடியில்:10.05-2000 அது 1999ஆம் ஆண்டின் மழைக்காலம். சினந்து அழும் சின்னப்பிள்ளையாய் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. மழைநேரம் காட்டின் தரையமைப்பு எப்படி மாறிப்போயிருக்குமோ அந்த மாற்றம் அனைத்தும் நிறைந்த காட்டிற்குள்ளால் பெய்து கொண்டிருக்கும் மழையில் நனைந்தபடி காட்டு மரங்கள் சிந்தும் நீர்த்துளிகளால் விறைத்த படி ஒரு அணி காட்டை ஊடறுத்து வேகமாக நடந்து கொண்டிருந்தது. அவர்களின் வலுவிற்கு அதிகமான சுமைகள். அவற்றோடும் மணலாற்றில் இருந்து காடுகளிற்குள்ளால் கனகராயன்குளம் நோக்கி சளைக்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த அணி வீரர்களிலே மிக உயர்ந்தவனும் அகன்ற நெஞ்சுடனும் ஓர் உருவம். நீண்ட கால்கள், பெருத்த கைகள், குழம்பிப்போன தலைமயிர், அடுக்கான பல்வரிசையில் சற்று மிதந்து நிற்கும் ஒரு பல், பொதுநிறம், கண்குழிக்குள் அலையும் கண்கள் எங்கோ, எதையோ தேடிக்கொண்டிருந்தன. இப்படி அடையாளங்களோடு ஒருவன், அவன்தான் அந்த அணியை வழிநடத்திச் செல்லும் அணித்தலைவன் மறைச்செல்வன். அவனது நெஞ்சிற்குள் எத்தனையோ ஏக்கங்கள். அதை முகத்தில் சிறிதும் வெளிக்காட்டிவிடாது தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு அணிகள் எட்டவேண்டிய இலக்கு நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான். இடையில் எதிர்ப்பட்ட தடைகளைத் தாண்டிச்செல்ல அதிக நேரம் தாமதமாக வேண்டியிருந்தது. தொலைத்தொடர்புக் கருவி அவனை அழைத்தது. ஏதோ கதைத்தான். “இன்னும் இலக்குகளை ஏன் அடையவில்லை. தாக்குதல் தொடங்கி விட்டது” என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் ஏராளம். அதைத் தெரிந்தும் “நாங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குறித்த இடத்தில் நின்று தொடர்பு எடுக்கின்றோம்” என்று கூறிவிட்டு உடனேயே தொடர்பைத் துண்டித்தான். போய்ச் சேரவேண்டிய இடத்திற்கும் அவர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையே நீண்ட அந்தக் காட்டுப் பகுதியைக் கடக்க அவர்களிற்கு அந்த நேரம் போதாது. அதுவும் படை முகாம்களைக் கடந்து போக வேண்டியிருந்தது. வேகமாக எல்லோரும் நடந்தார்கள். அந்தக் காட்டுப்பகுதி அவனுக்குப் பழக்கமானது. மரங்கள் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்திருந்தான். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையில் அவன் பங்கெடுத்திருந்த போது அதே இடங்களில் பலநாட்கள் கண்விழித்து நின்றிருக்கின்றான். அந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் அவன் தன் தோழர்களைப் பிரிந்து தேம்பி இருக்கின்றான். அப்போதெல்லாம் “உந்த ஆட்லறியை உடைக்கவேணும்” என்று மனதினுள் குமுறிக்கொள்வான். அது அவனிற்கும் அந்த மரங்களிற்கும்தான் தெரியும். தொடர் சண்டைக் காலத்தில், காவலரணில் கடந்த நாட்களில் ஆட்லறி ஏறிகணைகள் சினமும் வெறுப்பும் ஊட்டுபவையாகவே இருந்தன. ஒன்றாய் பதுங்கு குழியில் இருந்து விட்டு தண்ணீர் எடுத்து வரவென வெளியில் சென்ற அவனிலும் அகவை குறைந்த தோழன் திரும்பி வரமாட்டான்... அவன் எறிகணை வீச்சில் வீரச்சாவு அடைந்தோ, அல்லது விழுப்புண் பட்டோ இருப்பான். காணாத தோழனைத் தேடிச்சென்று இரத்த வெள்ளத்தில் காணும் வேளைகளையெல்லாம் சந்தித்தவன். இதற்கு காரணம் அந்த ஆட்லறிகள். அதை உடைக்க வேணும் என்று மனதிற்குள் அப்போதே முடிவெடுத்துக் கொண்டான். அதற்காகவே தலைவருக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தன்னையே வருத்திப் பயிற்சி எடுத்து இப்போது கரும்புலியாய் இலக்குத்தேடிப் போகின்றான். அவன் முதலில் நடந்த இடங்களை மீண்டும் காணுகின்ற போது மயிர் சிலிர்த்தது. நடையை விரைவுபடுத்தி வேகமானார்கள். பொழுது கருகின்ற நேரம் தான் அந்த இராணுவ முகாமிற்கு அண்மையாக வந்திருந்தார்கள். இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முடியவேண்டும். தேசம் வேண்டி நிற்பது அதுவே. வன்னியில் பெரும் நிலங்கள் பகை வல்வளைப்பால் குறுகிக்கொண்டிருந்த காலம். நகரங்களையும் தெருக்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் நாடு இழந்துகொண்டிருந்தது. இந்த அச்ச சூழலில்தான் “வோட்டசெற்” 01, 02 என்று அம்பகாமம் பகுதியில் முன்னேறி சில காவலரண்களையும், எம்மவர்களின் சில வித்துடல்களையும், எதிரிப்படை கைப்பற்றியிருந்தது. வன்னியில் மக்கள் திகைத்து நிற்கின்ற சூழலில், நெருக்கடி நிறைந்ததாய் உணர்ந்த அந்த நாட்களில் தலைவரோ உலகிற்குப் புலிகள் பலத்தை உணர்த்தும் நடவடிக்கைக்கான தாக்குதலில் இவர்களுக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்திருந்தார். தேசத்திற்கும் போராட்டத்திற்கும் இடையூறும் நெருக்கடிகளும் வரும் போது தான் இவர்களது பணி தேசத்திற்குத் தேவைப்படுகின்றது. அவர்களும் அதை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற துடிப்போடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * கண்டி வீதியைக் கடக்கவேண்டும். கண்டி வீதியைக் கடக்கின்ற போது அந்த அகன்ற தார்ச்சாலை மலைப்பாம்பென நீண்டு வளைந்து கிடந்தது. அதைக் குறுக்கறுத்து எதிரியின் கண்ணில் சிக்காது கடந்தார்கள். ஒரு புறம் அவர்கள் தேடி வந்த இலக்கு கனகராயன்குள படைமுகாம், மறுபுறம் வவுனியா. இரண்டையுமே மறைச்செல்வன் திரும்பத் திரும்ப பார்த்தான். வவுனியாவைப் பார்க்கின்ற போது வேறுபல பழைய நினைவுகள் அவனை சூழ்ந்தன. வவுனியா, அதுதான் அவன் பிறந்து வளர்ந்த இடம். அதற்கும் மன்னாருக்குமான நீளுகின்ற அந்தத் தெருக்கள்... நினைவுகள் மீள் ஒளிபரப்புச் செய்தன. மன்னார் வவுனியா நெடுஞ்சாலையிலே அன்றொரு நாள் நாற்பத்தினான்கு அப்பாவித் தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களது உயிரிழந்த சடலங்கள் ஆங்காங்கே வீதிகளிலே எரிந்தும் எரியாமலும் கிடந்தன. இந்தச் சேதி உள்ளுர் செய்தி ஏடுகளில் பரவலாக வந்தபோது முகம் காணாத சொந்தங்களிற்காக இரங்கி சில கண்ணீர்த் துளிகள் சிந்தப்பட்டன. அப்பாவி மக்கள் படுகொலை என்று கண்ணை உறுத்தும் வகையில் பெரிய எழுத்தில் வெளிவந்த அந்தச் துயரம் மறுநாளே செய்தி ஏடுகள் போல மறைந்துபோனது. அது இன்னொரு துயரச் செய்தியை அவனுக்குக் காவி வந்தது. அது அவர்களது குடும்பத்தில் பெரிய இடியாக விழுந்தது. எல்லோரையும் போல அவர்களால் அந்தத் துயரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னென்றுதான் தாங்குவது. ஊர்திகளை ஓட்டி குடும்பத்தைத் தாங்கிய அப்பாவை இழந்து இனி எப்படி அவர்களது வாழ்க்கை! சின்ன வயசில் அது அவனுக்குப் பெரிய இழப்பு. அப்பாவை நினைத்து நினைத்து விம்முவான். அழுவான். யார்தான் என்ன செய்யமுடியும். சிறிய குடும்பம். அவனும், அக்காவும், அம்மாவும்தான். ஒவ்வொருவரது முகத்திலும் பெரிதாய் துயரம் குந்திக்கொண்டிருந்தது. யாராலும் ஆற்றிவிட முடியாத அந்தச் துயரத்தோடு அவர்களது குடும்பம் நாளும் நாளும் அல்லற் பட்டுக்கொண்டேயிருந்தது. அம்மாவும் இவர்களுக்குத் துணையாக நின்று, மாடுகள் வளர்த்து ஒருவாறு குடும்பத்தை நடத்திச் சென்றாள். இவன் சின்ன வயதில் குழப்படிக்காரனாகவே இருந்தான். காலையில் எழுந்து மாட்டுப்பட்டிக்குச் சென்று பால் கறந்துவிட்டு மாட்டுச்சாணம் அள்ளிப் போட்டுவிட்டே அவசர அவசரமாய் பள்ளிக்கு ஓடுவான். வந்து புத்தகங்களை வைத்துவிட்டு மாடு மேய்க்கப் போய்விடுவான். மாடு மேய்ப்பதும் வரம்புகளிலும் வயல் வெளிகளிலும் ஓடி விளையாடுவதிலும் இவனது பொழுதுகள் கழியும். அதுவே இவனுக்குச் மகிழ்ச்சி. அந்த வயல்கள் இவனோடு கொண்ட சொந்தத்தின் அடையாளமாக சின்னச் சின்ன சிராய்ப்புக் காயங்களும் இப்போதும் மாறாத அடையாளங்களாய் இருக்கிறன. ஊருக்குள் வரும் போராளிகளைப் பார்த்து ஆசைப்பட்டிருக்கின்றான். ஆனால் அவர்களோடு சேர்ந்து கொள்ளச் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவனது இலட்சிய ஆசைகள் நெருப்பாய் எரிய அதை மறைத்து அம்மாவோடு செல்லம் கொஞ்சுவான். வளரவளர அந்த வேட்கை அவனைவிட வளர்ந்தது. இராணுவக் கட்டுப்பாட்டில் அவனது கிராமத்தில் போராளிகள் அலைகின்ற அலைச்சல் அவர்கள் சுமக்கும் வேதனையான நாட்கள் எல்லாம் அவனைப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்ற தீரத்தை ஏற்படுத்தின. பள்ளிப்பருவத்திலே அவன் போராட்டத்தில் இணைந்துகொண்டான். வயதுக்கு மீறிய வளர்ச்சி உடல் மட்டுமல்ல, அவனது எண்ணங்களும் செயற்பாடுகளும் அப்படியானதே. உயர்ந்த எண்ணங்களும் தூர நோக்கும் கொண்ட அவன் எதிலும் துடிதுடிப்பும் முன்னிற்கும் தன்மையும் கொண்டவன். தாக்குதல் களங்கள் அவனை இன்னும் இன்னும் பட்டை தீட்டின. கண்டி வீதியைக் கடந்து நடந்தான். அன்று 81 மில்லிமீற்றர் மோட்டரையும் தூக்கிக்கொண்டு நடக்கிறபோது அவனுக்கு மட்டும் தெரியக்கூடிய வெப்ப மூச்சோடு, அவனுக்கு மட்டும் கேட்டக்கூடிய சத்தத்தில் ஆட்லறியை உடைக்கவேணும் என்று மனம் சுருதி தப்பாது துடித்தது. நினைவுகள் கனத்தன. ஓயாத அலைகள் மூன்று ஆரம்பமாகி அடிக்கின்ற வேகத்திற்கு கனகராயன்குளம் மீது கரும்புலி அணிகள் ஆட்லறிப் பிரிவினருடன் இணைந்து தாக்க தொடங்கினர். சிறிதும் எதிர்பாராத இத் தாக்குதலில் எதிரி திகைத்து திக்குமுக்காடினான். அவனது ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியது. கட்டளைத் தளபதியாகவிருந்த சிங்களத் தளபதிகளுக்கு கரும்புலிகளின் வெடியதிர்வு சாவாய்க் கதவில் தட்டியது. அந்தப் பெரிய சமர் அங்கே ஒரு நொடியில் மாறியது. தளபதிகள் மூட்டை முடிச்சுக்கட்ட எதிரிப்படை பின்வாங்கியது. எமது இடங்கள் எங்கும் அகல அகலப் பரப்பி நின்ற எதிரிப்படை உடைந்தகுளம் வற்றுவதைப்போல மிக வேகமாக ஓடியது. அந்தச் சாதனையை எதுவித இழப்புக்களும் இல்லாது நடத்தி விட்டு மறைச்செல்வன் தலைமையிலான கரும்புலி அணி வெற்றிகரமாகத் தளம் திரும்பியது. வட போர்முனையில் ஓயாத அலைகள் அடித்தபோது தென்மராட்சியில் பல இடங்களிலும் இவனது செயற்பாடுகள் இருந்தன. எப்போதும் தாயகத்தைப் பற்றியே நினைத்துக்கொண்ட அந்த வீரன் நாகர்கோவிற் பகுதியில் இலக்கொன்றிற்காய் விரைந்து கொண்டிருந்தபோது, இலக்கை நெருங்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டுக்கொண்டிருக்கவும் எதிரிப்படை தாக்குதலை தொடங்கவும் சரியாக இருந்தது. இழப்புக்கள் எதுவும் இல்லாது பல தாக்குதல்களையும் நிகழ்த்தி தாய்நாட்டிற்காக வெற்றியைக் கொடுத்தவன் 10.05.2000 அன்று நாகர்கோவில் மண்ணிலே வீரகாவியமானான். ஆட்லறியை உடைக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த அந்த தேசப்புயல் துடிப்பிழக்கின்ற போது தன் சாவிலே ஒரு சேதியை இந்தத் நாட்டிற்குச் சொல்லிவிட்டுப்போனது. அழுதுகொண்டிருந்தால் அடிமைகளாவோம், துணிவாய் எழுந்து நின்றுவிட்டால் வாழ்வோம். அல்லது வீரராய்ச் சாவோம் என்று.   " புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "   தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.   தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.
    • அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. கப்டன் மயூரன்  பாலசபாபதி தியாகராஜா  தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில் :01.11.1970 தாயக மடியில்:11.11.1993 எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் – கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான். வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடிக்க மாட்டான். அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும் போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விரும்பிய உணவுகளைக் கேட்டுச் சமைப்பித்துச் சாப்பிடுவது, ஐஸ்கிறீம் பாருக்குச் சென்று ஐஸ்கிறீம் சாப்பிடுவது, சிற்றுண்டி வகைகளைக் கொறிப்பது….. தங்கையைச் சீண்டி விளையாடுவது என்று ஒன்றரை மாதமும் ஒரே கும்மாளமும் கலகலப்பும்தான் வீட்டில். என் பிள்ளை நீண்ட பொழுதுகளின் பின் என்னிடம் வந்திருக்கிறான். அவன் மனம் எந்த வகையிலும் நோகக்கூடாது. போனால் எப்போ வருவானோ தெரியாது. அவர்களது முகாமிற்குள் போய் விட்டால் எல்லாம் கட்டுப்பாடு தானே! என்று நினைத்து நான் என்னால் இயன்றவரை அவனது ஆசைகள் விருப்பங்கள் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்தேன். அப்போதுதான் பிரபா(அவனது சின்னக்கா) திருமணமாகி ஏழு வருடங்களின் பின் கற்பமாகி இருந்தாள். அதையிட்டு அவன் மிகுந்த சந்தோசத்துடன் இருந்தான். மருமகனா..! மருமகளா..! என்று சதா ஆசையுடன் கேட்டுக் கொண்டே இருந்தான். இப்படியே ஆட்டமும் பாட்டமும் களிப்பும் கும்மாளமும் என்று ஒன்றரை மாதம் போன வேகமே தெரியவில்லை. என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது. அன்று 17.6.1993 – காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான். பாமா அவனது உடுப்புக்கள் எல்லாவற்றையும் அயர்ண் பண்ணி அடுக்கிக் கொடுத்தாள். அவனது பள்ளி நண்பர்களில் மூவர் எந்நேரமும் அவனுடன்தான் நின்றார்கள். படுக்கைக்கு மட்டுந்தான் தமது வீடுகளுக்குப் போய் வந்தார்கள். என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை. படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. ஆனாலும் அவன் வருந்தக் கூடாது என்ற நினைப்பில் சோகம் கப்பிய சிரிப்புக்கள். வேலைகள். ஆனால் அன்று வாகனம் வரவில்லை. அவன் அன்று போக வில்லை என்றதும் எல்லோரிடமும் ஒரு தற்காலிகமான சந்தோசம். அடுத்த நாள் 18.6.1993 காலை அவனது அத்தான் கணேஸ் சோகத்துடன் – அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வேலைக்குச் சென்றார். திரும்பி வரும் போது அவன் நிற்க மாட்டான் என்பது அவருக்குத் தெரியும். பிரபா(அவனது சின்னக்கா) வேலைக்குப் போகும் போது “நான் மத்தியானம் வாற பொழுது நிற்பியோ? அல்லது போயிடுவியோ?” என்று கவலையோடு கேட்டாள். சோகம் கலந்த சிரிப்பொன்றுதான் அவனிடமிருந்து பதிலாகக் கிடைத்தது. நான் அம்மா அல்லவா! என் சோகம் எல்லாவற்றையும் மறைத்து செய்ய வேண்டியவைகளை ஓடி ஓடிச் செய்து அவனுக்கும் நண்பர்களுக்கும் பன்னிரண்டு மணிக்குச் சாப்பாடு பரிமாறினேன். அதன் பின் வேறு இடத்தில் வாகனம் வருவதாக அவனுக்குச் செய்தி வர அவன் விடை பெற்றுச் சென்றான். அவனது நண்பர்கள் அவனை கூட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றி விட்டு தமது வீடுகளுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார்கள். இம்முறை என் பிள்ளையின் முகத்தில் வழமை போல இல்லாமல் ஏதோ ஒரு சோகம் அப்பி இருப்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது ஏன் என்று புரியாமல் குழம்பினேன். ஆனாலும் எனக்குள்ளே இருந்த துயரத்தையோ நெருடல்களையோ நான் அவனுக்குக் காட்டவில்லை. அவன் நின்ற ஒன்றரை மாதமும் இராப்பகல் பாராது ஓடியோடி எல்லாம் செய்த நான் – அவன் போனதும் – அதற்கு மேல் எதுவும் செய்யத் தோன்றாது அப்படியே கதிரையில் அமர்ந்து விட்டேன். எல்லாம் ஒரே மலைப்பாக இருந்தது. என் பிள்ளை போய் விட்டானா..? எல்லாம் பிரமையாக இருந்தது. அப்படியே நான் பிரமை பிடித்தவள் போல அந்தக் கதிரையில் ஒரு மணித்தியாலம் வரை இருந்திருப்பேன். என் பிள்ளை திரும்பி வருகிறான். ஏன்..? எனக்குச் சந்தோசமாயிருந்தது. “என்னப்பு..! என்ன விசயம்?” என்று கேட்டேன். “வாகனம் இன்னும் சொன்ன இடத்துக்கு வரேல்லை அம்மா. அதுக்கிடையிலை உங்களை ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான். உடனை போகோணும்.” என்றான். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்வது போலிருந்தது. அதற்குள் அவனது சின்னக்காவும் வேலை முடிந்து நாலைந்து கறுத்தக் கொழும்பு மாம்பழங்களுடன் அரக்கப் பரக்க ஓடி வந்தாள். “உனக்கு மாம்பழம் எண்டால் எவ்வளவு ஆசை எண்டு எனக்குத் தெரியும். அதுதான் வேண்டிக் கொண்டு ஓடி வந்தனானடா.” என்று சொன்னாள். நான் மாம்பழத்தின் தோலைச் சீவி அவசரமாய் வெட்டிக் கொடுக்க என் பிள்ளை மிகவும் ஆசையாக ரசித்துச் சாப்பிட்டான். அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கவே வாகனம் எங்கள் வீட்டுக் கேற்றடிக்கு வந்து விட்டது. உடனே “பிரபாக்கா சுகத்தோடை பிள்ளையைப் பெத்தெடுங்கோ. மாமா வருவன் மருமகளைப் பார்க்க..” என்று சொல்லிக் கொண்டே அவசரமாய் விடை பெற்றுச் சென்றான். வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன். எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது. பிரபாவின் குழந்தையைப் பார்க்க மிகவும் ஆசைப் பட்டான். கடற்புலி கேணல் தளபதி பாமா வந்து குழந்தையைப் பார்த்த போது சொன்னாள். “மயூரன் மணலாறு இதயபூமிச் சண்டைக்குப் போய் வெற்றியோடு திரும்பியிருக்கிறார். மருமகளைப் பார்க்கக் கட்டாயம் வருவார்.” என்று. வருவான் வருவான் என்றுதான் காத்திருந்தோம். அவன் வரவே இல்லை. பூநகரித் தவளைப் பாய்ச்சலுக்குச் சென்று விட்டான். 11.11.1993 அன்று பூநகரித் தவளைப் பாய்ச்சலில் அவன் விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருது நின்ற படையினருள் புயலாகிப் போனான் என்ற செய்தி 15.11.993 அன்றுதான் எனக்குக் கிடைத்தது. விழுப்புண் பெற்ற அவன் வித்துடலைக் கூடக் காண வழியின்றிக் கலங்கி நின்றேன். அதன் பின் தான் உணர்ந்தேன் அப் பெரிய சமர்களுக்குப் போவதற்காகவே அவன் நீண்ட லீவில் என்னிடம் வந்து நின்றான் என்பதை. நீங்காத நினைவுகளை மட்டும் என் நெஞ்சோடு விட்டு விட்டு அவன் சென்று விட்டான்.   கப்டன் மயூரன் நினைவலைகள்…   கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலி போல் ஆகிவிட்டீர்.   அரச பயங்கரவாதத்தில் மக்கள் அடிபட்டுக் கொண்டிருக்க குட்டுப்பட்டு வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா, என்றெண்ணி கொட்டமடிக்கும் கூலிப்படைகளை வெட்டிச் சாய்க்க, திண்ணம் கொண்டான் மயூரன்.   பருத்தித்துறை ஆத்தியடியில், பாலசபாபதியாக அன்னை மடியில் முத்தாகச் சிரித்தவன், வாழும் வயதிலேயே மண்ணுக்கு வித்தாவான் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.   15 வயதான பின்னும் கூட தன் கட்டிலை விட்டு வந்து அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு படுத்திருப்பான். அக்காமார் என்ன கேட்டாலும் முகம் கோணாமல் அத்தனையும் ஓடி ஓடிச் செய்து கொடுப்பான். அக்காமாருக்கு மட்டுமா? ஆத்தியடியில் வயதான கிழவிகளுக்கெல்லாம் இவன் மகன் போல. உதவி செய்வதென்பது இவனோடு பிறந்த குணம்.   அண்ணன் மொறிஸ் களத்தில் நிற்கும் போதே, காட்லியின் கல்வியைக் கை விட்டு, 1987 இல் ஈழப்போர் இரண்டு என்னும் சகாப்தம் வெடிக்கையிலே வேங்கையாய் புறப்பட்டான் நாட்டைக் காக்க என்று.   இந்திய ஆக்கிரமிப்பு எகத்தாளமாய் நடக்க, ஈழத்து உயிர் மூச்சை இதயத்தில் சுமந்து கொண்டு தலைவர் பிரபாகரனின் அன்புக்குப் பாத்திரமானவனாய் காட்டிலே உயிர் வாழ்ந்தான்.   மன்னார், மண்கிண்டி என வீரக்கதை படித்து யாழ்தேவி நடவடிக்கையில் போராளிக் குழுவோடு நின்று பொருத்தமாய் போர் தொடுத்தான். இதய பூமி-1 இல் இறுக்கமாய் கால் பதித்து வெற்றியோடு திரும்பினான்.   திரும்பும் வழியில் வற்றாப்பளையில் வாழும் அண்ணன் தீட்சண்யனை (பிறேமராஜன்) காண ஆசை கொண்டு ஒருக்கால் சென்றான்.   அந்தக் கணங்களை ஒரு காலை இழந்த அவன் அண்ணன் தீட்சண்யன் இப்படிச் சொல்கிறார்.   கடைசிக் கணத்தில் உன் களத்துப் புலிகளுடன் ஓருக்கால் வந்தாய் நாம் கண்மூடி விழிக்க முன் கனவாய் சென்றாய் தடியோடு நான் நடந்து கதவோரம் வந்து நிற்க கையில் பெடியோடு உனது அண்ணி கண் கலங்கப் பார்த்திருக்க பார்த்தாயா…யா? புரியவில்லை நினைவில் தெரியவில்லை. தெருவோடு நீ ஓடி துள்ளி அந்த வாகனத்தின் கூரையிலே பாய்ந்தேறி குழுவோடு அமர்ந்ததைத்தான் நாம் பார்த்தோம் கனவாக மறைந்து போனாய் சும்மா பார்த்து விட்டுப் போக வந்தேன் என்றாய் எம் கண்ணிலெல்லாம் காயாத நீர் கோர்த்து விட்டுத் தானய்யா சென்றாய். இப்படி அண்ணனின் கண்ணில் நீர் கோர்த்து விட்டுச் சென்றவன் நேரே பூநகரிக் களத்தை நோக்கித்தான் சென்றான். போகும் வழியில் பாசம் அவனை பாடு படுத்தியதோ…? நண்பன் சிட்டுவை(மாவீரன்) அழைத்து ஆத்தியடிக்கு அம்மாவிடம் போய், அக்கா அவர்களிடம் இருந்து கடிதங்கள் வந்திருக்கும். வாங்கி வா என்று அனுப்பினான். பின்னர் களத்தில் நின்று கொண்டும் அவன் சிட்டுவை மீண்டும் பலமுறை அனுப்பினான். கடைசி முறையாக சிட்டு மயூரனின் அம்மாவிடம் சென்ற போது, மயூரனின் தங்கை மகிழ்வோடு கடிதத்தைக் கொடுத்து விட்டாள். ஆனால் சிட்டு கடிதத்துடன் மயூரனிடம் சென்றபோது மயூரன் என்ற தீபம் அணைந்து விட்டது. மயூரன் மண்ணுக்கு வித்தாகி விட்டான். மயூரன் 11.11.1993 அன்று சைபர் படைக்குத் தலைமை தாங்கிச் சென்று பூநகரிக் களத்தின் காற்றிலே கலந்து விட்ட செய்தியை தாங்கி வந்த சிட்டு அதை எப்படி அம்மாவிடம் சொல்வதென்று தெரியாமல் தயங்கித் தவித்து கலங்கிச் கொன்ன போது ஆத்தியடியே ஒரு முறை உயிர்வலிக்க அழுதது. மயூரனை இழந்து தவித்த அண்ணன் தீட்சண்யன் நினைவில்…   விடுதலையே மூச்சாகி வீரமே விளக்காகி பொருதி நின்ற படையினருள் புயலாகிப் போனாயென விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் சொல்கையிலே பூநகரிக் காட்சி எங்கள் கண்ணில் நிழலாடுதையா தலைவன் வளர்த்த மணிவிளக்காய் நீ அங்கு தலைகள் சிதறடித்து தானை துடைத்தெறிந்த கதைகள் பல இங்கு காதில் அடிபடுது ஆனாலும் மயூரா உன் உடலைக் காணவில்லையடா விழுப்புண்கள் பெற்ற உன் வித்துடலை காண்பதற்கு விதி எமக்கு இல்லையடா-அதனால்தான் உதிரம் கொதிக்கிறது உடலம் பதைக்கிறது சடலம் என்ற பெயர் உனக்கு இல்லையடா பொன்னுடல் மின்னிடுடும் படம் வந்த ஊர்தியில் கண்ணிலே ஒற்றி நாம் மாலை போட்டோம் நிறை குடத்தோடு நின்று நாம் நினைவை மீட்டோம் மொறிஸ் சோடு நீ சென்ற பாதையின் வழியில் நாம் உடலோடு உதிரமாய் ஒன்றி வாழ்வோம் உயிரையே உருக்கி நாம் வேள்வி காண்போம் - தீட்சண்யன்.. மயூரனின் நண்பர்களின் நினைவில்…   களத்திலே புலியாகப் பாய்ந்திட்ட வேளையில் கரும்புலியாய் செல்லவில்லை கரும்புலிபோல் ஆகிவிட்டீர் களத்தினிலே பாய்ந்த போது கண்டபின் நாம் காணவில்லை வளமான நெல்வயல் சூழ் நைய்தல் நில எல்லையிலே எதிரியின் வேட்டுக்களை ஏந்தி விட்டாய் மார்பினிலே என்றுன்னை நினைக்க மாட்டோம் எரியாகி எரிந்து விட்டாய் எரிமலையாகி வெடித்து விட்டாய் நண்பனே! வள்ளலாகி விட்டாய் மயூரா! உன் பாதம் அடிச்சுவடு உன்னாடை பாதுகை உன் துப்பாக்கி இனி எங்கள் கையிலே உன் நினைவுகள் துணையாகும் எம் பாதையிலே……… ..நண்பர்கள்...   மயூரனின் தங்கையின் நினைவில் (பாமா)   அன்று சிட்டு அண்ணா வந்த போது, நான் முதல் நாள் சின்னண்ணாவுக்குக் (மயூரன்) கொடுத்து விட்ட கடிதத்துக்குப் பதில் கடிதம் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டேன். ஆனால் சிட்டு அண்ணா நான் எழுதிக் கொடுத்து விட்ட அந்தக் கடிதத்தை எனக்கு முன்னாலேயே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தார். எனக்குச் சரியான கோபமும் அழுகையும் வந்தது. சிட்டு அண்ணாவைத் திட்டினேன். அவர் ஒன்றும் பேசாமல் கூட வந்த நண்பருடன் திரும்பிப் போய் விட்டார். அடுத்த நாள் நடுச்சாமம் 12 மணிக்கு மீண்டும் அவர் எமது வீட்டுக்கு வந்த போது நான் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் கோபமாய் இருந்தேன். அப்போதுதான் துயரம் தோய்ந்த அந்த செய்தியை, என் அன்பு அண்ணா, களத்தில் காவியமாகி விட்டான் என்ற செய்தியை சிட்டு அண்ணா அழுதழுது சொன்னார். 1.11.1970 இல் பிறந்து 11.11.1993 அன்று நடை பெற்ற பூநகரிப் பெருந்தளச் சமரில்-தவளைப் பாய்ச்சலில்-வெற்றி பெற்றுத் தந்து விட்டு உறங்கிப் போய் விட்டான் மயூரன்.   https://maaveerarkal.blogspot.com/2003/11/blog-post_11.html
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.