Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாமி நிழலியானந்தாவின் வாழ்வும் அருளுரைகளும்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமை. சிரித்துக் களைத்துவிட்டது. நிழலியை ஒரு சிடுமூஞ்சியாகவே நான்
கற்பனை செய்து வைத்திருப்பதால், அவரின் நகைச்சுவை உணர்வை இதில்த்தான்
பார்க்கிறேன்.

 

 

ஆக மிஞ்சி மிஞ்சிப் போனால், ஐந்து பக்தைகள் யாழ் களத்தில் இருக்க, சுவாமிக்கு இவ்வளவு பக்தைகள் எங்கிருந்து தான் கிடைக்கிறார்களோ? :o

 

எல்லாம் அவனது அருள்!!! :D

 


யாழின் பெண்களை நிழலியானந்தாவின் பக்தைகளுள் அடக்கியதற்க்காக உங்கள்மேல் மானநட்ட வழக்குப் போட உள்ளார்கள் புங்கை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமை. சிரித்துக் களைத்துவிட்டது. நிழலியை ஒரு சிடுமூஞ்சியாகவே நான்

கற்பனை செய்து வைத்திருப்பதால், அவரின் நகைச்சுவை உணர்வை இதில்த்தான்

பார்க்கிறேன்.

 

 

 

யாழின் பெண்களை நிழலியானந்தாவின் பக்தைகளுள் அடக்கியதற்க்காக உங்கள்மேல் மானநட்ட வழக்குப் போட உள்ளார்கள் புங்கை. :lol:

 

வெறும் ;பக்தைகள்/ என்று தானே சொன்னேன்!

 

'சிஷ்யைகள் என்று சொல்லவில்லையே! :o

 

நிழலியானந்தா எல்லோரையும் சிஷ்யைகளாகச் சேர்த்துக்கொள்வதில்லை என்று சொல்கிறார்கள்!

 

ஏகப்பட்ட இன்ரர்வியூக்களாம் எண்டு கேள்வி, சுமோ!  :D

  • தொடங்கியவர்

எருமை நகரில் நடந்த கூத்துக்கு போய்விட்டு அங்கு போட்ட புரியாணியிலும் முட்டை இல்லை என்ற ஆத்திரத்தில் மல்லாந்து படுத்த சுவாமிகள் கடந்த இரண்டு நாட்களாக அறிதுயில் கொண்டு விட்டு இன்றுதான் விழித்தெழுந்து இருக்கின்றார். விழித்து எழுந்த உடன் அவர் அருந்தும் சோம பானத்தில் எவரோ ஒருவர் கூழ் முட்டையைக் கலந்து சதி செய்து இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அந்த நபரை கண்டுபிடிக்க கடும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. அநேகமாக சுபேஸ் எனும் அடியார் வேடத்தில் வந்த ஒரு போட்டி போலி (ஆ)சாமிதான் தான் இதனை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

 

 

 

 

சுவாமி நிழலியானந்தா அவர்களிடம் ஒரு கேள்வி


நீங்கள் நடுச் சாமத்தில் நற்சிந்தனையில் உங்களையே மறந்த 

மெய் நிலையில் லயித்திருக்கும் பொழுது :lol:

கடவுள் உங்கள் முன் தோன்றி 

உங்கள் நற்சிந்தனையைக் குழப்பினால்  

 

உங்கள் மன நிலை எப்படி இருக்கும். :D


அப்போது கடவுளுக்கே அருளும் உங்கள் மொழி எதுவாக இருக்கும் :lol:    

 

பக்தர்களே,

 

இது உங்கள் சுவாமியின் மகிமைகளை தகர்ப்பதற்காக மிகவும் நுட்பமாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்வி. பெயரில் வாத்தியார் என்று பெயரை வைத்துக் கொண்டு எந்த வாத்தியத்தினையும் இசைக்க தெரியாத ஒருவர் வேண்டும் என்றே என்னை மட்டம் தட்ட கேட்டு இருக்கின்றார் என்பதை அறிவீராக.

 

பக்தர்களே,

 

சதா சர்வ நேரமும் கடவுளுடன் ஐக்கியமாகி அவரையே தன் மெய்யுணர்வில் அருந்திக் கொண்டு இருக்கும் என்னிடம், கடவுள் எப்பவாச்சும் தான் வருவார் என்று தொனிப்பட கேட்டுள்ளதில் இருந்தே இந்த கேள்வியின் உள்ளர்த்தத்தினை விளங்கிக் கொள்வீர்களாக. அதுவும் நடுச் சாமத்தில் நான் ஆலிங்கன பரவசத்தில் இருந்து என் மெய்யை முற்றாக மறந்து இருப்பதை நக்கல் பண்ணும் விதமா இவர் கேட்டு இருக்கின்றார். 

 

 

கடவுளுக்கே அருளும் உங்கள் மொழி எதுவாக இருக்கும்

 

பக்தர்களே,

 

எவ்வளவுதான் நுட்பமாக கேள்விகளை பின்னினாலும் அதிலும் என் பெருமையை இறுதி வரியில் இணைக்க வைத்து இருப்பது தான பகவானின் லீலை.

 

"

நீ கல்லில் இருந்தாலும், முள்ளில் இருந்தாலும் இல்லை ஓரும் பஸ்ஸில் இருந்தாலும் எப்பவும்  உன் முன் வெப் கமரா இருக்கா என்று பார்த்து விட்டு இரு"

 

இதுவே கடவுளுக்கு சுவாமிகள் அருளியவை.

  • தொடங்கியவர்

 
1)சுப்ரமணியசுவாமிக்கும் நித்தியானந்த சுவாமிக்கும் இரண்டுவித்தியாசம் சொல்லுங்க ஜீ...?

 

1. சுப்பிரமணிய சுவாமி நெஞ்சில் வஞ்சகம் வைத்த ஆள், நித்தி *ஞ்சில் வஞ்சகம் அற்ற ஆள்.

 

2. சுப்பி Comedian போன்று தோற்றமளிக்கும் வில்லன். நித்தி காமன் போன்று தோற்றமளிக்கும் Comedian.

 

2)செத்தவீட்டில பிணமா இருக்கணும் என்கிறாங்க.....கல்யாண வீட்டில மாப்பிளையா இருக்கணும் என்கிறாங்க....வெறி ஏறினா வீட்டில என்னவா இருக்கணும் ஜீ..?

 

வெறி ஏறினா வீட்டில் வெங்காயமாக இருக்கணும். அப்பதான் மனிசி எவ்வளவுதான் உரித்தாலும் உண்மை மட்டும் வெளியில் வராது.

உந்த நிழலியானந்தாவை நாடு கடந்துங்கள், உவர் சிங்களப் பெண்களுக்குத் தான் போதனைக்கு ஏற்றவர்!

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கி போய் உள்ளவர்களுக்கு, களைப்பாற ஒரு இடம் தேவைதானே?  எல்லாம் ஒரு பரந்த நோக்கம்.

 

குருஜீ நீங்கள் இப்படி ஆக மாறனும் என்பற்கு பின்னால் ஏதும் காரணமிருக்கா? 

 

அத்துடன் கடந்து வந்த பல்லம் மேட்டு வாழ்க்கை வரலாறுகளையும் பக்த கேடிகளுடன் பகிர்ந்துகொள்ள உத்தேசமுன்டா?

அவருக்கு பள்ளம் மேடு என்றால் தன்னையே மறந்து விடுவார்.அதை இங்கு பதிந்தால்

யாழ் தாங்காததப்பா :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவே!இந்தப்பிறவியிலை என்ரை காலம் வட்டுக்கை போட்டுது.......அடுத்த பிறவிலையும் மனிசனாய் பிறந்து விட்டதொட்ட குறைகளை நிறைவேற்ற ஆசைப்படுகின்றேன்........முக்கியமாய் நானும் ஆச்சிரமம் ஆராதனைகள் என வாழவிரும்புகின்றேன்....அருள் புரிவீராக...சுபம்.

  • 2 weeks later...

குருவே!இந்தப்பிறவியிலை என்ரை காலம் வட்டுக்கை போட்டுது.......அடுத்த பிறவிலையும் மனிசனாய் பிறந்து விட்டதொட்ட குறைகளை நிறைவேற்ற ஆசைப்படுகின்றேன்........முக்கியமாய் நானும் ஆச்சிரமம் ஆராதனைகள் என வாழவிரும்புகின்றேன்....அருள் புரிவீராக...சுபம்.

 

அடுத்த பிறவியில் நீங்கள் பெண்ணாக பிறந்து, நிழலியானந்த ஆச்சிரமத்திற்கு வந்து, இப்பிறவியில் செய்தவற்றுக்கு பரிகாரம் தேட ஆசிர்வதிக்கப் போகின்றார், கவனம் :wub:

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுவாமிஜி உலகம் ஏன் இப்படி சுத்துது …?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுவாமிஜி உலகம் ஏன் இப்படி சுத்துது …?

அது முத‌ல் நாள் அடிச்ச‌ பிய‌ர் த‌ம்பி!

சுவாமியி உங்களுடன் சில கேள்விகள்

1)ஆமா சுவாமி நீங்க ஆபிரிக்க நாடான மேற்கு செடான் நாட்டில் ஆசிரம கிளை திறந்து ஆபிரிக்க பெண்களுக்கு அருள் கொடுக்க போகிறீர்களா என்று பூமி தொலைக் காட்சியில் சொன்னார்கள் எப்ப செய்யலாம் என்று உத்தேசம்?

2) இன்னும் உங்கள் பிறநாட்டு ஆசிரம பிரதிநிதிகளிடம் இச்கைபில் தான் கதைக்கிறீர்கள் எப்போ அவர்களை நேரில் சந்திச்சு சிசியர்களை சந்தோசத்தில் ஆழ்த்த போகிறீர்கள்?

3) உங்க பிரதம சீடன் அருத்திரன் ஆசிரமதிட்கு என்று ஆன்மீக சாசனம் எழுதினாரே மற்ற சாமியார்களுடன் கதைச்சு எழுதினாரா இல்லை நீங்க உங்க ஆன்மீக போதையில்சொன்னதை எழுதியதா?

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.