Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தின் சிறப்புப் பட்டிமன்றம் கருத்துகள்

Featured Replies

அடுத்து கனவு நாயகன் எங்கள் யாழ் கள 'பவர் ஸ்டார்' இன் உரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். :D

  • Replies 591
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரபிரச்சனையால் நேற்று எழுத முடியவில்லை. இப்போது எனது அலுவலகத்தில் இருந்து தான் எழுதுகிறேன். ஏதாவது எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கும்படி நடுவர்களை கேட்டு கொள்கிறேன்.

 

இது வரைக்கும் சிரிக்க வைக்குற பகலவன் அண்ணாவையே பார்த்தோம், இன்றைக்கு என்னையே அறியாமல் கண் கலங்க வைத்து விட்டீர்கள்.  வாதங்களுக்கு அப்பால் எம் மனதில் உயர்ந்து நிற்கிறீர்கள் அண்ணா.

வேறு சொல்ல வார்த்தையே இல்லை ..... :( :(

  • கருத்துக்கள உறவுகள்

நேரபிரச்சனையால் நேற்று எழுத முடியவில்லை. இப்போது எனது அலுவலகத்தில் இருந்து தான் எழுதுகிறேன். ஏதாவது எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கும்படி நடுவர்களை கேட்டு கொள்கிறேன்.

 

ஒவ்வொரு எழுத்துப் பிழைக்கும் அரைப்புள்ளி வெட்டுமாறு நடுவர்களை வேண்டிக்கொள்கிறேன். :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

பகலவனின் வாதம் ஆணித்தரம். :)

குழப்பிறதுக்கெண்டே சிலபேர் இருக்கினம். இரு தரப்பினருக்கும் இத்தால் அறியத்தருவது  என்னவென்றால், சின்னப் பிள்ளையால் போல நினைச்சு நினைச்சு மேடைக்கு வரப்படாது.  என்ன கதைக்கப் போறம் எண்டு  வடிவா முடிவெடுத்துப் போட்டு, ஒருமுறை மட்டும் வந்து உங்கட கருத்துக்களைச் சொல்லிப்போட்டுப் போகலாம்.  இதை இரு குழுக்களும் கருத்திலை எடுங்கோ.

 

இது பட்டிமன்றம். கதை சொல்லுற போட்டி இல்லை எண்டதையும் மனதில வச்சிருங்கோ.

 

 

மெசோ அக்கா, இத்திரியில் நான் எழுதுவதில்லை என்றே இருந்தேன். ஆனால் எழுத வைத்து விட்டீர்கள்.

ஒரு நடுவராக கருத்து வைக்கும் போது இவ்வாறு கோபப்பட்டு கருத்து எழுதுவது முறையல்ல. பிழைகள் எனப்பட்டால் தன்மையாக சுட்டிக்காட்டுங்கள். அவர் குழப்புவதற்காகவே வந்தது போலா உங்களுக்கு தோன்றுகிறது? என்ன ஒரு மனநிலை உங்களுக்கு? <_< நீங்களா இதை எழுதினீர்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. நீங்கள் இதை இங்கு எழுதிய விதம் வேறொருவரை தான் நினைவு படுத்துகிறது. <_<

 

பகலவன் அண்ணா தனது உரையை முடிப்பதாக முதலில் எங்கும் குறிப்பிடவில்லை தவிர அவர் வேலையிடத்தில் இருந்து எழுதுவதாக குறிப்பிட்டதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் ஒருதரத்தில் எழுத வேண்டியதை தான் பகுதி பகுதியாக எழுதி போட்டுள்ளார். இடையில் மற்றவர்கள் கருத்து வைத்தமைக்கு அவர் என்ன செய்ய முடியும்? அவர் தனது உரையை முடிப்பதாக கூறி மற்ற பகுதி எழுதி அதன் பின்னரும் தனது வாதத்தை தொடர்ந்தால் தான் நீங்கள் அவரை ஒரு தரத்தில் கருத்துகளை சொல்லும்படி கூறலாம்.

 

எனவே ஒவ்வொருவரும் தமது வாதத்தை முடித்து விட்டதாக குறிப்பிட்ட பின்னர் மற்றைய பகுதியை வாதாட அழைத்தால் நல்லது.

 

பட்டிமன்றத்தின் போது குட்டிக்கதைகளை அல்லது அனுபவங்களையும் சொல்வார்கள். நானும் பல பட்டிமன்றங்கள் பார்த்துள்ளேன். அவ்வாறு சொல்லக்கூடாதென்றால் போட்டி விதிமுறைகளில் அதை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். இப்பொழுது வந்து அவரை பிழைபிடிக்க முயலாதீர்கள். காவாலி அண்ணா குட்டிக்கதை சொன்னபோது நடுவர்கள் அதை வரவேற்றார்கள் தானே?

 

ஒருவர் தாயகம் போராளி என்று கதைத்தால் உங்களுக்கு அவர்களை பார்க்க இளக்காரமாக இருக்கிறதா? <_<

 

பி.கு:  

மெசோ அக்கா பகலவன் அண்ணா எழுதிய மூன்றாவது பகுதியை வாசித்ததால் தான் "இது பட்டிமன்றம். கதை சொல்லுற போட்டி இல்லை எண்டதையும் மனதில வச்சிருங்கோ" என்ற வரிகளை எழுதினார். இங்கு நான் விமர்சனம் வைத்த பின்னர் அங்கு எடிட் பண்ணி புதிதாக சில வரிகளை சேர்த்துள்ளார். அது தொடர்பான விமர்சன கருத்துகள் நீக்கப்பட்டதால் இதை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். :rolleyes:

 

பகலவன் அண்ணாவின் மூன்று பகுதியும் இப்பொழுது ஒன்றாக்கப்பட்டு விட்டது. :rolleyes:

Edited by துளசி

மற்றவர்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் பகலவனுக்குள்ளும் இப்படியொரு சோகமா? 

நடுவர்களே, எமதணி வாதிட வரும்போது மட்டும் இப்படி அவசரப்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  நடுவர்களையும் விதிமுறைகளைச் சரியாகப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.   :wub:

 

எங்கள் அஞ்சா நெஞ்சம், சிங்கம், பவர் ஸ்ரார் சுபேசை எதிரணியினருக்குத் தகுந்த பதிலடி கொடுக்கத் தகுந்த அவகாசம் எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பகலவனின் 3வது பகுதியை வாசிக்காது கருத்து எழுதிவிட்டேன். ஏனெனில் வேலையில் நிற்கறேன். அது என் தவறுதான். எழுதியதைத் திருத்தியுள்ளேன் பாருங்கள். அதற்காக நான் பகலவனிடம் மன்னிக்கும் படி கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எக்கோய் மெசோ அக்கோய் வேலையில தோசை எல்லாம் கொண்டு போய் சாப்பிடுவிங்களா? :D

  • கருத்துக்கள உறவுகள்

தன் மன உணர்வுகளை எழுத்துக்களால் வடித்து சென்ற பகலவனுக்குள் இவ்வளவு வேதனைகள் இருக்கிறதா.... :(

  • கருத்துக்கள உறவுகள்

பகலவனின் கதை நெஞ்சைச் சுட்டுவிட்டது. :(

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து சுபேஷ் வந்து தனது வாதத்தை முன்வைக்கும் மட்டும் மக்களை மகிழ்விக்க சில நகைச்சுவை துணுக்குகள்

நடிகருக்கும் டாக்டருக்கும் என்ன வித்தியாசம் ..?

ஓ அதுவா ..?

இரண்டுபேரும் ஏதாவது தியேட்டரில்

யாரையாவது போட்டு அறுத்துக்கொண்டிருப்பாங்க ..

தொலைபேசியில் ,,ஒரு பெண் ..

டாக்டர் ...என் கணவர் பேனாவை விழுங்கிடார்

டாக்டர் ; இன்னும் சில நிமிடங்களி வந்துவிடுகிறேன் ..

பெண் ;அதுவரையும் நான் என்ன செய்வது ..?

டாக்டர் : பென்சிலால எழுதுங்க

ஏன் தண்ணி தெளிச்சிட்டு

கோலம் போடுறாங்க தெரியுமா ?

*

*

*

கோலத்தைப்போட்டுட்டு தண்னி தெளிச்சா ..

கோலம் அழிஞ்சிடுமே அது தான் ....!

சில விடையங்கள் முடியாது ...? எது ..?

1) காலி பிளவரை தலைக்கு வைக்க முடியாது

2) கவரிங் கோல்ட் நகையை அடகு வைக்க முடியாது

3) கோல மாவில தோசைசுட முடியாது

4) வீணாப்போன SMS வந்தாலும் வாசிக்காமல்

இருக்க முடியாது ..!

5) அறுத்துக்கொண்டிருப்பவன திருத்த முடியாது ..!

:D:(:D

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாய் வாவா என்று அரையண்டப்படுத்தினால்..பட்டிமன்றமேடையை..வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கிறேன்..இன்று பரிசில் வரலாறு காணாத பனிமழை..மனுசர் இந்தப்பனிக்காலை புதைஞ்செழும்பி ரெயினும் இல்ல இப்பதான் வேலையாலை வந்திருக்கிறன்..அதுக்கிடையில உங்களுக்கு அவசரம்..எல்லாரும் வீட்டிலை சோறு கறி முழுசா அவியமுன்னம் அரை அவியல்ல அள்ளி அள்ளி சாப்பிடுற ஆக்கள் போல கிடக்கு... :lol:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பட்டிமன்ற நடுவர் மொசப்பத்தேமியர் அவர்களே  எனது அணியை சேர்ந்த பகலவன் தனது வாதத்தை பிரித்து பிரித்து  வைத்ததை  சுட்டிக் காட்டியிருந்தீர்கள்.  அவர் அப்படி தனது வாதத்தினை பிரித்து பிரித்து வைத்தற்கான  வலுவான முக்கிய காரணம் ஒன்று உள்ளது . அவர் அப்படி வாதத்தை வைத்தற்கு எதிரணியினரே பொறுப்பாளிகள். ஆகின்றனர். :icon_idea:  ஏனென்றால் புலம் பெயர் வாழ்வினை சொர்க்கம் என நினைத்து அதன் சுகத்தில் திளைத்துப்போய் பணம் இருக்கின்றது என்கிற காரணத்தால்  தமிழ்நாட்டின் அனைத்து தொலைக்காட்சி இணைப்புக்களையும் எடுத்து வைத்துவிட்டு வீட்டில் இரவு பகல் என்று பாராமல் குப்பைகள் போல் குவிந்து போய் கிடக்கும் மெகா சீரியல்களை பார்த்து  பார்த்துப் பழகிப்போய்  சீராக வாழவேண்டிய வாழ்க்கையை  சீரியல் வாழக்கையாக வாழ்ந்து கொண்டிருக்கும் எதிரணியினரிடம்.சாதாரணமாய்  எப்படி சுகம் என  நலம் விசாரிப்பது என்றாலே  அதற்கு இரண்டு இடைவேளை விட்டு   எ...ப்...ப...டி....   '(இடைவேளை )  சு....க....ம்... என இழுத்து இழுத்து  கேட்டால் தான் அவர்களிற்கு புரிகிறது.

 

அவர்களின் நிலைமை இப்படி இருக்கும் போது . பகலவனின்  கடுமையான  நீண்ட  விவாதத்தை அவர்களால்  புரிந்து கொள்ளமுடியாது. எனவே தான் அவர் எதிரணிக்கு  புரியும் படியாக தனது வாதத்தினை  பிரித்து  பிரித்து வைத்தார்.  எனவே தவறு  எமது அணியினரிடம் இல்லை அதற்கு  முழுப் பொறுப்பையும் எதிரணியினரே ஏற்கவேண்டும் என  உங்களிடம் தெளிவு படுத்துகிறேன் . :lol: :lol: :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே இப்பொழுது எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சுபேஷ் அவர்கள் பவர் ஸ்டார் உடன் தீவிர discussion இல் இருப்பதாகவும் எதை பேசுறது எதைப்பற்றி பேசுவது என்னவென்று பேசுவது என்று பவர் ஸ்டார் தனக்கே உரிய பாணியில் எடுத்துக்கூற அதை சுபேஷ் அவர்கள் கூர்ந்து அவதானித்து குறிப்பெடுத்து கொண்டிருப்பதாக லா சப்பல் செய்திகள் கூறுகின்றன.....

  • கருத்துக்கள உறவுகள்
நான் ஜீவாவிடம் இருந்து இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன் ஏமாத்தி விட்டார் <_<



--

 

Edited by நிழலி
மட்டுறுத்தப்பட்ட கருத்தினை மேற்கொள் காட்டியிருந்தமையால் நீக்கப்படுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

பணிப்புயலை கடந்த வீரா

நீ யாழ் களத்தின் சூரா

களமாட வருக

பட்டி மன்றில் கருத்தாட வருக

இப்படிக்கு சுபேஷ்

ரசிகைகள் மன்று

என்று ஒரு பெரிய banner வைக்கபட்டிருப்பதை மண்டபத்திற்கு வெளியே காணக்கூடியதாக இருக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி உசுப்பேத்தியே உடம்பை ரண்களமாக்குங்கோ.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது சுபெஷின் வெடிகுண்டு தாக்குதல் கருத்தை கேட்ட நடுவர்கள் நடுங்கி போய் இருப்பதாக நடுவர்களுக்கு பின்னால் நின்றுகொண்டிருக்கும் தமிழ்31 செய்தி அணுப்பி இருக்கின்றார் :D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து இன்னொரு நகைச்சுவை துணுக்கு

ஒரு வீட்டுக்கதவை மூன்று குடிகாரர் தட்டியபடி

இருந்தனர் ....!

அந்த வீட்டுக்கார அம்மா வந்தவுடன் ...

மூன்று பேரில் ஒருவன் சொன்னான் ..இந்த மூணு

பேரில எது உன் புருஷன் எண்டு எடுத்திட்டு எங்களை விடு என்றான் ...

யோய் நீதான் என் புருஷன் வாயா ..என்றா ...அவா :(:D

சும்மாய் வாவா என்று அரையண்டப்படுத்தினால்..பட்டிமன்றமேடையை..வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கிறேன்..இன்று பரிசில் வரலாறு காணாத பனிமழை..மனுசர் இந்தப்பனிக்காலை புதைஞ்செழும்பி ரெயினும் இல்ல இப்பதான் வேலையாலை வந்திருக்கிறன்..அதுக்கிடையில உங்களுக்கு அவசரம்..எல்லாரும் வீட்டிலை சோறு கறி முழுசா அவியமுன்னம் அரை அவியல்ல அள்ளி அள்ளி சாப்பிடுற ஆக்கள் போல கிடக்கு... :lol:

 

சுபேஸ், நீங்கள் உங்கள் நேர வசதிப்படியே எழுதுங்கள்.  எதிரணியினர், எமது அணியின் வாதங்களை எதிர்கொள்ள முடியாததாலேயே எமதணியை அவசரப்பட்டு எழுத வைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ், நீங்கள் உங்கள் நேர வசதிப்படியே எழுதுங்கள்.  எதிரணியினர், எமது அணியின் வாதங்களை எதிர்கொள்ள முடியாததாலேயே எமதணியை அவசரப்பட்டு எழுத வைக்கிறார்கள்.

ஆம் அக்கா..இதுவும் எமது அணியை வீழ்த்துவதற்கு எதிரனியினர் குறுக்குவழியை நாடி செய்யும் ஒரு சூட்சியே. :D

  • கருத்துக்கள உறவுகள்

.

புலம் பெயர் நாடுகளில் இது போன்று கணணிகளில் இருந்து தொடர்ந்து எழத நேரம்  கிடைப்பதில்லை. அதையும்  புரிந்து கொண்டு பகலவன் தனது வேலை நேரத்திலும்  நேரத்தை  ஒதுக்கி  தனக்கு கொடுத்த கடமையைச்செய்திருக்கின்றார். ஆனாலும் அவசரப்படுத்தியதால் எழுதியவற்றை  உடனுக்குடன் அனுப்பியிருப்பார் என்று நினைக்கின்றேன்.   இதுவும் புலம் பெயர் அவலமே.

 

எனவே பகலவனின் 3 பகுதியையும் ஒன்றாக்கி  உதவலாமே நிர்வாகிகளே......

இதன் மூலம்  வேறு வகையான விவாதங்கள் தவிர்க்கப்பட்டு பட்டிமன்றம் தனது வழியில் சீராக செல்ல உதவலாம்.

விதிமுறைகள் :
 
கருத்துக்கள விதிமுறைகளுடன் பின்வரும் விதிமுறைகள் மேலதிகமாக இணைக்கப்படுகின்றன .
 
01: விவாதங்கள் இரண்டு திரிகளில் இடம்பெறும் . அதாவது ஒரு திரியினுள் விவாதம் இரு அணிக்கும், மற்றய திரியில் அந்த விவாதம் சம்பந்தமான பார்வையாளர்கள் கருத்துக்களும் , அதற்கு பதில் அளிக்கும் அணிகளின் கருத்துக்களும் அடங்கும் .
 
02 : விவாதத்தில் ஈடுபடுகின்றவர் பட்டிமன்ற தலைப்பு சம்பந்தமாகவே விவாதம் செய்யவேண்டும் .
 
03 : தனிமனித்தாக்குதல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டது .
 
04 : தனிமனித்தாக்குதல் இடம்பெறும் பட்சத்தில் அணித் தலைவர் சம்பத்தப்பட்டவருக்கு தவறை சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்து மட்டுக்களைக் கொண்டு மட்டுநிறுத்தல் வேண்டும் .
 
05 : விவாத்தை செய்பவருக்கான அதிகபட்சக் கால அளவு 1 கிழமை . பதில் தரவேண்டியவருக்கும் இதே கால அளவு பொருந்தும்.
 
06 : இந்தக் கால அளவினுள் பதில் தராதவிடத்து அணித்தலைவரே வேறு ஒருவரை பதில் தர அழைக்க வேண்டும் .
 
07 : விவாதத்தை செய்பவர் ஒருதடவையே விவாதம் செய்ய அனுமதிக்கப்படுவர் . அதன்பின்பு எதிரணிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் . ஆனாலும் , விவாதம் செய்தவர் எதிரணி விவாதம் செய்யும்பொழுது ஏதாவது கூற விரும்பினால் கருத்துக்களுக்கான திரியில் பதியலாம் .
 
08 : விவாதம் செய்யும்பொழுது விவாதித்ததை திருத்தி எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது . ஆனால் எழுத்துப் பிழைகளுக்கு விலக்கு உண்டு .
 
நடுவர்கள்:
 
மொசப்பத்தேமியா சுமேரியர் , கோமகன் .


 

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் யாழ் களத்தின் உரிமைக்குரல் விசு அண்ணா நல்ல ஒரு கருத்தை கூறி இருக்கின்றார் நிர்வாகம் முடிந்தால் பகலவன் அண்ணாவின் கருத்தை ஒன்றாக்கி விடவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.