Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயைக் காண்கிறோம் விடுதலைத் தாகம் ஏந்திய உம் முகங்களில்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
தூங்கி கிடந்தீர்கள்..
புன்னகைத்தார்கள் 
அரசியல்வாதிகள்..
பின்னால் நின்று 
உங்கள்
கன்னங்களை வருடிவிட்டார்கள்..
இன்னும் என்ன வேண்டும் என்று
இனமானத்துக்கு விலை பேசினார்கள்..
முன்னால் 
உங்கள் கன்னங்களை தடவிவிட்டு
பின்னால் 
உங்கள் கண்ணீரை காசாக்கினார்கள்..
செம்மரிகளாய் இருப்பார்கள்
என்றெண்ணி
தமிழரை
செருப்பாய் தேய்த்தார்கள்..
இருப்பை உணர்த்த
ஒரு தீ பிறாக்காதோ என்று
தமிழ்க்கரு சுமந்த
மனங்கள் தவித்தன..
உள்ளே குமைந்து கொண்ட
உணர்ச்சித்தீயை
மோதி அணைத்துக்கொண்டே இருந்தது
சாப அரசியல்...
 
பழுத்த கிழம்கள் எல்லாம்
பாழும் அரசியலில் இருந்து
உழுத்துப்போன வார்த்தைகளைப் பேசி
உருவேற்றி
வெளுத்ததெல்லாம் பாலென்று 
தொழுது நிற்கும் தொண்டர்களின்
வேர்வைகளில் 
கொழுத்துப்போய் 
தம் குடும்பம் வளர்க்க...
புத்தக்கப்பையுடன் தனியே 
புழுதியில் உட்கார்ந்து
சகோதரனின் விடுதலைக்காய்
சாவினை உடையாய் போர்த்தி
சரித்திரத்தை மாற்ற
கழுத்தில் நஞ்சேந்தாத 
புலிகளாய்
கருத்தினில் நீங்கள்
மூட்டிவிட்டிருக்கும் தீ
இனி எம் 
இருளை எரிக்கட்டும்...
 
நாதி அற்றுக்கிடந்த
ஈழத்தமிழன் 
கால வீதியெங்கும் மிதிபட்டான்..
செந்நீரில் எழுதிய 
ஈழகாவியம்
கண்ணீரில் கரைந்தழிய
வெந்நீராய் கொதித்த
எம் மனங்களுக்கு
உண்ணாவிரதமாய்
நீங்கள் 
உயிர் வருத்தும் சேதி
இன்னும் இருப்பதற்கான
விருப்பை கொடுக்கிறது..
வெளுக்காத எம்வானில்
கிழக்கால் ஒரு வெள்ளி
உங்கள் உருவில்...
 
எத்தனைகாலம் நாம் 
அடிமையாய் இருப்போம்..?
புத்திரரே..
எம் தொப்பிள்கொடிகளே
எமைப் பிடித்த
அடிமைத்தரித்திரம் 
எம்முடன் தொலையட்டும்..
 
கல்விக்கூடங்களில்
கருக்கொண்ட இந்த விதை
எள்ளி நகையாட நினைக்கும்
அரசியல் சகுனிகளை எரித்து
இனம் அழிய 
கொள்ளிகளுடன் அலையும்
கொடியவரை
துகிலுரித்து
ஊர்களை நகரங்களை
உலுப்பி
வேர்விட்டு பெருமரமாகட்டும்...
அதுகொடுக்கும் நிழலில்
இனிவரும் எம் தமிழ்
விழுதுகளாவது
சுதந்திரத்தின் வாசனையை
சுவாசித்தபடி வாழட்டும்..
 
இடையிலே நின்று போன
ஈழத்தேரோட
தீயாய்
உடையிலே வாளேந்தாமல்
உள்ளத்திலே வாளேந்தி
உம் தேகமுருக்கும்
சிற்பிகளே
தாயைக் கண்டு
தாழ்பணிகிறோம்
விடுதலைத் தாகம் ஏந்திய 
உம் வீர முகங்களில்.....

Edited by சுபேஸ்

வீறுகொண்டெழுந்துள்ள எங்கள் சகோதரருக்காய் வடிக்கப்பட்ட கவிதைக்கு வாழ்த்துக்கள்.

 

ஆட்டமும் பாட்டமும் தான் மாணவர்க்கு,  அரசியல் என்பது வாரிசுகளுக்கு என்று எழுதாத சட்டத்தை உடைத்தெறிந்து புதிய தலைமையைக் காண வாழ்த்துக்கள் மாணவர்களே

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

கிழட்டு அரசியல் நரிகள் நாட்டை ஆண்டது போதும் என வெளிக்கிளம்பிவிட்டார்கள் இளந்தளிர்கள்..!

காலத்திற்கும் நேரத்திற்கும் உகந்த கவிதை. நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளே குமைந்து கொண்டிருக்கும், ஏக்கங்களும் எதிர்பார்ப்புக்களும், ஆற்றாமைகளும் உங்கள் கவிதை மூலம் பீறிட்டுப் பொங்கி வருகின்றன!

 

விடியும், விடியும் எனக்காத்திருந்து, சூரியனையே தொலைத்து நிற்கிறது தமிழினம்!

 

மாணவச் செல்வங்களின் போராட்டம் வலுப்பெறட்டும்!

மரணங்களின் காரண கர்த்தாக்கள் தண்டிக்கப் படட்டும்!

 

நன்றிகள், சுபேஸ்!

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை...சுபேஸ்    காலத்தின் தேவையறிந்து ...கவி நயத்தால் எம் தொப்புள் கொடி உறவுகளின் உணர்வை மதித்த உங்களுக்கு எனது நன்றிகள்....தொடர்க உம் பணி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சினிமாவும் கிசு கிசுவும் கிரிக்கெட்டும் மட்டும் தெரியும் இவங்க எல்லாம் எங்க உருப்பட்டு எண்டு நினைத்த எங்களை அதையும் எல்லாம் தாண்டி எமக்கு போராட தெரியும் எங்களுக்கான சூழலை எதிர்பார்த்து காத்து இருந்தோம் என செயலில் செய்துகாட்டி விட்டார்கள் மாணவ செல்வங்கள் ..!தலை சாய்கிறது தானாக மாணவர்களின் இன உணர்வை நினைத்து..
 
மணிவாசகன் அண்ணா,இசை அண்ணா,அகூதா அண்ணா,புங்கை அண்ணா,அல்வாயான் அண்ணா..உங்களுணர்வுகளையும் இந்த திரியில் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் நாங்கள் இன்னும் ஏதும் செய்யவில்லை டா மச்சான்.

வெறும் கவிதை,கதையளோடை நின்று விடுகிறோம். தமிழகம் தாண்டி தமிழர் தேசமெங்கும் இந்த விடுதலைத் தீ பரவ ஏதும் வழி கண்டோமா????

 

கவிதையை குற்றம் சொல்வதில்லை நண்பா நோக்கம், இன்னும் எத்தனை நாளைக்கு மற்றவனே செய்வான் என்று எதிர்பார்க்கப் போறோம் என்ற ஆதங்கமே.. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் நாங்கள் இன்னும் ஏதும் செய்யவில்லை டா மச்சான்.

வெறும் கவிதை,கதையளோடை நின்று விடுகிறோம். தமிழகம் தாண்டி தமிழர் தேசமெங்கும் இந்த விடுதலைத் தீ பரவ ஏதும் வழி கண்டோமா????

 

கவிதையை குற்றம் சொல்வதில்லை நண்பா நோக்கம், இன்னும் எத்தனை நாளைக்கு மற்றவனே செய்வான் என்று எதிர்பார்க்கப் போறோம் என்ற ஆதங்கமே.. :(

ம்ம்ம்.... :(  :(  :(

ஆனால்...வீதியில் இறங்கி நிற்கும் அந்த சோதரர்களுக்கு என் மன உணர்வை வெளிப்படுத்த எனக்கு தெரிந்தது என் மொழியே..அதை என்னால் முடிந்த இடத்தில் பதிவிட்டேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்.... :(  :(  :(

ஆனால்...வீதியில் இறங்கி நிற்கும் அந்த சோதரர்களுக்கு என் மன உணர்வை வெளிப்படுத்த எனக்கு தெரிந்தது என் மொழியே..அதை என்னால் முடிந்த இடத்தில் பதிவிட்டேன்...

 

பயமறியா இளங்கன்றுகள்

அயராது கோசமிட்டால்

உயரெழும்பி விடுதலைத்தீ

புயலாகப் பரவி விடும்

 

நன்றி சுபேஸ் ஆக்கத்திற்கு, 2011ல் ஆரம்பித்த ஆரேபியன் ஸ்பிரிங் போல தமிழகத்தில் ஆரம்பித்திருக்கிறது. தொடருங்கள் பதிவுகளை.

  • கருத்துக்கள உறவுகள்

-------
பழுத்த கிழம்கள் எல்லாம்
பாழும் அரசியலில் இருந்து
உழுத்துப்போன வார்த்தைகளைப் பேசி
உருவேற்றி
வெளுத்ததெல்லாம் பாலென்று 
தொழுது நிற்கும் தொண்டர்களின்
வேர்வைகளில் 
கொழுத்துப்போய் 
தம் குடும்பம் வளர்க்க...
புத்தக்கப்பையுடன் தனியே 
புழுதியில் உட்கார்ந்து
சகோதரனின் விடுதலைக்காய்
சாவினை உடையாய் போர்த்தி
சரித்திரத்தை மாற்ற
கழுத்தில் நஞ்சேந்தாத 
புலிகளாய்
கருத்தினில் நீங்கள்
மூட்டிவிட்டிருக்கும் தீ
இனி எம் 
இருளை எரிக்கட்டும்...
-------
நாதி அற்றுக்கிடந்த
ஈழத்தமிழன் 
கால வீதியெங்கும் மிதிபட்டான்..
செந்நீரில் எழுதிய 
ஈழகாவியம்
கண்ணீரில் கரைந்தழிய
வெந்நீராய் கொதித்த
எம் மனங்களுக்கு
உண்ணாவிரதமாய்
நீங்கள் 
உயிர் வருத்தும் சேதி
இன்னும் இருப்பதற்கான
விருப்பை கொடுக்கிறது..
வெளுக்காத எம்வானில்
கிழக்கால் ஒரு வெள்ளி
உங்கள் உருவில்...
 
எத்தனைகாலம் நாம் 
அடிமையாய் இருப்போம்..?
புத்திரரே..
எம் தொப்பிள்கொடிகளே
எமைப் பிடித்த
அடிமைத்தரித்திரம் 
எம்முடன் தொலையட்டும்..
------

காலத்துக்கு ஏற்ற கவிதை. சுபேஸ் எழுதிய கவிதையில்.... எதை மேற்கோள்காட்டுவது என்று... தேடிய போது.... வரிகள் அத்தனையும், ஒன்றையொன்று மிஞ்சி நின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேற்ற கவிதை, நன்றிகள் தமிழக சகோதரங்களுக்கு நன்றிகள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் மீண்டும் திலீபன்கள் உருவாகிவிட்டார்கள். பிரபாகரன்கள் எப்போது? என்பதே வரலாற்றாளர்களின் கேள்வியாக உள்ளது.

- இசைப்பிரியா-

 

நன்றி ஜீவா,யாழ்வாணண் அண்ணா,தமிழ்சிறி அண்ணா,உடையார் அண்ணா உங்கள் உணர்வுகளையும் இந்த திரியில் பகிர்ந்துகொண்டதற்கு..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை...சுபேஸ்    காலத்தின் தேவையறிந்து ...கவி நயத்தால் எம்
தொப்புள் கொடி உறவுகளின் உணர்வை மதித்த உங்களுக்கு எனது நன்றிகள்....

தொடர்க
உம் பணி...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.