Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

 அழகான அலங்காரத்துடன், உதட்டோரம் புன்னகை மாறாமல், அமைதியாக  தூங்கும் தேவதையாக அவள். அவனைப் பார்க்கின்றாள். அவளையே பார்த்தபடி நின்றவனின் இறுகிய முகத்தில்  ஏதோ தேடுகிறாள். 
       இறுதி  நிமிடங்கள், இப்போதாவது  ஒரு வார்த்தை கணவனாக வாய்விட்டுச்சொல்வாயா? இத்தனை வருடங்கள் நீ எனக்குச் காட்ட  மறந்த  காதலை, நட்பை, சொல்லமறந்த நன்றிகளை, கேட்க  மறுத்த மன்னிப்புகளை.....
 
      கடைசித் துளிகள், கைகள் நடுங்க, இதயம் கனக்க, அவன் அந்தப் பொத்தானை அழுத்துகிறான். காதலின்றி, நட்பின்றி, வாழாத வாழ்கையை வாழ்ந்த வலியுடன் அவள் காற்றில் கரைந்து காணாமல்ப் போய்விட்டாள்.
      இதோ மனசுக்குள் மட்டும் அவன் நேசித்த(?) அவளை, ஒரு பிடியாக்கி மின்சாரம் கைகளில் தர, 
                            முதல் முறையாய் அவன் கண்களின் ஓரம் கண்ணீர்த்துளிகள், .....................காட்ட  மறந்த  காதலை, நட்பை, சொல்லமறந்த நன்றிகளை, கேட்க  மறுத்த மன்னிப்புகளை...........
                              சொல்லாமல் சொல்லியதை பார்பதற்கும் கேட்பதற்கும் அவள் அங்கிலை.
  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும்வரை, ஒருவரது அருமைகளைப் புரிந்து கொளவதில்லை!

 

புரிந்தாலும், அதை வெளிக்காட்டக் ;'கெளரவம்' இடம் தருவதில்லை!

 

இறுதியில், எல்லாம் முடிந்தபின் 'பிராயச்சித்தம்' தேடுவது தான், எம்மில் பெரும்பாலானோரின் நடைமுறை!

 

நன்றிகள், நீதிமதி!

  • கருத்துக்கள உறவுகள்
நேரம் கிடைக்கும் போது நிறைய எழுதுங்கள் நீதிமதி

வாழ்க்கையை தொலைத்துவிட்டுத் தேடுவதே பலரது வாழ்க்கையாகப் போய்விட்டது.

வாழ்க்கை வாழென அழைக்கையில் வாழாமல்... காலங்கடந்து அதனை வாழ நினைக்கையில்

அது எங்கோ தொலைந்து போயிருக்கும். அதேபோலத்தான்... அன்பையும் காட்டவும் பெறவும் தவறிவிடுகின்றோம்!

 

வாழ்க்கை வாழ்வதற்கே... வீணாக்க இல்லை!

 

அருமையான ஒரு விடயத்தை விளக்கிய குட்டிக் கதைக்கு மிக்க நன்றி :)

  • தொடங்கியவர்

கருத்துகளுக்கு நன்றி,          புன்கையூரன், ரதி, கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கனதியான ஒரு விடயத்தை எவ்வளவு சுருக்கி இலகுவில் புரியும்படி
எழுதிய திறமைக்குப் பாராட்டுக்கள் நீதிமதி.தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான்கைந்து வரிகளுக்குள் கனதிய்யான விடயத்தை சொல்லிவ்வீட்டிர்கள்...பாராட்டுக்கள்...

  • தொடங்கியவர்

மிகவும் கனதியான ஒரு விடயத்தை எவ்வளவு சுருக்கி இலகுவில் புரியும்படி

எழுதிய திறமைக்குப் பாராட்டுக்கள் நீதிமதி.தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி சுமே அக்கா 

நான்கைந்து வரிகளுக்குள் கனதிய்யான விடயத்தை சொல்லிவ்வீட்டிர்கள்...பாராட்டுக்கள்...

நன்றி சுபேஸ் 

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலைவது தான் மனிதகுணம் . அதில் சுடலைஞானமும் ஒன்று . கடுகில் துவாரம் போட்ட நீதிமதிக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள்  :) :) . தொடர்ந்து எழுதுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நான்கைந்து வரிகளில்..........அத்தனை பெரிய உண்மை.........பாராட்டுக்கள் நீதிமதி.

 

 

சொல்லாமல் சொல்லியதை பார்பதற்கும் கேட்பதற்கும் அவள் ............

 

 

....................அங்கில்லை( அங்கு இல்லை)

  • தொடங்கியவர்

நான்கைந்து வரிகளில்..........அத்தனை பெரிய உண்மை.........பாராட்டுக்கள் நீதிமதி.

 

 

சொல்லாமல் சொல்லியதை பார்பதற்கும் கேட்பதற்கும் அவள் ............

 

 

....................அங்கில்லை( அங்கு இல்லை)

நன்றி நிலாமதி 

அங்கு இல்லை என்பதை சேர்த்து எழுதினால் " அங்கில்லை " என்று தான் வரும் என்று நினைக்கின்றேன் :)

  • தொடங்கியவர்

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலைவது தான் மனிதகுணம் . அதில் சுடலைஞானமும் ஒன்று . கடுகில் துவாரம் போட்ட நீதிமதிக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள்  :) :) . தொடர்ந்து எழுதுங்கள் .

நன்றி கோமகன்,          நன்றி, மன்னிப்பு, பாராட்டு, என்பன உடனுக்குடன் தெரிவிக்கப்பட வேண்டும். காதல் வார்த்தைகளால், செயலால் வெளிப்பட வேண்டும். அப்பொழுதுதான் உறவும் வாழ்கையும் அர்த்தமுள்ளதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குட்டிக்கிறுக்களுக்கு நன்றிகள்.....

வேலை, பொருளாதார & மற்றும் பல பிரச்சனைகளால் ஓய்வெடுத்து மனவிட்டு பேச சிலர் நேர ஒதுக்குவது குறைவு.

 

அடிக்கடி சுற்றுலா சென்று ஆறுதலாக வாழ்கையை குடும்பத்துடன் செலவிட்டால் எந்த பிரச்சனையுமில்லை.

 

மனவிட்டு பேசாததால் பல குடும்பங்கள் பிரிந்திருக்கு

 

கணவனோ மனைவியோ ஈகோதான் பலருக்கு பெரிய பிரச்சனை.

 

நன்றி பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலியாணம் கட்டின புதுசிலை எல்லா ஆம்பிளையழும் கரைகட்டி வெளுப்பினம் . பேந்து ஏனோ தானோ எண்டு இருப்பினம் .நல்ல கதையை எழுதி இருக்குறிங்கள்  . உங்களை நான் பாராட்டிறன் .

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமோ அக்கா சொன்னது போல

ஒரு நாவலுக்குரிய கருவை இவ்வளவு இரத்தினச் சுருக்கமாய் சொல்லியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள் அக்கா, தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.. :)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.