Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சமரு"க்கு மட்டும் சாலை வரும் சாமிகளே..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Murugan-temple-procession-2012.jpg

 

 

சண்டை களத்தில்

சமருக்குப் பயந்து

சாவுகளைச் சாட்டி

சமுத்திரங்கள் தாண்டி

சந்துபொந்தெங்கும்

சரணடைந்திட்ட

சாமிகளே...

"சமரு"க்கு மட்டும்

சாலை வரும்

சங்கதி கண்டு

சந்தி சிரிக்குது..!

 

சனங்களின் பயபக்தியில்

சன்னதமாடும் சாமியார்கள்

சட்டுப்புட்டென்று

சதுரம் வளர்க்க

சந்தர்ப்பம் வழங்கியது போதும்..!

சரித்திரம் படைக்க

சண்டைக்குப் போன தேசம்

சரிந்து கிடக்குது

சார்ந்திருக்குது

சந்ததி ஒன்று..தப்பிப் பிழைக்க..!

 

சாவில் தான்

சந்தர்ப்பம் கண்டும்

கரங்கொடுக்க மறந்தீர்..!

சரிந்தது போதும் அவ்வினம்..

சரணடைந்தொரு அடிமை வாழ்வில்

சண்டித்தனம் இயற்றியதும் போதும்..!

சட்டுபுட்டென்று காரியம் ஆகட்டும்

சில்லறைகள் நிறையும் உண்டியல்கள்

ஊருக்குப் போகட்டும்

சாலை வரும் சாமிகளே..

சனத்திடம் வேண்டி நில்லுங்கள்

சனாதன தர்மமல்ல...

சண்டைக் களத்தில் காயம் கண்ட

சனங்களுக்கு ஓர் தர்மம்..!

 

ஆளுக்கொரு பவுனோ.. டொலரோ

தர்மமாய் தாருங்கள்

கொண்டை மாலையில்

சிதையும் அந்த

டொலர்களை பிச்சையாய் தாருங்கள்..

ஆண்ட இனம்

நாடு நாடா

தழைத்தோங்க

தம் வாழ்வையே தந்திட்ட

உத்தமர்கள்..

சந்ததி ஒன்று

உய்வுற..!!!

Edited by nedukkalapoovan

றோட்டெல்லாம் தேங்காயடிச்சு பிறகு கவுன்சில் காறன் அபராதம் போட்டிடுவான் எண்ட பயத்திலை பாய்ஞ்சு பாய்ஞ்சு  அதையெல்லாம் அள்ளி .....

 

தேங்காயடிக்கிற காசை மட்டும் சேத்தாலே நூறு குடும்பத்துக்கு நிரந்தர வருமானத்துக்கு வழி செய்யலாம். 

 

இதுகளைப் பற்றிக் கதைச்சால் சாமி குத்தம் எண்ணுகினம்.. :(  :(  :(



ஊரிலையெல்லாம் ஏதோ திதி கிதியெல்லாம் பாத்து பூர்வபட்ச பத்தாம் நாள் அபரபட்ச எட்டாம் நாள் எண்டு தான் தேர்த்திருவிழா வாறது. ஆனால் புலத்திலை சனி ஞாயிறு இல்லாட்டில் பாங்க் கொலிடேயிலை தான் சாமி வெளியிலை வருகுது. சாமியும் வெளிநாட்டு ஸ்ரைலுக்கு மாறீட்டுது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் மட்டுமல்ல் ,தாயகத்திலும் அதேநிலைதான்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட உறவுகளுக்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

சின்னஞ் சிறு குழந்தைகள்,

தென்னங்குரும்பைகளில்,

தேர் செய்து விளையாடுகையில்,

திரிகோண கணிதத்தின்,

தேற்றங்களை அறிகின்றன என்று,

மகிழ்ந்திருந்தோம்!

இன்று, அவையெல்லாம்,

பெரிய மனிதர்களாகித்

தேர் கட்டி இழுக்கின்றன!

தேங்காய்களும் உடைக்கின்றன!

எந்தக் கணிதங்களும்,

இப்போது படிக்கவில்லை!

சொந்தச் செலவிலே தங்களுக்கே,

சூனியம் வைக்கின்றன! :D

 

கவிதை உண்மையை உரைக்கின்றது. நெடுக்ஸ்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ  சொல்லுங்கள்

தலைப்பு சரியில்லை

சமருக்காவது வந்திருந்தால்

சனங்களைச்சாகவிட்டிருப்பாரோ

 

பாவம் மனுசனை

படம்  காட்ட 

பயன்படுத்தி வருகிறார்

 

கடவுள் பெரியவர் 

காலம் போய்

காசு பெரிது காலமிது

காசே தான் கடவுளடா  தம்பி........

 

நன்றி  கவிதைக்கும் நேரத்திற்கும்

 

(இதுவரை புலத்தில் எந்த திருவிழாவுக்கும்   போனதில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நியத்தை தொட்டு செல்கின்றது, பாராட்டுக்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரனின்.. விசுகு அண்ணனின் கவிதைகளுக்கும் உடையாரின் கருத்துக்கும் நன்றி. :)

 

மக்களாக விழிப்புணர்வு பெற்று ஒரு வகையில் தாங்களாக.. உதவும் மனப்பான்மையைப் பெற.. பல வடிவங்களில் முயற்சித்தால் அன்றி எங்கட மக்களை இலகுவில் அவர்களின் பாரம்பரிய குணவியல்பில் இருந்து மாற்றுவது கடினம். :)

  • கருத்துக்கள உறவுகள்

சமருக்கு சாலைக்கு வருபவர்களும்

 இப்போது குறைந்து விட்டது

சமரும் முடிந்து விட்டதாம். 

அடுத்த சமர் தொடங்கினால் மட்டுமே 

உண்டியலுடன் வீதிக்கு

வரவார்களாம். உண்டியல் நிரம்பினால் போதும் 

 உனக்கேனடா பரிதாபம் உண்டிக்கு 

அலைபவர்கள் மீது என்பவர்கள்  

 

கவிதைக்கு நன்றி நெடுக்ஸ்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மக்களாக விழிப்புணர்வு பெற்று ஒரு வகையில் தாங்களாக.. உதவும் மனப்பான்மையைப் பெற.. பல வடிவங்களில் முயற்சித்தால் அன்றி எங்கட மக்களை இலகுவில் அவர்களின் பாரம்பரிய குணவியல்பில் இருந்து மாற்றுவது கடினம்.
விழிப்புணர்வுக்கு இப்படி கவிதைகளை எழதலாம்.....சில நேரம் எங்கன்ட சனம் மதம் மாறினாலும் மாறிவினம் ....புது மதம் உருவாக்குவார்கள் இல்லாவிடில் கிறிஸ்தவம் ,இஸ்லாம் என்று மாறினாலும் மாறுவார்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புணர்வுக்கு இப்படி கவிதைகளை எழதலாம்.....சில நேரம் எங்கன்ட சனம் மதம் மாறினாலும் மாறிவினம் ....புது மதம் உருவாக்குவார்கள் இல்லாவிடில் கிறிஸ்தவம் ,இஸ்லாம் என்று மாறினாலும் மாறுவார்கள்

 

அப்போ கொண்டை மாலையைக் கைவிடச் சொன்னால் அல்லேலுயா பக்கம் சாய்ந்திடுவார்கள் என்றீங்க..! அங்க மட்டும் என்ன வாழுதாம்..??! :lol::D

நன்றி வாத்தியார் தங்கள் கருத்திற்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ கொண்டை மாலையைக் கைவிடச் சொன்னால் அல்லேலுயா பக்கம் சாய்ந்திடுவார்கள் என்றீங்க..! அங்க மட்டும் என்ன வாழுதாம்..??! :lol::D

நன்றி வாத்தியார் தங்கள் கருத்திற்கும். :)

 

பயம் இருக்கும் வரை பக்தி இருக்கும்....அந்த பயத்தை வைத்து வியாபாரிகள் தங்கள் இஸ்டத்திற்கு ஆடுகிறார்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயம் இருக்கும் வரை பக்தி இருக்கும்....அந்த பயத்தை வைத்து வியாபாரிகள் தங்கள் இஸ்டத்திற்கு ஆடுகிறார்கள்...

 

அந்தப் பயத்துக்குள் இருந்து மக்களை வெளிவரச் செய்வதே வியாபாரிகளின் வலையில் அவர்கள் விழாமல் இருக்க சந்தர்ப்பமாக அமையும். ஆனால்.. அது எத்துணை சாத்தியம்.. என்பதும் யதார்த்தமான வினவலே..??! அதற்காக மக்களை அறிவூட்டாமல் இருப்பதும் தவறு.  :)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.