Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் குத்தி முறிவு..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கன்டாவில் இப்பத் தான் தொட‌ங்கி இருக்குது போல லண்ட‌ன் கதையை எழுதினால்  :lol:

 

இல்லை ரதி இது ஏறக்குறைய இருபது இருபத்தியொரு ஆண்டுகளாக இங்கு நடைபெறுகிறது. இங்கே தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் 3 ரகம்

 

1 நன்றாகத் தமிழ் கற்றவர்கள்  ஆனால் ஆங்கிலம் அரை குறையிலும் குறைவு

2அரை குறையாகத் தமிழ் கற்றவர்கள் ஆனால் ஆங்கிலம் அறவே பேச வராது

3 தமிழும் அரை குறை ஆங்கிலமும் அரை குறை

 

இந்த ரகத்தினரில் சரியானவர்களைக் கடைந்தெடுப்பது வெள்ளைக்கார நிர்வாகத்தினருக்குப் பெரும்பாடு. அதற்கு மேலாக இவர்கள் கற்பிப்பதை புரிந்து கொண்டு உள்வாங்குவது பிள்ளைகளுக்கு இமாலய சோதனை.

 

இந்த நிலையில் இசையின் ஆதங்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எமது மனத்திருப்திக்காக வேண்டுமானால் பிள்ளைகளைத் தமிழ் வகுப்பிற்கு அனுப்பலாம். அவர்கள் எழுத வாசிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாடசாலையில் சொல்லிக் கொடுக்கப்பட்டதை நாம் பிள்ளைகளுக்குத் தொடர்ச்சியாக வீட்டில் வைத்துச் சொல்லிக் கொடுக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில நாங்கள் ஜென்டில்மன் டைப் ........என்று சொல்லவேணும் போல கிடக்கு ஆனாலும் மனசு வரவில்லை...வீட்டுக்கு வீடு வாசற்படி...... டமிழ் படிக்கிறது என்றால் சும்மாவா? :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த தமிழ் பாடசாலை ஒன்றை விட உதெல்லாம் பறவாய் இல்லை போல இருக்கு.... :(:rolleyes:

பிள்ளையளுக்கு அங்கை விட்டு கட்டாயம் தமிழ் படிப்பிக்க வேணுமோ எண்ட மாதிரி இருக்கும்.... :icon_idea:

மொன்றியலில் கோவில் ஒன்றில்  தமிழ் வகுப்பு நடக்கிறது. அங்கே யாரும் படிப்பிக்கலாம் எண்ட  மாதிரி. தாய்மார் தானாம் படிப்பிக்கிறவை, நான் மகளைத் தமிழ் வகுப்புக்கு அனுப்புறேலை. நானே வீட்டில் சொல்லிக் கொடுக்கலாம் தானே.  அது மட்டிமில்லை அலை யாழில தான் வந்து அரட்டை அடிக்கிறது மற்றும்படி இங்கு தானும் தன்பாடும் அதனால் உந்த பாட்டிச் செலவுகள் இல்லை என்றே சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள தமிழ் பாடசாலையொன்றில் சில விடயங்களை போற்றலாம்... அதே நேரம் உள் அரசியலை அறியக்கூடியதாக இருப்பதால் சிலரை நினைக்க அருவருப்பாக இருக்கும்.  இவ்வளவு கீழ்த்தனமானவர்களும் இருக்கிறார்கள் என நேரடியாக அறியக்கூடியதாக இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பதிந்த அனைவருக்கும் நன்றி..

 

அலையக்கா சொன்னதுபோல கோயில்களில் நடத்தினால் அதில் பிரச்சினை வரப்போவதில்லை. அவர்கள் செலவுகள்.. அவர்கள் வகுப்புகள்.. தரமற்றதாக இருந்தால் பெற்றோர் பிள்ளைகளை அனுப்பப்போவதில்லை.

 

ஆனால் அரசாங்கத்தின் செலவில் நடத்தப்படும் தமிழ்ப்பள்ளிகள் விடயத்தில் செலவிடப்படும் நிதி குறித்த பொறுப்புணர்வு இருக்க வேண்டுமல்லவா. இது கனடா மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுவது. இதில் சட்ட திட்டங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் அல்லவா..

 

இங்கே வைத்தியராக வேலை பார்ப்பதற்கு மாநில உரிமம் வேண்டும் என்று சட்டம் இருந்தால், அதையெல்லாம் நீங்கள் பார்க்கக்கூடாது.. அப்படிப் பார்த்தால் ஊரில் இருந்து வந்த என் சித்தப்பாவுக்கு வேலை கிடைக்காது என்று சொல்லுவது போன்றது இது.. :D

கருத்துக்களைப் பதிந்த அனைவருக்கும் நன்றி..

 

அலையக்கா சொன்னதுபோல கோயில்களில் நடத்தினால் அதில் பிரச்சினை வரப்போவதில்லை. அவர்கள் செலவுகள்.. அவர்கள் வகுப்புகள்.. தரமற்றதாக இருந்தால் பெற்றோர் பிள்ளைகளை அனுப்பப்போவதில்லை.

 

ஆனால் அரசாங்கத்தின் செலவில் நடத்தப்படும் தமிழ்ப்பள்ளிகள் விடயத்தில் செலவிடப்படும் நிதி குறித்த பொறுப்புணர்வு இருக்க வேண்டுமல்லவா. இது கனடா மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுவது. இதில் சட்ட திட்டங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் அல்லவா..

 

இங்கே வைத்தியராக வேலை பார்ப்பதற்கு மாநில உரிமம் வேண்டும் என்று சட்டம் இருந்தால், அதையெல்லாம் நீங்கள் பார்க்கக்கூடாது.. அப்படிப் பார்த்தால் ஊரில் இருந்து வந்த என் சித்தப்பாவுக்கு வேலை கிடைக்காது என்று சொல்லுவது போன்றது இது.. :D

 

இவற்றை சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு எடுத்துக் கூறி, அவர்களது மனதை மாற்ற முயற்சிக்கலாமே இசை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு எடுத்துக் கூறி, அவர்களது மனதை மாற்ற முயற்சிக்கலாமே இசை. 

 

எனக்கு யாருமே பரீட்சயம் இல்லாதவர்கள்.. தவிர இந்தக் கூட்டம் கூட்டப்பட்ட விதம் குறித்து எனது கரிசனையை வெளிப்படுத்த உள்ளேன்..

 

பெற்றோர் சந்திப்பிற்கான அறிவித்தல் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை. பல பெற்றோர்கள் வரவில்லை. ஆக, ஒரு சிலரின் தவறான கண்ணோட்டங்கள் அம்பலம் ஏறிவிடும் வாய்ப்பு உள்ளது. இந்த விடயத்தில் தவறு நிர்வாகத்திலும் இருக்கக்கூடும்..

 

பேசாமல் பெற்றோரின் பிரதிநிதியாக முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன்.. :D ஆனால் என்னை அண்டமாட்டார்கள்.. :icon_idea: ஏனென்றால் நிர்வாகத்திடம் பேசுவதைவிட இவர்களிடம் பேசுவதே அதிகமாக இருக்கும்.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு எடுத்துக் கூறி, அவர்களது மனதை மாற்ற முயற்சிக்கலாமே இசை. 

 

பார்வையாளர்களாக நாம் இருக்கும்வரை

இது   போல் கருத்து வைப்பது நமது இடத்தைவிட்டு விலகி  நின்று எம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமன் இசை.

 

அதில் உள்நுளைந்தாலே அதிலிருக்கும் சிக்கல்கள் பிரச்சினைகள் மற்றும் குழப்பங்களை முழுமையாக தெரிந்து கொள்ளமுடியும்.

எனக்கு யாருமே பரீட்சயம் இல்லாதவர்கள்.. தவிர இந்தக் கூட்டம் கூட்டப்பட்ட விதம் குறித்து எனது கரிசனையை வெளிப்படுத்த உள்ளேன்..

 

பெற்றோர் சந்திப்பிற்கான அறிவித்தல் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை. பல பெற்றோர்கள் வரவில்லை. ஆக, ஒரு சிலரின் தவறான கண்ணோட்டங்கள் அம்பலம் ஏறிவிடும் வாய்ப்பு உள்ளது. இந்த விடயத்தில் தவறு நிர்வாகத்திலும் இருக்கக்கூடும்..

 

பேசாமல் பெற்றோரின் பிரதிநிதியாக முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன்.. :D ஆனால் என்னை அண்டமாட்டார்கள்.. :icon_idea: ஏனென்றால் நிர்வாகத்திடம் பேசுவதைவிட இவர்களிடம் பேசுவதே அதிகமாக இருக்கும்.. :unsure:

ஏதோ ஒருவகையில் உங்களது கரிசனையையும் செயற்பாட்டையும் காட்டுங்கள்

பெரிய அளவில் இல்லாதுவிடினும் சிறிய  அளவிலாவது மாற்றங்களைக்கொண்டுவர முடியும்.

அத்துடன் ஒவ்வொருவரும் இவ்வாறு செய்கையில் பல மாற்றங்களை  காணலாம்.  கொண்டுவரலாம்

நன்றி  திரிக்கும் பகிர்வுக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. உங்கள் கருத்துக்கு நன்றி.. ஆனால் சில விடயங்களில் பார்வையாளராக மட்டுமே இருப்பது நல்லது.. குறிப்பாக அனுபவம் இல்லாத விடயங்களுக்குள் புகுந்து கருத்துச் சொல்வது நல்லதல்ல என்பதாலேயே அங்கே பேசாமல் இருக்கவேண்டி வந்தது.

 

ஆனால் காலப்போக்கில் சில தரவுகள், அனுபவங்கள் கிட்டும்போது தானாகவே பங்கெடுக்கும் நிலை தோன்றும். எனது வருத்தமெல்லாம் சில அடிப்படைப் புரிதல்களில் சிலருக்கு அங்கே குறைபாடுகள் இருந்தன. நான் அவர்களிடம் சென்று கதைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீங்க? :D

என்னையும் நிர்வாக குழுவுக்குள் தள்ளிவிடப்பார்த்தார்கள் இசை. அவர்களுக்கு நான் ஸ்டான்டர்ட் பதில் ஒன்று வைத்திருக்கிறேன்.
 
"அடியேன் தொண்டர் படையச் சேர்ந்தவன்"
 
சில சில உதவிகளைச் செய்வேன். மற்றப்படி அண்டுவதில்லை.
 
உள்ளிட்டால்..
 
1. அவர்களுக்குள் சாதீயச்சிக்கள் உள்ளது.
2. ஊர் ரீதியான சிக்கல் உள்ளது.
3. நான் பெரிது நீ பெரிது சிக்கல்கள் உள்ளது.
4. பழக்கம், நட்பு காரணமாக ஒருவரைவிட மற்றவருக்கு வசதி செய்யும் சிக்கல்
5. பதவி மோகம்... etc..etc.
 
இப்போது 10 பேருடன் நட்பாக இருந்தால் உள்ளிட்ட பின் அது 4 பேராகும்.

எனக்கு யாருமே பரீட்சயம் இல்லாதவர்கள்.. தவிர இந்தக் கூட்டம் கூட்டப்பட்ட விதம் குறித்து எனது கரிசனையை வெளிப்படுத்த உள்ளேன்..

 

பெற்றோர் சந்திப்பிற்கான அறிவித்தல் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை. பல பெற்றோர்கள் வரவில்லை. ஆக, ஒரு சிலரின் தவறான கண்ணோட்டங்கள் அம்பலம் ஏறிவிடும் வாய்ப்பு உள்ளது. இந்த விடயத்தில் தவறு நிர்வாகத்திலும் இருக்கக்கூடும்..

 

பேசாமல் பெற்றோரின் பிரதிநிதியாக முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன்.. :D ஆனால் என்னை அண்டமாட்டார்கள்.. :icon_idea: ஏனென்றால் நிர்வாகத்திடம் பேசுவதைவிட இவர்களிடம் பேசுவதே அதிகமாக இருக்கும்.. :unsure:

 

 

மிகவும் நல்லதொரு முடிவு இசை.  இம்முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  முடிந்தால் யாழில் உள்ள உறவுகளும் உதவி செய்ய முடியும்.  இந்த விடயத்தில் என்னால் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும். :D   (அப்பாடா இப்போதைக்குத் தப்பி விட்டேன்)  உதவிகள் தேவைப்பட்டால் நிச்சயம் செய்வேன். 

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனிநாட்டில் பேர்லின் நகரிலுள்ள தமிலாலயத்தில், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் நடைபெற்றதாக அறியப்பெற்ற ஒரு சம்பவம்:-

 

யேர்மனியில் நேர, தூர, நிதி வசதிகள் காரணமாக தமிலாலயத்திற்கு வருவதற்கு சிரமப்படும் பிள்ளைகளும் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தில் ஒரு ஆசிரியர் தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார். பாடசாலைக்கு வரும் மாணவர்களை விடவும், பாடசாலைக்கு வராமல் பரீட்சை எழுதும் மாணவர்கள் அதிக புள்ளிகளைப் பெற்றுச் செல்கின்றனர். இது பாடசாலைக்கு கிரமமாக வரும் மாணவர்களைப் பாதிக்காதா?.

இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள விடயத்தை நான் 2007இல் எனது பிள்ளைகளுக்கு சொல்லப்பட்டது. எனது நகரிலிருந்து 100கிலோமீற்றர் தொலைவில் உள்ள தமிழ்பாடசாலைக்கு வாரம் ஒருமுறை கொண்டு வந்தால் என்ன என்றும் ஒரு ஆசிரியை கேள்வி கேட்டா.

8ம் வகுப்பு வரையும் வீட்டில் வைத்து படிப்பித்து பரீட்சையில் தோற்ற வைத்தேன். 2009 அரசியல் கூறி பிள்ளைகளின் தொடர்ந்த படிப்புக்கு ஒரு மானிலத்தின் பிரதிநிதியின் புண்ணியத்தில் தொடர்ந்து பரீட்சை எடுக்க முடியாது மனம் விட்டுப்போய் பிள்ளைகளை நிறுத்திவிட்டேன். அந்த தடைக்கற்கள் இடையில் வராதிருந்தால் இன்று பிள்ளைகள் தமிழ் ஏலெவல் முடித்திருப்பார்கள். மொழி கற்பதிலும் அரசியல் துரோகங்கள் என்ன செய்வது எங்கள் விதியை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.