Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்க நடை சீமான் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னால் அது வரலாறு அல்லது கல்வெட்டாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கைதான் அதுதான்  அப்பாவித்தனமா கேட்டிட்டன். சரி அந்த புளிச்சலை யார் எங்கை சொன்னார்கள்??

 

உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நான் நடந்து கொள்வேன்.. :D

 

மற்றது.. அதைச் சொன்னது யார் என்பதெல்லாம் இந்த விவாதத்துக்கு தேவையற்றது அல்லவா?! :icon_idea: இங்கே விவாதப் பொருள் இனிமேல் நடக்கப்போவதற்கு ஆரூடம் கூறுவதைப் பற்றியது. அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்பது என் கருத்து.. :D

 

  • Replies 246
  • Views 15.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

எம்மை படைத்த கடவுளேயே விமர்சிக்கிறோம்,எங்களுக்காக தன்னை,தன் குடும்பத்தையே கொடுத்த தலைவரேயே விமர்சிக்கிறோம்.அப்படி இருக்கையில் இவரை விமர்சிப்பதில் என்ன தப்பு
 
விமர்சனங்களை வைத்து சரி,பிழைகளை ஆராய்ந்து தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.சீமானுக்கு இப்ப என்னத்திற்கு தேவையில்லாத வேசம்? 

 

விமர்சியுங்கள்...தப்பில்ல..ஆனால் உள்நோக்கத்துடன் மனதுக்குள் கறுவிக்கொண்டு தமிழினத்தை வீழ்த்த நினைப்பவர்கள் அதற்கு சீமானும் ஒரு தடை என்பதை கண்டு நயவஞ்சமாக விமர்சனப்போர்வையை போர்த்திக்கொண்டு நக்கல்களையும் நையாண்டிகளையும் விசமனத்தனமான கதைகளையும் பேசித்திரிவதெல்லாம் விமர்சனம் அல்ல...காழ்ப்புணர்வின் வெளிப்பாடுகள்..

  • கருத்துக்கள உறவுகள்

இன்று விழுந்தும் எழ முடியாததற்கான காரணத்திலேயே ஒட்டு மொத்த பூத்துச்சுத்தல்களும் அடங்கி இருக்கின்றன. புலிகளை விட்டால் யாராலும் எதுவும் பிடுங்க முடியாது என்று சொல்லி அவர்களுக்குச் சமாந்தரமாகவேனும் வேறு யாரையும் வளரவிடாமல் விட்டதிலேயே ஒட்டுமொத்தக் காரணங்களும் உள்ளதே. புலிகள் தவிர்த்த ஒரு மாற்றுத்தலமை இருந்திருந்திருந்தால் புலிகளின் அழிவுக்குப் பின்னரும் கூட இந்தளவு நிலையும் வந்திராதே

 

 இது மிகவும் தவறான ஒரு பார்வை.

 

புலிகளின் அரசியல் தளம் என்பது பாரிய இடைவெளியைக் கொண்டிருந்த ஒன்று. அவர்களின் நிலக் கட்டுப்பாடுகள் சீரானவையாக இருக்கவில்லை. முக்கிய நகரங்கள் எங்கனும் சிறீலங்கா அரசுப் படைகள் நிலை கொண்டிருந்தன. போராட்ட காலம் நெடுகிலும்.. மாற்றுக்குழுக்கள் இயங்கின..! அவர்களிடம் ஒரு அரசியல் தெளிவோ செயற்திட்டமோ இருக்கவில்லை. மாறாக ஆயுதம் எடுத்தவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு வழி செய்வதே அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது.

 

போராட்ட காலத்திற்கு முந்தைய தமிழர்களின் அரசியலும் கொழும்பை மையமாகக் கொண்டிருந்தனவே தவிர.. வடகிழக்கு மக்களோடு இருக்கவில்லை. வடக்குக் கிழக்கில் வாக்கு. கொழும்பில் தங்கு அரசியல். இதுதான் அன்றைய அரசியலாகவும் இருந்தது. அதற்கான சந்தர்ப்பத்தை புலிகள் தடுக்கவில்லையே..!!!

 

பிரச்சனை.. புலிகளோ.. போராட்டமோ அல்ல. பிரச்சனை.. மக்களின் நியாயமான கோரிக்கைகளை மனங்களை வெல்லக் கூடிய மாற்று அரசியல் இல்லாமையே. புலிகள் நியாயமான மாற்று அரசியலை எதிர்க்கவில்லை. யோசப் பரராஜசிங்கம்.. குமார் பொன்னம்பலம்... இப்படிப் பல நல்ல தலைவர்களும் இதே காலத்தில் தான் உருவாக்கம் பெற்றிருந்தனர்.  நீங்கள் எப்போதும்.. புலிகளை ஒரு பக்க பார்வையில் நோக்குவது தவறு. அதன் நிமித்தம் நீங்கள் தவறான கூட்டங்களின் தவறான கருத்தியல்களுக்கு முக்கியம் அளிக்க விளைவது தவறாகும்.

 

இன்று நிலையைப் பாருங்கள்.. பொடியள் இருந்தால்.. இந்த நிலை வந்திருக்குமா என்று தான் மக்கள் யோசிக்கிறார்களே தவிர.. அவங்கள் இல்லாட்டிலும் இவையள் இருக்கினம் என்று சொல்லுற அளவிற்கு மக்களின் விருப்பறிந்து செயற்பட யாரும் இல்லை..! இதுதான் புலிகள் தோன்றவும் வளரவும் இடமளித்தது. இன்றும் அதே உள்ளது. ஏன் வேறு யாரும் அதனை தக்க வைக்க முடியவில்லை..????!

 

இதுதான் எமது பலவீனமே தவிர.. புலி எதிர்ப்பு என்பது அல்ல மக்களின் தேவை. மக்களின் தேவை.. புலிகள் விட்டிருந்த வெற்றிடைவெளிகளை நிரப்பி அரசியல் செய்யக் கூடிய நேர்மையானவர்கள்..! அவர்களை உருவாக்க முடியாமல் போனது தமிழ் மக்களின் தவறல்ல. அப்படியான தலைவர்கள் தோன்றாமை காலத்தின் கோலம். அது புலிகளின் தவறும் அல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சியுங்கள்...தப்பில்ல..ஆனால் உள்நோக்கத்துடன் மனதுக்குள் கறுவிக்கொண்டு தமிழினத்தை வீழ்த்த நினைப்பவர்கள் அதற்கு சீமானும் ஒரு தடை என்பதை கண்டு நயவஞ்சமாக விமர்சனப்போர்வையை போர்த்திக்கொண்டு நக்கல்களையும் நையாண்டிகளையும் விசமனத்தனமான கதைகளையும் பேசித்திரிவதெல்லாம் விமர்சனம் அல்ல...காழ்ப்புணர்வின் வெளிப்பாடுகள்..

 

சுபேஸ் தெரியாமல் தான் கேட்கிறேன் சீமான் மீது நாம் காழ்ப்புணர்வு கொள்ளுமளவிற்கு அப்படி என்ன இது வரை எமக்காக செய்து விட்டார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கிய வேண்டுகோள் உறவுகளே.

சிலர் எழுதியதை திருத்துவதால் உடனுக்குடன் பதில் எழுதும் போதும், லைக் போடும் போதும் எங்களுடைய கருத்துக்கள் தொடர்பின்றிப் போகின்றது. முக்கிய உரையாடல்களில் தயவு செய்து தனியத் தனிய எழுதுங்கள்.

ஒன்றுக்குள் ஒன்று சொருகி கருத்தை திசைதிருப்பாதீர்கள்.

 

புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி. :)

இன்று விழுந்தும் எழ முடியாததற்கான காரணத்திலேயே ஒட்டு மொத்த பூத்துச்சுத்தல்களும் அடங்கி இருக்கின்றன. புலிகளை விட்டால் யாராலும் எதுவும் பிடுங்க முடியாது என்று சொல்லி அவர்களுக்குச் சமாந்தரமாகவேனும் வேறு யாரையும் வளரவிடாமல் விட்டதிலேயே ஒட்டுமொத்தக் காரணங்களும் உள்ளதே. புலிகள் தவிர்த்த ஒரு மாற்றுத்தலமை இருந்திருந்திருந்தால் புலிகளின் அழிவுக்குப் பின்னரும் கூட இந்தளவு நிலையும் வந்திராதே

அருமையான ,அடக்கமான சிந்தனை ...........உண்மையில் இப்படி அன்றும் சிந்தித்தேன் ,இன்றும் சிந்தித்தேன் ...............சரி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சமாந்தரமாக ,அல்லது நிகராக மாற்று அமைப்புக்களை வளர்க்கவில்லை என்ற உங்கள் கருத்தின்படியே சிந்திப்போம் .................இன்று ஏன் மற்ற மாற்று அமைப்புக்கள் மீண்டும் மீண்டும் கழுவியதையே கழுவிக்கொண்டிருக்கிறார்கள்........ஆகவே அவர்களால் இதை மட்டுமே செய்யமுடியும் என்ற அந்த யதார்த்தமான தீர்மானமே மாற்று அமைப்புக்களை வளர்க்க எந்த தமிழனும் முன்வரவில்லை,,,,,,,,,,,,,,,,,

என்பதே யதார்த்தம் .நன்றி

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை எதிர்ப்பதால் ஈழத்தமிழரிற்கு என்ன நட்டம் .ஆதரிப்பதால் என்ன இலாபம் என்று ஒரு பட்டியலை போடுங்கள்.நாங்களும் தெரிந்து அரசியலை படித்துக் கொள்கிறோம்.

 

 

 

1) 'நாம் தமிழர் கட்சி' சீமானால் நடந்த ஒரு மிக நல்ல விசயத்தை, மாற்றத்தை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். அதற்கு முன் புரிதலுக்காக சிறிய வரலாறு ஒன்றை நினைவுப்படுத்திவிடுகிறேன். இந்திய ராணுவத்தை ஒரு நாட்டின் முதல்வர வரவேற்கப்போகாமல் இருப்பதென்பது ஆட்சிக்கலைப்பு செய்யும் அளவிற்கு பெரிய குற்றம். இருப்பினும் அக்குற்றத்தைச் செய்து "தமிழர்களின் உயிரைக் கொன்று குவித்த இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லமாட்டேன்" என சட்டசபையிலேயே அறிவித்தவர் மு.க. பின் இதையெல்லாம் காரணங்களாகக் கொண்டு சு.சாமி, ஜெ, சந்திரசேகர் ஆகியோரால் மு.கவின் ஆட்சி கலைக்கப்பட்டபின் ராஜீவ் கொலை நிகழ்ந்தது. மு.க இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லாததும், ராஜீவ் கொலையும் அடுத்தடுத்து நடந்ததால் ஜெ, சு.சாமி ஆகியோருக்கு ராஜீவ் கொலைப்பழியை திமுகவின் மேல் போட மிகச் சிறந்த வாய்ப்பாக அது அமைந்துவிட, அதையே கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு பிரச்சாரமும் செய்தார்கள். நன்றாக கவனித்தோமானால் ஈழத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ராஜீவின் ராணுவத்தால் கொல்லப்பட்டபோது ராஜீவுக்கு எதிராக கொதிக்காத 'வெகுஜன மக்கள்', ராஜீவ் என்ற ஒற்றை ஆளை புலிகள் கொன்றதற்காக கொதித்தெழுந்து ஈழ ஆதரவுக் கட்சி என்ற ஒரே காரணத்தால் திமுகவை தேர்தலில் கடுமையாக பழி வாங்குகிறார்கள், மு.க மட்டுமே ஜெயித்து மற்ற 233பேரும் தோற்கிறார்கள்!!! இப்படி தங்கள் ஒட்டுமொத்த கோபத்தையும் திமுகவின் மேல் தீர்த்துக்கொண்டார்கள். 
 
இப்படியான ஒரு 'மோசமான' ஈழ உணர்வும், மனிதாபிமான உணர்வும் கொண்டிருந்த வெகுஜன தமிழக மக்கள் 2009ன் ஈழ-இனபடுகொலைகளுக்குப் பின் நன்றாகவே மாற்றமடைந்திருக்கிறார்கள். ஈழத்தில் இனப்படுகொலை நடந்திருக்கிறது, புலிகள் என்ற இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல போராளி இயக்கம் தான் என்ற அளவில் புரிதல் கொண்டு கொஞ்சம் தெளிந்திருக்கிறார்கள். தமிழக அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கு, புரட்சிக்குக் காரணம் சீமான் மட்டும் தான். 2009ல் அவர் ஓட்டு அரசியல்வாதி இல்லையென்பதால், எந்த அரசியல் இயக்கத்தையும் சாராதவர் என்பதால் அவர் பேசிய பேச்சுக்களும், உணர்ச்சி பொங்க ஈழத் துயரை எடுத்துரைத்த விதமும் வெகுஜன மக்களின் மூளையில் எந்தத் தடையும் இன்றி வெள்ளம் போல் பாய்ந்து பதிந்தது என்றால் அது மிகையாகாது. 
 
2) தங்களின் தொடர் 'கூடு விட்டு கூடு தாவும்' அரசியல் நிலைப்பாடுகளால் மக்களின் நம்பிக்கையை இழந்த வைகோவால், நெடுமாறனால் கொண்டுவர முடியாத ஒரு பெரிய மாற்றத்தை 2009ல் சீமான் என்ற இளைஞர் வெகுஜன மக்களின் மனங்களில் கொண்டு வந்தார். அதனால் என்ன நடந்தது? தமிழ்நாட்டில் ஈழ உணர்வு தலைகீழாய் மாறியது! கடும் மைனஸில் இருந்து ஓரளவு ப்ளஸ் ஆக மாறியது! தன் அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியை புலிகளை எதிர்ப்பதற்கும், ஈழத்தை எதிர்ப்பதற்க்கும், இலங்கை ஜனாதிபதிகளுடன் நட்புறவு பேணுவதற்கும் செலவழித்த ஜெயலலிதா கூட வெகுஜன மக்களிடையே சீமானால் எழுப்பட்ட ஈழ உணர்விற்கு பயந்து ஒரே இரவில் ஈழ ஆதரவாளராய் மாறிய அதிசயம் நடந்தது!!! இலங்கை அரசுக்கு ஆதரவாகவே எப்போதும் பேசிவந்த ஜெ, இலங்கையை நட்பு நாடாக கொள்ளக் கூடாது எனப் பேசினார்! பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் இயற்றி புலிகளுக்கு தடையும் வாங்கிக் கொடுத்தவர், தனி ஈழமே தீர்வென்றார்! 
 
3) அதுமட்டுமா? 1991ல் தனக்கு ஏற்பட்ட படுதோல்வியுடன் ஈழ அரசியலை தன் முதன்மை கொள்கைகளில் இருந்து தூரமாக ஒதுக்கிவைத்துவிட்டு எல்லா விசயங்களிலும் மத்திய அரசுடன் இணக்கமாக போக ஆரபித்திருந்தது திமுக. 2009ல் ஈழத்தமிழர்களின் திட்டமிட்ட படுகொலையில் இலங்கை ராணுவத்துக்கு முழுமூச்சில் இந்திய அரசு உதவிக்கொண்டிருந்த போதும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகாமல் தன் கைகளிலும் ரத்தக்கறையை படியவிட்டுக் கொண்டிருந்த திமுக, சீமானால் தமிழக வெகுஜன மக்களிடையே எழுந்த 'புதிய ஈழ ஆதரவு' அலைக்கு ஏற்ப மீண்டும் முழு மூச்சில் ஈழ அரசியலைக் கையில் எடுத்தது!! செத்துப்போயிருந்த டெசோ உயிர்ப்பிக்கப்பட்டது!! அமெரிக்கத் தீர்மானங்களில் கூட இந்தியாவின் ஜிகிடி தோஸ்தான இலங்கைக்கு எதிராக இந்தியாவை வாக்களிக்கவும் வைத்தது! பல நாடுகளின் தூதர்களை ஓடி ஓடி சென்று பார்த்துக்கொண்டிருக்கிறது டெசோ அமைப்பு! 
 
இதன் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் அதிமுகவும், திமுகவும் இணைந்து மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் கிடுக்குப்பிடி போட்ட்ட அதிசயம் கூட நடந்தது! இப்படியாக தமிழகத்தின் பிரதான கட்சிகள் இரண்டிற்கும் "நீங்கள் ஈழத்தைப் பற்றி பேசியே ஆகவேண்டும். மத்திய அரசை நிர்ப்பந்தித்தே ஆக வேண்டும்" என்ற கடும் நெருக்கடியை மறைமுகமாகக் கொடுத்தவர் சீமான். 
 
4) இத்தனை வருடங்களாக ஈழத்தையே மைய அஜண்டாவாக வைத்திருக்கும் நெடுமாறனுக்கும், வைகோவிற்கும் இல்லாத அலை சீமானுக்கு எப்படி ஏற்பட்டது? சீமானிடம் இருந்த நேர்மை! நெடுமாறனும், வைகோவும் தங்கள் அரசியல் நன்மைக்காக பல சமரசங்களைச் செய்திருக்கிறார்கள். 1983ல் ஈழத்தை உலுக்கிய ஜூலை கலவரத்தின் போது மு.கவும்,அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தார்கள். நெடுமாறன் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோது பல சமயங்களில் மு.கவுக்கு ஆதரவாக நடந்துகொண்ட நெடுமாறன், இப்போது எம்.ஜி.ஆரை ஆஹா ஓஹோவென புகழ்ந்து எழுதும் சுயநல அரசியல்களையும் செய்துகொண்டிருக்கிறார். வைகோவோ இன்னும் ஒருபடி மேலேபோய் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசியல் காய்நகர்வுகளை முன்னெடுத்த ஜெவுடன் கூட்டணியில் இருப்பதையே எப்போதும் விரும்பினார். ஒரு மேடையில் இலங்கைக்கு எதிராக முழங்கிக்கொண்டு, இன்னொரு மேடையில் இலங்கைக்கு முழு ஆதரவையும் வழங்கிக்கொண்டிருந்த ஜெவுக்கு ஆதரவாக வைகோ முழங்கிக்கொண்டிருந்ததை மக்கள் ஏற்கவில்லை. திமுகவில் இருந்து விலகியபோது இருந்த எழுச்சியும் கூட்டமும் வைகோவை விட்டு அகன்று இன்று ஒரு காமடியனாக அவர் தமிழக அரசியலில் வலம்வருவதற்கு அவர் கட்சியினரே விரும்பாத அவரின் 'சமரசங்கள்' தான் காரணம். இன்னும் சொல்லப்போனால் இறுதிவரை ஆட்சியில் இருந்த மு.கவிடமோ, ஜெவிடமோ புலிகளை நெருங்கவிடாமல் தங்கள் முக்கியத்துவம் அழிந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். இதனால் புலிகள் இழந்தது ஏராளம். ஆனால் எந்தக் கட்சியையுமே சாராமல் தனி மனிதனான இருந்த சீமானுக்கு இந்த சமரசங்களும், தனி நபர் முக்கியத்துவமும் தேவைப்படவில்லை. நெஞ்சில் பட்டத்தைப் பேசினார், யாரையும் தூற்றினார்! அதனால்தான் மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்து நிற்கிறார். அவரிடம் இருக்கும் மக்களுக்கு அது நம்பிக்கை அளிக்கிறது.
 
 
 
5) முக்கியமாக தமிழுணர்வு! திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தமிழ்ப்புரட்சிக்கு பின் இப்போது நாம் தமிழர் கட்சியால் ஒரு 'குட்டி' 2ஆம் தமிழ்ப்புரட்சி ஏற்பட்டிருக்கிறது. பல இளைஞர்களுக்கு கலப்பில்லாமல் தமிழ்பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகியிருக்கிறது. அதற்காக நிறைய மெனெக்கெடுவதை நாம் இணையங்களில் பார்க்க முடிகிறது. இது தமிழ்நாட்டு இளைய சமூகத்திற்கு நாம் தமிழர் கட்சியினரால் கிடைத்திருக்கும் ஆக்கபூர்வமான மாற்றம். 
 
6) "வந்தவன் எல்லாம் எங்களை ஏறி மிதிச்சுட்டுப் போ" என்று தேமே என இருந்த தமிழ்ச் சமுதாயம், தங்கள் ஊரில் பிற நாட்டவர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடுவதைக் கொஞ்சம் உணரத் துவங்கியிருக்கிறார்கள். ஐடி கம்பனிகளில் கூட மலையாளிகளின், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை கொஞ்சமாக எதிர்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.இவை நாம் தமிழர் கட்சியினரின் பிரச்சாரங்களால் ஏற்பட்ட மாற்றமே..
 
 
7) தமிழர்கள் எந்த காலத்திலுமே தமிழர்களாக வாழ்ந்ததே கிடையாது. சாத்கியால் மதத்தால் பிரிந்தே வாழ்ந்திருக்கிறார்கள். இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் 'நாம் தமிழர்' என்ற பெயரே மிகவும் ஆக்கபூர்வமான தமிழர் ஒருங்கிணைப்புப் பணிக்கு அச்சாரமாக இருக்கிறது
 
8)தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தமிழின வரலாறு குறித்த பிரச்சாரங்களால் ஒருவித பெருமை ஏற்பட்டிருக்கிறது. இந்திய பெருநாட்டில் தாழ்வுமனப்பான்மை புகட்டப்பட்டு தலைகுனிந்திருந்த தமிழர்கள் தலைநிமிர வரலாற்றுப் பெருமைகள் உதவும். 
 
9) எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தமிழர் கட்சியின் முக்கியமான களமாக இணையம் இருக்கிறது. ஈழம் சம்பந்தப்பட்ட பல நல்ல கருத்துக்களை இணையத்தில் வைக்கிறார்கள். 

 

(http://www.yarl.com/forum3/index.php?showtopic=121980)

 

 

எதிர்ப்பதால் இவை எதுவுமே இல்லாமல் போகும்..அது தமிழ் இனத்திற்கு மிகப்பெரும் நட்டமே..

 

 

 

 

 

அதெப்பிடி  தமிழ் தேசியம் பேசும்  அனைவரிற்கும் அதே வசனம்  :lol:

 

புலிஎதிர்ப்பு வாந்தி எடுப்பவர்களை பார்த்ததுக்கு அப்பறம் தான் இப்படி... :lol: 

Edited by சுபேஸ்

இந்த போட்டோவை பார்த்ததும்   புலிகள் மைப்பில் இருந்து விலகிய கருணாவும் பிரபாகரனுக்கு  நீகராக தன்னை ஒரு தலைவராக காட்ட வெளிக்கிட்டு  மூக்குடைப்ப்ட்டது போல் இப்போ சீமான் ஆரம்பித்து  உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படங்கள் சொல்லும் செய்தி அடுத்த கொள்ளைக்குத் தயார் என்பதே.. ^_^:wub:

அப்படியா..? அப்படியானால் முதலில் சீமானால் நடந்த கொள்ளை எது என்று சொல்லமுடியுமா ஜீவா..? அடுத்த கொள்ளை எந்த வடிவத்தில் எப்படி நடக்கப்போகிறது என்பதையாவது சொல்கிறீர்களா..?

  • கருத்துக்கள உறவுகள்

 

1) 'நாம் தமிழர் கட்சி' சீமானால் நடந்த ஒரு மிக நல்ல விசயத்தை, மாற்றத்தை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். அதற்கு முன் புரிதலுக்காக சிறிய வரலாறு ஒன்றை நினைவுப்படுத்திவிடுகிறேன். இந்திய ராணுவத்தை ஒரு நாட்டின் முதல்வர வரவேற்கப்போகாமல் இருப்பதென்பது ஆட்சிக்கலைப்பு செய்யும் அளவிற்கு பெரிய குற்றம். இருப்பினும் அக்குற்றத்தைச் செய்து "தமிழர்களின் உயிரைக் கொன்று குவித்த இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லமாட்டேன்" என சட்டசபையிலேயே அறிவித்தவர் மு.க. பின் இதையெல்லாம் காரணங்களாகக் கொண்டு சு.சாமி, ஜெ, சந்திரசேகர் ஆகியோரால் மு.கவின் ஆட்சி கலைக்கப்பட்டபின் ராஜீவ் கொலை நிகழ்ந்தது. மு.க இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லாததும், ராஜீவ் கொலையும் அடுத்தடுத்து நடந்ததால் ஜெ, சு.சாமி ஆகியோருக்கு ராஜீவ் கொலைப்பழியை திமுகவின் மேல் போட மிகச் சிறந்த வாய்ப்பாக அது அமைந்துவிட, அதையே கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு பிரச்சாரமும் செய்தார்கள். நன்றாக கவனித்தோமானால் ஈழத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ராஜீவின் ராணுவத்தால் கொல்லப்பட்டபோது ராஜீவுக்கு எதிராக கொதிக்காத 'வெகுஜன மக்கள்', ராஜீவ் என்ற ஒற்றை ஆளை புலிகள் கொன்றதற்காக கொதித்தெழுந்து ஈழ ஆதரவுக் கட்சி என்ற ஒரே காரணத்தால் திமுகவை தேர்தலில் கடுமையாக பழி வாங்குகிறார்கள், மு.க மட்டுமே ஜெயித்து மற்ற 233பேரும் தோற்கிறார்கள்!!! இப்படி தங்கள் ஒட்டுமொத்த கோபத்தையும் திமுகவின் மேல் தீர்த்துக்கொண்டார்கள். 
 
இப்படியான ஒரு 'மோசமான' ஈழ உணர்வும், மனிதாபிமான உணர்வும் கொண்டிருந்த வெகுஜன தமிழக மக்கள் 2009ன் ஈழ-இனபடுகொலைகளுக்குப் பின் நன்றாகவே மாற்றமடைந்திருக்கிறார்கள். ஈழத்தில் இனப்படுகொலை நடந்திருக்கிறது, புலிகள் என்ற இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல போராளி இயக்கம் தான் என்ற அளவில் புரிதல் கொண்டு கொஞ்சம் தெளிந்திருக்கிறார்கள். தமிழக அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கு, புரட்சிக்குக் காரணம் சீமான் மட்டும் தான். 2009ல் அவர் ஓட்டு அரசியல்வாதி இல்லையென்பதால், எந்த அரசியல் இயக்கத்தையும் சாராதவர் என்பதால் அவர் பேசிய பேச்சுக்களும், உணர்ச்சி பொங்க ஈழத் துயரை எடுத்துரைத்த விதமும் வெகுஜன மக்களின் மூளையில் எந்தத் தடையும் இன்றி வெள்ளம் போல் பாய்ந்து பதிந்தது என்றால் அது மிகையாகாது. 
 
2) தங்களின் தொடர் 'கூடு விட்டு கூடு தாவும்' அரசியல் நிலைப்பாடுகளால் மக்களின் நம்பிக்கையை இழந்த வைகோவால், நெடுமாறனால் கொண்டுவர முடியாத ஒரு பெரிய மாற்றத்தை 2009ல் சீமான் என்ற இளைஞர் வெகுஜன மக்களின் மனங்களில் கொண்டு வந்தார். அதனால் என்ன நடந்தது? தமிழ்நாட்டில் ஈழ உணர்வு தலைகீழாய் மாறியது! கடும் மைனஸில் இருந்து ஓரளவு ப்ளஸ் ஆக மாறியது! தன் அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியை புலிகளை எதிர்ப்பதற்கும், ஈழத்தை எதிர்ப்பதற்க்கும், இலங்கை ஜனாதிபதிகளுடன் நட்புறவு பேணுவதற்கும் செலவழித்த ஜெயலலிதா கூட வெகுஜன மக்களிடையே சீமானால் எழுப்பட்ட ஈழ உணர்விற்கு பயந்து ஒரே இரவில் ஈழ ஆதரவாளராய் மாறிய அதிசயம் நடந்தது!!! இலங்கை அரசுக்கு ஆதரவாகவே எப்போதும் பேசிவந்த ஜெ, இலங்கையை நட்பு நாடாக கொள்ளக் கூடாது எனப் பேசினார்! பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் இயற்றி புலிகளுக்கு தடையும் வாங்கிக் கொடுத்தவர், தனி ஈழமே தீர்வென்றார்! 
 
3) அதுமட்டுமா? 1991ல் தனக்கு ஏற்பட்ட படுதோல்வியுடன் ஈழ அரசியலை தன் முதன்மை கொள்கைகளில் இருந்து தூரமாக ஒதுக்கிவைத்துவிட்டு எல்லா விசயங்களிலும் மத்திய அரசுடன் இணக்கமாக போக ஆரபித்திருந்தது திமுக. 2009ல் ஈழத்தமிழர்களின் திட்டமிட்ட படுகொலையில் இலங்கை ராணுவத்துக்கு முழுமூச்சில் இந்திய அரசு உதவிக்கொண்டிருந்த போதும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகாமல் தன் கைகளிலும் ரத்தக்கறையை படியவிட்டுக் கொண்டிருந்த திமுக, சீமானால் தமிழக வெகுஜன மக்களிடையே எழுந்த 'புதிய ஈழ ஆதரவு' அலைக்கு ஏற்ப மீண்டும் முழு மூச்சில் ஈழ அரசியலைக் கையில் எடுத்தது!! செத்துப்போயிருந்த டெசோ உயிர்ப்பிக்கப்பட்டது!! அமெரிக்கத் தீர்மானங்களில் கூட இந்தியாவின் ஜிகிடி தோஸ்தான இலங்கைக்கு எதிராக இந்தியாவை வாக்களிக்கவும் வைத்தது! பல நாடுகளின் தூதர்களை ஓடி ஓடி சென்று பார்த்துக்கொண்டிருக்கிறது டெசோ அமைப்பு! 
 
இதன் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் அதிமுகவும், திமுகவும் இணைந்து மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் கிடுக்குப்பிடி போட்ட்ட அதிசயம் கூட நடந்தது! இப்படியாக தமிழகத்தின் பிரதான கட்சிகள் இரண்டிற்கும் "நீங்கள் ஈழத்தைப் பற்றி பேசியே ஆகவேண்டும். மத்திய அரசை நிர்ப்பந்தித்தே ஆக வேண்டும்" என்ற கடும் நெருக்கடியை மறைமுகமாகக் கொடுத்தவர் சீமான். 
 
4) இத்தனை வருடங்களாக ஈழத்தையே மைய அஜண்டாவாக வைத்திருக்கும் நெடுமாறனுக்கும், வைகோவிற்கும் இல்லாத அலை சீமானுக்கு எப்படி ஏற்பட்டது? சீமானிடம் இருந்த நேர்மை! நெடுமாறனும், வைகோவும் தங்கள் அரசியல் நன்மைக்காக பல சமரசங்களைச் செய்திருக்கிறார்கள். 1983ல் ஈழத்தை உலுக்கிய ஜூலை கலவரத்தின் போது மு.கவும்,அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தார்கள். நெடுமாறன் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோது பல சமயங்களில் மு.கவுக்கு ஆதரவாக நடந்துகொண்ட நெடுமாறன், இப்போது எம்.ஜி.ஆரை ஆஹா ஓஹோவென புகழ்ந்து எழுதும் சுயநல அரசியல்களையும் செய்துகொண்டிருக்கிறார். வைகோவோ இன்னும் ஒருபடி மேலேபோய் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசியல் காய்நகர்வுகளை முன்னெடுத்த ஜெவுடன் கூட்டணியில் இருப்பதையே எப்போதும் விரும்பினார். ஒரு மேடையில் இலங்கைக்கு எதிராக முழங்கிக்கொண்டு, இன்னொரு மேடையில் இலங்கைக்கு முழு ஆதரவையும் வழங்கிக்கொண்டிருந்த ஜெவுக்கு ஆதரவாக வைகோ முழங்கிக்கொண்டிருந்ததை மக்கள் ஏற்கவில்லை. திமுகவில் இருந்து விலகியபோது இருந்த எழுச்சியும் கூட்டமும் வைகோவை விட்டு அகன்று இன்று ஒரு காமடியனாக அவர் தமிழக அரசியலில் வலம்வருவதற்கு அவர் கட்சியினரே விரும்பாத அவரின் 'சமரசங்கள்' தான் காரணம். இன்னும் சொல்லப்போனால் இறுதிவரை ஆட்சியில் இருந்த மு.கவிடமோ, ஜெவிடமோ புலிகளை நெருங்கவிடாமல் தங்கள் முக்கியத்துவம் அழிந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். இதனால் புலிகள் இழந்தது ஏராளம். ஆனால் எந்தக் கட்சியையுமே சாராமல் தனி மனிதனான இருந்த சீமானுக்கு இந்த சமரசங்களும், தனி நபர் முக்கியத்துவமும் தேவைப்படவில்லை. நெஞ்சில் பட்டத்தைப் பேசினார், யாரையும் தூற்றினார்! அதனால்தான் மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்து நிற்கிறார். அவரிடம் இருக்கும் மக்களுக்கு அது நம்பிக்கை அளிக்கிறது.
 
 
 
5) முக்கியமாக தமிழுணர்வு! திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தமிழ்ப்புரட்சிக்கு பின் இப்போது நாம் தமிழர் கட்சியால் ஒரு 'குட்டி' 2ஆம் தமிழ்ப்புரட்சி ஏற்பட்டிருக்கிறது. பல இளைஞர்களுக்கு கலப்பில்லாமல் தமிழ்பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகியிருக்கிறது. அதற்காக நிறைய மெனெக்கெடுவதை நாம் இணையங்களில் பார்க்க முடிகிறது. இது தமிழ்நாட்டு இளைய சமூகத்திற்கு நாம் தமிழர் கட்சியினரால் கிடைத்திருக்கும் ஆக்கபூர்வமான மாற்றம். 
 
6) "வந்தவன் எல்லாம் எங்களை ஏறி மிதிச்சுட்டுப் போ" என்று தேமே என இருந்த தமிழ்ச் சமுதாயம், தங்கள் ஊரில் பிற நாட்டவர்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடுவதைக் கொஞ்சம் உணரத் துவங்கியிருக்கிறார்கள். ஐடி கம்பனிகளில் கூட மலையாளிகளின், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை கொஞ்சமாக எதிர்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.இவை நாம் தமிழர் கட்சியினரின் பிரச்சாரங்களால் ஏற்பட்ட மாற்றமே..
 
 
7) தமிழர்கள் எந்த காலத்திலுமே தமிழர்களாக வாழ்ந்ததே கிடையாது. சாத்கியால் மதத்தால் பிரிந்தே வாழ்ந்திருக்கிறார்கள். இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் 'நாம் தமிழர்' என்ற பெயரே மிகவும் ஆக்கபூர்வமான தமிழர் ஒருங்கிணைப்புப் பணிக்கு அச்சாரமாக இருக்கிறது
 
8)தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தமிழின வரலாறு குறித்த பிரச்சாரங்களால் ஒருவித பெருமை ஏற்பட்டிருக்கிறது. இந்திய பெருநாட்டில் தாழ்வுமனப்பான்மை புகட்டப்பட்டு தலைகுனிந்திருந்த தமிழர்கள் தலைநிமிர வரலாற்றுப் பெருமைகள் உதவும். 
 
9) எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தமிழர் கட்சியின் முக்கியமான களமாக இணையம் இருக்கிறது. ஈழம் சம்பந்தப்பட்ட பல நல்ல கருத்துக்களை இணையத்தில் வைக்கிறார்கள். 

 

(http://www.yarl.com/forum3/index.php?showtopic=121980)

 

 

எதிர்ப்பதால் இவை எதுவுமே இல்லாமல் போகும்..அது தமிழ் இனத்திற்கு மிகப்பெரும் நட்டமே..

 

 

 

புலிஎதிர்ப்பு வாந்தி எடுப்பவர்களை பார்த்ததுக்கு அப்பறம் தான் இப்படி... :lol: 

 

 

வாந்தி இதைத்தானே சுருக்கமா கேட்டிருந்தன் அதே வசனம் எப்படி என்று :lol: மற்றது பக்கம் பக்கமாய் நீங்கள் எழுதியது எதிலுமே  புலிகளிற்காக உண்மையாய்  தங்கள்  சொத்து சுகம் அனைத்தையும் இழந்தவர்களின் பெயர்  கெளத்தூர் மணி  விடுதலை ராயேந்திரன் .  போன்ற  பெயர்கள் எதுவுமே  இல்லை   சீமானற்கான  அலை என்பது  வெளி நாட்டு தமிழர்களின் வெறும் விம்பம்.  அதை தமிழ் நாட்டை  அல்லது அதன் அரசியல் வாதிகளோடு தொடர்புகள் இல்லாதவர்களிடம்  சொல்லுங்கள். தமிழ் நாட்டில் சீமானின்  செல்வாக்கு என்பது  என்வென்று  சாதாரணமாக சென்னையிலையே  கெட்டு தெரிந்து கொள்ளலாம்.சினிமா காரனை மட்டும்தான் நம்புறீங்கள் ஆகவே நன்றி வணக்கம்.

 

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் தெரியாமல் தான் கேட்கிறேன் சீமான் மீது நாம் காழ்ப்புணர்வு கொள்ளுமளவிற்கு அப்படி என்ன இது வரை எமக்காக செய்து விட்டார்?

அக்கா பிரச்சினை நீங்கள் காழ்ப்புணர்வுகொள்கிறீர்கள் என்பதல்ல..வெளியே பல தமிழின எதிரிகள் தருணம்பார்த்து இருக்கிறார்கள் தமிழனை எல்லா வழிகளிலும் வீழ்த்த...பல நல்லவிதமான ஆக்கபூர்வமான விமர்சங்கள் நாம்தமிழர் கட்சிமேல் தமிழினத்தில் அக்கறைகொண்ட பல நல்ல மனிதர்கள் வைக்கிரார்கள்..அவற்றில் பலவற்றை நாம் தமிழர்கட்சி உள்வாங்கி திருத்தி இருக்கிறது..ஆனால் இப்படியான படங்களை போட்டு ஒற்றைவரிகளில் நக்கல்கள் நையாண்டிகள் செய்வது விமர்சனம் அல்ல அக்கா..இதன் ஆரம்ப புள்ளி எதிரிகளிடம் அல்லது சீமான்மேல் தனிப்பட காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களிடம் இருந்தே வந்திருக்கும்..ஆனால் இடையில் இதை உங்களைமாதிரி பலர் பிடித்துக்கொண்டு தொங்குவதுதான் வேதனை..

Edited by சுபேஸ்

சீமான் செய்த குற்றங்களையும் ,துரோகங்களையும் என்னவென்று தேடிப்பார்க்கிறேன் ..........இன்னும் கிடைக்கவில்லை ..............யாராவது சொல்லுங்கோப்பா .....

இல்லாட்டி அவர் ஏதாவது தன்னாலானதை செய்யட்டும் விடுங்கோ ,,,,,,,,,,,,,,,,, :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராரியோ என்டிபி தலைவிக்கு கள்ளத்தொடர்பு இருக்கு.. இது பிழையென்றால் அவர் என்மீது வழக்குப் போடலாம்.. :D ஆதாரம் சில புளொக்குகள்.. :(

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா பிரச்சினை நீங்கள் காழ்ப்புணர்வுகொள்கிறீர்கள் என்பதல்ல..வெளியே பல தமிழின எதிரிகள் தருணம்பார்த்து இருக்கிறார்கள் தமிழனை எல்லா வழிகளிலும் வீழ்த்த...பல நல்லவிதமான ஆக்கபூர்வமான விமர்சங்கள் நாம்தமிழர் கட்சிமேல் தமிழினத்தில் அக்கறைகொண்ட பல நல்ல மனிதர்கள் வைக்கிரார்கள்..அவற்றில் பலவற்றை நாம் தமிழர்கட்சி உள்வாங்கி திருத்தி இருக்கிறது..ஆனால் இப்படியான படங்களை போட்டு ஒற்றைவரிகளில் நக்கல்கள் நையாண்டிகள் செய்வது விமர்சனம் அல்ல அக்கா..இதன் ஆரம்ப புள்ளி எதிரிகளிடம் அல்லது சீமான்மேல் தனிப்பட காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களிடம் இருந்தே வந்திருக்கும்..ஆனால் இடையில் இதை உங்களைமாதிரி பலர் பிடித்துக்கொண்டு தொங்குவதுதான் வேதனை..

 

காலம் பதில் சொல்லும் சுபேஸ்...கொஞ்ச காலத்திற்கு முதல் திருமாவளவனை பற்றி நான் எழுத ஒரு உறவு என்னோடு சண்டை பிடித்தவர்.திருமாவளவனின் உண்மை முகத்தை 2009 மேக்கு பிறகு அவரும் பாத்திருப்பார். அதே மாதிரி பொறுத்திருப்போம் உங்கள் நம்பிக்கையை ஏன் கெடுப்பான்

  • கருத்துக்கள உறவுகள்

சசி அண்ணா..ஒரு மனிதனை கருத்தியல் ரீதியாக வீழ்த்த முடியாதவர்கள் எடுக்கும் ஆயுதம்தான் இப்படியான அவதூறுகள்...நடத்துங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் திருமாவளவன் யாரையும் காட்டிக்கொடுக்கவோ.. இல்ல புலிகளின் வீழ்ச்சி கண்டு புறணிபாடிக்கொண்டே திரியவில்லை. அவர் அன்று என்ன செய்தாரோ அதையே இன்றும் செய்கிறார். அவரின் உள்ளூர் அரசியல் தி முக சார்ந்திருந்தாலும்.. ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவர் இந்தியப் பாராளுமன்றிலும் சரி.. எங்கும் சரி.. மகிந்த முன்னிலையிலும் சரி.. சுருதி மாற்றி வாசித்ததாகத் தெரியவில்லை.

 

இந்த இடத்தில் சிலர் தமது தப்புத்தாளங்களுக்கு நியாயம் தேடுவது கொடுமை..! :icon_idea::)

சசி அண்ணா..ஒரு மனிதனை கருத்தியல் ரீதியாக வீழ்த்த முடியாதவர்கள் எடுக்கும் ஆயுதம்தான் இப்படியான அவதூறுகள்...நடத்துங்கோ..

 

நீங்கள் சீமானை நம்புறீங்கள் ? நான் நம்ப்பவில்லை.

அண்ணன் திருமாவளவன் யாரையும் காட்டிக்கொடுக்கவோ.. இல்ல புலிகளின் வீழ்ச்சி கண்டு புறணிபாடிக்கொண்டே திரியவில்லை. அவர் அன்று என்ன செய்தாரோ அதையே இன்றும் செய்கிறார். அவரின் உள்ளூர் அரசியல் தி முக சார்ந்திருந்தாலும்.. ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவர் இந்தியப் பாராளுமன்றிலும் சரி.. எங்கும் சரி.. மகிந்த முன்னிலையிலும் சரி.. சுருதி மாற்றி வாசித்ததாகத் தெரியவில்லை.

 

இந்த இடத்தில் சிலர் தமது தப்புத்தாளங்களுக்கு நியாயம் தேடுவது கொடுமை..! :icon_idea::)

 

அரசியலக்கும்?   திருமாவளவனுக்கு தெரிந்த ராஜதந்திரம் வன்னியில் இருந்தவர்களுக்கு தெரியவில்லையாம் :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராரியோ என்டிபி தலைவிக்கு கள்ளத்தொடர்பு இருக்கு.. இது பிழையென்றால் அவர் என்மீது வழக்குப் போடலாம்.. :D ஆதாரம் சில புளொக்குகள்.. :(

 

இதனை கனடா என்.டி.பி கட்சி தொண்டர்கள் யாராவது கவனத்தில் எடுத்து இதனை தங்கள் தலைவிக்கு தெரிவிக்கவும்.  அவர் தாராளமாக அவதூறு வழக்கு தொடரலாம். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதனை கனடா என்.டி.பி கட்சி தொண்டர்கள் யாராவது கவனத்தில் எடுத்து இதனை தங்கள் தலைவிக்கு தெரிவிக்கவும்.  அவர் தாராளமாக அவதூறு வழக்கு தொடரலாம். :lol: :lol:

 

குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடுவது என்பது இதைத்தான்.. :D இதைவிட கேவலமாக எல்லாம் பொதுத்தளங்களில் எழுதுகிறார்கள் இங்கே.. அதுவும் ஆங்கிலத்தில்.. :lol: Sarah Palin க்கு என்னவெல்லாம் எழுதினார்கள் என்பது தெரிந்ததே.. :icon_mrgreen:

 

ஆக, இந்த தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதெல்லாம் தனிமனிதர்களுக்கே செல்லுபடியாகும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் சேறடிப்புகளுக்கு அஞ்சமாட்டார்கள்..! :D அஞ்சக் கூடாது.. இதை வைத்துக்கொண்டு நீதிமன்றத்துக்குப் போனால் மக்கள் கை கொட்டிச் சிரிப்பார்கள்.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே நடந்த கருத்தாடல்களின் வீடியோ பதிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது. :D

 

 

 

https://www.youtube.com/watch?v=A1g9Gv1V5d4

 

 

Edited by குமாரசாமி

என்ன இங்கு நடக்குது??????



என்ன இங்கு நடக்குது??????

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடுவது என்பது இதைத்தான்.. :D இதைவிட கேவலமாக எல்லாம் பொதுத்தளங்களில் எழுதுகிறார்கள் இங்கே.. அதுவும் ஆங்கிலத்தில்.. :lol: Sarah Palin க்கு என்னவெல்லாம் எழுதினார்கள் என்பது தெரிந்ததே.. :icon_mrgreen:

 

ஆக, இந்த தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதெல்லாம் தனிமனிதர்களுக்கே செல்லுபடியாகும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் சேறடிப்புகளுக்கு அஞ்சமாட்டார்கள்..! :D அஞ்சக் கூடாது.. இதை வைத்துக்கொண்டு நீதிமன்றத்துக்குப் போனால் மக்கள் கை கொட்டிச் சிரிப்பார்கள்.. :lol:

 

இதனை எல்லாம் சேறடிப்பவர்கள் சிந்திப்பதில்லை இசை. அவர்களின் தேவை தேடுவராற்றுக் கிடக்கும் தமக்கான ஒரு சின்ன பப்பிளிசிற்றி.  அவர்களுக்கு நீதி நியாயம்.. என்பதெல்லாம் ஒன்றுமில்லை என்று அர்த்தமாகும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட சோசலிச தமிழீழம் சாசனம்தான் தமிழீழத்திற்கான சாசனம் – சீமான்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு தோழமை மையம் நடத்திய தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம் தொடர்பான கருத்திற்கு தகுந்த விளக்கத்தினை சீமான் கொடுத்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது தமிழீழத்திற்காக சுதந்திர சாசனம் உருவாக்கல் என்ற செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது உண்மையில் அன்று வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ்மக்களுக்கான சுதந்திர

சாசனத்தை வரையறுக்கின்றது இதனைவிட அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய சாசனம் தலைவர் அவர்களால் அங்கிகரிக்கப்பட்டு இருக்கின்றது இவை எல்லாம் தமிழ் மக்களின் தமிழீழ சுதந்திரத்தினை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதை மறந்து நாடுகடந்த அரசாங்கம் தற்போது புதிதாக பல தேவையில்லாத கேள்விகளை கொடுத்து தமிழீழத்தை திசைதிருப்பும் நோக்கில் தேவையில்லாத தமிழீ சுதந்திர சாசனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்து தெட்டத்தெளிவாகின்றது.

நேற்று சென்னையில் இடம்பெற்ற நாடுகடந்த அரசாங்கத்தின் தமிழ்நாட்டு தோழமை மையம் நடத்திய கூட்டத்தில் இதற்கான தகுந்த விளக்கத்தினை சீமான் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம் நடத்திய சுதந்திர சாசனம் உருவாக்கம் தொடர்பான கருத்தரங்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கள்.

தமிழீழ அரசியல் சாசன உருவாகம் பற்றி இதில் கேட்டிருக்கின்ற கேள்விகள் அனைத்தும் படித்துள்ளோன் ஏற்கனவே எங்கள் தலைவர் அவர்களால் தேசத்தின் குரல் என்று அழைக்கப்பட்ட அன்ரன் பாலசிங்கம் அவர்களினால் எழுதிய சோசலிச தமிழீழம் என்ற சாசனம் அதில் மிக தெளிவாக ஒரு சாசனத்தை அன்று உருவாக்கி இருக்கின்றார்.

அதில் சிறுவர்களுக்கான கல்வி இஸ்லாமிய மக்களுக்கான தீர்வு,மலையகமக்களுக்கான தீர்வு அதாவது தனித்தமிழீழ் அமைந்த பிறகு மலையக மக்களை குடியமர்த்துவோம் என்று தெளிவாக வரையறுக்கப்ட்டுள்ளது. சாதியவேறுபாடற்ற,மதசார்பற்ற,சுறண்டல்அற்ற,வர்கவேறுபாடற்ற,ஒடுக்குமுறையற்ற ஒருசோசலிச குடியரசு அதுதான் எமது புரட்சிகரமான சோசலிச குடியரசு என்பதை அந்த சாசனம் வரையறுத்திருக்கின்றது 1985ஆம் ஆண்டு அது எழுதப்பட்டடு தலைவர்அவர்களால் அங்கிகரிக்கப்பட்டதுதான் அந்த சாசனம்

இப்படிப்பட்ட தலைவர் அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட அந்த சாசனம் இருக்கின்ற பொழுது இப்படிப்பட்ட சாசனம் தேவையா என்ற கேள்வி என்னைப்போன்றவர்களுக்கு இருக்கின்றது.

இப்ப அந்த சாசனம் சரியில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்து இந்த நாடுகடந்த அரசாங்கத்தின் சாசனத்தை உருவாக்கின்றோமா என்ற சந்தேகம் எழுகின்றது.

அண்ணான் கொளத்தூர் மணிஅவர்கள் குறிப்பிட்டது போன்று அந்த சாசனம் போதுமானதாக இருக்கின்றது அதனை நடைமுறைப்படுத்தினாலே போமானது என்று நான் நினைக்கின்றேன். இதில் கேட்கப்பட்டுள்ள எல்லா கேள்விகளுக்குமான விடை அந்த சாசனத்தில் இருக்கின்றது.

தமிழீழ மக்களுக்கும் தமிழீழத்திற்கும் மிகநிறைவான சாசனமாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதி தலைவர் அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட சாசனம் போதுமானதாக இருக்கும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

 

 

எல்லாத்தையும் விடுவம் இதுக்கு என்ன சொல்லுறீங்கள் :icon_mrgreen: :icon_mrgreen:

எல்லாத்தையும் விடுவம் இதுக்கு என்ன சொல்லுறீங்கள் :icon_mrgreen: :icon_mrgreen:

இப்படி நீங்கள் எல்லாத்தையும் விடுவம் விடுவம் என்றதால தான் சீசனுக்கு சீசன் புதிய  தலைவர்கள் வந்து தற்காலிக ஆழுமை ஏற்படுத்திவிட்டு   அழிந்து போகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடுவது என்பது இதைத்தான்.. :D இதைவிட கேவலமாக எல்லாம் பொதுத்தளங்களில் எழுதுகிறார்கள் இங்கே.. அதுவும் ஆங்கிலத்தில்.. :lol: Sarah Palin க்கு என்னவெல்லாம் எழுதினார்கள் என்பது தெரிந்ததே.. :icon_mrgreen:

 

ஆக, இந்த தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதெல்லாம் தனிமனிதர்களுக்கே செல்லுபடியாகும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் சேறடிப்புகளுக்கு அஞ்சமாட்டார்கள்..! :D அஞ்சக் கூடாது.. இதை வைத்துக்கொண்டு நீதிமன்றத்துக்குப் போனால் மக்கள் கை கொட்டிச் சிரிப்பார்கள்.. :lol:

 

இப்பவாவது வழிக்கு வந்தீங்களே  இதைத் தனய்யா இவ்வளவு நேரமா எழுதினம்  பொது வாழ்கைக்கு வந்திட்டாலே  அவர்களும் விமர்சனத்திற்கு உட் பட்டவர்கள் தான். ஆககே சீமானும் விமர்சனங்களிற்கு உட்பட்டே ஆகவேண்டும். அதனை யாரும் தடுக்க முடியாது  அதனை வேண்டுமானால் அவரே சட்ட ரீதியாக எதிர் கொள்ளலாம். ஆனால் அவர் மீது விமர்சனம் வைக்க முடியாதென்று நீங்களோ வேறு யாருமே சொல்ல முடியாது  அப்பாடா. :)

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.