Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்க நடை சீமான் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூசை அண்ணாவின் இறுதி உரையாடல் இருந்தால் யாராவது ஒருக்கா இணைச்சு விடுங்கப்பா......

 

http://www.youtube.com/watch?v=O5Dg-V9Dt5k

  • Replies 246
  • Views 15.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை யாராவது சீமானை இந்தியாவில் சந்தித்து இருகின்றீர்களா ? அப்படி இருந்தால் புரியும் சீமான் யார் என்று..........குண்டுசட்டிக்குள்ள எவ்வளவு நாளைக்குதான் குதிரை ஓட்டபோகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
இன்னொரு திரியில் ஒரு கள உறவு நிழலியைப் பார்த்து நீங்கள் தேசியத்திற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்க அதெல்லாம் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று சொன்னவர்[நியாயமான கருத்து]
 
இந்தத் திரியில் இன்னொரு கள உறவு தமிழச்சியிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என வெளிப்படையாக சொல்லுங்கள் என்று கேட்க அவருக்கு நிழலி பச்சை குத்தி இருக்கிறார்[அது அவரது விருப்பம்]
 
ஆனால் நியாயம் தான் புரியவில்லை :unsure:  தான் செய்கிறதை சொல்ல மாட்டேன் ஆனால் அடுத்தவர்கள் கட்டாயம் என்ன செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்.
 
திரிக்கு சம்மந்தமில்லாத கருத்து தான் ஆனாலும் நிழலி பதில் தருவார் என எதிர் பார்க்கிறேன்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணாவின் வளர்ச்சி பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சில பச்சோந்திகள் அவர பற்றி அவ தூரா எழுதுதுங்கள்...காலப் போக்கில் தெரியும் அவர் யார் என்று.....தமிழ் நாட்டில் பிறந்து சிங்க பூரில் வாழும் எனது நண்பன் ஒருவன் சொன்னான்..தான் ஆரம்பத்தில் சீமான் அண்ணாவை ஒரு தீவிரவாதி என்று நினைத்தேன் என்று ..பிறக்கு தானே தெரிந்த்து அவர் எவளவோ நல்ல மனிதர் என்று சொன்னான்.....சூசை அண்ணா கூட சீமான் அண்ணாவிடத்தில் தான் எல்லாத்தையும் விட்டுவிட்டு போனார்..சூசை அண்ணா ஏன் இத்துப் போன திருமாளவன்னையோ அல்லது மற்ற ஆக்களிடம் சொல்லுங்கோ என்று சொல்ல வில்லை....அவர்களுக்கு அப்பவே அதிக நம்பிக்கை சீமான் அண்ணா மேல்...

  • தொடங்கியவர்

போராளிகளின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் ஒரு காலமும் கொச்சை படுத்தக்கூடாது ஆனால் எமது இயங்க்களில் பொறுப்புகளில் இருந்த பல போராளிகள் எதுவித அரசியல் அறிவும் அற்றவர்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் .அவர்கள் வீரமுள்ளவர்களாகவும் எதற்கும் துணிந்தவர்களாகவும் உயிரை துச்சமாக மதிப்பவர்களாகவும் இருக்கலாம் ஆனால் அவர்கள் அந்த இடங்களில் இருக்காமல் தலைமை பதவிகளில் வந்து பேட்டிகள் கொடுக்கும் போது சீ என்று விடும் .இப்படியான அறிவுள்ளவர்களால் தான் சீமான் கூட ஒரு தலைவராக உருவகபடுத்த பட்டுள்ளார் .இவர்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை வெறுமனே புலிப்புராணம் பாடிவிட்டு இவர்கள் கதை முடிந்து விடும் .

எமக்காக போராடுகினார் என்பதற்காக எதுவுமே முடியாத ஒருவரை நாம் தூக்கி பிடிக்க கூடாது எமது அரசியல் எப்போதும் எம்மை தூக்கி பிடிக்கும் உதிரிகளுடன் தான் .

நாம் அணுக வேண்டியது சர்வதே தேச அரங்கில் ஒரு மாற்றத்தை கொண்டுவர கூடியவர்களைதான்.

தளபதி சூசையின் பேட்டி பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம். தொடக்கமும் முடிவும் கத்தரிக்கப்பட்ட ஒரு பேட்டி இது. இந்தப் பேட்டியில் கேபியே தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்று சூசை சொன்னதாக ஒரு செய்தி உண்டு. முழுமையான பேட்டி வந்தால்தான் உண்மை, பொய் தெரிய வரும்.

தளபதி சூசை இந்த தொலைபேசி உரையாடலை "நாம் தமிழர்" இயக்கத்தை சேர்ந்த ஒருவருடன் செய்கின்றார். நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவருடன் உரையாடுகின்ற போது, அந்த இயக்கத்தின் தலைவர் செய்யக் கூடிய சில விடயங்களை கூறுவது இயல்பானது.

பல தமிழ்நாட்டு தலைவர்களுடன் விடுதலைப் புலிகள் தொடர்பில் இருந்தார்கள். அவர்கள் இது போன்று பதிந்து வைக்காது விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இப்படி ஒரு உரையாடலை வைத்துக் கொண்டு, அதுவும் தணிக்கை செய்து விட்டு, விடுதலைப் புலிகள் தம்மிடம்தான் போராட்டத்தை ஒப்படைத்தார்கள் என்று கூறுவது ஒரு ஏமாற்று வேலை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் சீமான் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்.. ஜேர்மனிக்கு யார் பொறுப்பு என்று சொல்லாமலே தெரியும்.. :D

:D 

போராளிகளின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் ஒரு காலமும் கொச்சை படுத்தக்கூடாது ஆனால் எமது இயங்க்களில் பொறுப்புகளில் இருந்த பல போராளிகள் எதுவித அரசியல் அறிவும் அற்றவர்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் .அவர்கள் வீரமுள்ளவர்களாகவும் எதற்கும் துணிந்தவர்களாகவும் உயிரை துச்சமாக மதிப்பவர்களாகவும் இருக்கலாம் ஆனால் அவர்கள் அந்த இடங்களில் இருக்காமல் தலைமை பதவிகளில் வந்து பேட்டிகள் கொடுக்கும் போது சீ என்று விடும் .இப்படியான அறிவுள்ளவர்களால் தான் சீமான் கூட ஒரு தலைவராக உருவகபடுத்த பட்டுள்ளார் .இவர்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை வெறுமனே புலிப்புராணம் பாடிவிட்டு இவர்கள் கதை முடிந்து விடும் .

எமக்காக போராடுகினார் என்பதற்காக எதுவுமே முடியாத ஒருவரை நாம் தூக்கி பிடிக்க கூடாது எமது அரசியல் எப்போதும் எம்மை தூக்கி பிடிக்கும் உதிரிகளுடன் தான் .

நாம் அணுக வேண்டியது சர்வதே தேச அரங்கில் ஒரு மாற்றத்தை கொண்டுவர கூடியவர்களைதான்.

அர்ச்சுன் அண்ணா போராளிகளை கொச்சைப்படுத்தகூடாது என்று எழுதிவிட்டு கொச்சைப்படுத்துவது நீங்கள்தான் ...............எப்போ ஓர் போராளி விடுதலைப்போராட்டத்துடன் இணைந்து கொள்ள முடிவெடுக்கிறாரோ ..............அன்றே அவருக்கு அரசியல் தெரிந்துவிடுகிறது .................ஆனால் ஒன்றுமே தெரியாமல் உங்களைப்போன்றவர்கள் இங்கு எழுதும் திரைக்கதைகளை இரசிப்பவன் உங்களைப்போன்றவர்களே .................அதை மற்றவர்களிடம் திணிப்பது முறையாகாது .உங்கள் கருத்துக்களை வாசிக்கும்போது 23 ஆம் புலிகேசிதான் நினைவுக்கு வருகிறார் ....................அதையே பார்த்துவிட்டோம் இதையுமா பார்க்கமாட்டோம் ............நடாத்துங்கள் :D 

 

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி சூசையின் பேட்டி பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம். தொடக்கமும் முடிவும் கத்தரிக்கப்பட்ட ஒரு பேட்டி இது. இந்தப் பேட்டியில் கேபியே தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்று சூசை சொன்னதாக ஒரு செய்தி உண்டு. முழுமையான பேட்டி வந்தால்தான் உண்மை, பொய் தெரிய வரும்.

தளபதி சூசை இந்த தொலைபேசி உரையாடலை "நாம் தமிழர்" இயக்கத்தை சேர்ந்த ஒருவருடன் செய்கின்றார். நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவருடன் உரையாடுகின்ற போது, அந்த இயக்கத்தின் தலைவர் செய்யக் கூடிய சில விடயங்களை கூறுவது இயல்பானது.

பல தமிழ்நாட்டு தலைவர்களுடன் விடுதலைப் புலிகள் தொடர்பில் இருந்தார்கள். அவர்கள் இது போன்று பதிந்து வைக்காது விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இப்படி ஒரு உரையாடலை வைத்துக் கொண்டு, அதுவும் தணிக்கை செய்து விட்டு, விடுதலைப் புலிகள் தம்மிடம்தான் போராட்டத்தை ஒப்படைத்தார்கள் என்று கூறுவது ஒரு ஏமாற்று வேலை.

 

ஒம் ஒம்ம் நீங்கள் எல்லாத்தையும் நேரில் கண்ட நீங்கள் தானே..அந்த தொலை பேசியில் கதைத்தது லண்டனில் வசிக்கும் ஒரு ஈழத்து உறவு.....இதில் இருந்து உங்க மேல கொஞ்சமும் நம்பிக்கை இல்லை நம்பிக்கை இல்லை...நால்லா சொல்லுங்கோ யாழ் இணைய தளத்தில் பொய்க்கு குறை இல்லை....

தளபதி சூசையின் பேட்டி பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம். தொடக்கமும் முடிவும் கத்தரிக்கப்பட்ட ஒரு பேட்டி இது. இந்தப் பேட்டியில் கேபியே தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்று சூசை சொன்னதாக ஒரு செய்தி உண்டு. முழுமையான பேட்டி வந்தால்தான் உண்மை, பொய் தெரிய வரும்.

தளபதி சூசை இந்த தொலைபேசி உரையாடலை "நாம் தமிழர்" இயக்கத்தை சேர்ந்த ஒருவருடன் செய்கின்றார். நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவருடன் உரையாடுகின்ற போது, அந்த இயக்கத்தின் தலைவர் செய்யக் கூடிய சில விடயங்களை கூறுவது இயல்பானது.

பல தமிழ்நாட்டு தலைவர்களுடன் விடுதலைப் புலிகள் தொடர்பில் இருந்தார்கள். அவர்கள் இது போன்று பதிந்து வைக்காது விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இப்படி ஒரு உரையாடலை வைத்துக் கொண்டு, அதுவும் தணிக்கை செய்து விட்டு, விடுதலைப் புலிகள் தம்மிடம்தான் போராட்டத்தை ஒப்படைத்தார்கள் என்று கூறுவது ஒரு ஏமாற்று வேலை.

சபேசன் இந்தப்போராட்டத்தை நீங்களே முன்னின்று செய்யலாமே .............பூரண ஆதரவு தர காத்திருக்கிறோம் ..................அப்போ நீங்கள் சந்தேகிக்கும் அனைவரும் எட்டியும் பார்க்கமாட்டார்கள் .........

  • கருத்துக்கள உறவுகள்

சூசை அண்ணாவின் காணொளியை முதல் வெளி விட்டதே tamilnet தான்

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுன் அண்ணா போராளிகளை கொச்சைப்படுத்தகூடாது என்று எழுதிவிட்டு கொச்சைப்படுத்துவது நீங்கள்தான் ...............எப்போ ஓர் போராளி விடுதலைப்போராட்டத்துடன் இணைந்து கொள்ள முடிவெடுக்கிறாரோ ..............அன்றே அவருக்கு அரசியல் தெரிந்துவிடுகிறது .................ஆனால் ஒன்றுமே தெரியாமல் உங்களைப்போன்றவர்கள் இங்கு எழுதும் திரைக்கதைகளை இரசிப்பவன் உங்களைப்போன்றவர்களே .................அதை மற்றவர்களிடம் திணிப்பது முறையாகாது .உங்கள் கருத்துக்களை வாசிக்கும்போது 23 ஆம் புலிகேசிதான் நினைவுக்கு வருகிறார் ....................அதையே பார்த்துவிட்டோம் இதையுமா பார்க்கமாட்டோம் ............நடாத்துங்கள் :D 

 

 

சர்வதேசத்துடன் தொடர்பு வைக்கவேண்டும் என்கிறார் அர்ஜுன் அண்ணா.. :D ஈழத்தமிழரிடம் எந்த செல்வாக்கும் இல்லை.. கள்ளத்தொடர்புதான் வைக்க வேணும்.. :D

 

கொள்கை வகுப்பாளர்களிடம் பேசி இணங்க வைப்பதற்கு ஒரு leverage வேண்டும்.. அது இல்லாமல் தான் இன்று அல்லாடுகிறோம்.. அந்த துருப்புச் சீட்டு தமிழ்நாட்டின் மக்கள் பலத்தில் உள்ளது.. மக்கள் பலமே ஒரு சந்தயின் பலம்.. சந்தை என்றால் முதலாளிகள் வருவார்கள்..

 

அத்தகைய மக்கள் பலத்தை துருப்பாகப் பாவிக்கக்கூடியவர்கள் தேவையாக உள்ளார்கள்..! அவர்கள், கருணாநிதி, ஜெயா அல்லர்.. அவர்கள் தமிழர் விடுதலைக்காக அந்த மக்கள்கூட்டத்தை என்றுமே பாவித்ததில்லை.. இந்த இடத்தில்தான் மாற்று அரசியல் சிந்தனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்று புலிகள் பலமாக இருந்தபோது அவர்களை ஒரு துருப்புச்சீட்டாகப் பாவித்து இந்தியா-அமெரிக்கா-சீனா-பாகிஸ்தான் என்று விளையாடினார்கள்.. சில சுற்றுகள் முடிந்தவுடன் இவர்கள் யாருக்குமே துருப்புச் சீட்டு அல்ல என்று அந்த ஓநாய்களுக்கு விளங்கிவிட்டது.. துருப்புச்சீட்டாக இருந்திருந்தால் சிங்களவன் அம்பாந்தோட்டையை தாரைவார்த்ததுமாதிரி ஏதாவது ஒரு தமிழர்பகுதியை ஒரு ஓநாய்க்கு தாரைவார்த்து ஈழத்திற்கு முயன்றிருக்கலாம்.. ஆனால் அதை செய்யாததால்தான் (அதாவது முரண்டு பிடித்தார்கள்) புலிகளை காட்சியில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்..

 

முரண்டு பிடித்தமை நல்லதா.. இல்லையா? காலம் பதில் சொல்லும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

தி மு க விலும் தான் இளஞர் அணி இருக்கு அதற்க்கு சீருடை யுக்கு அதன் கூட்டங்கள் மாநாடுகள் அதன் தலைவர்களின் பாதுகாப்பு என்று அவர்களின் பணி இருக்கும்

அதே போல அ தி மு க வில் இளஞர் இளம்பெண்கள் பாசறை இருக்கு அங்கும் அதே பணி....

சீமானின் கட்சியில் அது இருந்தால் தப்பாம்...:D

தி மு க விலும் தான் இளஞர் அணி இருக்கு அதற்க்கு சீருடை யுக்கு அதன் கூட்டங்கள் மாநாடுகள் அதன் தலைவர்களின் பாதுகாப்பு என்று அவர்களின் பணி இருக்கும்

அதே போல அ தி மு க வில் இளஞர் இளம்பெண்கள் பாசறை இருக்கு அங்கும் அதே பணி....

சீமானின் கட்சியில் அது இருந்தால் தப்பாம்... :D

சுண்டல் அது பெரும் மனத்தாக்கமும் ,பயமும் சூழ் அவர்கள் அடி மனதில் இருந்து வரும் வார்த்தைகள் .இதற்குப்போய் அளட்டிக்கொள்ளலாமா .......................[மனிதைகளில் பெரும்பான்மையோர் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்கள் அதை புரிந்து அவர்களையும் இயக்குவதே நிறைவான மனிதனுக்கு அழகு ,,,,,,,,,,,,,,அதனாலேயே இந்த உலகம் இயக்கப்படுகிறது ]

  • கருத்துக்கள உறவுகள்
seemanandthalaijpg48048.jpg விட்டா சொல்லுவினம் இந்த படமும் போட்டோ இம்பாக்கில் தான் செய்தது என்று..

Edited by பையன்26

சீமானின் உதாவியாளராக விளங்கிய சந்தோஸ் என்பவருடன்தான் சூசையின் இந்த உரையாடல் நடந்தது என்பது பொய்யான செய்தியா? இந்த உரையாடலை செய்தவர் லண்டனில்தான் இருக்கிறார் என்றால், முழுமையான உரையாடலை வெளியிட்டு இது பற்றிய சர்ச்சைகளை தீர்த்து வைக்க உதவலாம்.

முழுமையான உரையாடல் வெளிவராத வரை இதைப் பற்றிய வதந்திகள் தொடரத்தான் செய்யும்.

சீமானின் உதவியாளருடன் சூசை பேசினார் என்பதன் அடிப்படையில், ஒலிப்பதிவில் உள்ள விடயங்கள் மிகச் சாதரணமானவை. வைகோவின் உதவியாளருடனும் பேசியிருந்தாலும், அது இதே போன்றுதான் அமைந்திருக்கும். கருணாநிதியின் உதவியாளருடன் பேசியிருந்தாலும் இப்படித்தான் இருக்கும்.

இதை வைத்து போராட்டத்தை புலிகள் தம்மிடம் ஒப்படைத்தார்கள் என்பது மலிவான அரசியல்

  • தொடங்கியவர்

முழு பிழையான சிந்தனை இசை ,

சர்வதேச நிகழ்சிநிரல்களை வகுப்போர்களுடன் தொடர்புகள் கொள்ளதொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் திக்குத்திக்காக ஆளுக்கு வெவ்வேறு அமைப்புகளாகதான் இந்த நிகழ்வுகள் நடைபெருகின்றன.

திம்பு போன்று முன்றாம் ஒரு நாட்டில் எமது அமைப்புகள் தனி விமானத்தில் கூட்டி செல்லப்பட்டதே எமக்கான ஒரு அங்கீகாரம் தான் .பின்னர் நடந்தவை அனைவரும் அறிந்தது .(இந்தியன் ஆமி வருகை ராஜீவ் கொலை ).அதன் பின் இலங்கை அரசுகளுடன் பேச்சுவார்த்தை நோர்வே தலையீடு எல்லாம் ஒரு சர்வதேச அங்கீகாரம் தான் ஆனால் அதை நாம் எப்படி பயன் படுத்தினோம் என்பது தான் கேள்விக்குறி .சிங்கள- தமிழ் இல்லாத ஊடகவியலாளர்களின் பதிவுகள் நாம் தாம் எமது தலையில் மண்ணை அள்ளி கொட்டியது போலிருக்கு .அதைத்தான் இப்போதும் செய்கின்றோம் .

எமக்கு எங்களுக்குள் வீரம் காட்டி கொடி பிடித்து அட்டகாசம் பண்ணி ஆர்ப்பாடம் செய்து வெற்று கோஷம் போடுபர்களுடன் (சீமான் போன்று )தொடர்புகள் வைக்க  தெரிகின்றதே ஒழிய ஒரு சர்வதேசத்திற்கான ஒருமித்த பொறிமுறையை ஏற்படுத்த எம்மால் முடியவில்லை .

நாட்டில் இன்னமும் மூன்று நாலு கட்சிகளாக அடிபடுகின்றார்கள் .புலம் பெயர்ந்த தேசங்களை ஒவ்வொரு நாட்டிலும் பல அமைப்புகள் ,ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கைகளும் தீர்வுகளும் .

பல அமைப்புகள் இருப்பதில் தவறில்லை ஆனால் கட்டாயம் ஒரு பொது பொறிமுறை அவசியம் .அது எமக்கான தீர்வு என்ன ?சர்வதேசத்தை எப்படி அணுகுவது ? அதை எப்படி நடை முறைபடுத்துவது ,இவையெல்லாம் சாத்தியமில்லாமல் ஆளுக்கு ஆள் ஒவ்வொரு திசையில் ஓடிகொண்டிருப்பதால் ஆக போவது எதுவுமில்லை .

உதாரணமாக நாடு கடந்த அரசு சுதந்திர சாசனம் என்று ஒன்றை வெளியிட நாம் தமிழர் அதை ஏற்கமுடியாதனே இப்படியாக எமக்குள் மல்லுக்கட்டும் அரசியல் தான் நடைபெருகின்றதே ஒழிய தமிழரின் விடிவிற்கான  அரசியல் நடப்பதாக இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் உதாவியாளராக விளங்கிய சந்தோஸ் என்பவருடன்தான் சூசையின் இந்த உரையாடல் நடந்தது என்பது பொய்யான செய்தியா? இந்த உரையாடலை செய்தவர் லண்டனில்தான் இருக்கிறார் என்றால், முழுமையான உரையாடலை வெளியிட்டு இது பற்றிய சர்ச்சைகளை தீர்த்து வைக்க உதவலாம்.

முழுமையான உரையாடல் வெளிவராத வரை இதைப் பற்றிய வதந்திகள் தொடரத்தான் செய்யும்.

சீமானின் உதவியாளருடன் சூசை பேசினார் என்பதன் அடிப்படையில், ஒலிப்பதிவில் உள்ள விடயங்கள் மிகச் சாதரணமானவை. வைகோவின் உதவியாளருடனும் பேசியிருந்தாலும், அது இதே போன்றுதான் அமைந்திருக்கும். கருணாநிதியின் உதவியாளருடன் பேசியிருந்தாலும் இப்படித்தான் இருக்கும்.

இதை வைத்து போராட்டத்தை புலிகள் தம்மிடம் ஒப்படைத்தார்கள் என்பது மலிவான அரசியல்

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29390

ஆதாரம் கேட்டிங்கள் தந்தாச்சு...

பையன்! என்னுடைய கருத்தை சரியாக வாசித்தீர்களா? இப்பொழுது நீங்கள் தந்திருக்கின்ற இணைப்பு மேலும் தணிக்கை செய்யப்பட்ட ஒன்று. நான் முழுமையான ஒலிப்பதிவை கேட்டால் நீங்கள் அதை விடக் குறைவான ஒன்றைக் காட்டுகிறீர்கள்.

மற்றையது, தலைவருடன் படம் எடுத்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் தலைவர் என்று ஒத்துக்கொண்டால், அதோ கதிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பையன்! என்னுடைய கருத்தை சரியாக வாசித்தீர்களா? இப்பொழுது நீங்கள் தந்திருக்கின்ற இணைப்பு மேலும் தணிக்கை செய்யப்பட்ட ஒன்று. நான் முழுமையான ஒலிப்பதிவை கேட்டால் நீங்கள் அதை விடக் குறைவான ஒன்றைக் காட்டுகிறீர்கள்.

மற்றையது, தலைவருடன் படம் எடுத்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் தலைவர் என்று ஒத்துக்கொண்டால், அதோ கதிதான்.

 

இந்தக் காணொளி இப்ப நேற்று வெளி வர வில்லை... 2009 மே 18ட்டுக்கு முதலே வெளி வந்து விட்டது...தமிழ் tamilnet லும் வந்தது....இதுக்கு மிஞ்சி ஆதாரம் பூவாரம் என்றால் உங்களின் அறியா தன்மையை தான் காட்டுது..

தமிழ் நேற் தான் இந்தக் காணொளியை முதல் வெளி விட்டது...

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

பையன்! என்னுடைய கருத்தை சரியாக வாசித்தீர்களா? இப்பொழுது நீங்கள் தந்திருக்கின்ற இணைப்பு மேலும் தணிக்கை செய்யப்பட்ட ஒன்று. நான் முழுமையான ஒலிப்பதிவை கேட்டால் நீங்கள் அதை விடக் குறைவான ஒன்றைக் காட்டுகிறீர்கள்.

மற்றையது, தலைவருடன் படம் எடுத்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் தலைவர் என்று ஒத்துக்கொண்டால், அதோ கதிதான்.

 

 

முதலில்

ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள்

இங்கு எவரும் சீமானை  எமது தலைவராக தளபதியாக எழுதவில்லை.

அவரும் அப்படி சொன்னதில்லை.

 

இங்கு வரும் சொற்களை  வைத்து கோர்த்து அலசல் எழுதும் தந்திரத்தைக்கைவிட்டு 

சீமான் செய்யும் பணிகளில் ஒரு வீதத்தையாவது தமிழருக்கு செய்ய  முயலுங்கள்

(ஒரு போதும் சீமான் பிரித்தாளும் வேலையை  செய்ததில்லை. அதையாவது  கடைப்பிடியுங்கள்)

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா.. உங்கள் கருத்துடன் உடன்படவில்லை..

 

திம்புவுக்கு விமானத்தில் கூட்டிக்கொண்டு போனார்கள் என்றால் எங்கள் மீதான பாசத்தில் என்றல்ல.. எங்களைவைத்து பனிப்போர் காலத்தில் போட்ட திட்டங்களின் ஒரு பகுதியே அது.. எங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் கலகத்தால் அவர்களுக்கு நன்மை.. தமக்கு நன்மை இல்லாமல் ஒரு துரும்பைக்கூட தூக்கிப் போடமாட்டார்கள்..

 

பிறகு ஜே. ஆர் பணிவதுபோல் பணிந்து இந்தியக் கொள்கைகளை மாற்றிய வரலாறு உங்களுக்கு நிச்சயம் தெரியும்.. பனிப்போர் முடிவுடன் எங்களை யாருக்குமே தேவையில்லாது போய்விட்டது..

 

இரண்டாவது உலக ஒழுங்கு இப்பொழுதுதான் பலம்பெற்று வருகிறது சீனாவின் முனைப்பில்.. இடைப்பட்டகாலத்தில் மேற்குலகம் ஒன்றுதான் செல்வாக்கு செலுத்தியது..

 

http://www.globalresearch.ca/geo-strategic-chessboard-war-between-india-and-china/7453

 

மேலுள்ள இணைப்பையும் படித்துப் பாருங்கள்.. வெறும் தொடர்புகள் எந்த அளவு வீச்சைக் கொடுக்கக்கூடியது என்பது புலனாகும்.. ஒன்றைக் கொடுத்துத்தான் இன்னொன்றைப் பெறவேண்டும் என்பதுதான் நடைமுறை. நாம் கொடுப்பதற்கு ஏதுமில்லாமல் எடுக்க முடியாது என்பது நிதர்சனமானது. தமிழ்நாடு ஒருங்கிணைந்து வரும்போது கொடுப்பதற்கு சில இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே குறிப்பிட்ட கட்டுரையின் தமிழாக்கத்தை இசைக்கலைஞன் என்றொருவர் மொழிபெயர்த்துப் போட்டிருக்கிறார்.. :D

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65558

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மிகவும் ஒரு அருமையான திரி. சீமான் வாக்குகளுக்காகக் கோசம் போடுகிறாரா? இல்லை தலைவர்மேல் வைத்திருக்கும் அன்பிற்காகக் கோசம் போடுகிறாரா என்பது இங்கு ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டிய விடயம் அல்ல.  ஆனால், அவருடைய கோசமும் அவர் வெளிப்படுத்தும் தோற்றப்பாடும் எவ்வகையான நன்மை, தீமைகளை எமது தேசவிடுதலைக்குக் கொண்டுவரும் என்பதே ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டிய விடயம். 
 
 
 
இங்கே, பலருடைய கருத்துக்கள் சீமானுக்கு எதிராகவும் மற்றவர்களுடைய கருத்துக்கள் அவருக்கு ஆதரவாகவும் இன்னுமொரு சாராரது கருத்துக்கள் அரசியலை விளங்கிக் கொள்ளாத நிலையையும் காட்டி நிற்கின்றன. இந்த இடத்தில், நான் குறிப்பிடவேண்டிய ஒரு விடயம்,
 
இந்த நிகழ்வு நடந்தபோது நான் பிறந்திருந்தேனோ என்று எனக்குத் தெரியவில்லை.  ஆனால், பல பெரியவர்கள் உறுதிபடக் கூறியதால் அதை இங்கே எழுதுகிறேன்.
 
மாதமோ சித்திரை
 
நேரமோ பத்தரை
 
மக்களோ நித்திரை
 
இங்கு பேசுவது அண்ணாத்துரை
 
என்று, சென்னை மரினாக் கடற்கரையில் தான் கலந்துகொள்ள வேண்டிய கூட்டத்திற்குத் தாமதமாகச் சென்றதால் அங்கே தூங்கி வழிந்து கொண்டிருந்த மக்கள் வெள்ளத்தை உணர்வூட்டி எழுப்புவதற்காக அறிஞர் அண்ணாதுரை மேற்கண்டவாறு கூறினாராம். 
 
அன்று தொட்டு இன்றுவரை, அரசியல் என்று வரும்பொழுது இவ்வாறான அழகுதமிழுக்கும், அடுக்குமொழிகளுக்கும், அடைமொழிகளுக்கும் அடிமைப்பட்டு உணர்ச்சிகளைப் பொங்கவிட்ட அரசியலையே எம் தமிழினம் நடத்தி வந்திருக்கிறது.  இதே பாணியை இன்று சீமானும் கைக்கொள்வதனால் அவர்பின் அணிதிரளவென்று தமிழ்நாட்டு மக்களில் ஒரு சாராரும் ஏன், புலம்பெயர்ந்து வாழும் எம்மவரில் பலரும் இருப்பது ஆச்சரியத்திற்குரிய விடயம் அல்ல.  எம் விடுதலைக்காக, சிறந்த ஆளுமையும் மக்கள் ஆதரவும் மிக்க ஒரு தலைவரைத்தான் சர்வதேசமும், சர்வதேசத்திற்கு எமது தேசவிடுதலை விடயத்தில் அவ்வப்போது தடுப்புப் போடலாம் என நினைக்கும் இந்திய அரசும் எதிர்பார்க்கின்றன. 
 
இத்தகைய தகைமைகளோடு எம்மிடையே இருந்த ஒரே தலைவரை அவருடைய அகப்புற யதார்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வல்லரசுகளும் இந்திய அரசும் அவர் பெயர், அவர் உருவாக்கிய சீருடை, அவரால் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அவர் போராட்டத்தில் கைக்கொண்ட சில வழிமுறைகள் ஆகியவற்றை 1990களின் கடைப்பகுதி முதல் முள்ளிவாய்க்கால் வரை, தமது நலன் கருதி பகிரங்கமாக எதிர்த்தும், கண்டித்தும் வந்திருக்கின்றன.  முள்ளிவாய்க்காலின் பின் சீன அரசுடன் இணைந்து சிறிலங்கா அரசு தம்மை ஏமாற்றுவதை உணர்ந்த பிற்பாடு தாம் எதிர்த்தவையும் கண்டித்தவையும் தமிழீழ மக்களால் மனதார ஏற்றிப் போற்றப்பட்ட விடயங்கள் என்பதை உய்த்துணர்ந்து இருக்கின்றன.  ஆனாலும், தாம் பகிரங்கமாக எதிர்த்த ஒரே காரணத்துக்காக அவற்றை மீண்டும் பகிரங்கமாக நியாயப்படுத்தும் நிலையில் இந்த வல்லரசுகள் இல்லை. 
 
எமது தேசத்திற்கான தீர்வு என்று வரும்பொழுது, ஐ.நா. சபை, அமெரிக்க வல்லரசு, சில சமயங்களில் இந்திய அரசு ஆகிய காரணிகளோடு ஈழத்தமிழர் தரப்பு பேரம் பேசவேண்டிய நிலை ஏற்படும் என்பதே இன்றைய யதார்த்தம்.  அப்படியான நிலை ஏற்படும்பொழுது, “நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரித்தது இல்லை.  வன்முறை மற்றும் மனிதஉரிமை மீறல்களை ஆதரிக்கவில்லை.  ஆனால், ஜனநாயக வழியில் தமது சுதந்திரத்தை நியாயமாகக் கோரி நிற்கும் ஒரு இனக்குழுமத்திற்கு நியாயத் தீர்ப்பு வழங்கவே வந்திருக்கின்றோம்.  உன்னுடைய வாக்குறுதிகளை நம்பி இனிமேலும் ஒரு இனத்தின் அழிவிற்கு உடந்தையாக நாம் விரும்பவில்லை.  நீயும் இதுவரை, உன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.” என சிறிலங்காவிடம் கூறிவிட்டு, தீர்ப்பையும் வழங்கித் தாமும் தப்புவதற்கு ஐ.நா. சபையும் அமெரிக்க வல்லரசும் அதற்கு ஆதரவான அரசுகளும் முயலும். 
 
மேற்கூறிப்பிட்ட யதார்த்தத்தின் அடிப்படையில்தான் இன்று எம்மிடையே இருக்கும், தோன்றவிருக்கும் தலைமைத்துவங்களையும் ஈழஆதரவு அமைப்புகளையும் சர்வதேச அரசுகளும் அமெரிக்க வல்லரசும், ஏன் ஐ.நா. சபையும் நோக்குகின்றன.  இது இன்றைய நிதர்சனமாக இருக்கின்ற காலகட்டத்தில் உணர்ச்சிகளைத் தூண்டும் அரசியல்வாதிகளையும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும், கொடுக்கவிருக்கும் ஈழத்தமிழர் தலைமைகளையும் வல்லரசுகளும், சர்வதேசப் புலனாய்வுத் துறைகளும் கண்காணித்து வருகின்றன. ஆகவே, சீமானுடைய கோசங்கள் எமது விடுதலைப் பயணத்தை பின்தள்ளுவனவாகவே இருக்கின்றன. 
 
 
 
சீமான் செய்வது அவருக்கு நியாயமாக இருந்தாலும் எமது தேசவிடுதலை என்று வரும்பொழுது அவருக்கு ஆதரவு கொடுக்கும் எம்மவர்களும் வன்முறைப் பேச்சுக்களை உள்வாங்கி அவற்றை வரவேற்பவர்களாகவும் வன்முறை விரும்பிகளாகவும்தான் பார்க்கப்படுவார்கள்.  இதனைத்தான் இந்தத் திரியில் கருத்துக்களைப் பதிந்த சில கருத்தாளர்கள் தங்களால் இயன்றவரையில் தெளிவாக்க முயன்றிருக்கிறார்கள்.  ஆனாலும், இவர்கள் மேல் இருக்கின்ற தனிப்பட்ட கோபதாபங்கள் காரணமாகவோ, அல்லது இவர்கள் அவ்வப்போது வைக்கின்ற கருத்துக்களின் மேம்பட்ட பொருட்செறிவை எதிர்கொள்ள முடியாத காரணத்தாலோ பலரும் விதாண்டாவாதப் போக்கில் கருத்துக்களை முன்வைத்திருப்பது வேதனையான விடயம்.  இவர்களுக்கு சீமான்மேல் தனிப்பட்ட அன்பு இருக்கலாம்.  அது பாராட்டப்படவேண்டிய விடயமும் அவரது தனிமனித உரிமையும் என்பதையும் நான் மறுக்கவில்லை.  ஆனாலும், பல்லாயிரக்கணக்கானவர்கள் தினமும் பார்க்கும் யாழ்களத்தின் திரிகளில் சீமான் போன்றவர்களை ஆதரிக்கின்ற கருத்தாளர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் யாழ்களத்தில் தீவிரவாதம் வளர்க்கப்படுகின்றது எனும் தோற்றப்பாட்டைக்கூட உருவாக்கலாம்.  
 
இங்கே இந்தத் திரியில்எழுதப்பட்டிருக்கும் விடயம் ஒரு சாதாரண ஊழல் அரசியல்வாதி பற்றியதல்ல.  மாறாக, ஒரு தேசத்தின் விடுதலைக்காக அந்தத் தேசத்தைச் சாராத ஒரு அரசியல்வாதி இன்னொரு தேசத்திலிருந்து தன்னுடைய நம்பிக்கைக்கும் ஆசாபாசாங்களுக்கும் ஏற்ப எடுக்கும் அரசியல் செயற்பாடுகளை விமர்சிப்பதாக அமைந்திருக்கின்றன.  ஆகவே, அவருடைய கொள்கைகளை பிரச்சாரம் செய்பவர்களாக புலம்பெயர்ந்திருக்கும் நாம் பார்க்கப்படுவது எமது தேசவிடுதலைக்கு ஆரோக்கியமானதாக தென்படவில்லை.  நாம் இங்கே உணர்ந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், சீமான் தமிழ்நாட்டிலிருக்கும் ஒரு அரசியல்வாதி என்பதாகும்.  அவர் தனது கட்சியின் கிளைகளை சர்வதேசமெங்கும் நிறுவ விரும்புவது அவருடைய தனிப்பட்ட உரிமையும் அவரது கட்சிக் கொள்கையும் என்பதை நான் ஏற்றுக் கொண்டாலும் நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில், தமிழ்நாட்டுக்கு உரித்தான அவருடைய கட்சியின் தொண்டர்கள் ஈழத்தமிழர்களாக இருப்பது சர்வதேச அரசியல்வாதிகளால் வித்தியாசமாக நோக்கப்படுகிறது.  தமிழ்நாட்டுக் கட்சியொன்றின் கிளையில் பெரும்பான்மையாக ஈழத்தமிழர்கள் இணைந்திருப்பது எதற்காக என்ற கேள்வி இங்கு பரவலாக புலம்பெயர்தேச அரசியல்வாதிகளிடையே காணப்படுகிறது.  இதிலும், சீமானின் தீவிரவாதத்தன்மையான ஈழத்தமிழ் கோசம் அவர் கட்சியின் தொண்டர்களாக புலம்பெயர் நாடுகளில் செயற்படுபவர்களையும் தீவிரவாதிகளாகப் பார்க்குமளவிற்கு புலம்பெயர்தேச அரசியல்வாதிகளைத் தள்ளியிருக்கின்றது என்றால் அது மிகையாகாது.
 
இந்த நிலைதான், சீமானால் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதகமான நிலை.  இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுவதைத் தடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.  எமக்கான ஒரு தலைமை சர்வதேசத்துடன் உறுதிபடத் தமிழீழத்திற்காகப் பேரம் பேசும்வரை, உணர்ச்சிகளை முன்னிறுத்தி அரசியல் நடாத்தும் சீமான் போன்ற அரசியல் தலைவர்களை தூரத்தில் வைத்திருப்பது எமது இனத்தின் விடுதலையை துரிதப்படுத்தும்.  இவர் போன்ற தமிழக அரசியல்வாதிகளின் கோசங்களை நாம் மனதாரப் பாராட்டிவிட்டுப் பகிரங்கமாகப் புகழ்வதை நிறுத்துதல் எமது விடுதலையை நோக்கிய அரசியலுக்கு உரமூட்டுவதாகவே அமையும்.
 
எமக்கான ஒரு தீர்வை நாம் சர்வதேசத்திடம் முன்வைக்கும்போது, அந்தப் பேச்சுவார்த்தை மேசையில் சீமானுக்கு அவர் ஈழத்தமிழர் அல்லாதவர் என்ற ஒரே காரணத்திற்காக சர்வதேசம் எந்த நிலையிலும் அவருக்கு இடம் கொடுக்கப் போவதில்லை என்ற உண்மையையும் நாங்கள் இங்கே உணர்ந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.  இதற்குச் சிறந்த உதாரணம் சோனியா காந்திக்கு மறுக்கப்பட்ட இந்தியப் பிரதமர் பதவி.
 
துளசி, இந்தத் திரியில் பல இடங்களில் உங்கள் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் நீங்கள் வைத்த எதிர்க்கருத்துக்களையும், அறிவுரைகளையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.  சந்தோசமான விடயம் என்றாலும் சீமான் எமக்காக குரல் கொடுத்த 2008ஆம் ஆண்டில் அவரைக் கருணாநிதியின் அரசு சிறையில் தள்ளியது.  நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், அவருடைய தலைமை, வழிநடத்தல், அரசியல் ஞானம் என்பன அந்நாட்களில் உறுதியாகவும் அவருடைய ஆளுமை சிறப்பானதாகவும் இருந்திருந்தால் அவர், அவருடைய தொண்டர்கள் 24 மணித்தியாலங்களுக்கு மேல் அவரைச் சிறையில் வைத்திருக்க முடியாத நிலையை தோற்றுவித்திருப்பார்கள்.  ஆனால், அன்று அது நடக்கவில்லை.  மாறாகக் கருணாநிதியின் இரும்புக்கரம் பலமானதாக இருந்தது.  அத்தோடு அன்றைய காலகட்ட எழுச்சிக்கு முற்றுமுழுதாக சீமான் காரணமாக இருக்கவில்லை.  
 
அப்படிப்பட்ட சீமானுடைய இன்றைய நடவடிக்கைகள் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர் விடயத்தில் தனது கொள்கைகளை மாற்றும் என்று ஒருவரும் எதிர்பார்க்க முடியாது.  அந்தளவு ஆளுமையும் சீமானுக்கு இல்லை.  ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இன்றுவரை இந்திய அரசையும் சிறிலங்கா அரசையும் ஒரே தருணத்தில் ஆட்டம் காண வைத்த தமிழ்நாட்டு அரசியல்வாதியென்றால் அது மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மட்டும்தான்.  அவருடைய ஆளுமையும் மக்கள் பலமும் சீமானுக்கு எள்ளளவும் இல்லை.  இதுதான் உண்மை.  குறைந்த பட்சம், வை.கோ. அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூட இவரால் ஏற்படுத்த முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. 

 

இவர் தமிழ்நாட்டில் அரசியல் செய்வதோடு நிறுத்திக் கொண்டு புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்களிடையே தன்னுடைய அரசியலை புகுத்தாமல் இருந்து கொள்வது தற்போதைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு நன்மை தரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.