Jump to content

நான் சாப்பிடும் இலை, குழை, கீரை வகைகளும் அவற்றின் சத்துக்களும்


Recommended Posts

எனக்கும் ஆட்டுக்கும் யார் அதிகம் இலை குழை சாப்பிடுவது என்று போட்டி வைத்தால் ஒரு ஆட்டை வெல்லக் கூடியளவுக்கு நான் பச்சை இலைகளை சாப்பிட்டுக் காட்டுவன். அந்தளவுக்கு நான் பச்சை இலைகளை வார நாட்களில் உண்பதுண்டு.

 

வார இறுதி நாட்களை முற்றிலும் அசைவ உணவுகளுக்கு என்று ஒதுக்கி வைத்து இருப்பதால் வார நாட்களில் ஆகக் குறைந்தது 2 நாட்களாவது தனியே மரக்கறி, இலை வகைகளாலான சலாட்டினையும் சாப்பிடுவதும், மிச்ச வார நாட்களில் இரண்டு இலை / கீரை வகை உணவை சேர்ப்பதும் வழக்கம். 

 

சரி, இவ்வாறு பச்சை இலைகளை தெரிவு செய்யும் போது  அவற்றில் என்னென்ன சக்தி இருக்கு என்று பார்த்து தெரிவு செய்வது வழக்கம். ஒவ்வொன்றிலும் என்னென்ன சக்தி இருக்கு என்று மேலோட்டமாகவேனும் தெரிந்து வைத்திருப்பது எம் உணவு முறையை Balance பண்ண உதவும் என்று நம்புகின்றேன். அதன் படி பல தளங்களில் இருந்து பெற்ற தகவல்கள் இவை.

 

நான் குறிப்பிடும் பச்சை இலை வகைகள் அனைத்தும் கனடாவில், Toronto வில் இலகுவாக பெறக் கூடியன. மற்ற நாடுகளில் என்ன மாதிரி என்று தெரியவில்லை.

 

ஊரில் இருந்து கனக்க மருந்தடித்து வரும் ஆரோக்கியமற்ற மரக்கறிகளை விட நாங்கள் வாழும் இந்த நாடுகளில் வளரும் மரக்கறிகள், இலை வகைகள் நல்லது என நம்புகின்றேன்.  இங்குள்ள அநேக நாடுகள் எந்தளவுக்கு பூச்சிக் கொல்லி, இரசாயன பசளை வகைகளை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற அளவினை தீர்மானித்து கடுமையாக அமுல்படுத்தி வருகின்றனர் என்பதால் ஓரளவுக்கேனும் ஆரோக்கியமாக இவை இருக்கும்.

 

 

Link to comment
Share on other sites

1. Kale இலை (கேல்): இதனை Borecole என்றும் அழைப்பர்.

 

கி.மு 600 ஆம் ஆண்டளவில் ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு பின் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் தென் அமெரிக்க நாடுகளுக்கு ஐரோப்பிய குடிப்பெயர்வின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கடும் பச்சை நிற இலையைக் கொண்ட உணவு இது.

 

இலையின் படம்:

 

img_145821.jpg

 

 

 

முக்கிய சத்துகள்:

 

1. வைட்டமின் K.

2. வைட்டமின் A

3. வைட்டமின் C

4. Fibre

5. Iron

6. Vitamin B1 & B2

7. ஒமேகா 3

 

பலன்கள்:

 

நீண்ட ஆராச்சிகளின் பின் இது ஒரு மிகச் சிறந்த Antioxidant  ஆகவும், அதே போன்று சிறந்த ஒரு anti-inflammatory ஆகவும் உள்ள இலை வகை என்று கண்டு பிடித்துள்ளனர். இவற்றின் மூலம் பல புற்றுநோய்களை வரவிடாமல் தடுக்க கூடிய சக்தியை உடலுக்கு வழங்குகின்றது.  இதனை விட உணவை சமிபாடடையச் செய்யும் செயல்பாட்டினை அதிகரிப்பது, எலும்புகளுக்கு சக்தி கொடுப்பது, கொழுப்பை குறைப்பது, கட்டராக்ட் (cataracts) வராமல் தடுப்பது போன்றவற்றையும் செய்கின்றது.

 

மேலும் வாசிக்க: http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=38#healthbenefits

 

 

Toronto வில் Nofrills போன்ற அநேகமான உணவுப் பொருட்களை விற்கும் வணிக நிலையங்களிலும், 'இரா' போன்ற தமிழ் உணவுப் பொருள் அங்காடிகளிலும் வாங்க முடியும்.

Link to comment
Share on other sites

2. Lettuce (லெட்டூஸ்)

 

அநேகமான இலைவகை சலாட்டில் காணப்படும், இலகுவாகப் வாங்கக் கூடிய Lettuce இல் இரண்டு முக்கிய வகைகள் இருக்கின்றன.

 

1. Romaine lettuce

2. Iceberg lettuce

 

இதில் நான் அதிகம் வாங்குவது முதலாவது வகையான Romaine lettuce இனைத்தான். iceberg lettuce இனை விட  குறைவான சீனியும் (sugar), இரண்டு மடங்கு புரதமும், மூன்று மடங்கு விற்றமின் K யும், எட்டு மடங்கு விற்றமின் C யும் காணப்படும் இந்த வகையானது மற்றதை விட கொஞ்சம் விலை கூடினது.

 

சத்துகள்:

 

இதிலும் கேல் (Kale) இல் இருப்பது போன்று ஏழு முக்கிய சத்துகளும் இருக்கின்றன.

 

1. வைட்டமின் A.

2. வைட்டமின் K

3. வைட்டமின் C

4. Fibre

5. Iron

6. Vitamin B1, B2 மற்றும் B6

7. ஒமேகா 3

 

பலன்கள்:

 

உடலில் இருக்கும் அதிக கொழுப்பு oxidized ஆவதால் தான் அது ஒட்டும் தன்மையாக மாறி எம் இதயத்துக்கு குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் படிந்து குருதியை அடைத்த மாரடைப்பினையும் பக்கவாதத்தினையும் (stroke) தருகின்றது.  லெட்டூஸ் இல் காணப்படும் சத்துகளால் (Vittamin C மற்றும் பீற்றா கரோட்டின்) இவ்வாறு இரத்தம் oxidized ஆவது தடுக்கப்பட்டு (அதாவது antioxidant ஆக தொழிற்பட்டு) மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதுடன் பல இருதய நோய்களை அண்ட விடாமல் தடுக்கவும் தன் பங்களிப்பை வழங்குகின்றது.  அத்துடன், இதில் காணப்படும் மற்ற சத்துகள், முக்கியமாக Pottassium ஆனது இரத்த உயர் அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது.

 

மேலும்: http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=61

Link to comment
Share on other sites

மிக நல்ல விடயம் நிழலி.

 

கீரை/ இலை மரக்கறி வகைகளை அதிகம் உணவில் சேர்ப்பது மிக நல்லது. கடும் பச்சை நிறம் உடைய இலை வகைகள் அதிக சத்தானவை, குறிப்பாக, இரும்பு, antioxidant என்பவை அதிகம்.  

 

நீங்கள் இணைத்தது பொரித்த kale இலையின் படம் போல் உள்ளது :) .

 

 

கேல் கட்டின்/பிடி படம் 

 

Kale.jpg

Link to comment
Share on other sites

மிக நல்ல விடயம் நிழலி.

 

நீங்கள் இணைத்தது பொரித்த kale இலையின் படம் போல் உள்ளது :) .

 

 

கேல் கட்டின்/பிடி படம் 

 

Kale.jpg

 

ஹிஹி... நான் இணைத்தது கொஞ்சம் வாடி விட்டது என்று நினைக்கின்றேன். இந்த இலையை கொஞ்சம் ஒலிவ் ஒயில் விட்டு மெல்லிய சூட்டில் ஒரு 4 நிமிடம் வதக்கினால் நன்றாக வரும். இதில் வறையும் செய்து சிலர் உண்பர். ஆனால் அதிக சூடு என்றால் அதன் விற்றமின்கள் இறந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயன்தரும் திரி.
நல்ல காலம் வார இறுதியில் அசைவம் என்பதால் நிறையத் தண்ணி குடிச்சிட்டு வேலிவளிய இருக்கிற இலைகளைப் பிடுங்காமல் வேலி தப்பிச்சுது.

 

Link to comment
Share on other sites

ஆரோக்கியமான உணவு. நான் வார நாட்களில் மதியம் தனியே இலை குலை மாத்திரந்தான் சாப்பிடுவது. இரவுகளிலும் உணவில் 'சலட்' சேர்த்துக் கொள்வேன். வார விடுமுறையில் மரக்கறிகளுடன் கட்டாயம் ஒரு இலைச் சுண்டலும், சேர்த்துக் கடிக்க சின்ன வெங்காயமும் வேண்டும்.

 

பச்சை மரக்கறிகளை உண்ணும் பொழுது உடலிலும் மனத்திலும் ஒருவித உற்சாகம் பிறக்கும். அதிலும் கோடை காலத்தில் தோட்டத்தில் விளையும் மருந்தடிக்காத மரக்கறிகளை பறித்து உண்பது எனது சுகமான பொழுது போக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல விடயம் நிழலி.

 

கீரை/ இலை மரக்கறி வகைகளை அதிகம் உணவில் சேர்ப்பது மிக நல்லது. கடும் பச்சை நிறம் உடைய இலை வகைகள் அதிக சத்தானவை, குறிப்பாக, இரும்பு, antioxidant என்பவை அதிகம்.  

 

நீங்கள் இணைத்தது பொரித்த kale இலையின் படம் போல் உள்ளது :) .

 

 

கேல் கட்டின்/பிடி படம் 

 

Kale.jpg

 

 

gruenkohl-schinken_zps83bdbf79.jpg

 

 

இதனை குறூண்கோல்(Grünkohl) என ஜேர்மனியில் அழைப்பர்.முக்கியமாக குளிர்காலங்களுக்கு உகந்த உணவு.எமது உணவுமுறையில் பார்த்தால் மீன்கலந்து வறை செய்தால் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

இதனை குறூண்கோல்(Grünkohl) என ஜேர்மனியில் அழைப்பர்.முக்கியமாக குளிர்காலங்களுக்கு உகந்த உணவு.எமது உணவுமுறையில் பார்த்தால் மீன்கலந்து வறை செய்தால் நன்றாக இருக்கும்.

 

ஓம்... குமாரசாமி அண்ணா,

முன்பு, இந்த குறூன் கோல்... குளிர்காலத்தின் பின், "லிடில்" கடையில்... வாங்கி, மாசிக் கருவாடு போட்டு சமைத்துள்ளோம். அதன் சுவைக்கு, வேறு எந்த இலையும்.... நிகரில்லை.

 

ஆனால்... கடந்த இரண்டு வருடங்களாக அந்தக் கடையில் காணவில்லை.

இதனை.... வேறு எங்கு வாங்கலாம்? என்று... சொல்லுங்களேன்.

Link to comment
Share on other sites

அண்ணா,

கேல் இலகுவாக வளர்க்க முடியும். இலைகளை ஒடிக்க ஒடிக்க வளரும்.

இன்று கால் ஏக்கருக்கு சுவிஸ் சார்ட் (Swiss Chard) நட்டோம். உக்கிய இயற்கை சாணத்தை தவிர வேறொன்றும் நாம் பாவிப்பதில்லை.

கேலிலும் பார்க்க மெதுவானது. பருப்போடு அல்லது சலாட்டிலும் சேர்க்கலாம்.

 

 

உங்கள் மரக்கறித் தோட்டத்தை வந்து பார்க்க முடியுமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மரக்கறித் தோட்டத்தை வந்து பார்க்க முடியுமா??

 

தோட்ட‌த்தை பார்க்க‌ வ‌ரும் போது, வெறுங்காலுட‌ன்... அரை கிலோ மீட்ட‌ர் முள்ளும், க‌ல்லும் குத்த‌ ந‌ட‌க்க‌, நீங்க‌ ரெடியா... அலை. :)

Link to comment
Share on other sites

விவசாயி விக்,
 
பயிர்களுக்கு நோய் வந்தால் என்ன செய்வீர்கள். மருந்தடிப்பதில்லையா ?
Link to comment
Share on other sites

நல்ல பதிவு தொடருங்கள்

 

பிகு: குழையென்றால் என்ன? குழை என்பது பணிவது என்றுதான் கேள்விப்பட்டேன். ஊரில் குழைகள் வெட்டுவது என்று பெரிய மரங்களில் இருக்கும் கிளைகளைதான் சொல்கின்றவர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு தொடருங்கள்

 

பிகு: குழையென்றால் என்ன? குழை என்பது பணிவது என்றுதான் கேள்விப்பட்டேன். ஊரில் குழைகள் வெட்டுவது என்று பெரிய மரங்களில் இருக்கும் கிளைகளைதான் சொல்கின்றவர்கள்.

 

பிற்குறிப்புக்கு,பிற்குறிப்பு:

 

இலை, தளைகளை குழை என்பார்கள்.

குழக்காடு என்று... சாவகச்சேரி, மட்டுவில், நுணாவில் பகுதிகளைச் சொல்வார்கள்.

அவ்வளவு... இலை, தளை மரங்களுடன் குளிர்ச்சியாக‌ இருந்த இடம்.

இன்று.. எப்ப‌டியோ... தெரியாது.

 

Link to comment
Share on other sites

விவசாயி விக்,
 
அறிந்து கொள்ளும் ஆவலில் தான் கேட்டேன். பிழையாக நினைக்க வேண்டாம்.   :D
 
எங்கள் சந்ததியினர் விவசாயம் தான் செய்து வந்தார்கள். அவர்களின் பிரச்சனைகளை நன்கு அறிவேன். சில நோய்கள் குறிப்பாக வைரஸ் நோய்கள் ஏற்பட்டால் அந்தல் மண்ணில் மீண்டும் அதே பயிரை பல்லாண்டுகள் பயிரிடவே முடியாது. இப்படிப் பல வில்லங்கங்கள். இதை எப்படி இயற்கை முறை மூலம் நீங்கள் சமாளிக்கின்றீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஆவல்.
 
உரப்பாவனையை விட கிருமிநாசினிகளே பெருமளவில் மனிதருக்கு பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நான் இங்கு கீரை வகைகளை வாங்குவதில்லை. இதற்கு முக்கிய காரணம் கீரை வகைகளிற்குத் தான் கிருமிநாசினிகளின் பெரும்பகுதி போய்ச் சேரும். (இலைகளே தாவரத்தின் பெரும்பகுதி என்பதால்.) கீரைகளால் கிடைக்கும் நன்மையைவிட தீமைகளே கூடுதலாக வந்து சேருமோ என்ற எண்ணம் காரணம்.
 
 
 
 
 
.
Link to comment
Share on other sites

பிற்குறிப்புக்கு,பிற்குறிப்பு:

 

இலை, தளைகளை குழை என்பார்கள்.

குழக்காடு என்று... சாவகச்சேரி, மட்டுவில், நுணாவில் பகுதிகளைச் சொல்வார்கள்.

அவ்வளவு... இலை, தளை மரங்களுடன் குளிர்ச்சியாக‌ இருந்த இடம்.

இன்று.. எப்ப‌டியோ... தெரியாது.

 

 

நன்றி சிறி

Link to comment
Share on other sites

 

எங்கள் சந்ததியினர் விவசாயம் தான் செய்து வந்தார்கள். அவர்களின் பிரச்சனைகளை நன்கு அறிவேன். சில நோய்கள் குறிப்பாக வைரஸ் நோய்கள் ஏற்பட்டால் அந்தல் மண்ணில் மீண்டும் அதே பயிரை பல்லாண்டுகள் பயிரிடவே முடியாது. இப்படிப் பல வில்லங்கங்கள். இதை எப்படி இயற்கை முறை மூலம் நீங்கள் சமாளிக்கின்றீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஆவல்.
 
உரப்பாவனையை விட கிருமிநாசினிகளே பெருமளவில் மனிதருக்கு பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நான் இங்கு கீரை வகைகளை வாங்குவதில்லை. இதற்கு முக்கிய காரணம் கீரை வகைகளிற்குத் தான் கிருமிநாசினிகளின் பெரும்பகுதி போய்ச் சேரும். (இலைகளே தாவரத்தின் பெரும்பகுதி என்பதால்.) கீரைகளால் கிடைக்கும் நன்மையைவிட தீமைகளே கூடுதலாக வந்து சேருமோ என்ற எண்ணம் காரணம்.
 
 

 

கிருமிகளிடமிருந்தும் பூச்சிகளிடமிருந்தும் பயிர்களைப் பாதுகாப்பதற்கு கீழே குறிப்பிட்டுள்ள பயிரிடும் முறைகள் நல்ல பலன் அளிக்கின்றன.

 

 'நட்பு தாவரப் பயிர்ச் செய்கை'  (Companion planting),

http://en.wikipedia.org/wiki/List_of_companion_plants

 

'சுழற்சி முறைப் பயிர்ச் செய்கை'

http://www.gardenorganic.org.uk/schools_organic_network/leaflets/CropRotation.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

விவசாயி விக்,
 
அறிந்து கொள்ளும் ஆவலில் தான் கேட்டேன். பிழையாக நினைக்க வேண்டாம்.   :D
 
எங்கள் சந்ததியினர் விவசாயம் தான் செய்து வந்தார்கள். அவர்களின் பிரச்சனைகளை நன்கு அறிவேன். சில நோய்கள் குறிப்பாக வைரஸ் நோய்கள் ஏற்பட்டால் அந்தல் மண்ணில் மீண்டும் அதே பயிரை பல்லாண்டுகள் பயிரிடவே முடியாது. இப்படிப் பல வில்லங்கங்கள். இதை எப்படி இயற்கை முறை மூலம் நீங்கள் சமாளிக்கின்றீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஆவல்.
 
உரப்பாவனையை விட கிருமிநாசினிகளே பெருமளவில் மனிதருக்கு பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நான் இங்கு கீரை வகைகளை வாங்குவதில்லை. இதற்கு முக்கிய காரணம் கீரை வகைகளிற்குத் தான் கிருமிநாசினிகளின் பெரும்பகுதி போய்ச் சேரும். (இலைகளே தாவரத்தின் பெரும்பகுதி என்பதால்.) கீரைகளால் கிடைக்கும் நன்மையைவிட தீமைகளே கூடுதலாக வந்து சேருமோ என்ற எண்ணம் காரணம்.
 
 
 
 
 
.

 

 

எங்கள் ஊரும் தோட்டம்தான் முழுவதும். இந்தியன் ஆமி வந்தபோதில் பயிர் நிலங்களை அழிக்கவென பல சில வைரசுக்களை  விளை  நிலங்களில் விதைத்ததாகக் கேள்வி.

 

 

Link to comment
Share on other sites

தோட்ட‌த்தை பார்க்க‌ வ‌ரும் போது, வெறுங்காலுட‌ன்... அரை கிலோ மீட்ட‌ர் முள்ளும், க‌ல்லும் குத்த‌ ந‌ட‌க்க‌, நீங்க‌ ரெடியா... அலை. :)

 

 

 

ம் ...................... முயற்சிக்கின்றேன் தமிழ்  :lol:

அலைமகள்,

 ஆனி முடிவில் வந்தால் தோட்டமும் அழகாக இருக்கும்

தாராளமாக குடும்பத்துடன் வாருங்கள்.

 

 

மிக்க நன்றி விவசாயி,  இப்ப வரமாட்டோம். மகளுக்கு ஸ்கூல், சமர் லீவுக்கை வர முயற்சிக்கின்றோம். வாறதென்றால் மெயில் அனுப்புவேன்.

Link to comment
Share on other sites

கிருமிகளிடமிருந்தும் பூச்சிகளிடமிருந்தும் பயிர்களைப் பாதுகாப்பதற்கு கீழே குறிப்பிட்டுள்ள பயிரிடும் முறைகள் நல்ல பலன் அளிக்கின்றன.

 

 'நட்பு தாவரப் பயிர்ச் செய்கை'  (Companion planting),

http://en.wikipedia.org/wiki/List_of_companion_plants

 

'சுழற்சி முறைப் பயிர்ச் செய்கை'

http://www.gardenorganic.org.uk/schools_organic_network/leaflets/CropRotation.pdf

 

 

 

 

 

தகவல்களுக்கு நன்றி தப்பிலி.
 
ஆனால் வைரஸ் கெட்ட சாமான்.  :huh:
 
அது உயிரிக்கும் உயிர் அற்றதுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை. பளிங்கு (Crystal) ஆக்கப்படாலும் பலகாலாம் அப்படியே இருந்து மீண்டும் உயிர்ப்படையும்.
 
மிளகாய்ச் செடியில் இலைச் சுருட்டி நோய் ஒன்றை ஏற்படுத்தும். சொல்லி வேலையில்லை.

 

 

 

எங்கள் ஊரும் தோட்டம்தான் முழுவதும். இந்தியன் ஆமி வந்தபோதில் பயிர் நிலங்களை அழிக்கவென பல சில வைரசுக்களை  விளை  நிலங்களில் விதைத்ததாகக் கேள்வி.

 

 

 

இந்திய இராணுவம் வரும் போது இந்தியாவில் இருந்து சில நோய்கள் அவர்களின் கால் நடைகளோடு வந்தன. உதாரணம் கோமரி நோய். இந்த கோமரி என்னும் அந்திராக்ஸ் மேற்கு நாடுகளில் படு பயங்கரவாதமாக எண்ணப் படுகின்றது. ஆனால் இந்தியாவில் ஒரளவு சாதரண நோய்.  :)
Link to comment
Share on other sites

1. Spinach (ஸ்பினாச்) கீரை:

 

 

0904_spinach.jpg

 

கடும் பச்சை இலைகளில் எனக்கு மிகவும் பிடித்த கீரை இது. ஊரில் அடிக்கடி உண்கின்ற முழைக்கீரையை ஒத்த சுவையுடையதாக எனக்கு தோன்றுவதும் இதுதான்.

 

முக்கிய சத்துகள்:

 

180 கிராம் ஸ்பினாச் இல் இருக்கும் சத்துகள்.

 

vitamin K1110.6%

vitamin A377.3%
manganese84%
folate65.7%
vitamin C29.4%

vitamin B224.7%

calcium24.4%

potassium23.9%

vitamin B622%

vitamin E18.7%

fiber17.2%

vitamin B111.3%

 

(இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சதவீதமானது, ஒரு நாளைக்கு நாங்கள் எடுக்க வேண்டிய ஒவ்வொரு வகை சத்துகளின் அளவுடன் ஒப்பிட்டு இதில் இருக்கும் அளவை கணித்த சதவீதமாகும். உதாரணமாக இந்தக் கீரையின் 180 கிராமை உட்கொள்ளும் போது எமக்கு நாளொன்றுக்கு கிடைக்க வேண்டி விற்றமின் K இல் 1110.6% வீதம் கிடைக்கின்றது. அதாவது 11 மடங்கு அதிகமாக கிடைக்கின்றது, அதே போன்று நாளொன்றுக்கு கிடைக்க வேண்டிய விற்றமின் A இன் அளவுடன் ஒப்பிடுகையில் இதனை 180 கிராம் உண்ணும் போது 377%  கிடைக்கின்றது. அதாவது 3.5 மடங்கினை விட அதிகமாக கிடைக்கின்றது)

 

 

பலன்கள்:

 

மேலே குறிப்பிட்டுள்ள கேல், லெட்டுஸ் ஆகிய கீரை வகைகளைப் போன்று ஸ்பினாச் சும் புற்றுநோய்க்கு எதிரான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பதார்த்தங்களைக் கொண்டுள்ளது, முக்கியமாக ஆண்களின் விதைப் பையின் அருகில் உருவாகும் புற்றுநோயான

Prostate cancer  , தோல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்றவற்றுக்கு எதிரான மிகவும் காத்திரமான சக்தியை வழங்குகின்றது.

புற்றுநோய் தவிர்ந்து வேறு என்ன பயன்கள் எனப் பார்த்தால், விற்றமின் K அதிகம் இருப்பதால் எலும்புகளை உறுதியாக வைத்திருத்தல் , விற்றமின் C, B, beta-carotine, மக்னீசியம் என்பனவற்றாலும் இதன் anti-oxidant திறனாலும் இதயத்துக்கு குருதியை கொண்டு செல்லும் ஆர்ட்டரி பலகீனமாவதை தடுத்தல், இரத்த உயரழுத்ததினை கட்டுப்படுத்துதல் போன்ற உயிர்வாழ்தலுக்கு மிகவும் அவசியமான செயற்பாடுகளையும் ஊக்குவிக்கின்றது.

 

மேலும் வாசிக்க:

1.  http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=43

2. http://www.healthdiaries.com/eatthis/11-health-benefits-of-spinach.html

Link to comment
Share on other sites

4. Broccoli (புறக்கோலி)

brocoli.jpg

 

எனக்கு கடைகளில் இதனைக் கண்டவுடனேயே எடுத்து கறிச்சு முறிச்சு என்று கடித்து சாப்பிடட்டா என்று நினைக்க தோன்றுமளவுக்கு விருப்பமான ஒரு இலை (இது இலையா மரக்கறியா என்ற ஒரு சந்தேகம் அன்றிலிருந்து இன்றுவரைக்கும் இருக்கு). ஒவ்வொரு வாரமும் தவறாமல் வாங்கும் இலை இது. அண்மையில் இதனை எப்படி சூப் வைப்பது என்று அறிந்தபின் ஒவ்வொரு வாரமும் ஒரு நாளாவது செய்து அருந்தி வருகின்றேன்.

 

சத்துகள்:

 

vitamin C135.2%

vitamin K115.5%
vitamin A11.3%
manganese9.5%
fiber9.4%
potassium8.2%
vitamin B68%
vitamin B26.4%
phosphorus6%
vitamin B55.2%

protein5.1%

magnesium4.7%

calcium4.2%

vitamin B14%
iron3.6%
vitamin E3.5%

 

பலன்கள்:

 

இதன் பலங்கள் எவை என்று அனைத்தையும் எழுத வெளிக்கிட்டால் நாள் முழுதும் எழுதிக் கொண்டு இருக்கலாம் என நினைக்கின்றேன். அந்தளவுக்கு மிகவும் அதிகமான பலங்களைக் கொடுக்கவல்லது. இதனை மிகச் சுருக்கமாக கீழே எழுத முயல்கின்றேன்:

 

1. புற்றுநோய் எதிர்ப்பு: இதற்கு முதல் எழுதப்பட்ட  இலை வகைகளைப் போன்றே புறக்கோலியும் அதிகளவு புற்றுநோய் எதிர்ப்பினக் கொண்டுள்ளது.  முக்கியமாக Prostate cancer (ஆண்களின் விதைப்பை மற்றும் விந்து உற்பத்தி சுரப்பிகளில் உருவாகும் புற்றுநோய்), தோல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையச் சுரப்பிகளில் உருவாகும் புற்றுநோய், ovarian cancer ஆகிய புற்றுநோய்களை எதிர்க்கும் வலிமை வாய்ந்த திறனைக் கொண்டுள்ளது.

 

2. இரத்தத்தில் அதிக சீனி சேர்வதைக் கட்டுப்படுத்தல்

 

3. கொலஸ்ரோலைக் கட்டுப்படுத்துதலும் இதன் மூலமும் 2 இல் குறிப்பிட்ட சீனியைக்

கட்டுப்படுத்துதல் மூலமும் மாரடைப்பு, ஸ்ரோக் என்பனவற்றைக் கட்டுப்படுத்துதல்.

 

4. ஏனைய பல இருதய நோய்களைக் கட்டுப்படுத்தும் பதார்த்தங்களைக் கொண்டு இருத்தல்

 

5. விழியில் ஏற்படும் நோய்களை, பார்வைக் குறைபாடுகளை தடுத்தல்

 

6. தோலை பாதுகாத்தல்- முக்கியமாக விற்றமின் D கிடைக்காத, மற்றும் அதிக சூரிய ஒளியால் சேதமாகும் தோலை பாதுகாத்தல்

 

மேலும்: http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=9#nutritionalprofile

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி.

 

Quote:"(இது இலையா மரக்கறியா என்ற ஒரு சந்தேகம் அன்றிலிருந்து இன்றுவரைக்கும் இருக்கு)"

 

இது பூக்கள்

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.