Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐந்து கட்சிகளினதும் தெரிவாகவே முதலமைச்சர் இருக்கவேண்டும்: - த.சித்தார்த்தன்

Featured Replies

ஐந்து கட்சிகளினதும் தெரிவாகவே முதலமைச்சர் இருக்கவேண்டும்: - த.சித்தார்த்தன் 
[saturday, 2013-06-01 20:05:43]
Siththarththan_150PL.jpg

ஐந்து கட்சிகளினதும் தெரிவாகவே வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் இருக்க வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவுசெய்து நிறுத்துவதன் மூலமே கூட்டமைப்பின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  

இது மக்கள் கூட்டமைப்பின் மீது முழுமையான நம்பிக்கையை வைக்க உதவுமென்றும் அவர் கூறியுள்ளார். வட மாகாணசபை தேர்தல் செப்டெம்பரில் நடைபெறப் போவதாகக் கூறப்படும் நிலையில் ஊடகங்களில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதில் இணைபவர்களுக்கே வாய்ப்பிருப்பது போல் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளில் முதலமைச்சர் வேட்பாளராக வரக் கூடியவர்கள், நீண்டகால அரசியல் அனுபவமுடையவர்கள் பலர் இருக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டுமென்றால் தகுதியான வேட்பாளரைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து தெரிவுசெய்ய வேண்டும். இதன்மூலமே கூட்டமைப்பின் ஒற்றுமையை வலுப்படுத்த முடியுமென்பதுடன், மக்களும் கூட்டமைப்பில் முழுமையான நம்பிக்கையை வைக்க உதவும் என புளொட் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.seithy.com/listAllNews.php?newsID=84072&category=TamilNews&language=tamil

யார் யாருக்கு முதலமைச்சராகும் தகுதி உள்ளது என்று வெளிப்படையாக சித்தார்த்தன் சொல்லியிருக்கலாம்.

அந்தத் தகுதி சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, சம்பந்தன், சுமந்திரன், வித்தியாதரன் போன்றவர்களுக்கு துளியும் கூட இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் போன்றவர்களை வெளியேற்றி விட்டு சித்தார்த்தனை கட்சியில் இணைத்தார்  சம்பந்தன் . கூட்டமைப்புக்கு வழி முறை சொல்லும் இவர் தான் கூட்டமைப்பில் சும்மா இருப்பதாக அறிக்கை விட்டவர்.புளட்டில் செய்த  திருவிளையாடல்களை மக்கள் முன் ஏன் இவர் சொல்ல விரும்பவில்லை?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவே கண்ணை கசக்கிற மாதிரி இருக்குது...

  • கருத்துக்கள உறவுகள்

சித்தார்தன் அவர்களே, அதுக்குமுதல் கடந்தகாலங்களில் நீங்களும் உங்கள் எடுபிடிகளும் செய்த கொலைகள், சிங்களத்துடன் சேர்ந்து செய்த சித்திரைவதைகள், தமிழ்பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், பாலியல் ரீதியிலான சித்திரவதைகள், சட்டவிரோத தடுப்பு முகாம்களை இயக்கியது, ஒட்டுமொத்தத்தில் சிங்களத்தில் கூலியாக எடுபிடியாக காட்டிக்கொடுப்பவராக செயற்பட்டத் ஏன் என்பதற்கு, ஏதாவது விளக்கம் கொடுக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஐந்து  பேரும் கதைத்து பேசி முடிவுக்கு வாறதுக்குள்ள

தமிழருக்கென்று நிலமே இருக்காது..... :(

யார் யாருக்கு முதலமைச்சராகும் தகுதி உள்ளது என்று வெளிப்படையாக சித்தார்த்தன் சொல்லியிருக்கலாம்.

அந்தத் தகுதி சித்தார்த்தன், ஆனந்தசங்கரி, சம்பந்தன், சுமந்திரன், வித்தியாதரன் போன்றவர்களுக்கு துளியும் கூட இல்லை.

 

*************

இதை சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது ?

 விமர்சனங்கள் மனிதனை அல்லது அமைப்புகளை நல்வழிப்படுத்தவேண்டும்.

இவர்கள் எவரும் தகுதியானவர்கள் இல்லையென்றால் உங்களால் ஒருவரை 

கொண்டுவரமுடியுமா ?அல்லது ஒருவரது பெயரை சொல்லமுடியுமா ?

 

 

[]நியானி: ஒரு வரி தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கூட்டமைப்பு உண்மையான கூட்டமைப்பாக இயங்க வேண்டும்

தற்போது கூட்டமைப்பிற்குள்ளேயே  பல கூட்டமைப்புக்கள் இயங்குகின்றன.

 

அந்தவகையில் இப்படியான அறிக்கைகள் வருவது இயல்பே.

 

 

கஜேந்திரன் போன்றவர்களை வெளியேற்றி விட்டு

கஜேந்திரகுமார்   வெளியேறினது , குதிரைகஜேந்திரனுக்கும் பத்மினிக்கும்

 தேர்தலில்  போட்டியிட  இடம்  வழங்கவில்லை  என்பதுதான்  உண்மை .

புலம்பெயர்  தமிழர்களின்  உசுப்பேத்தல் ,பணத்தை  நம்பி  சம்பந்தரையும்,

மாவையையும் தோற்கடிக்க  களம்  இறங்கி  கட்டுகாசை  இழந்து  

Mrs.மகேஸ்வரியை  M .P ஆக்கினது தான்  இவர்கள்  செய்த  சாதனை . 

இவர்கள்  எல்லோரும்  பிரிவினை   கேட்கமாட்டோம்  என்று   

அரசியல்   யாப்பின்கிழ் சத்தியபிரமாணம்எடுத்துத்தான்  தேர்தல்  கேட்கிறார்கள்

 

 

 

 

 

]

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட மாகாணத்தில லெக்சன் நடக்கப்போகிது …

எண்டது தான் உந்த செய்தியன்ர சாராம்சம்…

வீட்டு சின்னம் … TNA பானர் …. இருந்தா போதும்…..

மஜோரிடி தன்பாட்டுல வருது… :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஜேந்திரகுமார்   வெளியேறினது , குதிரைகஜேந்திரனுக்கும் பத்மினிக்கும்

 தேர்தலில்  போட்டியிட  இடம்  வழங்கவில்லை  என்பதுதான்  உண்மை .

புலம்பெயர்  தமிழர்களின்  உசுப்பேத்தல் ,பணத்தை  நம்பி  சம்பந்தரையும்,

மாவையையும் தோற்கடிக்க  களம்  இறங்கி  கட்டுகாசை  இழந்து  

Mrs.மகேஸ்வரியை  M .P ஆக்கினது தான்  இவர்கள்  செய்த  சாதனை . 

இவர்கள்  எல்லோரும்  பிரிவினை   கேட்கமாட்டோம்  என்று   

அரசியல்   யாப்பின்கிழ் சத்தியபிரமாணம்எடுத்துத்தான்  தேர்தல்  கேட்கிறார்கள்

 

 

 

 

 

]

 

 

 

 

நீங்கள் பழைய ஆள் போல இருக்கிறீர்கள். என்றாலும் உங்கட தரவுகளை சரி பார்த்து கதையுங்கோ.

ஒன்று மகேஸ்வரனின் மனைவி MP வந்தது பற்றி. அதற்கு முதல் அவருடைய கணவன், மகேஸ்வரன் MP ஆக இருந்தவர் 

தெரியும் என்று நினைக்கிறன்

 

.அவருக்குரிய வாக்கு வங்கி எப்பவும் இருக்கு. அதற்கு மேல் அவரால், பெரிய கட்சி ஒன்றை சார்ந்து இருந்த படியால் இலகுவாக பிரச்சாரமும் செய்யகூடியதாக இருந்தது.அதனால் அவர் வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. எல்லோரும் ஒன்றாக போட்டி இட்ட நேரத்தில்தான் மகேஸ்வரன் வெற்றி பெற்றவர். இவர்கள் பிரிந்து போட்டி இட்டதால்தான் அவர் தெரிவு செய்யப்பட்டார் என்று சொல்ல வேண்டாம்.

 

மற்றது (குதிரை) கஜேந்திரன், பத்மினி; அவர்கள் 2001/2/3 இல் இருந்து அதிகம் செய்தவர்கள், முதலாவது பொங்குதமிழ், நான் நினைக்றேன் அனோல்ட் இருந்த காலத்தில் நடந்தது, அதற்கு பிறகு பெரிய எழுச்சியாக நடந்தது கஜேந்திரன் காலத்தில்தான். அவருக்கு நிறைய தலைமைத்துவ பண்புகள் இருந்தது. அந்த நேரத்தில் அப்படி ஒன்றையே நினைத்து பார்க்க முடியாது. அவரால்/அவரோடு சேர்ந்தவர்களால் அதை செய்ய முடிந்தது. அது எல்லாம் முடிந்த பிறகு தான் நீங்கள் சொல்லுகிற ஆட்கள் திரைக்கு வரத்தொடன்கினவர்கள்.

சிதம்பரநாதன், பத்மினி ஆக்கள் நிறைய செய்தவர்கள் ..மற்றைய  கூட்டமைப்பு MP கள் சமகாலத்தில் செய்ததை விட.உதாரணதிற்கு  மாவை 10/15 வருடத்திர்ற்கு முன்பு என்ன செய்தவர் என்று எனக்கு தெரியாது, ஆனால் அந்த நேரத்தில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அதே போலத்தான் மற்ற மற்ற கூட்டமைப்பு தலைவர்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த இனத்தையே கருவறுத்த.. இந்தக் கிராதர்களை எல்லாம் த.தே.கூ க்குள் இழுத்த சம்பந்தனைச் சொல்லனும்..! :icon_idea:

நீங்கள் பழைய ஆள் போல இருக்கிறீர்கள். என்றாலும் உங்கட தரவுகளை சரி பார்த்து கதையுங்கோ.

ஒன்று மகேஸ்வரனின் மனைவி MP வந்தது பற்றி. அதற்கு முதல் அவருடைய கணவன், மகேஸ்வரன் MP ஆக இருந்தவர் 

தெரியும் என்று நினைக்கிறன்

 

.அவருக்குரிய வாக்கு வங்கி எப்பவும் இருக்கு. அதற்கு மேல் அவரால், பெரிய கட்சி ஒன்றை சார்ந்து இருந்த படியால் இலகுவாக பிரச்சாரமும் செய்யகூடியதாக இருந்தது.அதனால் அவர் வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. எல்லோரும் ஒன்றாக போட்டி இட்ட நேரத்தில்தான் மகேஸ்வரன் வெற்றி பெற்றவர். இவர்கள் பிரிந்து போட்டி இட்டதால்தான் அவர் தெரிவு செய்யப்பட்டார் என்று சொல்ல வேண்டாம்.

 

மற்றது (குதிரை) கஜேந்திரன், பத்மினி; அவர்கள் 2001/2/3 இல் இருந்து அதிகம் செய்தவர்கள், முதலாவது பொங்குதமிழ், நான் நினைக்றேன் அனோல்ட் இருந்த காலத்தில் நடந்தது, அதற்கு பிறகு பெரிய எழுச்சியாக நடந்தது கஜேந்திரன் காலத்தில்தான். அவருக்கு நிறைய தலைமைத்துவ பண்புகள் இருந்தது. அந்த நேரத்தில் அப்படி ஒன்றையே நினைத்து பார்க்க முடியாது. அவரால்/அவரோடு சேர்ந்தவர்களால் அதை செய்ய முடிந்தது. அது எல்லாம் முடிந்த பிறகு தான் நீங்கள் சொல்லுகிற ஆட்கள் திரைக்கு வரத்தொடன்கினவர்கள்.

சிதம்பரநாதன், பத்மினி ஆக்கள் நிறைய செய்தவர்கள் ..மற்றைய  கூட்டமைப்பு MP கள் சமகாலத்தில் செய்ததை விட.உதாரணதிற்கு  மாவை 10/15 வருடத்திர்ற்கு முன்பு என்ன செய்தவர் என்று எனக்கு தெரியாது, ஆனால் அந்த நேரத்தில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அதே போலத்தான் மற்ற மற்ற கூட்டமைப்பு தலைவர்களும்.

மகேஸ்வரன் UNP யில் கேட்டு 2002இல் யாழ் இல் MP அக தெரிவு செய்யபட்டவர் .

2004இல் யாழில் இவரை புலிகள் கேட்கவிடாததால் கொழும்பில் கேட்டு MP ஆக 

வந்தவர் .2010இல் UNP யாழில் கேட்டு 12624வாக்குகள் பெற்று Mrs .மகேஸ்வரன் MP ஆக 

தெரிவு செய்யபட்டவர் .இவர்களுக்கு வியாபாரிகள் சமூகம் (காரைநகர் )பின்னால் நின்றனர் .

 http://www.slelections.gov.lk/

 

 

2004இல் நடந்த தேர்தலில் குதிரை கஜேந்திரன் ஓரு லட்சம் விருப்பு வாக்கு எடுத்ததாகவும் 

அதனால் இவருக்கு கட்டாயம் TNA இல் போட்டியிட இடம் கொடுக்கவேண்டும் என 

வெளிநாட்டில் உள்ள நெடியவன் குழு சம்பந்தர் ஐயாவிற்கு அழுத்தம் கொடுத்தனர் .கனடாவில் உள்ள இந்தகுழு ,இங்குள்ள TNA சார்ந்தவர்களுக்கு ஊடாகவும் கேட்டனர் .

இதேநேரம் யாழ் பல்கலைக்கழக சமுகம் (மாணவர்கள் ,ஆசிரியர்கள் )குதிரை கஜேந்திரனுக்கு போட்டி யிட ,இடம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டார்கள் .இதனால் 

வெளிநாட்டில் உள்ள நெடியவன் குழுவினரது பணபலம் ,ஊடகபலம் என்பவற்றோடு 

தேர்தலில் குதித்து யாழில் 6362வாக்குகளும் ,திருமலையில் 1182வாக்குகளையும் பெற்று 

கட்டுகாசை இழந்தனர் .

 

இவர்கள் மக்களுக்கு சேவை செய்திருந்தால் ,மக்கள் ஏன் இவர்களை நிராகரித்தார்கள் ?

 

சம்பந்தர் ஐயா வை பொருத்தவரை சில ஆதங்கங்கள் உள்ளது .அவற்றை தற்போது வெறுப்பாக காட்டாமல் ,உள்ளிருந்து விமர்சனக்களை முன்வைத்து நல்லவைகளை 

செய்ய முயல்கின்றோம் .இதனால் திருமலையில் ,2012இல் நடந்த மாகாண சபை 

தேர்தலில் தகுதியான ஒருவரை கொண்டுவந்ததில் முன்னின்று செயற்பட்டு ,வெளிநாட்டில் 

இருந்தாலும் எங்களால் சாதிக்கமுடியும் என்று நிரூபித்துள்ளோம் .

 விகிதாசார தேர்தலை பொருத்தவரை ஓரு வாக்குகூட முக்கியம் .அதனால் தான் 

மகிந்த பல குழுக்களை போட்டியிட வைத்தவர்கள் .

 

இன்னும் மேலதிக விபரம் தேவைப்பட்டால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்

தரமுடியும் .

  • தொடங்கியவர்

சொந்த இனத்தையே கருவறுத்த.. இந்தக் கிராதர்களை எல்லாம் த.தே.கூ க்குள் இழுத்த சம்பந்தனைச் சொல்லனும்..! :icon_idea:

சம்பந்தர் பல இக்கட்டுக்களுடன் அரசியல் செய்கிறார். அவருக்கு பிறகு பலரும் ஏற்றுக்கொள்ள கூடிய தலைமை ஒன்று இல்லாதது நமக்கு மட்டும் அல்ல அவரையும் குழ்ப்புவதாகத்தான் இருக்கு.

 

2009 ல் போர் முடிய சம்பந்தர் வெளிப்படையாக இந்திய காங்கிரசிடம் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டவர். காங்கிரசோடு ஒத்துழைததற்கு தமிழ் நாட்டு மக்கள் கருணாநிதிக்கு என்ன பாடம் படிப்பித்தார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால் சம்பந்தரின் தலைமையின் கீழ் 2011 ல் கூட்டமைப்பு அதீத வெற்றி கண்டது. மக்கள் பலவற்றை விளங்கிக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். உண்மையான ஜனநாயகம் இலங்கையில் இருந்திருந்தால் தங்களை அழித்த இந்தியாவிடம் சம்பந்தர் தஞ்சம் கேட்டதற்கு ஈழத்தமிழ் மக்கள் அந்த தேர்தலில் சம்பந்தரின் கூட்டமைப்புக்கு பாடை கட்டி அனுப்பிவைத்திருபார்கள். ஆனால அவர்களை நிலைமைகளை விளங்கிக் கொள்ளத்தான் விரும்புகிறார்கள். தூய தூய்மையான அரசியல் நடத்தைகளிலும் பார்க்க பாதுகாப்பான அரசியலை விரும்புகிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.