Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்காக்கும் மறவர்களுக்காய் -----------

Featured Replies

மண்காக்கும் மறவர்களுக்காய் -----------

மண்ணுக்காய் தங்கள் எதிர்காலக் கனவுகளை, குடும்பத்தை சுற்றத்தை விட்டுப் பிரிந்து புனிதப் பணியிலே வித்தாகிவிட்ட சகோதரர்களுக்கு என் தலைசாய்த்த வணக்கங்கள்.

இந்த நேரத்தில் தாம் பெற்ற செல்வங்களை களத்திற்குத் தந்து விட்டு சிரமங்களை அனுபவிக்கும் பெற்றோர்இ சகோதரர்களுக்காய் நாம் எதாவது ஆக்கபுூர்வமான வழியில் உதவுவோமா?

லண்டனிலே சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற குழந்தைகளைத் தத்தெடுத்து அந்தக் குழந்தைகளுக்காக மாதாந்தம் 15 பவுண்களை வழங்குகின்ற திட்டம் ஒன்று நடைமுறையில் இருந்து வருகிறது.

அதுபோல மாவீரர் குடும்பங்களைப் பொறுப்பெடுத்து புலத்தில் வாழ்பவர்கள் உதவிசெய்தால் என்ன?

இதுபோன்ற ஒரு ஆக்கபுூர்வமான பணியை ஏன் யாழ் களம் தொடங்கக்கூடாது.

இதுதொடர்பாய் மேலும் பலவிடயங்கள் மனதில் இருக்கிறது.

உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் மேலதிக விடயங்களைப் பேசிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

அன்புடன்

மணிவாசகன்.

மணி அண்ணா நல்ல முயற்சிதான்

வெறும் முயற்சி அளவில் நிற்காமல் செயல்வடிவம் கொடுப்பதில்தான் இதன் வெற்றி தங்கியுள்ளது

எனக்கு இந்த முயற்சியில் பங்குபற்றுவதில் சம்மதம்

  • தொடங்கியவர்

நன்றி நித்திலா,

ஏனைய உறவுகளின் கருத்துக்களுக்காய் காத்திருக்கிறேன்.

அன்புடன்

மணிவாசகன்.

நல்ல முயற்ச்சி மணிவாசகன்...!

ஆனால் பணம் பரிமாற்ற விடயம்.. மிக கவனமாக கையாளப்படவேண்டியதுமாகும்..! இதனால் தேவை அற்ற பிரச்சினைகள் வரும் என்பதாலேயே உரியவர்களை தேடி பணம் கொடுப்பவர்கள் ஏராளம்..!

இங்கு பல நாதாரிகள் இருக்கிறார்கள் வேண்டாத புரளியை கிளப்ப மக்கள் மத்தியிலும் வேண்டாத சந்தேகங்களை விதைத்து விடுகிறார்கள்...

உரியவர்களை கொண்டு ஏற்பாடு செய்வது நலம்...!

எனது ஆதரவும் உண்டு,தல சொன்னதைக் கவனத்தில் எடுக்கவும், குழப்புவதெற்கென்றே இருப்பவர்கள் கவனம்.

ஒண்டும் செய்ய மாட்டாங்கள் செய்யிறவங்களைப் பற்றி விமரிசனம் எழுதுவாங்கள் கவனம்.

  • தொடங்கியவர்

வணக்கம் தல, நாரதர்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி,

நிச்சயமாய் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நானும் ஏற்கனவே சிந்தித்தேன்.

பலருடைய கருத்துக்களையும் அறிந்த பின்னர் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய வழிவகைகள் பற்றிப் பேசலாம் என்று நினைத்தேன்.

என்னுடைய எண்ணம் இதுபோன்ற உதவிதேவையான குடும்பங்களைக் கண்டறிந்து ஒவ்வொருவருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொடுப்பதே. அவர்களே தத்தமது குடும்பங்களுக்கான உதவிகளை மாதாமாதம் நேரடியாகச் செய்து கொள்ளலாம். மேற்படி குடுமபங்கள் பற்றிய விபரங்களையும் மற்றும் பொறுப்பெடுத்தவாகளின் விபரங்களையும் ஒரு குழு ஆவணப்படுத்தலாம் என்பது தான் எனது எண்ணம். இது பணம் தொடர்பான சிக்கல்களையும் தவிர்க்கும்.

இதுபோன்ற கருத்துக்கள் நிச்சயமாய் பின்னர் எற்படக்கூடிய சிக்கல்களைத் தவிhக்கம் என்பதால் உங்கள் கருத்தக்களையும் ஆலோசனைகளையும் அறிவதில் ஆர்வமாய் இருக்கிறேன்.

மீண்டும் நாரதருக்கும் தலக்கும் நன்றிகள்.

அன்புடன்

மணிவாசகன்

என்னுடைய ஆதரவு கட்டாயம் உண்டு...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு விடயத்தை மணிவாசகன் வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். ஆனால் இது நீங்கள் நினைப்பதுபோல சுலபமான விடயமல்ல. மாவீரர்கள் குடும்பத்தில் மிகவும் வறுமையான நிலையிலுள்ளவர்களை கண்டுபிடிக்கவேண்டும். அது இப்போதுள்ள சூழ்நிலையில் சுலபமான காரியமல்ல. அதைவிட நாம் நாட்டிலுள்ள புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்கள் மூலம் கொடுப்பதுதான் சுலபமானது. மாதாந்தம் ஒரு தொகைபணத்தை சேகரித்து அனுப்பிக்கொண்டிருக்கலாம். இது என்னுடைய அபிப்பிராயம். உங்கள் கருத்துக்களை ஒட்டியம் வெட்டியும் வையுங்கள்

நல்லதொரு முயற்சி மணிவாசன் அண்ணா..

அதேவேளை தல, நாரதர்,வியாசன் அண்ணா சொல்வதையும்

கவனத்தில் எடுங்கள்.

நல்லதொரு முயற்சி.

எனது ஆதரவும் நிச்சயம் உண்டு.

அங்கிள் நல்ல முயற்சி வியாசன் அண்ணா சொல்லுறதே நல்லம் போல இருக்கு தல சொன்னதையும் கவனத்தில எடுங்கோ. எனது ஆதரவும் உண்டு,

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன்!

மாவீரர் குடும்பங்களுக்காக பல சலுகைகளை தமிழீழ அரசு முன்னெடுத்து

அதனை நடைமுறைக்குக் கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆதலால் நாம் தனியாகச் செயலில் இறங்குவதைக் காட்டிலும்

தமிழீழ அரசுடன் இணைந்து அவர்களின் ஆலோசனையுடன்

எத்தகைய முறையில் மாவீரர் குடும்பங்களுக்கு

எங்கள் பங்களிப்பைச் செய்வது என்பதை ஆய்ந்து அத்தகைய வழியில்

ஆவன செய்யலாம். தனிப்பட்டமுறையில் செய்ய ஆரம்பிக்கும்போது

தவறுகளும் இடம்பெறும் சாத்தியம் அதிகம்.

அத்தோடு எங்களின் தமிழீழ அரசை எப்போதும் முதன்மைப்படுத்தி

எங்கள் செயற்பாடுகள் நடைமுறைக்கு வந்தால் அது பல நன்மைகளை

வழங்கும் என நினைக்கிறேன். இது என்னுடைய கருத்து....

மற்றப்படி தாயகத்திற்கு உதவுவதற்கு நிச்சயமாக ஆதரவு தருவோம்

இப்படிக்கு

வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

சாகரா சொல்வது போல, மாவீரர், போராளிகளின் குடும்பத்திற்கு உதவவுதற்கு செயற்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அந்தக் கட்டமைப்பு ஊடாகவே உதவிகளை வழங்குவோமாக இருப்பின், அது ஒழுங்காகவும், தேவையானவர்களுக்கும் சென்றடையும்.

இதை இங்கு கதைப்பதால் சில, பிரச்சனைகள் எழ வாய்ப்புண்டு. எனவே அவதானமாகச் செயற்படவும்!

நல்லதொரு முயற்சி.

எனது ஆதரவும் நிச்சயம் உண்டு.

சகாரா கூறுவது போல் அங்கு ஓர் செயல்திட்டம் நடைமுறையில் உள்ளது, எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஒருவர் மாவீரர் இன்னொருவர் போராளி இன்னும் ஒருவர் வெளிநாட்டில். ஆனால் வெளிநாட்டில் உள்ளவர் பெற்றோரை கவனிப்பதே கிடையாது. இப்போது பெற்றோர் வன்னியில் மாவீரர் குடும்பநல காப்பகத்தால் பராமரிக்கப்படுகிறார்கள்.

ஆகவே அவர்களுடன் செர்ந்து செயல்படுவதே சிறந்தது என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி எனது ஆதரவும் உண்டு,ஆனால் தமிழீழ அரசுடன் சேர்ந்து செய்வது தான் சால சிறந்தது.....

  • தொடங்கியவர்

ஆக்கபுூர்வமான பல கருத்துக்களையும் ஆதரவினையும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

உங்களுடைய ஆதரவினையும் கருத்துக்களையும் பெற்றுக் கொண்ட பின் என்னுடைய எண்ணங்களைத் தெரிவிக்கலாம் என்றிருந்தேன்.

மாவீரர்களின் குடுமபத்தினருக்காக பல செயல்திட்டங்களை மாவீரர் பணிமனையுூடாக நடைமுறைப்படுத்தப்படுவதை நான் அறிவேன். ஆனால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இத்திட்டத்திற்கான பொருளாதாரம் மட்டுப்பட்டதாய் இருக்கும் என்பது எனது கணிப்பு. அதனால் புலம் பெயர் வாழ் எங்களினால் இதுதொடாபான ஒரு திட்டத்தைப் பற்றி மாவீரர் பணிமனையுடன் தொடர்பு கொண்டு அமுல்படுத்தினால் என்ன என்று நான் யோசித்தேன். அப்பொழுது என் மனதில் உதித்தது தான் இந்தக் குடும்பங்களைப் பொறுப்பெடுக்கும் எண்ணமாகும். ஆனால் உங்களுடைய கருத்துக்களும் மற்றும் பலரூடாக நான் பெற்ற கருத்துக்களும் இதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர்த்துகின்றன.

எனவே இது தொடர்பாய் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு கருத்துக்களை அறிந்தபின் மீண்டும் தொடர்புகொள்கிறேன்.

இது தொடர்பான தொடர்ந்து உங்கள் கருத்தக்களையும் விபரங்களையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

மணிவாசகன்.

நல்லதொரு முயற்சி.

எனது ஆதரவும் நிச்சயம் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.