Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெலுங்கானா பிரிவு ஆபத்தான முன் உதாரணம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

அண்ணை உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை .

நெடுக்கர் நக்கீரன் செய்திகள் வெட்டி ஓட்டுவார் அதற்குள் நில்லுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை .

நெடுக்கர் நக்கீரன் செய்திகள் வெட்டி ஓட்டுவார் அதற்குள் நில்லுங்கள் .

 

 

இந்தியாவைப்பற்றிக்கதைத்தால்

இவருக்கு   ஏன்  இவ்வளவு கொதி  வருகுது

யாருக்காவது தெரிந்தால்   சொல்லுங்கப்பா.......... :lol:

எதை பற்றியும் தெரியாமல் தெரிந்த மாதிரி  கதைத்தால் அல்லது பிழையாக கதைத்தால் கோவம் வரத்தான் செய்யும் .

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு யாழ்ப்பாணத்தில் தெழுங்கு பேசுபவர்கள் இந்தியாவில் இருந்து வந்து குடியேறியிருந்தார்கள். பிற்காலங்களில் இவர்களின் சந்ததிகள் தெழுங்கினை மறந்து தமிழர்களாக மாறிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தெலங்கானா உருவாக்கம் குளறுபடியில்தான் முடியும் --ராம்

 

120307165244_n_ram_hindu_304x171_nram_no

சிறிய மாநிலங்கள் உருவாக்கம் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யாது --ராம்

சிறிய மாநிலங்களை உருவாக்குவதன் மூலம் அப்பகுதிகளின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்ய முடியும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று கூறுகிறார் இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான என்.ராம்.

சிறிய மாநிலங்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதை குறிப்பிட்ட ஒரு உதாரணத்தை வைத்தே முடிவு செய்ய முடியும் அதை ஒரு பொதுப்படையான வாதமாக வைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

 

ஆந்திரப் பிரதேசத்தை இரு மாநிலமாக உடைத்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது ஒரு சந்தர்ப்பவாத முடிவு, காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அம்மாநிலத்தில் சரிந்து வருவதாக சமீபத்திய இடைத்தேர்தல் முடிவுகள் காட்டின. எனவே இதைத் தடுத்து நிறுத்த காங்கிரஸ் எடுத்துள்ள நடவடிக்கையே தெலங்கானா என்றார் ராம். ஆனால் இது ஒரு குளறுபடியில்தான் முடியும் என்றார் அவர்.

ஆனால் பல தசாப்தங்களாக தெலங்கானா உருவாக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராடி வருவது குறித்து கேட்டபோது, அந்தப் போராட்டம் ஒரு பிரதேச வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. உண்மையில் தெலங்கானா பிரதேசம் பொருளாதார ரீதியாக பின் தங்கியிருக்கவில்லை. இதை ஸ்ரீகிருஷ்ணா கமிஷனே கூட ஒப்புக்கொண்டது என்றார் ராம்.

ராம் பேட்டி
 

 

 

இது போல சிறிய மாநிலங்களை உருவாக்குவதை எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா ஒரு கொள்கையாகவே கொண்டிருக்கிறதே என்று கேட்டபோது, அது தவறான கொள்கை , சித்தாந்த ரீதியில் அந்தக் கட்சி இதை ஒரு பொதுவான நிலைப்பாடாகக் கொள்வது தவறு என்றார். இது தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என்ற இடது சாரிக்கட்சிகளின் கருத்தை அவர் ஆதரித்தார்.

தமிழகத்தில் இது போன்ற கோரிக்கைகள் சில குழுக்களால் எழுப்பப்பட்டு வருவது குறித்து கேட்டபோது, தமிழ்நாட்டில் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு இருக்காது. தமிழ்நாடு ஓரளவுக்கு முற்போக்கு சிந்தனையுள்ள மாநிலம், பொருளாதர வளர்ச்சி பெற்ற மாநிலமும் கூட, எனவே இதை உடைப்பதற்கான காரணிகள் ஏதும் இல்லை என்றார் ராம்.

http://www.bbc.co.uk/tamil/india/2013/08/130801_ramonsmallstates.shtml

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மேற்க்குத் தமிழ் நாட்டில் தீவிர நடுத்தர சாதிக் கட்சிகள் சில குரல் எழுப்பலாம். ஆனால் அத்தகைய குரல்கள் எடுபடும் வாய்ப்பு இல்லை.  

 

ஒருவகையில் பெரியார் வழி  இடஒதுக்கீடும் பரவலான கல்வி வளற்சியும் இவற்றுடன் பல்வேறு இலவசங்களும் வாய்ப்புகளையும் வளங்களையும் பரவலான மீழ் பங்கீடுக்கு ( re distribution of wealth ) வழி வகுத்ததும் தமிழ் இனத்துவ வளற்ச்சியை பலமாக்கியுள்ளது.

 

இத்தகைய பலப்படிதல் தெலுங்கு இன வளற்ச்சி பொறுத்து தெலுங்கானா பகுதியில் இடம் பெறவில்லை. இது மேலதிக ஆய்வுக்குரியது.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடப்பிடாது!

நீண்ட கால பொருளாதார நலன்கள் இந்தியாவில் இருக்கும் யாரையும் பிரிந்து போக அனுமதிக்க மாட்டாது...   ஒருவேளை இந்தியா பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கினால் அண்றி.... !   

 

ஈழத்தமிழருக்கு ஆதரவு சக்திகள் தேவை எண்று ஆசைப்பட்டால் ஒண்று மட்டுமே செய்யப்பட வேண்டும்...    அது அபிவிருத்தி... 

 

யதார்த்தபூர்வமான பதில்!

தெலுங்கானாவின் பிரிவு ஒரே மொழி பேசும் மக்களுக்கு இழப்பு. ஆனால் மத்திய அரசுக்கு மேய்க்க வசதி 

தமிழ்நாட்டில்ருந்து(சென்னை மாகாணத்திலிருந்து) ஆந்திராவோடு சேர்த்த பகுதிகளில் பெரும்பான்மை தெலுங்கர்கள் தான்....
கன்னியாகுமாரி மாவட்டத்தில் தமிழர்கள் அதிகமாக இருந்தபடியால் தமிழ்நாட்டோடு சேர்த்த மாதிரி....

தமிழ்நாட்டில்ருந்து(சென்னை மாகாணத்திலிருந்து) ஆந்திராவோடு சேர்த்த பகுதிகளில் பெரும்பான்மை தெலுங்கர்கள் தான்....

கன்னியாகுமாரி மாவட்டத்தில் தமிழர்கள் அதிகமாக இருந்தபடியால் தமிழ்நாட்டோடு சேர்த்த மாதிரி....

 

ராயசீமா வில் இருக்கும் சித்தூர் திருப்பதி ( திருவேங்கடம்  ) பாரம்பரியமாக  தமிழர் வாழ்ந்த வாழும் பகுதிகள்...  வந்தேறிய குடிகளான தெலுங்கர்கள்...  சென்னை வரை குடியேறி  சென்னையை ஆந்திராவுடன் சேர்க்க போராடினர்...  ஆனால்  சித்தூர்  ஆந்திராவுடன் சேர்க்கப்பட்டது... 

இந்திய குடியரசு மொழிவாரி அமைப்பு கொண்டது என்பது உண்மையில் ஒரு பேச்சு வழக்குக்கு மட்டுமே. அதாவது ஒரு பம்மாத்து. அதை உண்மையான அரசியல் விவாதங்களில் வைக்க முடியாது. அதில் பல சிக்கல்கள் இருக்கிறது. மொழிவாரியாகில் அது இந்திய மொழிகளுக்கு பாதுகாப்பு அளித்து, பாவனைக்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் ஆனால் அது இந்தியாவில் நடை பெறவில்லை. மொழிகளின் பாதுகாப்பு மொழிவெறி மாநிலங்களில் இருப்பதால் மொழி அழிவுகளுக்கு மத்தியோ மாநிலங்களோ பொறுப்பு எடுக்காமல் தப்புகின்றன. 

 

இந்திய பழங்குடியின மொழிகள் அழிந்துவருகின்றன: புதிய ஆய்வு
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 ஆகஸ்ட், 2013 - 16:29 ஜிஎம்டி
130809162149_india_tribe_adivasi_adhivas

இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருநூறுக்கும் அதிகமான மொழிகள் அழிந்துவிட்டதாக மொழியியல் ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்திய நாடு தழுவிய மொழிகள் கணக்கெடுப்பு காட்டுகிறது.

தற்போது சுமார் 800 மொழிகள் பேசப்படுவதாக இந்த ஆய்வு காட்டுகிறது.

பழங்குடியின மொழிகள் அழிவதன் காரணங்கள்

இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்திலிருந்து இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் வி.ஞானசுந்தரம்

 

 

நாடெங்கிலும் இருந்து 85 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்போடு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நிபுணர்கள் சேர்ந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றி இந்தியாவின் மொழிகள் பற்றிய இந்த சுற்றாய்வை மேற்கொண்டிருந்தனர்.

மொழிகள் வழங்கும் இடம், அவற்றின் சரித்திரம், தோற்றம், இலக்கணம், இலக்கியம், பண்பாடு, கலைவடிவம் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த சுற்றாய்வில் ஆராயப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைக்காதது, சமூகங்களின் இடம்பெயர்வு, சமூக பொருளாதார காரணங்களுக்காக பெரும்பான்மையானோரின் மொழியைப் பேச ஆரம்பிப்பது போன்றவை பழங்குடியின மக்களின் மொழிகள் அழிந்துபோக முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/08/130809_indianlanguages.shtml

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.