Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் புலிகள் தாக்குதல்

Featured Replies

வான் புலிகள் தாக்குதல் நடத்துவதாக சங்கதி இணையம் தெரிவித்துள்ளது.

http://sankathi.com/content/view/4269/26/

  • Replies 53
  • Views 12.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ வான்படைக்குச் சொந்தமான தாக்குதல் வானூர்தி ஒன்று இன்று இரவு 9.30 மணியளவில் பலாலி ஆக்கிரமிப்பு இராணுவத்தின் படைத் தளத்தின் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை வட தமிழீழத்தில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கையில், மக்கள் குடியிருப்புக்கள் மீதும ஆக்கிரமிப்பு இராணுவம் தாக்குதலை நடாத்தி வந்தது. இத்தாக்குதலையடுத்து ஆக்கிரமிப்ப படைகளின் தென்மராட்சி மீதான ஆகோர எறிகணை வீச்சு தணிந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"எமது மக்களையும் தாயகத்தையும் பாதுகாக்க எமது கடற்படை, தரைப்படை வான்படை வீரர்கள் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர்"

என தமிழீழ இராணுவ பேச்சாளர் பேச்சாளர் திரு. இராசையா இளந்திரையன் இத் தாக்குதல் குறித்து தமிழ்நெட் இணையம் கேட்டபோது குறிப்பிட்டுள்ளார

இத் தாக்குதலின் போது ஆக்கிரமிப்பு படைகளுக்கு பாரிய உயிர்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அது பற்றி மேலதி விபரங்கள் கிடைக்கபெறவில்லை என்றும் யாழ் நகரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்பக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு ஆனால் இது உண்மையாகும் பட்சத்தில் விடுதலைப்போராட்டத்தில் ஒரு புதிய அத்தியாயம் துவங்கப்பட்டுள்ளது என்று கூறலாம்.

யாழின்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா நல்ல செய்தி. பார்ததவுடன் யாழில் இணைப்போம் என்று நினைத்தேன். அதற்கு முன்னமே இணைத்து விட்டீர்கள். :lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா.....

வாஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ

வாழிய தமிழர்படை !!!

வெல்க தமிழீழம்.

பலாலி படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல்

[வெள்ளிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2006, 22:05 ஈழம்] [ம.சேரமான்]

யாழ். பலாலி சிறிலங்கா படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று விமானத் தாக்குதலை நடத்தினர்.

பலாலி படைத்தளம் மீது இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் விடுதலைப் புலிகள் தங்களது விமானம் மூலம் ரொக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் ஒரு விமானம் ஈடுபடுத்தப்பட்டதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விமானத் தாக்குதலைத் தொடர்ந்து பலாலி இராணுவத் தளத்திலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தி வந்த எறிகணைத் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.

"எமது தாயகத்தையும் மக்களையும் பாதுகாக்க எமது முப்படையினரையும் நாம் பயன்படுத்துவோம்" என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ. இளந்திரையன் அறிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னரங்க நிலைகளையொட்டிய இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் உள்ள பொதுமக்கள் இடம்பெயர்ந்து செல்லுமாறு விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரல் வேண்டுகோள் விடுத்து வருகிறது.

எழுதுமட்டுவாள், புலோப்பளை, கிளாலி, கொடிகாமம், கச்சாய், வரணி ஆகிய இடங்களில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் 1 கிலோ மீற்றர் தூரம் இடம்பெயர்ந்து செல்லுமாறு வேண்டுகோள் புலிகளின் குரல் வானொலியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஏ-9 வீதியை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவம் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனிடையே யாழில் இரவு 7 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யாழ். சிறிலங்கா காவல்துறை அதிகாரி எரிக் பெரேரா அறிவித்துள்ளார்.

http://www.eelampage.com/?cn=28135

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

"இலங்கை இராணுவம் அங்கு தாக்குகிறது! இலங்கையின் விமானங்கள் இங்கு தாக்குகின்றன!! ..... மட்டக்களப்பில் இராணுவம் தாக்குதல்!!! ...... யாழிலிருந்து இராணுவம் தாக்குதல்!!!" - புலிகள் அறிக்கை

இதன் பின்புலத்தை எம்மவர்கள் புரிந்தால் சரி!!!!!!!

அரோகரா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக வரலாற்றில் முதல் முதலாக, ஒரு விடுதலை அமைப்பால் இப்படியான தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கிறது

பிபிசி இல வந்திட்டுதோ.. இல்லாட்டி நாரதர், தல, தூயவன்

ஒருத்தரும் நம்பமாட்டினம் :roll: :roll: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் புதிய அத்தியாயம்.. சிங்களப் படைகளுக்கு யாழில் பாடை கட்ட ஆரம்பித்தாயிற்று..

பிபிசி இல வந்திட்டுதோ.. இல்லாட்டி நாரதர், தல, தூயவன்

ஒருத்தரும் நம்பமாட்டினம்  :roll:  :roll: :wink:

உண்மைதான் நான் இன்னும் இதை நம்ப இல்லை.... மேற்கு நாடுகளில பயிருக்கு பூச்சி மருந்து அடிக்கைற பிளேனால ஆமிக்கு அடிச்சவை எண்டால் நம்புற மாதிரி இல்லை.....! :wink: பிபிசி யும் ரொய்ரரும் செய்தி வெளியிட வேணும்...! தமிழ்நெற் சும்மா சொல்லுகுது...!

ஓய்.... உந்த "கூகுள் ஏத்தை" நம்பாதேங்கப்பா..... ! 1வருசத்துக்கு முதல் வேற மாதிரி இருந்த கட்டிடங்களை எல்லாம் பழய மாதிரியே காட்டுது...! புதுகட்டிடம் வந்து கனகாலம் அந்த நிறம் கூட வருகுது இல்லை...!

உலக வரலாற்றில் ஒரு விடுதலை அமைப்பால் முதல் வான் தாக்குதல்.....வெல்க தமிழீழம்....வாழிய புலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வானில் புலிகள் சாதனை நீளும்

வையம் எங்கும் அதனைப் பேசும்.

மான மறவர்கை வாகை ஏந்தும்.

மகிழ்ச்சிக் கடலில் தாய்மண் குளிக்கும்.

நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்.

நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்

:lol::lol::lol::lol::lol: 8) 8) 8)

தமிழினத்தின் ஒரே வான்படையான வான் புலிகளின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்..! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி பாதுகாப்பாக இருப்பதாக லங்கா அகடெமியில் உள்ளதே. பிபிசியில் வருமட்டும் உண்மையென்று ஏற்றுக்கொள்ளமுடியாதுதான்.. :arrow:

பலாலி படைத் தளம் மீது தாக்குதல்: இரு சிறிலங்கா இராணுவ உலுங்குவானூர்திகள் சேதம்

[சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 00:27 ஈழம்] [ம.சேரமான்]

பலாலி படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட வானூர்தி தாக்குதலில் சிறிலங்கா வான்படை உலங்குவார்திகள் (ஹெலிகாப்டர்கள்) இரண்டு சேதம் அடைந்ததாக சிறிலங்கா வான்படை தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா வான்படையின்

எம்.24 பீரங்கி உலங்குவானூர்தி,

வெல் 2 1 2 படைக்காவி உலங்குவானூர்தி

ஆகியன சேதமடைந்துள்ளதாக சிறிலங்கா வான் படை தகவல் வெளியிட்டுள்ளது

http://www.eelampage.com/?cn=28136

வான் படையே சொல்லுது அப்ப உண்மயா இருக்குமோ? எதுக்கும் ரம்புக்கல வந்து சொன்னாத் தான் நான் நம்புவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.