Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரில்லா வாழ்வே !!

Featured Replies

இது சித்திரக் கவிகளில் நான்கரைச் சக்கரம் வகையைச் சேர்ந்தது. எனது முதல் முயற்சி...

 

mine.png

 

வேதியன் மகவே வேய்தோள் உருவே
வேல்விழி கனிவே வேரிப்பூ நறவே
வேட்டம் புகவே வேகுதடி நினைவே
வேரில்லா வாழ்வே வேண்டும் விடிவே



வேதியன் - வேதம் ஓதுபவன்;
மகவே - மகளே; வேய்தோள் - மூங்கில் தோள்;
வேரிப்பூ - மதுரை மகளிர் கற்காலத்தில் சூடும் ஒரு மலர்
நறவே - நறு மணம்;
வேட்டம் - வேட்கை;

 

விளக்கம் :

வேதியன் மகளே!! மூங்கில்போல் தோள் கொண்டவளே!! 

வேல் விழிகளில் கனிவைக் கொண்டவளே!! வேரிப்பூ நறுமணம் கொண்டவளே !! 

உன்னை நினைக்கவே என் மனதில் காதல் வேட்கை புகுகிறது. அந்த வேட்கையால் உடல் வேகிறது. 

வேரில்லாமல் இருக்கும் மரம்போல் உயிரில்லாமல் உள்ளதடி வாழ்க்கை.     இதற்கு விடிவே கிடையாதா!!

Edited by ஆதித்ய இளம்பிறையன்

அருமை........... அருமை ...........சுவை புதிது . புதுமை புதிது . எனது மனங் கனிந்த பாராட்டுக்கள் இளம் பிறையனாரே :) :) .

 

வித்தியாசமான ஒரு முயற்சி...அழகான தமிழ்.

 

இப்படியான நான்கரைச் சக்கரம் கவிதை என்ற விடயங்களை முன்னர் கேள்விப்படவில்லை. இன்றுதான் தெரிந்து கொண்டேன். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா.. என்னத்தை சொல்ல??!! இதை நான் எதிர்பார்க்கவில்லை.. :D வாழ்த்துக்கள் கவிராயரே..

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாவும் முயர்ச்சியும் நன்று. தொடருங்கள்.

வித்தியாசமான முயற்சி  வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்தமட்டில், இந்த வருத்தத்துக்கு விடிவு கிடையாது!  :D

 

அப்படி விடிந்தாலும், மறுபடியும் உடனே, இருட்டிக்கொள்ளும் வகையான வருத்தம் இது!

 

வாழ்த்துக்கள், ஆதித்யன் இளம்பிறையன்!

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்.....

நான்கரைச் சக்கரம் சக்கரத்தை நோக்கும்போது ஏற்படும் வியப்பிற்கு அளவே இல்லை இளம்பிறையன். "வே" அந்தமுமாதியுமாக இல்லையில்லை ஆதியே அந்தமாக ஆ....நான் இப்பிடியே பராக்குப் பார்த்துக் கொண்டு நிற்கத்தான் இலாயக்கு :rolleyes::icon_mrgreen:

 

இளம்பிறையன் உங்கள் தமிழ் ஒரு பெருங்கடல் எங்களால் இக்கடலில் நீச்சலைக்கூட அழகாக அடிக்கமுடியவில்லை வாசிக்கும்போதே தத்தளிக்கின்றன புலன்கள். அற்புதமான உங்கள் முயற்சியைப்பார்த்து மனம் பெருமிதம் கொள்கிறது. அறியத் தந்தமைக்கு நன்றிகள் இளம்பிறையன். நன்றி சொல்லும் கணத்தில் மனதில் ஆமையும் புகுந்து கொள்கிறது எந்த ஆமை என்று நீங்கள் அறிவீர்கள்தானே... :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்.....

நான்கரைச் சக்கரம் சக்கரத்தை நோக்கும்போது ஏற்படும் வியப்பிற்கு அளவே இல்லை இளம்பிறையன். "வே" அந்தமுமாதியுமாக இல்லையில்லை ஆதியே அந்தமாக ஆ....நான் இப்பிடியே பராக்குப் பார்த்துக் கொண்டு நிற்கத்தான் இலாயக்கு :rolleyes::icon_mrgreen:

 

இளம்பிறையன் உங்கள் தமிழ் ஒரு பெருங்கடல் எங்களால் இக்கடலில் நீச்சலைக்கூட அழகாக அடிக்கமுடியவில்லை வாசிக்கும்போதே தத்தளிக்கின்றன புலன்கள். அற்புதமான உங்கள் முயற்சியைப்பார்த்து மனம் பெருமிதம் கொள்கிறது. அறியத் தந்தமைக்கு நன்றிகள் இளம்பிறையன். நன்றி சொல்லும் கணத்தில் மனதில் ஆமையும் புகுந்து கொள்கிறது எந்த ஆமை என்று நீங்கள் அறிவீர்கள்தானே... :rolleyes: :rolleyes:

 

பொறாமை! :D

  • கருத்துக்கள உறவுகள்

பொறாமை! :D

 

கண்டு பிடித்துச் சொன்னதற்கு நன்றி புவிராயரே! :lol::D:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இது சித்திரக் கவிகளில் நான்கரைச் சக்கரம் வகையைச் சேர்ந்தது. எனது முதல் முயற்சி...

 

mine.png

 

வேதியன் மகவே வேய்தோள் உருவே

வேல்விழி கனிவே வேரிப்பூ நறவே

வேட்டம் புகவே வேகுதடி நினைவே

வேரில்லா வாழ்வே வேண்டும் விடிவே

வேதியன் - வேதம் ஓதுபவன்;

மகவே - மகளே; வேய்தோள் - மூங்கில் தோள்;

வேரிப்பூ - மதுரை மகளிர் கற்காலத்தில் சூடும் ஒரு மலர்

நறவே - நறு மணம்;

வேட்டம் - வேட்கை;

 

விளக்கம் :

வேதியன் மகளே!! மூங்கில்போல் தோள் கொண்டவளே!! 

வேல் விழிகளில் கனிவைக் கொண்டவளே!! வேரிப்பூ நறுமணம் கொண்டவளே !! 

உன்னை நினைக்கவே என் மனதில் காதல் வேட்கை புகுகிறது. அந்த வேட்கையால் உடல் வேகிறது. 

வேரில்லாமல் இருக்கும் மரம்போல் உயிரில்லாமல் உள்ளதடி வாழ்க்கை.     இதற்கு விடிவே கிடையாதா!!

 

அருமை அண்ணா.. இந்தக்களத்துக்கு நீங்கள் இணைந்தபோதே தெள்ளிய தமிழை சுமந்துகொண்டு ஓடும் தமிழ் அருவி நீங்கள் என்று இனங்கண்டிருந்தேன்.. வாழ்த்துக்கள் என் அண்ணா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னய்யா சொல்ல? சொல்ல வார்த்தைகளே  இல்லை, பிரமாதம். :)

  • தொடங்கியவர்

கருத்திட்டு வாழ்த்திய கோமகன், நிழலி, இசைக்கலைஞன், சுமேரியர், வாணன், புங்கை, வல்வை, தம்பி சுபேஸ் மற்றும் ஜீவா உங்களுக்கு எனது நன்றிகள்.

 

வல்வை, நான் உங்களின் புகழ்வுக்கு உகந்தவனா எனத் தெரியவில்லை.  காலத்தால் மூவாத தமிழ் தரும் அமிர்தத்தை கொஞ்சமேனும் பருகிடவேண்டும் என்ற உந்துதலில் விளைந்ததே இந்தக் கவி.

சித்திரக் கவிகள் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்றுதான் நான்கரைச் சித்திரக் கவிபற்றி அறிகின்றேன்.

மிக அருமை. தங்களின் முயற்சிக்கும் கவித்துவத்துக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.