Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின் பெருமையை உலகறிய வைத்த மகானுக்கு ...........சமர்ப்பிக்கிறோம்

Featured Replies

வணக்கம் உறவுகளே நெதெர்லாந்து வாழ் தமிழ்மக்களால் தமிழின் பெருமையை உலகறியச்செய்த  தனிநாயகம் அடிகள் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவினை எடுக்க இருக்கின்றனர் ........அந்த வகையில் அவருக்காக ஒரு பாடலை செய்து தரும்படி கேட்டதனால் .மன நிறைவுடன் இந்தப்பாடலை அவர்களுக்கு செய்து கொடுத்தேன் .நீங்களும் ஒருதடவை கேளுங்கள் .
 
நன்றிகள் .
 
குரல் .......ராஜீவ் 
 
வரிகள் ..........கலைச்செல்வி .
 
இசை ..........தமிழ்சூரியன் [R .சேகர்] 
 
 

வாழ்த்துகள் தமிழ்சூரியன்   அண்ணா.:)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தமிழ்சூரியன் அண்ணா..

வாழ்த்துகள் தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், தமிழ்சூரியன்!

 

நெடுந்தீவின் தனிநாயக முதலி பரம்பரையில் உதித்ததனால், தனிநாயகம் என்று இவருக்குப் பெயர் வைக்கப்பட்டது!

 

இவர் ஆற்றிய தமிழ்ப்பணி அளப்பரியது!

 

உங்கள் பாடல்கள், காலங்களைக் கடந்தும் வாழட்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்

தேன்குடித்து போல் இருந்தது. ஆனாலும் தேன்குடித்துப் புரையேறி அவதிப்பட்டவர்களும் உண்டு. அப்படி ஒரு அவதி எனக்கும் ஏற்பட்டது. தமிழின் பெருமையை உலகறியச்செய்த தனிநாயகம் அடிகள் அவர்களுடைய உருவப்படத்தை மட்டுமே ஒலி, ஒளிப் பதிவில் கண்டிருந்தால் புரையேறியிராது. பல்வேறு தமிழ்ப் பெருமக்களின் படங்களும் பதிவில் உள்ளபோது, எங்கள் தமிழ்த் தலைவனை மறந்தது என்ன? அவன் ஆயுதம் சுமந்ததாலா? அப்படியானால் ஆயுதம் சுமந்த முருகன், எப்படிப் பதிவில் ஏறினார்?.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான பாடல்,இசை.

உங்கள் பாடல்கள், காலங்களைக் கடந்தும் வாழட்டும்!

  • தொடங்கியவர்

தேன்குடித்து போல் இருந்தது. ஆனாலும் தேன்குடித்துப் புரையேறி அவதிப்பட்டவர்களும் உண்டு. அப்படி ஒரு அவதி எனக்கும் ஏற்பட்டது. தமிழின் பெருமையை உலகறியச்செய்த தனிநாயகம் அடிகள் அவர்களுடைய உருவப்படத்தை மட்டுமே ஒலி, ஒளிப் பதிவில் கண்டிருந்தால் புரையேறியிராது. பல்வேறு தமிழ்ப் பெருமக்களின் படங்களும் பதிவில் உள்ளபோது, எங்கள் தமிழ்த் தலைவனை மறந்தது என்ன? அவன் ஆயுதம் சுமந்ததாலா? அப்படியானால் ஆயுதம் சுமந்த முருகன், எப்படிப் பதிவில் ஏறினார்?.

முதலில் உங்கள் கேள்விகளால் ஆடிப்போய்விட்டேன் ...........ஏனனில்....................எப்படி பதில் கூறுவதென்று .....
 
உங்கள் உணர்வும் ,ஆதங்கமும் உண்மை......
 
இந்தப்பாடலை இங்கே இணைக்க வேணும் என்பதற்காக எனது மூளையில் வந்த சில படங்களைப்போட்டு நானே வீடியோ வடிவம் கொடுத்தேன் ...............அந்த நேரத்தில் ,அந்த இடத்தில் எனக்கு உண்மையில் எம் தேசியத்தலைவரை இங்கே படமாக இணைக்கும் எந்த எண்ணமும் வரவில்லை .ஏனனில் இந்தப்பாடலில் வரும் தமிழை வளர்த்த பெரியார்களை விட மேலாக தமிழை காப்பது எப்படி என்று காட்டியவர் ....அவரது பிம்பத்தை போடும்போது அதற்கு நிகராக போடுவதற்கு எந்த பிம்பமும் இந்த உலகில் இல்லை .இதுதான் உண்மை என்மனம் கூறிநின்றதும் அதுதான் ...............
 
 
சுருக்கமாக ,வெளிப்படையாக கூறின் ,இங்கே உள்ள இந்தப்பெரியார்கள் போற்றுதல்க்கு  உரியவர்கள் ,ஆனால் எம் தேசியத்தலைவர்  வணங்குவதற்குரியவர் .உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் நண்பரே .
  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தப்பாடலை இங்கே இணைக்க வேணும் என்பதற்காக எனது மூளையில் வந்த சில படங்களைப்போட்டு நானே வீடியோ வடிவம் கொடுத்தேன் ...............அந்த நேரத்தில் ,அந்த இடத்தில் எனக்கு உண்மையில் எம் தேசியத்தலைவரை இங்கே படமாக இணைக்கும் எந்த எண்ணமும் வரவில்லை .ஏனனில் இந்தப்பாடலில் வரும் தமிழை வளர்த்த பெரியார்களை விட மேலாக தமிழை காப்பது எப்படி என்று காட்டியவர் ....அவரது பிம்பத்தை போடும்போது அதற்கு நிகராக போடுவதற்கு எந்த பிம்பமும் இந்த உலகில் இல்லை .இதுதான் உண்மை என்மனம் கூறிநின்றதும் அதுதான் ...............
 
 
சுருக்கமாக ,வெளிப்படையாக கூறின் ,இங்கே உள்ள இந்தப்பெரியார்கள் போற்றுதல்க்கு  உரியவர்கள் ,ஆனால் எம் தேசியத்தலைவர்  வணங்குவதற்குரியவர் ..

 

 

தலைவரது பிம்பத்தை வீடியோவில் போட்டிருந்தால் அவருக்குக் கிடைத்திருக்கும் சிறப்பை விடவும், தங்கள் பின்னூட்டம் தந்துள்ள சிறப்பு மிகவும் உன்னதமான சிறப்பு. இதற்காகத்தான் அப்படி நடந்ததோ என எண்ணத் தோன்றுகிறது. மிக்கநன்றி தமிழ்சூரியன்.

அருமையான பாடல். நெகிழவைக்கும் இசையமைப்பு. தமிழ் சூரியன் அண்ணா வாழ்த்துக்கள். உங்களின் பணிகள் தொடரட்டும். பங்குபற்றிய கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

மனதை கொள்ளை கொள்ளும் அற்புதமான ஆரம்ப‌ இசை... பாடல் முழுவதும் பரவியுள்ளது.
அதற்கேற்ற கவிவரிகளும், பாடலை... அருமையான ஏற்ற, இறக்கத்துடன் பாடிய‌ இனிமையான குரல்.
மொத்தத்தில்....  தனிநாயகம் அடிகளாரை... அருமையான பாடல் மூலம் சிறப்பித்தமைக்கு, நன்றி தமிழ்ச்சூரியன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவரை மிகவும் நல்ல முறையில் கௌரவித்துள்ளீர்கள் , அனைவரும் நன்றாக இணைந்து பணியாற்றி யுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

இது காலம் கடந்து நிக்க வேண்டும் !! :D

  • தொடங்கியவர்
வணக்கம் உறவுகளே இந்தப்பாடலை இங்கிருந்து அகற்றுகிறேன் மன்னித்துக்கொள்ளுங்கள் ..........
ஏனனில் இந்தப்பாடலை விழா அன்று ஒரு இசைத்தாட்டாக வெளியிட நிகழ்சி ஒழுங்கமைப்பாளர்கள் விரும்புவதனால் இப்போதைக்கு இந்தப்பாடலை இங்கே இருப்பது முறையல்ல என எனக்கு பட்டது ......... :)
 
இன்னும் ஒரு சில சோடினைகளை இந்தப்பாடலுக்கு கொடுத்து மேலும் மெருகூட்டி அதை அந்த இசைத்தட்டில் வழங்குகிறேன் .
 
நன்றிகள் .
  • 1 month later...
  • தொடங்கியவர்

 

 

 

 

 

 

 

இந்த பாடலை இன்று வெளியீட்டு விட்டார்கள் .ஆகவே மீண்டும் இந்த பாடலை இங்கே இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .நன்றிகள் .

Edited by தமிழ்சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.