Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசிய கீதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uVoIaeJwEas

 

தமிழ் தேசிய கூட்டமைப்பால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட தேசிய கீதமும் அதன் காட்சி அமைப்பும் உங்களுக்காக 
பாடல் இசை : கந்தப்பு ஜெயந்தன் 
பாடல் வரிகள் புரட்சிக்கவிஞன்: : மாணிக்கம் ஜெகன்.
பாடியவர் S .G . சாந்தன் 
காட்சி ஒளிப்பதிவும் படத்தொகுப்பும்(editing) : தி.பிரியந்தன். ஸ்டார்மீடியா. 
காட்சி ஒளிப்பதிவு உதவி : கோபி, சுதர்சன்.



காட்சி களில் வருகின்ற புகைப்படங்கள் அனைத்திற்க்கும் பாடலுக்கும் எல்லா உரிமையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு .
ஒருங்கிணைப்பு மேற்ப்பார்வை செய்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வன்னிமாவட்டம்.

குறிப்பு : இந்த பாடல் காட்சி ஸ்டார்மீடியா கலையகத்தில் கட்டணம் செலுத்தி தயாரிக்கப்பட்டது.

 

 

அருமை ..........வாழ்த்துக்கள் எம்  ஈழக்கலை உறவுகளுக்கு .

அருமை ..........வாழ்த்துக்கள் எம்  ஈழக்கலை உறவுகளுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் தேசிய கீதமா?
கூட்டமைப்பின் கட்சிக் கீதமா?

ஏதுவாக இருந்தாலும் இசையும் பாடலும் நன்றாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் தேசிய கீதமா?

கூட்டமைப்பின் கட்சிக் கீதமா?

ஏதுவாக இருந்தாலும் இசையும் பாடலும் நன்றாக உள்ளது.

ஈழத்தமிழர்களின் தேசிய கீதம் என்றால் ஈழ  தமிழர்களின் விடிவுக்காக முப்பது ஆண்டுகளுக்குமேலாக போராடிய தேசியத்தலைவரின் வீர தீர செயல்கள் பற்றி   பாடலில் வந்திருக்கவேண்டும் அப்படி வரவில்லை அந்தவகையில் இந்த கீதம் கூட்டமைப்பின் கட்சிக் கீதம்தான். 

கனீர்  எண்ற சாந்தனின் குரலில்  எந்த கம்பீரமும் இன்னும் குறையவில்லை...  

இப் பாடலையும் காட்சியையும் பார்க்கும்போது விடுதலைப் புலிகளது கலை பண்பாட்டுக் கழகத்தின் கலைவடிவங்கள் தாயக கலைஞர்களது மனங்களில் நீறுபூத்த நெருப்பாக உள்ளதை உணர முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இது கூட்டமைப்பின் கொள்கைப்பாடலே ஒழிய ஈழத்தின் தேசிய கீதம் அல்ல.மாவீரர்களை சிறப்பிக்காமல் தேசிய கீதம் முழுமை பெறாது.பாடலும் சாந்தனின் குரலும் அருமை!!!!!!

இசையும் பாடலும் நன்றாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி தமிழரசு அவர்களே,

 

மிகவும் நல்ல பாடல், ஆனால் ஒரு திருத்தம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கொள்கைபரப்புக் கீதம் அன்றேல் கட்சிக்கீதம் என தலைப்பை மாற்றினால் நல்லாயிருக்கும் காரணம் "தேசியகீதம்" என்பதன் பொருள் வேறு.

Edited by Elugnajiru

இசையும் பாடலும் நன்றாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பாடலும், அதன் இனிமையும் ,பொருளும், காட்சிகளும் அற்புதமாக உள்ளது. ஆனால் அதனை மனம்விரும்பிக் கேட்கமுடியாது தலையங்கம் நெருடுகிறது.

 

ஒரு தமிழ்க் கட்சியின் வெற்றிக்காகப் பாடிய பாடலுக்கு தேசியகீதம் என்று பெயரிடும்போது! தமிழர்களுக்கான ஒரு தேசியகீதம் இருப்பது மறந்துவிட்டதா? அந்தத் தேசியகீதம் பிச்சனைக்கு வழிவகுக்கலாம் என முடிவுகொண்டால்! இப்போது இந்த முயற்சிக்கான தேவை என்ன?

 

ஒரு கட்சியின் வெற்றிக்காகப் பாடிய கீதம் தேசியகீதம் என்றால்! ஒரு வெற்றிபெறும் தேசத்திற்காக உருவாகும் கீதத்தை என்ன பெயர்சொல்லி அழைப்பது???.

  • கருத்துக்கள உறவுகள்
இந்த பாடலை கேட்டபோது அழுகைவந்துவிட்டது.. இந்த பாடலை கேட்டு உணர்ச்சியால் அல்ல... விடுதலைப்போராட்டத்தில் எப்படி எல்லாம்பாடினோம்... எங்கள் சுதந்திரக்கனவுக்கான வரிகளெல்லாம் சிங்களத்திடும் வாங்கும் பிச்சைக்காக என்று ஆகிவிட்டதே என்று உள்ளம் கூணிக்குறுகுகிறது.. புலிகள் இல்லாமல் நாங்கள் எவ்வளவு கேவலப்படுகிறோம் சிங்களவனிடம் என்பதற்கு இதைவிட ஒரு சாட்சி இருக்கமுடியாது.. எங்கள் தோல்வியின் சாட்சிகள்தான் இவை எல்லாம்..சத்தியமாய் கண்கலங்குகிறது..கண்களின் ஓரங்களில் மெதுவாய் கசிந்த கண்ணீரை துடைத்துவிட்டுத்தான் எழுதுகிறேன்..
 
 
http://www.youtube.com/watch?v=lKrVplOXTBU
 
நாம் தலை நிமிர்த்தி பாடிய சாந்தனின் பாடல் இது..இதனுடன் என் உடலும் உள்ளமும் உணர்வுகளும் ஒன்றிப்போவதுபோல் என்னால் மேல் உள்ள பாடலுடன் ஒன்ற முடியவில்லை.. I am sorry.. :(   யாராலும் எம் போரட்டத்தையும் அந்த உணர்வுகளையும் இனி ஒரு தடவை பிரதி செய்யவே முடியாது..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த பாடலை கேட்டபோது அழுகைவந்துவிட்டது.. இந்த பாடலை கேட்டு உணர்ச்சியால் அல்ல... விடுதலைப்போராட்டத்தில் எப்படி எல்லாம்பாடினோம்... எங்கள் சுதந்திரக்கனவுக்கான வரிகளெல்லாம் சிங்களத்திடும் வாங்கும் பிச்சைக்காக என்று ஆகிவிட்டதே என்று உள்ளம் கூணிக்குறுகுகிறது.. புலிகள் இல்லாமல் நாங்கள் எவ்வளவு கேவலப்படுகிறோம் சிங்களவனிடம் என்பதற்கு இதைவிட ஒரு சாட்சி இருக்கமுடியாது.. எங்கள் தோல்வியின் சாட்சிகள்தான் இவை எல்லாம்.. சத்தியமாய் கண்கலங்குகிறது.. கண்களின் ஓரங்களில் மெதுவாய் கசிந்த கண்ணீரை துடைத்துவிட்டுத்தான் எழுதுகிறேன்..
 
 
 
நாம் தலை நிமிர்த்தி பாடிய சாந்தனின் பாடல் இது..இதனுடன் என் உடலும் உள்ளமும் உணர்வுகளும் ஒன்றிப்போவதுபோல் என்னால் மேல் உள்ள பாடலுடன் ஒன்ற முடியவில்லை.. I am sorry.. :(   யாராலும் எம் போரட்டத்தையும் அந்த உணர்வுகளையும் இனி ஒரு தடவை பிரதி செய்யவே முடியாது..

 

 

 

நன்றி  தம்பி

நானும் இதைத்தான் எழுத நினைத்தேன்

ஆனால் எழுதமுடியவில்லை

 

இன்றைய  நிலையிலிருந்து  மக்களைக்காக்கும் இவர்களையும்  நாம் தூற்றமுடியாது.

இதுவும் கடந்து   போகும்  என்பதே நிலை.

 

ஆனாலும் 

அது ஒரு கனாக்காலம் என்பது போல் எமது போராட்ட காலம்முடியாது

அதை மட்டும் எனது மனது சொல்லி  நிற்கிறது

 

இந்த பாடலை கேட்டபோது அழுகைவந்துவிட்டது.. இந்த பாடலை கேட்டு உணர்ச்சியால் அல்ல... விடுதலைப்போராட்டத்தில் எப்படி எல்லாம்பாடினோம்... எங்கள் சுதந்திரக்கனவுக்கான வரிகளெல்லாம் சிங்களத்திடும் வாங்கும் பிச்சைக்காக என்று ஆகிவிட்டதே என்று உள்ளம் கூணிக்குறுகுகிறது.. புலிகள் இல்லாமல் நாங்கள் எவ்வளவு கேவலப்படுகிறோம் சிங்களவனிடம் என்பதற்கு இதைவிட ஒரு சாட்சி இருக்கமுடியாது.. எங்கள் தோல்வியின் சாட்சிகள்தான் இவை எல்லாம்.. கண்களின் ஓரங்களில் மெதுவாய் கசிந்த கண்ணீரை துடைத்துவிட்டுத்தான் எழுதுகிறேன்..
 
 
http://www.youtube.com/watch?v=lKrVplOXTBU
 
நாம் தலை நிமிர்த்தி பாடிய சாந்தனின் பாடல் இது..இதனுடன் என் உடலும் உள்ளமும் உணர்வுகளும் ஒன்றிப்போவதுபோல் என்னால் மேல் உள்ள பாடலுடன் ஒன்ற முடியவில்லை.. I am sorry.. :(   யாராலும் எம் போரட்டத்தையும் அந்த உணர்வுகளையும் இனி ஒரு தடவை பிரதி செய்யவே முடியாது..

 

 

உண்மை புலிகளின்  தோல்வி என்பது தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.  தொடர் இராணுவ  வெற்றிகள்  மூலம் தமிழ்மக்களை தலை நிமிர செய்த விடுதலை புலிகளால், தமது வெற்றியின்  மூலம் தமிழ் மக்களுக்ககாக சிறந்த முறையில் அரசியல் ராஜதந்திர  பலத்தை அடையமுடியாமல்,  இறுதியில் யுத்த்தில் வீழ்ச்சி அடைந்தது தமிழ் மக்களின் துரதிஷ்ரமே.இத்தோல்வியானது  தமிழ் மக்களுக்கு நினைத்து பார்க்க முடியாத இழப்பு. அந்த வெற்றி எக்காளத்திலேயே சிங்கள அரசானாது  தமிழ் மக்களை எள்ளி நகையாடி தனது ஒடுக்கு முறைகளை முன்னரிலும் பார்க்க  தீவிரப்படுத்தியுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த பாடலை கேட்டபோது அழுகைவந்துவிட்டது.. இந்த பாடலை கேட்டு உணர்ச்சியால் அல்ல... விடுதலைப்போராட்டத்தில் எப்படி எல்லாம்பாடினோம்... எங்கள் சுதந்திரக்கனவுக்கான வரிகளெல்லாம் சிங்களத்திடும் வாங்கும் பிச்சைக்காக என்று ஆகிவிட்டதே என்று உள்ளம் கூணிக்குறுகுகிறது.. புலிகள் இல்லாமல் நாங்கள் எவ்வளவு கேவலப்படுகிறோம் சிங்களவனிடம் என்பதற்கு இதைவிட ஒரு சாட்சி இருக்கமுடியாது.. எங்கள் தோல்வியின் சாட்சிகள்தான் இவை எல்லாம்..சத்தியமாய் கண்கலங்குகிறது..கண்களின் ஓரங்களில் மெதுவாய் கசிந்த கண்ணீரை துடைத்துவிட்டுத்தான் எழுதுகிறேன்..
 
 
http://www.youtube.com/watch?v=lKrVplOXTBU
 
நாம் தலை நிமிர்த்தி பாடிய சாந்தனின் பாடல் இது..இதனுடன் என் உடலும் உள்ளமும் உணர்வுகளும் ஒன்றிப்போவதுபோல் என்னால் மேல் உள்ள பாடலுடன் ஒன்ற முடியவில்லை.. I am sorry.. :(   யாராலும் எம் போரட்டத்தையும் அந்த உணர்வுகளையும் இனி ஒரு தடவை பிரதி செய்யவே முடியாது..

 

முற்றிலும் உண்மை.

 

எம்மில் சிலர் என்னும் புராணங்களிலிலும் இதிகாசங்களிலும் வரும் வீரவரலாற்றை பேசுபவர்கள் அல்லது எழுதுபவர்கள் ஏன் எம் கண்முன்னே நடந்த உலகே வியந்த எமது போராட்டம்பற்றி பேசுவதில்லை அல்லது எழுதுவதில்லை ... காரணம் தாழ்வு மன நிலையா ? அல்லது மற்றவனின் தாயை அழகு பார்க்க தெரிந்தவனுக்கு தனது தாயை அழகு பார்க்க தெரியாதது போன்றா ??  

 

 
 
நாம் தலை நிமிர்த்தி பாடிய சாந்தனின் பாடல் இது..இதனுடன் என் உடலும் உள்ளமும் உணர்வுகளும் ஒன்றிப்போவதுபோல் என்னால் மேல் உள்ள பாடலுடன் ஒன்ற முடியவில்லை.. I am sorry.. :(   யாராலும் எம் போரட்டத்தையும் அந்த உணர்வுகளையும் இனி ஒரு தடவை பிரதி செய்யவே முடியாது..

 

:( ஆம் சகோதரா 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு என்ன செய்யுமோ ஏதுசெய்யுமோ தெரியாது. ஆனால் இந்தப்பதிவானது, நம்பிக்கை கொண்டு பழகவும், கூடிச்செயற்படவும் சந்தேகத்திற்கு இடமற்ற, தமிழினவிடுதலை உணர்வாளர்கள் சிலருடைய முகங்களை வெளியே காட்டியுள்ளதை மறுக்கமுடியாது.

தேசிய கீதம் என்று வரும்பொழுது தேசியம், தலைமை,போராட்டம், மாவீரர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவேண்டும் இது வெறும் கூட்டமைப்பின் கட்சி கீதம். தலைப்பு தவறானது  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.