Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறந்த ஆற்றல் உள்ளவர்களுக்கே அமைச்சுப் பதவி – விக்னேஸ்வரன் திட்டவட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CM.jpg

கல்வித் தகைமையுடன் சிறந்த ஆற்றலையும் கொண்டவர்களுக்கே, வடக்கு மாகாண அமைச்சர் பதவிகள் வழக்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாணசபைக்கு, தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும், கல்வித் தகைமை கொண்டவர்களாக இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 

அதேவேளை, நேற்றுமாலை கொழும்பில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டத்தில், மாகாண அமைச்சர்களின் நியமனம் தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

வடக்கு மாகாண அமைச்சர்களை, முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனே தெரிவு செய்வார் என்று நேற்றைய கூட்டத்தில், இரா.சம்பந்தன் அறிவித்திருந்தார். 

இதையடுத்து, கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன், முதல்வராகப் பதவியேற்ற பின்னர், அமைச்சர்கள் குறித்து முடிவு செய்வதாகத் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, நாளை அலரி மாளிகையில் நடக்கவுள்ள, முதல்வர் பதவியேற்பு நிகழ்வில், தானும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நலன் விரும்பிகளும் பங்கேற்பர் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பாரா என்று அவரிடம் வினவியதற்கு, பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் பதிலளித்துள்ளார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20131006109200

  • கருத்துக்கள உறவுகள்

இது

வேட்பாளர்களை தெரிவு செய்தபோதும் கடைப்பிடிக்கப்பட்டதா???

மக்களிடம் காட்டுவது ஒருவரை

பதவி   எங்கள்  விருப்பம் என்பது சரியா??? :(  :(

(யாரையோ தவிர்த்துவிட என  கேள்வி  வருமே??? :( )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேட்பாளர்களை நியமிக்கும்போது அவர்களின் கல்வித் தகைமை சிறந்த ஆற்றல் எல்லாம் இருக்கின்றதா என்பதை பார்த்து தெரிவு செய்திருந்தால் எல்லோருக்கும் அமைச்சு பதவியும் வேண்டுமே இருப்பதனை வைத்துதானே அவரும் செய்யப்பார்க்கின்றார். அதில் சிலர் கறிவேப்பிலையாகி விடப்போகின்றார்கள் இந்த பெரியவர்களுக்கு இது புதிதா என்ன ...... 

  • கருத்துக்கள உறவுகள்

படிக்காதா ஆனந்தி புலிப் பெண் அத்தோடு கணவர் இன்றி அநாதையாக நிற்கிறார்.தேர்தலில் வோட் கேட்கும் போது மட்டும் அவரின் உதவி தேவை.தேர்தலில் வென்ற பின் படித்தாட்கள் பதவிக்கு தேவை.ஏன் தேர்தலில் இந்த படித்தாட்கள் நின்று வென்று இருக்கலாமே :(

படிக்காதா ஆனந்தி புலிப் பெண் அத்தோடு கணவர் இன்றி அநாதையாக நிற்கிறார்.தேர்தலில் வோட் கேட்கும் போது மட்டும் அவரின் உதவி தேவை.தேர்தலில் வென்ற பின் படித்தாட்கள் பதவிக்கு தேவை.ஏன் தேர்தலில் இந்த படித்தாட்கள் நின்று வென்று இருக்கலாமே 

 

 

அனந்தியை கூட்டமைப்பு சேர்க்கும் போது போராளிகளுக்கும் இடம் கொடுப்பதற்காக சேர்க்கப்பட்டவர்களில் ஒருவராக இருந்தார்.  தேர்வு புலித்தலைவர்களுக்கு என்று இருக்கவில்லை. அனந்தியை மந்திரியாக்கவோ அல்லது புலிகளின் நேர் பிரதிநிதிக்கு மந்திரிப்பதவி கொடுக்கவோ அவரின் தகமை ஆராயப்பட்டு அவர் கூட்டமைப்புக்குள் சேர்க்கப்படவில்லை. மந்திரிகள் வெறுமனே மக்கள் பிரதிநிதிகள் அல்ல. அவர்கள் கல்வித்தராதரம், தாம் தலைமைவகிக்கும் பொறுப்புக்கான தொழில்த்துறை தகுதியுள்ள மக்கள் பிரதிநிதிகள். அனந்திக்கு இந்த தகுதி இருக்கா அல்லது இல்லையா என்பதை பற்றி கூட்டமைப்போ அல்லது, அதன் மூத்த உறுப்பினர்களோ எதுவும் இதுவரையில் பேசவில்லை. ஆனால் முதல் அமைச்சர் பதவிக்காகவென்று கொண்டுவரப்பட்ட விக்கினேஸ்வரனின் நிலை அது அல்ல. அரசியலுக்கு புதியவரானாலும் பல கோணங்களில் அவரின் முதல் அமைச்சர் பொறுப்பை நிர்வகிக்கத்தக்க தகமைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. 

 

அனந்தியின் வெற்றி எங்குமே, யாழ் இணையம் வரைக்கும், எதிர்வு கூறப்படாதது. அதை கூட்டமைப்பு எதிர்வு கண்டுவைத்திருந்ததாகவும் அதை பயன் படுத்தியதாகவும் பொருள் கொள்ள முடியாது. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தியின் வெற்றி எங்குமே, யாழ் இணையம் வரைக்கும், எதிர்வு கூறப்படாதது. அதை கூட்டமைப்பு எதிர்வு கண்டுவைத்திருந்த்தாகவும் அதை பயன் படுத்தியதாகும் பொருள் கொள்ள முடியாது. 

 

 

அப்படியாயின்  தோற்பார் என்றே உள்ளெடுத்ததாகவும்

தற்பொழுது எதிர்பாராது வென்று அதிலும் விருப்புவாக்கு பெற்று வென்றதால்

சிக்கலாகவும் இருக்கலாம்  என்றும் எடுக்கலாம் அல்லவா?? :(

நான் அதில் எழுதியிருப்பது பொருளை முழுவத்தாக தரவில்லை. 

 

கூட்டமைப்பு போராளிகள் சமூகத்தில் இருப்பதை ஏற்றுக்கொண்டு அவர்களின் பழைய தியாகங்களை ஒத்துக்கொள்ளவே அனந்தியை கொண்டுவந்தது. ஆனால் அதற்கு வெளியே அனந்தி நிச்சயமாக வெல்வார் எனறது எதிர் பார்க்கப்பட்டது. இத்தகைய அபார வெற்றி ஒன்றை கூட்டமைப்பு எதிர்பார்த்ததும், அதை கூட்டமைப்பு தெரிந்திருந்தது என்பதும், இன்று அனந்தியை கூட்டமைப்பு கறிவேப்பிலையாக்குகிறது என்பது நடை பெறும் மற்றவைகளுடன் ஒத்துப்போகாதவை. 

 

மேலும் அனந்தியின் வெற்றியை கூட்டமைப்பு முழுவதாக எதிர்வுகண்டிருந்தது என்றால் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்த எதிர்பார்ப்புடன் ஒத்துப்போகவில்லை. மக்கள் விடுதலியை முழு மூச்சாக்க கேட்கிறார்கள் என்று கூட்டமைப்பு எதிர்பார்த்திருந்தால் விஞ்ஞாபனத்தில் பொருள் மயக்கம் தரும் "ஒற்றை ஆட்சி இலங்கைக்குள் சுய நிர்ணய உரிமை" என்று கூறப்போயிருந்திருக்காது. இது கூட்டமைப்பின் வெற்றியை பின்னடைய செய்த்திருந்திருக்க கூடிய ஒரு கருதுகோள். கூட்டமைப்பு மாகாண சபை ஒன்றை அமைக்க முடிந்தால் மக்களை அதை ஏற்றுக்கொள்வார்கள் என்ற ம்னநிலையில்தான்னைன்றும் கூட தொழில் படுகிறது. இல்லையேல் இந்த மாகாணசபை இலவம் பழத்துக்காக ஜனாதிபதியின் முன்னால் சத்தியபிரமாணம் எடுக்கப் போகுமா?

 

நாம் அது, இது என்றேல்லாம் ஒற்றை வரிகளில் எழுதும் போது அதில் பொருள் இல்லாமல் போய்விடும். மொத்ததில் கூட்டமைப்பு இன்று எந்த போராட்டமோ, புரட்சியோ செய்யும் நிலையில் இல்லை.  பயங்கர சுழியில் வள்ளம். கூட்டமைப்பு சுங்காணை திருகி, முறுக்கி உடைத்துவிடாமல் காற்று அடிக்கும் பக்கத்தில் சுங்காணை பிடித்து சுழிக்குள்ளால் விடுவிக்க முயல்கிறது. சுழிக்குள்ளால் தப்பியதாக கண்டு கொள்ளும் போதுதான் திரும்ப கொம்பாஸை எடுத்துப் பார்த்து படகின் திசையை மாற்றும்.

இந்த நிலைமையில் கூட்டமைபிடம் கொள்ள்கை எதுவும் இல்லையென்பாரோ அல்லது அவர்கள் துரோகிகள் என்பாரோ, ஒருவரை மற்ற்வர் கறிவேப்பிலையாக்கிறார் என்பதிலோ அவர்கள் உண்மையை சொல்லவரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டி மாகாண சபைக்கு ஒரு வெட்டி முதலமைச்சர். அவருக்கு நாலு வெட்டி அமைச்சர்கள். அதில படிப்பு ஆற்றல் வேற வேண்டி இருக்காமில்ல..! ஐயோ ஐயோ.. உவர் எல்லாம் எப்படி நீதிபதியா இருந்தாரோ..???! :lol::)


அவன் சந்திரகாந்தன்.. உவையை விடத் திறம் போல கிடக்குது..! :D


உவை எல்லாம்.. இவைட ஆட்டத்துக்குத்தான் ஆடிக்கொண்டிருக்கினம். உது நல்லதுக்கில்ல..! சனம் உந்த ஆட்டம் ஆட உவைக்கு வாக்குப் போடல்ல..!

 

 
செவ்வாயன்று யாழில் முதலமைச்சரை சந்திக்கின்றார் குர்ஜித்
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 6, 2013
 
kursith.jpg
 
செவ்வாய்க்கிழமை [08/10/2013] அன்று நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவிருக்கும் இந்திய வெளியுறவுஅமைச்சர் சல்மான் குர்ஜித் வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திப்பார்.
.
செவ்வாய் காலை கொழும்பில் இருந்து சிங்கள ராணுவத்தின் வானூர்தியில் பயணிக்கும் குர்ஜித் நண்பகல் 12 மணிக்குப் பலாலி விமான நிலையத்தை வந்தடைவார்.
.
12.25 மணியளவில் தெல்லிப்பழையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.   தொடர்ந்து பிற்பகல் 1.15 மணியளவில் மதிய போசனத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை பழைய பூங்காவிலுள்ள ஆளுநர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.   இதன் பின்னர் மாலை 4.30 மணியளவில் ரில்கோ விடுதியில் வைத்து இந்தியவிட்டுத் திட்டப் பயனாளிகளுக்கும், இந்திய அரசின் உதவியில் பயன்பெற்ற சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கவுள்ளார்.   தொடர்ந்து மாலை 5 மணிக்கு வடக்கு மாகாண முதலமைச்சரையும் ரில்கோ விடுதியில் குர்ஷித் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இறுதியாக 5.30 மணிக்கு இந்திய ஊடகவியலாளர்களுடன் சந்திப்பபை நடத்துவார்.   இதன் பின்னர் 6 மணிக்கு பலாலி விமான நிலையம் ஊடாக  மீண்டும் அவர் கொழும்பு திரும்பவுள்ளார். எனக் கூறப்படுகின்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வெளி நாட்டு அமச்சர் முன்னிலையில் விக்கினேஸ்வரன்

பதவிப்பிரமாணம் செய்வது
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பெருமையே
சிறிலங்கா  ஜனாதிபதி இந்தப் பதவிப் பிரமாணத்தை முன்னின்று

நடத்தி வைப்பது சிறிலங்காவிற்குத் தனிப்பெருமை 

 

இதனால் சிங்கள தமிழ் உறவுகளுக்கிடையில் ஏற்படும் அபிவிருத்திகள்

மற்றும் வடக்கில் மீண்டும் வீசப்போகும் வசந்தங்கள்   அதைவிடப் பெருமையானவை

இந்த ஆட்டமெல்லாம் சிங்களவன் உங்களுக்கு காணி மற்றும் போலிஸ் அதிகாரம் தரும் வாரித்தான்.

 

அப்படி அதிகாரம் மாகாணசபைக்கு கையளிக்கப்பட்டல் அதையே போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று பறைசாற்றி காரியத்தை முடிப்பார்கள் போலத்தான் தெரியுது.

 

இதற்குமேல் சென்று இருதித்தீவு என்று யாரும் கேட்பதற்கில்லை இஞ்ச இப்பவே மாகாணசபை அமைச்சுக்கு பிச்சல் புடுங்கலா இருக்கு உங்களுக்கு தேவையா ஒரு தீர்வு?

 

 

நல்லவேளை தலைவர் வளத்த இயக்கம் அவரின் காலத்த்லேயே முடிந்து விட்டது அந்த மைப்பு இன்றும் இருந்திருந்தால் இப்படி பிச்சை சண்டையால் அந்த அமைப்பையே கேவலப்படுத்தி இருப்பார்கள்.

படிக்காதா ஆனந்தி புலிப் பெண் அத்தோடு கணவர் இன்றி அநாதையாக நிற்கிறார்.தேர்தலில் வோட் கேட்கும் போது மட்டும் அவரின் உதவி தேவை.தேர்தலில் வென்ற பின் படித்தாட்கள் பதவிக்கு தேவை.ஏன் தேர்தலில் இந்த படித்தாட்கள் நின்று வென்று இருக்கலாமே :(

 

அன்பின் ரதி, சோர்வடையாதீர்கள். நல்ல முடிவு வரும். பொறுத்திருங்கள். ஊடகங்களின் தாறு மாறான செய்திகளை பார்த்து குழாம்பாதீர்கள்.
 
நேரம் எடுத்து இந்த அமைச்சு தெரிவை செய்ததட்கு மூலக்காரணமே கட்சி, ஊர், குடும்ப உறவு என்பவற்றிக்கு அப்பால் சென்று ஒவொருவரின் கல்வி, அரசியல்/சமூக தொண்டுகள் (political/social contributions), அவரவரின் பண்புகள் (character), கடந்தகால செயல்பாடுகள் (track record in career/politics or other fields) என்ற பல விடயங்களை ஆராய்ந்து தகமையானவர்களுக்கு பதவி வழங்குவதுதான். அது நிச்சயமாக நடக்கும். தனிய கல்வியின் அடிப்படையில் மாத்திரம் தெரிவு என்ற செய்தி தவறானது. 

என்ன படிச்சிருந்தால் அமைச்சுப்பதவி கிடைக்குமாம்? 

 

அதை முன்னம் சொன்னால் நிறையபேருக்கு வசதியாய் இருக்கும்.

 

தயவு செய்து சிவாஜிளிங்கத்தாரை படிக்க அனுப்பி பள்ளிக்கூடத்தை மூடப்பன்ன வேண்டாம் என்று நான் அனைவரையும் தாழ்மையுன் கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி சம்மந்தன் குழு சிறந்த ஆற்றல் என்று கருதுவது

தமிழ் மக்களை ஏமாற்ற தெரிந்து இருக்கணும்

தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் தேசியத்த உரக்க பேசிவிட்டு பிறகு அதை மறக்க தெரிந்து இருக்கணும்

வடக்கில் உள்ள மக்களிடம் ன்று பேசிவிட்டு ஜனாதியுடன் வேறு ஒன்றை பேச தெரிந்து இருக்கணும் இது தான் விக்கி சமந்தன் குழு ஆற்றலாக கருதுவது

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி சம்மந்தன் குழு சிறந்த ஆற்றல் என்று கருதுவது

1- தமிழ் மக்களை ஏமாற்ற தெரிந்து இருக்கணும்

2- தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் தேசியத்த உரக்க பேசிவிட்டு பிறகு அதை மறக்க தெரிந்து இருக்கணும்

3- வடக்கில் உள்ள மக்களிடம் ன்று பேசிவிட்டு ஜனாதியுடன் வேறு ஒன்றை பேச தெரிந்து இருக்கணும் இது தான் விக்கி சமந்தன் குழு ஆற்றலாக கருதுவது

 

இவை  தெரிந்திருக்கணும் என்றால்  படித்திருக்கணும் என்பது சரிதான்

வரலாற்றில் படித்தவர்கள் தமிழர்களுக்கு இதைத்தான் செய்தார்கள் :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த ஆற்றல் = படிப்பு என்று நீங்களாகவே முடிவு செய்து கருத்து எழுதுங்கள்.

இதன் மாற்றாக ஆற்றல் அற்ற முட்டள்களைதான் அமைச்சராக நியமிப்பேன் என்று அவர் சொல்லவேண்டும் என்றா எதிர்பார்கிறீகள்?

விக்னேஸ்வரன் சித்தரையும் சிவாஜியையும் வெட்டுவார் என்று நினைக்கிறேன். மாவைகூட மவுனம் காக்க இவ ரெண்டு பேரும் கிடந்து குதிச்சது இது விளங்கித்தான்.

சிறந்த ஆற்றல் = படிப்பு என்று நீங்களாகவே முடிவு செய்து கருத்து எழுதுங்கள்.

இதன் மாற்றாக ஆற்றல் அற்ற முட்டள்களைதான் அமைச்சராக நியமிப்பேன் என்று அவர் சொல்லவேண்டும் என்றா எதிர்பார்கிறீகள்?

விக்னேஸ்வரன் சித்தரையும் சிவாஜியையும் வெட்டுவார் என்று நினைக்கிறேன். மாவைகூட மவுனம் காக்க இவ ரெண்டு பேரும் கிடந்து குதிச்சது இது விளங்கித்தான்.

 

சித்தர் முட்டாள் என்பற்காக மாத்திரமா அவர் ஒரு அமைச்சராக வர தகுதியற்றவர்?. அவர் 2011 மட்டும் இலஙகை இராணுவத்தின் ஒரு அங்கமாக ஒரு அமைப்பை நடாத்தி எந்த தமிழ் மக்களை பிரதிநிததுவம் செய்ய வாக்கு கோட்டாரோ ஆதே மக்களை கொடுமைக்கு ஆளாக்கியவர். அவரை 3வதாக விருப்பு வாக்கு போட்டு தேர்வு செய்த மக்கள் அதை மறந்து விட்டது ஜனாயகம் எப்படி அநியாயம் செய்யலாம் என்றததுக்கு ஒரு சான்று.
 
2009ல் தாற்காலிக முகாம்களில் அடைத்துவைக்கப்பட்ட எமது உறவுக்காலி கண்காணிப்பதிலும், காட்டிக்கொடுப்பதிலும் இந்த குழு செய்த வேலைகள் பற்றி HRW/UNHCR எழுதியிருந்தது. அது மட்‌டுமல்லாமல் வவுனியாவில் இரகசிய சித்திரவதை கூடத்தை இயக்கி வந்த இவரை தலமையாக கொண்ட குழு இன்று ஜனாயகம் பேசுகின்றாரகள். அதைக்கெட்டு நாங்கள் அவர் விருப்பியததை கொடுக்கவும் வேண்டுமாம்!!. 
 
இவரைப்போலவே இன்னும் சில ஜனாயக பிரியர்கள் செய்யாத கொடுமைகளை செய்துவிட்து மனித உரிமை பற்றி பேசிக்கொண்டு கூடமைப்புக்குள் இருக்கின்றார்கள். டக்கிளசு போலவே இவர்களையும் மக்கள் களையவேண்டும்
 
 
ஆங்கிலம் தெரிந்தவர்கள் வாசியுங்கள்:
 
The Human Rights Watch (HRW) report ‘War on the Displaced - Sri Lankan 
Army and LTTE Abuses against Civilians in the Vanni’ of February 2009 noted that:
 
“Sri Lankan authorities have ignored calls from the international community to ensure the civilian nature of the camps. The perimeters of the sites are secured with coils of barbed wire, sandbags, and machine-gun nests. There is a large military presence inside and around the camps…Several sources reported to Human Rights Watch the presence of plainclothes military intelligence and paramilitaries in the camps. A UN official in Vavuniya told Human Rights Watch that she and colleagues have seen members of paramilitary groups in different camps. In particular, local staff members recognized several members of the People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE), a pro-government Tamil paramilitary organization long 
implicated in abuses, present at one of the camps. While officially the camps are run by civilian authorities, in reality the military remains in full control, ensuring, as one relief worker put it, that ‘nobody gets in or out.’
 
“Displaced persons confined in the camps enjoy no freedom of movement and are not allowed any contact with the outside world.” 
 
 
The UNHCR Eligibility Guidelines for Assessing the International Protection 
Needs of Asylum-Seekers from Sri Lanka (UNHCR Guidelines 2009), April 2009 noted that:
 
In addition to the military, police and security forces, the LTTE [prior to their defeat], the TMVP and armed factions of other political parties such as the EPDP and the PLOTE as well as criminal groups have all been implicated in the high number of abductions, disappearances, killings, extortions and forced recruitments in Sri Lanka.

சிவாஜிலிங்கத்திற்கு அமைச்சுப்பதவி கிடைக்காது .அனேகமாக TELO சார்பாக மன்னாரில் வேன்றவருக்குத்தான் கிடைக்கும். அதைத்தான் அடைக்கலநாதனும் விரும்புவதாக தகவல் .வவுனியா ,கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தலா ஒவ்வொரு அமைச்சுப் பதவியும் ,முல்லைத்தீவுக்கு ஒன்றும் கிடைக்கும் .சகல மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக அமைச்சரவை இருக்கவேண்டும் .இதுதான் TNA தலைமையினதும் ,முதலமைச்சரினதும் நோக்கமாக உள்ளது .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கத்திற்கு அமைச்சுப்பதவி கிடைக்காது .அனேகமாக TELO சார்பாக மன்னாரில் வேன்றவருக்குத்தான் கிடைக்கும். அதைத்தான் அடைக்கலநாதனும் விரும்புவதாக தகவல் .வவுனியா ,கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தலா ஒவ்வொரு அமைச்சுப் பதவியும் ,முல்லைத்தீவுக்கு ஒன்றும் கிடைக்கும் .சகல மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக அமைச்சரவை இருக்கவேண்டும் .இதுதான் TNA தலைமையினதும் ,முதலமைச்சரினதும் நோக்கமாக உள்ளது .

 

சிவாஜிலிங்கத்துக்கு குழப்பங்காட்டுவதைத் தவிர வேறேன்ன தெரியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.