Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

CV கேட்ட C.V. விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண தேர்தல்கள் முடிந்ததும்,பதவிக்காக பெரும் அடிபாடு நடக்கப் போகின்றது என வாக்களித்த மக்களும், வட, தென் தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகையாளர்கள் பலரும் எதிர்பார்த்தார்கள்.

 

பங்காளிக் கட்சிகளுக்கு எல்லாம் பதவி என்றால், மகிந்தர் போல, 30 பேருக்கும் பதவி கொடுத்து நாற வேண்டும் என்று உணர்ந்த முதல்வர், எந்த கட்சியிலும் நீங்கள் இருக்கலாம். உங்கள் கல்வித் தகமைக்கு ஏற்ப தான் பதவி என்று கூறியது மட்டுமில்லாது, பதவி விரும்புவோர், தமது CV களை சமர்பிக்குமாறும், அவர்களது கல்வித் தகமைகள், உறுதிப் படுத்தப்படும் என்று கூறியதுடன், கல்வித்தகமை கொண்டவர்களுக்கே பதவியும் கொடுக்க, முள்ளிவாய்க்காலில் பிரமாணம், எனக்கு பதவி, எனது கட்சிக்கு பதவி என்றவர்கள், கொழும்பு படித்த குடி வருவதா, என்று குமுறி பின் கப்சிப்பாக அடங்கி விட்டார்கள்.

 

எனக்கு, என் தம்பிக்கு, வன்னிப் பிரதேசத்துக்கு, அதுக்கு, இதுக்கு என்று இழுத்தவர்கள் எல்லாம் கப்சிப். எனக்கு கூடுதல் வாக்குகள், அவருக்கு கூடுதல் வாக்குகள், தா, கொடு பதவி என்றவர்கள் கூட, முதல்வரின் இந்த அஸ்திரத்துடன் மடங்கி விட்டனர், 

 

கைதடியில் புதிய மாகாணசபை அலுவலகத்தினை திறக்க, அதிகாரிகள், அமைச்சர் டக்ளசையும், ஆளுனர் சந்திரசிறியினையும் அழைக்க முயல, அதற்கும், யார் திறப்பது என நான் முடிவு செய்வேன் என, கடிவாளம் இட்டுவிட்டார் முதல்வர்.

 

அடிபிடி என்டால், எங்களையும் கூப்பிடுங்க என்ற ரகத்தில் அரசியல் செய்த EPDP ஆட்களையும் இது  கொஞ்சம் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளதாக அறிய முடிகிறது.

 

போலீஸ், காணி குறித்த மாகாண அதிகாரங்ககளை சட்ட ரீதியாக பெறுவோம் என முதல்வர் சொல்ல, அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல அதை மறுக்க, இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தப் பதிவில் இருப்பதை தான் நான் சொல்கிறேன். அமைச்சர் அரசியல் சட்டத்துக்கு எதிராக சொல்வது குறித்து நான் சொல்ல ஒன்றும் இல்லை என்றதும் அமைச்சரும் கப்சிப்.

 

இந்த போலீஸ், காணி குறித்த மாகாண அதிகாரங்ககளை நீக்க புறப்பட்டு தான், இந்திய அரசின் நெருக்குதலினால் இலங்கை அரசு பின் வாங்கியது. ஆகவே, இது இன்னும் அரசியல் சட்டத்தில் இருக்கிறது என்பது சட்டம் அறிந்த முதல்வருக்கு புரியும் தானே.

 

முதல்வரின் ஒழுங்கான, நேரிய நடவடிக்கைகள், தென் பகுதியிலும், மூக்கில் விரலை வைக்க வைத்து உள்ளது. அடிபிடி மோதல்களினால் சாதிப்பதிலும் பார்க்க 'professional approch' மூலம் சாதிக்க முடியும் என முதல்வர் கருதக் கூடும்.

 

அதேவேளை கொழும்பில் தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த கோத்தபயவோ, வடக்கில் சட்டம், ஒழுங்கினைப் பாதுகாப்பது முதல்வரின் பொறுப்பு என்கிறார்.  

 

ஆளுனர் சந்திரசிறியினை மாற்றி, ஒரு சிவில் அதிகாரியினை நியமனம் செய்வது குறித்து தீவிரமாக பரிசீலிக்குமாறு ஜனாதிபதியிடம் பகிரங்கமாக கோரிக்கை விட்டுள்ள முதல்வர்,   அதற்கான காரணங்களை தெளிவாக கூறி இருப்பதால், ஜனாதிபதி அதனை மறுக்க முடியாத நிலை உள்ளதாக தெரிகிறது.

 

இதில் வென்றால் அதுவே முதல்வரின் பிள்ளையார் சுழியாக அமையக் கூடும்.

    

ஆக, முதல்வர் சரியான பாதையில் போகிறார் போல தெரிகிறது. பார்ப்போம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தை பெருமளவில் அகற்றிவிடுவாராக இருந்தால் கெட்டிக்காரர்தான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

so far so good என்று தான் சொல்ல முடியும். சி வியர் பல்டி அடிச்சால் தான் பிரச்சனை. அடிக்க தயங்குவார் என்று நம்புவோமாக. அதேவேளை புலம்பெயர் நாடுகளில் இருந்தான உயர்மட்ட உயர்தர அரசியல் அழுத்தங்கள் கூட்டமைப்புக்கு வழங்கப்படுவதும் அவர்களை நெறிப்படுத்த உதவும்..! :icon_idea::)

மகிந்தாவிடம் சத்தியப்பிரமாணம் எடுத்தவர் சரியான பாதையில் போவார் என நம்ப முடியாது . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சில சண்டைகளை விட்டுக் கொடுத்து, முக்கியமான போர்களை வெல்ல வேண்டும் என்பது நல்ல தந்திரம் தான். புலிகளே இராணுவ ரீதியில் இதைக் கடைப் பிடித்தார்கள், மோட்டுத் தனமாக அடிபடவில்லை. ஒரு நீதியரசரோடு சட்ட விவாதம் செய்ய சிங்களவர்களிடையே உரிய ஆட்கள் இல்லை, இருக்கும் ஆட்களும், (சி.ஆர்.டி சில்வா போன்றோர்) கடந்த காலக் கருத்துகளால் சர்வதேச அவதானிப்பாளர்களின் நம்பிக்கையை இழந்த ஆட்கள். இதனால், தமிழர்களுக்கு ஒரு அனுகூலம் இருக்கிறது. "நாங்கள்" குழப்பாமல் இருப்போம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவிடம் சத்தியப்பிரமாணம் எடுத்தவர் சரியான பாதையில் போவார் என நம்ப முடியாது . :rolleyes:

 

வேறு யாரிடம் எடுத்து இருக்க வேண்டும் என கருதுகிறீர்கள்? சமாதான நீதிவான், ஆளுனர்??

 

ஜனாதிபதியாக மகிந்தர் இருக்கிறார் என்பதற்காக, ஜனாதிபதி பதவி தாழ்வானது அல்ல.

 

தடியைக் கொடுத்து அடியை வாங்கிய மோதல் அரசியலுக்கு,  மக்கள் வாக்களிக்க வில்லை என்பது பொதுவான அவதானிப்பு.

 

இன்றைய நிலையில் பிச்சை வேண்டாம் நாயை பிடி நிலை.

 

காணிகள் கொள்ளை தடுக்கக் பட வேண்டும். ராணுவ அடாவடி நிறுத்தப் பட வேண்டும். பெளத்த தீவிரவாதம் தடுக்கப் பட வேண்டும்.

 

இதற்கு, இந்திய, சர்வதேச ஆதரவு பின்பலத்துடன், வட மாகாண அரசு முனைய வேண்டும். அதற்கு மோதல் அரசியல் சரிவராது. இந்தியாவோ, சர்வதேசமோ கொடுக்க கூடிய ஒரு சதமும், கொழும்பு அரச அனுமதி இன்றி, வடக்கு போய் சேராது என்பது தான் யதார்த்தம்.

 

மருந்துக்கு வலி இல்லை, புண்ணுக்கு தான் பெரும் வலி. உடனடி நிவாரணம் தேவை.

 

யுத்தம் முடிந்த காலத்தில், மாவை, சிவாஜி போன்ற மோதல் அரசியல் விரும்பியவர்கள், சாதித்தது என்ன? எவ்வித சிந்தனையும் இன்றி, கிளம்பிய வணங்காமண் கப்பலில் இருந்த பொருட்களை வடக்கு அனுப்ப, போட்ட கெஞ்சல்கள், கருணாநிதி உட்பட, பலன் தரவில்லையே. அதுதான் மோதல் அரசியலின் விளைவு.

 

மோதல் அரசியல் விரும்போவோர், விக்னேஸ்வரன், ஒரு இடைக்கால நிவாரண முதல்வர் என கருதினால் நல்லது.

Edited by Nathamuni

வேண்டாத சில அறிக்கைகளை தவிர மற்றப்படி நல்லாத்தான் எல்லாம் செய்கின்றார் .

வேறு யாரிடம் எடுத்து இருக்க வேண்டும் என கருதுகிறீர்கள்? சமாதான நீதிவான், ஆளுனர்??

 

ஜனாதிபதியாக மகிந்தர் இருக்கிறார் என்பதற்காக, ஜனாதிபதி பதவி தாழ்வானது அல்ல.

 

தடியைக் கொடுத்து அடியை வாங்கிய மோதல் அரசியலுக்கு,  மக்கள் வாக்களிக்க வில்லை என்பது பொதுவான அவதானிப்பு.

 

இன்றைய நிலையில் பிச்சை வேண்டாம் நாயை பிடி நிலை.

 

காணிகள் கொள்ளை தடுக்கக் பட வேண்டும். ராணுவ அடாவடி நிறுத்தப் பட வேண்டும். பெளத்த தீவிரவாதம் தடுக்கப் பட வேண்டும்.

 

இதற்கு, இந்திய, சர்வதேச ஆதரவு பின்பலத்துடன், வட மாகாண அரசு முனைய வேண்டும். அதற்கு மோதல் அரசியல் சரிவராது. இந்தியாவோ, சர்வதேசமோ கொடுக்க கூடிய ஒரு சதமும், கொழும்பு அரச அனுமதி இன்றி, வடக்கு போய் சேராது என்பது தான் யதார்த்தம்.

 

மருந்துக்கு வலி இல்லை, புண்ணுக்கு தான் பெரும் வலி. உடனடி நிவாரணம் தேவை.

 

யுத்தம் முடிந்த காலத்தில், மாவை, சிவாஜி போன்ற மோதல் அரசியல் விரும்பியவர்கள், சாதித்தது என்ன? எவ்வித சிந்தனையும் இன்றி, கிளம்பிய வணங்காமண் கப்பலில் இருந்த பொருட்களை வடக்கு அனுப்ப, போட்ட கெஞ்சல்கள், கருணாநிதி உட்பட, பலன் தரவில்லையே. அதுதான் மோதல் அரசியலின் விளைவு.

 

மோதல் அரசியல் விரும்போவோர், விக்னேஸ்வரன், ஒரு இடைக்கால நிவாரண முதல்வர் என கருதினால் நல்லது.

 

அண்ணாச்சி அவசரம் வேணாம் இது நான் சொல்லவில்லை இங்கதான் சிலர் அவர் மக்களுக்கு துரோகம் இழைகிறார் அப்படி இப்படி என்று விக்கியை பற்றி சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்தவ நாங்க சரி என்று சொன்னா அப்புறம் எங்களையும் தமிழ் தேசிய துரோகி பட்டியலில் வைப்பார்கள் எதுக்கு வம்பு எண்டுதான் இப்படி எழுதுறம் .

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாச்சி அவசரம் வேணாம் இது நான் சொல்லவில்லை இங்கதான் சிலர் அவர் மக்களுக்கு துரோகம் இழைகிறார் அப்படி இப்படி என்று விக்கியை பற்றி சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்தவ நாங்க சரி என்று சொன்னா அப்புறம் எங்களையும் தமிழ் தேசிய துரோகி பட்டியலில் வைப்பார்கள் எதுக்கு வம்பு எண்டுதான் இப்படி எழுதுறம் .

 

எதுக்கு வம்பு என்று ஒதுங்கிற குணத்தை விட வேணும்...:D

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் சரியான பாதையில் நிதானமாகச் செல்கின்றார் என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது. புலம்பெயர் அன்பர்களின் கூத்துக்கள் முதல்வரிடம் எடுபடவில்லை என்பதும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்வர் சரியான பாதையில் நிதானமாகச் செல்கின்றார் என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது. புலம்பெயர் அன்பர்களின் கூத்துக்கள் முதல்வரிடம் எடுபடவில்லை என்பதும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. 

அதற்காக நாங்கள் விட்டுவிட மாட்டோம். குடைந்து கொண்டே இருப்போம். அவரா, நாங்களா என்று பார்க்கலாம்... 

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் சரியான பாதையில் நிதானமாகச் செல்கின்றார் என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது. புலம்பெயர் அன்பர்களின் கூத்துக்கள் முதல்வரிடம் எடுபடவில்லை என்பதும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

வாலி இங்க கனபேர் உங்களோட நட்பாயிருக்கினம், நீங்களும் என்னை போல் புலம்பெயர் புண்ணியவான்களை குறைசொல்லி, மலையாளி, றோ வின் கையாள், ஸ்ரீ லன்கன் என்ற இழி சொல்லுக்கு ஆளாகாப்போறீர்கள்.

சம்பந்தர்,சுமந்திரன் ,விக்னேஸ்வரன் முவரையும் பல்வேறு சொல்லுகளால் வசைபாடியவர்கள் தற்போது so far so good என்று சொல்ல நிலைமை மாறியிருக்கின்றது 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதென்று நினைப்பதை நல்லதென்றும், அல்லதென்று நினைப்பதை அவ்வாறும் கருத்திடுபவர்தானே ஒரு நல்ல கருத்தாளராக இருக்கமுடியும்? :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இசை, ஆனா அவசரப்பட்டு விக்கியை சகட்டு மேனிக்கு திட்டுவானேன்? பின் பம்முவானேன்?

பரவாயில்லை இவர்களின் இந்த மனமாற்றம் so far so good தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வாலி இங்க கனபேர் உங்களோட நட்பாயிருக்கினம், நீங்களும் என்னை போல் புலம்பெயர் புண்ணியவான்களை குறைசொல்லி, மலையாளி, றோ வின் கையாள், ஸ்ரீ லன்கன் என்ற இழி சொல்லுக்கு ஆளாகாப்போறீர்கள்.

 

இவ்வாறான இழிசொற்களுக்குப் பயந்து மனதில் எழும் நியாமான கருத்துக்களைப் பதிவிடாமல் இருக்கமுடியுமா? :)

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர்,சுமந்திரன் ,விக்னேஸ்வரன் முவரையும் பல்வேறு சொல்லுகளால் வசைபாடியவர்கள் தற்போது so far so good என்று சொல்ல நிலைமை மாறியிருக்கின்றது 

 

அதை வசை என எடுத்து கொள்ளாமல் விமர்சனம் என எடுத்துக்கொள்வோம்

Edited by putthan

சம்பந்தர்,சுமந்திரன் ,விக்னேஸ்வரன் முவரையும் பல்வேறு சொல்லுகளால் வசைபாடியவர்கள் தற்போது so far so good என்று சொல்ல நிலைமை மாறியிருக்கின்றது 

 

மாறி மாறி பக்கப்பாட்டு பாடுவது எங்களுக்கு என்ன புதுசா அண்ணே . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இசை, ஆனா அவசரப்பட்டு விக்கியை சகட்டு மேனிக்கு திட்டுவானேன்? பின் பம்முவானேன்?

பரவாயில்லை இவர்களின் இந்த மனமாற்றம் so far so good தான்.

இங்கு பம்முறது கள்ள id யில் வந்து பாயுறது அப்படியே தங்களுக்கு தாங்களே பச்சை குத்துறது அப்படியே ஒன்டுமேயில்லாத உதவத்த கருத்துகளிற்க்கு ஜிங்சக் போடுவது இதெல்லாம் உங்களை கண்டபிற்பாடுதான் எங்களுக்கு தெரியும் பிரதர்ஸ் . 

  • கருத்துக்கள உறவுகள்

போங்க பெருமாள், ஒரு ஐடில வாறதுக்கே மனிசி பிரிச்சு மேயுது, இதுல கள்ள ஐடில வந்து நமக்கு நாமே பச்சை குத்துறமாக்கும். சரியான சிரிப்பு போலிசு.

நாமெல்லாம் இந்த லூசுதனக்களை 5ம் வகுப்போட விட்டாச்சு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன்மார்களே.. இப்ப ட்ரென்ட் விக்கியை திட்டிறதா? அல்லது வாழ்த்திறதா.. ஒருக்கா சொன்ன ‘நல்ல பேரோட’ கருத்து போட வசதியா இருக்கும்... 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன்மார்களே.. இப்ப ட்ரென்ட் விக்கியை திட்டிறதா? அல்லது வாழ்த்திறதா.. ஒருக்கா சொன்ன ‘நல்ல பேரோட’ கருத்து போட வசதியா இருக்கும்... 

 

தம்பி தேர்வு உங்களுடையது.....யாழ்களம் ஜனநாயக களம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.