Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் கதை - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இக்கவிதையின் நாயகியான் என் மனைவி வாசுகிக்கு சமர்ப்பணம்

 

 

என் கதை 

வ.ஐ.ச.ஜெயபாலன்

 

 

*

அவள் தனி வனமான ஆலமரம்.

நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை.

என்னை முதன் முதற் கண்டபோது 

நீலவானின் கீழே அலையும்

கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம்.

நானோ அவளை 

கீழே நகரும் பாலையில் தேங்கிய 

பாசி படர்ந்த குளமென்றிருந்தேன்.

 

 

*

ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி

ஜாடை காட்டினாள்.

மறுநாள் அங்கிருந்தது என் கூடு.

இப்படித்தான் தோழதோழியரே

எல்லாம் ஆரம்பமானது.

தண்ணீரை மட்டுமே மறந்துபோய்

ஏனைய அனைத்துச் செல்வங்களோடும்

பாலை வழி நடந்த காதலர் நாம்.

 

 

*

அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை.

நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது.

சிறகுகளில் மிதக்கும் எனக்கோ

நிலைத்தல் இறப்பு.

மண்ணுடன் அவள் எனை 

வேரால் இறுகக் கட்ட முனைந்தும், 

நானோ விண்ணுள் அவளைச் சிறகுடன்

எய்ய நினைந்தும் தோற்றுப் போனோம். 

 

 

*

உண்மைதான் அவளை 

நொண்டியென்று விரக்தியில் வைதது.

முதலில் அவள்தான் என்னைப் பார்த்து 

கண்ட மரம் குந்தி, ஓடுகாலி

மிதக்கும் நரகல் என்றாள். 

 

 

*

 

ஓரு வழியாக இறுதியின் இறுதியில்

கூட்டுக்காகவும் குஞ்சுகட்காகவும்

சமரசமானோம்.

மாய ஊறவின் கானல் யதார்த்தமும் 

வாழ்வின் உபாயங்களும் 

காலம் கடந்தே வாய்த்தது நமக்கு.

நம் காதலாய் அரங்கேறியதோ 

உயிர்களைப் படைக்குமோர் பண்ணையார்

என்றோ எழுதிய நாடகச் சுவடி.

 

 

*

இப்போது தெளிந்தேன்.

சந்திக்கும் போதெலாம் 

என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்.

”ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்

உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.”

மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்

” என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள் 

என் கிளைகளில் அமர்ந்ததோ 

நீ மட்டும்தான்.”

 

 

*

இப்படித்தான் தோழதோழியரே

ஒரு மரமும் பறவையும் காவியமானது.

------------------------------------------------------------------------------------------------

நன்றி . குறுந்தொகை 

கிரியா பதிப்பகம்

http://www.crea.in/p...page=0

 
  •  
 

 

Edited by poet

 

இக்கவிதையின் நாயகியான் என் மனைவி வாசுகிக்கு சமர்ப்பணம்

 

 

என் கதை 

வ.ஐ.ச.ஜெயபாலன்

*

அவள் தனி வனமான ஆலமரம்.

நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை.

என்னை முதன் முதற் கண்டபோது 

நீலவானின் கீழே அலையும்

கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம்.

நானோ அவளை 

கீழே நகரும் பாலையில் தேங்கிய 

பாசி படர்ந்த குளமென்றிருந்தேன்.

*

ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி

ஜாடை காட்டினாள்.

மறுநாள் அங்கிருந்தது என் கூடு.

இப்படித்தான் தோழதோழியரே

எல்லாம் ஆரம்பமானது.

தண்ணீரை மட்டுமே மறந்துபோய்

ஏனைய அனைத்துச் செல்வங்களோடும்

பாலை வழி நடந்த காதலர் நாம்.

*

அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை.

நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது.

சிறகுகளில் மிதக்கும் எனக்கோ

நிலைத்தல் இறப்பு.

மண்ணுடன் அவள் எனை 

வேரால் இறுகக் கட்ட முனைந்தும், 

நானோ விண்ணுள் அவளைச் சிறகுடன்

எய்ய நினைந்தும் தோற்றுப் போனோம். 

*

உண்மைதான் அவளை 

நொண்டியென்று விரக்தியில் வைதது.

முதலில் அவள்தான் என்னைப் பார்த்து 

கண்ட மரம் குந்தி, ஓடுகாலி

வெள்ளத்தில் மிதக்கும் நரகல் என்றாள். 

*

 

ஓரு வழியாக இறுதியின் இறுதியில்

கூட்டுக்காகவும் குஞ்சுகட்காகவும்

சமரசமானோம்.

மாய ஊறவின் கானல் யதார்த்தமும் 

வாழ்வின் உபாயங்களும் 

காலம் கடந்தே வாய்த்தது நமக்கு.

நம் காதலாய் அரங்கேறியதோ 

உயிர்களைப் படைக்குமோர் பண்ணையார்

என்றோ எழுதிய நாடகச் சுவடி.

*

இப்போது தெளிந்தேன்.

சந்திக்கும் போதெலாம் 

என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்.

”ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்

உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.”

மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்

” என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள் 

என் கிளைகளில் அமர்ந்ததோ 

நீ மட்டும்தான்.”

*

இப்படித்தான் தோழதோழியரே

ஒரு மரமும் பறவையும் காவியமானது.

------------------------------------------------------------------------------------------------

நன்றி . குறுந்தொகை 

கிரியா பதிப்பகம்

http://www.crea.in/p...page=0

 

 

 

 

 

என் கதை என்பதை விட " மரமும் பறவையும் " என்ற தலைப்பு நன்றாக இருக்கும் என்று நினைகின்றேன் . கவிதைக்குப் பாராட்டுக்கள் வ செ ஐ .

 

  • கருத்துக்கள உறவுகள்

உருவகம் அருமை. 

கவிதையின் எளிமையோடு இணைந்துவரும் மிகைப்படுத்தப்படாத நளினம் .... 

 

என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்.
”ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்
உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.”
மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்
” என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள் 
என் கிளைகளில் அமர்ந்ததோ 
நீ மட்டும்தான்.”   

 

 நன்றிகள் பகிர்வுக்கு. 

 

குறுந்தொகை இன்னும் இங்கே கிடைக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞரே.

 

சிறகுக்கும் வேருக்குமான உறவு அசாத்தியமானது. சாத்தியமாகியிருக்கிறது உங்கள் இருவருக்குமான வாழ்வில் மட்டுமே. வாழ்வின் கணங்களை அழகான தமிழில் இழைந்து பின்னியிருக்கிறீர்கள். தேடல்களும் தெளிவு தந்த அனுபவங்களும் இருவருக்காகினும் சிறப்பாக எழுதுவது உங்களுக்கே உரித்தானது. நன்றி கவிஞரே உங்கள் படையலுக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர்கள் கோமகன், , நெற்கெழுதாசன். கவிதாயினி வல்வை சகாறா தோழி நிலாமதி எல்லோருக்கும் நன்றியும் அன்பான நல்வாழ்த்துக்களும்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தெளிந்தேன்.

சந்திக்கும் போதெலாம் 

என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்.

”ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்

உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.”

மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்

” என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள் 

என் கிளைகளில் அமர்ந்ததோ 

நீ மட்டும்தான்.”

 

 

கவிதை ரசித்தேன். உவமான உவமேயங்கள் அபாரம்.

உங்கள் கதையை அழகாக உருவகப்படுத்திச் சொல்லியிருக்கும் கவித்துவம் ரொம்ப அருமை.

பகிர்வுக்கு மிக்க நன்றி கவியரே... உங்கள் கவிச்சிறகுகளை இங்கும் விரித்ததற்கு! :)

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய ஒரு கவிதை!

 

கவிதையின் கருப்பொருள் உறவும், பிரிவும் கலந்த ஒன்றாக இருந்தபோதும், அதில் இழையோடும் 'நளினம்' இருவருக்குமிடையாளன 'முரண்பாடுகளை, மறை பொருளாக்கிய விதம், உங்கள் கவித்துவதுக்குச் சான்றாக அமைகின்றது!

 

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் ! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர்கள் நுணாவிலான், கவிதை, புங்கையூரான் மூவருமே நீண்டகாலமாக எனது கவிதைகளில் ஈடுபாடுள்ளவர்கள். உங்கள் ரசனை ஆர்வத்துக்கு நன்றிகள்

 

 


தோழர்கள் நுணாவிலான், கவிதை, புங்கையூரான் மூவருமே நீண்டகாலமாக எனது கவிதைகளில் ஈடுபாடுள்ளவர்கள். உங்கள் ரசனை ஆர்வத்துக்கு நன்றிகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தெளிந்தேன்.

சந்திக்கும் போதெலாம் 

என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்.

”ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்

உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.”

மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்

” என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள் 

என் கிளைகளில் அமர்ந்ததோ 

நீ மட்டும்தான்.”

 

 

நெறியோடு வாழுதல் என்பது

மிகக்கடினமான வழி

புகுந்து

வெளியில் வந்தவனுக்கு

சொர்க்கம் பாய்விரிக்கும்...... :icon_idea: 

நன்றி  தோழரே உங்கள் படையலுக்கு....

 


என் கதை என்பதை விட " மரமும் பறவையும் " என்ற தலைப்பு நன்றாக இருக்கும் என்று நினைகின்றேன் . கவிதைக்குப் பாராட்டுக்கள் வ செ ஐ .
 

 

 

இது கொஞ்சமில்லை

ரொம்ப  ரொம்ப அதிகம்  கோ....... :lol:  :D  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுக்கு, நீங்கள் எப்போதுமே நல்ல ரசிகனாகவும் நிதானமான கருத்தாளனாகவும் உங்களை யாழில் அடையாளப் படுத்தியுள்ளீர்கள். உங்கள் பாராட்டுக்களுக்கு மகிழ்ச்சி 

 

கோமகன் கருத்து தொடர்பாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். என்கதை என்றுபோட்டதால் மட்டுமே  தனிப்பட்ட ஒரு குடும்பத்து கணவன் மனைவி அனுபவமாக அதுதரும் ஞானமாக கவிதை சிறந்தது. வேறொரு குடும்ப உறவுநிலையை  கனவனை மரமாகவும் மனைவியை பறவையாகவும் மாற்றி போட்டு வாசிக்கலாம். ஆனால் மரமும் பறவையும் என தலைப்பிட்டால் கவிதையின் தத்துவ நிலைபாடே தலைகீழாக மாறிவிடும்.  அது வளமையான கட்டுண்ட பெண்ணும் சுதந்திர ஆணும் என்கிற ஆணாதிக்க கருத்தை வலியுறுத்தும் கவிதையாகிவிடும். 

 

ஒத்துக்கொள்கிறீங்களா கோமகன்? கவிதையின் தலைப்பு எழுந்தமானதல்ல. பெரும்பாலும் கவிப்பொருளை மட்டுமல்ல முழுக்கவிதைக்குமான  தத்துவ அரசியல் நிலைபாட்டையுமே அது சுட்டி நிற்கிறது. கோமகனின் பதிலை எதிர்பார்க்கிறேன் 


நன்றி விசுக்கு, நீங்கள் எப்போதுமே நல்ல ரசிகனாகவும் நிதானமான கருத்தாளனாகவும் உங்களை யாழில் அடையாளப் படுத்தியுள்ளீர்கள். உங்கள் பாராட்டுக்களுக்கு மகிழ்ச்சி 

 

கோமகன் கருத்து தொடர்பாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். என்கதை என்றுபோட்டதால் மட்டுமே  தனிப்பட்ட ஒரு குடும்பத்து கணவன் மனைவி அனுபவமாக அதுதரும் ஞானமாக கவிதை சிறந்தது. வேறொரு குடும்ப உறவுநிலையை  கனவனை மரமாகவும் மனைவியை பறவையாகவும் மாற்றி போட்டு வாசிக்கலாம். ஆனால் மரமும் பறவையும் என தலைப்பிட்டால் கவிதையின் தத்துவ நிலைபாடே தலைகீழாக மாறிவிடும்.  அது வளமையான கட்டுண்ட பெண்ணும் சுதந்திர ஆணும் என்கிற ஆணாதிக்க கருத்தை வலியுறுத்தும் கவிதையாகிவிடும். 

 

ஒத்துக்கொள்கிறீங்களா கோமகன்? கவிதையின் தலைப்பு எழுந்தமானதல்ல. பெரும்பாலும் கவிப்பொருளை மட்டுமல்ல முழுக்கவிதைக்குமான  தத்துவ அரசியல் நிலைபாட்டையுமே அது சுட்டி நிற்கிறது. கோமகனின் பதிலை எதிர்பார்க்கிறேன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்கதை தலைப்புப்பற்றிய என் விளக்கத்தை கோமகன் ஏற்றுக்கொள்ளுகிறாரா? கவிஞர் கோமகனின் கருத்துக்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

நன்றி விசுக்கு, நீங்கள் எப்போதுமே நல்ல ரசிகனாகவும் நிதானமான கருத்தாளனாகவும் உங்களை யாழில் அடையாளப் படுத்தியுள்ளீர்கள். உங்கள் பாராட்டுக்களுக்கு மகிழ்ச்சி 

 

கோமகன் கருத்து தொடர்பாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். என்கதை என்றுபோட்டதால் மட்டுமே  தனிப்பட்ட ஒரு குடும்பத்து கணவன் மனைவி அனுபவமாக அதுதரும் ஞானமாக கவிதை சிறந்தது. வேறொரு குடும்ப உறவுநிலையை  கனவனை மரமாகவும் மனைவியை பறவையாகவும் மாற்றி போட்டு வாசிக்கலாம். ஆனால் மரமும் பறவையும் என தலைப்பிட்டால் கவிதையின் தத்துவ நிலைபாடே தலைகீழாக மாறிவிடும்.  அது வளமையான கட்டுண்ட பெண்ணும் சுதந்திர ஆணும் என்கிற ஆணாதிக்க கருத்தை வலியுறுத்தும் கவிதையாகிவிடும். 

 

ஒத்துக்கொள்கிறீங்களா கோமகன்? கவிதையின் தலைப்பு எழுந்தமானதல்ல. பெரும்பாலும் கவிப்பொருளை மட்டுமல்ல முழுக்கவிதைக்குமான  தத்துவ அரசியல் நிலைபாட்டையுமே அது சுட்டி நிற்கிறது. கோமகனின் பதிலை எதிர்பார்க்கிறேன் 

நன்றி விசுக்கு, நீங்கள் எப்போதுமே நல்ல ரசிகனாகவும் நிதானமான கருத்தாளனாகவும் உங்களை யாழில் அடையாளப் படுத்தியுள்ளீர்கள். உங்கள் பாராட்டுக்களுக்கு மகிழ்ச்சி 

 

கோமகன் கருத்து தொடர்பாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். என்கதை என்றுபோட்டதால் மட்டுமே  தனிப்பட்ட ஒரு குடும்பத்து கணவன் மனைவி அனுபவமாக அதுதரும் ஞானமாக கவிதை சிறந்தது. வேறொரு குடும்ப உறவுநிலையை  கனவனை மரமாகவும் மனைவியை பறவையாகவும் மாற்றி போட்டு வாசிக்கலாம். ஆனால் மரமும் பறவையும் என தலைப்பிட்டால் கவிதையின் தத்துவ நிலைபாடே தலைகீழாக மாறிவிடும்.  அது வளமையான கட்டுண்ட பெண்ணும் சுதந்திர ஆணும் என்கிற ஆணாதிக்க கருத்தை வலியுறுத்தும் கவிதையாகிவிடும். 

 

ஒத்துக்கொள்கிறீங்களா கோமகன்? கவிதையின் தலைப்பு எழுந்தமானதல்ல. பெரும்பாலும் கவிப்பொருளை மட்டுமல்ல முழுக்கவிதைக்குமான  தத்துவ அரசியல் நிலைபாட்டையுமே அது சுட்டி நிற்கிறது. கோமகனின் பதிலை எதிர்பார்க்கிறேன் 

 

வணக்கம் வா செ ஐ  உங்கள் கவிதை நான் முதலில் படிக்கும்பொழுது ஒருவிதமான குழப்ப நிலையையே அடைந்தேன் . ஏனெனில் நான் பார்த்த வா செ ஐ யின் கவிதை முகம் என்பது , எனைப் போன்ற பலருக்கு முற்போக்கான சிந்தனைகளுக்கு  முன் மாதிரியாக இருந்தது . அனால் இப்பொழுது உங்கள் விளக்கத்திலிருந்து நான் மிகவும்  தெளிவாக உங்கள் கவிதயின் பாடுபொருளை விளங்கிக்கொண்டேன்  . முதலில் நான் பொதுப்பட உணர்வுற்று வாசித்ததனால் அவ்வாறான நோக்கில் சிந்திக்கவில்லை. ஆனால் இது உங்கள் கதையை மட்டும் சொல்லி நிற்பதனால் உங்களின் இந்தத் தலைப்பே சாலப் பொருத்தமானது என்பதை   இப்பொழுது என்னால் முற்று முழுதாக உணரக்கூடியதாக இருக்கின்றது . உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி வா செ ஐ  .

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வா செ ஐ  உங்கள் கவிதை நான் முதலில் படிக்கும்பொழுது ஒருவிதமான குழப்ப நிலையையே அடைந்தேன் . ஏனெனில் நான் பார்த்த வா செ ஐ யின் கவிதை முகம் என்பது , எனைப் போன்ற பலருக்கு முற்போக்கான சிந்தனைகளுக்கு  முன் மாதிரியாக இருந்தது . அனால் இப்பொழுது உங்கள் விளக்கத்திலிருந்து நான் மிகவும்  தெளிவாக உங்கள் கவிதயின் பாடுபொருளை விளங்கிக்கொண்டேன்  . முதலில் நான் பொதுப்பட உணர்வுற்று வாசித்ததனால் அவ்வாறான நோக்கில் சிந்திக்கவில்லை. ஆனால் இது உங்கள் கதையை மட்டும் சொல்லி நிற்பதனால் உங்களின் இந்தத் தலைப்பே சாலப் பொருத்தமானது என்பதை   இப்பொழுது என்னால் முற்று முழுதாக உணரக்கூடியதாக இருக்கின்றது . உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி வா செ ஐ  .

 

 

வ.ஐ.ச ஜெ  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன், நன்றி புங்கையூரான்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கதை கிரியா பதிப்பகம் வெளியிட்ட எனது புதிய தொகுதி selected works குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

 

வ.ஐ.ச.ஜெயபாலன் குறுந்தொகை என்ற என் புதிய கவிதைத் தொகுதியைப்பற்றியும் அதனை இணைய சந்தையில் வேண்டும் வழிகள் பற்றியும் அறிய crea இனைய பக்கம் செல்லவும்.

 

http://www.crea.in/publicationsdetails.php?id=42&customer=inr&page=0&category

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.