Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மொழிக்கு எழுத்து உருவ மாற்றம் தேவையா ??

Featured Replies

இன்று எம்மிடையே வழக்கில் உள்ள தாய் மொழியாம் தமிழ் மொழியின் எழுத்து உருவங்களில் மாற்றங்கள் அத்தியாவசியமானவையா ?? இல்லையா ?? என்பது ஓர் விவாதத்துக்குரிய பொருளாகின்றது . பிராமி எழுத்துக்களில்  தொடங்கிய தமிழின் வரிவடிவம் , வட்டெழுத்தில் ஊடறுத்து பாய்ந்து இன்று யூனிகோட்டில் வரை பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளபொழுதும் , வரிவடிவங்களில் தமிழ் தனது தனித் தன்மையை இழந்திருக்கவில்லை . அனால் வரிவடிவத்தில் மாற்றங்கள் வந்தாலே தமிழ் மொழி மேலும் வளர்ச்சி அடையும் என்ற கருத்துக்களும் இப்பொழுது  எழ ஆரம்பித்திருக்கின்றன . அண்மையில் வெளிவந்த ஓர் ஆய்வுக்கட்டுரை இந்த விடையத்தைத் தொட்டுச் செல்கின்றது . அதை உங்களுடன் பகிருகின்றேன் கள உறவுகளாகிய உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கின்றேன் .

நேசமுடன் கோமகன்

 

*************************************************************

 

Naxi_manuscript_(right)_2088.jpg

 

 

சில விசயங்களுக்கு மூக்கை மூடிக் கொண்டுப் போய் விடலாம் என்றாலும் , அப்படியே அமைதியாக இருந்து கொண்டு இருந்தால் எல்லா ஆற்றிலும் அவரவர் வீட்டு சாக்கடைகளைக் கலந்து விடுவார்கள்.  தமிழில் எழுதும் ஓர் எழுத்தாளர் , தமிழ் வரி வடிவங்களை மாற்ற வேண்டும் என்ற ஒரு கருத்தை தமிழ் தினசரி ஒன்றில் எழுதி(http://tamil.thehindu.com/opinion/columns/ஆங்கில-எழுத்துருவில்-தமிழை-எழுதினால்-என்ன/article5311674.ece) இருந்ததை வாசிக்க நேர்ந்ததன் எதிர்வினை என்பதாக இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

நாகரிகத்தின் தொடர்ச்சி , சிந்தனையோட்டங்களின் தொடர்ச்சி ஆகியன மொழியை மட்டும் சார்ந்தது அல்ல, மொழியுடன் பின்னிப்பிணைந்து இருக்கும் அதன் சொந்த வரிவடிவத்தையும் சார்ந்தது.  ஒன்றாய் இருந்தத் தமிழ் , மூன்றாய் நான்காய், ஐந்தாய் , இன்று திராவிட மொழிக் குடும்பமாய் மாறியதற்கு காரணம் வெவ்வேறு  காலக் கட்டங்களில் தமிழ் வழக்குகளாக இருந்த தெலுங்கு , கன்னடம், மலையாளம் ஆகியன தங்களுக்கு என்று புதிய வரி வடிவங்களை ஏற்றுக்கொண்டமைதான்.  சிந்து சமவெளி வரி வடிவங்கள் தமிழுக்கானவை என்றக் கருத்தும் உண்டு. இந்தக் கருத்தை ஒட்டி,  கைபர் போலன் கணவாய் வழி வந்த காட்டுமிராண்டி படையெடுப்புகள் , பேச்சு மொழியை மட்டும்  விட்டுவைத்து விட்டு , பயன் பாட்டு வரிவடிவத்தை மாற்றி இருந்து இருக்கும்  என்பதையும்  முன் வைக்கலாம்.

சில மாதங்களுக்கு முன்னர், துருக்கியத் தோழி ஒருவரிடம் , நவீன துருக்கியின் தந்தை முஸ்தபா கமால் அத்தாதுர்க்கைப் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டு இருக்கையில், அந்த தோழி சொன்னது,  'அத்தாதுர்க் அற்புதமான தலைவர், ஆனால் ஒரு விதத்தில் துருக்கிய வரலாற்றில் கரும்புள்ளி அவர் ... அற்புதமான துருக்கிய கடந்த காலத்தை எங்களிடம் இருந்து ஒட்டு மொத்தமாகத் துண்டித்து விட்டார்"

அந்தத் துருக்கியத் தோழி அப்படி சொன்னதற்கான காரணம் , 1928 ஆம் ஆண்டு , அத்தாதுர்க் , அரேபிய வரி வடிவத்தில் அமைந்து இருந்த துருக்கிய மொழி, இனி லத்தீன் வரி வடிவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் என அறிவித்ததுதான்.  பழைய வரி வடிவம் தடை செய்யப்பட்டது.  ஓட்டோமான் துருக்கியர்களின் மேல் நூற்றாண்டுகளாக கடுங்கோபம் கொண்டிருந்த மேற்கத்திய உலகம், மேற்கத்திய மோகம் கொண்ட , அத்தாதுர்க்கைக் கொண்டு தான் நினைத்ததை சாதித்துக் கொண்டது என்பது துருக்கியத் தோழியின் கருத்தாக இருந்தது.  இன்றைய துருக்கியத் தலைமுறைக்கு , ஓட்டோமான் துருக்கிய பண்பாட்டு ஆக்கங்களை அதன் உண்மையான வடிவில் வாசிக்கத் தெரியாது.மொழி மாற்றத்தில் தொலைந்தவைகளை விட வரிவடிவ மாற்றத்தில் தொலைந்தவைகள் தாம் ஏராளம்.

பாரசீகம் இஸ்லாமைத் தழுவிய பொழுது, அரேபிய வரி வடிவத்தையும் தழுவிக் கொண்டது.  உலகப் போர்களுக்குப் பின்னர் ஈரானில் லத்தீன் வரி வடிவத்திற்கு மாறிக்கொள்ளலாம் என கருத்தாக்கங்கள் எழுந்த பொழுது எல்லாம், இஸ்லாமிய அடையாளம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சி மாற்றப்படவில்லை.  உயிர் எழுத்துகளுக்கான சரியான வடிவங்கள் இல்லை என்ற குறைபாடு இருந்த பொழுதிலும் , இன்றைய தலைமுறை கடந்த காலத்துடன் எப்பொழுதும் தொடர்பில் இருக்கின்றது என்ற மகிழ்ச்சி பாரசீக மக்களுக்கு உண்டு. லத்தீன் வரி வடிவம் இன்றி சொந்த கிரேக்க வரி வடிவத்துடன் கிரீஸ் ஐரோப்பாவுடன் தான் இருக்கின்றது.

நூறாண்டுகளுக்கு முன்னர், வரி வடிவத்தை மாற்றுவதும் , இன்றையக் காலக் கட்டத்தில் மாற்றச் சொல்லுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. அன்று கல்வியறிவு பெற்றவர்களின் விழுக்காடு மிக மிகக்குறைவு. ஐரோப்பாவிற்கு நெருக்கமாக மாறவேண்டும் என்ற நிலையின் அடிப்படையில் துருக்கியில்  அன்று அந்த முடிவு எடுக்கப்பட்டது.  மெல்லத் தமிழினிச் சாகும் என்றக் கூற்றைப் பொய்ப்பிக்க திராவிட இயக்கங்கள், அதைத் தொடர்ந்து இளையராஜா,  தமிழ்த் தொலைக் காட்சி ஊடகங்கள்  தொடர்ந்து மறுமலர்ச்சிகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.  யுனிகோட் சாத்தியத்திற்குப் பின்னர் கன்னித் தமிழ் கணினித் தமிழாகவும் உருவெடுத்து உள்ளது.

சிலர் மலாய் மொழியை உதாரணம் காட்டுகின்றார்கள். இன்று லத்தீன் வரிவடிவங்களில் எழுதினாலும் அரேபிய வரி வடிவமும் புழக்கத்தில் உண்டு. மலாய் மொழி எடுப்பார் கைப்பிள்ளையாக , தொடர்ந்து வரி வடிவங்களை மாற்றிக் கொண்டே இருந்ததன் மூலம் பல வரலாற்றுச்  சுவடுகளைத் தொலைத்ததுதான் மிச்சம். அதில் தொலைந்துப் போனது மலாய் தீபகற்ப வரலாறு மட்டுமல்ல, தென்னிந்திய சோழர் வரலாறுகளும் தொடர்ந்த வரிவடிவ மாற்ற சுனாமிகளால் காணாமல் போனது.

 

இந்தோனேசியாவைப் பொறுத்த மட்டில், அது பலவேறு தேசிய இனக்குழுக்களை உள்ளடக்கிய பெரும் தீவுக் கூட்டம் அதனை ஒருங்கிணைக்க 'திணிக்கப்பட்ட மொழி' ஒன்றையும் கடன் வாங்கிய லத்தீன் வரி வடிவமும் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது.
இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்கி , லத்தின் வரி வடிவத்தை அதிகாரப் பூர்வம் ஆக்குதல் போன்றது ஒடுக்குதல் ஆகும் அது.

தமிழ்ப் பேசும் சமூகம் ஆங்கில மோகம் கொண்டு அலைந்துத் தமிழைத் தொலைக்கின்றது என்பதே பொய்யான வாதம்.  அப்படி தொலைப்பது உண்மை என்றால் எல்லா நாளிதழ்களும் வார இதழ்களும் தங்களது இணைய வடிவங்களைத் தமிழில் உருவாக்கி இருந்திராது.

லத்தீன் வரிவடிவத்தில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. ஜெயமோகன் என்பதை Jayamokan  என்று எழுதலாம்.  ஐரோப்பிய மொழிகளில் J  என்பதற்கு ஜெ எனவும் யெ எனவும் உச்சரிப்பு உண்டு.   சில சமயங்களில் உச்சரிக்கவும் படாது. வருங்காலத் தலைமுறை Jayamokan  என்ற பெயரைப் படிக்கையில்  J வை உச்சரிக்காமல்  விட்டு விட்டு ஆயா மூக்கன் அதன் பின்னர் ஆய் மூக்கன் எனவும் மாறிவிட வாய்ப்பு உண்டு.

காந்தி மற்றவர்களுக்கு போதிக்கும் முன்னர் சுயப் பரிசோதனை செய்து கொள்வாராம்.  இந்து ஞான மரபு கூட அதைத் தான் சொல்லுகின்றது எனப்படித்ததும் நினைவுக்கு வருகின்றது.  எழுத்துரு கட்டுரையாசிரியர் காந்தியத்தில் நம்பிக்கைக் கொண்டவர் என்றும் இந்து ஞான மரபை பரப்புபவர் என்ற வகையில் அவரே தனது அடுத்தப் புதினத்தை லத்தீன் வரி வடிவத்தில் வெளியிடலாம்.

அந்த 'எழுத்துரு' கட்டுரை ஆசிரியர் விவாத எண்ணங்களை விதைக்கின்றார் என சிலர் பூசி மெழுகிக் கொண்டு இருப்பதால்,  நாம்  விவாத நோக்கில் பார்த்தோம் என்றாலும், இன்னும் இருபது வருடங்களில் சீன மொழி தான் உலக மொழியாகப் போகின்றது.  தமிழை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்  என்ற நோக்கம் இருந்திருந்தால் அந்தக் கட்டுரையாசிரியர் சீன வரி வடிவங்களைத் தான் முன் மொழிந்து இருக்க வேண்டும்.

ஸ்னொவ்டன் அவர்களின் கலகத்திற்குப்பின்னர் மென் பொருள் என்றாலே ஐயப்பட வேண்டி இருக்கின்றது.  ஒரு வேளை அந்தக் கட்டுரையாசிரியருக்கு தமிழ்த் தட்டச்சு மென்பொருள்கள் மேல் சந்தேகம் வந்து இருக்கலாம்.  எதற்கு சின்ன எலி பெரிய எலிக்கு தனித்தனி பொந்துகள் , ஒரேப் பொந்தாக , தனித் தனி மென்பொருள் தேவையின்றி லத்தீன் வரி வடிவம் இருந்தால் Thamiz  Vazhka எனச் சொல்லிவிடலாம் எனக் கருதி எழுதி இருப்பதாகத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

லத்தீன் வரி வடிவம், தமிழைத் தொடர்ந்து மற்ற மொழிகளுக்கும் பின்பற்றப்படுமானால் ஒரு பயன் இருக்கின்றது.  மலையாளம் , சேரலத்து தமிழ் வழக்காக மீண்டும் தமிழுடன் சேரும். பின்னர் தொடர்ந்து துளு, கன்னடம் தெலுங்கு என இந்த வரி வடிவ மாற்றத்தால் தமிழுடன் சேர்ந்து தமிழ் செழுமையுறும் என கட்டுரையாசிரியர் நினைத்து இருந்து இருக்கலாம் என நாமும் நம் பங்கிற்கு ஒரு சப்பைக் கட்டு கட்டிவிடுவோம்.

குரூர அரசியல் நகைச்சுவையாக நீண்ட நாட்களுக்கு முன்னர் , நண்பர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. தமிழர்களை ஒடுக்க வன்முறையைக் கையில் எடுத்தற்குப் பதிலாக , தமிழுக்கு சமமான அந்தஸ்து உண்டு , ஆனால் தமிழ் சிங்கள வரிவடிவத்தில் எழுதப்பட வேண்டும் என உடன்படிக்கை செய்து கொண்டிருந்தால் ஈழத்தமிழர்கள் மலையாளிகளைப் போல தனிச் சமூகமாக மாறி இருந்து இருப்பார்கள்.  ஆனால் நம்பூதிரிகளைப் போல சிங்களவர்கள் புத்திசாலிகள் இல்லை என நண்பர்  சொன்னார்.

சரி முடிவாக, அடுத்தத் தலைமுறைக்கு தமிழைக் கொண்டுச் செல்லவேண்டும் என்றால், தமிழைப்படியுங்கள் , இணைப்பு மொழியாக ஆங்கிலம் / ஐரோப்பிய மொழிகளைப் படியுங்கள்.  இவற்றுடன் சீன வரி வடிவத்தையும் கற்றுக் கொள்ள மறவாதீர். எதிர்காலத்தில் இழப்பின்றி வரலாற்றை வரிமாற்றம் செய்யப் பயன்படும். சித்திர எழுத்து வரி வடிவம் தமிழுக்குப் புதிதல்ல .. 'சிந்துசமவெளி'யில் இருந்த தமிழுக்கும் சித்திர எழுத்துதான். 

 

எழுத்தாக்கம் வினையூக்கி at 7:47 AM  

 

http://vinaiooki.blogspot.it/2013/11/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழிக்கு எழுத்து உருவ மாற்றம் தேவையா ??

 

இல்லை. இப்ப இருக்கிற வரி வடிவத்தில் ஆருக்கு என்ன பிரச்சினை? தமிழகத்துக்கு தென்பகுதியில் ஒரு தேசிய இனமே அழிந்துகொண்டு இருக்கு. அதுக்காகக் குரல் கொடுக்க வக்கில்லை. ஜெயமோகன் போன்ற புல்லுருவிகள் களையப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்றவாறு தமிழ் மொழி தன்னைத் திடப்படுத்திக் கொண்டு

தன்னைக் காப்பாற்றிக்கொண்டு வருகின்றது.
மாற்றங்கள் இயல்பாக வரும்போது தமிழ் மொழியின் தொன்மை கெடாது.
மாற்றங்களைத் திணிப்பதால் தமிழ் மொழியின் தொன்மையும் கெட்டு
அதன் ரசனையும் கெட்டு ஒரு காலத்தில் அழிவுப் பாதைக்கே
வழி வகுக்கும்

தமிழை தங்கிலிஷில் எழுதலாம் என்று
சொல்லும் பிரபல எழுத்தாளர்களே ?

முதலில் எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ?

ENGLISH க்கு தமிழில் பெயர் - ஆங்கிலம் !

தமிழுக்கு ஆங்கில பெயர் என்ன ?

மணிக் வீரமணி .

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன். பயனுள்ள விவாதத்துக்கான கட்டுரை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை தங்கிலிஷில் எழுதலாம் என்று

சொல்லும் பிரபல எழுத்தாளர்களே ?

முதலில் எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ?

ENGLISH க்கு தமிழில் பெயர் - ஆங்கிலம் !

தமிழுக்கு ஆங்கில பெயர் என்ன ?

மணிக் வீரமணி .

 

ஆங்கிலம் என்பதும் தமிழா என்பதே சந்தேகம்.

 

பிரேஞ்ச் மொழில் Anglais என்று சொல்வார்கள். Angleterre என்பது ஆங்கிலேயர்களை குறிக்கின்றது. அதனாலயே ஆங்கிலம் என்று வழக்கத்தில் வந்திருக்கலாம். 

 

ஸ்பானிய மொழியில் மட்டும் "inglés" என்கிறார்கள். ஒருவேளை இது தான் பின்னர் காலனியாதிக்கத்தில் "inglisch, english" என்று மாறியதோ தெரியவில்லை.

 

தமிழுக்கு ஆங்கிலத்தில் "டமில்" என்று சொல்வார்கள்  :lol:

 

பிரேஞ்ச் மொழியில் "tamoul" என்று சொல்கிறார்கள். ஜேர்மன் மொழியில் "tamilisch" என்று சொல்கிறார்கள். 

  • தொடங்கியவர்

தமிழ் மொழிக்கு எழுத்து உருவ மாற்றம் தேவையா ??

 

இல்லை. இப்ப இருக்கிற வரி வடிவத்தில் ஆருக்கு என்ன பிரச்சினை? தமிழகத்துக்கு தென்பகுதியில் ஒரு தேசிய இனமே அழிந்துகொண்டு இருக்கு. அதுக்காகக் குரல் கொடுக்க வக்கில்லை. ஜெயமோகன் போன்ற புல்லுருவிகள் களையப்படவேண்டும்.

 

 

கேள்வியே அதுதானே வாலி . மேலும் எல்லோருக்குமே தங்கள் கருத்துக்களைச் சொல்வதற்கு உரிமையுண்டு . ஜெயமோகன் தனது இயங்குதளத்தில் இருந்து தனது கருத்தை வைக்கின்றார் . இங்கு நான் பகிர்ந்தது அவருடைய கருத்துக்கு வினையூக்கியின் எதிர்வினையை . அதன் மூலம் எனதுகருத்தையும் கோடுகாட்டியுள்ளேன் . ஒருவர் தமிழ்த் தேசியம் தொடர்பாக வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால்தான் உண்மையானவர் என்றும் , ஆதரவு தெரிவிக்காதவர் பொய்யர் என்பதும் எமது அறிவின்மையைத்தான் காட்டி நிற்கின்றது  :)  :)  .

 

கேள்வியே அதுதானே வாலி . மேலும் எல்லோருக்குமே தங்கள் கருத்துக்களைச் சொல்வதற்கு உரிமையுண்டு . ஜெயமோகன் தனது இயங்குதளத்தில் இருந்து தனது கருத்தை வைக்கின்றார் . இங்கு நான் பகிர்ந்தது அவருடைய கருத்துக்கு வினையூக்கியின் எதிர்வினையை . அதன் மூலம் எனதுகருத்தையும் கோடுகாட்டியுள்ளேன் . ஒருவர் தமிழ்த் தேசியம் தொடர்பாக வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால்தான் உண்மையானவர் என்றும் , ஆதரவு தெரிவிக்காதவர் பொய்யர் என்பதும் எமது அறிவின்மையைத்தான் காட்டி நிற்கின்றது  :)  :)  .

 

 

இடத்தை பொறுத்தது. ஆளைபொறுத்தது. பண்பாட்டை பொறுத்தது.

 

எல்லா இடத்ததிலும் எல்லோரினது மௌனமும் சம்மதம் அல்ல.

 

நிச்சயமாக அரசியலில் எதிரியின் செயல்ப்பாட்டை கண்டிக்காமை சம்மதம். 

 

பொதுமக்கள் எதிலும் கிளர்ந்தெழ வேண்டும் என்பதிலை. தன்னை மதியூகியாக்காட்ட விளைவபவன் தேவையான இடத்தில் கருத்து சொல்ல மறந்தால் அவன் மதியூகி அல்ல. அவன் வெறும்  வெறும் பைத்தியகாரன். தேவை இல்லாத இடத்தில் தேவை இல்லாதது பேசும் விசரன். 

 

அரசியலில் இருந்து ஓடி கவிதையில், கவிதையில் இருந்து ஓடி அரசியலில் ஒளிக்கும் கல்விமானகள் அன்ன நடை நடக்கும் காகங்கள்

 

ஆனால் தாயொடு சோறு, தந்தையோடு கல்வி என்பார்கள். எனவே தனக்கென துறையை தேடி ஒதுங்கியவனை பார்த்து விரல் நீட்டத்தவை இல்லை. 

 

இந்த நேரத்தில் ஜெயமோகன் செய்தது சரி இல்லாமல் இருக்கலாம். அல்லது சரியாக இருக்கலாம். ஜெயமோகன் அரசியலில் புரட்சிவாதியாக காட்டி தன்னைத்தான் தான் நியமன அலோசகராக களங்களில் இறக்காமல் தனது களத்தில் தான் விரும்பிய  ஒன்றை பதிய முடியும். 

 

தனிப்பட" ஜெமோகன் உபயோகமான, தமிழுக்கு இன்று தேவையான மற்றைதை" பற்றி பேசுகிறார் போல் எனக்கு படவில்லை". இதில் தமிழ் அறிந்த ந்மது "வாத்தியாரின்" கருத்துதான் எனதும்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது கணனித் தமிழ் மாற்றத்துடனேயே காணப்படுகின்றது.  இதுபோதும். உயிரெழுத்துக்களில் கைவைத்து மாற்றம் செய்வதை ஏனோ என் மனம் விரும்பவில்லை.  அதற்கான காரணம் தெரியவில்லை.  அது ஓர் உள்ளுணர்வு.

  • தொடங்கியவர்

ஆங்கில எழுத்து தமிழ் எழுத்தில் இருந்தே உருவாக்கப்பட்டதா ?

 

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்ற தமிழ் இந்துவில் வெளியான கட்டுரை (4.நவ 2013) சர்ச்சையை ஏற்படுத்தியது பொதுவில் இந்த கேள்வியே தேவை இல்லை என்பது ஒரு சாரரின் வாதமாக இருக்கிறது.

தங்கிலீசிலே எழுத குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் தமிழின் எழுத்துக்களின் ஒலி குறிப்பையே அறியாமல் போய் விடுவர். தமிழ் தமிழா தான் இருக்கவேன்டும் இங்கிலீசு இங்கிலீசாகத் தான் இருக்க வேண்டும்.  இந்த கருத்தையே மற்ற மொழி காரர்களின் சொல்லியிருந்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையே வேறு.  தமிழன் தான் எதை சொன்னாலும் தலையாட்டி விடுவான் கைதட்டி ரசிப்பான் என்ற எண்ணத்தையே இது பிரதிபளிக்கிறது.

 

//மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். க என்ற எழுத்தைப் பார்த்ததும் அந்த ஒலி நினைவுக்கு வருவதற்கு நாம் இளமையிலேயே குழந்தைகளைப் பழக்குகிறோம். நமக்கு அது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

எழுதுவது என்பது இன்னும் சிக்கலானது. சமூகவியல் ஆய்வாளரான மிஷேல் ஃபூக்கோ “எழுத்து என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி” என்கிறார். நம் குழந்தைகளுக்கு அதைக் கட்டாயமாக ஆக்கியிருப்பதால் அவர்கள் இளமையில் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் அது மிகக் கடினமான ஓர் உழைப்பு. மிருகங்களையும் பறவைகளையும் வித்தைக்காகப் பழக்குவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு உண்மையில் இல்லை.

 

இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. க என்றாலும் ka என்றாலும் ஒரே உச்சரிப்புதான் என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது. மேலும், எழுத்துகளைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. இது கல்வி அல்ல, பயிற்சி. தொடர்ந்து நிகழும் பயிற்சியே நம்மிடம் நீடிக்கும். நம் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே எழுதுகின்றன, வாசிக்கின்றன. ஆகவே, இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட தமிழ் அவர்கள் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.

இந்தச் சிக்கலைத் தாண்டுவதற்கான வழிமுறைகளைத்தான் நாம் யோசிக்க வேண்டும். இன்று நானறிந்து தமிழகத்தில் இணையம், ஃபேஸ்புக் போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்: அம்மா இங்கே வா வா என்றால், “ammaa ingkee vaa vaa” என்று. ஒரு வாரத்தில் அவர்கள் ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதும் பயிற்சியை அடைந்துவிடுகிறார்கள்.

நான் பதின்மூன்றாண்டு காலமாக ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சுசெய்கிறேன். பேசும் வேகத்தில் எழுத முடியும் என்னால். கண்ணெதிரே தமிழ் தெரிகிறது, என் கைகளில் ஆங்கில எழுத்துருக்கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழை நான் சரளமாக வாசிக்கவும் செய்வேன். ஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதக் கூடாது?

பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா? நாம் தமிழைப் பேசிக்கொண்டிருக்கும்வரை தமிழ் நம்முடன் இருக்கும். அதை அனைவரும் சரளமாக வாசிப்பதற்கான வழியை மட்டுமே யோசிக்கிறேன். உடனடியாகக் கேள்விப் படும்போது சற்று அபத்தமான, அதீதமான எண்ணமாக இது தோன்றக்கூடும். ஆனால், எல்லா மாற்றங்களும் முதலில் அப்படித்தான் தோன்றும். அவற்றுக்கு மரபு அளிக்கும் கடுமையான எதிர்ப்பும் முக்கியமானது. அந்த எதிர்ப்பையும் கருத்தில்கொண்டு வெற்றி பெற்று நிகழக்கூடிய மாற்றமே ஆக்க பூர்வமாக இருக்கும்.ஆகவே, நாம் இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

 

எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல. தமிழ் ஆரம்ப காலத்தில் பிராமி எழுத்துருவில்தான் எழுதப்பட்டன. அந்த எழுத்துகளில் இருந்து வட்டெழுத்து உருவாகிவந்தது. அந்த எழுத்துரு கைவிடப்பட்டு, இன்றைய எழுத்துரு வந்திருக்கிறது. அச்சு வடிவுக்கு வந்த பின் இந்த எழுத்துருவில் ஏராளமான மாறுதல்கள் வந்துள்ளன. பயிற்சி பெற்ற ஒருவரே நூறாண்டுகளுக்கு முந்தைய சுவடிகளை வாசிக்க முடியும். வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது. அது காதில் தமிழ் கேட்கும் சூழல்கொண்ட, தமிழைப் புரிந்துகொள்ளக்கூடிய எவரும் தமிழில் வாசிக்கும் சூழலை உருவாக்கும். தமிழ் வருங்காலத்திலும் வாசிக்கப்படும். இல்லை யேல், தமிழ் ஒருவகைப் பேச்சு வழக்காக மட்டுமே நீடிக்கும். அதில் இலக்கியமும் அறிவுத் துறைகளும் நிகழாமல் போகும். சம்ஸ்கிருதம்போலப் பாதுகாக்கப்படும் தொல்பொருளாகவோ பல்வேறு பழங்குடி மொழிவழக்குகள்போல நடைமுறை உரை யாடலுக்கான ஒன்றாகவோ மட்டுமே தமிழ் நீடிக்கும். - 

 

ஜெயமோகன், எழுத்தாளர்//

 

இந்த கருத்திற்கு பதிலை நாம் எங்கும் தேட வேண்டாம் சொல் –மொழி – வரலாறு ஆய்வாளர் ம.சோ.விக்டர்  அவர்களின்  ஆய்வு கட்டுரை தமிழ் எழுத்துகள் - இதற்கெல்லாம் விளக்கம் அளிக்கும், என கருதுகிறேன்.
 

tamil_letters2.jpg

 

அந்த கட்டுரை கீழே,  அதற்கு முன் அவர் இந்த கட்டுரையில் கோடிட்டு காட்டும் முக்கிய விசயம் என்னவென்றால்  உலக மொழிகளின் மூலம் தமிழ் தான் என்பதை எழுத்து ஆய்வின் மூலம் நமக்கு விளக்குகிறார்.   தமிழ் எழுத்து வடிவம்  சிந்து வெளி குறியீட்டு எழுத்திலிருந்து தமிழ் பின் மேற்குலக மொழிகளிலில் (அதாவது பொனீசியம், எபிரேயம்,கிரேக்கம், இலத்தின், பிறகு ஆங்கில எழுத்தாக உருமாற்றம் ) எப்படி உருமாற்றம் பெற்றிருக்கும் என்பது அதே தமிழ் எழுத்து வடிவம் சமஸ்கிருத்தில் உருமாற்றம் பெற்றிருக்கும் என்பதையும் விளக்கமாக இக் கட்டுரையில் குறிப்பிட்டி இருக்கிறார்.

 

எழுத்துகள், எண்ணங்களின் வெளிப்பாடுகளைப் பதிவு செய்யப் பயன்படுபவை. எழுத்துகள் எந்தஒருவராலும் கண்டுபிடிக்கப்பட்டதன்று. இயற்கையாகவே தோன்றிய மாந்தனின் சிந்தனை,குறியீடுகளாக வெளிப்பட்டன. அவ்வப்போது அக்குறியீடுகள் மாற்றம் செய்யப்பட்டன அல்லதுசெப்பம் செய்யப்பட்டன. உலகில் முதலில் தோன்றிய மொழிக்கே முதன்முதலான குறியீடுகளும்எழுத்துகளும் இருந்திருக்க வேண்டும். மொழியை ஓரினம் பேசி, அம்மொழிக்கு வேறோர் இனம்எழுத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்க இயலாது. உலகில் முதலில், இயற்கையாகத்தோன்றிய மொழி தமிழே என்பதால், தமிழ்மொழியில்தான் முதல் எழுத்து வடிவங்கள்தோன்றின என்பது இயல்பாகச் சிந்திக்கக் கூடியதே.

சிந்துவெளி நாகரிகம் பற்றிப் பல்வேறு ஆய்வுகள், பல்வேறு காலங்களைக் குறிப்பிட்டாலும்,அதன் காலம் புதுப்புது ஆய்வுகளால் மேலும் மேலும் நீண்டு கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. அண்மையில் பாகித்தானிய ஆய்வுக்குழு (2009) சிந்துவெளியில் ஒரு புதியநகரை அகழ்வாய்வு செய்தது. அக்குழு சிந்துவெளி நாகரிகம், கி.மு. 9500 ஆண்டுகளுக்குமுற்பட்டது என்று அறிவித்தது.இடைக்கால இத்தாலி நாட்டில் அறியப்பட்ட வழவழப் பானகண்ணாடி போன்றே, அந்நகரில் கண்ணாடித் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முறையானஆய்வுகள், சிந்துவெளிக் காலத்தை, கி.மு.12000 ஆண்டுகள் என மெய்ப்பிக்கும். ஏனெனில் பனிஉருகல் காலத்தின் இறுதிப்பகுதியே, சிந்துவெளி நாகரிகத்தின் தொடக்கம் எனக் கொள்வதில்தவறேதுமில்லை.

சிந்துவெளியில் காணப்பட்டவை, குறியீடுகளா அல்லது சொற்களா என்ற கருத்து மாறுபாடுகள்தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. தமிழ் அறிஞர்களான ஐராவதமும், மதிவாணனும்பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர்கள். இருவரிடையே சில முரண்பாடுகள்உள்ளனவென்றாலும், மதிவாணனின் ஆய்வுகள், மற்றவர்களைக் காட்டிலும் ஏற்றுக் கொள்ளும்வகையில் உள்ளன என்பது என்னுடைய கருத்து. ஐராவதம் கூறும் பல செய்திகள் சரியான,நிலையான முடிவுகளைத் தராமலேயே உள்ளன. எழுத்துகளைப் பற்றி ஐராவதம் கூறும்செய்திகள் மயக்கத்தைத் தோற்றுவிப்பன.

 

ஆரியம் வேறு சமற்கிருதம் வேறு :

 

எகிப்திய, மெசபத்தோமிய, இத்திய, சுமேரிய எழுத்துகளைப் படித்துப் பொருள்கூறப் பலரும்முயன்றுள்ளனர். இவ்வாறான முயற்சிகளில் முழுவெற்றி கிடைக்கவில்லையாயினும்,ஓரளவுக்கு அவ்வெழுத்துகள் தரும் சொற்களின் பொருளோடு ஆய்வாளர்கள்நெருங்கியிருக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். மேற்கண்ட மொழிகளில் காணப்பட்டகுறியீடுகளில் ஒரு பொதுமைத் தன்மையிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கே அறியப்பட்டதொன்மைக் காலக் குறியீடுகள் தமிழோடு தொடர்புடையன என்பதை அண்மைக்கால ஆய்வுகள்மெய்ப்பிக்கின்றன. குறிப்பாக, இத்திய (Hittite) மொழியின் பல நூறு சொற்கள், சமற்கிருதத்தில்காணப்படுவதாகவும், குறிப்பாக இரிக்கு வேதத்தில் உள்ளனவென்றும் எசு.ஆர். இராவ் என்றஆய்வாளர் கருத்துரைத்தார்.2 இத்தியம், சமற்கிருதம் ஆகிய மொழிச் சொற்கள்,சிந்துவெளியிலும் காணப்படுவதால், சிந்துவெளி நாகரிக மக்கள் ஆரியரே என்று அவர் முடிவுசெய்தார். இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர் பேசிய மொழி எதுவென்பதில் குழப்பங்கள்இருந்தாலும், அனதோலிய இத்திய மொழியோடு, ஆரியம் தொடர்பு கொண்டுள்ளதைத் தற்போதுகண்டுபிடித்துள்ளனர். பொதுவாக ஆரியம், சமற்கிருதம், வடமொழி என்பதெல்லாம்சமற்கிருதத்தையே குறிப்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில் அவை வெவ்வேறுமொழிகளைக் குறிக்கும் சொற்களாகும்.

இத்தியர்கள் பேசிய அனதோலியப் பகுதி மொழியிலேயே தமிழ்ச் சொற்கள் இருந்தன என்பதைத்தற்காலத்து ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன என்பதால், இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியரின்மொழியிலேயும் தமிழின் தாக்கங்கள் இருந்தன எனலாம். சமற்கிருதம் என்பது பிற்காலத்தில்அறிஞர்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான மொழி. கமுக்கமான அல்லது மறைபொருளானசெய்திகளைப் பதிவு செய்வதற்கு அறிஞர்கள் உருவாக்கிய மொழியே சமற்கிருதமாகும் (Scribal Language).இவ்வாறான கமுக்க மொழி பாபிலோனிலும் அறியப்பட்டிருந்தது. தமிழகத்துக்குவடக்கே பேசப்பட்ட தமிழின் கிளை மொழிகள், வட மொழிகள் எனப்பட்டன. ஆரியருக்கும்சமற்கிருதத்துக்கும் தொடக்கத்தில் எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை. அரப்பா நாகரிகம்முடிவுற்றபோது, அரசியலில் குழப்பமான சூழல்கள் நிலவி, நிலையான ஆட்சிகள் இல்லாமற்போயின.

 

உண்மைக்குப் புறம்பானது :

 

அறிஞர்களின் மொழியான சமற்கிருதத்தை இந்திய மொழியியலாளரே உருவாக்கினர்.சமணர்களும் அடுத்துப் புத்தச் சமயத்தினரும் பயன்படுத்திய சமற்கிருதம், பின்னர் இருவராலும்கைவிடப்பட்ட நிலையில் கி.மு. 500 ஆண்டுகளில்தான் ஆரியர்கள் அம்மொழியைக்கையிலெடுத்தனர். அடுத்து வருகை தந்த கிரேக்க மொழியின் பல சொற்களைச் சமற்கிருதத்தில்கலந்து அதனைப் புதுக்கினர்.4 இதனால் ஒரு சொல்லின் மூலம் கிரேக்கத்தில் உள்ளதா அல்லதுசமற்கிருதத்தில் உள்ளதா என்ற குழப்பம் கூட அறிஞர்களுக்கு ஏற்பட்டது. குறி என்ற தமிழ்ச்சொல்லே, க்ரு (kru) அல்லது க்ரி (kri) எனத் திரிந்து கிரித் (krit) என்றானது. செம்மை என்றதமிழ்ச்சொல், செம்-சம் எனத் திரிந்தது. குறியென்பது எழுத்தை மட்டுமல்லாது மொழியையும்குறிக்கும். எனவே, சமசுகிரித் (Samskrit) என்ற சொல், செம்மைப்படுத்தப்பட்ட மொழி என்றவாறு,தமிழ்த் திரிபுச் சொல்லாக அமைந்தது. அறிஞர்கள் சமற்கிருதச் சொற்களைத் தமிழ்எழுத்துகளாலேயே (பிராமி) பதிவு செய்திருந்தனர். சமற்கிருதத்துக்கெனத் தனி எழுத்து வடிவம்கி.பி.200 ஆண்டுகளுக்குப் பிறகே அறிமுகம் செய்யப்பட்டது. இந் நிலையில், சமற்கிருதஎழுத்துகளிலிருந்தே தமிழ் எழுத்துகள் தோன்றின என்பது நகைப்பிற்கிடமானது. சமணர்களேஅல்லது புத்தச் சமயத்தினரே தமிழ் எழுத்துகளை அறிமுகம் செய்தனர் என்றவாறுசொல்லப்படுவதும் உண்மைக்குப் புறம்பானது.

சமணமும் புத்தமும் தமிழரின் பகுத்தறிவுக் கொள்கை வழி எழுந்த சமயங்களாகும்.தொடக்கத்தில் அவை சமயங்களாக அறியப்படாமல், நெறிகளாகவே கருதப்பட்டன. பாலிமொழியும் வடதமிழ் மொழியின் ஒரு கிளை மொழியே. சமணர்களும் புத்தர்களும், எந்தவொருஎழுத்து முறையையும் உருவாக்கியதாக அவர்களே கூறவில்லை. தமிழ் எழுத்துகளின்நடைமுறை, குமரிக் கண்டத்திலிருந்தே சிந்துப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிந்துப் பகுதிமக்கள், தங்கள் முன்னோர் பயன்படுத்திய எழுத்துமுறை யையே பின்பற்றினர் என்பதால்,சிந்துவெளியின் ஒரு புதிய எழுத்துமுறையைக் கண்டுபிடித்தனர் எனக் கூற இயலாது.

சிந்துவெளி நாகரிகம் கி.மு.1800 ஆண்டுகளில் நிறைவுற்றதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.5அக்கால அளவில் சிந்துவெளி எழுத்துமுறை பரவலாக அறியப்படா மலும், பொதுமக்களும்படித்து அறிந்துகொள்ளும் வகை யில் அமையாமலும் இருந்ததையுணர்ந்த தமிழ் அறிஞர்கள்,பொது மக்களும் பயன்படுத்தக் கூடிய புதிய தோர் எழுத்து முறையை அறிமுகம் செய்தனர்.ஆரியர்கள் புதிய எழுத்து முறையை அறிமுகம் செய்தனர் என்ற செய்தி எங்கும் காணப்படவில்லை. தமிழர்கள் அறிமுகம் செய்த புதிய எழுத்து முறையைத் தங்களுடையது போல்காட்டிக் கொள்ள, பிராமி என்ற பெயரைப் பிற்காலத்தில் ஆரியர்கள் சூட்டி, அம்முறையைப்பிரம்மாவே தங்களுக்குக் கற்றுத் தந்ததாகக் கூறிக்கொண்டனர். பழைய சிந்துவெளி எழுத்துமுறையும், புதிய முறையும் சில நூற்றாண்டுகள் வரை இணைத்தே எழுதப் பட்டுப் பிற்காலத்தில்பழைய முறை கைவிடப்பட்டது.

 

பொணீசியர் - தமிழர் :

 

மேற்கே பொணீசியர் என்ற மரபினர், இந்தியாவுடன் கி.மு.2000 ஆண்டுகளிலேயே வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர். பொணீசியர் என்ற சொல், கிரேக்கர்கள் சூட்டியதாகும். உண்மையில்அவர்கள் எபிரேய மொழி பேசிய (யூத) மக்களே. இம்மக்களின் முன்னோர் பற்றிய செய்திகள்,அவர்களைச் சிந்துவெளி மக்களோடு தொடர்பு படுத்துகின்றன. பொணீசியர்கள் தமிழகத்தோடும்தொடர்பு கொண்டிருந்த செய்தி, எபிரேய வாய்மரபுச் செய்திகளாக அறியப்படுகின்றன.

 

(பணிஎன்ற வணிகம் குறித்த தமிழ்ச் சொல்லே, பொணி, பொணீசியர் எனத் திரிந்தது என்க) மோசேஎன்ற எபிரேய இனத் தலைவன், புதிய சமயம் கண்ட போது, அதில் இணையாமல் தங்களதுபழைய வழி பாட்டு முறைகளையே (தமிழர் வழிபாடுகள்) தொடர்ந்து, எபிரேய ரிடமிருந்துபிரிந்து நின்றவர்களே பொணீசியர்கள் என்க.

 

இனத்தின் அடிப்படையிலும், வணிகக் கரணியங்களாலும், இந்தியத் தமிழரோடு தொடர்புகொண்டிருந்த பொணீசியர், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எழுத்துமுறைகளைஅறிந்திருந்தனர். தங்களது வணிகத்துக்கு இம்முறை பெரிதும் பயன்படும் என நம்பிய பொணீசியர்கள், தங்களுடைய பகுதியிலும் இம்முறையை அறிமுகம் செய்ய எண்ணினர். புதியமுறையில் அறியப் பட்டிருந்த 30 எழுத்துகளையும் எடுத்துக் கொண்டு, அவற்றை 22 ஆகக்குறைத்தனர். விடுபட்ட எட்டு எழுத்துகளின் ஒலிகளை அந்த 22 எழுத்துகளில் சிலவற்றிற்குப்புள்ளி யிட்டுச் சரிசெய்து கொண்டனர். இதன்படி பொணீசியப் புதிய எழுத்துவடிவம் 22எழுத்துகளையும், 30 ஒலிகளையும் கொண்டிருந்தது.

 

இப்புதிய முறையைப் பொணீசியர்களே கண்டுபிடித்ததாகக் கிரேக்கர்கள் கருதி, அப்புதியமுறைக்குப் பொணீசிய கிரம்மாத்தா (Phoenicia grammata) என்ற பெயரையும் சூட்டினர். இப்புதியமுறை, பொணீசியர்களின் வணிக முறைக்கு எளிமையாகவும் ஏற்புடையதாகவும் இருந்தது.காட்மசு (Cadmus) என்ற பொணீசிய வணிகனே இப்புதிய முறையைக் கிரேக்கத்தில் அறிமுகம்செய்தான் என்று ஏரடோட்டசு (Heredotus) என்ற கிரேக்க வரலாற்றாய்வாளர் கூறுகிறார்.7நடுத்தரைக் கடலைச் சுற்றியிருந்த நாடுகளில் எல்லாம் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டது.

 

எபிரேயரும் இப்புதிய முறையை ஏற்றுக் கொண்டு, எபிரேய இலக்கியங்களை இப்புதியஎழுத்துமுறையில் பதிவு செய்தனர். தற்போதும் கிடைக்கப்பெறும் யூத சமய நூலான தோரா(Torah) இப்புதிய முறையில் எழுதப்பட்ட நூலே ஆகும். சுருக்கமாகக் கூறினால்,நடுத்தரையையட்டிய எல்லா நாடுகளும், பொணீசியரின் புதிய எழுத்து முறையை ஏற்றுக்கொண்டன எ னலாம் (கி.மு. 1500-1300).

 

தமிழ் எழுத்தே மூலம்:

 

தற்கால மொழியியல் ஆய்வாளர்கள், பொணீசியர்கள் புதிய எழுத்துமுறையைக் கண்டுபிடிக்கவேயில்லை யென்றும், அது கிழக்கே அறியப்பட்ட எழுத்துமுறை யென்றும், அதனைப்பொணீசியர்கள் தங்கள் விருப்பப்படி மாற்றியமைத்துக் கொண்டனர் என்றும் கூறுகின்றனர். பொணீசியர்கள் வணிகர்களே என்பதும், மொழியையும் மொழிக்கான எழுத்து களையும்கண்டுபிடித்து அறிமுகம் செய்யும்அளவிற்கு அவர்கள் மொழியியலாளர்கள் இல்லை என்பதும்தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழர்கள் அறிமுகம் செய்த புதிய எழுத்துமுறை (தமிழி) பொணீசியர்களால் மேற்கே அறிமுகம் செய்யப்பட்டதால், பொணீசிய முறையைப்பின்பற்றியே கிரேக்கம், இலத்தீன் மொழிகளின் வழியே, இன்றைய ஐரோப்பிய மொழிகளும்தங்களுக்கான எழுத்து முறையை வகுத்துக் கொண்டன. தமிழ் வடிவமே இன்றைய மேலைநாடுகளின் எழுத்துகளின் மூலம் என்பதை இறுதியில் உள்ள வரைபடத்தின் வாயிலாகஅறியவும்.

உண்மைகள் கடந்த காலங்களில் எவ்வாறு மறைக்கப் பட்டன என்பதைப் பொணீசியர்களின்வரலாறு தெளிவு படுத்துகின்றது. எழுத்து முறைகளின் வேர்கள் குமரிக் கண்டத்தையே தொட்டுநிற்கின்றன. இந்நிலையில், இந்திய ஆய்வாளர்கள், தங்கள் மனம் போன போக்கில் வரலாற்றைத்திசை திருப்பி விட்டனர். புதிய எழுத்து முறை கி.மு. 1500 ஆண்டுகளில் அறிமுகம்செய்யப்பட்டபோது, ஆரியர்கள் இந்தியாவில் இருந்தனரா என்பது கூட ஐயத்திற்கிடமானது.

அசோகன் கல்வெட்டு பற்றிப் பல்வேறு தவறான தகவல்களை, தமிழகத்தின் ஆய்வாளர்களேஅளித்து வருகின்றனர். அசோகன் காலத்தில்தான் முதன்முதலாக எழுத்துகள் அறிமுகமாயினஎன்பதால், அவ்வெழுத்துகளைக் கண்டுபிடித்தவன் பெயர் தெரியாததால், அதனை அசோகன்பிராமி என்றனர். உண்மையில் அசோகனுக்குப் பலநூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பே, அசோகனின் எழுத்து வடிவம் பயன்பாட்டிலிருந்தது. அக்காலத்தில் எவரும்பாறைகளிலும் தூண்களிலும் பொறித்து வைக்க வில்லை. அசோகன் காலத்தில்தான் அவைவெளிப்பட்டன எனலாம்.

 

தமிழ் எழுத்தின் நீட்சியே:

 

கி.மு.850ஆம் ஆண்டில், இசுராயெல் நாட்டின் மோவாப் (Moab) என்ற பகுதியை ஆண்டிருந்தமன்னன் மேச (Mesha - மேழம் என்ற தமிழ்ச் சொல்லே) என்பவன் வெளியிட்டிருந்த ஆணைகள்,பாப்பிரசு தாள்களில் வெளி யிடப்பட்டன. அத்தாள்களில் காணப்படும் எழுத்துகள், அசோகனின்கல்வெட்டு எழுத்துகளைப் போன்றே காணப் படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.அசோகனின் எழுத்துகள், அவன் காலத்துக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே இசுராயெல் நாட்டில்அறியப்பட்டிருந்தது எப்படி? இசுராயெல் நாட்டின் எழுத்துகளையே அசோகன் இந்தியாவில்பின்பற்றினானா?

இவற்றிற்கெல்லாம் விடை யாதெனில் கி.மு.1500 ஆண்டுகளில் வட இந்தியாவில் அறிமுகம்செய்யப்பட்ட தமிழ்மொழிக்கான எழுத்து வடிவங்களை, பொணீசியர் மேலை நாடுகளில்அறிமுகம் செய்தபோது, எபிரேய மொழியும் அவ்வெழுத்து வடிவங்களை ஏற்றுக் கொண்டதுஎன்பதே. உண்மையில் மேச மன்னனும், அசோகனும் பயன் படுத்தியது தமிழின் புதியஎழுத்துமுறைகளையே என்க. தமிழின் புதிய வடிவம், வட இந்தியாவிலிருந்த பல்வேறுமொழிகளிலும் சிற்சில மாற்றங்களுடன் பின்பற்றப்பட்டன. ஏறக்குறைய 18 மொழிகளில் சிற்சிலமாற்றங்களுடன் தமிழின் எழுத்துவடிவம் பின்பற்றப்பட்டது. சமற்கிருதம் உள்ளிட்ட இன்றையஇந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் யாவும், தமிழ் முறையின் நீட்சிகளே எனலாம்.அத்துடன் தமிழ் எழுத்துமுறையே இன்றைய ஐரோப்பிய மொழிகளிலும், பல்வேறுமாற்றங்களுக்குட்பட்டு வளர்ந்துள்ளன.

தமிழறிஞர்கள் உருவாக்கித் தந்த எழுத்துமுறை, சிந்துவெளித் தமிழ் எழுத்துகளின் அடுத்த கட்டவளர்ச்சி யாகும். இதனைப் பிராமி என்று பிற்காலத்தில் ஆரியர்கள் பெயரிட்டுக் கொண்டனர்.பிரம்மா என்ற சொல்லே, பெரும் ஆன் - பெருமான் - பெம்மான் என்ற தமிழ்ச் சொல்லின்திரிபாகும். பிரம்மா, பிரசாபதி, பிராமணாசுபதி, பிரகசுபதி, பிரமணா போன்ற சொற்கள்அனைத்தும் தமிழ் மூலத் திரிபுகளே. பிர எனத் தொடங்கும் சமற்கிருதச் சொற்களின்முன்னொட்டுச் சொல், பெரும் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. பெரும் அமணன் என்பது,பெரியவன் பெருந்துறவி என்ற பொருளைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகும் பெரும்அமணன்,பிராமணன் ஆனான்.

 

உலக மொழிகளுக்கு மூலம்:

 

தமிழ் மொழிக்கான எழுத்து வடிவங்களைச் சமணர்களே அளித்தார்கள் என்பதும், புத்தர்களேகொடுத்தார்கள் என்பதும், சமண புத்தர்களுக்கு அசோகனே அளித்தான் என்பதும், சமற்கிருதஎழுத்து வடிவத்தினின்றே தமிழ் வடிவம் பிறந்தது என்பதும், கி.மு.300 ஆண்டுகளுக்கு முன்புதமிழுக்கு எழுத்து வடிவம் இல்லையென்பதும், வரலாற்றைத் திசை திருப்பும் பொய்ச்செய்திகளாகும். கி.மு.300க்கு முன்னதாகத் தமிழுக்கு எழுத்து வடிவம் இருந்திருக்க வில்லைஎன்றால், தொல்காப்பியம் எந்த எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டது? தொல்காப்பியரின் காலம்கி.மு.700 என ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், தமிழுக்கு எழுத்து வடிவம் சமற்கிருதத்துக்குமுன்பே இருந்தது என்ற உண்மையை மறைக்கத் தொல்காப்பியக் காலத்தைச் சிலர் கி.பி. 500என்றும் கூறினர்.கி.மு.10000 ஆண்டுகளில், உலகில் எம்மொழியும் எழுத்துவடிவத்தைப் பெற்றிருக்காதநிலையில், தமிழ் மொழி அதனைப் பெற்றிருந்தது என்பதை, இன்றைய ஆய்வுகள்மெய்ப்பிக்கின்றன.10 இன்றைய நமது ஆய்வு இலக்கு, கி.மு.2000 ஆண்டுகளில், குமரிக்கண்டத்தில் அறியப்பட்டிருந்த எழுத்து வடிவத்தை நோக்கி மேற் கொள்ளப்பட்டு வரும்நிலையில், கி.மு. 300 ஆண்டுகளில் தான் தமிழுக்கு எழுத்துவடிவம் தோன்றியது எனக்கூறஎவ்வாறு துணிச்சல் வந்தது? தமிழைப் பற்றிக் கடந்த காலங்களில் மறைக்கப்பட்ட உண்மைச்செய்திகள் ஒவ் வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள்கி.மு.6000 ஆண்டுகளில் பேசிய மொழி தமிழ் மொழியே என்பதை அண்மைக் காலத்துஆய்வுகளும் மெய்ப்பித்துள்ளன.

 

உலக மொழிகளுக்கெல்லாம் சொல் வளங்களை வாரி வழங்கிய தமிழ்மொழி, எக்காலத்தும்எவரிடமிருந்தும் எவற்றையுமே கடனாகப் பெற்றதில்லை என்ற உண்மையை இங்குள்ளதமிழறிஞர்களில் சிலரும் புரிந்து கொள்வார் களாக. இன்றைய ஆய்வுகள்,“தமிழ் இந்தியமொழிகளுக்குத் தாயாகவும், உலக மொழிகளுக்கு மூலமாகவும் உள்ளது’’ என்பதை உறுதிசெய்கின்றன.

 

மேற்கோள்கள்:

 

1. சிந்துவெளியின் காலம்: An archacological site dating back(5500+3500) years believed to be older than Mohenjo-daro has been found in sindh province.  A team of 22 archacologists found semi-precious stones and precious tones and utensils made of clay, copper and other metals during an excavation in Laxhian Jo Daro in Sukkar District.  “At present we can say that it is older than Mohenjo-daro,” Ghulam Mustafa shar, the director of the Lakhian To Daro project said.  Shar said, the remains of a “faience” or tin glazed pottery factory had been found at the site. It is believed to be of the era of Italian mirror factories that date back to 9000 years. The discovery of more such items establish the site as 9000 years old, like remains found at Jericho in Palestine, Shar said. (PT1) - The Times of India, 18.1.2009, P.6.

2.  Hittite words in Rig-Veda and Indus Language: Lothal and Indus Civilization, S.R. Rao, P. 139, 1962.

3.  Scribal Language: The Scribal Language used by the professional scribe appears both Egypt and Mesopotamia in the earliest periods in whichwriting was used. - Dictionary of the Bible, P. 779.

4.  Sanskrit has developed more than Greek and German and anyother Aryan language - A Sanskrit - English Dictionary, P. XV.

5.  புதிய தமிழ் எழுத்துமுறை: பொணீசியர்களின் சான்றுகளைக் காட்டி ஆய்வாளர்கள் கூறும்செய்தி.

6.  Phoenician Script: There is some question as to whether the Phoenicians actually invented the alphabet themselves or adapted from an oriental source. In any case the idea was revolutionary - Facts about Lebanon, P. 13.

7.  Heredotus, the 5th century B.C. Greek historian and the father of history wrote that the alphabet was introduced into Greece by Cadmus and his followers. The Greeks did not, according to Hereclotus, Call the new letters alphabet but “Phoinikia grammata” - the phoenician letters. - Ibid, P. 14.

8.  The Hebrew alphabet as exhibited in Torah was identical with the Phoenician alphabet. - Dictionary of the Bible, P. 23.

9.  Mesha: Meesa (Hebrew), a king of Moab (II kings, 3:4 -Bible) If Indian Pandits will consult that most interesting standard work, they will there find a table exhibiting the most ancient of known phoenician letters side by side with the kuidred symbols used in the Moabite inscriptions of king Mesha - which, as before intimated, is known to be as old as about 850 B.C. - while in parallel columns, and in a series of other excellent tables, are given the corresponding phonographic symbols from the numerous inscription of king Asoka scaltened everywhere throughout central and Northern India - A sanskrit English Dictionary, P. XXV.

10. ம.சோ. விக்டர், சிந்துவெளி நாகரிகம், 2009.

 

http://eniyavaikooral.blogspot.com/2013/11/blog-post_5.html

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் எழுத்துரு மாறவேண்டுமெனில் அதற்கு முக்கிய காரணங்கள் இருக்க வேண்டும். அப்படியான முக்கிய காரணங்கள் எவை?

//நான் பதின்மூன்றாண்டு காலமாக ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சுசெய்கிறேன். பேசும் வேகத்தில் எழுத முடியும் என்னால். கண்ணெதிரே தமிழ் தெரிகிறது, என் கைகளில் ஆங்கில எழுத்துருக்கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழை நான் சரளமாக வாசிக்கவும் செய்வேன். ஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதக் கூடாது?//

இதை என்னவென்று சொல்வது? ? நாளைக்கு சீனம் உலகாளும் மொழியானால் சீன வரி வடிவங்களிலே தமிழை எழுதலாமா? கடைசியில் தமிழுக்கென்று வரிவடிவம் இருக்க கூடாது. அதுதான் இவர்களின் எண்ணமும் கூட..ஏற்கனவே இருந்த பழைய ஒலைச் சுவடிகளை படிக்கத் தெரியாமல் எரித்தே பல நூல்கள் அழிந்து போயிற்று...இதே மாதிரி திரும்பவும் வரிவடிவங்களை மாற்றினால் அடுத்த தலைமுறைக்கு ஒன்றுமே இருக்காது.. மலையாளிகளும், தெலுங்கர்களும் தனது குழந்தைகளுக்கு தங்களது தாய்மொழி, ஆங்கிலம், இந்திமொழி என மூன்று மொழிகளை கற்றுக் கொடுக்கின்றனர். ஆதலால் குழந்தைகளுக்கு படிக்க சிரமமாக உள்ளது என்ற காரணத்துக்காக வரிவடிவங்களை மாற்றவேண்டும் என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது.  

அதிகம்பேர் சொல்லுவது கணிணியில் தமிழை எழுதுவது கடினமாக உள்ளது  அதனால் எழுத்துக்களை குறைக்கலாம் அல்லது வரிவடிவத்தில் கொஞ்சம் மாற்றம் கொண்டு வரலாம் என்பதே. வரிவடிவங்களை மாற்றுவதற்கு இது தகுந்த காரணமாகப்படவில்லை.

இந்தக் கட்டுரையை வெளியிட்டது இந்து பத்திரிகை. அவர்கள் வெளியிட்டவுடன் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா !! இந்து பத்திரிகை மாதிரி தமிழர்களையும் தமிழையும் காப்பவர்கள் தரணியில் உண்டா ??

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை விட அதிகமான எழுத்துருக்களை ( 10000 ) கொண்ட ஜப்பானிய மொழியில் எழுத்துரு மாற்றங்கள் செய்ததாக தெரியவில்லை.

எழுத்துருக்களை மாற்ற தமிழ் ஒன்றும் கூத்தாடி மொழியல்ல.

தேவைக்கேற்ப அது தன்னை மாற்றி கொள் ளும்.

உலக வியாபார மொழிகளுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் வரும் காலங்களில் இங்கிலாந்தும் ஆங்கிலத்தை சீனா, அரபி எழுத்துருவிற்கு  மாற்ற வேண்டும்.

 

தமிழ்நாட்டு  தொலைக் காட்சிகளில்,பள்ளிகளில், அலுவலகங்களில் ..............    தமிழையும் ஆங்கிலத்தையும் சேர்த்துக் கதைத்து கொலை செய்யாமல் விட்டாலே தமிழ் வாழும்.

  • தொடங்கியவர்

தமிழில் எழுத்துரு மாறவேண்டுமெனில் அதற்கு முக்கிய காரணங்கள் இருக்க வேண்டும். அப்படியான முக்கிய காரணங்கள் எவை?

 

மா சோ விக்டரின் கருத்தே எனது கருத்தாகும் . அதாவது , " எழுத்துகள், எண்ணங்களின் வெளிப்பாடுகளைப் பதிவு செய்யப் பயன்படுபவை. எழுத்துகள் எந்தஒருவராலும் கண்டுபிடிக்கப்பட்டதன்று. இயற்கையாகவே தோன்றிய மாந்தனின் சிந்தனை,குறியீடுகளாக வெளிப்பட்டன. அவ்வப்போது அக்குறியீடுகள் மாற்றம் செய்யப்பட்டன அல்லதுசெப்பம் செய்யப்பட்டன. உலகில் முதலில் தோன்றிய மொழிக்கே முதன்முதலான குறியீடுகளும்எழுத்துகளும் இருந்திருக்க வேண்டும். மொழியை ஓரினம் பேசி, அம்மொழிக்கு வேறோர் இனம்எழுத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்க இயலாது. உலகில் முதலில், இயற்கையாகத்தோன்றிய மொழி தமிழே என்பதால், தமிழ்மொழியில்தான் முதல் எழுத்து வடிவங்கள்தோன்றின என்பது இயல்பாகச் சிந்திக்கக் கூடியதே. " தமிழ் மொழி கால ஓட்டங்களில் அதன் தேவைக்கு ஏற்ப அவ்வப்பொழுது எழுத்துருவில் மாற்ரங்களைச்  சந்தித்தே வந்துள்ளது , ஆனால் ஒட்டு மொத்தமாக வேறு ஒரு மொழியினூடாக அது தன்னை வளப்படுத்தவில்லை . உதாரணமாக வீரமாமுனிவர் தமிழ் மொழியில் உள்ள வரிவடிவத்தில் ஒரு புரட்சியையே கொண்டு வந்தார் . எப்படியென்றால் , முன்பு தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல்  குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி  "ஆ, ஏ" எனவும் , நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார். இது தமிழ் சான்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது  . ஆனால் ஜெயமோகனின் கருத்து உண்மையிலேயே பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது . என்னைப் பொறுத்த வரையில்  தமிழ் மொழி ஆலமரம் போல பல கிளைகளை தானாகவே உருவாக்கி தன்னை வழப்படுத்தக்கூடிய சொல் வளத்தை உடையதாகும் .

  • தொடங்கியவர்

//நான் பதின்மூன்றாண்டு காலமாக ஆங்கில எழுத்துகளிலேயே தமிழைத் தட்டச்சுசெய்கிறேன். பேசும் வேகத்தில் எழுத முடியும் என்னால். கண்ணெதிரே தமிழ் தெரிகிறது, என் கைகளில் ஆங்கில எழுத்துருக்கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழை நான் சரளமாக வாசிக்கவும் செய்வேன். ஏன் தமிழை இவ்வாறு ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதக் கூடாது?//

இதை என்னவென்று சொல்வது? ? நாளைக்கு சீனம் உலகாளும் மொழியானால் சீன வரி வடிவங்களிலே தமிழை எழுதலாமா? கடைசியில் தமிழுக்கென்று வரிவடிவம் இருக்க கூடாது. அதுதான் இவர்களின் எண்ணமும் கூட..ஏற்கனவே இருந்த பழைய ஒலைச் சுவடிகளை படிக்கத் தெரியாமல் எரித்தே பல நூல்கள் அழிந்து போயிற்று...இதே மாதிரி திரும்பவும் வரிவடிவங்களை மாற்றினால் அடுத்த தலைமுறைக்கு ஒன்றுமே இருக்காது.. மலையாளிகளும், தெலுங்கர்களும் தனது குழந்தைகளுக்கு தங்களது தாய்மொழி, ஆங்கிலம், இந்திமொழி என மூன்று மொழிகளை கற்றுக் கொடுக்கின்றனர். ஆதலால் குழந்தைகளுக்கு படிக்க சிரமமாக உள்ளது என்ற காரணத்துக்காக வரிவடிவங்களை மாற்றவேண்டும் என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது.  

அதிகம்பேர் சொல்லுவது கணிணியில் தமிழை எழுதுவது கடினமாக உள்ளது  அதனால் எழுத்துக்களை குறைக்கலாம் அல்லது வரிவடிவத்தில் கொஞ்சம் மாற்றம் கொண்டு வரலாம் என்பதே. வரிவடிவங்களை மாற்றுவதற்கு இது தகுந்த காரணமாகப்படவில்லை.

இந்தக் கட்டுரையை வெளியிட்டது இந்து பத்திரிகை. அவர்கள் வெளியிட்டவுடன் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா !! இந்து பத்திரிகை மாதிரி தமிழர்களையும் தமிழையும் காப்பவர்கள் தரணியில் உண்டா ??

 

இதைப் பற்றி யார்தான் கவலைப் படுகின்றார்கள் ?? எல்லாவற்றையுமே தொலைத்த இனம் இதையும் தொலைக்கட்டுமே என்ற நிலைப்பாடோ தெரியவில்லை . ஒன்றை வைத்திருப்பவர்களுக்கு அதன் அருமை தெரியாது என்று சொல்வார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.