Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

09-1386589133-6-freedom.jpg

 

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

 

பொதுவாக திருமணம் என்று வரும் போது, நிறைய பேர் பெண்கள் தான் அதிகம் தியாகம் செய்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் பெண்களைப் போலவே ஆண்களும் ஒருசில முக்கியமானவற்றை இழக்கிறார்கள் என்பது தெரியுமா? ஆம், எப்படி பெண்கள் திருமணத்திற்கு பின் பெற்றோர்கள், தோழிகள் மற்றும் பலவற்றை இழக்கிறார்களோ, அதேப் போன்று ஆண்களும் அவர்களுக்கு சந்தோஷத்தைத் தரும் சிலவற்றை இழக்கின்றனர் என்பதை விட தியாகம் செய்கின்றனர் என்ற சொல்லலாம்.

 

ஆனால் இப்படி இழப்பதை அவர்கள் ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அப்படி வெளிக்காட்டினால், பின் திருமண வாழ்க்கையில் உள்ள சந்தோஷம் மற்றும் ஆரோக்கியம் போய்விடும் என்பதால் தான். குறிப்பாக உலகிலேயே இந்தியாவில் உள்ள ஆண்கள் தான் திருமணத்திற்கு பின் நிறையவற்றை தியாகம் செய்கின்றனர்.

 

சரி, இப்போது அப்படி திருமணத்திற்கு பின் ஆண்கள் எவற்றையெல்லாம் இழக்கின்றனர் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்த்து சரிதானா என்று சொல்லுங்கள்.

 

அமைதி.

 

திருமணத்திற்கு பின் ஒவ்வொரு ஆணும் இழக்கும் விஷயங்களில் ஒன்று தான் அமைதி. அது என்னவோ தெரியவில்லை, மூன்று முடிச்சு போட்ட பின்னர் அது எங்கு சென்று ஒழிந்து கொள்ளுமோ தெரியவில்லை.

 

அம்மா.

 

ஒவ்வொரு ஆணுக்கும் அம்மா என்றால் உயிர். ஆனால் அந்த உயிரை திருமணம் ஆன பின்னர் ஒரு கட்டத்தில் தாயுடன் இருக்கும் நாட்களை ஆண்கள் இழப்பார்கள். இந்த இழப்பு அவர்களது மனதில் எவ்வளவு பெரிய வடுவாய் இருந்தாலும், அதனால் உண்டான வலியை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதற்காக அம்மாவை காணவே செல்லமாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

 

நண்பர்கள்.

 

பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பின் தோழிகளை இழப்பதில்லை. ஆண்களும் தான் திருமணத்திற்கு பின் நண்பர்களை இழக்கின்றனர். முற்றிலும் இழக்காவிட்டாலும், அவர்களுடன் நினைத்த நேரத்தில் எல்லாம் நேரத்தை செலவிட முடியாது. ஏனெனில் நண்பர்களை விட தன்னை நம்பி வந்த மனைவி தானே முக்கியம். அதனாலேயே பல ஆண்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை.

 

ஆண் ஈகோ.

 

திருமணத்திற்கு முன், ஒரு பொருளைக் கூட நகர்த்தாமல் இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின் ஈகோவை விட்டு பல்வேறு வேலைகளை மனைவிகளுக்காக செய்கின்றனர். அம்மாவிற்கு கூட இவ்வளவு வேலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் மனதில் ஈகோ கொள்ளாமல் மனைவிக்காக அனைத்தையும் செய்வார்கள்.

 

பணம்.

 

பணம் சம்பாதித்து தனக்கென்று எதையும் செலவிடாமல், மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஷாப்பிங் மற்றும் தியேட்டர் அழைத்துச் செல்வது, பரிசுகள் வாங்கிக் கொடுப்பது என்று பல செலவுகளை செய்வார்கள்.

 

சுதந்திரம்.

 

முக்கியமாக சுதந்திரத்தை இழப்பார்கள். திருமணத்திற்கு முன், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, ட்ரெக்கிங் செல்வது, சுற்றுலா செல்வது என்றெல்லாம் இருந்தவர்கள், திருமணத்திற்கு பின் மனைவியுடனேயே இருப்பார்கள்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

  • Replies 60
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் தான் தான் குடும்பத்தை நடத்துகிறேன் என்று பொறுப்பை ஏற்கிறானோ இழப்புக்களும் இயல்புதான். ஆனால் பெண்களிலும் பார்க்க ஆண்கள் தான் அதிகம் இழக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதினால் எப்படி வந்திருக்குமோ அப்படி வந்திருக்கு.. :D பாதிக்கப்பட்டவங்க நிறைப்பேர் இருக்கிறாங்க போலை. :(

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதினால் எப்படி வந்திருக்குமோ அப்படி வந்திருக்கு.. :D பாதிக்கப்பட்டவங்க நிறைப்பேர் இருக்கிறாங்க போலை. :(

 

இதுக்கே  அழுதா  எப்படி??

இதில  இருப்பதெல்லாம் சுசுப்பி........

இன்னும் எவ்வளவு இருக்கு....

ஆண்கள் வெளியில்    சொல்லமாட்டார்கள் என்பதே பெரும்  துணையாக இருக்கு

பலதையும் தொடர்ந்து செய்வதற்கு.......... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கே அழுதா எப்படி??

இதில இருப்பதெல்லாம் சுசுப்பி........

இன்னும் எவ்வளவு இருக்கு....

ஆண்கள் வெளியில் சொல்லமாட்டார்கள் என்பதே பெரும் துணையாக இருக்கு

பலதையும் தொடர்ந்து செய்வதற்கு.......... :lol::D

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு சுபேசு, சுதர்சன் போன்றவர்கள் வெறும் காதல் கவிதை வடிப்பதுடனும், :wub: நெடுக்ஸ் போன்றவர்கள் இதே வாய்ச்சவுடாலுடனும் :D நிறுத்திக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறேன்.. :(

பிகு: சுண்டல் தொடர்ந்து தனக்கு நிறைய ஃபிகர்கள் இருப்பதுபோலவும், தொடர்ச்சியாக கடலைபோடுவது போலவும் காட்டிக்கொள்ளவும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு சுபேசு, சுதர்சன் போன்றவர்கள் வெறும் காதல் கவிதை வடிப்பதுடனும், :wub: நெடுக்ஸ் போன்றவர்கள் இதே வாய்ச்சவுடாலுடனும் :D நிறுத்திக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறேன்.. :(

பிகு: சுண்டல் தொடர்ந்து தனக்கு நிறைய ஃபிகர்கள் இருப்பதுபோலவும், தொடர்ச்சியாக கடலைபோடுவது போலவும் காட்டிக்கொள்ளவும்.. :D

 

சின்னப் பெடியளின் வாழ்க்கையில் இப்படி மண்அள்ளிப் போடுறியளே இது நல்லா இருக்கா ??????

 

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பெடியளின் வாழ்க்கையில் இப்படி மண்அள்ளிப் போடுறியளே இது நல்லா இருக்கா ??????

இப்பிடி சீண்டி விட்டால்தான் இவர் என்ன சொல்லுறது என்று உணர்ச்சிவசப்பட்டு கல்யாணம் கட்டுவினம்.. ::D பிறகு மேலே உள்ளதுக்கு நல்ல விளக்கம் கிடைக்கும்.. :icon_idea:

நிம்மதியான தூக்கம் கூட போச்சு

  • கருத்துக்கள உறவுகள்
ஆண்களின் அவலத்தை வெளிப்படுத்தும் இப்பதிவை, ஒரு ஆண்சிங்கமாக துணிந்து  யாழில் பதிந்த தமிழ் சிறி அவர்களைப் பாராட்டும் அதே வேளையில், என் கற்பனையில் அவரை அவரது வீட்டில் கண்டு பரிதாபப்பட்டேன். :(
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களைப் பொறுத்த வரை திருமணம் என்பது பெரும் பாறாங்கல்லைத் தூக்கி தன் தலையில் வைப்பது போன்றது.

 

ஒரு கப் தேத்தண்ணி குடிக்க.. தேயிலை நட்டு..தோட்டம் செய்வது போன்றது. தேவையா..இது..???!

 

புத்திசாலித்தனமான ஆண்.. ஒருபோதும் திருமணம் என்ற சிறையில் சிக்கமாட்டான். சிக்கினாலும் எப்படியாவது.. கெதியில வெளில வந்திடுவான். அதுதான் பெண்கள் பொதுவாக முட்டாள் ஆண்களை காதலர்களாக கணவர்களாக துணிந்து தெரிந்தெடுத்துக் கொள்கிறார்கள். பொதுவாக பெண்களுக்கு நேர்மையும் ஒழுக்கமும் நன்னடத்தையும் உள்ள ஆண்களைப் பிடிக்காது. காரணம் அவர்களை பெண்கள் தங்கள் வலையில் விழுத்துவது கடினம். முட்டாள் ஆண்.. தேனில் வீழ்ந்த ஈயாட்டம்.. பெண்களிடம் மயங்கி.. பின்னர் எழும்பவே மாட்டான்.. எனும் போது.. பெண்கள் லபக் என்று அவனை திருமணம் எனும் சிலந்தி வலையால் பின்னிவிடுவார்கள். அப்புறம் என்ன.. சுடுகாடு வரை சிறைபட்டு சீரழிய வேண்டியது தான். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களைப் பொறுத்த வரை திருமணம் என்பது பெரும் பாறாங்கல்லைத் தூக்கி தன் தலையில் வைப்பது போன்றது.

 

ஒரு கப் தேத்தண்ணி குடிக்க.. தேயிலை நட்டு..தோட்டம் செய்வது போன்றது. தேவையா..இது..???!

 

புத்திசாலித்தனமான ஆண்.. ஒருபோதும் திருமணம் என்ற சிறையில் சிக்கமாட்டான். சிக்கினாலும் எப்படியாவது.. கெதியில வெளில வந்திடுவான். அதுதான் பெண்கள் பொதுவாக முட்டாள் ஆண்களை காதலர்களாக கணவர்களாக துணிந்து தெரிந்தெடுத்துக் கொள்கிறார்கள். பொதுவாக பெண்களுக்கு நேர்மையும் ஒழுக்கமும் நன்னடத்தையும் உள்ள ஆண்களைப் பிடிக்காது. காரணம் அவர்களை பெண்கள் தங்கள் வலையில் விழுத்துவது கடினம். முட்டாள் ஆண்.. தேனில் வீழ்ந்த ஈயாட்டம்.. பெண்களிடம் மயங்கி.. பின்னர் எழும்பவே மாட்டான்.. எனும் போது.. பெண்கள் லபக் என்று அவனை திருமணம் எனும் சிலந்தி வலையால் பின்னிவிடுவார்கள். அப்புறம் என்ன.. சுடுகாடு வரை சிறைபட்டு சீரழிய வேண்டியது தான். :):icon_idea:

 

மிகச் சிறந்த கட்டுரை. நன்றி நெடுக்ஸ். இந்த ஜென்மத்தில மீட்சி இல்லை. :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நெடுக்ஸ்.. :o:(

  • கருத்துக்கள உறவுகள்

9249158-a-bottle-is-covered-with-honey-t

 

இதுதான் பெண்கள் என்பவரின் கவர்ச்சியில் தேன் என்று நம்பி.. அதன் உண்மைத் தன்மை.. தெரியாமல் சிக்கிச் சீரழியும் முட்டாள் ஆண்களின் நிலை.  சிக்கிய பின் மீட்சிக்கு வழி குறைவு. சிக்க முன் சிந்திப்பதே சிறப்பு. வள்ளுவனும் அதையே சொல்லி உள்ளார். :lol::D

Edited by nedukkalapoovan

சொர்க்கத்தை அருகில் காண வேணுமா திருமணம் செய்யுங்கள் :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கத்தை அருகில் காண வேணுமா திருமணம் செய்யுங்கள் :D :D :icon_idea:

 

சொர்க்கத்தை அருகில் காணன்னு நினைச்ச ஈக்களை தான் மேலே படத்தில் காண்கிறீர்கள். :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

9249158-a-bottle-is-covered-with-honey-t

 

இதுதான் பெண்கள் என்பவரின் கவர்ச்சியில் தேன் என்று நம்பி.. அதன் உண்மைத் தன்மை.. தெரியாமல் சிக்கிச் சீரழியும் முட்டாள் ஆண்களின் நிலை.  சிக்கிய பின் மீட்சிக்கு வழி குறைவு. சிக்க முன் சிந்திப்பதே சிறப்பு. வள்ளுவனும் அதையே சொல்லி உள்ளார். :lol::D

 

 

வேண்டாம் ராசா

அழுதிடுவன்............ :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவன் இதப்பற்றி  என்ன சொன்னார்  என்டு தெரியேல்லை, ஆனால் வாசுகியை மணந்த பின்தான்  133  சொல்லுறதுக்கு  மூளை வேலை செய்திருக்கு.

 

ஒரு ஆண் படிப்பு ,வேலை என்று வெளிக்கிட்டாலே  18 /20 வயசில பெற்றோர், உற்றோரைப் பிரிந்து வாழ்வது சகஜம்தானெ.( 20 வயசில வேலை ,வெட்டி இல்லாமல் வீட்டில இருந்து பார்த்தால் , அப்ப தெரியும் அப்பா அம்மாவின்ர இன்னொரு முகம்.)

மற்றும்படி இங்கு கலகலப்பாய்  கருத்தெழுதும் பலர் நான் பார்த்தவரை  நல்ல  வாழ்க்கைத்துணயைக் கொன்டவர்களே! :D

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவன் இதப்பற்றி  என்ன சொன்னார்  என்டு தெரியேல்லை, ஆனால் வாசுகியை மணந்த பின்தான்  1330  சொல்லுறதுக்கு  மூளை வேலை செய்திருக்கு.

 

வாழ்க்கை வெறுத்துப் போன மனிசன் என்ன செய்ய முடியும். சாக்கிரட்டீஸ் கூட.. கொடுமைக்கார மனைவியால் தான் தத்துவஞானி ஆனவராம். லிங்கன் அப்படி.. இப்படி எண்ணற்ற உதாரணங்கள்..! அந்த வரிசையில் வள்ளுவரும்.. ஆகி இருக்கலாம். :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு நேர்மையும் ஒழுக்கமும் நன்னடத்தையும் உள்ள ஆண்களைப் பிடிக்காது.  :):icon_idea:

 

புறோக்கர்: எந்தக் கெட்டபழக்கமும் இல்லாத நல்ல பையனை என் பொண்ணுக்கு பாரும் என்று நீர்தானே ஒற்றைக்காலில் நின்றீர் ஐயா. அப்படி ஒரு மாப்பிளையைத்தானே நானும் பார்த்துத் தந்தேன். இப்போது வந்து என் பொண்ணுக்குச் சந்தான விருத்தி இல்லையே என்று புலம்பினால் நான் என்ன செய்வது. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

புறோக்கர்: எந்தக் கெட்டபழக்கமும் இல்லாத நல்ல பையனை என் பொண்ணுக்கு பாரும் என்று நீர்தானே ஒற்றைக்காலில் நின்றீர் ஐயா. அப்படி ஒரு மாப்பிளையைத்தானே நானும் பார்த்துத் தந்தேன். இப்போது வந்து என் பொண்ணுக்குச் சந்தான விருத்தி இல்லையே என்று புலம்பினால் நான் என்ன செய்வது. :o:D

 

இந்தளவுக்கு நல்லவனா இருந்திட்டாலும் இந்தக் காலத்தில என்ன கவலை. ஊரில சினை படாத பசுமாட்டுக்கு மாட்டு வைத்தியர் ஊசி அடிப்பது போல.. அடிச்சிட வேண்டியது தானே..! இதுக்குப் போயி வாயைப் பிளந்த.. புறோக்கரை நாடி என்ன பயன்...! :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் என்பவள் ஆண்களுக்காக படைக்கப்பட்டவள்...

அதை ஊறுகாய்மாதிரி அப்பப்ப தொட்டுக்கணுமே தவிர கட்டிக்கக்கூடாது..... :icon_idea:

ஊறுகாயை போத்தலில் அடைத்து வைத்திருப்பது மாதிரி பெண்களையும் அடக்கி அடைத்து வைத்திருக்க வேண்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்

பெண் என்பவள் ஆண்களுக்காக படைக்கப்பட்டவள்...

அதை ஊறுகாய்மாதிரி அப்பப்ப தொட்டுக்கணுமே தவிர கட்டிக்கக்கூடாது..... :icon_idea:

ஊறுகாயை போத்தலில் அடைத்து வைத்திருப்பது மாதிரி பெண்களையும் அடக்கி அடைத்து வைத்திருக்க வேண்டும். :)

ஊறுகாய்ப் போத்தல்கள் மொத்தமாக விற்பனைக்கு உள்ளதா? :) அல்லது சில்லறையா? :D:wub:

 

Edited by Paanch

சொர்க்கத்தை அருகில் காணன்னு நினைச்ச ஈக்களை தான் மேலே படத்தில் காண்கிறீர்கள். :D:icon_idea:

 

தேனுடன் இறந்து போவதும் ஈக்களுக்கு பெருமைதான் அண்ணே :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

தேனுடன் இறந்து போவதும் ஈக்களுக்கு பெருமைதான் அண்ணே :rolleyes:

நெடுக்ஸ்.. இதெல்லாம் உருப்படுறதா? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.