Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்கள் தொப்பி, பர்தா அணிந்து படமெடுத்தால் அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு புகைப்படங்கள் இருப்பின், ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்பதிவு திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார்.

நேற்று (13.12.13) மாலை மட்டக்களப்பு – கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பி மற்றும் பர்தா அணிந்து புகைப்படம் எடுக்க முடியாது என தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி 2014ம் ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் ஆள் அடையாள அட்டை, இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரே விதமானதாகவும், கலர் புகைப்படத்துடன் சிங்களம், தமிழ் மொழிகளை மாத்திரம் கொண்டு அமைந்திருக்கும்.

எந்தவொரு இன, மத கலாசாரத்தினையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் அவை அமைந்திருக்காது என தெரிவித்தார்.

இவ் ஊடகவியலாளர் மநாட்டில் கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், கபே நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹூஸைன், ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

http://www.naamthamilar.ca/?p=25959.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு.......

நல்ல முடிவு.......

 பிக்குகளும் மொட்டையோடையும் காவியோடையும் அடையாள அட்டைக்கு படம் எடுக்கக் கூடாதா?! (ஒருக்காக் கேட்டுச் சொல்லுங்கோ..  :D )

  • கருத்துக்கள உறவுகள்

அடையாள அட்டையில் முகம் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக மேற்கு நாடுகளிலும் இந்த தடை உண்டு.சிறிலங்காவும் இதனை பின்பற்றுவதாக கூறினாலும் காரணங்கள் வேறாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்பட வேண்டிய நல்ல திட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

 பிக்குகளும் மொட்டையோடையும் காவியோடையும் அடையாள அட்டைக்கு படம் எடுக்கக் கூடாதா?! (ஒருக்காக் கேட்டுச் சொல்லுங்கோ..  :D )

 

தமிழன் இனிமேல் புத்தியை  நகர்த்தணும்

அதன்படி

 பிக்குகளும் மொட்டையோடையும் காவியோடையும் அடையாள அட்டைக்கு படம் எடுக்கணும்

இது தான் சரி... :icon_idea: 

 

 

****இதன்படி புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க

 

 

****முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பி மற்றும் பர்தா*******

 

 

அணிந்து புகைப்படம் எடுக்க முடியாது என தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

Edited by விசுகு

மின்னணு அடையாள அட்டைக்கு முஸ்லிம் அமைச்சர் எதிர்ப்பு.

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள மின்னணு முறையிலான தேசிய அடையாள அட்டையில், முஸ்லிம் ஆண்கள் அணியும் தொப்பியும் பெண்கள் அணியும் பர்தாவும் கொண்ட புகைப்படங்கள் இருக்கமாட்டாது என்று வெளியாகியுள்ள அறிவிப்புக்கு முஸ்லிம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்களின் அடையாளத்துக்கு அவ்வாறான தடை இருக்குமானால், முஸ்லிம்கள் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அரசாங்கத்தின் துணை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார்.

 

'தொப்பியோ அல்லது பர்தாவோ முகத்தை மறைப்பது அல்ல என்றும் ஓராண்டுக்கு முன்னர் ஏற்கனவே இதுபோன்ற பிரச்சனை எழுந்தபோது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேசி தீர்வு காணப்பட்டது போல் இதற்கும் தங்களால் தீர்வு காண முடியும் என்றும் அமைச்சர் பிபிசி தமிழோசையிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

'இந்தப் பிரச்சினை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஏனைய மதங்களுக்கும் உள்ளது. குறிப்பாக, கத்தோலிக்க அருட்சகோதரிகளுக்கு கூட ஏற்படலாம் என்பதால் இதற்கு சகல தரப்பினரும் இணைந்து தீர்வுகாண வேண்டியதன் அவசியம்' பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் (மின்னணு) தேசிய அடையாள அட்டையில் காணப்படும் புகைப்படத்தில் எந்தவொரு மதத்தையோ சமூகத்தின் கலாச்சாரத்தையோ பிரதிபலிக்கும் வகையிலான எந்தவொரு அடையாளமும் இருக்க மாட்டாது என ஆட்பதிவு தினைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர். எம். எஸ். சரத்குமார தெரிவித்திருந்தார்.

இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சென்றிருந்த ஆட்பதிவு தினைக்களத்தின் ஆணையாளர், அடுத்த ஆண்டு ஜுன் மாதம் தொடக்கம் இந்த இலத்திரனியல் அடையாள அட்டை நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

'கலாசாரத்திற்கும் தேசிய அடையாள அட்டைக்கும் தொடர்பு இல்லை.முகத்தை வைத்து அடையாளம் காணும்போது தொப்பி அல்லது ஏனையவற்றை தலையில் அணிவதால் ஆட்களை அடையாளம் காண்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக சோதனைகளின் போது இப்படியான கஷ்டங்கள் ஏற்படுகின்றன என்றார் ஆட்பதிவுகள் ஆணையாளர்.

சட்டத்தை அமுல்படுத்துவதே தனது கடமை என்றும் அதில் மாற்றங்களோ அல்லது திருத்தங்களோ செய்வதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

131214183019_rms_sarathkumara_304x171_bb

' சட்டத்தை மாற்ற எனக்கு அதிகாரமில்லை': ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் சரத்குமார.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/12/131214_muslimministry.shtml

  • கருத்துக்கள உறவுகள்

மின்னணு அடையாள அட்டைக்கு முஸ்லிம் அமைச்சர் எதிர்ப்பு.

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள மின்னணு முறையிலான தேசிய அடையாள அட்டையில், முஸ்லிம் ஆண்கள் அணியும் தொப்பியும் பெண்கள் அணியும் பர்தாவும் கொண்ட புகைப்படங்கள் இருக்கமாட்டாது என்று வெளியாகியுள்ள அறிவிப்புக்கு முஸ்லிம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

எண்ணைய் ஊத்தணும்.........

பொதுமக்களின் தீவிர வாதம் தான் ஏற்கமுடியாதது. மத குருமார் தங்களை அடையாளம் காட்டுவது தவறல்ல. அருட்சகோதரர்களுக்கோ, முல்லாக்களுக்கோ, ஐயர்மார்களுக்கோ, பிக்குக்களுக்கோ அடையாள அட்டைப் படத்தில் வேறு நிபந்தனைகள் இருந்தால் தவறல்ல.  யாரும் கண்ணை முகத்தை மூடுவது தவறு. அதை எந்த பொது இடத்திலும் ஏற்க கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

முக்காடு போடுபவர்கள் அடையாள அட்டையில் முக்காடின்றி படத்தில் இருந்தால் அடையாளம் காண பொலிசாரினால் முக்காட்டை அகற்றுமாறு பணிக்கப்படலாம். 

 

 

மறுவளமாக ஒருவர் மொட்டை அடித்து அடையாள அட்டைக்கு படம் எடுத்தால் அவரை அடையாளம் காண பொலிசார் அவருக்கு மொட்டை அடிக்க வேண்டிய நிலை வரும். பெரும் அளவிலானவர்கள் ஒரு அரசியல் காரணத்துக்காக மொட்டை அடித்து அடையாள அட்டை படம் எடுத்தால் போலீசார் பெருமளவிலானவர்களுக்கு மொட்டை அடித்து அடையாளம் காண வேண்டிய தேவை வரும். மொட்டை அடித்து தாடி வளர்த்து மீசை அகற்றி அடையாள அட்டை படம் எடுத்தவர்கள் பின்னர் மயிர் வளர்த்து தாடி அகற்றி மீசை வைத்தால் அவர்களை மொட்டை அடித்தும் அடையாளம் காண்பது கடினம். பெருமளவிலானவர்கள் இவ்வாறாக செய்ய ஆரம்பித்தால் இந்த அடையாள அட்டை திட்டம் பயனற்றதாகி விடும்.

 

ஆட்பதிவுகள் ஆணையாளர் சட்டத்தை மாற்றமுடியாது. பாராளுமன்றம் சட்டத்தை மாற்ற முடியும். 

 

 

இணக்க அரசியல் செய்தும் சரிவரவில்லை.

இனியாவது போலி இஸ்லாமிய அரசியல் தலைமையை நம்பாது சுற்ற உள்ள இஸ்லாமிய நாடுகள் ஊடாக அழுத்தம் கொடுக்க பரப்புரை செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முக்காடு போடுபவர்கள் அடையாள அட்டையில் முக்காடின்றி படத்தில் இருந்தால் அடையாளம் காண பொலிசாரினால் முக்காட்டை அகற்றுமாறு பணிக்கப்படலாம்.

மறுவளமாக ஒருவர் மொட்டை அடித்து அடையாள அட்டைக்கு படம் எடுத்தால் அவரை அடையாளம் காண பொலிசார் அவருக்கு மொட்டை அடிக்க வேண்டிய நிலை வரும். பெரும் அளவிலானவர்கள் ஒரு அரசியல் காரணத்துக்காக மொட்டை அடித்து அடையாள அட்டை படம் எடுத்தால் போலீசார் பெருமளவிலானவர்களுக்கு மொட்டை அடித்து அடையாளம் காண வேண்டிய தேவை வரும். மொட்டை அடித்து தாடி வளர்த்து மீசை அகற்றி அடையாள அட்டை படம் எடுத்தவர்கள் பின்னர் மயிர் வளர்த்து தாடி அகற்றி மீசை வைத்தால் அவர்களை மொட்டை அடித்தும் அடையாளம் காண்பது கடினம். பெருமளவிலானவர்கள் இவ்வாறாக செய்ய ஆரம்பித்தால் இந்த அடையாள அட்டை திட்டம் பயனற்றதாகி விடும்.

ஆட்பதிவுகள் ஆணையாளர் சட்டத்தை மாற்றமுடியாது. பாராளுமன்றம் சட்டத்தை மாற்ற முடியும்.

ஜூட் சொல்லும் நியாயங்களைப் பார்த்தால் அடையாள அட்டையில் இருந்து படத்தையே தூக்கிவிடலாம்போல் உள்ளது.. :D

அடையாள அட்டையில் படத்தை வைப்பதன் காரணம், ஆளை அடையாளம் கண்டுபிடித்தல் என்கிற ஒரு விடயமே... மொட்டை அடித்துக்கொண்டு போனால், காவல்துறை பிடித்து ஓரமாக நிறுத்தி வைக்க வாய்ப்புகள் இருக்கு.. :D பிறகு குய்யோ முறையோ என்று கத்திப் பிரியோசனம் இல்லை.

கனடாவில் கடவுச்சீட்டுக்கு படம் எடுப்பதில் ஆயிரம் கட்டுப்பாடுகள் உள்ளன.. சில வருடங்கள் தோடு போடலாம் என்று இருக்கும்.. சில வருடங்கள் போடக்கூடாது என்பார்கள்.. திருட்டுக் கடவுச்சீட்டுகளை கண்டறிய எல்லா நுணுக்கங்களையும் பயன்படுத்துவார்கள்..!

அதேசமயம் வாகன ஓட்டிகள் உரிமத்துக்கு அவ்வளவு கட்டுப்பாடுகள் கிடையாது.. ஏனென்றால் அந்த அட்டையின் இலக்கத்தை மட்டும் வைத்தே பெரும்பான்மையான தகவல்களை கணினி ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆக, இவை அந்தந்த நாடுகளில் உள்ள வசதிகளைப் பொறுத்த விடயம்.. நாளடைவில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக படங்களே நீக்கப்படலாம்.

குடுமி வைத்துக்கொண்டு அடையாள அட்டை படம் எடுக்கலாமா?

அரசியலுக்கு அப்பால் அடையாள அட்டையில் எந்த மத அடையாளங்களும் இருக்க கூடாது என்றது நியாயமானது. இந்த வகையில் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் கூற்றில் நியாயம் உண்டு. இது இலங்கைக்கு மட்டுமானது அல்ல. உலகம் முழுவதும் இந்த சட்டம் உள்ளது.

அடையாள அட்டை ஒருவரை அடையாளம் காண பயன்படுத்தப்படும் ஒரு பத்திரமாகும். இதில் முக்காடு, தொப்பி, சாம்பல், சந்தனம், சிவப்பு/கருப்பு பெயிண்ட், கண்ணாடி போன்ற மனித உறுப்புக்கள் அல்லாதவை அனுமதிக்கபடக்கூடாது என்பது எனது அவா..

குடுமி வைத்துக்கொண்டு அடையாள அட்டை படம் எடுக்கலாமா?

முன்பு ஒரு முறை கொழும்பில், போஸ்டல் ஐடி எடுக்கப்போனபோது குடுமி வேட்டினால்தான் அப்பிளிகேசனை எடுப்பேன் என அடம்புடிச்ச தமிழ் போஸ்ட்மாஸ்டருக்கு போட்ட பூசையில், அவர் வாழ்க்கையில் இன்னொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களில் தலையிட்டிரிருக்கமாட்டார்...

முன்பு ஒரு முறை கொழும்பில், போஸ்டல் ஐடி எடுக்கப்போனபோது குடுமி வேட்டினால்தான் அப்பிளிகேசனை எடுப்பேன் என அடம்புடிச்ச தமிழ் போஸ்ட்மாஸ்டருக்கு போட்ட பூசையில், அவர் வாழ்க்கையில் இன்னொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களில் தலையிட்டிரிருக்கமாட்டார்...

 

அப்பாடா தப்பித்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.