Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்புக்கு அழைக்கப்பட்ட பதுமனை காணவில்லை: அதிர்ச்சியில் கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
paduman-gota-seithy-20131211-150.jpg

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில் கொழும்பு வந்திருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பதுமன், கொழும்பு வந்திருந்த நிலையில், ஒருவார காலமாக காணாமல் போயுள்ளதாக கொழும்பின் செய்தி முகவர் நிறுவனத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது; விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் படைப் பிரிவின் முன்னாள் தலைவரான கேர்ணல் பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதன் தலைமையில் புலிகளை மீண்டும் உருவாக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ இரகசிய திட்டம் தீட்டி வருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. பதுமன் - கோத்தபாய ராஜபக்‌ஷ இரகசியத் திட்டம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த நிலையில், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்‌ஷவை தொடர்புகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்த செய்தியின் பின்னணி என்ன என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

  

இதற்குப் பதிலளித்துள்ள கோத்தபாய, இவை வெறும் வதந்திகளைப் பரப்பும் செய்திகள் எனவும், இவற்றில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பதிலளித்துள்ளார். எனினும், கோத்தபாய - பதுமன் கூட்டுத் திட்டம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்குக் கூட தெரியாத வகையில் பாதுகாப்புச் செயலாளர் முன்னெடுத்துள்ளார். கோத்தபாய - பதுமன் இரகசிய திட்டம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததை அடுத்து குழப்பமடைந்த பாதுகாப்புச் செயலாளர், பதுமனைத் தொடர்புகொண்டு இதுகுறித்து யாருடனாவது கலந்துரையாடப்பட்டதா எனக் கேட்டுள்ளார். அத்துடன், தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து வெளித் தொடர்புகளை துண்டிக்குமாறும் கோரியுள்ளார்.

ஊடகங்களில் செய்திகள் வந்த நிலையில், குழப்பமடைந்த பாதுகாப்புச் செயலாளர் பதுமனை மேற்குலக நாடொன்றுக்கு அனுப்பிவைக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த வாரம் பதுமன் கொழும்பு அழைத்துவரப்பட்டிருந்தார். பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவின் ஏற்பாட்டில், இவர் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கொழும்பிற்கு அழைத்து தங்கவைக்கப்பட்ட பின்னர், மன்னார் ஊடாக இந்தியாவிற்கு அனுப்பி, அங்கிருந்து மேற்குலக நாடொன்றுக்கு அனுப்பிவைப்பதே கோத்தபாய ராஜபக்‌ஷவின் திட்டமாக இருந்தது. வெளிநாட்டு புலனாய்வு அமைப்பொன்றின் உதவியுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.

சிறிது காலத்தின் பின்னர் முன்னதாக திட்டமிட்டிருந்ததன்படி மீண்டும் ஆயுதப் படையொன்றை உருவாக்கிக் கொள்ளலாம் எனவும், ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததால் தற்போது வெளிப்படையாக எதனையும் செய்யக்கூடாது எனவும் தீர்மானித்தே இந்த நகர்வு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், கொழும்பு அழைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த பதுமன் தற்போது திடீரென காணாமல்போயுள்ளமையானது கோத்தபாய ராஜபக்‌ஷ தரப்பினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை இரகசியமாகவும், துரிதமாகவும் கையாள வேண்டிய நிலையில் பாதுகாப்புச் செயலாளர் செயல்பட்டு வருவதாக குறித்த செய்தி முகவர் நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் மீண்டும் புலிகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், வடக்கில் பிரிவினைவாதத்தை தூண்டும் நோக்கில் படையினர் செயல்படுவதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99765&category=TamilNews&language=tamil

என்னா மாதிரி கண் காது மூக்கு வைத்து கதைஎழுதுறாங்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு .

பதுமனைக் கண்டுபிடிக்க என்ன செய்வது? இது செய்தி உண்மையோ பொய்யோ தெரியவில்லை. இதனை லங்காஸ்ரீயில் இருந்து செய்தி பெற்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியின் மூலமே நம்பகத்தன்மையற்றது. அதாவது பதுமனைக் கொண்டு கோத்தாபய மீண்டும் புலிகளை உருவாக்குவதென்பது.

 

முதலாவதாக, புலிகள் மீள உருவெடுக்க வேண்டுமென்றால், நிச்சயம் அவர்கள் ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்த வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் நிச்சயம் ராணுவத்தினர் இதற்கெதிராகத் திரும்பக்கூடும். முதலாவது தாக்குதல் நடந்தவுடனேயே கோத்தாவின் செல்வாக்குச் சரிந்துவிடும்.

 

இரண்டாவதாக, வெளியில் தெரியுமளவிற்கு காட்டிக்கொண்டு இப்படியானதொரு நடவடிக்கையை கோத்தா எடுக்க முடியாது. அப்படி கோத்தா செய்யும் அனைத்துக் காரியங்களும் இப்படி ஊடகங்களுக்குத் தெரிந்துவிடுகிறதென்றால், இதைப்போல பல வெளியே வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

 

இது வேண்டுமென்றே கசிய விடப்பட்ட செய்தியாகத்தான் எனக்குப் படுகிறது. 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

//கோத்தபாய - பதுமன் கூட்டுத் திட்டம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்குக் கூட தெரியாத வகையில் பாதுகாப்புச் செயலாளர் முன்னெடுத்துள்ளார்.//

 

இந்த விசயத்தை...
மகிந்தவுவுக்கு... கூட, கோத்தா... சொல்லாமல் ஒளிச்சுப் போட்டார்.

இந்த விசயத்தை...

மகிந்தவுவுக்கு... கூட, கோத்தா... சொல்லாமல் ஒளிச்சுப் போட்டார்.

 

ஆனால் லங்காசிறீக்கு மாத்திரம் அவர் கசிய விட்டுட்டார். செய்தி போற போக்கை பார்த்தால் லங்காசீறீயை வாசித்து தான் மகிந்தர் இதை தெரிந்து கொண்டார் என பரபரப்பான செய்தி விரைவில் வரும். அதை மற்ற தமிழ் இணையங்கள் எடுத்து விறுவிறுப்பான தலைப்பு போட்டு எங்களை வாசிக்க வைப்பார்கள். ஒவொரு முறையும் ஜெனீவா வரும்பொழுது இப்படியான கூத்துக்களை செய்து மக்களை திசை திருப்பப்பாகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ திட்டம் போடுகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது

எல்லாமே ஒரு நாடகமாக இருக்கக்கூடும்

ஆனால் தமிழ் மக்கள்

மற்றும்   போராளிகள்  சார்ந்து மிகவும் பாரதூரமான  விடயம்

இதற்கான விலையைக்கொடுக்கப்போபவர்கள் அவர்களே

 

பதுமனைக் கண்டுபிடிக்க என்ன செய்வது? இது செய்தி உண்மையோ பொய்யோ தெரியவில்லை. இதனை லங்காஸ்ரீயில் இருந்து செய்தி பெற்றுள்ளது.

இது 100%பொய்யான செய்தி ,பதுமன் நீதிமன்றத்தால் தான் விடுதலை செய்யப்பட்டார் .அவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுத்ததால் அரசில் உள்ளவர்களே கதைகளை புனையலாம் .தன் சொந்த ஊரில் இருக்கின்றார் .

ஏதோ திட்டம் போடுகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது

எல்லாமே ஒரு நாடகமாக இருக்கக்கூடும்

ஆனால் தமிழ் மக்கள்

மற்றும்   போராளிகள்  சார்ந்து மிகவும் பாரதூரமான  விடயம்

இதற்கான விலையைக்கொடுக்கப்போபவர்கள் அவர்களே

பதுமனை மக்களிடமிருந்தும் ,அவரை நேசிப்பவர்களிடம் இருந்தும் அன்னியப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் .

இதில் பதுமனை அல்லது வேறும் யாரையும் வைத்து முயற்சிகள் நடந்ததா என்பது சொல்ல முடியாது. விக்கினேஸ்வ்ரனும் இது பற்றி கூறியதாகவும் செய்திகள் வந்திருந்தன.

Edited by மல்லையூரான்

செய்தியில் ஒரு "கிக் " இருக்குத்தானே ,அது போதும் ..

  • கருத்துக்கள உறவுகள்

லங்கா சிறி போடுகின்ற செய்திகள் பல Lanka enews போன்ற பல pula naive இதழ்களின் செய்திகள் ஓரளவு பல்வேறு மட்டங்களில் தொடர்பு வைத்திருக்க கூடிய இணையங்கள் அவை ஆகவே நெருப்பில்லாமல் புகையாது

  • கருத்துக்கள உறவுகள்

மிஞ்சிமிஞ்சிப் போனால் மார்ச் மாசத்துக்கு முன்னம் ஒரு குண்டை வெடிக்கப்பண்ணிவிட்டு பயங்கரவாத ஆலாபனையை தொடங்குவினம்..

இது பதுமனை அவதிக்குள்ளாக்கும் செய்தி..

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியில் ஒரு "கிக் " இருக்குத்தானே ,அது போதும் ..

 

கிக் இல்லாவிட்டால் என்ன ..........?
எத்ததனை தடவை புலி புலி என்று இருக்கு .... இதைவைத்தே வாழ்வை  ஓட்ட மாட்டமா என்ன?
35 வருடம் ஓட்டியாச்சு ........ இன்னும் ஒரு பத்துவருடம்.
முக்கினா போச்சு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.