Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டுமொருமுறை வந்துவிடாதே...!!! (இசைக்கவிதை)

Featured Replies

ஒரு மார்கழி இருபத்தாறில்தான்,
பேராறுபோல் பெருக்கெடுத்தாய்....
எம்  ஊருக்குள்ளே!
பொறுமையாய் பொறுத்தாழ்ந்த பூமித்தாயை...
நீ கண்ணீரால் நனைத்தது அன்றைக்குத்தான்!

சொல்லாமல் கொள்ளாமல் வந்து,
எங்களையெல்லாம் கொன்று போட்டாய்..!
இத்தனைநாளாய் உன்னில்
அள்ளியெடுத்த செல்வத்தையெல்லாம்,
ஒற்றைநாளில் மொத்தமாய்
நீ அள்ளியெடுத்தாய்..!!
கடல்தாயே... மறந்துவிட்டாயா?

சுனாமியென்றால் எமனின் பினாமியென்று
அன்றைக்குத்தான் தெரியும்!
என்றுமே...இயற்கையைப் போற்றினோம்...!
அன்றுதான்  உன்னைத் தூற்றினோம்...!!

என் பாட்டன் உன்மேல் வலைவீசினான்,
என் அப்பன் உன்னில் தூண்டில் போட்டான்,
எம் பிஞ்சுக்குழந்தை.... உனக்கு என்ன செய்தது?
நீ அலையலையாய் அடிக்க...
நுரைக்குமிழி பிடித்து விளையாடிய  பிஞ்சுகளையும்  
அலையோடு அழைத்துச்சென்றதேனோ?

உன்னைத்தானே தெய்வமென்றோம்!  -அதற்கும் மேலே,
உன்னைத்தானே தாயுமென்றோம்!!
எம்  பிஞ்சைக்கூட    
வஞ்சம் தீர்த்தாய்... ஏன் தாயே?!

செத்து  மிதந்தது  யேசுபாலன் சிலைகள் மட்டுமல்ல,
எம் பாலகரும்தான்...!
பாலூட்டிச் சீராட்டி  வளர்த்த பாலரையெல்லாம்
நீராட்டி அழித்தாய்... ஏன் தாயே?!

மீண்டுமொருமுறை வந்துவிடாதே..!
உன் கோரப்பசி தீர்க்க
எம்மிடம் எதுவுமில்லை...!
போரின் பசிக்கு... குடுத்தது போக,
மிஞ்சியிருப்பது... எம் கண்ணீர் மட்டுமே!
அதை வேண்டுமானால்,
உனக்கே  காணிக்கையாக்குகின்றோம்!

 

மீண்டுமொருமுறை வந்துவிடாதே!
உன் கோரப்பசி தீர்க்க
எம்மிடம் எதுவுமில்லை...!!

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

26-12-2013


 

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைநாளாய் உன்னில்

அள்ளியெடுத்த செல்வத்தையெல்லாம்,

ஒற்றைநாளில் மொத்தமாய்

நீ அள்ளியெடுத்தாய்..!!

 

கவிதை சோகத்தைப் பிழிகின்றது!

 

கவிதை வரிகளையும் விடவும், நீங்கள் தேடியெடுத்த சுனாமி அலைகளின் கோரம் நெஞ்சில் கனக்கின்றது!

 

இரண்டும் சேரும்போது, நீங்கள் சொல்ல விரும்பிய செய்தி, பசுமரத்தில் அறைகின்ற ஆணியாகின்றது! உங்கள் புதிய ஊடகத்தின் வலிமையையும் உணர்த்துகின்றது!

 

இரண்டு விடயங்களில், இரு துருவங்களில் , ஒரே நேரத்தில் என்னைப் பயணிக்க வைத்திருக்கின்றது, உங்கள் கவிதை!

 

முதலாவது சுனாமி தந்த சோகம்! மீண்டுமொரு முறை, பலியாகிப் போன சொந்தங்களுக்கு என் நினைவஞ்சலிகள்!

 

இரண்டாவது, நீங்கள் உங்கள் பூட்டிய கதவைத் திறந்து, வெளியில் வந்து 'நிஜமான' உலகத்தைத் தரிசிப்பது! சோகம் சிந்தும் கவிதையிலும், எனக்கு ஒரு சிறு ஆறுதலைத் தருகின்றது!

 

முற்றாக வெளியே வந்து விடு கவிதையே, ஒரு மாபெரும் உலகு, கை நிறைந்த சந்தர்ப்பங்களோடு, உனக்காகக் காவலிருக்கின்றது! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆழி கொன்ற மக்களுக்கு இறை வணக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
ஆதிகாலத்தில் இருந்தே  தமிழனை அழிப்பதிலையே குறியாக இருக்கும் ஆழிப்பேரலையே  
மீண்டுமொருமுறை வந்துவிடாதே!
உன் கோரப்பசி தீர்க்க
எம்மிடம் எதுவுமில்லை...!!  :(  :(  :(
 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கவிக்கு  கவிதை

 

மீண்டுமொருமுறை வந்துவிடாதே..!
உன் கோரப்பசி தீர்க்க
எம்மிடம் எதுவுமில்லை...!
போரின் பசிக்கு... குடுத்தது போக,
மிஞ்சியிருப்பது... எம் கண்ணீர் மட்டுமே!
அதை வேண்டுமானால்,
உனக்கே  காணிக்கையாக்குகின்றோம்!

 

எமது படை பலத்தை  நாசமாக்கி

சமபலத்தை சிதைத்து

எதிரிக்கு எம்மீது கைவைக்க

துணிவு  தந்ததும் இதுவே........ :(  :(  :( 

  • தொடங்கியவர்

கவிதை சோகத்தைப் பிழிகின்றது!

 

கவிதை வரிகளையும் விடவும், நீங்கள் தேடியெடுத்த சுனாமி அலைகளின் கோரம் நெஞ்சில் கனக்கின்றது!

 

இரண்டும் சேரும்போது, நீங்கள் சொல்ல விரும்பிய செய்தி, பசுமரத்தில் அறைகின்ற ஆணியாகின்றது! உங்கள் புதிய ஊடகத்தின் வலிமையையும் உணர்த்துகின்றது!

 

இரண்டு விடயங்களில், இரு துருவங்களில் , ஒரே நேரத்தில் என்னைப் பயணிக்க வைத்திருக்கின்றது, உங்கள் கவிதை!

 

முதலாவது சுனாமி தந்த சோகம்! மீண்டுமொரு முறை, பலியாகிப் போன சொந்தங்களுக்கு என் நினைவஞ்சலிகள்!

 

இரண்டாவது, நீங்கள் உங்கள் பூட்டிய கதவைத் திறந்து, வெளியில் வந்து 'நிஜமான' உலகத்தைத் தரிசிப்பது! சோகம் சிந்தும் கவிதையிலும், எனக்கு ஒரு சிறு ஆறுதலைத் தருகின்றது!

 

முற்றாக வெளியே வந்து விடு கவிதையே, ஒரு மாபெரும் உலகு, கை நிறைந்த சந்தர்ப்பங்களோடு, உனக்காகக் காவலிருக்கின்றது! :D

 

மிகவும் ஆழமான பார்வையோடு இந்தப் படைப்பினை பார்த்தமைக்கும் முதற்கண் என் நன்றிகள் புங்கை.:)

 

நீங்கள் ஆவற்படும் விதமாக.... நான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வெளியே வந்துகொண்டிருக்கின்றேன். எண்ணுவது போல் சில விடயங்கள் அந்தந்த நேரங்களில் கிரமமாக நடந்தேறினால்.... இந்த மாபெரும் உலகில் குவிந்துகிடக்கும் சந்தர்ப்பங்களை அள்ளியெடுக்க ஆவலோடு காத்திருக்கின்றேன். :)

 

மிக்க நன்றி புங்கை! :)

 

  • தொடங்கியவர்

கருத்துக்கள் தெரிவித்த நெடுக்ஸ், தமிழரசு, விசுகண்ணை ....

மற்றும்,

விருப்பு வாக்களித்த உறவுகள் அனைவருக்கும்

என் மனமார்ந்த நன்றிகள்! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆழிப் பேரலையே  வந்துவிடாதே .. கவிதையையும் சோக கதை வடிக்க வைத்து விடாதே....

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி என்றால் எமனின் பினாமி நன்றாய் உள்ளது  !!

 

தொடருங்கள் கவிதை...யை !! :D

  • தொடங்கியவர்

மிக்க நன்றி நிலாக்கா.... மற்றும் சுவி அண்ணா! :)

படைப்புக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் :) :) .

  • தொடங்கியவர்

மிக்க நன்றி ராஜன் விஷ்வா... மற்றும் கோ! :)

  • 11 months later...
  • தொடங்கியவர்
 

பத்து ஆண்டுகள் பறந்தோடிவிட்டது...! ஆனாலும், இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும்....

இன்னும் நெஞ்சு பதைக்கிறது! 

"சுனாமி" என்ற ஆழிப்பேரலை தந்த அவலத்தின் நினைவுநாள்...... டிசெம்பர் 26

 

ஆழிப்பேரலைக்குள் கரைந்துபோன அத்தனை உயிர்களுக்கும் நினைவஞ்சலிகள்...!!!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுக் கவிதைக்கு நன்றி.

 

ஆனால் கவிதை எழுதி சுனானியை வரேதேன்னு தடுத்து நிறுத்த முடியாது.

 

சுனாமியால் பாதிக்கப்பட்ட தென்னிலங்கை பின் நல்ல வளர்ச்சி கண்டுள்ள நிலையில்.. (உலகின் பிற இடங்களும் கூட). ஆனால்.. தமிழர்கள் வதியும்.. வடக்குக் கிழக்கு பகுதிகள்.. காடு பத்திப் போயுள்ளன. மேலும் போர் வடுக்களையும் சுமந்து கொண்டுள்ளன. காலியின் சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்குக் கிழக்கில்.. இராணுவ முகாம்களும்.. காணி அபகரிப்புமே நடந்துள்ளன.

 

கீழ்வரும் இணைப்புக்களில் உள்ள காணொளிகள் சாட்சி..

 

_79880485_460359786.jpg 
 

http://www.bbc.co.uk/news/world-asia-30034501

 

http://www.bbc.co.uk/news/world-asia-30602159

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.